பக்கங்கள்

வியாழன், 20 டிசம்பர், 2018

திராவிட இயக்கம், தமிழுக்கு என்ன செய்தது?

நீதிக்கட்சி 102 ஆம் ஆண்டு விழாவில் பேராசிரியர் அ.இராமசாமி உரை

நீதிக்கட்சி என்ற ஒன்று மட்டும் இல்லாமல் இருந்தி ருந்தால், இன்றைக்கு நாம், நாமாக இருந்திருக்க மாட்டோம். இதைச் சொன்னால், சிலர் கேட்கின்றார்கள், திராவிட இயக்கங்கள் என்ன செய்தது என்று? குறிப்பாக திராவிட இயக்கம், தமிழுக்கு என்ன செய்தது? என்று கேட்கிறார்கள்.

மணிப்பிரவாள நடை என்ற


ஒரு மரணக்குழியில்...


நீதிக்கட்சி தொடங்கப்பட்ட காலத்தில், மணிப்பிர வாள நடை என்ற ஒரு மரணக்குழியில் தமிழ் தள்ளப் பட்டு இருந்தது. கொஞ்சம் ஏமாந்திருந்தால், மலை யாளத்தைப் போல் மாறி, தமிழ் மறைந்து போயிருக்கும். அதை மீட்டெடுத்தது திராவிட இயக்கம்தான்.

அந்த அளவிற்கு, சமஸ்கிருதம் ஆதிக்கம் செலுத் திக் கொண்டிருந்த காலகட்டம் அது. கொடுமை என்ன வென்றால், சென்னை பல்கலைக் கழகத்தில் மருத்துவம் படிக்கும் மாணவர்கள் எல்லாம் சமஸ்கிருதம் படிக்க வேண்டும் என்று சொன்னார்கள்.

எனக்குத் தெரியவில்லை, சுக்கலாம் பரவரம், சசிவர்ணம், சதுர்புஜம், பிரசன்ன வதம் என்று சமஸ்கிருத சுலோகம் சொல்லி, ஆபரேசன் செய்தால்தான், நோயாளி பிழைப்பானா? என்று எனக்குத் தெரியவில்லை.

சமஸ்கிருதம் படிக்கவேண்டும் என்கிற கொடுமையை நீக்கியது நீதிக்கட்சி


அந்தக் கொடுமையை, மருத்துவ மாணவர்கள் சமஸ்கிருதம் படிக்கவேண்டும் என்கிற கொடுமையை நீக்கியது நீதிக்கட்சிதான்.

அதுமட்டுமல்ல, தமிழ் வளர்ச்சிக்கு என்று தனியாக ஒரு பல்கலைக் கழகம் தொடங்குவதற்கு ஊக்கமளித்தது, அண்ணாமலைப் பல்கலைக் கழகம் தொடங்குவதற்கு ஊக்கமளித்தது நீதிக்கட்சிதான்.

தமிழுக்குத் தனித் துறையும்,


தமிழ்ப் பாடத்தையும்...


சென்னை பல்கலைக் கழகத்தில், தமிழ்த் துறையே கிடையாது. கீழ்த்திசை மொழிகள் என்ற துறையில், நான்கோடு ஒன்றாக, தமிழ் மொழியும் சேர்க்கப்பட்டு இருந்தது. தமிழுக்குத் தனித் துறையும், தமிழ்ப் பாடத் தையும் சென்னை பல்கலைக் கழகத்தில் ஏற்படுத்தித் தந்தது நீதிக்கட்சிதான்.

வீரமாமுனிவர் எழுத்துச் சீர்திருத்தத்தைத் தந்தார்; அவருக்குப் பிறகு தமிழிலே எழுத்துச் சீர்திருத்தத்தைத் தந்தவர் தந்தை பெரியார் அவர்கள்தான்.

கணினி கண்டுபிடிப்பதற்கு முன்பே


எழுத்துச் சீர்திருத்தத்தை கண்டுபிடித்தவர்தான் தந்தை பெரியார்


அதில் ஒன்றை நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும் - இன்றைக்கு கணினியில் பயன்படுத்தக் கூடிய எழுத்துச் சீர்திருத்தத்தை, கணினி கண்டுபிடிப்பதற்கு முன்பே கண்டுபிடித்தவர்தான் தந்தை பெரியார் அவர் கள். எந்த அளவிற்குத் தொலைநோக்கு சிந்தனை யோடு அவர் செயல்பட்டார் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

அறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக வந்த பிறகுதான், அரசு பணிகளில் தமிழ் மொழி பவனிவரத் தொடங்கியது.

‘சத்யமேவ ஜெயதே' மாறி,


வாய்மையே வெல்லும் என்று வந்தது


தலைமைச் செயலகம் வந்தது - சத்யமேவ ஜெயதே மாறி, வாய்மையே வெல்லும் என்று வந்தது என்று இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். ஏன், இன்றைக்கு நாம் புழங்கிக் கொண்டிருக்கின்றோமே, இந்தத் தமிழ்நாடு என்ற பெயரே அறிஞர் அண்ணா அவர்கள் தந்ததுதான்.

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச் சராக வந்த பிறகுதான், கடவுள் வாழ்த்து போய், தமிழ்த்தாய் வாழ்த்து வந்தது. உயர்கல்வியில், பயிற்று மொழியாக தமிழ் ஊக்குவிக்கப்பட்டது. கோவில்களில், தமிழில் அர்ச்சனை செய்ய உரிமை வழங்கப்பட்டது. உயர்நீதிமன்றம் தமிழில் செயல்பட சட்டப்பேரவையில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழுக்குச் செம்மொழி என்ற தகுதி வழங்கப்பட்டது என்று தமிழுக்கு இப்படி ஏராளமாக நிறைய செய்து வைத்திருக்கிறோம்.

-உரையின் ஒரு பகுதி

- விடுதலை நாளேடு, 15.12.18

செவ்வாய், 18 டிசம்பர், 2018

தலைமைச் செயலகத்திலேயே தமிழ் கிடையாதா

*"விடுதலை" நாளிதழ் தலைப்புரை (18.12.2018)*
-------------------------------------------------------
*"தலைமைச் செயலகத்திலேயே தமிழ் கிடையாதா?"*

தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள், தமிழில் இடம்பெற வேண்டும். தேவையானால், தமிழின் எழுத்து அளவை விட சிறிதாக, ஆங்கிலத்தில் பெயர் இடம்பெறலாம் என, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து, பல ஆண்டுகள் ஆகி விட்டன.

ஆனால் அதை, தனியார் நிறுவனங்கள் மீறி வந்த நிலையில், தற்போது தமிழக அரசு செயல்படும் தலைமைச் செயலகத்திலேயே, தமிழ் புறக்கணிக்கப் படும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளதை, அறிய முடிகிறது. சென்னை, தமிழக அரசின் தலைமைச் செயலக வளாகத்தில் அமைந்துள்ளது, நாமக்கல் மாளிகை. இங்கு, அரசு துறை செயலர்களுக்கான அலுவலகங்கள் உள்ளன. 10 மாடி கட்டடத்தில், எங்கும் தமிழ் சொற்களே இல்லை எனும் அளவிற்கு, அனைத்திலும் ஆங்கிலமே இடம் பெற்று உள்ளது.

இதுகுறித்து, தமிழ் அறிஞர்கள் கூறியதாவது:

தமிழகத்தில், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் சட்டம், 1947 - 15 மற்றும், 1958ஆம் ஆண்டு, தமிழ்நாடு உணவு நிறுவனங்கள் சட்டம், 42 பி ஆகியவற்றின் படி, நிறுவனத்தின் பெயர் பலகைகள், தமிழில் இருக்க வேண்டும்.ஆங்கிலத்திலோ, பிற மொழியிலோ, பெயர்ப்பலகை எழுதும் அவசியம் ஏற்பட்டால், தமிழ், ஆங்கிலம், பிறமொழி என, முறையே, 5 : 3 : 2 என்ற அளவில், எழுத்து அளவு இருக்க வேண்டும் என, விதி உள்ளது. இதை, தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் தொழிலாளர் நலத்துறை கண்டுகொள்வதில்லை. இதனால், தமிழகத்தில் உள்ள, 50 சதவீத வணிக நிறுவனங்களில், ஆங்கிலம் மட்டுமே இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து, தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநரிடம், நாங்கள் புகார் அளித்தோம். இந்நிலையில், தமிழக அரசு செயல்படும் தலைமைச் செயலகத்திலேயே, ஆங்கிலம் மட்டுமே இடம்பெற்றுள்ளது, அதிர்ச்சியை அளிக்கிறது. மேலும், அங்கிருந்து அனுப்பப்படும் அறிக்கை மற்றும் கடிதங்களும், ஆங்கிலத்திலேயே உள்ளன. நம் தாய் மொழியை புறக்கணித்து, பிற மொழிக்கு, நம் அரசு அக்கறை காட்டுகிறதோ... என, சந்தேகம் எழுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இது குறித்து, தலைமைச் செயலக அதிகாரிகள் கூறியதாவது:

தமிழ் வளர்ச்சித் துறையின் துணை இயக்குநர் மற்றும் உதவி இயக்குநர்கள், அவர்களின் பகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கடை உரிமையாளர்களிடம், சட்டத்தை எடுத்துக் கூறி, ஒரு மாதத்திற்குள், தமிழில் பெயர்ப்பலகை வைக்க வேண்டும் என, வலியுறுத்தி உள்ளனர்.

தமிழில், பெயர்ப்பலகை வைத்த கடை உரிமை யாளருக்கு, பாராட்டுப் பத்திரங்களை வழங்கி வருகிறோம்.

தலைமைச் செயலகத்தில், தற்போது புதிய பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. விரைவில், தமிழிலும் பெயர் பலகை வைக்க, நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

- (தினமலர், 06.12.2018)

தினமலரிலேயே இப்படியொரு செய்தி வெளி வந்துள்ளது.

தமிழ்மொழியை செம்மொழியாக்க சட்டம் கொண்டு வந்தால் காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக் கெடுத்து ஓடும்; ஏழை நெசவாளர் வீட்டுத்தறி நிற்காமல் இயங்கும்; ஒரு வேளை கஞ்சிக்கே வழி இல்லாதவர்களுக்கு மூன்று வேளை மட்டன் பிரியாணி கிடைக்கும் ('தினமலர்' வார மலர் 13.6.2004) என்று கேலி செய்த தினமலரே சுட்டிக் காட்டும் அளவுக்குத் தமிழ் நாட்டில், அதுவும் அரசின் தலைமைச் செயலகத்தில் தமிழைக் காண முடியவில்லை என்று எழுதுகிறது என்றால் இந்த நிலை மிகவும் தலையிறக்கம் தான்! தமிழ் வளர்ச்சித்துறை என்ன செய்கிறது? செய்தி விளம்பரத்துறை என்னதான் செய்து கொண்டுள்ளது? நம் மக்களிடம் பெரும்பாலும் சி.பி.எஸ்.இ. மனப் பான்மைதான் கோலோச்சுகிறது!

தமிழ் வளர்ச்சிக்கென்று ஓர் அமைச்சர் இருக்கிறாரே - 'தினமலர்' செய்தி அவர் கவனத்துக்கு வரவில்லையா?

எது எதற்குத்தான் போராடுவது என்று தெரிய வில்லை....

ஒவ்வொன்றுக் காகவுமா போராட முடியும்? ஒட்டு மொத்த ஆட்சி மாற்றமே நிலையான தீர்வு.

*நன்றி : "விடுதலை" நாளிதழ் தலைப்புரை 18.12.2018*

ஞாயிறு, 16 டிசம்பர், 2018

பெயர் பலகைகளில் தமிழில் எழுதுவதை ஊக்குவிக்க வேண்டும்: ஆட்சியர்

கிருஷ்ணகிரி, டிச.9  கிருஷ்ணகிரியில் ஆட்சியர் அலுவல கத்தில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் ஆட்சி மொழி கருத்தரங்கு நிறைவு விழா நடந்தது. இதற்கு ஆட்சியர் பிரபாகர் தலைமை தாங்கினார். அகரமுதலி திட்ட இயக்குனர் செழியன், தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் ஜெயஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் கலெக்டர் பிரபாகர் பேசியதாவது:-


தமிழகத்தில் ஆட்சி மொழியாக தமிழ் இருக்க வேண்டும் என தமிழ் அறிஞர்களும், தலைவர்களும், பல போராட்டங்ளை நடத்தி 1956ஆம் ஆண்டு தமிழ் ஆட்சி மொழி சட்டம் இயற்றப்பட்டது. அதிக அளவில் மக்களுக்கும், அரசிற்கும் இடையே நிர்வாக நடைமுறைகள் ஒளிவுமறைவின்றி நடைபெறவும், பல்வேறு அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தமிழில் மட்டுமே கையொப்பம் இட வேண்டும் என 1978ஆம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டுள்ளது. எனவே அரசு துறையில் பணியாற்றும் அலுவலர்கள் பணி யாளர்கள், தமிழில் மட்டுமே கை யொப்பம் இட வேண்டும்.


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகள், உணவகங்கள், வணிக நிறுவனங்கள், பெயர் பலகைகளில் தமிழில் எழுதுவதை ஊக்குவிக்க வேண்டும். அலுவலர்கள் கோப்புகளை பராமரிக்கும் போது தவறு இல்லாமல் அலுவலக குறிப்பு கடித போக்குவரத்து பதிவேடுகள், சிறப்பாக கையாண்டு புதிதாக உள்ள சொற்களை தமிழில் சிறப்பாக எழுதி கோப்புகளை கையாள வேண்டும். மொழியின் வாழ்வும் வளர்ச்சியும், பயன்பாட்டை பொருத்தே அமையும் என்பதால் எங்கும், எதிலும் தமிழ்மொழியை பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


தொடர்ந்து அலுவலக கோப்புகளை தமிழில் சிறப்பாக கையாண்ட மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கருக்கு கலெக்டர் பிரபாகர் கேடயம் வழங்கி பாராட்டினார்.


-  விடுதலை நாளேடு, 9.12.18

மறைமலை அடிகளால்...



தமிழ் மொழியின் மறுமலர்ச்சி, 1916ஆம் ஆண்டிலிருந்து, பல் லவபுரத்தைச் சேர்ந்த மறைந்த மறைமலை அடிகளால் தொடங் கப்பட்டது. தமது வாழ்நாளில் மிகச்சிறந்த தமிழ்க் காப்பா ளராக விளங்கிய அடிகள், ஆரியர் வருகைக்கு முன்பிருந்த தமிழை, தூய்மை யான தமிழை, மறுபடியும் அரங் கேற்றத் தொடங்கினார்.


மயக்கமும், அய்யப்பாடு களும் மறைந்தொழிய, தமிழை, தற்காலப் புதிய சிந்தனைகளை வெளிப் படுத்தப் பயன்படுத்தினார். கருத்தாழம் கொண்ட தமது வளமையான பல்வேறு இலக்கியப் படைப்புகளை தனித்தமிழால் மட்டுமே எழுதி, தமிழின் தகுதியை உயர்த்தினார். மறைமலை அடிகளாரின் தனித்தமிழ் இயக்கம், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், திணிவு வேகத் தைக் கொடுத்தாலும், அரசு அம்முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்காததால், இணைக்கமான தாங்கு பயன் கிடைக்கவில்லை. உண்மையான முரண்கள் என்னவெனில், சூழ்நிலைகள், தமிழுக்கு எதிரானவையாகவே மாறின.


குறிப்பாக, இந்திய விடு தலைக்குப் பின் முரண்பட்ட சிந்தனையுள்ள தமிழறிஞர்கள், தொல் மரபுகளை மீறி மேல்நிலை பெற்றனர். இதன் வெளிப்பாடு, கோலாலம்பூரில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் மெய்யானது. அம்மாநாட்டை நடத்தியவர்கள், மறைமலையடிகளின் தனித்தமிழ்ப் பற்றாளர்கள், அம்மாநாட்டில் பங்கேற்க விடாமல், தடுத்து விட்டனர்.

மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணரின் The Primary Classical Language of the World  உலகின் முதல் செம்மொழி தமிழில் டாக்டர் ம.சோ.விக்டர், யாத்திசைப் பதிப்பகம், அரியலூர்-621713.

- க.பழநிசாமி, தெ.புதுப்பட்டி

-  விடுதலை ஞாயிறுமலர், 24.11.18

திங்கள், 10 டிசம்பர், 2018

தமிழில் பெயர் பலகை வைக்கும் அரசாணையை அமல்படுத்தாததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முதன்மை செயலருக்கு தாக்கீது

மதுரை, டிச.10  தமிழில் பெயர் பலகை வைக்கும் அரசாணையை அமல்படுத்தாததால், தொடரப் பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், அரசு முதன்மை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றக் கிளை உத்தர விட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், மோர்பண்ணையை சேர்ந்த வழக் குரைஞர் திருமுருகன், உயர்நீதி மன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்திலுள்ள பெரும்பாலான வணிக நிறுவ னங்கள், பன்னாட்டு நிறுவனங் கள் தங்களின் நிறுவன பெயர் பலகைகளை தமிழில் வைக் காமல் ஆங்கிலத்தில் மட்டுமே வைத்துள்ளன.

கருநாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் பெயர் பலகைகள் அனைத்தும் அந்த மாநில மொழியிலேயே வைக்கப்பட்டுள்ளன. தமிழக அரசின் 1987 அரசாணைப் படி ஆட்சி மொழியான தமிழ் மொழியை, அனைத்து அரசு அலுவலகங்கள், தனியார் கடைகள் மற்றும் நிறுவனங்களில் முதல் மொழியாக பயன்படுத்த வேண்டும். ஆங்கிலம் உள்ளிட்ட பிறமொழிகளை பயன்படுத்து வதாக இருந்தால் தமிழ் மொழி யின் கீழ் 5:3:2 என்ற விகிதத்தில் பயன்படுத்த வேண்டும்.

ஆனால், இந்த அரசாணையை தமிழகத்தில் யாரும் பின்பற்ற வில்லை. இது தமிழ் மொழியை அவமதிக்கும் செயல். எனவே, அரசாணையை பின்பற்றி பெயர் பலகைகளை உரிய விகிதப்படி தமிழ் மொழியில் வைக்க உத்தர விடக்கோரி ஏற்கெனவே மனு செய்திருந்தேன். அதில், அர சாணையை முறையாக அமல் படுத்த தமிழ் பண்பாடு மற்றும் கலாசாரத்துறை முதன்மை செயலர் 4 மாதத்திற்குள் நட வடிக்கை எடுக்க கடந்தாண்டு ஜூலையில் உத்தரவிடப்பட்டது.

ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இதற்கு காரணமான அதிகாரி மீது நீதிமன்ற அவமதிப் பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.  இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமி நாதன் ஆகியோர், மனு குறித்து தமிழ் மொழி மற்றும் கலாச் சாரத் துறை முதன்மை செயலர் வெங்க டேசனுக்கு தாக்கீது அனுப்ப உத் தரவிட்டு, விசாரணையை டிச.19க்கு தள்ளி வைத்தனர்.

-  விடுதலை நாளேடு, 10.12.18