இராமாயணக் கதையையும், பாரதக் கதையையும், சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய கதைகளையும் வசனமாகவும், பாட்டாகவும், சுருக்காகவும், விரிவாகவும் திருப்பித் திருப்பி எழுதிக் கொண்டிருக்கின்றனர். அல்லது அந்தப் புலவர் எந்தக் காலத்தில் இருந்தார். இந்தப் புலவர் எந்தக் காலத்தில் இருந்தார் என்று கணக்குப் போட்டு கொண்டிருக்கின்றனர். இதுதான் ஆராய்ச்சியென்று சொல்லப்படுகின்றது. இவ்வளவுதான் இவர்கள் தமிழ் பாஷைக்குச் செய்யும் தொண்டு. இதனால் மக்களை இன்னும் மூடநம்பிக்கை உடையவர்களாக்குவதற்கு வழி தேடுகின்றார்களேயொழிய, வேறு தேசத்திற்கு என்ன நன்மை செய்கின்றார்கள் என்றுதான் கேட்கின்றோம்.
(பெரியார், குடி அரசு - 03.04.1932)