பக்கங்கள்

வியாழன், 22 ஜூலை, 2021

நீச பாஷைகள் ஆக்கப்பட்ட மொழிகளுக்கு இருக்கும் ஒரே சுடரொளி திராவிடமே!

 

2017 - முதல் 2020 வரையிலான மூன்று ஆண்டுகளில் ஒன்றிய அரசு சமஸ்கிருதத்தின் வளர்ச்சிக்காக மட்டும் ரூ.683.84 கோடி செலவிட்டுள்ளதுதமிழ்தெலுங்குமலையா ளம்கன்னடம் மற்றும் ஒடியா ஆகிய மற்ற செம்மொழிகளின் வளர்ச்சிக்கு மொத்தமாக ரூ.29 கோடி செலவிட்டுள்ளதுஇந்தப் புள்ளி விவரம் அரசாலேயே வெளியிடப்பட்டிருக்கிறது.

இது நம் கண் முன் தெரிகிற கணக்குஆனால் கண்ணுக்குத் தெரியாத கணக்கிற்கு அளவே இல்லைஇது புதிய வழக்கமும் அல்லவரலாற்றுக் காலந்தொட்டு யார் ஆட்சியில் இருந்தாலும் சமஸ்கிருத வளர்ச்சியும்அதன்மூலம் பார்ப்பனர்கள் வளர்ச்சியுமே வழக்கமான ஒன்றாக இருக்கிறது.

அரசர்கள் காலத்தில் இவர்கள் வேத பாடசாலைகளுக்குப் பெற்ற தானங்களும்நிலங்களும் செல்வமும் கல்வெட்டுகளில் காணக் கிடைக்கின்றன.

கிடைத்திருக்கும் கல்வெட்டுகளில் சொல்லப்படும் கணக்கே மலைப்பைத் தருகிறதென்றால்கிடைக்கப்பெறாத கல்வெட்டுகளும் செப்பேடுகளும் கணக்கின்றி கொடுக்கப் பட்ட தானங்களும் எவ்வளவு இருக்கும் என்று எண்ணிப் பார்க்கவே கடினமாக இருக்கிறது.

முகலாயர் ஆட்சி ஆகட்டும்ஆங்கிலேயேர் ஆட்சி ஆகட்டும் பார்ப்பனர்கள் காட்டில் மழைதான்அன்றாவது அரசர்களிடமிருந்தோசெல்வந்தர்களிடமிருந்தோ தானமோதர்மமோ பெற வேண்டிய நிலை இருந்ததுஅது அவர்களுக்குக் கை வந்த கலை என்றாலும்இன்னொருவர் கையைத்தான் எதிர்பார்க்க வேண்டியிருந்தது.

ஆனால்இன்று அவர்களே ஆட்சி அதிகாரங்களை நேரடியாகத் தங்கள் கைகளில் வைத்திருக்கிறார்கள்இனி அவர்களுக்கு ஏன் மற்றவர்கள் தானமும் தர்மமும் கொடுக்க வேண்டும்?

இது கடவுளின் பெயரால்தேவ பாஷை என்னும் மாய பிம்பம் உருவாக்கப்பட்டுத் தொடரும் கொள்ளையாகும்இதில் மக்களின் பணம் கொள்ளையடிக்கப்படுவது மட்டுமன்றுசுரண்டப்பட்ட மக்கள் இழிவுக்கும் உள்ளாகின்றனர்மக்கள் மொழி நீச பாஷையாக இருக்கிறதுதங்கள் பணத்தைப் பெற்றுக்கொண்டே தங்கள் மொழியையே இழிவுபடுத்தும் அவலநிலை உலகில் எந்த சமூகத்திலும் காணப்பெறாதது.

தமிழுக்காக மட்டுமல்லஇந்திய ஒன்றியத்தின் அனைத்து மொழிகளின் உரிமைகளுக்காகவும் திராவிட இயக்கம்தான் தொடர்ந்து மொழிப்போர்களை நடத்தி வருகிறதுதிராவிடமேநீச பாஷைகள் ஆக்கப்பட்ட மொழிகளுக்கு இருக்கும் ஒரே சுடரொளி!

-  மா.உதயகுமார்

நன்றிகருஞ்சட்டை தமிழர்

தொல்காப்பிய பூங்கா என மீண்டும் பெயர் மாற்றம்

 

சென்னைஜூலை 19- முத்தமிழறிஞர் கலைஞர்கடந்த 2007ஆம் ஆண்டு அடையாறு உப்பங்கழி யில் 58 ஏக்கர் பரப்பளவில் ரூ.100 கோடியில் தொல் காப்பிய பூங்கா அமைக்க அடிக்கல் நாட்டினார்பின்னர் 2011ஆம் ஆண் டில் அதைத் திறந்துவைத் தார்.

பின்னர் வந்த அதிமுக அரசுஅப்பூங்காவை அடையாறு சுற்றுச்சூழல் பூங்கா என அழைத்து வந்ததுஅங்கு தொல்காப் பிய பூங்கா என வைக்கப் பட்டிருந்த பெயர் பலகை யும் அகற்றப்பட்டிருந்ததுதற்போது புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலை யில்நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்நேரு அண்மையில் இப் பூங்காவை பார்வையிட் டார்.

கடந்த 10 ஆண்டுகளில் இப்பூங்கா முறையாக பராமரிக்கப்படவில்லை எனவும் குற்றம்சாட்டிய அவர்அதை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப் படும் என்றும் தெரிவித்து இருந்தார்இப்பூங்கா வுக்கு முத்தமிழறிஞர் கலை ஞர் பெயரிட்டிருந்தவாறு மீண்டும் பெயரிடுமாறு சென்னை ஆறுகள் சீர மைப்பு அறக்கட்டளைக்கு உத்தரவிட்டிருந்தார்அதனைத் தொடர்ந்து அந்த பூங்காவுக்கு மீண் டும் தொல்காப்பிய பூங்கா என பெயரிடப்பட்டுள்ளதுஅந்த பெயரில் பெயர் பலகையும் பூங்காவின் நுழைவு வாயிலில் வைக் கப்பட்டுள்ளது.


ஞாயிறு, 18 ஜூலை, 2021

தந்தை பெரியாரும் தமிழும்


மாறுதலுக்கு ஒத்துவராதவன் மானமுடன் வாழ முடியாது

குடிஅரசு இதழ்

தமிழ் பாஷைக்கு வாழ்த்துக் கூறும் வேலை இலேசானதல்ல. அதிலும் என்போன்ற அதாவது தமிழ் பாஷைக்கு வல்லின இடையின எழுத்துபேதமும், பிரயோகமும் பாஷையின் இலக்கண இலக்கியமும் அறியாதவனும், தமிழ் பாஷையையே கெடுத்து கொலை செய்து வருபவன் என்கின்ற பழியைப் பெற்றுவனுமான நான் தமிழ் வாழ்த்துக்குத் தகுதி உடையவனாவேனா என்று பாருங்கள்.

அன்றியும் தமிழைப் பற்றி அபிப்பிராயங்களிலும் பண்டிதர்களுக்கும் எனக்கும் எவ்வளவோ துறையில் நேர்மாறான கருத்துக்கள் இருந்து வருவதும் எவரும் அறியாததல்ல.

இவைகள் எல்லாம் ஒருபுறம் இருந்தாலும் வாழ்த்துதல் என்பதையும் நான் இவ்வளவு சாதாரணமாய்க் கருதுபவனுமல்ல. வாழ்த்துதல் என்றால் பார்ப்பனர்கள் ஏதோ மஞ்சளையும் அரிசியையும் கலந்து பொறுப்பும் பொருளும் இல்லாத ஒன்றின் பெயரைச் சொல்லி வாழ்த்தி (ஆசீர்வாதம் செய்து) விட்டு ஏதோ பெற்று வயிறு வளர்ப்பதுமாதிரி வாழ்த்தை அவ்வளவு ஏமாற்றமாக நினைப்பவன் அல்ல. ஆனால் வாழ்த்துதலின் அவசியத்தையும், அதன் பெருமையையும் நான் உணர்ந்தவனே யாவேன், தகுதியும் பொறுப்பும் உடையவர்களே வாழ்த்த வேண்டும். வாழ்த்துபவர்கள் தங்களுக்கு பொறுப்பு இருப்பதை உணர்ந்தவர்களாகயிருக்க வேண்டும். தமிழுக்கு இடுக்கண் ஏற்படும்போது கவலை அற்றவரும் எவ்வித உதவியும், ஆதரவும் அளிக்கத் தகுதி அற்றவர்களும் (தமிழை) வாழ்த்திப் பயன் என்ன?

தமிழில் எந்த அளவும் பள்ளியில் பயின்றனவல்ல. தமிழைப் பற்றி தமிழ் மக்கள் நலம், தமிழ் மக்கள் தன்மதிப்பு என்பதல்லாமல் வெறும் பாஷையைப் பற்றியே நான் எவ்வித பிடிவாதம் கொண்டவனுமல்ல.

முதலாவதாக தமிழ் முன்னேற்றமடைந்து உலக பாஷை வரிசையில் அதுவும் ஒரு பாஷையாக இருக்க வேண்டுமானால் தமிழையும், மதத்தையும் பிரித்துவிட வேண்டும். தமிழுக்கும் கடவுளுக்கும் உள்ள சம்மந்தத்தையும் கொஞ்சமாவது தள்ளி வைக்க வேண்டும்.

மதசம்மந்தமற்ற ஒருவனுக்கு தமிழில் இலக்கியம் காண்பது மிகமிக அரிதாகவே இருக்கிறது. தமிழ் இலக்கணம் கூட மதத்தோடு பொருத்தப்பட்டே இருக்கிறது.

உதாரணமாக “மக்கள் தேவர் நரகர் உயர்திணை”, என்றால் என்ன? நரகர்கள் யார்? தேவர்கள் யார்? இலக்கணத்திலேயே மதத்தைப் போதிக்கும் சூழ்ச்சிதானே இது?

இனி பள்ளிக்கூடங்களில் பிள்ளைகளுக்குத் தமிழ் இலக்கியத்துக்குப் புத்தகங்கள் எவை? கம்பராமாயணம், பாரதம், பாகவதம், பெரியபுராணம், தேவாரம், திருவாய்மொழி போன்ற மத தத்துவங்களையும், ஆரியமத தத்துவம் என்னும் ஒரு தனிப்பட்ட வகுப்பின் உயர்வைப் போதித்து மக்களை மானமற்றவர்களாக்கும் ஆபாசக் களஞ்சியங்களும் அல்லாமல் வேறு இலக்கியங்கள் மிதந்து காணப்படுகின்றனவா? இன்றையப் பண்டிதர்களுக்கு உலக ஞானத்தைவிடப் புராண ஞானங்கள் தானே அதிகமாயிருக்கின்றன?

மேல் நாட்டுப் புலவர்கள், மேல்நாட்டு இலக்கியங்கள் ஆகியவைகளுக்கு இருக்கும் பெருமையும், அறிவும் நம தமிழ்ப் புலவர்களுக்கு இருக்கின்றது என்று சொல்ல முடியுமா? ஷேக்ஸ்பியர் வேண்டுமா? இங்கிலாந்து வேண்டுமா? என்றால் இங்கிலீஷ் மகன் ஷேக்ஸ்பியர் வேண்டும் என்பானாம். நாம் எதைக் கேட்பது?

இந்தியா வேண்டுமா? கம்பராமாயணம் வேண்டுமா? என்றால் உண்மைத் தமிழ்மகன் என்ன சொல்லுவான்? இரண்டு சனியனும் வேண்டாம் என்றுதானே சொல்லுவான்?

மேல்நாட்டில் தான் அறிவாளிகள் உண்டு என்றும், கீழ்நாட்டில் அறிவாளிகள் இல்லை என்றும் நான் சொல்ல வரவில்லை.

மேல்நாட்டு அறிவாளிகள் தாங்கள் செய்த இலக்கியங்களை மத சம்மந்தமன்னியில் பெரிதும் செய்து வைத்தார்கள். அதனால் நூற்றுக்கணக்காக மேல்நாட்டு இலக்கியங்களும் பண்டிதர்களும் போற்றப்படுகிறார்கள்.

கீழ்நாட்டில் குறிப்பாக இந்தியாவில் எத்தனை இலக்கியம் எத்தனை பண்டிதர்கள் உலகத்தால் போற்றப்படுகிறார்கள்? தாகூர் அவர்கள் கவிக்கு ஆக போற்றப்படலாம். ஆகவே, மதம் கடவுள் சம்மந்தமற்ற இலக்கியம், யாவருக்கும் பொதுவான இயற்கை ஞானத்தைப்பற்றிய இலக்கியம், யாவரும் மறுக்கமுடியாத விஞ்ஞானத்தைப் பற்றிய இலக்கியம் ஆகியவைகள் மூலம் தான் ஒரு பாஷையும் அதன் இலக்கியங்களும் மேன்மையடைய முடியும் என்பது மாத்திரமல்லாமல் அதைக் கையாளும் மக்களும் ஞானமுடையவர்களாவார்கள்.

கம்பராமாயணம் அரிய இலக்கியமாய் இருக்கிறதாகச் சொல்லுகிறார்கள். இருந்து என்ன பயன்? ஒருவன் எவ்வளவுதான் பட்டினி கிடந்தாலும் மலத்தில் இருந்து அரிசி பொறுக்குவானா? அது போல்தானே கம்பராமாயண இலக்கியம் இருக்கிறது. அது தமிழ் மக்களை எவ்வளவு இழிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. தமிழரின் சரித்திர கால எதிரிகளை எவ்வளவு மேன்மையாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. சுயமரியாதையை விரும்புகிறவன் எப்படி கம்பராமாயண இலக்கியத்தை படிப்பான். இன்று கம்பராமாயணத்தால் தமிழ் மக்களுக்கு இலக்கியம் பரவிற்றா இழிவு பரவிற்ற என்று நடுநிலையில் இருந்து யோசித்துப் பாருங்கள்.

தமிழ் பாஷையின் பெருமை பரமசிவனுடைய டமாரத்திலிருந்து வந்ததென்றோ, பரமசிவன் பார்வதியிடம் பேசிய பாஷை என்றோ, சொல்லி விடுவதாலும் தொண்டா நாதனை தூதிடை விடுத்ததாலும், முதலை உண்ட பாலனை அழைத்தாலும், எலும்பை பெண்ணாக்கினதாலும், மறைக்கதவைத் திறந்ததாலும் தமிழ் மேன்மை யுற்றதாகிவிடாது. இந்த ஆபாசக் கதைகள் தமிழ் வளர்ச்சியையும் மேன்மையையும் குறைக்கத்தான் பயன்படும்.

பரமசிவனுக்கு உகந்த பாஷை தமிழ் என்றால் வைணவனும் துருக்கனும் தமிழைப் படிப்பதே பாவமல்லவா? அன்றியும் அந்தப் படியிருந்தால் பார்ப்பான் தமிழ் மொழியை சூத்திர பாஷை என்றும், அதைக் காதில் கேட்பதே பாவம் என்றும் சொல்லுவானா? என்று யோசித்துப் பாருங்கள்.

இன்று தமிழ்நாட்டில் வந்து தமிழ் கற்று வயிறு வளர்ப்பவர்களாகிய பார்ப்பனர்களே இந்தி பாஷை இந்திய பாஷை ஆக வேண்டுமென்று முயற்சித்து வருகிறார்கள். கோர்ட் பாஷை, அரசாங்க பாஷை ஆகியவை எல்லாம் இந்திமயமாக வேண்டும் என்கிறார்கள், காரணம் கேட்டால் இந்தி பாஷையில் துளிசிதாஸ், ராமாயணம் நன்றாய் விளங்குமென்றார்கள்.

தமிழ்ப் பண்டிதர்களுக்கு இதைப்பற்றிச் சிறிதும் கவலை இருந்தது என்று சொல்ல முடியவில்லை தமிழ்ப் பண்டிதர்கள் இந்த அரசியல்வாதிகளின் கூச்சலுக்கும் பார்ப்பனர்கள் ஆதிக்கத்துக்கும் பயந்துகொண்டு வாயை மூடிக்கொண்டு இருக்கிறார்கள்.

பார்ப்பனர்கள் செத்த பாம்பான சமஸ்கிருதத்தை எடுத்து வைத்துக்கொண்டு எவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். பொதுப்பணம் சமஸ்கிருதத்தின்பேரால் எவ்வளவு செலவாகின்றது? பொது ஜனங்களின் வரிப்பணம் சமஸ்கிருதத்துக்கு ஆக ஏன் ஒரு பைசாவாவது செலவாக வேண்டும். தமிழ மக்கள் யாரும் இதைப்பற்றி கவனிப்பதில்லை. தமிழ் தமிழ் என்று எங்கோ ஒரு மூலையில் இரண்டு பண்டிதர்கள்தான் சத்தம் போடுகிறார்கள். ஆனால் சமஸ்கிருதத்துக்கும் இந்திக்கும் கேபினெட் மெம்பர்கள், அய்கோர்ட் ஜட்ஜூகள் முதல் எல்லா பார்ப்பன அதிகாரிகளும் பாடுபடுகிறார்கள். நம்ம பெரிய அதிகாரிகளுக்கோ, பெரிய செல்வாக்கும் உள்ளவர்களுக்கோ தமிழைப் பற்றி கவலையும் இல்லை; தமிழைப் பற்றி அதிகம் பேருக்கு ஒன்றும் தெரியவும் தெரியாது.

தமிழினடத்தில் ஒருவன் அபிமானியாக இருந்தாலே அவன் தேசத்துரோகி, வகுப்புவாதி, பிராமணத் துவேஷி என்றெல்லாம் ஆய்விடுகிறான். தமிழின் பரிதாப நிலைக்கு இதை விட வேறு என்ன வேண்டும். தமிழ் பாஷையில், எழுத்தில் ஒரு சிறு மாற்றமோ முற்போக்கோ செய்யக் கூட ஒரு தமிழ் அபிமானியும் முயற்சிப்பதில்லை. யாராவது முயற்சித்தாலும் ஆதரவளிப்பதுமில்லை. தற்கால நிலைக்கு தமிழ் போதியதாகவும் சவுகரியமுள்ளதாகவும் ஆக்க யார் முயற்சித்தார்கள்.

மேல்நாட்டு பாஷைகள் எவ்வளவு மாற்றமடைந்து வருகின்றன. எழுத்துக்களில் எவ்வளவு மாறுதல் செய்து வருகிறார்கள். ரஷ்யாவில் சில பழைய எழுத்துக்களை எடுத்துவிட்டார்கள். புதிய எழுத்துக்கள் சேர்த்தார்கள். அமெரிக்காவில் எழுத்துக் கூட்டுவாகிய இஸ்பெல்லிங் (Spelling) முறையை மாற்றி விட்டார்கள். துருக்கியில் துருக்கி பாஷைக்கு உண்டான எழுத்துக்களையே அடியோடு எடுத்துவிட்டு ஆங்கில எழுத்துக்களை ஏற்படுத்திக் கொண்டார்கள். தமிழர்கள் தமிழுக்காக நமக்கு விவரம் தெரிந்த காலமாக என்ன காரியம் செய்தார்கள்? காலத்துக்கு ஏற்ற மாறுதலுக்கு ஒத்துவராதவன் மானமுடன் வாழ முடியாது மாறுதலுக்கு மனிதன் ஆயத்தமாக இருக்க வேண்டும். முன்னேற்றம் என்பதே மாறுதல் என்பதை உணர்ந்த மனிதனே உலகப் போட்டிக்கு தகுதியுடையவனாவான்.

தமிழ் எழுத்துக்களில் ஒருசில மாற்றம் செய்தேன். அநேக பண்டிதர்கள் எனக்கு நன்றி செலுத்தி என்னைப் பாராட்டினார்களேயல்லாமல் ஒருவராவது அம் முயற்சிக்கு ஆதரவளித்தவர்கள் அல்ல.

இவ்வளவு பெரிய காரியத்தைச் செய்ய நான் ஒப்புக் கொள்ளுகிறேன்.

ஆனால், தகுதி உள்ளவர்கள் எவரும் வெளி வராவிட்டால் நான் என் செய்வது? என்னைக் குறை கூறவோ திருத்தவோ, முயற்சிப்பதன் மூலமாகவாவது இதற்கு ஒரு வழி பிறக்காதா என்றுதான் துணிந்தேன். இதுவரை யாரும் அதை லட்சியம் செய்யவில்லை.

எப்படி ஆனாலும் தமிழ் பாஷைக்கு உணாச்சி தமிழ் மக்களுக்கு இன்றியடையாதது, அதன்மூலம் தமிழ் மக்கள் ஒன்று சேர வசதி உண்டு. இத்திருநாளை ஒழிந்த நேரத் திருநாளாக இல்லாமல் தமிழ் மக்களுக்கு ஒரு புது எழுச்சியையும் ஊக்கத்தையும் உண்டாக்கும் திருநாளாகச் செய்ய வேண்டும். வருஷம் ஒவ்வொரு ஊரில் தலைமைத் திருநாள் நடைபெறச் செய்ய வேண்டும். தீபாவளி போன்ற மூடநம்பிக்கையும், சுயமரியாதை அற்றதும், ஆபாசமானதுமான பண்டிகைகள் கொண்டாடுவதை விட இப்படி தமிழ்த் திருநாள் என்று தமிழ் மக்கள் கூட்டுறவுக்கும், மகிழ்ச்சிக்கும், கொண்டாட்டத்துக்கும் அனுகூலமாகத் திருநாள்களை பரப்ப வேண்டும். நமது பெண்களுக்குப் பகுத்தறிவும், சுயமரியாதையும் இருந்தாலும் ஒரு திருநாள் வேண்டி இருக்கிறதால் தீபாவளியையும், மாரி பண்டிகையையும் கொண்டாட ஆசைப்படு கிறார்கள். ஆதலால் தக்கது செய்ய வேண்டுகிறேன்.

(13.01.1946 இல் சென்னை பச்சையப்பன் கல்லூரி பெரியமண்டபத்தில் நடந்த தமிழ் திருநாளில் பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு)

குடிஅரசு – சொற்பொழிவு - 26.01.1946