பக்கங்கள்

செவ்வாய், 21 பிப்ரவரி, 2017

தமிழ்ப் பெண்களைப் பாலியல் அடிமைகளாக பயன்படுத்திய குற்றவாளிகளைத் தண்டிக்க இந்திய அரசு வலியுறுத்த வேண்டும்


தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

சென்னை, பிப். 21- ஈழப் போரின் போது ராஜபக்ச ஆட்சியின்போ தும் அதன்பின்னர் அமைந்த மைத்ரிபால சிறிசேன அரசின் கீழும் கைதுசெய்யப்பட்ட சர ணடைந்த தமிழ்ப் பெண்களை சிங்கள ராணுவத்தினர் பல் வேறு முகாம்களில் அடைத்து வைத்து பாலியல் அடிமைகளா கப் பயன்படுத்தினர் என்ற அதிர்ச்சியளிக்கும் உண்மை இப்போது வெளியாகியுள்ளது.

இந்தக் கொடுங்குற்றத்தைச் செய்த குற்றவாளிகளை தண் டிப்பதற்கு இந்திய அரசு இலங் கையை வலியுறுத்தவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திரு மாவளவன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இலங்கை போரின்போதும் அதற்குப்பின் னாலும் சரணடைந்த தமிழ்ப் பெண்களை பாலியல் அடிமை களாக சிங்கள ராணுவத்தினர் பயன்படுத்தினர் என்ற அதிர்ச் சியளிக்கும் உண்மை வெளியா கியுள்ளது.

அய்நா அவையின் பெண்க ளுக்கு எதிரான பாகுபாடுகளை அகற்றும் குழுவின்  (சிணிஞிகிகீ) முன்னர் தாக்கல் செய்யப்பட் டுள்ள அறிக்கையில் இந்தத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளன. சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் (மிஜியிறி) சார்பில் 55 பெண்களின் வாக்குமூலங்கள் தொகுக்கப் பட்டு அறிக்கையாக சமர்ப்பிக் கப்பட்டிருக்கிறது. அவர்களில் நாற்பத்தெட்டு பேர் ராஜபக்ச ஆட்சியின்போது கைதுசெய்யப் பட்டவர்கள், ஏழு பேர் தற்போது நடைபெறும் சிறிசேனவின் ஆட்சியில் கைதுசெய்யப்பட்ட வர்கள்.

வாக்குமூலம் அளித்திருக் கும் 29 பெண்கள் பலவந்தமாக வாகனங்களில் கடத்தப்பட்டு கண்கள் கட்டப்பட்டு அடையா ளம் தெரியாத இடங்களில் அடைத்துவைக்கப்பட்டு பாலி யல் வன்முறைக்கு ஆளாக்கப் பட்டுள்ளனர். பத்து பேர் மறு வாழ்வு முகாம்களிலிருந்து கடத் திச்செல்லப்பட்டுள்ளனர். தம்மை அடைத்துவைத்திருந்த வர்களுக்கு லஞ்சம் கொடுத்தே இந்தப் பெண்கள் தப்பித்து வந்துள்ளனர். இந்தக் கொடு மைகளில் ஈடுபட்ட ராணுவ அதிகாரிகளின் பெயர், பதவி உள்ளிட்ட விவரங்களும் சாட் சிகளின் வாக்குமூலங்களோடு இணைத்து சமர்ப்பிக்கப்பட்டி ருக்கின்றன.

தமிழ்ப் பெண்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் இந் தக் கொடுமை இனப்படு கொலையைவிட மோசமானது. இப்போதாவது சர்வதேச சமூக மும் அய்நா அவையும், இலங்கை போர்க் குற்றங்களிலும், இனப் படுகொலையிலும் ஈடுபட்ட வர்களைத் தண்டிக்க விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். தமிழ்ப் பெண்களைப் பாலியல் அடிமைகளாக வைத்திருந்த சிங்கள ராணுவத்தினரைக் கைது செய்து தண்டிக்க வேண்டும் என இலங்கை அரசை இந்திய அரசு வலியுறுத்தவேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
-விடுதலை,21.2.17

திங்கள், 20 பிப்ரவரி, 2017

1,200 ஆண்டுகள் பழைமையான சமணச் சிற்பம்




சேலம் மாவட்டம் மேச்சேரி அருகில் 1200 ஆண்டுகள் பழைமை வாய்ந்த சமண முனிவர் (தீர்த்தங்கள்) கற்சிலை கண்டு பிடிப்பு.

சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே சுமார் 1,200 ஆண்டுகள் பழைமையான- கருங்கல்லில் வடிவமைக்கப்பட்ட சமணத் தீர்த்தங்கரரின் சிலையை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். தொல்லியல் துறை யினர் இதனைப் பாதுகாப்பாகப் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக புதுச்சேரியைச் சேர்ந்த சமண ஆர்வலர் அ.சிறீதரன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழக மக்கள் சைவம், வைணவம், சமணம், பவுத்தம் ஆகிய நெறிகளைப் பன்னெடுங் காலமாய் பின்பற்றி வந் துள்ளனர். சங்க காலத்தில் இருந்தே தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட ஜைனர்கள் எனப்படும் சமணர்கள் தமிழகம் முழுக்க வாழ்ந்துள்ளனர்.

நன்னூல், சீவக சிந்தாமணி உள்ளிட்ட இலக்கணம், இலக்கியம், மருத்துவம், கணிதம், வானியல் எனப் பல துறைகளிலும் சமணத் துறவிகள் நூல்களைப் படைத்து உள்ளனர்.

இரண்டாயிரம் ஆண்டுகள் தொன் மையான பிராமி கல்வெட்டுத் தகவல்களில் பெரும் பகுதி சமணம் சார்ந்தவையே. சமண முனிவர்கள் மக்களுக்கு கல்வி, மருத்துவம் போன்ற அறப் பணிகள் செய்ததற்கான தடயங்கள் இன்றும் தமிழகம் முழுக்க பல்வேறு மலைகளில் சான்றுகளாக உள்ளன.

இந்த வகையில் 1,200 ஆண்டுகள் தொன்மையான கருங்கல்லில் வடிக்கப் பட்ட சமணத் தீர்த்தங்கரர் சிலையொன்று சேலம் மாவட்டம், மேச்சேரிக்கு அரு கிலுள்ள பொட்டனேரி என்ற கிராமத்தில் முற்றிலும் பராமரிப்பற்ற நிலையில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இங்குள்ள வரதராஜ பெருமாள் ஆல யத்துக்கு அருகில் வயல் வெளியில் மரத் தின் அடியில் உள்ள இச் சிற்பத்தை ஆய் வாளர்கள் திருக்கழுக்குன்றம் ஜீவா, ரவி தாஸ் ஆகியோருடன் ஆய்வு செய்தோம்.

தீர்த்தங்கரர் உருவங்களின் தலைக்கு மேல் உள்ள முக்குடை காணப்படுகிறது. தீர்த்தங்கரர் முகம் மட்டுமின்றி, சிற்பம் முழுவதும் தேய்ந்த நிலையில் உள்ளது. சாமரதாரிகள், இயக்கன், இயக்கியர் உருவங்களும் இணைந்தே உள்ளன.

அர்த்தப்பரியங்காசன தியான நிலை யுடன் திருவுருவம் சிம்ம ஆசனத்துக்கு மேல் அமைக்கப்பட்டுள்ளது. இளம்பச்சை நிறக் கல்லிலான இந்தச் சிற்பம் பின் பகுதியில் பார்க்கும்போதும் தியான நிலையில் அமர்ந்து இருப்பதுபோல அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

அபிஷேக மேடையுடன் காணப்படும் இச் சிற்பம் உள்ள பகுதியில் சமண ஆலயம் இருந்து அழிந்திருக்கலாம். தற்போது இப் பகுதியில் சமணர்கள் எவரும் இல்லை.
தொன்மையான தமிழர் கலாசாரத்தின் எச்சங்களாக உள்ள இத்தகைய சமணச் சிற்பங்கள் பற்றிய விழிப்புணர்வை மக் களுக்கு உருவாக்க வேண்டும். சிறிய அளவில் மேடையுடன் பாதுகாப்பிடம் எழுப்பி வரலாற்றுத் தகவல்களுடன் அறிவிப்புப் பலகைகளை தொல்லியல் துறை அமைக்க வேண்டும். இந்தப் பாதுகாப்பு மேடைகளில் நான்கு பக்கமும் தீர்த்தங்கரர் குறிப்பிட்ட வாழ்வியல் நெறிகளை விளக்க வேண்டும் என்றார் சிறீதரன்.

-லிடுதலை ஞா.ம.18.2.17