பக்கங்கள்

சனி, 25 ஜூலை, 2015

தொன்மையான நகரம் கண்டுபிடிப்பு:--சிவகங்கை மாவட்டம்

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தொன்மையான நகரம் கண்டுபிடிப்பு:
சிவகங்கை, ஜூலை 24_ சிவகங்கை மாவட்டம், திருபுவனம் அருகே கீழடி பள்ளிச்சந்தை புதூரில், மத்திய தொல் பொருள் துறையினர் மேற் கொண்ட அகழ்வாராய்ச்சி யில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தொன்மையான நகரம் புதையுண்டிருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய தொல்லியல் துறை கண் காணிப்பாளர் அமர்நாத் ராம கிருஷ்ணன் கூறியதாவது:
செவிவழிச் செய்தி களில் குறிப்பிடப்படும் தகவல்களை உரிய கல் வெட்டுகள், சான்றுகளு டன் நிரூபிப்பது அகழ்வா ராய்ச்சியாகும். 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தொன்மையான நகரமான மதுரை குறித்து நடை பெறும் முதல் விரிவான அகழ்வாராய்ச்சி இது வாகும். தற்போது மதுரை வளர்ச்சியடைந்த நகராக உள்ளது. அங்கு அகழ்வா ராய்ச்சி செய்வது சிரம மான காரியம்.
எனவே, மதுரையை ஒட்டிய தொன்மையான பெயரில் தற்போதும் வழங்கப்படும் கிராமங்கள் குறித்து ஆய்வு மேற் கொண்டோம்.
பழைய நூல்களில் குறிப்பிட்டுள்ளபடி வைகை நதி தொடங்கும் இடத்தில் இருந்து கடலில் கலக்கும் ராமநாதபுரம் அழகன்குளம் வரை 293 இடங்களில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பாண்டியர்கள் ஆட்சிக் காலத்தில் மணலூர் கிரா மம் தலைநகராக இருந் ததாக செவிவழிச் செய்தி ஒன்றுள்ளது.
அதனை நிரூபிக்கும் வகையில், அந்தக் கிராமத்தைச் சுற்றி கல்வெட்டுகள், முதுமக் கள் தாழிகள் போன்றவை ஏராளமாக கண்டெடுக் கப்பட்டுள்ளன. அதில், சங்க காலத்தில் குறிப் பிடப்பட்ட குந்திதேவி சதுர்வேதிமங்கலம் என் பது மருவி தற்போது கொந்தகையாக உள்ளது.
திருபுவனம் அருகே கீழடி பள்ளிச்சந்தை புதூர் என்பது வணிகர்களோடு தொடர்புடைய ஊர் என்பதை கண்டறிந்தோம். இங்கு நடத்தப்பட்ட அக ழாய்வில் சங்க கால வீடுகள், அம்மக்கள் பயன் படுத்திய வீட்டு உபயோ கப் பொருள்கள், உலோ கங்கள், கண்ணாடி, மண் பாண்டங்கள், அணிகலன் கள் கிடைத்து வருகின் றன.
மேலும் வெளிநாடு களோடு வணிகத் தொடர் பில் இருந்ததற்கான ஆதாரமாக ரோமானிய நாட்டின் உயர்ரக மண் பானைகளான ரவுலட் மற்றும் ஹரிட்டைன் மண்பாண்ட ஓடுகளும் கிடைத்துள்ளன.
மேலும் பானையின் உட்புறம் கருப்பாகவும், வெளிப்புறம் சிவப்பாகவும் உள்ள அரிதான மண் பாண்டமும் கிடைத்துள் ளது. பழங்கால பொருள் கள் தொடர்ந்து கிடைத்து வருவதால், ஆராய்ச்சிக் காலத்தை நீட்டிக்கும்படி அனுமதி கேட்டுள்ளோம். இந்த அகழ்வாராய்ச்சிக்கு, பள்ளிச்சந்தை புதூரைச் சேர்ந்த சோணை மகன் சந்திரன், அப்துல்ஜபார் மகன் திலீப்கான் ஆகி யோர் அவர்களது சொந்த தென்னந்தோப்பை மன முவந்து வழங்கி உள்ள னர் என்றார்.

-விடுதலை,24.7.15

வியாழன், 23 ஜூலை, 2015

சங்ககால இறையனார் - கடவுளா?


அ. அறிவுநம்பி
புதுவைப் பல்கலைக் கழகம் புதுச்சேரி


2003 மே 10,11 நாட்களில் தஞ்சை பொன்னையா ராமஜெயம் கல்லூரியில் நடைபெற்ற இந்தியப் பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்ற 34ஆம் கருத்தரங்கில் படிக்கப்பட்ட கட்டுரை.
சங்க இலக்கியப் பாடல்களில் பலராலும் பல சூழல்களிலும் எடுத்து மொழியப் பெறும் பாடலொன்று உண்டு. கொங்குதேர் வாழ்க்கை எனத் தொடங்கும் குறுந்தொகைப் பாடலே அது. தலைவன் கூற்றில் அமையும் அப்பாடலுக்கான ஆசிரியர் இறையனார் என்பர். இவ்வளவே குறுந்தொகை நூல் நுவலும் செய்திகள், உரைகாரர்களும் பிறரும் இப்பா முக்கண்ணுடைய சிவனால் வரையப் பெற்றதென்று கூறிடுவர். தருமி, நக்கீரன், பாண்டியன் எனப் பிற மாந்தரையும் அவர்கள் இணைத்து ஒரு திருவிளையாடல் நிகழ்த்தியுள்ளனர். இறையனார் என்பது உமையொரு பாகனைக் குறித்ததா எனக் காணப் புகுதலே இக்கட்டுரையின் மய்யக்கரு.
அ. சங்கப் பாடல்கள் பலவற்றிற்குப் போதியதாகவும் உரியதாகவும் விளக்கம் கிடைப்பது பாடலின்கீழ் வரையப் பெற்றுள்ள கொளுப் பகுதியில்தான். சான்றாகக் குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும் எனத் தொடங்கும் புறப் பாடல் கொளுவின்றிப் படிப்பாரால் வேறு விதமாகவே கருதப் பெறும். தோல்வியுற்ற மன்னன் சிறையில் நீர் கேட்டுத் தாமதமான பணியின் காரணமாக மானம் பெரிது என்று மொழிந்த சூழல், வரலாறு, பாடியவன் போன்றவை கொளு வழியாகவே பெறப் பெறும். கொங்குதேர் என வரும் பாடலின் கீழே சிவன், தருமி, நக்கீரன், பாண்டியன் என எந்தக் குறிப்பும் இல்லை. ஏனைய சங்கப் பாக்களிலும் இவர்கள்பற்றி எவ்விதப் பேச்சுமில்லை. அகச்சான்றுகளைக் காட்டாமலேயே பாடல் புனைந்தவன் பரமசிவன் எனப் பகர்வது பொருந்துவதாக இல்லை.
ஆ. இறை என்ற சொல்லால் மயக்கமேற்பட்டிருக்க வாய்ப்புண்டு. சங்ககால இலக்கியத்தில் இறை என்ற சொல் கடவுளைக் குறித்த சொல்லாகப் பயின்று வரவில்லை. நீயுந்தவறிலை எனத் தொடங்கும் கலித்தொகைப் பாடலில் இடம் பெறும் இறையே தவறுடையான் என்ற வரியுட்பட, இறை என்ற சொல் பயின்று வருமிடங் களில் எல்லாம் அச்சொல் மன்னனைக் குறித்ததேயன்றி மகேசனைக் குறிக்க வில்லை. எனவே இறையனார் என்ற பெயரில்  உள்ள இறை என்ற சொல் லைக் கடவுளெனப் பொருள்கோடற்கும் வாய்ப்பில்லை. ஆர் விகுதியும் இறைவனுக்காக இணைக்கப் பெற்றதாகக் கொள்ளவும் இயலாது. ஏறத்தாழ அனைத்துப் புலவர்களின் பெயர்களும் ஆர் விகுதியுடன் தென்படுகின்றன. இதனால் இறையன் என்ற புலவரின் பெயர் ஆர் விகுதி பெற்று இறையனார் ஆயிற்று எனக் கோடல் சாலும். எனவே இறை; இறையன், இறையனார் ஆகியவை மன்னன், மாந்தன் பெயர்களாக இருக்க முடியுமே தவிர  கடவுளுக்கும் இச்சொற்களுக்கும் எவ்வித உறவுமில்லை.
இ. ஏனைய சில சங்கப் பாக்கள் புலவர்கள் பெயரை, குறிப்பாகப் புலவர் குழாத்தின் தலைமைப் புலவர் பெயரை முன் வைக்கின்றன. மாங்குடி மருதன் தலைவனாகப் புலவர்கள் பாடாது வரைக என் நிலவரை என வரும் வஞ் சினப் பா ஒரு பதச்சோறு. முக்கண்ணன் நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கமேறி நின்றமை மெய்ம்மையாகில் யாரேனும் ஒரு புலவர் தம் பாட்டினில் அதை இழைத்திருப்பார். காலத்தால்  பிற்பட்ட தெனக் கருதப் பெறும் கலி. பரிபாடல் ஆகியவற்றில்கூட இக்குறிப்பு ஏது மில்லை. அகச்சான்றாக அத்தொன்மம்  இடம் பெறவில்லை என்பது உற்றுநோக்க வேண்டிய பகுதியாகும். நக்கீரர் எனும் புலவர் பாடிய தனிப்பாடல்கள், திருமுருகாற்றுப்படை போன்ற தனிநூல்கள் எவற்றிலும் இத்தொன்மக்கூறு இடம் பெறவில்லை. நக்கீரர் இடம் பெற்ற தொன்மக் கதை அவராலும் சுட்டப் பெறவில்லை. அவர் காலத்திய புலவர்களாலும் சுட்டப் பெறவில்லை. இவையாவும் கணக்கி லெடுக்கப் பெற வேண்டிய பகுதிகளாகும்.
ஈ. நக்கீரரின் எழுத்துகளில் முருகன் முன் நிறுத்தப் பெறுவதே முதன்மை யாகவுள்ளது. சிவன் முதன்மைத்துவம் பெற்றமைக்குப் போதிய சான்று களில்லை. சிவன், முருகன் போன்றார் தமிழ்ச் சங்கப் புலவர்களாகப் பங்காற்றியமைக்கு வலுவான அகச் சான்றுகள் எதுவுங் கிடையாது. நக்கீரர் பெயர், இறையனார் களவியலுரை போன்றவை மீள் பார்வைக்குரிய கூறுகளாகின்றன. தேவாரம், திருவாசகம் போன்ற நூல்களிலும் தருமி பற்றிய திருவிளையாடல் பேசப் பெறவில்லை.
உ. தொன்மக் கதையை உருவாக்கி யோர் மேற்குறித்த இறையனாரின் குறுந்தொகைப் பாடலைத் தம் எழுத்து வரைவில் இணைத்துக் கொண்டிருக்க வேண்டும். தம் முன்னோரின் வரி களையோ முழுப் பாடலையோ பின்வந்தோர் பயன்படுத்தியிருப்பதற்கு ஏராளமான சான்றுகள் உள. எழுதி யவரின் பெயர், பின்புலம் போன்ற வற்றைச் சுட்டாமல் அவருடைய சொல்லாடல்களைச் சிதைக்காமல் அவ்வண்ணத்திலேயே தம் எழுத்து களோடு பொதிந்து தருவது பொதுமரபு. சான்றாகச் சிவப்பிரகாசர் போன்றோர் திருக்குறளைச் சொல் மாற்றாமல் அப்படியே பயன்படுத்தியுள்ளதை நோக்கவியலும், தாயுமானவர் போன் றோரின் பாடலடிகளை, பாடல்களைப் பாரதியார் கொண்டிருக்கிறார் என்ப. இதனையொப்பவே தருமி, இறைவன், நெற்றிக்கண் ஆகியவற்றை இழைத்துப் பிறந்த தொன்மக் கதையினூடே குறுந்தொகைப் பாடலும் பின்னப் பெற்றிருக்க வேண்டும்.
ஊ. பாரதி, பாரதிதாசன் போன் றோரின் பாடல்கள் எழுத்துச் சிதைவு றாமல் இன்றைய திரைப்படங்களில், தொலைக்காட்சி நிகழ்வுகளில் இடை செருகப் பெறுகின்றன. பாடலினைப் புனைந்தாரும், எழுதப் பெற்ற பின்புலமும் கூறப்பெறுவதில்லை. அந்த இடத்திற்கு ஏற்ற வரிகளை முன்வந்த புலவர்கள் கூறியிருக்கவும் அதனை அப்படியே வழிமொழிந்துள்ளனர். இதனைப் போலத் தருமி பற்றிய தொன்மக் கதை நிகழ்வுகளுக்கேற்ப இறையனாரின் பாடல் அமைவுற்ற மையால் அப்பாடலை அப்படியே தொன்மத்துள் கொண்டு வந்திருக்க வேண்டும்.
ஈ. சில நேரங்களில் காரணங்களின் அடிப்படையில் சில புனைவுகள் உருவாகியிருக்கின்றன. சிலப்பதிகாரம், பரிபாடல் உட்பட எல்லா இலக்கி யங்களும் மதுரையில் தவழ்ந்த ஆற்றின் பெயரை வையை என்றே புகலும். மருவுதல் காரணமாக வையை என்ற சொல் வைகை ஆயிற்று. வைகை என்ற சொல்லிற்கு விளக்கம் தர வேண்டு மென்பதற்காகப் புனையப் பெற்ற கதையே மதுரையம்பதியில் மன்றல் நாளன்று பூதகணத்தானொருவனின் தாகந்தீர்க்க ஆலவாயண்ணல் அவனை நோக்கி வை, கை என ஆணையிட்ட தாகவும் அதுவே வைகை ஆறாயிற்று. எனவும் கதைக்கப் பெற்ற ஒன்றாகும். இதுபோன்றே இறையனாரின் குறுந் தொகைப் பாடலினை மய்யக் கருவாகக் கொண்டு சித்தரிக்கப் பெற்றதே தருமி கதையாயிற்று எனவும் கொள்ள இயலு கின்றது. எவ்வாறாயினும் இறையனார் என்பவர் பிறைசூடிய  பெம்மானாக இருக்க வாய்ப்பில்லை என்பது பெறப் பெறுகின்றது. குறுந்தொகைப் பாடலில் கொளு இல்லாமையும், நக்கீரர் உட்படச் சங்கப் புலவர் எவரும் நெற்றிக்கண் மூலம் நக்கீரர் குலைவுற்ற செய்தியைப் பேசாமையும், சங்க காலத்தில் இறை என்ற சொல் மன்னனைக் குறித்தே வருகின்றதன்றிக் கடவுளரைக் குறித்து வாராமையும், சிவன் சங்கப் புலவனாக வந்ததோ, பாப்புனைந்ததோ பிறவோ இலைமறை காயாகக் கூட இலக்கியத்தில் இடம் பெறாமையும் இன்ன பிறவும் இறையனார் என்ற சொல் சிவபெரு மானைக் குறிக்கவில்லை என்பதை மெய்ப்பிக்கின்றன. தேவார முதலிகளும் இதுபற்றிப் பாடவில்லை. தருமி, நக்கீரர், நெற்றிக்கண் ஆகியவற்றை உள்ளடக்கிய தொன்மம் குறுந்தொகைப் பாடலை அடிக்கருவாகக் கொண்டு புனையப்பட் டதாக இருக்கலாம். அல்லது, சிவன் தருமிக்காகப் பாடல் புனைந்ததாக வரும் தொன்மத்தில் குறுந்தொகைப் பாடல் நேர்த்தியாகப் பொருத்தப் பெற்றிருக்க லாம். எவ்வாறாயினும் கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பியை வரைந்த இறையனார், நீலமணிமிடற்றா னில்லை என்பது தெளிவு.

செவ்வாய், 21 ஜூலை, 2015

தர்மபுரி அருகே பெருங்கற்கால புதிர்நிலை கண்டுபிடிப்பு

தர்மபுரி அருகே பெருங்கற்கால புதிர்நிலை கண்டுபிடிப்பு



தர்மபுரி மாவட்டம் கம்பை நல்லூரில் 2,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருங்கற்கால புதிர்நிலையை கிருஷ்ணகிரி மாவட்ட தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள் ளார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மய்யம் மற்றும் பெண்ணையாறு தொல்லியல் சங்கம் சார்பில் கிருஷ்ண கிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் தொல்லியல் குறித்து அகழாய்வு நடத்தப்பட்டு வருகிறது.
தொல்லியல் ஆய்வாளர்களான கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மய்யத்தை சேர்ந்த சுகவன முருகன் மற்றும் பெண்ணையாறு தொல்லியல் சங்கத்தை சேர்ந்த சதானந்தம் கிருஷ்ணகுமார் ஆகியோர் தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூரில் சுமார் 2,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருங்கற்கால புதிர்நிலையை கண்டுபிடித்துள்ளார்கள்.
இதுகுறித்து தொல்லியல் ஆய்வா ளர் சுகவன முருகன் கூறியதாவது:-
புதிர்நிலைகள் என்பது மய்யத்தில் விடையை கொண்டு உள் மற்றும் வெளிச்செல்ல இயலாத பல்வேறு சூழ்நிலைப் பாதைகளுடன் விளங்கு பவையாகும். இத்தகைய புதிர்நிலைகள் உலகின் பல்வேறு பகுதிகளில் இருக் கின்றன என்பது புதிய கற்காலத்தில் இருந்தே தொல்லியல் ஆய்வாளர்கள் பதிவு செய்து வருகிறார்கள். இதில் வட்டப்புதிர் வழிகள் ஏறத்தாழ 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாகும்.  தென்னிந்தியாவில் முதன் முதலில் கிருஷ்ணகிரி பகுதியில் வட்டப்புதிர் நிலை கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து 30 ஆண்டுகள் கழித்து தற்போது தர்மபுரி மாவட்டம் கம்பை நல்லூரில் சதுர புதிர்நிலை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இது உலகில் கண்டுபிடிக்கப்பட்ட புதிர்நிலைகளிலேயே பெரியதாகும். ஏறத்தாழ 80-க்கு 80 அடி பரப்பில் உள்ளது. இன்றும் மக்கள் வழிபாட்டில் உள்ளது. இது பழமையான வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாக இருக்கக்கூடும்.
இந்த புதிர்நிலை குறித்து இப்பகுதி மக்கள் கூறும்போது, அரசனால் சிறைபடுத்தப்பட்ட கணவனை உயி ருடன் மீட்ட மனைவியின் கதை என் கிறார்கள்.
இந்த புதிர்நிலையில் உள்ள ஏழு பட்டை தளப்பாதையில் நடைபயின்று வெற்றி அடைபவர் மனதில் நினைத் ததைப் பெறுவர் என்பதும், கற்களைத் தாண்டிச் செல்பவர்கள் நற்பலன்களை இழப்பர் என்பதும் இப்பகுதி மக்களின் மூடநம்பிக்கை.
-விடுதலை,11.10.14

திங்கள், 20 ஜூலை, 2015

ஸ்ரீயை ஒழித்துவிட்டு திரு

ஸ்ரீ
உயர்திரு ஆச்சாரியார் அவர்கள் தமிழ்நாட்டுக்கும், தமிழர்களுக்கும், தமிழுக்கும் செய்துள்ள தீமைகள் பல. இவைகளைப்பற்றிப் பல தடவை விளக்கியிருக்கிறோம். இவைகளில் ஒன்றுதான் ஸ்ரீ!
1937இல் முதலமைச்சராயிருந்தபோது இந்தத் தீமையைச் செய்தார்.
பெயருக்கு முன்பு எழுதப்படுகின்ற மரியாதைச் சொல்லான மிஸ்டர் என்பது இங்கிலீஷாயிருந்தபடியால் அதற்குப் பதிலாக, ஸ்ரீ என்பதை நுழைத்து உத்தரவு பிறப்பித்தார். அதாவது இருந்தால் இங்கிலீஷ்! இல்லாவிட்டால் சமஸ்கிருதம்! தமிழ் மட்டும் வளரக் கூடாது. இப்பேர்ப்பட்டவரைத் தமிழர் என்றும், தமிழுக்காகப் பாடுபடுகிறவர் என்றும் கூறுகின்றவர்களின் மூளைக்கோளாறுக்காக நாம் வருந்துகிறோம்.
இங்கிலீஷில் மிஸ்டர் என்கிறார்கள்; ஃப்ரெஞ்சு மொழியில், மான்ஷேர் என்கிறார்கள்; ஹிந்தியில் ஸ்ரீஜத் என்கிறார்கள்; சமஸ்கிருத்தில் ஸ்ரீ என்கிறார்கள்.
இந்த ஸ்ரீயை ஒழித்துவிட்டு திரு என்ற தமிழ்ச் சொல்லைப் பயன்படுத்த வேண்டுமென்று அரசியலாரைக் கேட்டுக் கொள்வதாக இவ்வாரத்தில் பெண்ணா கரத்தில் கூடிய தமிழக ஆட்சி மொழி மாவட்ட மாநாட்டில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதை நாம் வரவேற்கிறோம்.
காங்கிரஸ் ஆட்சி பீடத்திலுள்ளவர்கள் ஸ்ரீ ஸ்ரீ மான் ஸ்ரீமதி ஆகிய வடமொழிச் சொற்களுக்கு அடிமையாயிருக்கக் கூடாது. மந்திரிகள் தங்களைத் தமிழர்கள் என்று அழைத்துக் கொள்வது உண்மையானால், அந்த உணர்ச்சியை, மொழிப்பற்றை, செய்கையில் காட்ட வேண்டும். திரு என்ற சொல்லையே பயன்படுத்துமாறு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
கனியிருக்கக் காய் சுவர்வது ஏன்? கரும்பிருக்க வேம்பை மென்று தின்பது ஏன்? சந்தனமிருக்கச் சேற்றை யள்ளிப் பூசிக் கொள்வது ஏன்?
உறக்கம் இருக்க, நித்திரை ஏன்? கடல் இருக்க சமுத்திரம் ஏன்? கனவு இருக்க, சொப்பனம் ஏன்? வணக்கம் இருக்க, நமஸ்காரமும் நமஸ்தேயும் ஏன்?
அழகான, வலுவான, சொந்த வீட்டை விட்டு, இடிந்து சரிந்து கிடக்கும் வாடகை வீட்டுக்குக் குடி போகலாமா? காங்கிரஸ் மந்திரிகளை நோக்கிக் கேட்கிறோம்.
திரு. ஆச்சாரியார் அவர்கள் செய்துள்ள தீமைகளையெல்லாம் பட்டியல் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்,. இன்றைய மந்திரிகள்.
இந்தப் பட்டியலை ஒவ்வொரு மந்திரியின் மேஜைமீதும் வைத்திருக்க வேண்டும். இவைகளை ஒவ்வொன்றாக, ஒரே மாதத்துக்குள் ஒழித்துக் கட்டி விட வேண்டும். இருநூறுக்குக் குறையாத செய்கைகளுண்டு இந்தப் பட்டியலில்.
தேர்தல் நேரத்தில் மட்டும், தமிழ் என்றும், தமிழர் என்றும், கூத்தாடி, ஏமாற்றினால் போதாது. தமிழில் உண்மையான பற்றுக் கொண்டிருக்க வேண்டும். ஸ்ரீ உடனடியாக ஒழிக்கப்பட வேண்டும். இனி, தமிழ்ப் பெரு மக்களுக்கும் ஒரு வேண்டுகோள்.
எதற்கும் ஆட்சியாளரின் உத்தரவையே நம்பிக் கொண்டிருக்கக் கூடாது. எழுதும் போதும், பேசும்போதும், திரு தோழர் ஆகிய சொற்களையே பயன்படுத்த வேண்டும். ஸ்ரீ என்று பேசுவோரை அவ்வப்போது திருத்த வேண்டும். பொதுக் கூட்டங்களில் யாராவது பிடிவாதமாக ஸ்ரீ என்று பேசினால் கைதட்டி எள்ளி நகையாட வேண்டும். அல்லது எழுந்து நின்று, திரு எனச் சொல்லுங்கள் எனத் திருத்த வேண்டும். தமிழுக்காகவும், தமிழர் ஆட்சிக்காகவும் தனிப்பணி புரிவதாகக் கூறுகின்ற தமிழரசுக் கழகத்தாரும் இந்தத் துறையில் கவனஞ் செலுத்தலாம்.
திரு.சி.ஆர். அவர்களின் காலத்திலேயே இந்த ஸ்ரீயை ஒழித்துக் கட்டினால்தான் தமிழனுக்குப் பெருமை. இல்லாவிடில், இந்தத் தமிழனுக்கு மானமேது? எதைத் தூக்கி வைத்தாலும் சுமந்து கொண்டு திரிவான்! மொழிப்பற்றுமில்லை; இனப்பற்றுமில்லை, என்று அவர் கருதிக் கொண்டிருப்பதை மெய்ப்படுத்தியவர்களாவார்கள்.
ஆரியன், அவன் மதத்தை மட்டுமல்ல; கலாச்சாரத்தை மட்டுமல்ல; மொழியையும் நுழைத்துத் தமிழ் மக்களைப் பாழாக்கிக் கொண்டிருக்கிறான் என்பது நினைவிருக்கட்டும். இனத்தாலும், மொழியாலும் வேறுபட்டவர்கள் இனி எந்தநாளும் ஒன்றுபட முடியாது. அன்னியனான ஆரியன் தொடர்பை அறவே நீக்குங்கள்!
விடுதலை 16.4.1954

தொல்காப்பியர் காலத்தில் சமஸ்கிருதம் இருந்ததா?


-பொறியாளர்
ப. கோவிந்தராசன்
BE,MBA,MA (H),MA (Ling)
தொல்காப்பியம் மற்றும் அய்ம்பெரும் காப்பியங்கள் போன்ற  சங்ககாலத்தைச் சேர்ந்த நூல்களின் பொழிப் புரையாளர் பலரால் வடமொழி என்று சொல் லப்படுகின்ற சமஸ்கிருதம் பற்றியும் புராணம் இதிகாசம் பற்றியும் சொல்கின்ற பாடல்கள் இடம் பெற்றிருப்பதாக பலரால் கூறப்படுகின்றது.
இத்தகைய நிலைப்பாட்டைக் குறித்து வரலாற்றிலும் மற்றும் தமிழ் இலக்கியங்களில் காணப் படும் செய்திகளை கீழ்க்கண்டவாறு தொகுத்து அளிக்கப்படுகின்றது.
வேதங்கள்:- சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் வேதங்கள் கடலில் ஏற் பட்ட ஆழிப் பெருவெள்ளத்தால் அழி வுற்ற தமிழ் வேதங்களைக் (நான் மறைகளை) குறிப்பதாகும்.
நான் மறை என்றால் கடலில் மறைந்த நான்கு நூல்கள் என்பதாகவும் பொருள் கொள் ளலாம். ஆனால்,  மறைநூல் என்றால் மறைவான கருத்துக்களைக் கொண்டதும் மற்றும் ஒருசில மனிதர்கள் மட்டும் படிக்கும் புனித நூல் என்றும்  பொருள் கொள்வது ஏற்புடையதல்ல. ஏனென் றால் மறைநூல் என்பது எல்லா மனி தர்களும்  எந்தவித பாகுபாடும் இல் லாமல் எளிதில் படித்துப் பயன் அடைவதற்காகத்தான் செய்யப்பட்டது.
2. மேலும், நச்சினார்க்கினியரால் எழுதப்பட்ட தொல்காப்பிய உரை நூலின் பாயிரத்தில் வேதவியாசர் ஒன் றாக இருந்த ஆரியர் வேதத்தை நான்கு வேதங்களாகப் பிரிப்பதற்கு முன்பேயே தொல்காப்பியம் செய்யப்பட்டது எனக் கூறியுள்ளார். இதைச் சொல்லுபவர் தமிழ் தாத்தா உவேசா. (நூல்-: சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும்). எனவே தொல்காப்பி-யம் என்ற நூல் ஆரியர் வருகைக்கு முன்னர் எழுதப்பட்டது ஆகும்.
3. ஆரியர் வேதங்களில் பல தமிழ் சொற்கள் காணப்படுவதாக பல சமஸ் கிருத அறிஞர்களே ஏற்றுக் கொண்டுள் ளனர். (மாதவ தேஷ்பாண்டே மாலதி செண்டகே). வேதங்களில் உள்ள தமிழ் சொற்கள்---  அச்சு, ஆணி, உலக்கை ஊசி, கச்சை, ஓடம், கணக்கன் காலம், குடி, தட்டான் ஆகும்.
4. ஆரிய வேதங்கள் சமஸ்கிருத மொழியில் செய்யப்படவில்லை. சந்தஸி என்ற மொழியில் ஆரிய வேதங்கள் எழுதப்பட்டன.(ஆதாரம்: -1. யக்ஞ வல்கியர் பிரியா எழுதிய இந்துமத வேதத்தின் மகிமை என்ற நூல் பக்கம்-13-லும் மற்றும்  2. பாணினி செய்த அஷ்டதாயி என்ற இலக்கண நூல் (கிமு 300) இந்த நூலின் தமிழாக்கம் முனைவர் கு. மீனாட்சி என்பவரால் எழுதப்பட்டது.
வெளியீடு -உலகத் தமிழ் ஆராய்ச்சி நிலையம் சென்னை. இந்த நூலில் சுமார் 300 (மொத்தம் 3995) சூத்திரங்களில் சந்தஸி என்ற சொல்லுக்கு வேதமொழி என்று பொருள் என சொல்லி யிருக்கிறார்). மேலும், வேத பாஷைக்கு சமஸ்கிருதம் என்ற பெயர் இல்லை. அதற்கு பெயர் சந்தஸ் என்பது தான். சந்தஸ் என்றால் சந்தம் மட்டுமில்லை சந்தங்களில் அமைந்த வேதங்களுக்கும் வேதபாஷைக்கும் கூட சந்தஸ் என்றே பெயர்.
வேதம் தவிர மற்ற எல்லா விஷயங் களிலும் -லௌகிகமான பேச்சு எழுத்து காவியங்களில் மட்டுமன்றி தர்ம சாஸ் திரம் புராணம் இதிகாசம் உள்பட எல்லா விஷயங்களிலும் பிரயோகித்த பாஷைக்குத்தான் சமஸ்கிருதம் என்று பெயர். இவை இந்துமத வேதத்தின் மகிமை என்ற நூலில் பக்கம் 14ல் கூறப் பட்டவை. மேலே உள்ளபடி வேத காலத்தில் சமஸ்கிருத மொழி தோன் றவே இல்லை. மேலும் கடவுளால் தோற் றுவிக்கப்படவில்லை எனத் தெளிவாக உணரலாம்.
புராணங்களும் இதிகாசங்களும்:
புத்த சமண மதங்கள் உருவானதால் வீழ்ச்சிஅடைந்த ஆரியர்களின் வேத மதம் கி.பி.250-ல் இருந்து எழுதப்பட்ட பல புராணங்களாலும் இதிகாசங்களா லும் மீண்டும் மறுமலரச்சி அடைந்தது. இந்த நூல்கள் எல்லாம் சமஸ்கிருத்தில் எழுதப்பட்டவை.
ஆனால், ஆரியரின் வேதங்கள் சந்தஸி மொழி (வேதமொழி) இல் எழுதப்பட்டவையானதால் ஆரி யரின்  வேதமதம் பெரும்பாலான மக் களைச் சென்று அடையவில்லை. எனவே ஆரியரகள் வேத மொழியைக் (சந்தஸி) கை விட்டார்கள். பெரும் பாலான மக்களைக் கவர்வதற்காக பலமொழிகளைக் கலந்து ஒரு புதிய மொழியை உருவாக்கினார்கள்.
அந்த மொழிதான் சமஸ்கிருதம். இது நடந்த காலம் ஏறக்குறைய கிபி 150-ல் ஆண்ட ருத்ரவர்மன் காலம் ஆகும். இந்தக் காலத்தில் உருவாக்கப்பட்ட கல்வெட் டில் தான் ஜூனாகட் அருகே (திராவி டஸ்தானில் இருந்த குஜராத்) முதன் முதலாக சமஸ்கிருதம் பயன்பட்டதை வரலாற்று அறிஞரகள் கண்டறிந்தார்கள்
புராணங்கள் மற்றும் இதிகா சங்கள்:-
ஆங்கிலம் மற்றும் தத்துவத் திலும்  பேராசியராக பல கல்லூரி களில் பணியாற்றிய எம்.எஸ். பூரண லிங்கம் பிள்ளை பிராமணரல்லாதார் நடத்திய (ஜஸ்டிஸ் கட்சியின்) ஜஸ்டிஸ் என்ற பத்திரிக்கையில் துணையாசிரி யராகப் பணிபுரிந்தவர். இவர் எழுதி உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தால் வெளியிடப்பட்ட தமிழ் இந்தியா என்ற நூலில் கீழ்க்கண்டவாறு கூறியுள்ளார்.
காலமுறை வரிசைப்படி திராவிட மொழிகள் எல்லாம் சமஸ்கிருதத்தை விட பழமையானது என்பதில் சந்தேகம் இல்லை. ஏனென்றால் அந்த மொழிகள் எல்லாம் இந்துஸ்தான் முழுவதும் பரவி இருந்தன. (ஆதாரம் மேனுவல் ஆப் அட்மினிஸ்டிரேசன் ஆப் மெட்ராஸ் பிரெஸிடென்சி பாகம் 1 பக்கம்43)
மேலும் சமஸ்கிருத அறிஞர் மேக்ஸ் முல்லர் ரிக் வேத காலத்தை 4 பகுதி களாகப் பிரித்தார். அவை 1. சந்தஸ்காலம் 2. மந்த்ர காலம் 3. பிராமணகாலம்  4. சூத்ர காலம். ஆகும். இந்த  நான்கு பகுதிகளையும் உருவாக்க  சுமார் 200 ஆண்டுகள் ஆனது. இதில் சூத்ர காலம் கி.மு.600 ஆகும். ஆக ரிக் வேதகாலத்தை கிமு 1200 (சுமார் 3200 ஆண்டுகள் முன்பு) என கூறியிருக்கிறார்.
(ஆதாரம் பக்கம்74 நூல்-இந்து மதவேதத்தின் மகிமை). ரிக் வேதம் இயற்றிய பின் பல நூறு ஆண்டுகள் சென்ற பின்னர் தான் மற்ற வேதங்கள் இயற்றப்பட்டன. எனவே, சமஸ்கிருதம் புத்தர் காலத்திலும் இல்லை மற்றும் பாணினி காலத்திலும் (கிமு300) இல்லை என உறுதிபடக் கூறலாம்.
மேலே கூறியவாறு சமஸ்கிருதம் கி.பி.150-ல் கல்வெட்டில் தோன்றியது. பின்னர் புராண காலத்திலும் இதிகாச காலத்திலும் அதிகப் பயன்பாட்டிற்கு வந்தது. சமஸ்கிருதம் வளர்வதற்கு கிபி 350-ல் ஆண்ட குப்தவம்ச மன்னர்கள் பெரிதும் உதவினார்கள். இந்த புராண காலம் கி.பி.250_-400-ல் துவங்கியதாக வரலாற்று அறிஞர்கள் (வென்டி ட்ரோனிகர்) கூறுகிறார்கள்.
ஏனென் றால் முதன் முதலாக தோன்றிய மார் கண்டேய புராணம் இயற்றியகாலம் கிபி.250_-400 ஆகும். ஆனால் சங்க காலத்தை கிமு400 முதல் கிபி400 வரை என வரலாற்று ஆய்வாளரகள் கூறுகிறார்கள். தொல்காப்பியர் காலத் தில் சமஸ்கிருதம் உருவாகாத காரணத் தால் வட மொழி அல்லது வடசொல் என்று பொதுவாக அழைக்கப்பட்டது. இதை வலியுறுத்த சில சான்றுகள் கிடைத்துள்ளன அவைகளில் சிலவற்றை தமிழ் அகராதிகள் தருகின்ற அர்த்தம் அல்லது பொருள் மூலம் கண்டறியலாம்.
1.வடமொழி என்பதற்கு பொருள் 1.ஆரியம் 2.பிராகிருதம் 3.தற்சமம் அல்லது வடமொழிக்கும் பிறபாடைக் கும் பொதுச் சொல் 4. தற்பவம் அல்லது வடமொழியிலிருந்து திரிந்த மொழி-. (பக்கம் 299 வீரமாமுனிவரின் சதுரகராதி)
2.வடமொழி என்பதற்குப் பொருள் ----கிரந்த மொழி, வடசொல், சமஸ்கிருதம் (பக். 516 மதுரைத்தமிழ் பேரகராதி முன்னுரை தமிழ் தாத்தா உவேசா)
3. பிராகிருதம்------ இயற்கையானது அழி யக் கூடியது வடமொழி திரிபாயுள்ளது (பக்கம் 839 மெய்யப்பன் தமிழ் அகராதி)
மேலே கூறியுள்ளபடி வட மொழி என்றால் 1.பிராகிருத மொழி, 2. சமஸ் கிருத மொழி, 3. தமிழகத்திற்கு வெளியே பேசப்படும் மொழி,
4.வடமொழி யிலிருந்து பிரிந்த மொழிகள், 5.வட மொழியின் திரிபு மொழி என்று பல வகையான பொருள்களை தமிழ் அகராதிகள் தருகின்றன.
பிராகிருதம் (இயற்கை மொழி) என்றால் செம்மை செய்யப்படாத மொழி அல்லது முதல் மொழி என்று பொருள். சமஸ்கிருதம் (செயற்கை மொழி) என்றால் செம்மை செய்யப்பட்ட மொழி என்று பொருள்.
மேலே விவரித்தபடி பிராகிருத மொழி  என்றால் முதலில் தோன்றிய மொழி என்று பொருள். எனவே  பிரா கிருத மொழியிலிருந்து சமஸ்கிருதமொழி உருவாக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. எனவே வடமொழி என்றால் ஆதி மொழியான பிராகிருதத்தைக் குறிப்ப தாகக் கூறலாம்.
4. மேலும், மதுரை பேரகராதியில் வடதமிழ் என்ற சொல்லுக்கு சமஸ் கிருதம் வடமொழி கிரந்த மொழி என்று பொருள் கூறப்பட்டுள்ளது. எனவே, வட இந்தியாவில் தமிழ் வழக்கில், இருந்தது எனவும் பின்னர் அந்த வடதமிழ் மொழியே சமஸ்கிருதமாக மாறியது என கூற வாய்ப்புள்ளது.
தொல்காப்பியர்:-தொல்காப்பியர் காலத்தை தொல்லியல் வல்லுநர்கள் அகழ்வாராய்ச்சியின்போது கிடைத்த நாணயங்கள் மற்றும் நீத்தார் நினைவுச் சின்னங்களான முதுமக்கள் தாழி, கற்படுக்கை நெடுங்கல், நடுகல், வீரக்கல் ஆகியவற்றின் அடிப்படையில் -பெருங் கற்படைகாலம் -என்று -கூறுகிறாரகள். இந்தப் பெருங்கற்படைகாலம் -கிமு.
1000-ல் தொடங்கி சங்க காலம் வரை நீடித்தது. இந்த பெருங்கற்படை பண்பாட்டின் சிறப்பினை தொல்லியல் நோக்கில் சங்ககாலம் என்ற நூல் விளக்குகின்றது
1. -------சமண, புத்த, வைதீக சமயங்களின்  தாக்குதலுக்கு உட்பட்டபோதிலும் தமிழ்ச் சமூகம் தனது சமூகக் கட்ட மைப்பை தொடர்ந்து கட்டிக் காக்கவும் தமிழகம் முழுவதும் எழுத்து வரிவடிவம் பெறுவதற்கும் இப்பெருங்கற்படைப் பண்பாடு அடித்தளமாக விளங்கியது-.---
2.--- தமிழகத்தின் வரலாற்றை எழுத முனைபவர்கள்  யாராக இருந்தாலும் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நின்று நிலவிய திராவிடப் பண்பாட்டின் முக்கிய கூறான நீத்தார் நினைவுச் சின்னங்களை ஒதுக்கிட முடியாது.----
3.---பெருங்கற்படை பண்பாட்டின் இறுதிக் காலத்தில் தமிழகத்தில் எழுத் தறிவு பரவி விட்டது என்று கொடு மணல் (இன்றைய திருப்பூர் அருகே) பெருங்கற்படையில் இருந்து கிடைத்த தமிழ்பிராமி எழுத்துப் பொறிப்புப் பெற்ற பானை ஓடுகளும் வாழ்விடத்தில்  கிடைத்த எழுத்துப் பொறிப்புப் பெற்ற பானை ஓடுகளும் காட்டுகின்றன.
இம்மக்கள் சங்க காலத்திற்குள் நுழைந்து விட்டார்கள் என்பதையும் இவை பறை சாற்றுகின்றன.--- ----(கொடுமணலில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளில் காணப்பட்ட)
இவ்வாழ்விடம் கிமு 3-ஆம் நூற்றாண்டின் அரிய கல்மணிகள் செய்யும் தொழிற்கூடமாகவும் இரும்பு தாதுவிலிருந்து இரும்பை உருக்கி எஃகு உருவாக்கும் உலைக்கலன்களைக் கொண்ட தொழிற்கூகூடமாகவும் ரோமநாட்டுடனும் இலங்கையுடனும் இந்தியாவின் பிறபகுதிகளுடனும் வாணிபத் தொடர்பு கொண்ட ஊராகவும் கல்வியறிவுப் பெற்ற ஊராகவும் விளங்கியது
(ஆதாரம்: நூல்-தொல்லியல் நோக்கில் சங்ககாலம் ஆசிரியர் -முனைவர் கா.ராஜன் வெளியீடு-உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் பக்கம் 34,35,48,49)
5. மேற்கண்ட நூலில் நீத்தோர் நினைவுச் சின்னங்களான பதுக்கை நெடுங்கல் நடுகல் வீரக்கல் போன்ற வற்றைப் பற்றிய செய்திகள் மணிமேகலை நற்றிணை அகநானூறு புறநானூறு தக்கயாகப் பரணி குலோத்துங்க சோழன் உலா முதலான நூல்களில் காணலாம். இதற்கு எடுத்துக்காட்டாக தொல் காப்பியத்தில் உள்ள ஒரு பாடலைக் (பொருளதிகாரம் பாடல் -63) கூறலாம்.
அந்த பாடல் கீழ்வருமாறு- காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல்
சீர்த்தகு சிறப்பின் பெரும்படை வாழ்த்தல்
முடிவுரை:- இந்தக் கட்டுரையின் மூலம் கீழ்க்கண்டவற்றை அறியலாம்.
1. தொல்காப்பியர் காலத்தில் சமஸ்கிருதம் தோன்றவில்லை.
2. திராவிடர்களின் வரலாற்றினை அறிய நீத்தார் சின்னங்கள் உதவுகின்றன.
3. வடமொழி என்றால் சமஸ்கிருதம் தோன்றுவதற்கு முன்பு தமிழகத்திற்கு வெளியே பேசப்பட்ட மொழி ஆகும்.
4 வடதமிழ் என்ற சொல் சமஸ் கிருதம் என்ற பொருளைக் கொண்டது.
5. திருப்பூர் அருகே கொடுமணல் என்ற இடத்தில் சமீபத்தில் செய்யப்பட்ட அகழாய்வுகளில் காணப்பட்ட நீத்தார் நினைவு சின்னங்கள் கிமு மூன்றாம் நூற்றாண்டைச் சார்ந்தது. அதாவது சங்ககாலத்தைச் சார்ந்தது. அங்கு கிடைத்த முதுமக்கள்தாழியில் பொறிக்கப் பட்ட தமிழ்பிராமி  எழுத்துக்கள் மூலம் மக்கள் கல்வியறிவு பெற்றிருந்தார்கள் என அறியலாம்.
மேலும் வாணிபத்திலும் இரும்பு தாதுவிலிருது எஃகு தயாரிக்கும் தொழிலிலும் சிறந்து விளங்கினார்கள் என அறியலாம்.
6. அய்ம்பெரும் காவியங்கள் அனைத் தும் புத்த, சமண மதங்களை சாரந்தவை. எனவே, ஆரிய மதப் புராணங்களைப் பற்றிய செய்திகள் பிற்காலத்தில் சேர்க் கப்பட்டவை என கருத வாய்ப்பு உள்ளது
-விடுதலை ஞாயிறுமலர் 11.4.15