பக்கங்கள்

திங்கள், 22 பிப்ரவரி, 2021

“பார்ப்பான்பால் படியாதீர் - பார்ப்பான் சொல் கேளாதீர்!”(தமிழல நீசபாசை என்று சொன்னவர் சங்கராச்சாரி)


மின்சாரம்

 10.2.2021 அன்று இரவு ஒரு தனியார்த் தொலைக்காட்சியில் விவாதப்போர் அனல் பறந்தது. தமிழ்நாட்டில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சமஸ்கிருதம், இந்திக்கு இடம் உண்டு; ஆனால் தமிழுக்கு இடம் இல்லை என்ற பிரச்சினை ஆரம்பித்தது.

சமஸ்கிருதத்துக்கு இடம் அளித்திருப்பது நியாயமே என்ற பக்கத்தில் நின்று பேசிய வர்கள் சொன்னது என்ன?

'சமஸ்கிருதம் மூத்த மொழி. அதைக் கற்பிப்பதால் உங்களுக்கு என்ன சங்கடம்? இந்தியா முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் எல்லாம் கூட மாநில மொழிகள் கற்பிக்கப்படுவதில்லை, சமஸ்கிருதம் கற்பிக்கப்படுகிறது. அதே நிலைதான் தமிழ்நாட்டிலும் - உண்மை இவ்வாறு இருக்க தமிழ்நாட்டில் மட்டும் ஏன் வீண் சர்ச்சை?'

'கேந்திரிய வித்யாலயாவிலும் தமிழ் கற்பிக்கப்பட வேண்டும் என்று எந்தப் பெற் றோரும் கோரிக்கை வைக்க வில்லையே' என்ற சப்பைக் கட்டு ஒரு பக்கம்.

இப்படியெல்லாம் பேசியவர்கள் பார்ப் பனர்களாகத்தான் இருப்பார்கள் என்பதைச் சொல்லியா தெரிய வேண்டும்? சாட்சாத் அவாளே தான்.

இந்தப் பார்ப்பனர்களின் தகவல்களை யும், கருத்துக்களையும் சந்தித்த எதிர் அணியினர் மணிமணியாக வரலாற்றுப் பார்வையோடும், நடைமுறை உண்மை களோடும் எடுத்து வைத்த விவாதங்கள் வெகுசிறப்பு! வெகுசிறப்பு!

சமஸ்கிருதத் திணிப்பு என்பதில் ஓர் அரசியல் இருக்கிறது. அது ஒரு மேலாதிக்க மொழி. தமிழை பல மொழிகளாக்கிக் கூறு போட்ட மொழி. ஜாதி, சனாதனம், சமயம் என்ற பெயரால் ஆதிக்கம் செலுத்தும் மொழி - தெய்வ மொழி என்று ஏற்றிப் போற்றப்படும் மொழி.

இந்து மதத்தைப் பரப்பும் நோக்கம் கொண்ட ஆர்.எஸ்.எஸின் சித்தாந்தம் அதிலிருந்துதான் பிரசவம் ஆனது.

இந்தியாவிலேயே வெறும் 24 ஆயிரம் பேர் மட்டுமே பேசும், சமஸ்கிருதத்துக்காக இந்திய மத்திய பா.ஜ.க. அரசு ஒதுக்கியுள்ள தொகை ரூ. 643 கோடி - மற்ற அய்ந்து செம்மொழிகளுக்கும் சேர்ந்து ஒதுக்கப் பட்ட தொகை வெறும் ரூ. 26 கோடி - அதா வது அனைத்து மொழிகளையும் சேர்த் தால்கூட, சமஸ்கிருதத்திற்கு 25 மடங்கு அதிகம்.

தமிழை கேந்திரிய வித்யாலயாவில் கற்பிக்க வேண்டும் என்று எந்தப் பெற்றோர் கேட்டனர் என்று எதிர் தரப்பினர் எழுப்பிய வினாவிற்கு - கேந்திரிய வித்யாலயாவில் சமஸ்கிருதத்தைச் சொல்லி கொடுக்க வேண்டும் என்று எந்த பெற்றோர் வரிசை யாக நின்றனர்? என்ற பதிலடி.

மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்ற நிலை இருந்ததையெல்லாம் சுட்டிக்காட்டி சுட்டெரித்தனர்.

இவர்களுக்கு தமிழ் என்றாலே “இனந் தெரியாத” வெறுப்பு! தமிழை நீஷப்பாஷை என்று சொன்னவர் காஞ்சி பெரிய சங் கராச்சாரி ஆயிற்றே. (பூஜை வேளையில் தமிழ்ப் பேசினால் தீட்டுப்பட்டு விடுமாம்)

நிமிடத்துக்கு நிமிடம் விவாதம் சூடே றியது - பெரியவாள் எங்கே சொன்னார் - அதெல்லாம் கட்டுக்கதை என்று சமாளித் தனர்.

விரிவாகப் பதில் அளிக்க வாய்ப்பு இல்லை - நேரம் இல்லை - ஆனாலும் உண்மை என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டாமா?

ஆதாரத்திற்கு வெளியே செல்ல வேண் டிய அவசியமில்லை. தமிழை நீஷப்பாஷை என்று சொன்ன காஞ்சி சங்கராச்சாரி சந்திர சேகரேந்திர சாஸ்திரியின் முக்கிய ஆலோ சகராக இருந்த - நூறு ஆண்டுகள் வாழ்ந்து சிறிது காலத்திற்கு முன் மறைந்த அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் சொன்னால் ஏற்றுக் கொள்வார்களா?

இதோ அக்னி ஹோத்ரம் பேசுகிறார்.

கும்பகோணம் மடம் (காஞ்சி மடத்துக்கு அதுதான் உண்மைப் பெயர்) சூரியன் வானத்தின் மேற்குப் பக்கமாய் மேய்ந்துக் கொண்டிருந்தான். மஞ்சள் நிற கதிர்கள் பூமியின் மீது பொலபொலவென உதிர் கின்றன. ஒருவிதமான ஊதல் காற்று கும்ப கோணத்தையே குளிப்பாட்டிக் கொண்டி ருந்தது.

அந்த நாளுக்கான மாலை நேர பூஜை களுக்காக மடம் தயாராகிக் கொண்டிருந்தது. மகா பெரியவர் ஸ்நானம் முடித்திருந்தார். மதியம் சிறிது நேரம் தூங்கினால்கூட மடி அதாவது ஆச்சாரம் போய்விடும். மறு படியும் குளித்தாக வேண்டும். அந்த வகையில்... குளித்து முடித்துவிட்டிருந்தார் மகாபெரியவர்.

அந்த நேரமாய் பார்த்து ஒரு சில பக்தர்கள் அவரைப் பார்த்தே தீருவது, அருளாசிப் பெற்றே தீருவது என்ற முடிவில் காத்திருந்தார்கள். அவர்களில், நாட்டுக் கோட்டை செட்டி நாட்டிலிருந்து வந்திருந்த அருணாசலம் என்ற பக்தர்... மகா பெரிய வரைப் பார்த்து அவரிடம் அருள்மொழிகள் வாங்கி விட்டுத்தான் போவது என்ற உறுதியோடு இருந்தார்.

அந்த நேரம் நானும் மடத்தில் இருந்த தால், அருணாசலத்திடம் சொன்னேன்... இதோ பாரப்பா, இன்றைக்கு நீ மகாபெரி யவரை பார்க்க முடியாது, நாளை வாயேன் என்றேன்.

இல்லை சாமி இப்பவே அவரைப் பார்க் கணும் - என்றார் பக்தர்.

எங்கள் பேச்சுச் சத்தத்தைக் கேட்ட சிலர்... விஷயத்தை மகாபெரியவரிடம் சொல்ல அவர் என்னை உள்ளே அழைத் தார்.

போனேன். கேட்டார். சொன்னேன். இதோ பாரும் தாத்தாச்சாரி... அவரைப் பார்க்கறதுக்கு நேக்கு ஒண்ணுமில்லை... பார்த்தால் ஏதாவது கேப்பார், பதிலுக்கு நான் தமிழ் பேச வேண்டிவரும், நோக்கு தான் தெரியுமே... தமிழ் பேசினால் எனக்கு தீட்டு. மறுபடியும் ஸ்நானம் பண்ணனும்... பூஜைக்கு நேரமாயிடுத்துல்யோ... அதனால் நான் மவுனம் அனுஷ்டிக்கிறேன்னு சொல்லி அனுப்ச்சிடுங்கோ...

என என்னோடு சமஸ்கிருத சம் பாஷணை நிகழ்த்தினார் மகாபெரியவர்.

நானும் வெளியே வந்தேன். நான் சொன்னதுதானப்பா... சுவாமிகள் மவுனத் தில் இருக்கார். நாளைக்கு வாயேன்... என்றேன்.

அப்படியா? தெய்வத்தை இன்னிக்கே பார்க்கலாம்னு எதிர்பார்ப்போட வந்தேன். சரி... நாளை வரை ஏதும் சத்திரத்தில் தங்கிவிட்டு வர்றேன்- என தாய்மொழியாம் தமிழில் மகா பெரியவரை தெய்வமாக மதித்து ஆதங்கப்பட்டுக் கொண்டே சென்றார் அருணாசலம்.

(ஆதாரம்: “இந்து மதம் எங்கே போகிறது?” - அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார், பக்கம் 95 - 97)

சொல்லியிருப்பவர், சாட்சியாக இருந்த வர், சாதாரணமானவர் அல்லர் - இந்து மத சாஸ்திரங்களைக் கரைத்துக்குடித்தவர் - சங்கராச்சாரியாருக்கே ஆலோசனை கூறும் இடத்தில் இருந்தவர்.

பூஜை வேளையில் தமிழ்ப் பேசினால், தீட்டாகிவிடும் - மறுபடியும் ஸ்நானம் செய்தாக வேண்டுமாம். இவர்களைத் தெரிந்து கொள்க!

ஆட்சி மொழி காவலர் கீ.இராமலிங் கனார் காஞ்சிபுரத்தில் அதிகாரியாக இருந்த போது சங்கராச்சாரியாரைச் சந்தித்துப் பேச வேண்டிய ஒரு சந்தர்ப்பத்தில், கீ.இராமலி ங்கனார் தமிழில் பேச, சங்கராச்சாரியார் சமஸ்கிருதத்தில் பேசிட அதனை மடத்து மேலாளர் தமிழில் மொழி பெயர்த்து சொல்லியிருக்கிறார். உரையாடல் முடிந்த நிலையில் சங்கராச்சாரியாருக்குத் தமிழில் பேச வராதா என்று மடத்தின் மேலாளரிடம் கீ.இராமலிங்கனார் கேட்ட போது ‘பெரிய வாள் பூஜை வேளையில் நீஷப்பாஷையை பேச மாட்டார்’ என்று பதில் அளித்தார்.

(‘உண்மை’, 15.12.1980 - கீ.இராமலிங் கனாருடன் கவிஞர் கலி.பூங்குன்றன் பேட்டி)

தமிழ் .. வழிபாட்டு மொழி என்பது பற்றி ‘துக்ளக்‘ இதழில் ‘சோ’ ராமசாமி தலையங் கமாக என்ன எழுதினார் தெரியுமா?

தலையங்கத்தின் தலைப்பு - “மொழி ஆர்வமா? மத துவேஷமா?” என்பதாகும்.

“நாயன்மார்களும் - ஆழ்வார்களும் இயற்றிய தமிழ்ப் பாடல்களை சமஸ் கிருதத்தில் மொழி பெயர்த்தால் அர்த்தம் இருக்கும் - அருள் இருக்காது. தமிழில் மொழி பெயர்த்தால் பொருள் இருக்கும் புனிதம் இருக்காது” (‘துக்ளக்‘: 18.11.1998) என்று ‘சோ’ எழுதிடவில்லையா?

எந்த கிறுக்குப் பிடித்த பார்ப்பானை எடுத்துக் கொண்டாலும் தமிழ் மீது துவேஷம் என்ற நஞ்சைக் கக்கத்தான் செய்வார்கள்.

சமஸ்கிருதம் என்றால் தெய்வ மொழி என்று பீற்றிக் கொள்வார்கள்.

நடராஜப் பெருமான் தன்னை மறந்து ஆடிக்கொண்டிருந்தபோது, அவரது உடுக்கிலிருந்து ‘ஹய வரடு - ஹல்” முதலிய பதினான்கு வேறு வேறான சப்தங்கள் வெளி வந்தன. அவற்றை முறைப்படுத்தி பாணினி ரிஷி சமஸ்கிருதத்தை உண்டாக் கினார்!! என்று சங்கராச்சாரியார் கூறுகிறார். (“கல்கி’ 25.6.1972)

கடுகு அளவேனும் மொழி அறிவு - மொழி விஞ்ஞானம் அறிந்தவர்கள் இந்தக் கூற்றை  ஏற்பார்களா? அதே சிதம்பரம் நட ராஜன் கோயிலில் ஓதுவார் ஆறுமுகச்சாமி என்ற முதியவர் திருவாசகப் பாடலைப் பாடினார் என்பதற்காக கோவில் அர்ச்சகத் தீட்சிதப் பார்ப்பனர்கள், அவரை அடித்து உதைக்கவில்லையா? கை எலும்பில் முறிவு ஏற்படவில்லையா?

பார்ப்பனர்களைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா? அவர்களின் மொழி உணர்வு மூலம் முழுமையாகத் தெரிந்து கொள்ளலாமே!

பார்ப்பனர்கள் எப்படி இருந்தாலும் எங்கிருந்தாலும் பார்ப்பனர்கள் தான். அவர்களின் பச்சைப் பம்மாத்தில் மயங்கிட வேண்டாம்.

பார்ப்பான் பால்படியாதீர்

பார்ப்பான் சொல் கேளாதீர்!

என்று புரட்சிக் கவிஞர் பாடியதை மனதில் கொள்க!

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2021

பாரம்பரிய அரபி மொழி - விக்கிப்பீடியா தொகுப்பு


செமித்திய மொழிக் குடும்பத்தை சேர்ந்த அரபி மொழியானது அரபு தீபகற்பத்தின் மத்திய மற்றும் வடக்கு பகுதிகளில் தான் முதன் முதலில் தோற்றம் பெற்றது. பாரம்பரிய அரபுி மொழியின் கல்வெட்டுக்களை ஆய்வு செய்ததில் அதன் வரலாறு கி.பி. 328 ஆம் ஆண்டு வரை பின்னோக்கி செல்கின்றது. 1901 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சிரியா மற்றும் அரேபியாவின் எல்லைப்பகுதியான 'நபீதான்' என்ற பகுதியில் வைத்து மிகப் பழமை வாய்ந்த எழுத்துக்கள் பெறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. 'நபீதான்' என்ற பகுதியல் வைத்து கண்டெடுக்கப்பட்டதால் அந்த எழுத்துக்களுக்கு ‘நபீதான் நெடுங்கணக்கு' என அழைக்கப்படுகின்றது. இந்த ‘நபீதான் நெடுங்கணக்'கினை ஆய்வு செய்ததில் அந்த எழுத்துக்கள் கி.மு. இரண்டாம் நுற்றாண்டு பழமை வாய்ந்தது என்றும், அந்த ‘நபீதான நெடுங்கண'க்கே கி.பி நான்காம் நுற்றாண்டிற்கு பின் பாரம்பரிய அரபு மொழியாக மாற்றம் பெற்றதாவும் ஆய்வுகள் கூறுகின்றன. கி.பி 4 ஆம் நுற்றாண்டு தொட்டு, இஸ்லாம் அரபு தீபகற்பத்தில் உதயமாகும் வரையான காலப்பகுதியில் பாரம்பரிய அரபு மொழியானது ஒரு செல்வாக்கு பெற்ற மொழியாக காணப்படவில்லை. அரபு மொழி என்பது கி.பி. ஆறாம் நுற்றாண்டுகளின் ஆரம்ப பகுதியில் அரேபிய தீபகற்பத்தில் வாழ்ந்த நாடோடி பழங்குடி மக்களால் போசப்பட்ட ஒரு சிறு பான்மை மொழியாகும்.


திங்கள், 15 பிப்ரவரி, 2021

தமிழ்_சமஸ்கிருதம்! நடைமுறையில் உள்ளது எது?


தமிழ்
உங்களது தாய்மொழி என்ன? தமிழ்

அதை எழுத்துப் பூர்வமாக பயன்படுத்துகிறீரா? ஆம்

உங்களது தொடர்பு மொழி யாக பரவலாக பயன்படுகிறதா? ஆம்

அரசு ஆவணங்கள் உங்கள் (தமிழ்) மொழியில் உள்ளதா? ஆம்

தமிழ் பேசும் மக்கள் அனை வருமே அதை பயன்படுத்துகி றார்களா? ஆம்

பள்ளி, பொதுப்பயன்பாடு, கலந்துரையாடல், வீடு, மற்றும் பொதுவிடத்தில் அனைவரும் தமிழ் பேசுகிறீர்களா? ஆம்

எங்கு எங்கு பேசுகிறீர்கள்? தமிழகம், சிறீலங்கா, சிங்கப்பூர், மலேசியா நாடுகளில் பெரும் பான்மையாகவும், மொரீசியஸ், மாலத்தீவு சிசல்ஸ், ரி யூனியன் போன்ற தீவு நாடுகளில் பரவ லாகவும், மும்பை, பெங்களூரு, உள்ளிட்ட பல தமிழர்கள் அதிக மாக வாழும் இந்திய மாநிலங் களில், தமிழர்கள் வாழும் பல் வேறு நாடுகளில் தொடர்பு மொழியாகவும் தமிழ் பயன்படு கிறது. இந்தியா மற்றும் இதர நாடுகளைச்சேர்த்தால் 12 கோடி அல்லது அதற்கும் சிறிது அதிக மான மக்களால் பேசப்படுகிறது.

சமஸ்கிருதம்

உங்களது தாய்மொழி என்ன?  சமஸ்கிருதம்

அதை எழுத்துப் பூர்வமாக பயன்படுத்துகிறீரா? இல்லை

உங்களது தொடர்பு மொழி யாக பரவலாக பயன்படுகிறதா? இல்லை

அரசு ஆவணங்கள் உங்கள் மொழியில் உள்ளதா? இல்லை

சமஸ்கிருதம் பேசும் மக்கள் அனைவருமே அதை பயன் படுத்துகிறார்களா?  இல்லை

பள்ளி, பொதுப்பயன்பாடு, கலந்துரையாடல், வீடு, மற்றும் பொதுவிடத்தில் அனைவரும் சமஸ்கிருதம் பேசுகிறீர்களா? இல்லை

எங்கு எங்குதான் பேசுகிறீர் கள்?

கருநாடக மாநிலம் சிமோகா மாவட்டத்தில் உள்ள பெங்கல ஹல்லி தாலுகாவில் உள்ள ஹொஸ்னகல்லி ஊராட்சியில் உள்ள மட்டூர் என்ற குக் கிராமத்தில் பேசுகிறோம்

எத்தனைப் பேர் பேசுகி றார்கள்? 14, 000

அங்கே எத்தனைப் பேர் வசிக்கின்றனர்? 3,500 பேர்

பிறகு எப்படி 14,000 பேர் பேசுகிறார்கள் என்று கூறுகிறீர் கள்?

பாதி பேர் உள்ளூரிலிருந்து வெளியூருக்கு சென்றுவிட்டனர். அவர்களையும் சேர்த்துதான்,

அவர்கள் வெளியூரில்சமஸ்கிருதம் பேசுகிறார்களா? இருக்கலாம்!

உங்கள் ஊரில் பொதுப்பயன் பாட்டில் பேசுகின்றீர்களா? கடை வீதி, இதர வீட்டிற்கு வணிகம் செய்ய வருபவர்களிடம்? இல்லை

பிறகு என்ன மொழி பயன்படுத்துகிறீர்கள்? கன்னடம்

வீட்டில் நாளிதழ், தொலைக் காட்சி நிகழ்ச்சி திரைப்படம் போன்றவைகள் எந்த மொழியில் உள்ளது. கன்னடம், ஆங்கிலம், இந்தி

பிறகு எதைவைத்து சமஸ் கிருதம் உங்கள் தாய்மொழி என்று கூறுகிறீர்கள்???

பதில் மவுனம்

- மயிலாடன் கவிஞர் கலி. பூங்குன்றன்

செவ்வாய், 9 பிப்ரவரி, 2021

*மொழி ஆராய்ச்சி - தந்தை பெரியார்*




தமிழரசு, தமிழ்நாடு, தமிழ்மொழி என்று கூப்பாடு போடுகின்றார்களே! நாமென்ன தமிழுக்கு விரோதிகளா! தமிழ் வேண்டாமென்கிறோமா? தமிழ் மிலேச்ச மொழி என்று கூறுகிறோமா? அன்று தமிழ்மொழியைக் கொல்ல, கொடிபிடித்து, இந்தியை ஆதரித்து நமக்கெதிராகக் கொடி தாங்கித் திரிந்த தோழர்கள்தானே இன்று தமிழ், தமிழ் என்று கூப்பாடு போடுகின்றனர். இவர்கள் ஆரியத்திற்குச் சோரம் போயிருந்த அந்தக் காலத்திலும் கூட நாங்கள் தானே தமிழ் வளர்க்கப் பாடுபட்டோம். இதை யாராவது மறுத்துக் கூற முடியுமா?

*பொறுப்புள்ள புலவர் போட்டியிடட்டுமே*

நானும் ஒரு தமிழன்தானே. நான் பேசுவது கன்னடம் என்று சிலர் கூறலாம். நான் பேசும் மொழியை ஒருவன் கன்னடம் என்று கூறினால் அவன் தமிழ் அறியாதவன் என்றுதான் நான் கூறுவேன்.
தகுந்த, பொறுப்புள்ள, தன்மானமுள்ள எந்தப் பண்டிதர் வேண்டுமானாலும் முன் வரட்டும். என் சக்திக்கு ஏற்ற அளவுக்கு நான் பந்தயம் கட்டுகிறேன். அவர் மறுத்துக் கூறட்டுமே நான் பேசுவது தமிழல்ல, கன்னடம் என்று, நான் பேசும்மொழி தமிழ்தான். தமிழறியாததால் நீதான் அதைக் கன்னடம் என்று கூறுகிறாய். இதேபோல் தெலுங்கன் பேசுவதும் தமிழ்தான். அதைத்தான் தமிழ் தெரியாததால் நீ தெலுங்கென்று கூறுகிறாய், மலையாளி பேசுவதும் தமிழ்தான் நீதான் அதைத் தமிழ் தெரியாததால் மலையாளம் என்று கருதுகிறாய் என்று நான் கூறுகிறேன்.
தமிழ், தெலுங்குகளை வேறு என்போன் தமிழனே அல்ல

தமிழன், தெலுங்கன், கன்னடியன், மலையாளி இவர்கள் பேசுவதெல்லாம் தமிழ்தான். இவர்கள் பேசுவது வெவ்வேறு மொழியென்று கூறுபவன், தமிழ் மகனல்லன். ஆரியத்திற்குச் சோரம் போனவன்; நம்மைக் காட்டிக் கொடுத்து ஆரிய ஆதிக்கத்துக்கு ஆக்கம் தேட முயற்சிப் பவன். தமிழர் என்று தம்மை இவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள், கருதிக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறலாமே தவிர, இவர்களைத் தமிழ் அறிந்தவர்கள் என்று நாம் ஒப்புக்கொள்ள முடியாது. திராவிட மொழி எது என்று கேட்கப்படுகிறது. திராவிட மொழி தமிழ் தவிர வேறு இருக்க முடியாது. ஆரியருக்கும் வடமொழி தவிர, வேறு மொழி பிடிக்கவும் செய்யாது. தமிழை நாம் பராமரிக்க மறந்துவிட்டோம். அதை நாம் லட்சியப் படுத்தாமல் கூடுமளவுக்கு அலட்சியப்படுத்தி விட்டோம். நமது பண்டிதர்கள் எல்லாம் தமிழ் வல்லவர் என்று தம்மைக் கூறிக்கொண்டு, தம்மால் முடியுமளவுக்குத் தமிழை ஒழிக்க எதிரிக்குக் கையாளாயிருந்தார்களே ஒழிய, தமிழை வளர்த்தார்களில்லை. தமிழுக்கு எமனாக அன்று தொட்டு இருந்து வருபவர்கள் இந்தப் பண்டிதர் கள்தான். நாட்டுப்பற்று, மொழிப்பற்று என்று கூறி பயனற்ற சில கூட்டத்தார், எதைச் சொன்னால் பாமரர்கள் ஏமாறு வார்களோ, அதைக் கூறி நம் முயற்சியைக் கெடுக்கிறார் களே ஒழிய, உண்மையாகத் தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் பாடுபடுபவர் திராவிடர் கழகத்தார்தான். நாங்கள் திராவிட நாடு, திராவிட மொழி என்று கூறும்போது மொழி போச்சு, மொழி போச்சு என்று கூப்பாடு போடும் தோழனே! எங்கள் முயற்சியால் எது போகும்? உன் அறியாமை வேண்டுமானால் போகுமே ஒழிய, உண்மையில் தமி ழுக்கோ, தமிழ்நாட்டிற்கோ கடுகளவேனும் கேடு வருமா? நமது அரசாங்கத்தாருக்கு இன்று ஏற்பட்டுவிட்ட மொழிப் பற்று, நம் மொழியைக் கெடுக்க, கொலை செய்ய ஆரம் பித்து விட்டது கண்டு குலை நடுக்கமெடுக்கிறது.

*தமிழைக் கெடுக்க புது முயற்சி*

மொழிவாரி மாகாணம் பிரிக்கப்படப் போகிறது. அதுதான் பிரிந்து போகட்டும் என்றால், மொழிவாரி வித்வான்கள் நியமிக்கப்பட்டு, மொழிவாரி இலக்கணங் களும் செய்யப்பட்டு திராவிட மொழியைப் பாழாக்கத் திட்டம், தீட்டியாகி விட்டதே! இந்நான்கு மொழிகளும் ஒரே மொழிதான் என்ற கருத்து மக்களிடையே செல் வாக்குப் பெற ஆரம்பித்ததும், ஆரிய ஆதிக்கம் அதைக் கெடுக்க, அவை ஒன்றல்ல தனித்தனி என்று பிரித்துக்காட்ட முற்பட்டு விட்டதே. நம்மைக் காட்டிக் கொடுக்கும் பண்பு வாய்ந்த தமிழ் மந்திரியும் தம் போன்ற விபீஷணர்களையே ஆஸ்தான வித்வான்களாக்க முயன்று வருகிறார். அவர் கள் இனி தம்மால் ஆனமட்டும் கேடு செய்வார்கள்.

*ஒன்றே நான்காகி உள்ளது*

பண்டிதர்களில் சிலர் இவை நான்கும் ஒன்றிலிருந்து வந்தவை, ஒரே தாய் வயிற்றில் பிறந்து வளர்ந்த நான்கு அக்கா, தங்கைகள் என்று கருதுகிறார்கள். இது பித்தலாட் டம் என்பதுதான் என் கருத்து. இத்திராவிடத் தாய்க்குப் பிறந்தது ஒரே மகள் தான், அது தமிழ்தான். அந்த ஒன்றைத்தான் நாம் நாலு பேரிட்டு அழைக்கிறோம். நாலு இடத்தில் பேசப்படுவதால் நான்கு பெயரில் வழங்குகிறதே ஒழிய நாலிடத்திலும் பேசப்படுவது தமிழ் ஒன்று தான். நாலும் ஒன்றிலிருந்து உண்டானவை என்று எண்ணுவது தான் தவறு. ஒன்றுதான் நாலாக நமது அறியாமையால் கருதப்பட்டு வருகிறது. இதை நிரூபித்துக் காட்ட என்னால் முடியும்.

*ஒரே மக்கள் பலஜாதி,*

*ஒரே மொழி பலமொழி*

நாலு தனியிடங்களில் வசித்து வந்த மக்கள் போக்கு வரத்துத் தொடர்பு இல்லாததால் அந்தந்த சீதோஷ்ண நிலைக்கேற்ப இயற்கையாகவே அவர்கள் பேசிய வார்த்தைகளில் சில சப்த மாறுபாடுகள் ஏற்பட்டுள்ளன. இதைச் சாதகமாக வைத்துக்கொண்டு நம்மை நாலு ஜாதியாகப் பிரித்து வைத்த ஆரியம், நம் மொழியையும் நான்காகப் பிரித்து, வேண்டுமளவும் வடமொழியை அவற்றிற்குள் புகுத்தி, திராவிட மொழியையே கெடுத்து விட்டது. அன்றைய பண்டிதர்கள் ஆரியத்திற்கு அடிமைப் பட்டிருந்ததால் அதைத் தடுத்தார்களில்லை. இன்னும் நமது பண்டிதர்களுக்கு அந்த ஆரிய மோகம் தீர்ந்த பாடில்லை.

*நான்கு புலவர்களும் கூடட்டும்*

ஆரிய மோகமற்ற ஒரு தெலுங்குப் பண்டிதர், ஒரு கன்னடியப் பண்டிதர், ஒரு மலையாளப் பண்டிதர், ஒரு தமிழ்ப் பண்டிதர் ஆகிய நால்வர் ஒன்றாக உட்கார்ந்து, நாலு அகராதிகளை வைத்துக்கொண்டு அவற்றிலுள்ள வடமொழி அத்தனையையும் நீக்கி விடுவார்களானால், எஞ்சியிருப்பவை அத்தனையையும் தமிழ் வார்த்தை களாகவே இருப்பதைக் காண்பார்கள். 100க்கு 5 வார்த்தை கூட தமிழ் அல்லாத வார்த்தையாக இருக்காது. அதற் குள்ள சற்று நீட்டலையோ, குறுக்கலையோ எடுத்துவிட்டுப் பார்த்தால் அவையும் தமிழாகவே முடியும்.

*ஏன் நீங்களே பாருங்கள்*

இன்று வேண்டுமானால் நீங்கள் உங்கள் வீட்டுக் குப்போய் 50-வருடத்திற்கு முந்திப் பதிப்பிக்கப்பட்ட ஒரு மொழிவாரி சொற்கள் புத்தகத்தை எடுத்துப் பாருங்கள். இந்நான்கு மொழிவாரிச் சொற்கள் யாவும், பெரும்பாலும் தமிழாகவே இருப்பதைக் காணலாம். இதைச் சுருக்கமாக சில உதாரணங்களால் விளக்குகிறேன்.

நாம் வசிக்கும் இடத்திற்கு தமிழில் வீடு என்கிறோம். நமது தாகத்தைத் தணித்துக் கொள்ள உபயோகிக்கும் பானத்தைத் தண்ணீர் என்று கூறுகிறோம். அவற்றை ஒரு தெலுங்கன் இல் என்றும், நீளு என்றும் சொல்கிறான். அதையே கன்னடியனொருவன் மனை என்றும், நீரு என்றும் சொல்கிறான். ஒரு மலையாளி அவற்றை பொறை என்றும், வெள்ளம் என்றும் சொல்கிறான். வீடு, இல், மனை, பொறை இவை நான்கும் தமிழ்ச் சொற்கள்தானே. நீர், நீளு, வெள்ளம் இவை தமிழ்தானே. நாம் எனக்கு என்று தமிழில் கூறுவதைத் தெலுங்கன் நாக்கு என்றும், கன்னடியன் நெனக்கி என்றும் கூறுவான். பார்ப்பான் நேக்கு என்று கூறுவான். அகத்திற்கு என்பதை ஆத்துக்கு என்று திரித்துக் கூறுவான். அவர்கள், இவர்கள் என்று கூற வேண்டியதை அவா, இவா என்கின்றான். இந்த நேக்கையும், ஆத்தையும், அவாள், இவாளையும் தமிழ் என்று கூறும்போது, இல், மனை, பொறை என்றும், நீளு, வெள்ளம் என்றும், நாக்கு, நெனக்கி, எனக்கி என்றும் கூறும் மக்களைத்தானா வேறுமொழி பேசுபவர்கள் என்று ஒதுக்கவேண்டும்? இந்தப் பார்ப்பனரை எல்லாம் ஒரு தனியிடத்தில் வைத்துவிட்டால், இவர்கள் பேசுவதும் வேறொரு மொழியாகத்தானே போய்விடும்?

*உண்மைப் பற்று வேண்டும்!*

ஆகவேதான் நான் கூறுகிறேன். இவை நான்கும் நாலு இடத்தில் நாலு பெயருடன் வழங்கப்பட்டு வரும் ஒரே மொழியே தவிர நான்கல்ல. ஆரியம் தான் இவற்றை நான்காகப் பிரித்து வைத்துள்ளது. இவ்வாரியத்திற்குக் கையாளாக இருப்பவர்கள் தான் தம் அறியாமையால் இப்பிரிவினைக்கு ஆக்கம் விளைவிக்கிறார்களே ஒழிய, உண்மையில் இவை நான்கும் ஒன்றுதான். சுயநலம் மறந்து உண்மை மொழிப் பற்றுக்கொண்டு ஆரிய வடசொற்களை நீக்கிப் பார்த்தால் இவை நான்கும் ஒரே மொழிதான் என்பது தீர்க்கமாய் விளங்கும். இதை நமது தோழர்களுக்கு உணர்த்தி, ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மக்கள் என்ற ஒன்றுபட்ட நிலையை உண்டாக்கத்தான் நாம் உழைக்க வேண்டும்.

*பிளவு செய்த ஆரியமே,*

*இன்றும் பிளவு செய்கிறது*

நாமத்தை இரண்டு தினுசாகப் போட்டு, வடகலை, தென்கலை என்று கூறி வைணவர்களைப் பிரித்து வைத்தது போல், நம் மக்களிடையே புழக்கத்திலிருந்து வரும் சில சப்த வேறுபாடுகளை ஆதாரமாகக் கொண்டு நம்மைப் பிரித்து வைத்த ஆரியம், நம்முடைய அப்பிரிவினை ஒழிப்பு முயற்சியைக் கண்டு பயந்து பிரிவினைக்கு ஆக்கம் தேட மொழிவாரி இலக்கணங்கள் செய்யத் திட்டம் தீட்டியுள்ளது. பிரிவினை என்று கூறிக்கொண்டே போனால் எதுவும் பிரிந்துதான் போகும், நாம் அங்கே என்பதை ஒருவன் அக்கடே என்றும் ஒரு வன் அவடே என்றும் கூறுகிறான். இச்சிறு வேறுபாட்டின் காரணமாக இவை வெவ்வேறு மொழியாக்கப்படலாமா? நமது பண்டிதர்கள் தமிழைப் பற்றிச் சிந்திக்கவே இல்லை. பார்ப்பனனிடம் சபாஷ் பட்டம் வாங்க வேண்டித் தம்மால் கூடுமான அளவுக்கு வடமொழியைத் தமது நூல்களில் புகுத்தித் தமிழைக் கெடுத்தனர், ஆரிய மத ஆதிக்கத்திற்கு அடிமைப்பட்ட அப்பண்டிதர்கள் தாராளமாக ஆரியச் சொற்களைக் கடன் வாங்கி மத நூல்களில் புகுத்தினர். உண்மையில் தமிழன் முன்னேற்றத்துக்குத் தடை இப் பண்டிதர்களும் இவர்களின் மதப்பற்றும்தான்.

*என்னருந் தமிழே!*

*நீயே தெலுங்கு, நீயே கன்னடம்*

நாம் பசு என்பதைத்தான் தெலுங்கன் ஆவு என்றும், கன்னடியன் அசு என்றும் மலையாளி ஆவ் என்றும் கூறுகிறான். ஆ என்றால் தமிழில் பசுவைத் தானே குறிக்கும்? இச்சிறு வித்தியாசத்தாலா இவை நான்காக் கப்பட வேண்டும்? இவை நான்கும் ஒரு உதிரத்திலிருந்து உதித்தெழுந்ததல்ல. அந்த உதிரமே தான் இவை நான்கும், என்னருந் தமிழே? நீயே தான் தெலுங்கு, நீயே தான் மலையாளம், நீயேதான் கன்னடம் என்றுதான் நான் கூறுவேன். இவை வெவ்வேறு மொழிகளாயிருந்தால் இவைகளுக்கு முதல் நூல்கள் எங்கே? தமிழுக்குத்தான் முதல் நூல்கள் எத்தனையுள்ளன? அத்தனையும் ஆடிப் பெருக்கத்தில் ஒழித்த ஆரியக் கூட்டமும் அவர்களின் அடி வருடிகளும்தானே இன்று தமிழ், தமிழ் என்று கூப்பாடு போடுகிறார்கள்? இந்த அன்னக்காவடி சர்க்காரே, இந்தப் பாடம் கூடாது சீர்திருத்தம் பேசக்கூடாது ஆரியர், திராவிடர் என்று எழுதக் கூடாது என்றெல்லாம் உத்தரவிடுகிறதே! இந்த 1947 இல் இதே இவ்வளவு செய்யு மானால் அன்றைய அரசாங்கத்தில் என்னதான் கேடு நடந்திருக்க முடியாது? அதைப் பற்றியெல்லாம் ரொம்ப சல்லீசாக மறந்துவிட்டுப், பார்ப்பானுக்கு அடிமையாகி அந்த அடிமை மோகத்தில் மூழ்கி, என்னை ஏனப்பா மொழிப் பற்றற்றவன் என்று ஏசுகிறாய்?

- 'குடிஅரசு', கட்டுரை - 10.01.1948