பக்கங்கள்

வெள்ளி, 23 ஜனவரி, 2015

கற்கால (தமிழர்கள்)மனிதர்கள் பயன்படுத்திய கல்லால் ஆன ஆயுதம்



பழனி, 

திண்டுக்கல் அருகே, 4,500 ஆண்டுகள் பழமையான கற்கால மனிதர்கள் பயன்படுத்திய கல்லால் ஆன ஆயுதத்தை தொல்லியல் துறை ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.

தொல்லியல்துறை ஆய்வு

திண்டுக்கல் - கரூர் மாவட்ட எல்லை பகுதிகளில் பழனி தொல்லியல் துறை ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை டி.கூடலூருக்கு அருகே மண்மேடான பகுதியில் உடைந்த நிலையில் வித்தியாசமான கல் ஒன்றை அவர்கள் கண்டனர்.

அதை எடுத்து பார்த்தபோது, அது கல்லால் செய்யப்பட்ட ஆயுதம் என்பது தெரியவந்தது. அந்த ஆயுதத்தை பத்திரமாக மீட்டு தொல்லியல் துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது அது குவார்ட்ஸ் எனப்படும் ஒருவகை கல்லில் இருந்து உருவாக்கப்பட்ட ஆயுதம் என்பது தெரியவந்தது. அந்த கல்லால் ஆன ஆயுதம் 8 செ.மீட்டர் நீளமும், 13 செ.மீட்டர் குறுக்கு சுற்றளவும், 216 கிராம் எடையும் இருந்தது.

4,500 ஆண்டுகள் பழமையானது

இதையடுத்து அந்த ஆயுதம் உருவாக்கப்பட்ட காலம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்ததில், சுமார் 4,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கற்கால மனிதர்கள் உருவாக்கியதும், விலங்குகளை வேட்டையாடுவதற்காக அந்த ஆயுதத்தை அவர்கள் பயன்படுத்தி இருக்கலாம் என்பதும் தெரியவந்தது.

அந்த ஆயுதத்தில் ஆங்காங்கே தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன. அந்த எழுத்துக்கள், சிந்துசமவெளி நாகரீகத்தின் போது வழக்கத்தில் இருந்த தமிழ் எழுத்துக்களை போல இருப்பதும் தெரியவந்துள்ளது. இதன் மூலம் பழமையான தமிழர் நாகரீகமும், சிந்துசமவெளி நாகரீகமும் ஒன்றானவையே என்பதற்கான மற்றொரு ஆதாரம் கிடைத்திருப்பதாக தொல்லியல் துறை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
 -தினத்தந்தி,23.1.2015,பக்-9

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக