பக்கங்கள்

வெள்ளி, 30 ஜூன், 2017

தமிழில் ரயில் டிக்கெட்டுகள் வழங்க நடவடிக்கை - பொங்கல் முதல் அமல்படுத்த திட்டம்

புதுடில்லி, ஜூன் 29 ரெயில் டிக்கெட்டுகள் தமிழில் வழங்கப் பட உள்ளதாகவும், வரும் பொங் கல் பண்டிகை முதல் அமல்படுத்த திட்டமிடப்பட்டு இருப்பதாக வும் பயணிகள் வசதி மேம்பாட் டுக்குழு உறுப்பினர் தெரிவித்தார்.

மத்திய ரயில்வே துறையால் தற்போது வழங்கப்படும் ரயில் டிக்கெட்டுகள் இந்தி மற்றும் ஆங் கில மொழிகளிலேயே உள்ளன.

இது தமிழ்நாடு உள்ளிட்ட இந்தி பேசாத மாநில மக்களுக்கு பெரும் வசதிக்குறைவாக உள் ளது. எனவே டிக்கெட்டுகள் அந்தந்த மாநில மொழிகளில் அச்சிட்டு வழங்க வேண்டும் என்று பயணிகளும், பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந் தனர். இந்த நிலையில் டில்லியில் ரயில் பயணிகள் வசதி மேம் பாட்டுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் தமிழில் டிக்கெட்டுகள் வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது, தமிழ் மட்டும் இன்றி டிக்கெட் வழங்கப்படும் மாநிலத் தின் மொழிகளில் விவரங்களை அச்சடிக்க முடிவு எடுக்கப்பட்டது.
இது தொடர்பான மென் பொருள் (சாப்ட்வேர்) புதிதாக வடிவமைக்கப்பட்டு இன்னும் 6 மாதங்களில் அந்தந்த மாநில

மொழிகளில் டிக்கெட்டுகள் அச்சிடப்பட்டு வழங்க முடிவு செய்யப்பட்டது.

இது குறித்து ரயில் பயணிகள் வசதி மேம்பாட்டுக்குழு உறுப் பினர் ஆசீர்வாதம் ஆச்சாரி கூறிய தாவது:-
ரயில் டிக்கெட்டுகளில் உள்ள விவரங்கள் ஆங்கிலம், இந்தியில் இருப்பதால் பலர் சிரமப்படு கிறார்கள். எனவே, ரெயில் டிக்கெட்டில் உள்ள விவரங்கள் தமிழில் இருக்க வேண்டும் என்று வற்புறுத்தினேன். சுமார் அரை மணி நேரம் நடைபெற்ற விவாதத்திற்கு பிறகு, தமிழ் மட்டுமல்லாமல் டிக்கெட் எடுக்கப்படும் இடம் அமைந்துள்ள மாநிலத்தின் மொழியில் விவரங்கள் அச்சடிக்க ரெயில்வே வாரியம் ஒப்புக் கொண்டது.

இதற்காக டிக்கெட் அச்சிட பயன்படுத்தப்படும் மென் பொருள் புதிதாக உருவாக்க முடிவு செய்யப்பட்டது. இன்னும் 6 மாதங்களுக்குள் இப்பணி நிறைவு பெற்று, ரயில் டிக்கெட் தமிழ் மொழியில் வழங்கப்படும். பொங்கல் பண்டிகை நாளில் இதனை அமல்படுத்த திட்ட மிடப்பட்டு உள்ளது. இவ்வாறு ஆசீர்வாதம் ஆச்சாரி கூறினார்.

-விடுதலை,29.6.17

வெள்ளி, 23 ஜூன், 2017

இந்தி

1940-க்கு முன்பு ஆங்கிலம் மற்றும் உருதுதான் அரசின் தகவல் பரிமாற்ற மொழியாக இருந்தது, சமஸ்கிருதம் இன்று எப்படி உள்ளதோ அதே போல் தான் அன்றும் இருந்தது, பார்சி மொழி பெரிய பணக்காரர் களிடையே இன்று ஆங்கிலம் போல் அன்று விளங்கியது. மிகப் பெரிய எடுத்துக்காட்டு அடல் பிகாரி வாஜ்பாய் சுதந்திரப் போராட்ட வீரரைக் காட்டிக் கொடுத்து இந்தியிலோ, ஆங்கி லத்திலோ எழுதவில்லை - அவர் உருதுவில் மட்டுமே எழுதியிருந் தார், அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துக் கொடுத்திருந்தனர்.

முகலாயர்களின் ஆட்சி காலத்தில் நன்குதழைத்த உருது, ஆங்கிலேயர்கள் வந்த பிறகு அது ஆங்கிலத்திற்குப் பிறகு இரண்டாம் மொழியாகிவிட்டது, 1935க்குப் பிறகு தான் இந்தியே வருகிறது.   சரி முகலாயர்களின் வருகைக்குப் பிறகுதான் உருது வலுவாகிறது,

இன்றும் பாகிஸ்தானில் ஆங்கிலம் உருதுவிற்கு அடுத்த இடத்தில் இருக்கும் மொழி 'பருஇ',  இதன் முந்தைய பெயர் "பேசு" என்பதாகும், இதை உருதுவில்        ப ர வு இ என்று அழைப்பார்கள், பாகிஸ்தானின் பழைமையான ஊர் பெயர்கள் அனைத்தும் இந்த பருஇ மொழியில்தான் இருக்கும்,

பருஇ மொழியும் திராவிட மொழிப்பிரிவுதான், இதில் ஸ், ஷ, ஹ போன்ற எழுத்துக்கள் இல்லை. இன்று பருஇ மொழியின் எழுத்து வடிவங்கள் மறைந்து அது உருதுவிலேயே எழுதப்படுகிறது.

மராட்டி, துளு போன்றவை களும் வரிவடிவம் மறைந்து இந்தி வடிவிலும், கன்னட வடிவிலும் எழுதப்படுவது போன்றே பருஇ மொழியும் அப்படி மாறிவிட்டது,

உத்தரப்பிரதேச மாநில பள்ளிக் கல்வி வாரியம் வெளி யிட்டுள்ள ஓர் அறிக்கையில் 2017ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் இந்தி பாடத்தில் மட்டும் 5.23 லட்சம் மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர். மொத்தம் 29 லட்சம் பேர் இந்தி தேர்வு எழுதியுள்ளனர். 23.5 லட்சம் பேர் வெற்றி பெற்றுள் ளனர். சுமார் 20 சதவீதம் பேர் தோல்வி அடைந்துள்ளனர்.

இதே நிலைதான் ஆங்கிலப் பாடத்திற்கும் நடந்துள்ளது. இந்தி பாடத்தில் 81.28 சதவீதம் மாண வர்கள் வெற்றி பெற்றனர் என் றால், ஆங்கிலத்தில் 81.46 சதவீதம் மாணவர்கள் வெற்றி பெற்றுள் ளனர். மொழிப் பாடத்தைக் காட் டிலும் ஆங்கிலத்தில் அதிகளவு மாணவர்கள் வெற்றி பெற்றுள் ளனர். கடந்த 2012ஆம் ஆண்டு 35 லட்சம் மாணவர்கள் இந்தி பாடத்தில் தேர்வு எழுதினர். அவர்களில் 3 லட்சம் பேர் தோல்வி. 40 சதவீதம் மாணவர்கள் மட்டுமே 50க்கும் அதிகமான மதிப்பெண்களை பெற்றிருந்தனர்.

உத்தரப் பிரதேசத்தில் உள்ள மேற்குவங்கத்தினர், இஸ்லாமி யர்கள், மற்றும் பஞ்சாபியர்களின் குழந்தைகளின் கல்வியை மனதில் கொண்டு வங்கம், உருது பஞ்சாபி மொழியில் பயிலும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களில் வாழ்பவர் களின் தாய்மொழி போஜ்புரி ஆகும். சுதந்திரத்திற்கு முன்பு வங்கமொழியைப் போன்ற எழுத் துருகொண்ட போஜ்புரி நாள டைவில் அழிந்து இன்று பேச்சு வழக்கில் மட்டுமே உள்ளது, இருப் பினும் இன்றளவும் உபி பீகாரில் அதிக அளவில் பேசப்படும் மொழி போஜ்புரி ஆகும். அதே போல் மத்திய இந்தியா, மத்தியப் பிரதேசம், டில்லி உள்ளிட்ட பகுதி களில் பேசப்படும் மொழி கரி போலி எனப்படும் பழைமையான வழக்கு மொழி ஆகும். இந்தி மொழி, போஜ்புரி மற்றும் வழக்கு மொழியான கரிபோலிக்கு முற் றிலும் வேறான ஆகும்.

இந்தி இந்தி என்கிறார்களே - அதில்தான் எத்தனை எத்தனை வேறுபாடுகள்.

- மயிலாடன்

-விடுதலை,18.6.17

வெள்ளி, 16 ஜூன், 2017

தமிழர்கள் மாட்டிறைச்சி தின்றதில்லையா?


தமிழக பாஜகவினர் மாட்டிறைச்சித் தொடர்பான விவகாரத்தில் தமிழர்கள், மாடுகளைத் தெய்வமாக மதிப்பவர்கள், தெய்வமாக மதிக்கும் ஒன்றை எப்படி அவர்கள் கொலை செய்து உண்ணு வார்கள். தமிழர்கள் வரலாற்றில் மாட்டி றைச்சி உண்டதாக சரித்திரம் இல்லை. இதெல்லாம் அரபு நாட்டிலிருந்து வந்த இஸ்லாமியர்களும், முகலாயர்களும் தமிழகத்தில் வந்த பிறகு மாட்டிறைச்சி உண்ணும் பழக்கம் தாழ்த்தப்பட்டவர் களிடம் தொற்றிக்கொண்டது. தமி ழகத்தில் உயர்ஜாதியினர் இன்றும் மாட்டிறைச்சி உண்பதில்லை என்று எல்லா விவாதங்களிலும் பேசி வரு கின்றனர். இதையே புதிய தமிழகம் கட்சி டாக்டர் கிருஷ்ணசாமியும் கூறிவருகிறார். தமிழர்கள் மாட்டி றைச்சியை உண்ணுவதில்லை, சில அரசியல் கட்சிதலைவர்களும் அமைப்புகளும் தமிழர்களின் வர லாற்றைத் திரிக்கும் வேலையில் ஈடுபடுகின்றனர் என்று கூறினார்.

ஆனால் தமிழர்கள் கிறிஸ்து பிறப்பிற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே உணவிற்காக பசு மாட்டிறைச் சியை சாப்பிட்டனர் என்ற வரலாற்றுச் சான்றுகள் தமிழர்களின் அன்றாட வாழ்க்கை முறைகளைக் கூறும் சங்ககாலப் பாடல்களில் பெருகிக் கிடைக்கின்றன. அதில் சிலவற்றை இங்கே கொடுத்துள்ளோம்

அகநானூறு 129ஆம் பாடலில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது:

“கலங்குமுனைச் சீறூர் கைதலை         வைப்பக்
கொழுப்புஆ தின்ற கூர்ம்படை             மழவர்”

விளக்கம்: சிறிய ஊரினர் கையைத் தலைமீது வைத்து வருந்தும்படி அவருடைய கொழுத்த ஆவைக் (பசுவை) கவர்ந்து சென்று தின்ற கூரிய படைக்கருவியையுடைய மழவர்.

இதேபோன்று அகநானூற்றின் 249ஆவது பாடல் மாட்டிறைச்சியைப் பண்டைத் தமிழர்கள் உண்பது பற்றிப் பின்வருமாறு கூறுகின்றது:

தோகை தூவித் தொடைத்தார்                 மழவர்
நாகுஆ வீழ்த்துத் திற்றி தின்ற
புலவுகளம் துழைஇய துகள்வாய்க்             கோடை
நீள்வரைச் சிலம்பின் இரைவேட்டு             எழுந்த
இதன் விளக்கம் வருமாறு:

மயிலின் தோகையிலுள்ள இறகு களை மாலையாகத் தொடுத்து அணி பவர்கள் மழவர்கள். பல்வகையான பூக்களை உடையதான காட்டின் சுருங்கிய நிழல்களிலே தங்கி கன்றி னையுடைய பசுவைக் கொன்று அதன் ஊணை சுட்டுத் தின்பார்கள். புலால் மணம் வீசும் அந்த இடத்தைத் துழாவியவாறு ஊண்துணுக்குள் கலந்த புழுதியை தன்பால் கொண்டதாக மேல்காற்று எழுந்து வீசும்

அகநானூற்றின் 309ஆவது பாடல் பசுவை தமிழ்க் கடவுளுக்கு பலி கொடுத்த பின்னர் அதன் இறைச்சியை மறவர்கள் உணவாக உட்கொண்டது பற்றிக் குறிப்பிடுகின்றது:

வயவாய் எறிந்து வில்லின் நீக்கி
பயநிரை தழீஇய கடுங்கண் மறவர்
அம்புசேண் படுத்து வன்புலத்து         உய்த்தெனத்
தெய்வஞ் சேர்ந்த பராரை வேம்பிற்
கொழுப்பா எறிந்து குருதி தூஉய்ப்
புலவுப் புழுக்குண்ட வான்கண்         அகலறைக்
விளக்கம்: கொழுப்பா  கொழுத்த பசு

வெற்றி வாளினாலே வெட்டிக் கொன்றும், வில்வினைத் தொழிலினாலே அடித்து விரட்டியும், பசுமந்தைகளைக் கைகொண்ட அஞ்சாமையாளரான மறவர்கள், அம்புகளைத் தொலை வுக்குச் செல்லுமாறு செலுத்தி நிரை காவலரை ஓட்டியபின், வன்மையான காட்டு நிலத்தை அடைந்தனர். அடைந்தபின் தெய்வம் குடி கொண்டிருக்கும் பருத்த அடியினை யுடைய வேம்பிற்கு கொழுத்த ஒரு பசுவினைக் கொன்று பலியிட்டனர். அதன் குருதியைத் தெளித்து தெய் வத்தைப் போற்றி வழிபட்டனர். பின் அப் பசுவின் இறைச்சியைப் பொசுக்கி உண்டு விட்டுச் சென்றனர்.

இச்சங்க இலக்கியங்களில் இருந்து பண்டைத் தமிழர்கள்  மாட்டிறைச் சியையும் உட்கொண்டனர் என்பதை உணர்ந்து கொள்ள முடியும். அத்தோடு, தாம் வழிபட்ட தெய்வங்களுக்கு ஆடு களையும், பசுக்களையும் பலிகொடுத்த பின்னர் அவற்றை பண்டைத் தமிழர்கள் உட்கொண்டனர் என்பதையும் நாம் உணர முடியும்.

-விடுதலை ஞா.ம.,10.6.17