பக்கங்கள்

தமிழர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 25 பிப்ரவரி, 2024

பார்ப்பனர்கள் தமிழர்களா?

 


விடுதலை ஞாயிறு மலர்

பார்ப்பனர்கள் தமிழர்களா என்று சர் ஏ.டி.பன்னீர் செல்வம் கேட்பதற்காக மட்டும் நாங்களும் தமிழர்களே என்று சொன்னால் போதாது!
பார்ப்பனர்கள் தமிழர்கள் என்றால், “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற தமிழர் கொள்கையை ஆதரிக்கின்றார்களா?
பார்ப்பனர்கள் மெய்யாலுமே தமிழர்கள் என்றால் தென்னிந்திய சிவாலாயங்களில் முதலில் வேதபாராயணம் செய்ய வேண்டுமென்றும் அப்புறந்தான் தேவாரம் ஓத வேண்டும் என்று சொல்லுவதேன்?
பார்ப்பனர்கள் தமிழர்களானால் சைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளாதது ஏன்?
பார்ப்பனர்கள் தமிழர்களானால் அறுபத்து மூன்று நாயன்மாரையும், பட்டினத்தார்,தாயுமானவர், இராமலிங்க சுவாமிகள் முதலிய பெரியோர்களை ஏன் வணங்கவில்லை?
சைவ சமயாச்சாரிகளை ஏன் கும்பிடவில்லை?
பார்ப்பனர்கள் தமிழரானால் – திராவிடர்களானால் ஓட்டல்களில் தமிழர்கள் எல்லோரும் வேற்றுமை இன்றி ஒன்றாக அமர்ந்து சிற்றுண்டியருந்தும்போது பார்ப்பனர்கள் மட்டும் தனியிடத்திலிருந்து உண்பதேன்?
பார்ப்பனர்கள் தமிழரானால் தமிழ் நூல்களென்றோ அவர்களுக்கு முதல் நூல்களாக இருக்க வேண்டும். வேதத்தை அவர்கள் முதல் நூலாகவும் ஆதாரமாகவும் கொள்வதேன்?

பார்ப்பனர்கள் தமிழரானால் சமஸ்கிருதத்திற்கு அவர்கள் உயர்வு கற்பிப்பதேன்?
தமிழ் நூல்களையெல்லாம் வட மொழியிலிருந்து மொழிபெயர்க்க பட்டவைகளே! என்று புனைந்து கூறுவது ஏன்?
பார்ப்பனர்கள் தமிழர்களானால் அவர்களுக்கு மட்டும் சமஸ்கிருதப் பள்ளிகளை ஸ்தாபித்திருப்பதேன்?
அப்பள்ளிகளில் தமிழர்கட்கு அனுமதி அளியாததேன்?
வேதமோதத் தமிழர்களுக்கு உரிமையில்லை எனக் கூறுவதேன்?

பார்ப்பனர்கள் தமிழர்களானால் சமஸ்கிருத மந்திரஞ் சொல்லி கலியாண, இழவுச் சடங்குகள் நடத்துவதேன்?
பார்ப்பனர்கள் தமிழரானால் தமிழர்கள் அநுஷ்டிக்காத பல வகை நோன்புகளையும், சடங்குகளையும் பார்ப்பனர்கள் மட்டும் அநுஷ்டிப்பதேன்?
இப்பொழுதும் தமிழர்களுடன் கலக்காமல் தனித்து வாழ்ந்து வருவதேன்?
தமிழர் பார்த்தால் திருஷ்டி, தோஷம் எனக் கூறி பார்ப்பனர்கள் மறைவிடங்களில் உண்பதேன்?
இவ்வண்ணம் கிரியாம்சையில் தாம் அந்நியர் என்று காட்டிக் கொள்ளும் கூட்டத்தார் வாய்ப்பேச்சில் மட்டும் நாமும் தமிழெரென கூறினால் யாராவது லட்சியம் செய்வார்களா?

பார்ப்பனர்கள் மெய்யாலுமே தமிழரானால் நடை உடை பாவனைகளில் அவர்கள் தமிழராக வேண்டும். முதலில் பூணூலை அறுத்தெறிய வேண்டும். தமிழ் நூல்களையே தமது முதல் நூல்களாக கொள்ள வேண்டும்.
தமிழ் மொழியே தன்னுடைய குலமொழி – கோத்திர மொழியென ஒப்புக் கொள்ள வேண்டும். சமஸ்கிருதம் தமிழை விட உயர்ந்தது என்ற தப்பெண்ணெத்தை விட வேண்டும்.
நடை உடை பாவனைகளால், பழக்கவழக்கங்களால் – மதாசராங்களால், அந்நியர் என்று காட்டிக் கொள்ளும் பார்ப்பனர்கள் விவாதத்துக்காக தமிழர் எனக் கூறிக் கொள்வது சுத்த அசட்டுத்தனமாகும்.
– தந்தை பெரியார், (22-01-1939)
நன்றி : (பன்னீர்செல்வம் – சமூக வலைதளப் பதிவு)

திங்கள், 1 மார்ச், 2021

தமிழர் செய்ய வேண்டியது எது?

புதன், 12 பிப்ரவரி, 2020

சிந்தனை : தமிழன் எப்படிக் கெட்டான்?

தேவ நேயப் பாவாணர்

மதப் பைத்தியம்

பொதுவாக ஒரு மதம் ஏற்படும்போது, அதன் அடியார்கள் அல்லது அதை ஏற்படுத்துவோர் தங்கள் மதக் கருத்துகளையும், தங்கள் முன்னோரைப் பற்றிய சில சரித்திரப் பகுதிகளையும் தொகுத்து நூல்கள் எழுதி வைக்கிறார்கள். அல்லது பாட்டுப் பாடி வைக்கிறார்கள். அவை அம்மதத்திற்கு மறை (வேத) நூல்களாகின்றன. அவற்றில், கலையியல் உண்மைக்கு மாறான சில கருத்துகள் இருக்கலாம். கலை வரவர வளர்ந்து வருகிறது. கலை வளர்ச்சியடைந்த காலத்தில், அதன் உண்மைக்கு மாறான கருத்துகள் மறை நூல்களில் இருக்குமானால், அவற்றை விலக்கிக் கொள்வது கடமையாகும். மனிதனுக்கு மதமேயன்றி மதத்திற்கு மனிதன் அல்லன்.

ஒவ்வொரு துறையிலும் மனிதன் தன் அறிவை வளர்த்து வருகிறான். அறிவு வளர வளர தன் கருத்துகளைத் திருத்திக் கொள்ள வேண்டும். தன் அறியாமையை மதத்தின் மேலேற்றி மதநூலைக் கலை நூலோடு முரண்படக் கூறின், கடவுளின் தன்மைக்கே முரண்பாடு கூறியதாகும். அதோடு கலையும் வளராது; நாடும் கீழ் நிலையடையும்; அறியாமையும் அடிமைத்தனமும் ஓங்கும்.

சில மத நூல்களில், அவற்றை எழுதியவரின் அறியாமையாலோ தன்னலத்தாலோ, மன்பதை (சமுதாயம்) முன்னேற்றத்திற்குத் தடையாயுள்ள சில தீய கருத்துகள் புகுத்தப்பட்டுள்ளன. பிறப்பாற் சிறப்பென்பதும் தாழ்த்தப் பட்டோர்க்குக் கோயிற்புகவு (ஆலயப் பிரேவேசம்) இல்லையென்பதும் இத்தகையன. இதனால்தான் மக்கள் முன்னேற்றத்திற்கு மதம் முட்டுக்கட்டை எனச் சிலர் கருதுகின்றனர்.

சிவனடியாருள் சிறந்தவராகச் சொல்லப்படும் அறுபத்துமூவருள், இயற்பகை நாயனார், சிவனடியார்போல வேடம் பூண்டு வந்த ஒருவனுக்குத் தம் மனைவியைக் கொடுத்ததுமல்லாமல், அதைத் தடுக்க வந்த தம் இனத்தாரையெல்லாம் வெட்டிக் கொன்று முன்பின் அறியாத அக்காமுகனை ஊருக்கு நெடுந்தூரம் யாதோர் இடையூறுமின்றிக் கூட்டிக் கொண்டு போயும் விட்டனர். இது ஒரு பெரிய மானக்கேடு. ஏனாதிநாத நாயனார் தம் எதிரியாகிய அதிசூரனோடு வாட்போர் செய்யுங்கால், அவன் வஞ்சனையால் நீற்றைப் பூசி நெடுநேரம் கேடயத்தால் மறைத்து வைத்திருந்த தன் நெற்றியைத் திடீரென்று காட்ட அவர், “ஆ கெட்டேன்! இவர் பரமசிவனுக்கு அடியவராய்விட்டார்’’ என்று வாளையும் கேடயத்தையும் விட்டுவிடக் கருதி, பின்பு “ஆயுதமில்லாதவரைக் கொன்ற குற்றம் இவரை அடையாதிருக்க வேண்டுமென்று’’ எண்ணி, அவற்றை விடாமல், உண்மையில் எதிர்ப்பவர் போல நடித்து நேரே நிற்க, பழிகாரனாகிய அதிசூரன் அவரை வெட்டிக் கொன்றான். மெய்ப்பொருள் நாயனார் சிவனடியார் போல வேடம் பூண்டுவந்த தம் பகைவனாகிய முத்திநாதனாற் குத்துண்டிறக்கும்போது, அவரை சேதமின்றி ஊருக்கு வெளியே கொண்டு போய்விடும்படி தம் வாயிற்காவலனாகிய தத்தனுக்குக் கட்டளையிட்டார். இவை போன்ற சிவனடியார் சரிதங்கள் இன்னும் பலவுள. இவற்றால், சிவனடியாரான தமிழர் தம் உயிரையும் மானத்தையும் பொருட்படுத்தாமல் மதப்பித்தங் கொண்டு பகைவருக்குக்கூட எதையும் கொடுக்கத் தயாராயிருந்தனர் என்பது வெளியாகும். இயற்பகை நாயனார் சரிதம் பெரிய புராணத்தில் மங்கல முடிவாக மாற்றிக் கூறப்பட்டுள்ளது. அது செவிவழக்காய் மட்டும் வழங்கிய காலத்திலேயே இங்ஙனம் மாற்றப்பட்டிருத்தல் வேண்டும். பிராமண வடிவம் கொண்டு அவருடைய மனைவியைக் கேட்க வந்த சிவபெருமானாகக் கருதப்படுகிறவன், உண்மையில் ஒரு மனிதனாகவேயிருத்தல் வேண்டும். மேன்மேலும் இனத்தார் எதிர்த்து வந்ததை அக்காமுகன் கண்டஞ்சி, இறுதியில் ஓடி ஒளிந்திருக்க வேண்டும். இறுதியில் சிவபெருமான் காட்சி கொடுத்ததாகக் கூறுவது அடியார்க்கெல்லாம் பொதுவாகக் கூறப்படும் மங்கல முடிவு. சிவபெருமானே இயற்பகையாரின் மனைவியைக் கேட்டதாக வைத்துக் கொண்டாலும், அது முடிவின்றி முன்னதாகத் தெரியாமையால், சிவனடியார் வேடம் பூண்டுவந்த எவர்க்கும் தம் மனைவியைக் கொடுத்திருப்பார் என்பது வெட்ட வெளியாகின்றது. மேலே கூறப்பட்ட மற்ற ஈரடியார்களும் பகைவரென்று தெரிந்த பின்பும் போலிச் சிவவேடத்தாருக்கு இணங்கியமையும் இதை வலியுறுத்தும்.

சில திருப்பதிகங்களில் தேரோட்டக் காலத்தில் தேர்க்காலின்கீழ் தலையைக் கொடுத்திருப்பதும், கும்பகோணத்தில் மகாமகக் குளத்தில் மிதியுண்டு சாவதும், சில கோயில்கட்குப் பிள்ளை வரத்திற்குச் சென்று தெரிந்தோ தெரியாமலோ தம் மனைவியரைக் கற்பிழக்கச் செய்வதும் அல்லது இழப்பதும், கோவில் வழிபாட்டிற்குச் சென்றவிடத்துத் தம் அழகான அருமந்த மகளிரைத் தேவ கணிகையராக விட்டுவிட்டு வருவதும், பண்டைத் தமிழருள் பகுத்தறிவற்று மானங்கெட்ட மதப்பித்தர் சிலரின் செயல்களாகும்.

இந்த 20ஆம் நூற்றாண்டிலுங்கூட, சில மதப்பித்தர் ஆங்கிலக் கல்வி சிறப்புப் பெற்றிருந்தும் தாய்மொழி கெட்டாலும் தமது மதம் கெடக்கூடாதென்று கருதி, வேண்டாத வட சொற்களையும் புறம்பான ஆரியக் கொள்கைகளையும் தழுவுகின்றனர். உயிரையும் மானத்தையும் வீணாய் இழக்கத் துணியும் மதப்பித்தர்க்கு இது எம்மட்டு?

மேலும், தமிழை வளர்ப்பதால் மதம் கெடப்போவதுமில்லை. தாய்மொழியையும் மதத்தையும் தூய்மைப்படுத்துவதால் அவை வளர்ந்தோங்கு மென்பதையும் தமக்குப் பெருமை உண்டாகுமென்பதையும் அவர் ஆராய்ந்தறிவதுமில்லை; ஆராய்ந்தவர் சொல்லினும் உணர்வதுமில்லை. இத்தகையோர் இருப்பின் என்! இறப்பின் என்!

சிலர் மதம் பற்றிய வடசொற்கட்குத் தென் சொற்கள் இல்லையென்றும், மதத்துறையில் வடசொற்கள் வந்துதான் ஆக வேண்டுமென்றுங் கூறுகின்றனர். இது தாய்மொழியுணர்ச்சியும் சொல்லாராய்ச்சியும் சரித்திர அறிவும் இல்லாமையால் வந்த கேடு. மேலும் சைவ மாலியமும் (வைஷ்ணவ) அவற்றின் முதல் நூல்களும் தமிழர்களுடையவையாயும் தமிழிலும் இருக்க அல்லது இருந்திருக்க, அவை ஆரியர் கொண்டு வந்தவையென்றும், அவற்றின் முதல் நூல்கள் வடமொழி மறைகளே யென்றுங் கொள்கின்றனர்.

“தம்மானை யறியாத சாதியார் உளரே!’’ இவர்க்கு எத்தனை மொழி நூல்கள் வெளி வந்தென்ன? எத்தனை மொகஞ்சோதாரோக்கள் அகழப்பட்டென்ன?

வடமொழியிற் சொற்கள் ஆனது போன்றே தமிழிலும் ஆக முடியும். ஈராயிரம் ஆண்டுகளாக வடமொழியைத் தழுவி வந்ததால் தமிழில் சொல் வளர்ச்சியில்லாது போயிற்று. இன்றும் தமிழர், சிவபெருமானுக்கும் திருமாலுக்கும் அஞ்சுவதிலும் மிகுதியாகப் பார்ப்பனருக்கு அஞ்சுவதே தமிழ் வளர்ச்சிக்குத் தடையாயுள்ளது.

ஒரு நாட்டின் நாகரிக அல்லது முன்னேற்ற நிலைக்கு மதப் பொறுதியும் (இணக்கம்) ஓர் அறிகுறியாகும். பண்டைக்காலத்தில் தமிழ்நாட்டில் தற்கால இங்கிலாந்திற் போன்றே, மதப் பொறுதியிருந்து வந்தது. கடைத் தமிழ்ச் சங்கத்தில், சைவர், வைணவர்(மாலியர்), பௌத்தர், சமணர், உலகாயதர் முதலிய பல மதத்தினரும் புலவராயிருந்தனர். செங்குட்டுவன் என்னும் சேர மன்னன் வைணவனாயும் அவன் தம்பி இளங்கோவடிகள் சமணராயும் இருந்தனர். இங்ஙனம் பல மதத்தினரும் ஒற்றுமையாய்  வாழ்ந்ததால், தமிழ்நாட்டில் அமைதி நிலவியது. கல்வியும், கைத்தொழிலும், வாணிகமும், அரசியலும் ஓங்கி நாடு நலம் பெற்றது. இக்காலத்திலோ, சில குறும்பர், மதப் பிரிவினையுண்டாக்கித் தமிழ்நாட்டைச் சீர்குலைக்கின்றனர்.

                                                  (நூல் : தமிழர் மதம்)

-  உண்மை இதழ்,16-31.8.19

செவ்வாய், 21 ஜனவரி, 2020

5000 வருடங்களுக்கு முன் தமிழர் நாகரிகம் சிந்து நதி தீரத்தில் பண்டைத் தமிழர் வாழ்க்கைச் சிறப்பு

சர். ஜான்மார்ஷல் கூறும் விவரம் (சா.வே.தைரியம்)

(வாசக நேயர்களே,

ஊன்றிப் படித்துப் பயன்பெற வேண்டிய முக்கியப் பகுதி இது.

இதுபற்றி தங்களது கருத்தினை சுருக்கமாக எழுதி அனுப்புமாறு வேண்டுகிறோம்.

திராவிடர் இயக்கம் - 80 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்நாடு அரசியல் களத்தின் முக்கிய நிகழ்வுகள் - வரலாறு பற்றிய காலக்கண்ணாடியாக - திராவிடத்தின் தேவைக்கான நுண்ணாடியாக இது அமையும் ஒன்று. இதற்கான தேவை - பயன் - நுகர்வு பற்றிய உங்கள் கருத்துக்கள் பெரிதும் வரவேற்கப்படுகிறது. - ஆசிரியர்)

 

பஞ்சாப் மாகாணத்தில் சிந்துநதி தீரத்திலே மகேஞ்சாதாரோ, ஹராப்பா என்னும் இடங்களிலே புராதன காலத்தில், பெரிய பட்டணங்கள் இருந்தன. பிறகு என்ன காரணத்தாலோ அவை அழிந்து மண்மேடுகளாக நேரிட்டு விட்டது. சிறிது காலத்துக்கு முன் இந்திய சர்க்காரின் புராதன ஆராய்ச்சி இலாக்கா அதிகாரிகள் அந்த மண் மேடுகளை தோண்டி பரிசோதனை செய்தார்கள். பழைய காலத்துப் பட்டணம் ஒன்று அங்கு பூமிக்குள் புதைந்து கிடப்பதாகக் காணப்பட்டது. பின்னும் ஆழமாகத் தோண்டி மண்ணை அப்புறப்படுத்திய போது பல பெரிய கட்டிடங்கள் வீடுகள் முதலியவற்றின் அடிப்பாகங்களும், அறைகளும், தெருக்க ளும் கட்டிடங்களுக்குள் பலவிதச் சாமான்களும் வெளிப் பட்டன. அந்தச் சாமான்களில் வீட்டுத் தட்டுமுட்டுகள், கத்தி, அரிவாள் தொழிற்கருவிகள், விளையாட்டுப் பொம்மைகள் முதலியன அதிக முக்கியமானவை.

ஆராய்ச்சியாளர் அவைகளைத் தற்கால முறைப்படி பரிசீலனை செய்ததில் அவை 5000 வருடங்களுக்கு முன் அங்கு பல நகரங்களைக் கட்டி நாகரிகத்துடன் வாழ்ந்து வந்த தமிழர்கள் அதாவது திராவிட மக்கள் உற்பத்தி செய்து கையாண்ட பொருள்கள் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.

ஆரியத்தனம் இந்நாட்டில் தலையெடுப்பதற்கு பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பே தமிழ் நாகரிகம் இப்பொழுது இந்தியா வெனப்படும் பரத கண்டம் முழுவதும் சிறந்து விளங்கியது என்பதை இது நிரூபித்துக் காட்டுவதாகும்.

இந்தியப் புராதன ஆராய்ச்சி இலாக்காக்காரர் மகேஞ்சோதா ரோ, ஹாரப்பா ஆராய்ச்சிகளைப் பற்றி விரிவான அறிக்கைகள் வெளியிட்டிருக்கிறார்கள், அந்த அறிக்கை களின் முன்னுரையிலே தமிழர்களின் புராதன நாகரீகச் சிறப்பைப்பற்றி ஆராய்ச்சி வல்லுநர் சர்.ஜான் மார்ஷல் பின்வருமாறு கூறுகிறார்:

"இந்தியாவிலுள்ள ஆரியரல்லாத மக்கள் (அதாவது திராவிட மக்கள்) படையெடுத்து வந்து வெற்றிகொண்ட ஆரியரை விட நாகரிகத்தில் குறைந்தவர்கள் - கிரேக்க நாட்டு அடிமைகளைப் போன்றவர்கள். அதனால் தான் அவர்களுக்கு அடிமைகள் என்று பொருள் தரும் தாசர்கள் என்று பெயர் வந்தது என்று பலர் நம்பியிருந்தார்கள்.

திராவிடர்களைப்பற்றி அவதுறு

இந்த தாசர்கள் மொழியிலும் மத விஷயங்களிலும் ஆரியருக்கு மாறுபட்டவர்கள் - கறுப்பு நிறமும் தட்டை மூக்குமுள்ள காட்டுமிராண்டிகள். ஆனால் அவர்கள் போர் வீரர்களாயிருந்தார்கள். அவர்களுக்கு ஆடுமாடுகளும் கோட்டை கொத்தளங்களும் இருந்தன என்று இருக்கு வேதபாடல்களில் இழிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஆரியர் பித்தலாட்டம்

இப்படி அந்த தாசர்கள் (திராவிடர்) கோட்டைகள் கட்டிக் கொண்டிருந்தது உண்மைதானா என்று கேட்டால் "அவைகல்லாலும் மண்ணாலும் கட்டப்பட்ட வெறும் சுவர்களேயொழிய கோட்டையுமல்ல கொத்தளமுமல்ல. ஆரியர்கள் கிராம வாழ்க்கைப் பருவத்தில் பிற்போக்கான நிலைமையில் இருக்கும்போது தாசர்கள். (திராவிடர்) கோட்டை கொத்தளங்கள் கட்டிக்கொண்டு வாழ்ந்திருக்க முடியாது" என்று வேதபுராண ஆசிரியர்கள் கருத்துச் சொல்லுவது உடல் தோற்றம், மத, சமூக நிலைமைகள் முதலிய எல்லாக் காரியங்களிலும் தாசர்கள் (திராவிடர்கள்) ஆரியர்களுக்குக் குறைந்தவர்களாகவே எண்ணப்பட்டு வந்தது. இந்தியாவின் நாகரீக உயர்வு சம்பந்தமாக அவர்க ளுக்கு (திராவிடர்களுக்கு) எவ்வித மதிப்பும் கொடுக்கப்பட வில்லை.

5000 வருடங்களுக்கு முன்பு

ஏறக்குறைய 5000 ஆண்டுகளுக்கு முன்பு ஆரியர் என்பவர்களைப் பற்றி ஒருவருக்குமே தெரியாத காலத்தில், சிந்து, பஞ்சாப்பிரதேசங்கள், மெசப்பட்டோமியா, எகிப்து தேசங் களை விட அதிக நாகரீகமுள்ளவைகளாய் விளங்கின.,

மகேஞ்சோதாரோ, ஹாரப்பா என்னுமிடங்களில் பூமி யைத் தோண்டி ஆராய்ந்தறிந்த உண்மைகள் இதை (அதா வது அக்காலத்தில் சிந்து, பஞ்சாப் பிரதேசங்களில் வாழ்ந்த திராவிட மக்களின் நாகரீகச் சிறப்பை) வெளிப்படுத்துகின்றன.

கிறிஸ்துவுக்கு முன், மூவாயிரம், நாலாயிரம் வருடங் களுக்கு முன்பு சிந்து நதி தீரத்தில் வாழ்ந்த மக்கள் (திராவிட மக்கள்) - பெரிதும் அபிவிருத்தியடைந்த உயரிய நாகரீக முள்ளவர்களாயிருந்ததாகவும் அந்த நாகரீகத்துக்கும் ஆரி யருக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாதென்றும் ஹாரப்பா, மகேஞ்சோதாரோ ஆராய்ச்சிகள் வெளிப்படுத்துகின்றன.

திராவிட நாகரீகம்

சிந்து, பஞ்சாப் பிரதேசங்களின் புராதன மக்கள் (திராவி டர்) ஒழுங்கு படுத்தப்பெற்ற நாகரீகமான சமூகமாக நகரங் களில் வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.

அவர்களுடைய வாழ்க்கைக்கும் செல்வத்துக்கும் ஆதாரமான விவசாய வியாபாரத் தொழில்கள் பெரிதும் அபிவிருத்தி பெற்றிருந்தன. நாலா திசைகளிலும் வெகுதூரம் வரையில் பரவியிருந்தது அவர்களின் வியாபாரம். கோதுமை, பார்லி முதலிய தானியங்களை பயிரிட்டு வந்ததாகவும், ஈச்ச மரம் முதலிய பழ மரத்தோட்டங்கள் வைத்திருந்ததாகவும் தெரிகிறது.

எருமை, காளை, ஆடு, பன்றி, நாய், யானை, ஒட்டகம் முதலிய மிருகங்களை அவர்கள் பழக்கி நாட்டு மிருகங் களாக்கி உபயோகித்து வந்தனர்.

மாடுகள் பூட்டிய வண்டிகள் போக்குவரவு சாதனமாக உபயோகிக்கப்பட்டுவந்தன.

கைத்தொழில் சிறப்பு

அங்கு தங்கம், வெள்ளி செம்பு, ஈயம், தகரம் முதலிய உலோகங்கள் போதிய அளவு கிடைத்துவந்தன.

அவ்விடத்திய மக்களில் பலர் உலோக வேலைப்பாடு களில் மிகவும் வல்லவர்களாயிருந்தனர்.

நூல் நூற்றலும் நெசவுத் தொழிலும் பெரிதும் விருத்திய டைந்திருந்தன.

வில், அம்பு, வேல், மழு, கண்டகோடரி, கட்டாரி, கதை முதலியன அக்காலத்தில் உபயோகிக்கப்பட்டயுத்த ஆயுதங் களாகும்.

கோடரி, அரிவாள், மரம், அருக்கு வாள் உளி, சவரக்கத்தி முதலியன வெண்கலத்திலும், செம்பிலும் செய்யப்பட்டிருந் தன.  வீட்டு உபயோகத்துக்கான பாத்திரங்கள் மண்ணினால் செய்யப்பட்டு பலவித சித்திரங்கள் வரையப் பெற்றிருந்தன.

செம்பு, வெண்கலம், வெள்ளி முதலிய உலோகங்களில் செய்த பாத்திரங்களையும் உபயோகித்து வந்திருக்கிறார்கள். செம்பு, வெள்ளி, தங்கம் முதலிய உலோகங்களில் செய்து தந்தம் அல்லது இரத்தினக்கற்களில் செய்த ஆபரணங்களை பணக்காரர்கள் போட்டுக் கொள்வது வழக்கம்.

சாதாரண மக்கள் சிப்பியில் செய்த நகைகளை அணிந்து வந்ததாகத் தெரிகிறது.

மணலும் களிமண்ணும் சேர்ந்த சாந்து, சிப்பி முதலிய வைகளால் விளையாட்டுப் பொம்மைகள் செய்யப்பட்டன.

கல்விச் சிறப்பு

சிந்து, பஞ்சாப் பிரதேச புராதன (திராவிட) மக்களுக்கு எழுதவும் படிக்கவும் தெரிந்திருந்தது; அவர்களின் எழுத்து இந்தியாவில் தனிச்சிறப்புள்ளது.

பருத்தியைக் கொண்டு நூல் நூற்று, துணி நெய்வது முதல் முதலாக இந்த (திராவிட) மக்களுக்குத் தான் தெரிந் திருந்தது. அவர்களிடமிருந்து தான் மேற்குறித்த காலத்துக்கு 2000, 3000 வருடங்களுக்குப் பின் மேற்கு ஆசியாவிலுள்ள வேறு நாட்டினர் பருத்தியிலிருந்து துணி நெய்கிற வித்தையைக் கற்றுக் கொண்டார்கள். மகேஞ்சோதாரோவில், பொது மக்கள் வசிப்பதற்காகக் கட்டப்பெற்ற பெரிய பெரிய வீடுகளும் குளிப்பறைகளும் காணப்படுகின்றன. சலதாரை களும் உண்டு.

இவ்வாறே ஆலயம், அரண்மனை, சமாதி முதலியனவும் கட்டப்பட்டிருந்திருக்க வேண்டும்.

அந்தக்காலத்தில் நாகரீகமடைந்திருந்த மற்ற நாடுகளை விட மகேஞ்சோதாரோ பிரதேச (திராவிட) மக்கள் அதிக நாகரீகமும் வாழ்க்கை வசதிகளும் உள்ளவர்களாய் இருந் தார்கள் என்பதற்கு அங்கு காணப்படும் விசாலமான வீடுக ளும், குளிக்கிற அறைகளும் சலதாரைகளுமே போதிய சான்றாகும்.

மகேஞ்சோதாரோவில் கண்டு பிடிக்கப்பட்ட இந்த உண்மைகள் கீழ்த்திசை நாடுகளின் புராதன சரித்திரத்தி லேயே ஓர் புரட்சியை உண்டாக்கத் தக்கவை.

மகேஞ்சோதாரோ ஆராய்ச்சியினால் ஆச்சரியப்படத் தக்க இந்த நாகரீகத்தின் ஓர் பகுதி மாத்திரம் வெளிப் பட்டிருக்கிறது. மகேஞ்சோதாரோவில் இதுவரை வெட்டி ஆராய்ச்சி செய்யபட்ட நகரங்களுக்குக் கீழே அதிலும் புராதனமான நகரங்கள் புதைந்து கிடக்கின்றன. ஆனால் அடியிலிருந்து வெள்ளம் பீரிட்டு வருவதால் அவற்றைத் தோண்டிப்பார்க்க முடியவில்லை. சிந்துவின் மற்றப்பாகங் களிலும், பலுச்சிஸ்தானிலும் தோண்டிப் பரிசோதித்தால் அவைகளைப்பற்றி விவரங்கள் வெளிப்படக்கூடும்.

இன்னொரு முக்கிய சிறப்பு என்னவென்றால் மகேஞ்சோதாரோ, ஹாரப்பாப் பிரதேச நாகரீகம் அப்பொழுதுதான் ஆரம்பித் ததல்ல. அதற்குமுன் பல்லாயிரம் வருடங்க ளுக்குமுன்பு இந்தியாவிலேயே தோன்றி வளர்ந்த நாகரீ கமாகும்.

மேற்கண்ட ஆராய்ச்சி முடிவுகள் தமிழ் நாகரீகத்தின் தொன்மையையும் சிறப்பையும் தெளிவாக எடுத்துக் காட்டு கின்றன. இந்தியாவின் புராதன நாகரீகம் தமிழ் நாகரீகமே என்றும், தமிழ் நாகரிகமும் தமிழரும் வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு வராமல் புராதன காலத்திலேயே இந்தியாவில் தமிழகத்திலே தோன்றி வளர்ந்தவர்களென்றும் ஏற்கனவே எடுத்துக்கூறியிருக்கிறோம். மகேஞ்சோதாரோ ஆராய்ச்சி அவ்வுண்மைகளையே வற்புறுத்துகிறது.

- விடுதலை: 19.3.1940

- விடுதலை நாளேடு 13 1 20

திங்கள், 13 ஜனவரி, 2020

5000 வருடங்களுக்கு முன் தமிழர் நாகரிகம் சிந்து நதி தீரத்தில் பண்டைத் தமிழர் வாழ்க்கைச் சிறப்பு

சர். ஜான்மார்ஷல் கூறும் விவரம் (சா.வே.தைரியம்)

(வாசக நேயர்களே,

ஊன்றிப் படித்துப் பயன்பெற வேண்டிய முக்கியப் பகுதி இது.

இதுபற்றி தங்களது கருத்தினை சுருக்கமாக எழுதி அனுப்புமாறு வேண்டுகிறோம்.

திராவிடர் இயக்கம் - 80 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்நாடு அரசியல் களத்தின் முக்கிய நிகழ்வுகள் - வரலாறு பற்றிய காலக்கண்ணாடியாக - திராவிடத்தின் தேவைக்கான நுண்ணாடியாக இது அமையும் ஒன்று. இதற்கான தேவை - பயன் - நுகர்வு பற்றிய உங்கள் கருத்துக்கள் பெரிதும் வரவேற்கப்படுகிறது. - ஆசிரியர்)

 

பஞ்சாப் மாகாணத்தில் சிந்துநதி தீரத்திலே மகேஞ்சாதாரோ, ஹராப்பா என்னும் இடங்களிலே புராதன காலத்தில், பெரிய பட்டணங்கள் இருந்தன. பிறகு என்ன காரணத்தாலோ அவை அழிந்து மண்மேடுகளாக நேரிட்டு விட்டது. சிறிது காலத்துக்கு முன் இந்திய சர்க்காரின் புராதன ஆராய்ச்சி இலாக்கா அதிகாரிகள் அந்த மண் மேடுகளை தோண்டி பரிசோதனை செய்தார்கள். பழைய காலத்துப் பட்டணம் ஒன்று அங்கு பூமிக்குள் புதைந்து கிடப்பதாகக் காணப்பட்டது. பின்னும் ஆழமாகத் தோண்டி மண்ணை அப்புறப்படுத்திய போது பல பெரிய கட்டிடங்கள் வீடுகள் முதலியவற்றின் அடிப்பாகங்களும், அறைகளும், தெருக்க ளும் கட்டிடங்களுக்குள் பலவிதச் சாமான்களும் வெளிப் பட்டன. அந்தச் சாமான்களில் வீட்டுத் தட்டுமுட்டுகள், கத்தி, அரிவாள் தொழிற்கருவிகள், விளையாட்டுப் பொம்மைகள் முதலியன அதிக முக்கியமானவை.

ஆராய்ச்சியாளர் அவைகளைத் தற்கால முறைப்படி பரிசீலனை செய்ததில் அவை 5000 வருடங்களுக்கு முன் அங்கு பல நகரங்களைக் கட்டி நாகரிகத்துடன் வாழ்ந்து வந்த தமிழர்கள் அதாவது திராவிட மக்கள் உற்பத்தி செய்து கையாண்ட பொருள்கள் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.

ஆரியத்தனம் இந்நாட்டில் தலையெடுப்பதற்கு பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பே தமிழ் நாகரிகம் இப்பொழுது இந்தியா வெனப்படும் பரத கண்டம் முழுவதும் சிறந்து விளங்கியது என்பதை இது நிரூபித்துக் காட்டுவதாகும்.

இந்தியப் புராதன ஆராய்ச்சி இலாக்காக்காரர் மகேஞ்சோதா ரோ, ஹாரப்பா ஆராய்ச்சிகளைப் பற்றி விரிவான அறிக்கைகள் வெளியிட்டிருக்கிறார்கள், அந்த அறிக்கை களின் முன்னுரையிலே தமிழர்களின் புராதன நாகரீகச் சிறப்பைப்பற்றி ஆராய்ச்சி வல்லுநர் சர்.ஜான் மார்ஷல் பின்வருமாறு கூறுகிறார்:

"இந்தியாவிலுள்ள ஆரியரல்லாத மக்கள் (அதாவது திராவிட மக்கள்) படையெடுத்து வந்து வெற்றிகொண்ட ஆரியரை விட நாகரிகத்தில் குறைந்தவர்கள் - கிரேக்க நாட்டு அடிமைகளைப் போன்றவர்கள். அதனால் தான் அவர்களுக்கு அடிமைகள் என்று பொருள் தரும் தாசர்கள் என்று பெயர் வந்தது என்று பலர் நம்பியிருந்தார்கள்.

திராவிடர்களைப்பற்றி அவதுறு

இந்த தாசர்கள் மொழியிலும் மத விஷயங்களிலும் ஆரியருக்கு மாறுபட்டவர்கள் - கறுப்பு நிறமும் தட்டை மூக்குமுள்ள காட்டுமிராண்டிகள். ஆனால் அவர்கள் போர் வீரர்களாயிருந்தார்கள். அவர்களுக்கு ஆடுமாடுகளும் கோட்டை கொத்தளங்களும் இருந்தன என்று இருக்கு வேதபாடல்களில் இழிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஆரியர் பித்தலாட்டம்

இப்படி அந்த தாசர்கள் (திராவிடர்) கோட்டைகள் கட்டிக் கொண்டிருந்தது உண்மைதானா என்று கேட்டால் "அவைகல்லாலும் மண்ணாலும் கட்டப்பட்ட வெறும் சுவர்களேயொழிய கோட்டையுமல்ல கொத்தளமுமல்ல. ஆரியர்கள் கிராம வாழ்க்கைப் பருவத்தில் பிற்போக்கான நிலைமையில் இருக்கும்போது தாசர்கள். (திராவிடர்) கோட்டை கொத்தளங்கள் கட்டிக்கொண்டு வாழ்ந்திருக்க முடியாது" என்று வேதபுராண ஆசிரியர்கள் கருத்துச் சொல்லுவது உடல் தோற்றம், மத, சமூக நிலைமைகள் முதலிய எல்லாக் காரியங்களிலும் தாசர்கள் (திராவிடர்கள்) ஆரியர்களுக்குக் குறைந்தவர்களாகவே எண்ணப்பட்டு வந்தது. இந்தியாவின் நாகரீக உயர்வு சம்பந்தமாக அவர்க ளுக்கு (திராவிடர்களுக்கு) எவ்வித மதிப்பும் கொடுக்கப்பட வில்லை.

5000 வருடங்களுக்கு முன்பு

ஏறக்குறைய 5000 ஆண்டுகளுக்கு முன்பு ஆரியர் என்பவர்களைப் பற்றி ஒருவருக்குமே தெரியாத காலத்தில், சிந்து, பஞ்சாப்பிரதேசங்கள், மெசப்பட்டோமியா, எகிப்து தேசங் களை விட அதிக நாகரீகமுள்ளவைகளாய் விளங்கின.,

மகேஞ்சோதாரோ, ஹாரப்பா என்னுமிடங்களில் பூமி யைத் தோண்டி ஆராய்ந்தறிந்த உண்மைகள் இதை (அதா வது அக்காலத்தில் சிந்து, பஞ்சாப் பிரதேசங்களில் வாழ்ந்த திராவிட மக்களின் நாகரீகச் சிறப்பை) வெளிப்படுத்துகின்றன.

கிறிஸ்துவுக்கு முன், மூவாயிரம், நாலாயிரம் வருடங் களுக்கு முன்பு சிந்து நதி தீரத்தில் வாழ்ந்த மக்கள் (திராவிட மக்கள்) - பெரிதும் அபிவிருத்தியடைந்த உயரிய நாகரீக முள்ளவர்களாயிருந்ததாகவும் அந்த நாகரீகத்துக்கும் ஆரி யருக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாதென்றும் ஹாரப்பா, மகேஞ்சோதாரோ ஆராய்ச்சிகள் வெளிப்படுத்துகின்றன.

திராவிட நாகரீகம்

சிந்து, பஞ்சாப் பிரதேசங்களின் புராதன மக்கள் (திராவி டர்) ஒழுங்கு படுத்தப்பெற்ற நாகரீகமான சமூகமாக நகரங் களில் வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.

அவர்களுடைய வாழ்க்கைக்கும் செல்வத்துக்கும் ஆதாரமான விவசாய வியாபாரத் தொழில்கள் பெரிதும் அபிவிருத்தி பெற்றிருந்தன. நாலா திசைகளிலும் வெகுதூரம் வரையில் பரவியிருந்தது அவர்களின் வியாபாரம். கோதுமை, பார்லி முதலிய தானியங்களை பயிரிட்டு வந்ததாகவும், ஈச்ச மரம் முதலிய பழ மரத்தோட்டங்கள் வைத்திருந்ததாகவும் தெரிகிறது.

எருமை, காளை, ஆடு, பன்றி, நாய், யானை, ஒட்டகம் முதலிய மிருகங்களை அவர்கள் பழக்கி நாட்டு மிருகங் களாக்கி உபயோகித்து வந்தனர்.

மாடுகள் பூட்டிய வண்டிகள் போக்குவரவு சாதனமாக உபயோகிக்கப்பட்டுவந்தன.

கைத்தொழில் சிறப்பு

அங்கு தங்கம், வெள்ளி செம்பு, ஈயம், தகரம் முதலிய உலோகங்கள் போதிய அளவு கிடைத்துவந்தன.

அவ்விடத்திய மக்களில் பலர் உலோக வேலைப்பாடு களில் மிகவும் வல்லவர்களாயிருந்தனர்.

நூல் நூற்றலும் நெசவுத் தொழிலும் பெரிதும் விருத்திய டைந்திருந்தன.

வில், அம்பு, வேல், மழு, கண்டகோடரி, கட்டாரி, கதை முதலியன அக்காலத்தில் உபயோகிக்கப்பட்டயுத்த ஆயுதங் களாகும்.

கோடரி, அரிவாள், மரம், அருக்கு வாள் உளி, சவரக்கத்தி முதலியன வெண்கலத்திலும், செம்பிலும் செய்யப்பட்டிருந் தன.  வீட்டு உபயோகத்துக்கான பாத்திரங்கள் மண்ணினால் செய்யப்பட்டு பலவித சித்திரங்கள் வரையப் பெற்றிருந்தன.

செம்பு, வெண்கலம், வெள்ளி முதலிய உலோகங்களில் செய்த பாத்திரங்களையும் உபயோகித்து வந்திருக்கிறார்கள். செம்பு, வெள்ளி, தங்கம் முதலிய உலோகங்களில் செய்து தந்தம் அல்லது இரத்தினக்கற்களில் செய்த ஆபரணங்களை பணக்காரர்கள் போட்டுக் கொள்வது வழக்கம்.

சாதாரண மக்கள் சிப்பியில் செய்த நகைகளை அணிந்து வந்ததாகத் தெரிகிறது.

மணலும் களிமண்ணும் சேர்ந்த சாந்து, சிப்பி முதலிய வைகளால் விளையாட்டுப் பொம்மைகள் செய்யப்பட்டன.

கல்விச் சிறப்பு

சிந்து, பஞ்சாப் பிரதேச புராதன (திராவிட) மக்களுக்கு எழுதவும் படிக்கவும் தெரிந்திருந்தது; அவர்களின் எழுத்து இந்தியாவில் தனிச்சிறப்புள்ளது.

பருத்தியைக் கொண்டு நூல் நூற்று, துணி நெய்வது முதல் முதலாக இந்த (திராவிட) மக்களுக்குத் தான் தெரிந் திருந்தது. அவர்களிடமிருந்து தான் மேற்குறித்த காலத்துக்கு 2000, 3000 வருடங்களுக்குப் பின் மேற்கு ஆசியாவிலுள்ள வேறு நாட்டினர் பருத்தியிலிருந்து துணி நெய்கிற வித்தையைக் கற்றுக் கொண்டார்கள். மகேஞ்சோதாரோவில், பொது மக்கள் வசிப்பதற்காகக் கட்டப்பெற்ற பெரிய பெரிய வீடுகளும் குளிப்பறைகளும் காணப்படுகின்றன. சலதாரை களும் உண்டு.

இவ்வாறே ஆலயம், அரண்மனை, சமாதி முதலியனவும் கட்டப்பட்டிருந்திருக்க வேண்டும்.

அந்தக்காலத்தில் நாகரீகமடைந்திருந்த மற்ற நாடுகளை விட மகேஞ்சோதாரோ பிரதேச (திராவிட) மக்கள் அதிக நாகரீகமும் வாழ்க்கை வசதிகளும் உள்ளவர்களாய் இருந் தார்கள் என்பதற்கு அங்கு காணப்படும் விசாலமான வீடுக ளும், குளிக்கிற அறைகளும் சலதாரைகளுமே போதிய சான்றாகும்.

மகேஞ்சோதாரோவில் கண்டு பிடிக்கப்பட்ட இந்த உண்மைகள் கீழ்த்திசை நாடுகளின் புராதன சரித்திரத்தி லேயே ஓர் புரட்சியை உண்டாக்கத் தக்கவை.

மகேஞ்சோதாரோ ஆராய்ச்சியினால் ஆச்சரியப்படத் தக்க இந்த நாகரீகத்தின் ஓர் பகுதி மாத்திரம் வெளிப் பட்டிருக்கிறது. மகேஞ்சோதாரோவில் இதுவரை வெட்டி ஆராய்ச்சி செய்யபட்ட நகரங்களுக்குக் கீழே அதிலும் புராதனமான நகரங்கள் புதைந்து கிடக்கின்றன. ஆனால் அடியிலிருந்து வெள்ளம் பீரிட்டு வருவதால் அவற்றைத் தோண்டிப்பார்க்க முடியவில்லை. சிந்துவின் மற்றப்பாகங் களிலும், பலுச்சிஸ்தானிலும் தோண்டிப் பரிசோதித்தால் அவைகளைப்பற்றி விவரங்கள் வெளிப்படக்கூடும்.

இன்னொரு முக்கிய சிறப்பு என்னவென்றால் மகேஞ்சோதாரோ, ஹாரப்பாப் பிரதேச நாகரீகம் அப்பொழுதுதான் ஆரம்பித் ததல்ல. அதற்குமுன் பல்லாயிரம் வருடங்க ளுக்குமுன்பு இந்தியாவிலேயே தோன்றி வளர்ந்த நாகரீ கமாகும்.

மேற்கண்ட ஆராய்ச்சி முடிவுகள் தமிழ் நாகரீகத்தின் தொன்மையையும் சிறப்பையும் தெளிவாக எடுத்துக் காட்டு கின்றன. இந்தியாவின் புராதன நாகரீகம் தமிழ் நாகரீகமே என்றும், தமிழ் நாகரிகமும் தமிழரும் வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு வராமல் புராதன காலத்திலேயே இந்தியாவில் தமிழகத்திலே தோன்றி வளர்ந்தவர்களென்றும் ஏற்கனவே எடுத்துக்கூறியிருக்கிறோம். மகேஞ்சோதாரோ ஆராய்ச்சி அவ்வுண்மைகளையே வற்புறுத்துகிறது.

- விடுதலை: 19.3.1940

- விடுதலை நாளேடு, 13. 1. 20

வியாழன், 21 நவம்பர், 2019

சென்னை மாநிலத் தமிழர் மாநாடு; தமிழர் யார்? பார்ப்பனர் தமிழரல்ல 1&2

தலைவர் சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் கர்ஜனை

(வாசக நேயர்களே,

ஊன்றிப் படித்துப் பயன்பெற வேண்டிய முக்கியப் பகுதி இது.

இதுபற்றி தங்களது கருத்தினை சுருக்கமாக எழுதி அனுப்புமாறு வேண்டுகிறோம்.

திராவிடர் இயக்கம் - 80 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்நாடு அரசியல் களத்தின் முக்கிய நிகழ்வுகள் - வரலாறு பற்றிய காலக்கண்ணாடியாக - திராவிடத்தின் தேவைக்கான நுண்ணாடியாக இது அமையும் ஒன்று. இதற்கான தேவை - பயன் - நுகர்வு பற்றிய உங்கள் கருத்துக்கள் பெரிதும் வரவேற்கப்படுகிறது. - ஆசிரியர்)

 

அருந்தமிழ் தோழர்களே!

இந்த நான்காவது சென்னை மாகாணத் தமிழ் மகாநாட்டிற்கு தலைமை வகிக்க என்னை அழைத்து என்னை பெருமைப் படுத்தியதற்காக என் மனமுவர்ந்த நன்றி உங்களுக்கு உரித்தானது. அவ்வண்ணமே எனது நன்றியை உங்களுக்குச் செலுத்துகிறேன்.

இம்மகாநாட்டை மாகாண தமிழர் மகாநாடென்று குறித்திருப்பதால் தமிழர் என்னும் பதத்தின் உண்மைப் பொருளை நாம் சரியாக அறிகிறோமாவென்று சற்று சந்தேகத்திற்கு இடந்தருகிறது என்பதற்குட்பட்ட வரையில் தமிழன் என்கிற பதத்திற்கு ஓர் அர்த்தமே பொருத்தமானது. யார் ஒருவர் தொன்றுதொட்டு தலைமுறை தத்துவமாக தமிழ் மொழியைத்தாய் மொழியாகக் கொண்டு அம்மொழியை பிரதானமாக அனுட்டித்து போற்றி வரு வாரோ அவரே தமிழர் ஆவாரே அன்றி மற்றொருவருக்கும் அப்பதம் பொருத்தமாகாது. அன்னிய நாட்டினர் தமிழ்மொழியில் பெரும் ஆராய்ச்சி செய்து தேர்ச்சிபெற்று புலமைத்தன்மை அடைந்திருப்பினும், தமிழ் மொழிக்கு என்ன அரும்பெரும் தொண்டு புரிந்திருப்பினும் அவர் தமிழர் ஆகமாட்டார்.

தமிழர் யார்

நம் நாட்டில் வீரமாமுனிவர் என்று போற்றப்பட்ட, மதுரை சேசுசபையைச் சேர்ந்த பெஸ்கிசாமியாரும் ஆங்கில பாதிரியாராகிய போப்பய்யரும் நமது மொழியில் மிகவும் புலமை அடைந்தவர்கள் என்பது எல்லோரு மறிந்தவிடயம். வீரமாமுனிவர் இயற்றிய தேம்பாவணியும், போப்பய்யரின் தமிழ் இலக்கணமும், மிகவும் பெருமை வாய்ந்த தமிழ் நூல்களாக இன்றும் மதிக்கப்பட்டு வருகிறது. ஆயினும் வீரமாமுனிவராவது, போப்பய்யராவது தமிழ ரென்று கருதப்படுவார்களா? அவ்வாறே வெளிநாட்டி லிருந்து நம்மிடத்தில் குடியேறியவர்கள், எவ்வளவு காலங்களுக்குமுன் நம்மிடம் வந்து சேர்ந்தவர்களாயினும், இந்நாட்டிலேயே எப்போதுமிருக்கும் நோக்கத்துடன் உள்ளவர்களாயினும் நம் தமிழ் மொழியை தன் மொழியாகக் கொள்ளாமல் இருப்பின் அவர்கள் தமிழர்கள் ஆகமாட்டார்கள். அவசிய நிமித்தமும் தன் சவுகரியத்தை உத்தேசித்து நம் மொழியைப் பழக்கவழக்கத்தில் வைத்துக் கொண்டிருக்கும் ஒரு காரணத்தைக் கொண்டு மாத்திரம் தமிழராக மாட்டார்கள்.

பார்ப்பனர் தமிழரா?

குறிப்பாக நம் நாட்டில் பார்ப்பனர்கள் தமிழர் ஆவார்களா ஆகமாட்டார் என்பதுதான் என் முடிவு. நம் நாட்டில் அநேக நூற்றாண்டுகளாக இருந்திருந்தும் நம்முடன் கலவாமல் தங்களை ஒரு தனிப்பட்ட வகுப்பினராகவே வைத்துக் கொண்டது மாத்திரமல்லாமல் தாங்களே ஏனையோரை விட மேல் வகுப்பினர் என்று சொல்லிக்கொண்டு தம் சொந்த மொழி வடமொழியாகிய ஆரிய மொழியே என்றும் அம்மொழி நம்மொழியாகிய தமிழ் மொழியை விட மேன்மைப்பட்டதென்றும், அது ஒரு தெய்வீக மொழியென்றும், அம்மொழியே கடவுள் வணக்கத்திற்கும் மற்றுமுள்ள அவர்களுடைய சடங்கு களுக்கும் பொருத்தமானதென்றும், தமிழ்மொழி இக் காரியங்களுக்கு பொருத்தமற்றதென்றும், அதை இழிவு படுத்தி பேசுபவர்கள் எவ்விதத்தில் தமிழரென்று அழைக்கப் பட பொருத்தமுள்ளவர் களென்று எனக்கு விளங்கவில்லை. ஆகவே பார்ப்பனர்கள் தமிழர் ஆகமாட்டார்கள் என்று சொல்வது மிகையாகாது.

தமிழ் நாடு எது?

மேலும், தமிழ்நாடு என்பது எந்த நாடென்று நிர்ணயிப் பதற்கு ஆராய்ச்சி வேண்டியதில்லை. சென்னை நகரிலிருந்து குமரி வரையில் மலையாளத்துக்கு கிழக்கே உள்ள நாடே தற்காலத்திய தமிழ் நாடு என்று சந்தேகத்திற்கிடமில்லாமல் கூறலாம். நாம் இந்நாட்டிற்கு இப்போது இந்தியமாக்கடலில் மூழ்கிக்கிடக்கும் ஓரிடத்திலிருந்து வடக்கே வந்தோமா அல்லது ஆரியர்கள் வருகிறதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னதாக மத்திய ஆசியாவிலிருந்து தெற்கே வந்தோமா என்கிற விஷயம் சரித்திர ஆராய்ச்சிக்காரர் நிர்ணயிக்க வேண்டிய காரியம்.

தமிழர் எவருக்கும் அடிமைப்பட்டவரல்ல

ஆனால் பல்லாயிரம் ஆண்டுகளாக இந்நாட்டிலேயே நாம் வாழ்ந்து வந்திருக்கிறது நம் நாடே நம்நாடென்பதும் இந்நாட்டு மக்கள் நாமே என்பதும் யாரும் மறுக்க முடியாத விடயம். வடஇந்தியாவில் பல்வேறு மக்கள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து ஒவ்வொருவரையும் பின்வருபவர் அடக்கி, ஒருவர் ஒரு காலத்திலும் மற்றொருவர் வேறொரு காலத்திலும் ஆதிக்கம் புரிந்து வந்ததாகவும் சரித்திர மூலமாகவும் அறிகிறோம். தமிழர் வடநாட்டு ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்ததில்லை. ஆனால் நாமும், நம்மைச் சேர்ந்த மற்றொரு திராவிட வகுப்பினரும், ஒரு காலத்திலும் இந்த வடநாட்டு ஆதிக்கங்களில் ஒன்றிற்காவது நாம் உட்பட்டிருந்ததாகத் தெரியவில்லை.

இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன் சந்திரகுப்தர் என்னும் சக்கரவர்த்தியால் ஒரு புகழ்பெற்ற ஆட்சி வடநாட்டில் நடத்தப்பட்டதாகவும் அவருடைய பேரனாகிய அசோக சக்கரவர்த்தி காலத்தில் அவருடைய ஆட்சி ஏறக்குறைய இந்தியா முழுவதிலும் இன்னும் வெளிநாட்டிலும் பரவியிருந்ததாகவும் தெரிகிறது.

வடநாட்டார் அந்நியரே

ஆனால் அக்காலத்திலும்கூட நம் நாட்டில் நம் மூவரசர்களாகிய, சேர, சோழ, பாண்டிய மன்னர்களே அரசு புரிந்து வந்ததாகவும் தெரிகிறது. இதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்குப்பிறகு முகம்மதியர்கள் வடஇந்தியாவில் புகுந்து தங்கள், ஆதிக்கத்தை நிலைநிறுத்தி டெல்லி மாநகரத்தைத் தலைநகரமாகக் கொண்டு ஒரு பரவிய ஆட்சியை மொகல் சக்கரவர்த்திகள் நடத்தி வந்திருக் கிறார்கள். அக்காலத்திலும் தென்னாட்டாராகிய நாம் அந்த ஆதிக்கத்திற்கு உட்படாமல் தனிப்பட்ட வகையிலேயே நம்முடைய காரியங்களை நடத்தி வந்திருக்கிறோம். ஆங்கில ஆட்சி நம் நாட்டில் நிலைபெற்ற பிறகே நாமும் வட நாட்டினரும் ஒரே ஆதிக்கத்திற்கு உட்பட்டி ருக்கின்றோமே தவிர அதற்குமுன் எந்தக் காலத்திலும் நமக்கும் வடநாட்டினருக்கும் யாதொரு கலப்புமிருந்ததாகத் தெரியவில்லை. தற்காலத்திலும் தென்னாட்டு திராவிடர் களுக்கும் வடநாட்டு ஆரியர்களுக்கும் ஒத்துமையையோ, சம்பந்தத்தையோ காட்டக்கூடிய காரியம் ஒன்றே. அது எதுவெனில் நம்மிருவரும் ஒரே வெளிநாட்டு ஆதிக்கத்திற்கு உள்பட்டிருக்கிறதே ஆகும். மற்ற எல்லாக் காரியங்களிலும் நாம் வேறு அவர்கள் வேறு வகுப்பினராகவே காணப் படுகிறோம். மக்கள் பேசும் மொழியிலோ சாப்பிடும் உணவிலோ, உடுத்தும் உடையிலோ, மற்ற பழக்க வழக்கங்களிலோ, நாம் வேறு அவர்கள் வேறாகவே இருக் கிறோம். மேலும் பூர்வீகக் கலை, நாகரீகம், இவ்விஷயங் களைப் பற்றி விசாரிப்போமானால் வடநாட்டு ஆரியர் களுக்கும் அய்ரோப்பிய ஆரியர்களுக்கும் வெளிப்படும் சம்பந்தம் கூட நம்மவர்களுக்கும் வட நாட்டாருக்கும் இருப்பதாகத் தெரியவில்லை.

திராவிடர் இந்தியரா?

இன்னும் ஆழ்ந்துபார்ப்போமானால் திராவிட மக்களாகிய நாம் இந்தியர்கள் அல்லவென்றே சொல்ல வேண்டும். இந்தியர் என்று ஒரு பதம் ஏற்படுவதற்கே காரணம், நம் நாட்டிலிருந்து ஆயிரம் மைல்களுக்கு மேற்பட்ட தூரத்திலுள்ள பஞ்சால தேசத்தில் ஓடும் இந்தஸ் நதியே அந்த நதியின் பெயர் இந்தஸ் என்று இருந்தபடியால் அதை அடுத்தாற் போல் உள்ள நாட்டிற்கு இந்தியாவென்னும் பெயர் வழங்கப்பட்டது. அந்த நாட்டில் குடியேறி இருந்த மக்கள் கிழக்கே போகப் போக அந்த பெயரும் அவர் களுடனே நகர்ந்து சென்றது. ஆகவே காலக்கிரமத்தில் விந்தியமலை தொடர்புக்கு வடக்கே உள்ள நிலப்பிரிவு முழுவதிலும் இந்தப் பெயர் வழக்கத்தில் வந்தது. அம்மக்களின் ஆதிக்கத்தின் கீழ் ஒருக்காலும் வராத நம் நாட்டிற்கு அது பொருத்தமாகாது. ஆயினும் 2000 ஆண்டுகளுக்குமுன் வடஇந்தியாவின் மேல் படையெடுத்து வந்த அலெக்சாண்டர் தீ கிரேட் என்னும் ஒரு தளகர்த்தனின் சரித்திரத்தை எழுதிய கிரேக்கர் சரித்திர ஆசிரியர்கள் வடநாட்டைப் பற்றி எழுதும் போது இந்தியாவென்று எழுதினமையால் இந்தியதேசம் இருக்கிற விடயம் மேல் நாட்டார் அறிந்துகொள்ள வசதி ஏற்பட்டது. ஆயிரக்கணக் கான மைல்களுக்கப்பால் உள்ள மேல்நாட்டார்கள் ஒரு பகுதிக்கும் மற்றொரு பகுதிக்கும் உள்ள வித்தியாசங்களை அறியாமையால் இமயமலைத் தொடர்புக்கு தெற்கே உள்ள நாடு முழுமைக்கும் இந்தியாவென்று ஒரு பொதுப் பெயர் கொடுத்து அப்பெயர் இப்பொழுது நம் நாட்டிற்கும் வழங்கப்பட்டுவிட்டது.

ஆரியக்கூட்டுறவால் வந்த வினை

இவ்விதம் இரு வகுப்பினரும் தனிப்பட்ட முறையில் வளர்ந்து வந்தபோதிலும் நாளடைவில் இரு வகை கலைகளுக்கும் மொழிகளுக்கும் தொடர்பு ஏற்பட்டு வடநாட்டு நாகரிகத்தாலும், வடமொழியாலும் நம் நாகரிகமும் நம் மொழியும் சீர்குலைந்து போனதென்பது மறுக்க முடியாத உண்மை. இவ்விதம் சீர்குலைந்தமைக்கு தனித்தமிழ் தேய்ந்து மற்ற திராவிட நாடுகளில் தெலுங்காகவும், கன்னடமாகவும், மலையாளமாகவும் இருந்து வருகிறதே போதிய சான்றாகும். நாம் பேசி வரும் தமிழே வடமொழியில் கலப்புற்று கெடுதலடைத்திருப்பதை தெற்றென விளக்கும்.

நாகரிகத்தைப் பார்ப்போமானால் சிறு வயதிலேயே பெண்களை மணம் செய்விப்பதும், ஆண்களை இழந்த பெண் மக்களை மறுமணமில்லாமல் வைப்பதும் தீண்டாமைப் பேயை நாட்டில் ஆடவிட்டிருப்பதும், நமக்குள்ளாகவே சாதி என்னும் பேரால் அனேக பிரிவுகளை ஏற்படுத்தி இருப்பதும், நமக்கு ஏற்பட்டிருக்கும் பெருஞ்சீர்கேட்டின் பல அடையாளங்களாகும்.

இவ்வுண்மைகளை நான் வற்புறுத்திச் சொல்வதன் நோக்கம் நாமும் நம்மைச் சார்ந்த மற்ற திராவிட மக்களும் பூர்வீகம் தொட்டு வடநாட்டாருக்கு வேறுபட்ட வகுப்பினர். அவர்களுடன் நாம் கலந்து கொள்ளுவதனால் நமக்கு இடையூறுகள் ஏற்படுமே தவிர வேறில்லை, நம் நாடு ஒரு தனிப்பட்ட நாடு என்பதை நாமெல்லோரும். உணர வேண்டுமென்பதற்கே.

- விடுதலை - 28.12.1938

- விடுதலை நாளேடு 13 11 19

சென்னை மாநிலத் தமிழர் மாநாடு; தமிழர் யார்? பார்ப்பனர் தமிழரல்ல (2)

தலைவர் சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் கர்ஜனை

(வாசக நேயர்களே,

ஊன்றிப் படித்துப் பயன்பெற வேண்டிய முக்கியப் பகுதி இது.

இதுபற்றி தங்களது கருத்தினை சுருக்கமாக எழுதி அனுப்புமாறு வேண்டுகிறோம்.

திராவிடர் இயக்கம் - 80 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்நாடு அரசியல் களத்தின் முக்கிய நிகழ்வுகள் - வரலாறு பற்றிய காலக்கண்ணாடியாக - திராவிடத்தின் தேவைக்கான நுண்ணாடியாக இது அமையும் ஒன்று. இதற்கான தேவை - பயன் - நுகர்வு பற்றிய உங்கள் கருத்துக்கள் பெரிதும் வரவேற்கப்படுகிறது. - ஆசிரியர்)

நமது சுயராஜ்யம் திராவிட ராஜ்யமே

ஆகவே நாம் சம்பந்தப்பட்ட வரையில் சுயராஜ்ஜியம் என்கிற வார்த்தைக்கு அர்த்தம் இருக்குமேயாகில் அந்த ராச்சியம் தமிழ் அல்லது திராவிட ராச்சியமாக இருக்க வேண்டும். ஆதிக்கத்தை நடத்துகிறவர்கள் திராவிடர்களாய் இருந்தால் மட்டுமே அது உண்மையில் சுயராச்சியம் ஆகும். இப்போது சென்னையில் நடைபெற்று வரும் ராச்சியம் அப்பேர்ப்பட்ட ராச்சியம் ஆகுமாவென்று பார்ப்போ மானால் இல்லையென்று திண்ணமாகச் சொல்லலாம்.

நமது மாகாணத்தில் ஆதிக்கம் செலுத்திவரும் பத்து பேர் கொண்ட மந்திரிசபையில் 4 பேர் பார்ப்பன ஆரியர்கள். இச்சபையில் தலைமை வகித்து தான் ஒருவரே அதிகாரி மற்றவர்கள் பொம்மைகள் என்று பொதுமக்கள் கருதக்கூடிய விதத்தில் நடந்துவரும் முதல் மந்திரி ஒரு பார்ப்பன ஆரியர். இப்படி அமைக்கப்பட்டிருக்கும் மந்திரி சபை தாங்கள் செய்யும் காரியங்களில் வாக்காளர்களாகிய தமிழர்களாகிய உங்கள் நோக்கத்தை எதிர்பார்க்கிறார்களா? இல்லை. எல்லாக் காரியங்களிலும் காங்கிரசின் நிர்வாகக் கமிட்டியாரின் அபிப்பிராயத்தையும் தீர்மானங்களையும் எதிர்பார்த்தே நடத்துகிறார்கள். இந்த நிர்வாகக் கமிட்டியின் அங்கத்தினர்கள் அனைவரும் ஆரியரே. திராவிடர்கள் அல்லவென்பது உலகமறிந்த உண்மை. இக்காரியக் கூட்டத்தாராவது தாங்களே சுயேச்சையாக ஒரு முடிவுக்கு வருகிறார்களா? எல்லாக் காரியங்களிலும் அவர்களுக்கு அறிந்த மட்டும் தந்தையாயிருப்பவர் காங்கிரசில் அவர் 4 அணா அங்கத்தினர்கூட அல்லவென்று உங்களுக்குத் தெரியும். ஆகவே இப்போது நமது மாகாணத்தில் நடைபெற்று வரும் ஆதிக்கம் சுயராஜ்யம் என்று சொன்னால் மக்களை ஏமாற்றுவதாகாதா? இவ்வாட்சி பார்ப்பனர் ஆட்சியென்றால் மிகையாகுமா? இவ்வாட்சியை திராவிட மக்கள் மேல் ஆரியர் நடத்தும் ஆதிக்கமென்றால் பொருத்தமாகாதென்று யாராகிலும் சொல்ல முடியுமா?

பார்ப்பன ஆட்சிப்பலன்

இவ்வாட்சியினரின் செய்கைகளில் சிலவற்றை மட்டில் பரிசீலனை செய்து அவைகள் திராவிட மக்களின் முன்னேற்றத்துக்கு ஒத்ததாய் இல்லாவிடினும் எவ்வளவு தூரத்திற்கு தற்கால நிலையையாவது பாதுகாத்து அவர் களுடைய தன் மதிப்பைக் கெடுக்காமலாவது இருக்குமா வென்று பார்ப்போம். தமது ஆதிதிராவிட சகோதார்களைச் சில காலமாக ' ஹரிஜன் ஹரிஜன்" என்று காங்கிரஸ்வாதிகள் அழைக்கிறார்களே. அதைப்பற்றி சற்று யோசிப்போம். ஏர்வாடா சிறையில் அரசியல் சூழ்ச்சியில் பேர்போன காந்தியார் ஒடுக்கப்பட்ட வகுப்பினரை தேர்தலில் பொதுத்தொகுதியில் கொண்டு வந்து மாட்டக்கருதி உண்டு பண்ணிய வார்த்தையாகும் இந்த 'ஹரிஜன்' என்னும் பதம். நமது மந்திரிமார்கள் அதிகாரத்துக்கு வந்தது முதல் இந்த வார்த்தையை சர்க்கார் உத்தரவுகளிலும் சட்டசபை நடவடிக்கைகளிலும் எந்தெந்த சந்தர்ப்பம் கிடைக்குமோ அப்போதெல்லாம் உபயோகிக்கிறது மாத்திரமல்லாமல் சட்டங்களில் முதல் கொண்டு இவ்வார்த்தையைப் புகுத்தி இருக்கிறார்கள். மக்கள் எந்த வகுப்பைச் சேர்ந்தவர்களென்று நாளடைவில் அறியாமல் போவதற்கு அவர்கள் பெயரை மாற்றி அவர்களுக்கு ஒரு புதுப்பெயர், அதிலும் சொந்த மொழியில்லாமல் அன்னியமொழியில் கொடுக்கிறதைவிட தகுந்தவழி வேறுண்டா? அடுத்தப்படியாக எல்லோருக்கும் "ஸ்ரீ" இப்போது பட்டம் அளித்திருக்கிறார்களே அதுதான் என்ன! தமிழ் மக்களாகிய நமக்கு வடமொழியிலுள்ள "ஸ்ரீ"யை உபயோகிப்பதின் பொருத்தமென்ன? பொருத்த மில்லை யேல் அதன் நோக்கமென்ன? அடுத்தாற்போல் சமஸ்கிருதத்தை ஒத்து வந்த இந்தி மொழியை நம்மேல் சுமத்துவதின் நோக்கமென்ன? இச்செய்கைகள் ஒவ் வொன்றும் தனிப்பட்ட செய்கைகளா அல்லது ஒரு நோக்கத் துடன் நடைபெற்று வருகின்றவைகளா? என்னோக்கத்துடன் இக்காரியங்கள் நடத்தப்பட்ட போதிலும், முடிவில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாய் நாம் பாதுகாத்தவந்திருக்கும் நமது தமிழக கலையையும் தமிழ் நாகரிகத்தையும் நாம் தமிழரென்கிற உணர்ச்சியையும்கூட சாகடிக்கும் தன்மையும் உடையதல்லவா?

அடக்குமுறைக் கொடுமை

இந்தி சம்மந்தமாக இன்னும் விரிவாய் எடுத்து சொல்கிறது அவசியமில்லையென்று நினைக்கிறேன். எவ் விதம் அதை புகுத்த மந்திரியார் முயற்சித்து வருகிறா ரென்பதும் அதை எதிர்ப்போருக்கு விரோதமாக அடக்கு முறையை அனுஷ்டித்து வருவதும் அது சம்பந்தமாக நூற்றுக்கணக்கான நமது மக்கள் ஆண்கள், பெண்கள் கைக்குழந்தைகள் முதற்கொண்டு சிறைக்கு அனுப்பப் பட்டிருப்பதும் விசேடமாக நமது பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதும். உங்களெல் லோருக்கும் தெரிந்த காரியம். என்ன குற்றத்திற்காக இவர்களெல்லாம் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள் என்றால், செம்மொழியாகிய தமிழ் வாழ விரும்பி, நம் கலையையும், நம் நாகரிகத்தையும் காப்பாற்ற வேண்டு மென்ற கவலை கொண்ட ஒரே குற்றமே. இம்மந்திரி மார்களுக்கு நான் சொல்லவேண்டியது ஒன்றேதான். நீங்கள் எந்த காலத்திற்கும் அதிகாரம் வகித்திருக்கப் போகிறதில்லை. நீங்கள் கணக்குப் கொடுக்கவேண்டிய நாள் தினந்தோறும் நெருங்கி வருகிறது அப்போது உங்களுக்கு தமிழ் மக்கள் தக்க பதிலளிப்பார்கள்'' என்பதே தான்.

நாம் செய்ய வேண்டுவன

முடிவாக நம் நாகரிகத்தையும் நம் கலையையும் காப்பாற்றி வளர்க்க வேண்டுமானால் என்னென்ன விடயங்கள் அவசியம் என்பதைப்பற்றி சில வார்த்தைகள் சொல்ல விரும்புகிறேன்.

முதன் முதலாக நம் மக்களிடம் உள்ள படிப்பினையை விலக்க வேண்டும். தொன்று தொட்டு நமது கிராமங்களில் இருந்து வந்த பழைய திண்ணைப்பள்ளிக் கூடங்களுக்கு புத்துயிர் கொடுத்து பழைய முறையில் அப்பள்ளிகளை நடத்தி வருவோமானால் எல்லா மக்களையும் குறுகிய காலத்துக்கள் படித்தவர்களாக ஆக்குகிறது கூடுமான காரியம் என்பது என்னுடைய முடிவு. பணச்செலவும் பொறுக்கக்கூடியதாகவே இருக்கும்.

நான்கு ஆண்டு அளவில் பள்ளியில் தங்கும் பிள்ளைகள் நன்றாக எழுதப்படிக்கும் திறமை வாய்ந்தவர்களாகக் கூடும். நமது பள்ளிகளில் எந்த தரப்பள்ளியாயினும் ஆரம்பக்கல்வி முதற்கொண்டு பல்கலைக்கழங்கள் வரை தமிழ்ப்படிப்புக்கு முதலிடம் கொடுக்க வேண்டியது அத்தியாவசியம். தமிழுக் கென்று ஒரு பல்கலைக்கழகம் இருக்க வேண்டும். இப்போதுள்ள பல்கலைக்கழகங்களிலொன்றாவது அதற்கு உபயோகப்படாமல் போகுமாயின் ஒரு தனிப்பட்ட பல்கலைக்கழகம் ஏற்படுத்த வேண்டும். அக்கழகம் எவ்வகைப் பட்டதாயினும் அதை மேற்பார்ப்பவர்கள் தமிழில் தேர்ச்சி அடைந்து திறமை வாய்ந்த தமிழர்களாகவே இருக்க வேண்டும். எந்த நாட்டிற்கும் தன்னைத்தானே காப்பாற்றிக்கொள்ளுத்திறமை அவசிய மாகையால் அதற்காக ஒரு தரைப்படையும் ஒரு கடல்படையும், ஒரு ஆகாயப்படையும் அவசியம்.

இது சம்பந்தமாக நாம் உடனே செய்ய வேண்டியது நமது மாகாண படையைத் திரும்பவும் புதுப்பிக்க வழிதேட வேண்டும். தமிழர்களின் முக்கிய தொழில் பயிர்த்தொழி லானதாலும் அவர்கள் அனேகமாய் கிராமவாசி களாகையாலும், கிராம முன்னேற்றத்திற்கு வேண்டிய விடயங்களைக் கவனிக்க வேண்டும். பயிர்ச் செயலில் புதுவழிகளை அனுசரிப்பது மாத்திரமல்லாமல் விளையும் பொருள்களை தக்க விலைக்கு விற்கவேண்டியது அவசிய மாகையால் அதற்குள்ள வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும். போக்குவரத்து வழிகளைச்சீர்ப்படுத்தவேண்டும். நம் நாட்டிலுள்ள துறைமுகங்களை சீர்திருத்தம் செய்ய வேண்டும். அதன் காரணமாய் வியாபாரக் கப்பல்களும் கடைசியாக சண்டைக் கப்பல்களும் ஏற்படுகிறதற்கு வசதிகள் உண்டு பண்ண வேண்டும்.

கிராம கைத்தொழில்களை ஆதரிக்க வசதிகள் ஏற்பட வேண்டும். அத்தொழில்கள் நாடெங்கும் ஒரே தொழிலா யில்லாமல் இடத்துக்கேற்ற தொழிலை ஆதரிக்கவேண்டும். நான் மேற்கூறிய காரியங்கள் ஒரே தினத்தில் ஏற்படக் கூடியவை அல்ல. நாளடைவில் அமலுக்கு கொண்டுவர வேண்டியவை. உடனே இப்போதே நாம் கவனிக்க வேண்டிய விடயத்தைப் பற்றி ஒரு வார்த்தை சொல்லி என் முன்னுரையை முடித்துக் கொள்ளுகிறேன்.

நமது போர்

நாம், இப்போது அரசு புரிந்து வரும் மந்திரிசபையாருடன் போர்புரிந்து வருகிறோம். அப்போரின் நோக்கம் என்னவெனில் பல்லாயிரமாண்டுகளாய் நமக்கென்று நம் முன்னோர் பாதுகாத்து நம்மிடம் ஒப்படைத்திருக்கும் நமது பழையமொழி, கலை, நாகரிகம், நம்முடைய தனிப்பட்ட வாழ்வு இவைகளைக் காப்பாற்றவே இப்போரில் ஈடுபட்ட தன் பலனாய் நான் முன் சொல்லியது போல நமது அரும்பெரும் தலைவர் ஈ.வெ.ராமசாமிப் பெரியாரும் இன்னும் சுமார் 600 தமிழ் மக்களும் சிறையில் அடைபட்டு வருந்துகின்றனர். இவ்விதம் அடக்குமுறையை அனுசரிப்பதால் நமது தைரியத்தைக் கலைத்து நம்மைத் தோல்வியடையும்படி செய்யலாமென்று முதன் மந்திரி கனம் ராஜகோபாலாச்சாரியார் நம்புகிறார் போலும். நாம் ஒற்றுமையாகவும் திடத்துடனும் இந்த ஆபத்தை எதிர்த்துப் போர்புரிய வேண்டியது நமது கடமையாகும். இப்போருக்கு வேண்டிய திரேக பலத்தையும் மனதிடத்தையும் நம்மெல்லோருக்கும் கொடுக்க வேணுமாய் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.

- விடுதலை - 28.12.1938

-  விடுதலை நாளேடு 15 11 19

சனி, 27 ஜனவரி, 2018

திருவள்ளுவர் நன்னெறிக் கழகத்தில் பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்கள் செய்த பிரசங்கத்தின் சாராம்சம்



11-1-1942 ஞாயிற்றுக்கிழமை 


திருவள்ளுவர் நன்னெறிக் கழகத்தில் பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்கள் 

செய்த பிரசங்கத்தின் சாராம்சம்

தலைவர் அவர்களே! தோழர்களே!

இன்று இங்குத் “தமிழர்”  என்பது பற்றிப் பேசக் கிடைத்த சந்தர்ப்பத்தைப் பற்றி மகிழ்ச்சி அடைகிறேன். இந்த நன்னெறிக் கழகத்தில் வகுப்பு சம்பந்தமாகவும், அரசியல் சம்பந்தமாகவும் பேசக்கூடாது என்ற நிபந்தனை இருப்பதாகத் தலைவரும், காரியதரிசியும் தெரிவித்தார்கள். வகுப்புப் பேச்சும், அரசியல் பேச்சும் அவ்வளவு கெட்டுப்போச்சு என்று அவர்கள் கருதி இருக்கிறார்களோ அல்லது இது இரண்டும் நன்னெறிக்குச் சம்பந்தமில்லாதது என்று கருதி இருக்கின்றார்களோ தெரியவில்லை. அன்றியும், வகுப்புப்பேச்சும், அரசியல் பேச்சும் இல்லாததால்தான் இந்த நன்னெறிக் கழகம் இந்தப் பதினோரு வருஷங்களாக உயிர் வைத்துக்கொண்டு இருக்கிறதோ என்றும் தெரியவில்லை.

ஆனால், இன்று நாட்டில் எங்குப் பார்த்தாலும் வகுப்புப் பேச்சாகவும் அரசியல் பேச்சாகவும்தான் இருக்கிறது. அதிலும் சமீபகாலம் தொட்டு அரசியலைவிட வகுப்புப் பேச்சே எங்கும் தீவிரமாய் நடைபெறுகிறது. நானோ வகுப்புப் பேச்சிலும், அரசியல் பேச்சிலும் பெரிதும் ஈடுபட்டிருப்பவன். இந்நிலையில் நான் இந்த நிபந்தனையில் சொற்பொழிவாற்றுவது எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும் என்றாலும், நான் பேச வேண்டும் என்று கேட்டுக்கொண்ட விஷயமும், நான் ஒப்புக்கொண்ட விஷயமும் “தமிழர்கள்” என்பதுபற்றி ஆதலால், அந்தத் தலைப்பே வகுப்புச் சம்பந்தமான தாயிருக்கிறது என்பதோடு, இப்போது ஆண்டு விழாத் துவக்கத்தில், தமிழர் வணக்கம் கூறிய தோழர், “ஆரியம்போல், உலக வழக்கழிந்தொழிந்து சிதையா உன் சீர் இளமைத் திறம் வியந்து” என்று கூறினார்.

அன்றியும், காரியதரிசி அவர்கள் படித்த வருடாந்திர அறிக்கையில், தமிழர்கள், தமிழ்மொழி, தமிழர் கலை, தமிழ் இசை, தமிழ் வாழ்க்கை முதலியவைகளைப் பற்றி இச்சங்கத்தில் சுமார் பத்து, இருபது சொற்பொழிவு இந்த ஒரு வருஷத்தில் பல அறிஞர்களால் நடத்தப்பட்டிருப்பதாகவும் தெரிந்தது.

தலைவர் அவர்களும், நான் “தமிழர்கள்” என்பதுபற்றிப் பேசுவேன் என்று சொன்னார். ஆகவே இவற்றிலிருந்து தமிழர், ஆரியர், மற்றவர் அவர்களது தன்மை என்று பேசுவது வகுப்புச் சம்பந்தமான பேச்சு அல்ல என்பதாகத் தெரிகிறது.

குறிப்பிட்ட விஷயத்தைப்ற்றி எனக்குப்பட்டதைச் சில சொல்லுகிறேன்.

“திரு இடம்” - “திராவிட”மாக மாறியது!

தோழர்களே! நான் “தமிழர்கள்” என்பதுபற்றிப் பேசுவது, திராவிடர்கள் என்பது பற்றியேயாகும். திராவிடம் என்றாலும் தமிழ்நாடு என்றாலும் ஒன்றுதான்! இது சரித்திர ஆராய்ச்சிக்காரர் முடிவாகும். திராவிடம் என்கின்ற பேச்சே தமிழ் வார்த்தையாகும். எப்படி எனில், திரு இடம் என்பதுதான் திருவிடமாகி, திராவிடம் என்பதாக ஆகிவிட்டது. தமிழர்கள் திரு என்கின்ற வார்த்தையை ஒரு மேன்மை அணியாக ஒவ்வொன்றுக்கும் உபயோகிப்பது வழக்கம்.

வடவர்கள் எப்படி ஸ்ரீ என்பதை ஒவ்வொரு வார்த்தைக்கும் முன்னால் உபயோகிக்கிறார்களோ அதுபோல் தென்னவர்கள் திரு என்பதை உபயோகிக்கிறார்கள். திருப்பதியைத் திருமலை என்கிறோம். ஆரூரைத் திருவாரூர் என்கிறோம்; ஐயாறை திருவையாறு என்கிறோம். அதுபோல் தமிழர் வாழ் இடம் முழுமையும் திருஇடம் - திருவிடம் என்கிறோம். இது வடமொழி உச்சரிப்பால் திராவிடமாகிவிட்டது. தமிழ் என்றால் இனிமை; இனிமைக்கு மேன்மை தருவது இயற்கையல்லவா! ஆதலால், நான் யோசித்தவரை இதைத்தவிர திராவிடம் என்கின்ற வார்த்தைக்குக் காரணம் எனக்குத் தோன்றவில்லை.

நமது பண்டிதர்கள், “தமிழ் என்பது த்ரமிளமாகி, திரமிழமாகி, திராவிடமாகி விட்டது” என்று சொல்லுவதுண்டு. ஆனால், ஒரு வார்த்தையானது 4, 5 தடவை மாறி இருக்கும் என்பதைவிட, சொல்கிறபடி ஒரே மாற்றம் தான் ஆகியிருக்கலாம் என்பது மிகப் பொருத்தமாக இல்லையா? அது எப்படி இருந்தாலும் சரி திராவிட நாடு, திராவிட மொழி, திராவிட மக்கள் என்பவற்றைத் தமிழ்நாடு, தமிழ்மொழி, தமிழ்மக்கள் என்ற கருத்தில்தான் வழங்குகிறார்கள். ஆதலால், திராவிடர் என்பவர் தமிழரே ஆவார்கள். அதனாலேயே திராவிடர்கள் என்று பேசுகிறேன்.

திராவிட நாட்டின் எல்லை - சரித்திரம் கூறும் உண்மை

திராவிடர் என்பது நாட்டைப் பொறுத்தே ஏற்பட்ட பெயராகும். ஒவ்வொரு மக்களுக்கும் நாட்டைப் பொறுத்தும் மொழியைப் பொறுத்தும்தான் பெயர் வருகிறது. மலையாளிகளுக்கு மலைப்பாங்கைப் பொறுத்தே அந்தப் பெயர் வந்தது. இந்த முறையில் பார்த்தோமானால், திராவிட நாடு, தமிழ்நாடு என்பது மேன்மையையும், இனிமையையும் பொறுத்தே ஏற்பட்ட பெயராகும். ஆனால், நம் திராவிட நாடானது நாம் இன்று கூறும் எல்லையை மாத்திரம் கொண்டதல்ல! இட்லர் சொல்லுகிறபடி நாட்டு எல்லை, கடவுளால் சிருஷ்டிக்கப்பட்டதல்ல, மக்களால் சிருஷ்டிக்கப்படுவது, திராவிட மக்கள் ஒரு காலத்தில், திராவிட நாட்டு விஸ்தீரணமாக இன்றைய இந்தியா முழுவதையும் கொண்டு இருந்தார்கள். திராவிட நாட்டுக்கு வட எல்லை இமயமலை! மற்ற மூன்று புறத்து எல்லை பெரிதும் சமுத்திரம்!! இப்படி இருந்ததற்கு ஆதாரம், *இதோ பாருங்கள், இந்த இந்திய சரித்திர பூகோள படப்புத்தகத்தில்!! இன்றுள்ள இந்தியா படத்தைப் போட்டு இதற்குத் திராவிடம் என்ற பெயர் கொடுத்திருக்கிறார்கள்!! இது கிறிஸ்து பிறப்பதற்கு 2,500 வருஷங்களுக்கு முன் வரையில் இருந்து வந்த பெயராகும்.

சரித்திரக்காரர்கள் இன்றைக்கு 8,000 வருடத்துக் காலம்வரைதான் சரித்திரம் கண்டுபிடித்து இருக்கிறார்கள். அதில் கிறிஸ்து பிறப்பதற்கு 2000 வருடத்துக்கு முன் முதல் கி.மு. 6000 வருடம்வரை கண்டுபிடித்த சரித்திரப்படி, “இந்தியா” திராவிட நாடாக இருந்திருக்கிறது. இதில் இருந்த மக்கள் திராவிடர்களாகவே இருந்திருக்கிறார்கள். இதே ஆராச்சியாளர் குறிப்புப் பாருங்கள், மற்றும் ஹரப்பா மகஞ்சோதாரோ முதலிய இடங்களில் ஏற்பட்ட, புதிய கண்டு பிடிப்புகள் மூலமும், இந்தியா முழுவதும் திராவிட எல்லைக்கு உள்பட்ட விஸ்தீரணம் என்பது கல்லுப்போல் உறுதியாகிவிட்டது.

“திராவிடம்” அழிந்த அநீதி

இப்படிப்பட்ட இந்தத் திராவிடம் அன்னியர்கள் பிரவேசத்தால், சிறிது சிறிதாக மாற்றமடைந்து குறுகி வந்திருக்கிறது. அதுவும் இதோ இந்தச் சரித்திரம் பார்த்தால் தெரியும்.

முதலில் திராவிட நாட்டில் புகுந்த அன்னியர் ஆரியர்களே ஆவார்கள். இதை நான் என் உத்தேசப்படிச் சொல்லவில்லை. இன்று எல்லோராலும் ஒப்புக் கொண்டதும், ஆரியர்களாலேயே எழுதப்பட்டதுமான அனேக ஆதாரங்களைக் கொண்டே சொல்லுகிறேன்.

சரித்திரம்

நீங்கள், இன்று உலக சரித்திரம் அல்லது இந்திய தேச சரித்திரம் என்கின்ற எந்தப் புத்தகத்தை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். அது அய்ரோப்பியன் எழுதியிருந்தாலும் சரி, இந்தியன் எழுதியிருந்தாலும் சரி, அல்லது ஆரியன் எழுதியிருந்தாலும் சரி, திராவிடன் எழுதியிருந்தாலும் சரி, *இதோ உங்கள் முன் இந்த 5, 6 சரித்திர புத்தகங்களை வைக்கிறேன்; இவை  அய்ரோப்பாவிலும், இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் பிரசுரிக்கப்பட்ட வைகளாகும். இவற்றுள் பாதிக்குமேல் ஆரியர்களே எழுதி, சர்க்கார் ஒப்புக்கொண்டு, ஆரியர்கள் பெரிதும் கொண்ட “டெக்ஸ்ட்புக் கமிட்டி” யினரால் அனுமதிக்கப்பட்டு 1-ஆவது வகுப்பு முதல் எம்.ஏ. வகுப்புவரை பள்ளிப் பிள்ளைகளுக்குப் பாட புத்தகங்களாக வைக்கப்பட்டவை களாகும்.

இவற்றில் எதை எடுத்துக் கொண்டாலும் சரி, இந்தியா என்றால், முதல் பக்கத்தில் அல்லது முதல் பாகத்தில் “திராவிடர்” என்றும், 2-ஆவது பக்கத்தில் அல்லது 2-ஆவது பாகத்தில் “ஆரியர்” என்றும் எழுதியிருப்பதைப் பாருங்கள். இது எதற்காக எழுதப்படுகிறது? ஒரு நாட்டுச் சரித்திரத்தை எடுத்துக்கொண்டால், அதன் பூர்வ குடிகள்தான் முதலில் குறிக்கப்படுவார்கள்.

எனவே, இந்தியா என்பது முதலில் திராவிடமாய் இருந்தது. அதில் பூர்வ குடிகள் என்பவர்கள் திராவிடர்களாய் இருந்தார்கள் என்பதைக் குறிக்கின்றது.

இந்தியா என்கின்ற பெயர்

பிறகு இதற்கு இந்தியா என்றும், இந்தியர்கள் என்றும் பெயர் எப்படி வந்தது? என்பதைப் பாருங்கள்.

இந்தச் சரித்திரத்தின் அடுத்த பக்கத்தில் பாருங்கள்; “ஆரியர்களும் அன்னியர்களும் திராவிடத்திற்கு ஆப்கானிஸ்தானத்தின் வழியாகவும், பிரம்மபுத்திரா நதியைக் கடந்தும் வந்தார்கள்” என்றும், அதனால் அவர்கள் சிந்தியர்கள் என்று அழைக்கப்பட்டுப் பிறகு, அது இந்தியர்கள் என்று ஆகிவிட்டதென்றும், அதிலிருந்து அவர்கள் இருக்கும் நாடு இந்தியா என்று சொல்லப்பட்டு விட்டதென்றும், இந்தப் பெயர்கள் ஆரியரல்லாதவர்களால் கொடுக்கப்பட்டன என்றும் குறிப்பிட்டிருக்கின்றது.

“பிறகு ஆரியர்கள், திராவிடர்களைப் பலவிதத்தில் தொல்லை கொடுத்து, அவர்களை வடக்கே இருந்து, தெற்குப் பக்கமாகத் துரத்தினார்கள்” என்றும், திராவிடத்தின் வடபாகம் எல்லாம் ஆரியர்கள் குடியேறிவிட்டார்கள் என்றும், அங்கு எஞ்சியிருந்த திராவிடர்களையும், ஆரியர்களுக்குக் கட்டுப்படும்படி செய்து விட்டார்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இவையெல்லாம் பெரிதும் இந்திய சரித்திரமாக கலாசாலைப் பாடப் புத்தகமாக இருக்கின்ற புத்தகங்களேயாகும்.

சைவக் கடவுள்வெற்றி கொண்டதாம்!!

இதோ, இந்த இந்திய சரித்திரப் புத்தகத்தைப் பாருங்கள், “முதல் போர்” என்ற தலைப்பில், “கந்தபுராணம் ஆரியர் திராவிடர் சண்டையைச் சித்தரித்து எழுதிய கதையாகும்” என்றும், “ஆரியர் திராவிடர் முதல் போரானது” சிவனார் என்கின்ற இமயமலையில் இருந்த ஒருவர், தனது மகன் சுப்பிரமணியன் என்பவனை இலங்கைக்கு நெடுந்தூரத்தில் இருந்த ஒரு தீவில் இருந்த ஒரு சூரன் என்பவனுடனும், அவன் தம்பி தாரகன் என்பவனோடும் சண்டை செய்யச் செய்தார் என்றும், “சுப்பிரமணியன் வேல் முதலிய ஆயுதங்களால் வெற்றிபெற்றான்” என்றும் எழுதி இருப்பதைப் பாருங்கள்.

வைணவக் கடவுள் வெற்றி கொண்டதாம்!

அதற்கு அடுத்தாற்போல் இராமாயணப் போரைப்பற்றியும் இதே மாதிரி எழுதியிருக்கிறது. ராமன் என்பவன் ராவணன் என்பவனை வெற்றி கொண்டானாம். இவற்றால் கடைசியாகத் தென்பாகந்தான் மீதியாகித் தாங்கள் திராவிடரென்றும், “”தமிழரென்றும் தங்கள் நாடு திராவிட நாடென்றும் அறிந்த மக்கள் இன்னமும் சிலர் இருக்கிறார்கள்; இந்தச் சிறுபாகம்தான் இன்று திராவிட நாட்டையும்,  திராவிட மக்களையும் நினைவூட்ட அடையாளமாக இருக்கிறது. ஆனால், நாம்தான், நம்மைப் பற்றிய சரித்திரமும், யோக்கியதையும் அறியாமல் நாம் எதிரிகளைக் குருமார்களாகவும், தலைவர்களாகவும், கடவுள்களாகவும் கருதிக் கொண்டு, நமக்கும் நம் நாட்டுக்கும் எதிரிகளாயிருந்தவர்கள் இருப்பவர்கள் பெயரைச் சொல்லிக் கொண்டு ஈனத்தனமாய் நடந்துகொண்டு வருகிறோம். அதாவது நம்நாட்டுக்குப் பெயர் பாரதநாடு என்றும், நமக்குப் பெயர் பாரத மக்கள் என்றும் சொல்லிக் கொள்ளுகிறோம். இது நம் எதிரிகள் வைத்துக்கொண்ட பெயராகும்.

இப்படிப்பட்ட மூடமக்கள், உலகில் வேறு எங்கும் இருக்கமாட்டார்கள். இன்று கூட இவைகளையெல்லாம் படித்தும் தெரிந்தும் உள்ள மக்கள் ஆகிய தமிழர்கள் தங்கள் நாட்டைப் பற்றியோ, சமுதாயத்தைப் பற்றியோ மொழியைப் பற்றியோ, மானத்தைப் பற்றியோ போதிய கவலை இல்லாமல் பெரிய தேசாபிமானிகள் போல் நடக்கிறார்கள்.

மனிதர்களுக்கு முன்னேற்ற உணர்ச்சி, சுதந்திர உணர்ச்சி வேண்டுமானால், அவர்களுக்குத் தங்கள் நாடு, சமுதாயம், மொழி, கலை முதலிய உணர்ச்சி இருந்தால்தான் ஏற்படும். அவை ஒன்றும் தமிழனுக்கு இல்லை. தமிழனது நாடு இன்று தமிழ்நாடு ஆகும். தமிழனது சமுதாயம், தமிழர் சமுதாயமாகும். தமிழனது மொழி தமிழாகும். அப்படி இருக்கத் தமிழ்நாடு என்பது இன்று சித்திரத்தில் இல்லாமல் செய்யப்பட்டாய் விட்டது. தமிழ் நாளுக்கு நாள் மறைந்துகொண்டே வருகிறது. தமிழர் சமுதாயமோ அடியோடு ஆரியமயமாகி வருகிறது.

“பாரதநாடு” என்றோம்!

“மரபு” சிறப்பை மறந்தோம்!!

இந்நிலையில் தமிழர் கதி எப்படி இருக்கிறது? என்று பாருங்கள், சமுதாயத்தில் தமிழன் சூத்திரனாக, வேசி மகனாக ஆகிவிட்டான். அது மாத்திரமல்லாமல் தமிழன் ஆரியனால் தீண்டப்படாதவனாக, நடத்தப்பட்டு வருகிறான்.

கோவில்களில், ஓட்டல்களில் தமிழனுக்கு சம உரிமை இல்லை. பல தமிழர்களுக்குப் பிரவேசமே இல்லை. இது எந்தத் தமிழனுக்குத் தெரியாது? எந்தத் தமிழனாவது இதைப்பற்றிக் கவனிக்கிறானா? என்று பாருங்கள். “பாரத நாடு சுயராஜ்யம் பெறவேண்டும். பாரத மக்கள் விடுதலை பெறவேண்டும்” என்று கூப்பாடு போடுகிறானே ஒழிய, தமிழன் மனிதனாக வாழ வேண்டாமா? மானத்தோடு வாழ வேண்டாமா? என்கின்ற கவலை இல்லவே இல்லை. தமிழ் மொழியை ஆரியர் தாழ்த்தி அழுத்திவிட்டார்கள். ஆனால் தமிழ்மொழி வல்லுநர்களில் பலர் ஆரியக் கூலிகளாக இருக்கிறார்கள்.

பாரதநாடு, பாரத மக்கள், பாரத பாஷை என்பதற்கும் தமிழருக்கும் ஏதாவது சம்பந்தமிருக்கிறதா? எங்காவது சம்பந்த ஆதாரமிருக்கிறதா? தன்னைப்பற்றியோ தனது மரபைப்பற்றியோ, தனது மொழியைப் பற்றியோ, மானாபிமானத்தைப் பற்றியோ கவலை இல்லாத சமுதாயம் எப்படி முன்னுக்கு வரும்?

ஐரோப்பியனைப் பாருங்கள்!

ஆற்றல் உணர்ச்சி கொள்ளுங்கள்!

இந்தியா என்று பேசுகிறோம், இந்தியர் என்று பாடுபடுகிறோம். அய்ரோப்பியனைப் பாருங்கள். அய்ரோப்பாவைப் பற்றி எந்த ஐரோப்பியனுக்காவது கவலை இருக்கிறதா? ஜெர்மனியைப் பாருங்கள், ஆங்கிலேயரைப் பாருங்கள், மற்றும் ஐரோப்பிய சிறிய நாட்டாரையும் பாருங்கள். அவர்களில், எவன் வாயிலாவது ஐரோப்பா, ஐரோப்பியன் என்கின்ற பேச்சோ, உணர்ச்சியோ வந்ததாகக் காட்டுங்கள் பார்ப்போம்! ஜெர்மனி, இங்கிலாந்து, இத்தாலி, பிரான்சு என்றுதான் நாட்டுப் பேச்சும், மொழிப் பேச்சும், மக்கள்பேச்சும் பேசுவார்கள். அந்த மாதிரி உணர்ச்சிதான் கொண்டு இருக்கிறார்கள். அதனால்தான் அந்த நாடுகள் இவ்வளவு பிரசித்தமாகவும், இவ்வளவு மேன்மையாகவும் இருந்து வருகின்றன. அவர்கள் தங்கள் நாட்டில் சுதந்தரத்தோடு இருந்துகொண்டு நம்மை ஆட்கொள்ள ஒருவருக்கொருவர் போரிட்டுக் கொண்டு மடிகிறார்கள். அப்படிப்பட்ட உணர்ச்சி இல்லாமல் இருந்தால், அவர்கள் நம்மைப்போல் மற்ற நாடுகளுக்குள் ஐக்கியப்பட்டு படத்தில்கூட உருவில்லாமல் போய்விட்டிருப்பார்கள்.

இன்று நடக்கும் பெரிய போர், எதற்காக நடக்கின்றது? தன் தன் நாட்டையும், சமுதாயத்தையும், மொழியையும் காப்பாற்றுவதற்கும் விஸ்தரிப்பதற்குமே ஒழிய வேறென்ன? ஐரோப்பாவைக் காப்பாற்றவா?

எனவே ஒரே மதம், ஒரே பழக்க வழக்க, நடை, உடை, பாவனை, உணவு உள்ள ஐரோப்பிய மக்கள், இன்று தங்கள் தங்கள் நாட்டின் மொழியின் பேரால், அடியோடு ஒழிந்து போனாலும் சரி என்று போராடித் தங்கள் நாட்டை சமுதாயத்தைக் காப்பாற்றவும், மேன்மைப்படுத்தவும் தங்களைச்  சுரண்டுகிறவர்களையும், தங்களை அடக்கி ஒடுக்கி இழிவுபடுத்துகிறவர்களையும் ஒழிப்பதற்குப் போராடுகிறார்களே ஒழிய ஐரோப்பியனாயிற்றே, கிறிஸ்தவனாயிற்றே என்று ஐரோப்பியர் எந்த ஐரோப்பிய நாட்டாரிடமாவது இணங்கி இருக்கிறார்களா?

ஜெர்மனியர்களின் வீரத்துக்குக் காரணம், ஜெர்மனி என்கின்ற தேசிய மொழி உணர்ச்சியும், ஜெர்மனியர் என்கின்ற சமுதாய உணர்ச்சியும்தானே? தமிழனுக்கு எங்காவது அந்த உணர்ச்சி இருக்கின்றதா?

ஜெர்மனி என்றால் - ஜெர்மனி பாஷையைத் தவிர

வேறு என்ன அடையாளம்?

தமிழன் என்ன செய்கிறான்?

தமிழர் தமது ஆரிய எதிரிகளையும் தங்கள் சமுதாயத்தை அழித்து ஒழித்து ஈனப்படுத்தியவர்களையும் கோவில் கட்டிக் கடவுளாக வணங்குகிறார்கள்.

ஜெர்மனியன் தனது சமுதாயத்தை அடக்கி ஒடுக்கியவனை, உலகத்தில் இல்லாமல் செய்வது, அல்லது அடிமை கொள்ளுவது அல்லது தானாவது ஒழிந்துபோவது என்று போராட்டம் செய்கிறான். தமிழனை அன்னியன் செய்ததுபோல் ஜெர்மனியரை, ஐரோப்பியரில் யாரும் அப்படிச் செய்யவில்லை. ஆனால், அவனுக்கு வேண்டிய சவுகரியமில்லை என்றும், ஐரோப்பியரில், மற்றவர்களுக்கு உள்ள சுதந்தரம் தனக்கு இல்லை என்றும் கருதிக்கொண்டு அதற்காக இவ்வளவு செய்கிறான். ஆனால், தமிழன் தன் நாட்டிலே வந்து குடியேறின அன்னியனுக்கு உள்ள உரிமையும், சவுகரியமும் தனக்கு இல்லையே என்கின்ற ரோஷமும், மானமும் கூட இல்லாமல், எதிரிக்கு “அனுமாராக” இருக்கிறான்.

அன்னியன் சுரண்டிச் செல்லும் நாடு

“தற்குறி” தன்மை வாய்ந்த நாடு தமிழ்நாடு!

தமிழன், ஏன் சமுதாயத்தில் 4-ஆவது 5-ஆவது ஜாதியாக இருக்க வேண்டும்? தமிழ் மகள் ஏன் சூத்திரச்சியாய், தாசியாய், அன்னியனுக்கு வைப்பாட்டியாய் இருக்கவேண்டும்? தமிழன் ஏன் 100-க்கு 90 பேர் தற்குறிகளாக இருக்கவேண்டும்? தமிழன் ஏன் பியூன் உத்தியோகத்திலும்,  தெருக்கூட்டும் வேலையிலும், கக்கூசு எடுக்கும் வேலையிலும் 100-க்கு 100 பேர் தமிழர்களாகவே இருக்கவேண்டும்? தமிழ்நாட்டில் எல்லாச் செல்வங்களும் இருந்தும் தமிழன், ஏன் இந்தநாட்டில் பிழைப்பு இல்லாமல் வெளிநாட்டுக்குக் கூலிகளாகப் போகவேண்டும்? தமிழ்நாடு ஏன் மற்ற எல்லா நாட்டாலும் வந்து சுரண்டிக் கொண்டு போகும் கேள்வி கேட்பாரற்ற மடமக்கள் நாடாக இருக்கவேண்டும்?

இந்த நிலை உள்ள நாடு உலகத்தில் எங்காவது இருக்கிறதா? இந்தியாவில் எங்காவது இருக்கிறதா? தமிழர்களுக்கு இது தெரியவில்லை என்றால், தமிழ்த் “தேசிய” வாதிகளுக்கும் இது தெரியவில்லை என்றால், தமிழனுக்கு மானம், அறிவு, தேசாபிமானம் சமூகாபிமானம், மொழி அபிமானம் இருப்பதாக எப்படிச் சொல்லிக்கொள்ள முடியும்?

கடவுள், மதம் என்று கருத்தை இழந்தோம்!!

எல்லாவற்றையும்விடக் கேவலமானது, தமிழனுடைய சமய அபிமானமும், கடவுள் அபிமானமுமேயாகும். தமிழனின் சமய அபிமானம், தமிழனை இழிவுபடுத்திய கதைகளே சமய வேதங்களாகும். தமிழ்ப் பண்டிதர்கள் வெட்கமில்லாமல் நாலாயிரப் பிரபந்தம், தேவாரம், கந்தபுராணம், ராமாயணம் முதலிய ஆரியர் - திராவிடர் போர்க் கதைகளைத் தமிழர் வேதங்கள், தமிழர் சமய ஆதாரங்கள் என்கிறார்கள். ஜெர்மனி யுத்தங்களையும், ஜெர்மனியன் இங்கிலாந்தை வெடிகுண்டு போட்டுச் சின்னாபின்னப்படுத்தியதையும், ஆங்கிலேயரையும் ஆங்கிலேயர் தலைவர்களையும் வைததையும் சரித்திரமாக எழுதி வைத்ததை, ஆங்கிலேயர் வேதமாகக் கொள்வார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? ஹிட்லருக்குக் கோவில் கட்டி வணங்குவார்களா, நாயன்மார்களாகக் கொள்வார்கள் என்று நினைக்கிறீர்களா? ஆனால், தமிழர்கள் என்ன செய்கிறார்கள்? இன்று தமிழனுக்கு அப்படிப்பட்ட கதைகள், சரித்திரங்கள்தானே மத ஆதாரங்களாக இருக்கின்றன. அவற்றில் வந்தவர்கள்தானே கடவுள்களாக இருக்கின்றனர்? அல்லது ஒற்றர்கள் - அடிமைகள்தானே ஆழ்வார்களாக நாயன்மார்களாக இருக்கின்றார்கள்? இதுவா தமிழர் சமயப்பற்று - கடவுள்பற்று - இனப்பற்று - மொழிப்பற்று? மானப்பற்று?

இப்டிப்பட்ட கடவுள்களுக்குக் கோவில் கட்டினவர்கள் யார்? எல்லாம், தமிழர்கள்! அக்கோவில்கள், அதன் சித்திரங்கள், சிற்பங்கள், அதன் பூசை உற்சவங்கள் எல்லாம் ஆரியர்களுடைய கதைகளும், ஆரியர்களின் மேன்மைக்கு ஏற்றவைகளுமாய் இருப்பதல்லாமல் வேறு என்ன இருக்கிறது? இதற்காகச் செய்ப்பட்ட செலவுகளும், செய்யப்படுகிற செலவுகளும், தமிழனுடையதல்லாமல் வேறு யாருடையதாவது ஒரு காசு இருக்கிறதா? தமிழனை ஆரியன் குத்துகிறதும், வெட்டுகிறதும், காலில் மிதிக்கிறதுமான அந்தச் சித்திர உருவங்கள் தமிழ்க் கடவுள் உருவமாக வீரமாக வணங்கப்படுகின்றன.

தமிழர்

தமிழர் மதமானது, தமிழன் ஈன ஜாதி, தொடக்கூடாதவன் என்று செய்திருப்பதல்லாமல், வேறு என்ன செய்திருக்கிறது? தமிழன் இன்று வணங்கும் கடவுள்கள், தமிழனிடத்திலிருந்தே எல்லாச் செலவுகளையும், சவுகரியங்களையும் பெற்றுக்கொண்டு, தமிழன் உள்ளே வரக்கூடாது, கிட்ட வரக்கூடாது, பூசை செய்யக்கூடாது.

தமிழ்மொழியில் தோத்திரம் கூடாது என்று செய்திருக்கிறதல் லாமல் வேறு என்ன செய்திருக்கிறது? இவைகளை எல்லாம் தமிழ்மக்கள் யோசித்துப் பார்க்க வேண்டாமா? தமிழர் என்ற தலைப்பில் இதைத்தவிர வேறு என்ன பேசுவது, முந்தைய பெருமையை நினைக்காதே; இன்றைய இழிவைப்பார், என்ற முதுமொழியைக் கவனியுங்கள்.

தமிழனைத் தமிழனே இழிவுபடுத்துகிறான்!

சமுதாயத்தில் தமிழன் ஒரு வகுப்பாக இல்லையே, இதற்கு என்ன காரணம்? தமிழனே, தமிழனை இழிவுபடுத்துகிறான்; ஒருவர் தொட்டதை ஒருவர் சாப்பிடுவதில்லை; ஆசாரி வீட்டில் செட்டியார் சாப்பிடுவதில்லை; செட்டியார் வீட்டில் ஆசாரி  சாப்பிடுவதில்லை, வாணியச் செட்டியார் வீட்டில் மேல்கண்ட மூவரும் சாப்பிடுவதில்லை. இவர்கள் நால்வர்களும் முதலியார், பிள்ளை, நாயக்கர் வீட்டில் சாப்பிடுவதில்லை. அவர்களும் இந்த நால்வர் வீட்டில் சாப்பிடுவதில்லை. அன்றியும் இவர்கள் இத்தனை பேரும் ஒருவருக்கொருவர் கீழ் ஜாதி - மேல் ஜாதி என்று பேசிக் கொள்ளப்படுகிறார்கள். தமிழர்களில் பாடுபடும் மக்கள் எல்லாம் கீழ் ஜாதியாக மதிக்கப்படுகிறார்கள்.  பழந்தமிழர்கள் பறையர், பள்ளர், சக்கிலியர், சண்டாளர்களாக இருக்கிறார்கள்.

இப்படி நூற்றுக்கணக்கான ஜாதியாய்த் தமிழர்கள் பிரிந்து ஒருவரை ஒருவர் இழிவுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதனாலேயே ஐரோப்பியனுக்கோ - ஆரியனுக்கோ - முஸ்லிமுக்கோ இருக்கும் சமுதாயப்பற்றும், ஒற்றுமையும் தமிழ்நாட்டில் தமிழனுக்கு இல்லை. இதை எல்லாம் தமிழர்கள் இன்று சிந்திக்க வேண்டாமா?

இழிநிலை போகவேண்டும்!

சிந்தனா சக்தி அடையவேண்டும்!!

உலக சரித்திரத்தில் முதன்மை ஸ்தானம் பெற்ற திராவிடமும், திராவிடர்களும், திராவிட மொழியும், திராவிட மானமும் இன்று எக்கதியில் இருக்கின்றன? இதற்கு என்ன காரணம்? என்பதை யோசிக்காவிட்டால் என்றைக்காவது திராவிடர் இன்றைய இழிநிலையில் இருந்து மாற்றமடைய முடியுமா? அதற்குத் தக்கபடி நடந்துகொள்ள வேண்டாமா? என்பவனவாகியவைகளைச் சிந்தித்துப் பார்க்கும்படி வேண்டிக்கொண்டு, காலம் அதிகமானபடியால், எனது சிற்றுரையை முடித்துக் கொள்ளுகிறேன்.

குறிப்பு: ஸ்டார் போட்டுள்ள இடங்களில் ‘இதோ பாருங்கள் என்று சொன்னதானது அநேக அறிஞர்களால் எழுதப்பட்ட பூகோளப் பாடப் புத்தகங்களையும், இந்துதேச சரித்திரப் பாடப் புத்தகங்களையும் ஆதாரங்களாக எடுத்து நேரில் காட்டிப் பேசினார் என்பது கருத்தாகும்.’

நூல் : 
தமிழர்
தமிழ்நாடு
தமிழர் பண்பாடு

ஆசிரியர் : தந்தை பெரியார்