பக்கங்கள்

திங்கள், 29 ஜனவரி, 2018

*தமிழ் எண்கள்*

*தமிழ் எண்கள்*

1 - க, 2 - உ, 3 - ங, 4 - ச, 5 - ரு, 6 - சு, 7 - எ, 8 - அ, 9 - கூ, 10 - கo,
11 - கக, 12 - கஉ, 13 - கங, 14 - கச, 15 - கரு, 16 - கசு, 17 - கஎ, 18 - கஅ, 19 - ககூ, 20 - உo
21 - உக, 22 - உஉ, 23 - உங, 24 - உச, 25 - உரு, 26 - உசு, 27 - உஎ, 28 - உஅ, 29 - உகூ, 30 - ஙo
31 - ஙக, 32 - ஙஉ, 33 - ஙங, 34 - ஙச, 35 - ஙரு, 36 - ஙசு, 37 - ஙஎ, 38 - ஙஅ, 39 - ஙகூ, 40 - சo,
41 - சக, 42 - சஉ, 43 - சங, 44 - சச, 45 - சரு, 46 - சசு, 47 - சஎ, 48 - சஅ, 49 - சகூ, 50 - ருo
51 - ருக, 52 - ருஉ, 53 - ருங, 54 - ருச, 55 - ருரு, 56 - ருஎ, 57 - ருஎ, 58 - ருஎ, 59 - ருகூ, 60 - சுo
61 - சுக, 62 - சுஉ, 63 - சுங, 64 - சுச, 65 - சுரு, 66 - சுசு, 67 - சுஎ, 68 - சுஅ, 69 - சுகூ, 70 - எo
71 - எக, 72 - எஉ, 73 - எங, 74 - ஏசு, 75 - எரு, 76 - எசு, 77 - எஎ, 78 - எஅ, 79 - எகூ, 80 - அo
81 - அக, 82 - அஉ, 83 - அங, 84 - அச, 85 - அரு, 86 - அசு, 87 - அஎ, 88 - அஅ, 89 - அகூ, 90 - கூo
91 - கூக, 92 - கூஉ, 93- கூங, 94 - கூச, 95 - கூரு, 96 - கூசு, 97 - கூஎ, 98 - கூஅ, 99 - கூகூ, 100 - கoo
101 - கoக, 102- கoஉ, 103 - கoங, 104 - கoச, 105 - கoரு, 106 - கoசு, 107 - கoஎ, 108 - கoஅ, 109 - கoகூ, 110 - ககo
111 - ககக, 112- ககஉ, 113 - ககங, 114 - ககச, 115 - ககரு, 116 - ககசு, 117 - ககஎ, 118 - ககஅ, 119 - கககூ, 120 - கஉo
121 - கஉக, 122- கஉஉ, 123 - கஉங, 124 - கஉச, 125 - கஉரு, 126 -கஉசு, 127 - கஉஎ, 128 - கஉஅ, 129 - கஉகூ, 130 - கஙo
131 - கஙக, 132- கஙஉ, 133 - கஙங, 134 - கஙச, 135 - கஙரு, 136 - கஙசு, 137 - கஙஎ, 138 - கஙஅ, 139 - கஙகூ, 140 - கசo
141 - கசக, 142- கசஉ, 143 - கசங, 144 - கசச, 145 - கசரு, 146 - கசசு, 147 - கசஎ, 148 - கசஅ, 149 - கசகூ, 150 - கருo
151 - கருக, 152- கருஉ, 153 - கருச, 154 - கருச, 155 - கருரு, 156 - கருஎ, 157 - கருஎ, 158 - கருஅ, 159 - கருகூ, 160 - கசுo
161 - கசுக, 162- கசுஉ, 163 - கசுங, 164 - கசுச, 165 - கசுரு, 166 - கசுசு, 167 - கசுஎ, 168 - கசுஅ, 169 - கசுகூ, 170 - கஎo
171 - கஎக, 172- கஎஉ, 173 - கஎங, 174 - கஏசு, 175 - கஎரு, 176 - கஎசு, 177 - கஎஎ, 178 - கஎஅ, 179 - கஎகூ, 180 - கஅo
181 - கஅக, 182- கஅஉ, 183 - கஅங, 184 - கஅச, 185 - கஅரு, 186 - கஅசு, 187 - கஅஎ, 188 - கஅஅ, 189 - கஅகூ, 190 - ககூo
191 - ககூக, 192- ககூஉ, 193 - ககூங, 194 - ககூச, 195 - ககூரு, 196 - ககூசு, 197 - ககூஎ, 198 - ககூஅ, 199 - ககூகூ, 200 - உoo
மொரீசியசு நாட்டின் ரூபாய் தாளில் தமிழில் எழுத்துக்களும், எண்களும் ( ரூ.10 தமிழில் ௧௦) இடம் பெற்றிருக்கிறது. எங்கோ தூரத்தில் ஆப்பிரிக்காவின் அருகில் உள்ள மொரிசியசு அரசு தமிழ் எண்களை பயன்படுத்துவது பெருமைக்குரியதே.
மொரீசியசில் 30000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்கின்றனர்.
----------------------------
-இசையின்பன், முகநூல் பதிவு, 30.1.17

காஞ்சி சங்கராச்சாரியார் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்கவேண்டும்!

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காமல்

தேசிய கீதத்துக்கு மட்டும் எழுந்து நின்ற காஞ்சி சங்கராச்சாரியார்

பகிரங்கமாக மன்னிப்புக் கேட்கவேண்டும்!

தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள கண்டன அறிக்கை



தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காமல், தேசிய கீதத்துக்கு மட்டும் எழுந்து நின்ற காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரசுவதி பகிரங்க மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அறிக்கை  வருமாறு:

நேற்று (23.1.2018) சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜூனியர் காஞ்சி சங்கராச்சாரியாரான விஜயேந்திரர், ஆளுநர் மற்ற சிலரும் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியின் தொடக்க விழாவில், முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட நேரத்தில் எழுந்து நிற்காமல், இறுதியில் ‘தேசியகீதம்‘ என்ற ஜன கன மண பாட்டுப் பாடப்பட்டபோது மட்டும் எழுந்து நின்றுள்ளார் என்ற செய்தி இன்றைய (24.1.2018) ‘டெக்கான் கிரானிக்கள்’ ஆங்கில நாளேட்டில் வந்துள்ளது!

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அவமதிப்பு!

ஜெயிலுக்கும் பெயிலுக்கும் அலைந்து திரிந்து, பிறழ் சாட்சிகள் 83 பேர்களின் தயவால் கொலைக் குற்றத்திலிருந்து, புதுவை செஷன்ஸ் கோர்ட்டில் விடுதலை பெற்று, மேல்முறையீடு செய்யாது தப்பித்துக் கொண்டதால், வெளியில் நடமாடும் இவர், அந்த சமஸ்கிருத நூல் வெளியீட்டு விழாவில்,  தமிழ்த்தாய் வாழ்த்தின்போது அதுவும் ஆளுநர் போன்றவர்கள் எழுந்து நின்ற நிலையில்கூட, எழுந்து நிற்க மறுத்து,  அடாவடித்தனமாக அப்படியே அமர்ந்திருப்பது எவ்வகையில் ஏற்கத்தக்கது?

இது அவை நாகரிகத்திற்கேகூட அவமரியாதை அல்லவா?

தமிழ் நீஷ பாஷை - சமஸ்கிருதம் தேவ பாஷை என்று கருதும் - கூறும் புத்திதானே இதற்கு மூலகாரணம்?

தந்தை பெரியார் கட்டிக் காத்த தனிப் பண்பாடு

தள்ளாத வயதில்கூட, கடவுள் மறுப்பாளரான தந்தை பெரியார் கலந்துகொண்ட பொது நிகழ்ச்சிகளில், ‘கடவுள் வாழ்த்து’ பாடப்பட்ட நேரத்திலும், நாட்டுப் பண் இசைக்கப்பட்டபோதும் எழுந்து நின்று அவை நாகரிகத்தினைப் பேணிக் காப்பாற்றிய வரலாறு நாடறிந்த ஒன்று அல்லவா!

இன்னமும் மொழியிலும் உயர்வு- தாழ்வு மனப்பான்மை, பேதத்தன்மை, பார்ப்பனர்களிடம் எப்படி இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள இது ஒரு நல்ல சந்தர்ப்பம் ஆகும்!



மன்னிப்புக் கேட்கவேண்டும் சங்கராச்சாரியார்!

தமிழ்நாட்டிலிருந்து கொண்டு, தமிழர்களிடம் காணிக்கை கணிசமாகப் பெற்றுக்கொண்டு பிழைக்கும் பார்ப்பன மடாதிபதியின் தமிழ் அவமதிப்பை - தமிழர்கள் புரிந்துகொள்வார்களா - அம்மேடையில் அமர்ந்திருந்த பட்டிமன்றப் புலவர் சாலமன் பாப்பையா உள்பட?

தமிழர்களே அடையாளம் காண்பீர்!

சங்கர மடம் இதற்கு மன்னிப்புக் கேட்கவேண்டும்!

 

கி.வீரமணி
தலைவர்,    திராவிடர் கழகம்.

சென்னை24.1.2018

சனி, 27 ஜனவரி, 2018

ஆரியரும், தமிழ்த் தொண்டும்




ஆரியப் பார்ப்பனர்கள் என்பதால்,பரிதிமாற்கலைஞர், இராமச்சந்திர தீட்சதர்,கே.வி. சுப்பிரமணிய அய்யர், உ.வே.சா.,பாரதியார், சுப்பிரமணிய சிவா போன்றஇவர்களைப் புறக்கணிக்க முடியுமா?இவர்கள் தமிழ்த் தேசிய ஒற்றுமைக்குஅடியெடுத்துக் கொடுத்தவர்கள். எனவே,பெரியாரின் ஆரிய எதிர்ப்பு தவறானதுஎன்கிறார் குணா.


விதிவிலக்குகளைப் பொதுக்கருத்தாக்கி வாதிடுவதோ, முடிவிற்குவருவதோ கூடாது என்று அடிப்படைஅறிவுகூட இன்றி பெரியாரின் ஆரியஎதிர்ப்பு தவறு என்பது பெரும் பிழைஆகும்.

பரிதிமாற் கலைஞர் என்கிற சூரியநாராயண சாஸ்திரியார் தான் தமிழ்செம்மொழியாக அறிவிக்கப்பட வேண்டும்என்று குரல் கொடுத்தார். ஆனால் 99.9சதவீதம் ஆரியப் பார்ப்பனர்கள் அதைஏற்கவில்லையே இன்றளவும்ஏற்கவில்லையே. செம்மொழி என்றவார்த்தை எங்கிருந்தாலும் அதைச்செதுக்கி எடுக்கிறார்கள்; மறைத்துப்பதுக்குகிறார்கள். இதுதானே  நடைமுறை.  ஒரு சூரிய நாராயண சாஸ்திரியாருக்காகஆரியப் பார்ப்பனர்கள் அனைவரையும்ஏற்றுக் கொள்ள முடியுமா?

உ.வே.சா. தமிழ்ப் பணியாற்றினார்என்பது எந்த அளவிற்கு உண்மையோஅதே அளவிற்கு அவர் ஆரியப் பற்றுஅதிகம் பெற்று விளங்கினார் என்பதும்உண்மை. அவர் ஆரியப் பார்ப்பனர்களின்ஆதிக்கம் கொண்ட தமிழ் தேசியத்திற்கேதுணை நின்றார். அது மாபெரும் கேடுஅல்லவா?

தமிழர் மரபு என்னும் தலைப்பில்1941ஆம் ஆண்டு வானொலியில் பேசியஉ.வே.சா. ஓர் ஏழை வேலைக்காரனைப்பார்த்துச் சோறு தின்றாயா? என்றுகேட்கலாம். ஆனால் ஒரு கனவானைப்பார்த்து அவ்வாறு கேட்டுவிடக்கூடாது.போஜனம் ஆயிற்றா? என்றே வினவிடல்வேண்டும். அதுதான் தமிழ் மரபு என்றும்,அந்தணர்களைப் பார்க்கும்போது,நிவேதினம் ஆயிற்றா? என்றும்,துறவிகளிடம், பிக்ஷ்சை ஆயிற்றா? என்றும்வினவ வேண்டும் என்கிறார்.

(ஆதாரம் : உ.வே.சா. தமிழர் மரபு,செந்தமிழ்ச்செல்வி, 1941, சிலம்பு. க. பரல்உ.)

இதுதான் தமிழ்ப் பற்றா? தமிழைஉயர்த்துவது இதுதானா?

தமிழ் என்பது வேலைக்காரனிடம்பேசப்பட வேண்டும். உயர்நிலையில்உள்ளவர்களிடமும், ஆரியப் பார்ப்பனர்களிடமும் சமஸ்கிருதத்தில் பேசவேண்டும் என்கிறார்.

அவர்தான் பேசினார் என்றால் அதைஅப்படியே தணிக்கை செய்யாதுவானொலி ஒலி பரப்பியது. காரணம்இவரும் அவாள், அவர்களும் அவாள்கள்.இதைத் தவிர வேறு என்ன?

உ.வே. சாமிநாத அய்யரின் இந்தஉரையைக் கண்டித்து, கி.ஆ.பெ.விஸ்வநாதம் அவர்கள் எது தமிழ் மரபு?என்னும் தலைப்பில் செந்தமிழ்ச்செல்வியிலே கட்டுரை எழுதினார்.

முதலில், தமிழர் என்பதன்அடையாளத்தைச் சரியாக வரையறுத்துக்கொண்டு தமிழ்த் தேசியம் பேச வேண்டும்.

சம உரிமை, தன்மானம், ஜாதி, மதபேதமற்ற மனிதநேயம், பிறப்பொக்கும்எல்லா உயிர்க்கும் என்ற கொள்கை சமவாய்ப்பு, மாற்றார் உணர்வுகளை மதித்தல்,வீரம், காதல், விருந்தோம்பல் என்றஇயல்புகளை உள்ளடக்கியதே தமிழ்த்தேசியம். இவையில்லாது வெறும்எல்லையும், மொழியும் தமிழ்த் தேசியம்என்று எண்ணிச் செயல்படுகின்றவர்கள்எதையும் சாதிக்காது, எதிரிக்குஇடங்கொடுத்து ஏமாந்து போவதோடு,தமிழர் மேம்பாட்டையும்கெடுத்தொழித்தவர்கள் ஆவர். இதைத்தமிழர்கள் அனைவரும் உணர வேண்டும்,தமிழ்த் தேசியம் பேசுவோரும் உணரவேண்டும்.

ஆரியப் பார்ப்பனீய எதிர்ப்பு இல்லாததமிழ்த் தேசியம் என்பது இல்லவே இல்லைஎன்பதே உண்மை. காரணம், தமிழன்மண்ணைத் தொலைத்தது, கல்வியைஇழந்தது, சிந்தனை இழந்தது, மற்றதைத்தொலைத்ததும், மொழியின் தூய்மையைஇழந்ததும் ஆரியத்தால்தான். எனவே,எதிலெல்லாம் ஆரிய மேலாண்மையும்,ஆரிய கலப்பும் உள்ளதோ அவற்றைஅகற்றுவதே தமிழ்த் தேசிய உணர்வுக்கானஅடிப்படை பணி. இன்று தமிழ்த் தேசியம்பேசுவோர் எவராயினும் பெரியாரின்இப்பணியால் விழிப்பு பெற்றதன்விளைவால் எழுச்சி பெற்றோரே என்பதைஎவரும் மறுக்கவும் இயலாது; மறக்கவும்கூடாது.

பாரதியார் தமிழ்ப்பற்று உடையவர்என்றாலும், அவரிடமும் ஆரியப் பற்றுஇருந்தது. ஆரிய நாடு என்று இந்தியாவைஅழைத்தார். இலங்கையை சிங்களத் தீவுஎன்றார். தமிழர்க்குரியதை மாற்றினார்.தமிழை வாழ்த்தும்போது பாரதியார் தன்ஆரியப் பற்றோடே தமிழைத் தரம்தாழ்த்திப் பாடுகிறார். தமிழ்த்தாயேதன்னைப் பற்றிக் கூறுவதாய், உயர்ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன் என்றுபாடினார். ஒரு செத்த மொழியைப் போல,தமிழ் வாழ்ந்ததாய்ச் சொல்வதுதமிழுருக்குக் கேவலமல்லவா?

தமிழ் போல ஆரியம் என்றுசொன்னால்கூட மன்னிக்கலாம். ஆனால்,உயர் ஆரியம் போல வாழ்ந்தேன் என்றுதமிழ் சொல்வதாய் சொல்கிறார். இதுதான்ஆரியப் புத்தி!

அவர் மூடநம்பிக்கைகளை முற்றிலுமாகவிலக்கி வெளியில் வந்து விடுதலைக்குச்சரியான வழி காட்டவில்லை.

தனக்குக் காணிநிலம் தேவைக்குபராசக்தியிடம் கேட்கிறார்

லெனின் பாடுபட்டு, போராடி புரட்சிசெய்து படைத்த சமதர்மத்தை மாகாளிமனசு வைத்ததால் ருஷ்ய புரட்சி வெடித்ததுஎன்றார். ஏன் மற்ற இடங்களில் மாகாளிமனசு வைக்கவில்லை என்ற எளியசிந்தனைகூட அவருக்கு ஏற்பட வில்லை.இப்படிப்பட்ட சிந்தனைகளால் தமிழ்த்தேசிய உணர்வு வருமா? இந்தச்சிந்தனைகள் அந்த உணர்வைத்தூண்டுமா? மாறாகச் சீர்குலைக்கும்,நீர்க்கச் செய்யும்.

உண்மை என்னவென்றால் தமிழ்உணர்வோடு, ஜாதியை எதிர்த்துச்செயல்பட்டார்கள் என்பதற்காக பாரதியார்,வைத்தியநாத அய்யர் போன்றோரைஆரியப் பார்ப்பனர்கள்தான்புறக்கணித்தனர்; நாம்புறக்கணிக்கவில்லை.

பாரதியார் இறுதி ஊர்வலத்தில்அய்ந்தாறு பேர்தான் கலந்துகொண்டார்கள் என்றால், எந்த அளவிற்குப்பார்ப்பனர்கள் அவரை வெறுத்துப்புறக்கணித்துள்ளனர் என்று பாருங்கள்!வைத்தியநாத அய்யர் வீட்டில் முன்னாள்அமைச்சர் மாண்புமிகு கக்கன் அவர்கள்தங்கிப் படித்தார். வைத்தியநாத அய்யரும்தன் பிள்ளையாகவே ஆதி திராவிடவகுப்பைச் சேர்ந்த கக்கனை நடத்தினார். 23.02.1955 இல் வைத்தியநாத  அய்யர்இறந்தார். அவர் பெற்ற பிள்ளைகள்மொட்டையடித்துக் கொண்டபோது,கக்கனும் மொட்டையடித்துக் கொண்டார்;பிள்ளைகளோடு பிள்ளையாய் தானும்நின்றார்.

இதை ஆரியப் பார்ப்பனர்கள் தீவிரமாய்எதிர்த்தனர். பிராமணன் வீட்டுச் சடங்கைஆதி திராவிடன் செய்வதா? கொதித்தனர்.ஆனாலும், வைத்தியநாத அய்யரின்குடும்பத்தார் கக்கனைச் சேர்த்துக்கொண்டே இறுதிக்கடனைச் செய்தனர்.இதனால் ஆரியப் பார்ப்பனர்கள் எதிர்ப்புத்தெரிவித்துக் கலைந்து சென்றனர்.விதிவிலக்காக ஒருவர் வந்தாலும்அவர்களை ஆரியப் பார்ப்பனர்கள்எதிரியாகத்தான் பார்த்தனர். எனவே,விதிவிலக்கை வைத்து வாதம்பேசக்கூடாது. ஆரிய இனத்தின்தலைவர்போல் செயல்பட்ட சங்கராச்சாரிஎன்ன செய்தார் என்று பார்க்க வேண்டும்.அவர் செயல்பாடுகள்தான் ஆரியஇனத்தின் அடையாளம்.

தன்னுடைய பூசை வேளையில் தமிழ்என்னும் நீச பாஷையில் பேச மாட்டேன்என்று அடம்பிடித்துத் தமிழைக்கேவலப்படுத்தியவரல்லவா? இன்றளவும்அதுதானே நடைமுறை.

சங்கராச்சாரி வாயில் தமிழ் வழிப்பாட்டுநேரத்தில் வரக் கூடாது; கோயிலில்பூசையின்போது தமிழ் வரக்கூடாது.தமிழன் வீட்டுத் திருமணத்தில் கூட தமிழ்வரக்கூடாது என்றும், அது இழிமொழி, அதுதீட்டுடையது என்றும் இன்றளவும் ஆரியப்பார்ப்பனர் கூறுவதெல்லாம்குணாக்களுக்குத் தெரியாதா? ஏதோஉளச்சான்றோடு ஓரிரண்டு பார்ப்பனர்கள்நியாயமாக நடந்தால், தமிழுக்காகத்தொண்டாற்றினால் அதைவைத்துக்கொண்டு ஆரியர்களைஎதிர்ப்பது தவறு என்பது, தமிழர்களைஏமாற்றி, ஆரியத்திற்கு ஆதரவளிக்கும்நிலையல்லவா? அதற்குப் பெயர்அயோக்கியத்தனமல்லவா?குணாக்களைத்தான் கேட்கிறேன்!

நூல் - ஆரியத்தால் வீழ்ந்தோம்! திராவிடத்தால் எழுந்தோம் 

- ஆசிரியர் - மஞ்சை வசந்தன்

ஆங்கிலத்தை ஏற்று தமிழைப் புறக்கணித்தாரா?



ஆங்கில மோகங் கொண்டு பேசி,ஆங்கிலம் பரவ துணை நின்றார்; தமிழைப்புறக்கணித்தார் பெரியார் என்பதுகுணாவின் அடுத்த குற்றச்சாட்டு.


உங்கள் வீட்டில் மனைவியுடனும்குழந்தைகளுடனும் மட்டுமன்றிவேலைக்காரர்களுடனும் ஆங்கிலத்தில்பேசுங்கள். பேசப் பழகுங்கள், பேசமுயலுங்கள். தமிழ்ப் பைத்தியத்தைவிட்டொழியுங்கள்.


நமக்கு ஆங்கில அறிவுதேவையென்பதால் இந்தியைஎதிர்க்கிறேன். இந்தி எதிர்ப்பு மொழிச்சிக்கல் அல்ல; அரசியல் சிக்கல் தான்என்றார்.

இந்தி எதிர்ப்புப் போரை பெரியார்எதிர்த்தார்.

இந்தி எதிர்ப்பின் பயனை மட்டுமேதி.மு.க. பயன்படுத்திக் கொண்டது. இந்திஎதிர்ப்பை தி.மு.க. பெரிதாகச்செய்யவில்லை என்று பெரியார்மீதும்,திராவிட இயக்கங்கள்மீதும் தான் கூறும்குற்றச்சாட்டுகளை குணா விளக்கிக்கூறுகிறார்.

பெரியார் கருத்தை விமர்ச்சிக்கின்றஎவரும் அவர் உள்ளம் அறிந்து, அவர்விருப்பம், நோக்கு, ஆதங்கம் புரிந்துவிமர்சித்தால் இந்தக் குற்றச்சாட்டுகள்வராது.

ஆரியப் பார்ப்பனர்கள் ஆங்கிலம்சரளமாகக் கற்று உயர் பதவிகளில்,அதிகாரப் பதவிகளில் இருக்கையில்தமிழர்கள் அப்படி இல்லையே! தமிழர்கள்உயரே வரத் தடையாக இருப்பது எது?ஆங்கில அறிவுயின்மைதானே. எனவே,எப்பாடுபட்டவாவது தமிழன் ஆங்கிலஅறிவு பெற்று பார்ப்பானுக்கு நிகராக உயரவேண்டும் என்ற வேட்கையில், வெறியில்பெரியார் சொன்ன உச்சக்கட்ட உணர்ச்சிவார்த்தைகள் அவை. இங்கு உணர்வுதான்கருத்தில் கொள்ளப்பட வேண்டுமேயன்றி,வார்த்தைகள் அல்ல.

தேவாரமும், திருவாசகமும், குமரேசசதகமும், விவேக சிந்தாமணியும்படித்துவிட்டால் தமிழன் எப்படி ஆரியப்பார்ப்பனர்களோடு போட்டியிட முடியும்என்ற நடைமுறைச் சிந்தனையின்விளைவே பெரியாரின் மேற்கண்டகருத்துக்கள்.

அன்றைக்கும் சரி, இன்றைக்கும் சரிஆங்கிலம் அறிந்தவன் தான்மேல்நிலைக்கு வருகிறான். என்னதான்தகுதியும் திறமையும் இருந்தாலும்,ஆங்கில அறிவு இல்லையென்றால்அன்றைக்கும் புறக்கணிக்கப்பட்டார்கள்;இன்றைக்கும் புறக்கணிக்கப்படுகிறார்கள்.

ஆரியப் பார்ப்பன பெண் ஜெயலலிதாஆங்கிலப் பள்ளியில் பள்ளிப் படிப்பைமட்டுமே முடித்தாலும், ஆங்கிலம் பேசத்தெரிந்ததால் அவர் அனைத்துஇடங்களிலும் நிமிர்ந்து நிற்கிறார்.

ஆனால், தமிழ் உணர்வின் மேலீட்டால்,தன் பிள்ளைகளைத் தமிழ் வழியில் படிக்கவைத்தார் கலைஞர். அதன் விளைவுமத்திய அமைச்சர் அழகிரிநாடாளுமன்றத்தில் கூனிக் குறுகுகிறார்.ஸ்டாலின் டில்லி செல்லும்போதுசிரமப்படுகிறார். ஒருவித தாழ்வுமனப்பான்மை உருவாகிறது.

இந்த நிலை இருக்கக் கூடாதுஎன்பதற்குப் பெரியார் சொன்னகருத்துக்களே மேற்கண்டவை.இன்றைக்குத் தமிழ் இளைஞர்கள் உலகம்முழுவதும் சாதனை படைப்பது ஆங்கிலஅறிவுடன்கூடிய கணினி அறிவும்,பொறியியல் அறிவுமேயாகும். அவர்கள்ஆங்கிலம் கற்கவில்லை என்றால் எதையும்சாதிக்க முடியாது.

ஆங்கிலம் அறிந்ததால், இன்றைக்குச்சாதனைப் படைத்து, உயர் பதவியில்,உயர்நிலையில் தமிழர் வாழ்வதுமட்டுமல்ல; ஆரியப் பார்ப்பனர்களைவீழ்த்தி அவர்களைத் தாண்டி மேலெழுந்துவருகின்றனர்.

இன்றைக்குச் சட்டத் துறையானாலும்,மருத்துவம், பொறியியல் போன்ற மற்றதுறைகளிலும், திரைத்துறை இசைத்துறைஎன்று எதை எடுத்தாலும் தமிழர்கள் உலகஅளவில் சாதிப்பதற்கு ஆங்கில அறிவுமிகவும் உதவுகிறது.

இதை பெரியாரும் நாமும் மட்டும்சொல்லவில்லை. பாவாணரும்பெருஞ்சித்திரனாரும் சொல்கிறார்கள்.

தனித் தமிழ் கொள்கையை உயிர்மூச்சாகக் கொண்ட பெருஞ்சித்திரனார், 1970 ல் தான் எழுதிய கோடரிக் காம்புகள்என்ற கவிதையில் ஆங்கிலம் கற்கவேண்டியதன் அவசியத்தைவலியுறுத்துகிறார்.

மும்மொழித் திட்டம் மூளையைக்குழப்பும்

தம்மனம் விரும்பின் தனித்தனி பயில்க!

தமிழர் தமிழையும் ஆங்கிலமொழியையும்

அமிழ்தெனக் கற்க ஆக்கம் பெறுகவே!

என்கிறார்.

மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர்இருமொழிக் கொள்கையை ஏற்றார். உலகஅறிவு பெற, அறிவியல் அறிவு பெற,ஆங்கில அறிவு வேண்டும் என்றார்.இந்தியா முழுமைக்குமே தாய்மொழியும்ஆங்கிலமும் என்ற இருமொழிக் கொள்கைஏற்புடையது என்றார்.

தனித் தமிழ் இயக்கம் நடத்தியதமிழ்க்கடல் மறைமலை அடிகள் தன்நூல்களுக்கான முன்னுரையைஆங்கிலத்திலே எழுதினார். தனதுநாட்குறிப்பையும் ஆங்கிலத்தில்எழுதினார். இவர் சமஸ்கிருதத்தைஎதிர்த்தாரே தவிர ஆங்கிலத்தை எதிர்க்கவில்லை.

ஆங்கிலத்தின் அவசியம் கருதி இவர்கள்சொன்னதும் செய்ததும் குற்றமா? இவர்கள்தமிழுக்கும் தமிழர்க்கும் எதிரிகளா?இவர்களைக் குறை சொல்லாத குணாக்கள்பெரியாரையும் அண்ணாவையும் குற்றம்சாட்டுவது உள்நோக்க உந்துதலால்அல்லவா?

அன்றைய அறிஞர்களை விடுங்கள்.இன்றைய தமிழ்த் தேசியவாதிகள் என்னசொல்கிறார்கள்? தமிழ்ப் பயிற்றுமொழியாகவும் ஆங்கிலம் பாடமொழியாகவும் இருக்க  வேண்டும்.ஆங்கில அறிவு கட்டாயத் தேவை என்பதைஏற்கின்றனர்.

தாய்மொழிக்கு அப்பால் இன்னொரு

மொழியைக் கற்றுக்கொள்வது, அறிவு

வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்

என்கிறது தமிழ்த் தேசியபொதுவுடைமைக் கட்சி.

இந்தியாவின் ஒரு அங்கமாக, ஒருமாநிலமாக தமிழ்நாடு உள்ளவரைதொடர்பு மொழியாக ஆங்கிலம் கட்டாயம்தேவை இல்லையென்றால் அந்த இடத்தைஇந்திதானே நிரப்ப முயலும்? ஆங்கிலமா?இந்தியா? ஆங்கிலம் என்பதுதானேஅறிவுடைமை. ஆங்கிலம் தொடர்புமொழியானால் இந்தியாவிலும் பயன்படும்இதர நாடுகளிலும் பயன்படும்.

அறிவியல் கருத்துக்களை, உலகமாற்றங்களை, பொருளாதாரநடைமுறைகளை உடனுக்குடன் அறியமுடிவெடுக்க ஆங்கில அறிவு கட்டாயம்.என்பதே பெரியார் கொள்கை.

தமிழும், தமிழ்ப் புலவர்களும் எப்படிகாலத்திற்கு ஏற்பத் தங்களைத்தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்றுபெரியார் அளவுக்கு அதிக அக்கறையோடுகூறுகிறார் என்பதைக் கீழே படியுங்கள்.

இந்த நாட்டுத் தமிழ்ப் பெருங்குடிமக்களாகிய நம்மைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள ஏதாவது சாதனமிருக்கிறதா?பள்ளியில் படிக்கும்போது தெரிந்துகொள்ளலாம் என்றால் அங்குதமிழர்களைப் பற்றி ஒரு சேதியும் இல்லை.எவ்வித பாடப் புத்தகமும் இல்லை. அய்யர் பிராமணன் போன்ற வார்த்தைகள்காணப்படுகின்றனவே அன்றித் தமிழர்திராவிடர் என்ற வார்த்தைகளுக்கு அங்குஇடம் கிடையவே கிடையாது. மேல்வகுப்புக்கு வந்தால் தமிழ்நாட்டு சரித்திரம்இல்லை. இராமாயணம், மகாபாரதம்,அசோகன், முஸ்லீம், வெள்ளையர்ஆட்சியும்தான் விளக்கப்படுகிறதே தவிரதிராவிடர் தமிழர் என்கிற ஆட்சியைப் பற்றிகாண்பது மிகவும் அருமை. அப்படி ஏதாவதுகாணப்பட்டாலும் அது பெரும்பித்தலாட்டமும் மோசடியுமாய் இருக்கும்.

ஆகவே, நமது (தமிழ்) பிள்ளைகள்நம்மைப் பற்றித் தெரிந்து கொள்ளவழியில்லை. ஆரியருக்குமுன் தமிழன்என்ன சமயத்தவன் அவன் கடவுள்எப்படிப்பட்டது. அவன் வாழ்க்கை முறைஎப்படிப்பட்டது என்ற சரித்திர ஆதாரம் ஏதும்இல்லை. தமிழர்கள் காட்டுமிராண்டியாகஇருந்தார்கள் என்பதற்கே ஏராளமானஆதாரங்கள் கற்பிக்கப்படுகின்றன. நம்பிள்ளைகளுக்கு நம்மைப் பற்றி கீழ்வகுப்பிலிருந்து தெரிந்து கொள்ள வழிசெய்தால் ஒழிய, எப்படி அவர்கள்தங்களைப் பற்றித் தெரிந்து கொள்ளமுடியும் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்!

பாட புத்தகக் கமிட்டியில் உள்ளவர்கள்தமிழர்களுக்கு மான உணர்ச்சி, நாட்டுஉணர்ச்சி, இன உணர்ச்சி இருக்குமானால்இராமாயண, மகாபாரதக் கதைகளைச்சரித்திரத்தில் சேர்க்கச் சம்மதிப்பார்களா?

பண்டிதர்கள், உபாத்தியாயர்கள்இவற்றை நாம் சொல்லும் போது நம்மீதுபாய்கிறார்களே தவிர, தமிழர்களுக்குஇழிவு தரக் கூடிய, நமக்குத்தொடர்பில்லாத, நமது முற்போக்கைத்தடுக்கக் கூடிய, பகுத்தறிவுக்குஒவ்வாதவற்றை கற்பிப்பது குறித்துகவலைப்படுவதில்லை. இனியாவதுதமிழ்ப் பண்டிதர்கள் இதில் கவனம்செலுத்த மாநாடு கூட்டி, இவற்றைத் தடுக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

தமிழிலே, தமிழ்மொழி இலக்கியத்திலே,தமிழர் நல்வாழ்விலே, தமிழர்தன்மானத்திலே, தமிழர் தனி ஆட்சியிலேகவலையுள்ள நம் செல்வர்களுக்கு (கல்விநிலையம் நடத்கின்றவர்களுக்கு) இந்தக்காரியமெல்லாம் முக்கிய கடமையல்லவாஎன்று கேட்கிறோம்.

நிலைகுலைந்த தமிழ் மக்களைத் தட்டிஎழுப்பி, உணர்ச்சி ஊட்டி அவர்களுக்குத்தன்மான உணர்வும், விடுதலை உணர்வும்ஊட்ட வேண்டாமா? தமிழ் மக்களைத்(அவர்கள் படித்தவர்களானாலும்,பண்டிதர்களானாலும், மந்திரி, கவர்னர்,வைசிராய், நிர்வாக சபை மெம்பர்ஆனாலும் பகுத்தறிவு விஷயத்தில்மரக்கட்டையாக்கிவிட்டு) தமிழர்அல்லாதவர்கள் அடிமைப்படுத்திச்சுரண்டிக் கொள்ளை கொள்வதைத் தடுக்கவேண்டாமா?

தமிழ் மக்களின் நலத்தில்கவலையுள்ளவர்கள் எது எதற்குஎன்றுதான் அழுவது? தமிழர்க்குத்தொண்டாற்றுவது என்றால் என்னதான்அர்த்தம்? ஆகவே, பிள்ளைகளில்மூடக்கருத்துக்களை, தமிழர் விரோதக்கருத்துக்களை நீக்கி, அறிவு வளர்ச்சிக்கு,மான உணர்ச்சிக்கு உகந்த பாடங்களைவைக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.நமக்குச் சுதந்திரம் உள்ள கல்விஇலாகாவில் இம்மாற்றம் செய்யாமல் வேறுஎதில் விடுதலை பெறப் போகிறோம்? -குடிஅரசு (12.02.1944)

நம்முடைய தமிழ்ப்புலவர், பண்டிதர்,தமிழறிஞர்களுக்கு இலக்கிய, இலக்கணஅறிவு இருக்க முடியுமே தவிர உலகம்,சரித்திரம், பூகோளம், பகுத்தறிவு,விஞ்ஞானம் என்னும் துறைகளில்அறிவோ, ஆராய்ச்சியோ இருக்க முடியுமா?இதைச் சொன்னால் நம் புலவர்களுக்குக்கோபம் வருவதில் குறைவில்லை. ஆனால்அப்புலவர்கள் தங்களைப் பற்றிச்சிந்திக்கட்டும். சமூகப் பயனுள்ள காரியம்ஏதாவது அவர்கள் செய்கிறார்களா?செய்யத் தகுந்த சக்தியோ, அறிவோஅவர்களுக்கு இருக்கிறதா? (புராண,இலக்கிய அறிவு தவிர வேறு துறை அறிவுபெற்றுள்ளார்களா?) புலவன், வித்வான்என்றால் அறிவுடையவன் என்பதாகும். நம்புலவர்களுக்குப் பொது அறிவோ,பொதுமக்களுக்கு வழி காட்டும்திறமையோ, முன்னேற்றத்திற்குவழிகோலவோ, புதுமைகள் செய்யவோஇன்றைய புலவர்களுக்குப் புலமைஉள்ளதா? அதற்கு அவர்களுக்குப் பயிற்சிஉண்டா?......

புலவர்கள் அல்லது அறிஞர்கள்என்பவர்களுக்கு உலக மாறுபாட்டைஅறிந்து, அதற்கேற்ப வாழ்வியலைஅமைத்துக் கொடுக்க வேண்டியதுஅவர்கள் கடமையாகும். ஆனால், நம்புலவர்கள், பண்டிதர்கள் மாறுபாட்டைவிரும்பாதவர்கள். 3000 வருஷத்திற்குமுன்பிருந்ததை, மூடச் செய்திகளைப்பரப்பவும், நிலைநாட்டவும்முயற்சிப்பவர்கள்.

இப்படிப்பட்ட கல்வியைக்கல்வியாளர்களைக் கொண்ட நாடோ,மக்களோ எவ்வாறு முன்னேற்றமடையமுடியும்? புலவர்களைக் குறை கூறுவதாகக்கொள்ளாமல், பாராட்டும்படியாக அவர்கள்தங்களைத் தகுதிப்படுத்திக்கொள்ளவேண்டும் என்பதற்காகவேஇதைச் சொல்கிறோம் என்றுகொள்ளவேண்டும்.இளம் புலவர்கள் சிலர்நம் கருத்தை ஏற்றுச் சமுதாயமாற்றத்திற்குப் பாடுபடுவ மகிழ்ச்சியைத்தருகிறது. என்றாலும், இன்னும் துணிவாய்வெளியில் வர வேண்டும்.

(குடிஅரசு, 15.01.1944)

தமிழிலும், தமிழ்ப் புலவர்களிடமும்உள்ள குறைகளைச் சுட்டி, மேம்படுத்தகடுமையாகப் பேசிய பெரியார் தமிழைஉயர்த்திப் பேசத் தவறவில்லை.

1.      தமிழ்மொழி செய்யுள் தன்மையில்கிரேக்க மொழியை விடவும், இலக்கியப்பெருமையில் இலத்தீன் மொழியையும்வெல்லக்கூடியது என்று வின்ஸ்ஸோகூறுகிறார்.

2.      கால்டுவெல், தமிழ்மொழிபண்டையது, நலஞ்சிறந்தது,உயர்நிலையில் உள்ளது, இதைப் போன்றதிராவிட மொழி வேறெதுவும் இல்லைஎன்று சிறப்பித்துக் கூறுகிறார்.

3.      சிலேட்டர் என்பவர், திராவிட மொழிஎல்லாவற்றுள்ளும் மக்கள் பேசும்மொழிக்கு உரிய தன்மையைப் பெற்றுள்ளமொழி தமிழ் மொழியே; தக்கஅமைப்புடையதும் தமிழ்மொழியேஎன்கிறார்.

4.      மர்டாக் என்பவர், துராணியமொழிகள் பலவற்றுள்ளும் மிகச் சீரியமொழியாயும், அழகிய இலக்கியங்களைப்பொருந்தப் பெற்றதாயும் விளங்குவதுதமிழே என்றும் கூறியுள்ளார்.

தாய்மொழியிடத்துஅன்பில்லாதவர்களுக்குத் தாய்நாட்டின்மீதும் அன்பிராது. எனவே, ஒவ்வொரு தமிழ்மாணவனும் தமிழ் கற்க வேண்டும்.

ஜாதிபேதம் தமிழரிடம் இல்லை. எகிப்து,கிரேக்கம், ரோம் முதலிய நாடுகளோடுஅன்றைக்கே வணிகத் தொடர்புகொண்டவர்கள் தமிழர்கள்.

தமிழ்ப் பெண்களும் கல்வியில் புலமைபெற்று விளங்கினர்.

தமிழ் மன்னர்கள் நீதியோடு ஆண்டனர்.

தமிழர்கள் அஞ்சாது வீரப்போர் புரியும்ஆற்றல் உள்ளவர்கள்.

நம் தாய்நாட்டுத் தமிழர்கள்ஒவ்வொருவரும் தாய்மொழியாம் தமிழைக்கட்டாயம் கற்று சிறப்புப் புலமை அடையவேண்டும். இதனால் தமிழ் வளர்ச்சிஅடையும், தாய் நாடான தமிழ்நாடுசிறப்புற்றோங்கும். - (குடிஅரசு 18.12.1943)

என்று தமிழ் தமிழர் மேன்மையைஎடுத்தியம்பும் கட்டுரையைக் குடிஅரசுஇதழில் வெளியிட்ட பெரியாரா தமிழுக்கும்,தமிழர்க்கும் எதிரானவர்? தமிழர்கள்சிந்திக்க வேண்டும்.

இவை மட்டுமல்ல, தமிழுணர்ச்சியைத்தமிழைப் பரப்ப வழிகளையெல்லாம்குடிஅரசில் வெளியிட்டார்.

1.      தமிழர் தமிழ்ப் பெயர் இட வேண்டும்.

2.      தமிழ்நாட்டுப் பிரிவு, ஊர், தெரு, வீடுபெயர்கள் தமிழில் இருக்க வேண்டும்.

3.      வீட்டிலும் கடைத்தெருவிலும்,அலுவலகங்களிலும், வழிப் போக்கிலும்ஆங்கிலச் சொல்லும், சமஸ்கிருதமும்தமிழில் கலப்பதைத் தவிர்க்க வேண்டும்.

4.      தமிழில் இல்லாதவற்றிற்குஆங்கிலச் சொல்லைக் கலக்கலாம்.

5.      தமிழில் இல்லாதவற்றிற்குப் புதியசொல் உருவாக்க வேண்டும். அறிஞர்கள்உருவாக்கும் புதுச் சொல்லைப் பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும்.

6.      கோயில்களிலும், விழாக்களிலும்தமிழே ஒலிக்க வேண்டும்.

7.      தமிழைப் பிழைபட வழங்குபவரைத்திருத்த வேண்டும். என்று சென்னைதமிழறிஞர் கழகத்தின் கோரிக்கைகளை04.12.1943 குடிஅரசு ஏட்டில் பெரியார்வெளியிட்டு தமிழைத் தூக்கி நிறுத்தமுயன்றார்.

சென்னை சாந்தோம் சாலையில்அமைந்த முத்தமிழ் நிலையம் அழைப்பைஏற்றுச் சென்ற பெரியார் ஆற்றியஉரையில், நீங்கள் ஆரம்பித்திருக்கும் இந்தஅமைப்பிற்கு தமிழனிடத்தில் உண்மைப்பற்றும், தமிழும் தமிழரும் மேன்மை அடையவேண்டும் என்ற உண்மை கவலையும்உள்ள ஒவ்வொரு சுத்தமான தமிழ் மகனும்ஆதரிக்கக் கடமைப்பட்டவர் ஆவார்கள்.

உங்களுக்கு நண்பர் பாரதிதாசன்அவர்கள் கிடைத்திருப்பது உங்கள்நல்வாய்ப்பிற்கும் உங்கள் வெற்றிக்கும்அறிகுறியாய் இருக்கும். இன்று இந்தநாட்டில் தமிழும், தமிழ்க் கல்வியும், தமிழ்இசையும் தமிழர்களுடையமுன்னேற்றத்திற்கும், தன்மானத்திற்கும்பயன்படும்படி மக்கள் உணர உழைக்கஏற்ற கவிகள் செய்து மக்களை ஊக்குவிக்கஅவர் ஒருவரே என் கண்ணுக்குத்தென்படுகிறார். அவரை நாம்பயன்படுத்திக் கொள்வதில் நம் வெற்றித்தன்மையிருக்கிறது.

உங்கள் கழகம் வெற்றியடைய தளராதமுயற்சி, ஒற்றுமை, கட்டுப்பாடுஎன்பவைகளோடு, ஒழுக்கம், நாணயம்என்பவைகளும் தக்கபடி கவனித்துப்பின்பற்ற வேண்டியதாகும். இம்மாதிரிபணிகளுக்கு என்னாலான உதவியைச்செய்ய எப்போதும் காத்திருக்கிறேன்.

தமிழ்நாட்டு இளைஞர்களும்,நாட்டுப்பற்று, மொழிப்பற்று, தன்மானப்பற்று உண்மையாய்க் கொண்டசெல்வவான்களும் உங்களுக்கு உதவவேண்டியது அவர்களது கடமையாகும்என்று பேசினார் பெரியார்.

- (குடிஅரசு  08.01.1944)

தமிழன் தலை நிமிர்ந்துதன்மானத்தோடும், கல்வியும், அறிவும்,உயர்வும் பெற்று வாழ வேண்டும் என்றுஒவ்வொரு நாளும் தட்டியெழுப்பிக்கொண்டேயிருந்தார்.

ஏ தமிழா! உன்னுடைய நாட்டில் நீ தாசிமகனா? உனது செல்வத்தாலும்,உழைப்பாலும் கட்டப்பட்ட பொதுஇடங்களில் உனக்கு உரிமை இல்லையா?உனது நாட்டில் உன்னை நம்பிவைத்திருக்கும் உணவுச் சாலையில் நீதீண்டப்படாதவன் என்று உனக்கொருதனியிடம் ஒதுக்கி வைப்பதா? என்றுஅடிக்கடி உணர்வூட்டினார்.

(குடிஅரசு  04.12.1943)

தமிழ் மொழிக்கு மட்டுமல்ல தமிழர்தழைக்கவும் பெரியார் பாடுபட்டார்.திராவிடர் இயக்கம் பாடுபட்டது. கே.பி.சுந்தராம்பாள் என்ற கீழ்ச்சாதிப் பெண்புகழ் பெறுவது விரும்பாத ஆரிய கூட்டமும்,ஆரியப் பத்திரிகைகளும், அவரது இசைப்புலமையை இழித்துப் பேசியபோது, அந்தஅம்மையாருக்கு ஆதரவாக குரல்கொடுத்தவர் பெரியார். இத்தனைக்கும்அந்த அம்மையார் சுயமரியாதைஇயக்கத்திற்கு எதிராகச் செயல்பட்டவர்.

தமிழ்நாட்டில் தமிழ்ப் பாட்டுக்கள்பாடப்பட வேண்டும்; தமிழில் இசை இருக்கவேண்டும் என்று கூறுபவர்களைமுட்டாள்கள் எனக் கூறுவோருக்குத்தமிழ்நாடு இடங் கொடுத்துக்கொண்டிருக்கிறது. தமிழர்களிடையில்தமிழ்நாட்டில் தமிழ் இசைக்கு எதிராகஇருப்பவர்கள், எதிராக வேலைசெய்பவர்கள், தமிழில் பாட மறுப்பவர்கள்,தமிழர்களின் இக்கோரிக்கையை ஏளனம்செய்பவர்கள் யார்? ஆரியர்கள்தானே.இவர்களைத் தவிர, இத்துணிவுடன்தமிழர்களின் உப்பைத் தின்றுவிட்டு,தமிழ்நாட்டில் வாழ இடம் பெற்று,தமிழர்களின் உழைப்பால் உடலைவளர்த்துக் கொண்டு, தமிழர்களையும்அடிமைப்படுத்தி, தாழ்ந்தவர்களாக்கி, தமிழ்கலைகளுக்கு ஆரிய மேற்பூச்சிட்டு,தமிழோடு வடமொழியைக் கலந்துகெடுத்து, தமிழர்களின் வாழ்வைச்சீர்குலைத்து, தமிழ்நாட்டைத் தங்களுடையஅடிமை நாடாக ஆக்கி வைத்துக்கொள்வதற்கு (பன்னூற்றாண்டு காலமாக)பெரும் துணிவு ஆரியர்களைத் தவிர்த்துவேறு யாருக்கு இருக்க முடியும்?

இந்த ஆரிய வர்க்கத்தார் தமிழரிடையேதங்கள் சதிச் செயல்களை நிறைவேற்றி,தமிழர்களையும் தமிழ்நாட்டையும் அடிமைப்படுகுழியில் ஆழ்த்திக் கொண்டுவருவதற்கு, இவ்வளவு துணிவாகஅவர்கள் செயல்படுவதற்குத் தமிழர்களின்தைரியம் இன்மையே காரணம். ஓரிருஎதிர்ப்புகள் இருப்பினும் அது போதியஅளவு இல்லை. படித்த தமிழர்கள்கூடஆரியத்திற்கு அடிவருடிகளாகவே இருந்துவருகின்றனர்; தமிழர்க்குத் துரோகமும்செய்கின்றனர். ஒரு சிலர்விலாங்குமீன்போல் இரு பக்கமும்நடிக்கின்றனர்.

தங்கள் தாய்நாட்டிற்கும்,தாய்மொழிக்கும் எதிராக உள்ளவர்கள்எவராயினும் அவர்களை வீழ்த்த,விரட்டியடிக்க முன்வர வேண்டும். எவர்பாராட்டுக்கும், புகழ் மொழிக்கும் இச்சைவைக்காமல் உழைத்தால்தான் இதைச்சாதிக்க முடியும்.

1.      தமிழ்ப் பாட்டுக்கள் முழுக்க முழுக்கதமிழ் மொழியில் இருக்க வேண்டும். 100க்கு 99 வடமொழி வார்த்தைகள்கலந்ததாக இருக்கக் கூடாது.

2.      புராண மூடநம்பிக்கைகளைக்கொண்ட பாடல்களாக இருக்கக் கூடாது.

3.      நல்ல தமிழில், இயற்கைஎழில்களையும், தமிழரின் வீரத்தையும்,அன்பையும், சமத்துவத்தையும்,மானத்தையும், நேர்மை, நீதிநெறிகளையும், தமிழ்நாட்டுப் பற்றையும்,மொழிப் பற்றையும், ஒற்றுமையையும்,வரலாற்று அறிவையும் உள்ளடக்கி இருக்கவேண்டும்.

4.      வாழ்வியல் கேடுகளை அகற்றி,அறிவூட்டக் கூடியதாக இருக்க வேண்டும்.இவற்றைச் செய்ய தமிழர்கள் துணிவுகொள்ளாதவரை, தமிழ்நாட்டுச்செல்வர்கள் இதற்குத் தொண்டாற்றமுன்வராத வரையில் நம் முயற்சி வெற்றிபெறாது. தமிழர்கள் இனியேனும் உணர்வுபெற்று, உற்சாகமடைந்து, துணிவுகொண்டு, தங்கள் மொழியையும்,நாட்டையும் நயவஞ்சகர்களிடமிருந்துகாக்க வேண்டும். தமிழ் இசையின்பெயராலும், பிற வகையிலும்,தமிழர்களையும் தமிழ் மொழியையும்குலைப்பதற்குச் செய்யப்படும்முயற்சிகளை வேருடன் களைந்து, தமிழ்உயர்வு பெறும் வகையில் வழிகாணவேண்டும். முன் வாருங்கள் தமிழர்களே!அதற்குத் தருணம் இதுதான்.

(25.12.1943  குடிஅரசு தலையங்கம்)

இப்படியெல்லாம் பெரியார் தமிழுக்கும்தமிழர்க்கும் நாள் தவறாது ஓயாதுஉழைத்ததால்தான், அண்ணாமலைப்பல்கலைக் கழக தமிழ்ப் பேரவை இலக்கியமன்றத்தார் அவருக்கு சிறந்ததொருபாராட்டு மடல் வரவேற்பிதழாகஅளித்தனர்.

தமிழகத்தின் தனிப் பெருந் தலைவர்,பெருந்தகை, பெரியார் ஈ.வெ. இராமசாமிஅவர்களுக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை, தமிழ் இலக்கியமன்றத்தார் ஆகியோர் இன்புடன் படித்துஅன்புடன் அளித்த, வரவேற்பிதழ்

தமிழ்நாடு தந்த தக்கோய்! வருக! வருக!தங்கள் வரவு நல்வரவாகும்!

வண்டமிழ் நாட்டு வளர்ச்சி எண்ணிஉடல் வாட்டமுறினும் உள்ளம் வாட்டமுறாது.உழைத்திடும் உண்மைத் தலைவர் வருக!முன்னோர் மொழி பொருளேயன்றியவர்நிலையும் பொன்னே போற்றுவோம்போற்றுவோம் என்றெண்ணிப் புரிந்துவரும் செயல்களே, கீழ்நாட்டைக்கீழ்நாடாக்கிற்று என்ற உண்மையைஉணர்த்திய உணர்வின் வடிவோய் வருக!தமிழரின் மேன்மையைத் தடுத்தவனைஎன் தாய் தடுத்தாலும் விடேன் என்றுவஞ்சினக் காஞ்சி கொண்டு தமிழ்மொழியின் வளர்ச்சியைக் குலைப்பதற்குத்தறுகனோடு புகுத்தப்பட்ட இந்தியைத்தடுத்து நிறுத்திய செயற்கறிய செய்தசெம்மலே வருக! அவரவர் தம் நாகரிகத்தைஅளந்து காட்டவல்லது அவரவர் தம்பொருளறி இசையே எனப் புகன்று தனித்தமிழிசையே தமிழ்நாட்டிற்குத் தக்கதென்றுஅன்று முதல் புகன்று வரும் தமிழர்தலைவரே வருக! வருக!

அறிவுத்துறை வல்ல அண்ணலே!அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துமாணவ மாணவிகளாகிய யாங்கள்அளப்பிலா உவகை கொள்கிறோம். (எங்களுக்கு முன்னும் பின்னும்பயில்வோருக்கு தங்களைச் சந்திக்கும்வாய்ப்புஇல்லை)................................................................

திராவிட நாட்டுச் சீர்சால் கிழவ! மனிதன்மனிதனாக வாழ வேண்டும், அதற்குஅறிவைப் பயன்படுத்த வேண்டும் என்றகருத்தினை வழங்கிய கருவூலமே வருக!ஆணும் பெண்ணும் அமைப்பால்வேறுபட்டோராயினும் வாழ்வில் ஒன்றுபட்டஉயர்வுடையரே எனும் நம் பொன்மொழிதழைக்க! வேற்றுமையை வளர்த்துவீணர்களை வரவேற்பது, விளக்கமற்றமதவுரைகளே எனும் நம் விரிவுரைசெழிக்க! ஆக்கந்தருவன மக்களின்தொண்டேயாகும் என்று, ஆண்டுகளாகஆண்மையிழந்த தமிழ்நாட்டிற்கு,அடுக்கடுக்காய்ச் செய்து வரும்அரும்பெரும் பணிகள் வாழ்க! சோர்வைப்போக்கும் சுடரொளி வழங்கும் தோன்றால்வாழ்க! பெருநலம் பயக்கப் புதுநெறிவகுத்த இருபதாம் நூற்றாண்டு பெரியோய்இனிது வாழ்க!

சிதம்பரம்,                                                                            அண்ணாமலைப் பல்கலைக் கழகம்

07.02.1944                                                                                                   (குடிஅரசு 26.02.1944)

உலகின் உயர் தகுதி பெற்று அன்றைக்குவிளங்கிய, அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையே பெரியாரை தமிழர்தலைவராய், தமிழுக்கும், தமிழர்க்கும்தொண்டாற்றி ஏற்றம் பெறச் செய்த ஏந்தல்என்று, ஆனால், அறைக்குள் அடை காக்கும்குணாக்கள் அவதூறு வீசுகின்றனர்!

தமிழர்களே! உண்மை உணருங்கள்.எட்டப்பன் குணாக்களை அடையாளம்கண்டு அப்புறப்படுத்துங்கள்!

தமிழ் படித்தால் சமயவாதியாகமுடிகிறதே தவிர, அறிவு

வாதியாக முடியவில்லையே! என்பதேபெரியாரின் ஆதங்கம்.

சமுதாயத்தில் தங்கள் தகுதிக்குசமஸ்கிருதத்தைப் பயன்படுத்திய ஆரியப்பார்ப்பனர்கள், தங்களின் வளர்ச்சிக்குஆங்கிலத்தை முறையாக, முழுமையாகப்பயன்படுத்தி மேலே வந்தனர். வாழ்வு,வளர்ச்சி வருவாய் என்று வரும்போதுஅவர்கள் சாஸ்திரங்களையே மீறினர்.

கடல் தாண்டக் கூடாது பிராமணன் என்றசாஸ்திரத்தை சாக்கடையில் போட்டுவிட்டுகப்பலேறினர். அயல்நாட்டு படிப்பு, பதவி,பணம் என்று மேலெழுந்தனர். இப்படித்தமிழர்கள் வரவில்லையே என்றஆதங்கம்தான் பெரியாருக்கு இருந்ததேஒழிய மற்றபடி தமிழைக் கேவலப் படுத்திஆங்கிலத்தை வளர்க்க வேண்டும்என்பதல்ல!

நூல் - ஆரியத்தால் வீழ்ந்தோம்! திராவிடத்தால் எழுந்தோம் 

- ஆசிரியர் - மஞ்சை வசந்தன்