பக்கங்கள்

ஞாயிறு, 27 செப்டம்பர், 2015

தமிழர் இறையாண்மை மாநாட்டில் தமிழர் தலைவர் பிரகடனம்!-26.12.10


சென்னை, டிச. 27- உலகில் தமிழர்களுக்கென ஒரு நாடு உருவாக, ஈழம் மலர விடுதலைச் சிறுத்தை களும், கருஞ்சிறுத்தைகளும் போராடும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள். ஒடுக்கப்பட்ட மக்கள் உரிமைப் பதாகையை எரிமலையாகத் தங்கள் தோள்களில் சுமந்து எழுந்துவிட்டார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக ஒரு மாநாடு சென்னையையடுத்த மறைமலை நகரில் நேற்று நடைபெற்றது.
பல லட்சம் மக்கள் - பரந்த கடல் என இன எழுச்சி அலைகளை மலை உயரத்திற்கு எழுப்பிய ஓர் உணர்ச்சிக் காவியத்தை நேற்று மாலை எழுதி யது.

தமிழர் இறையாண்மை மாநாடு - விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஏற்பாடு செய்யப் பட்ட மாநாடு அது.
அணி அணியாக - அலை அலையாக மக்கள் திரள் நேற்று பிற்பகல் முதற்கொண்டே மறைமலை நகரை நோக்கி தமிழ்நாட்டின் பல திசைகளிலி ருந்தும் வாகனங்கள் மூலமாக விடுதலைச் சிறுத்தை கள் கட்சியின் தோழர்கள் திரண்டுகொண்டே இருந்தனர். அந்த ஊர் இந்த மக்கள் கடலைத் தாங்குமா என்கிற அளவுக்குப் பொதுமக்களே திகைத்தனர். ஏற்பாடு செய்து அழைத்து வரப்பட்ட கூட்டம் அல்ல இது! எழுச்சி அக்னிக் கடலாக அல்லவா குழுமியிருந்தனர்!
இந்த நிகழ்ச்சியிலே பங்குகொள்ள தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் கார்மூலமாகப் புறப்பட்டு, தாம் பரத்தைக் கடந்து மறைமலை நகரை அடை வதற்குள் பெரும்பாடு!
அவ்வளவு வாகனங்கள் - மக்கள் திரள்! மாநாட்டு மேடைக்கு மக்கள் சமுத்திரத்தில் நீந்திதான் அவர் செல்ல வேண்டியிருந்தது. கழகத் தோழர்களும், விடுதலைச் சிறுத்தைத் தோழர்களும் இருமருங்கும் சங்கிலியாகக் கைகளை இணைத்து மேடைக்குக் கொண்டு செல்வதற்குள் போதும் போதும் என்று ஆயிற்று!
அய்.நா. சபைக் கட்டடம்
தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், கட்-அவுட்டுகள் மின்னொளியில் பிரகாசித்தன. திறந்த வெளி மேடையாக அமைக்கப்பட்டிருந்தது. மேடையின் பின்புறத்தில்  அய்.நா. சபைக் கட்டடமும், அதில் பல நாடுகளின் கொடி பறக்கும் காட்சியும் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டிருந்தது.
உலகம் முழுவதும் பத்து கோடிக்கும் மேல் தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருந்தாலும் தமிழனுக் கென்று உலகில் ஒரு நாடு இல்லையே, தாயகம் இல் லையே என்ற ஏக்கம் உலகத் தமிழர்கள் மத்தியில் கனன்று கொண்டிருக்கும் உணர்வுதானே! அதன் வடிகாலைத்தான் அந்த மாநாட்டின் அப்பழுக்கற்ற உணர்ச்சியின் பிரவாகத்தில் காண முடிந்தது.
தமிழர் தலைவருக்கு வரவேற்பு
மாநாட்டு மேடைக்கு தமிழர் தலைவர் சென்று கொண்டிருந்தபோது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் மானமிகு தொல். திருமாவளவன் அவர்கள் அன்பு வரவேற்பு முழக்கத்தைக் கொடுத்தார். மக்கள் கடல் பலத்த கரவொலி எழுப்பித் தமிழர் தலைவரை வரவேற்றது.
உடன் சென்றோர்
தமிழர் தலைவருடன் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றன், தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் இரா. வில்வ நாதன், தாம்பரம் மாவட்டக் கழகத் தலைவர் முத் தையன் (சால்வை அணிவித்து வரவேற்றார்) செய லாளர் அனகை ஆறுமுகம், தாம்பரம் மாவட்ட மாணவரணித் தலைவர் இர. சிவசாமி, தென் சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செய லாளர் பொறியாளர் கரிகாலன், ஆவடி மாவட்டக் கழக செயலாளர் பா. தெட்சிணாமூர்த்தி, தாம்பரம் மாவட்ட இளைஞரணி தலைவர் பரந்தாமன், பேராசிரியர் நாத்திகன், கோ.வீ. இராகவன் முதலிய ஏராளமான தோழர்கள் உடன் சென்றிருந்தனர்.
செங்கை மாவட்ட தி.க. தலைவர் அ.கோ. கோபால்சாமி,  செயலாளர் துரை. முத்து,  சுந்தரம், மண்டலத் தலைவர் எல்லப்பன் முதலியோர் காட்டாங்கொளத்தூரில் வரவேற்றனர். மாவட்டத் தலைவர் சால்வை அணிவித்துத் தமிழர் தலைவரை வரவேற்றார்.
ஏராளமான தோழர்கள் புடைசூழத் தமிழர் தலைவர் தமிழர் இறையாண்மை மாநாட்டுக்குச் சென்றார்.
மாநாட்டு மேடைக்கு வந்த தமிழர் தலைவருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பொன்னாடை போர்த்தியும், பூங் கொத்து கொடுத்தும் வரவேற்றார். மாநாட்டு மலரை யும், தமிழ் செம்மொழி நூலினையும் நினைவுப் பரிசாக அளித்தார். தொல். திருமாவளவனுக்குத் தமிழர் தலைவர் சால்வை அணிவித்து வாழ்த்தினார்.
தீர்மானங்கள்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. 30 அரிய தீர்மானங் களை முன்மொழிந்தார். ஒவ்வொரு தீர்மானமும் வலம்புரி முத்தாக ஜொலித்தன. 30 தீர்மானங் களையும் முன்மொழிய அவர் எடுத்துக்கொண்ட நேரம் 30 நிமிடங்களாகும்.
முதல் தீர்மானம் இரங்கல் தீர்மானமாகும். அதனையடுத்து கட்சித் தலைவரால் முன்மொழி யப்பட்ட ஒவ்வொரு தீர்மானத்தையும் மக்கள் கடல் ஆர்ப்பரித்து வரவேற்றது.
30 தீர்மானங்களும் முன்மொழியப்பட்ட நிலையில், கோடையிடியென மக்கள் மாக்கடல் பலத்த கரவொலி அலைகளை எழுப்பி தீர்மானங்களை நிறைவேற்றிக் கொடுத்தது.
தமிழர் தலைவர் உரை
கொடியை ஏற்றி முடிந்தவுடன், உணர்ச்சிப் பிரவாகத்திற்கிடையில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களின் உரை கருஞ்சிறுத்தையின் கர்ச்சனையாக அமைந்திருந்தது.
தமிழர்களின் எழுச்சி வரலாற்றில் திருப்புமுனை மாநாடு இது. தமிழர்களின் உணர்வைப் பதிவு செய்யும் மாநாடு (பலத்த கரவொலி!).  தமிழர்களின் உணர்வினை உலகம் உணர்ந்து கொள்ளச் செய்யும் அச்சாணி மாநாடு.
இங்கு நிறைவேற்றப்பட்ட 30 தீர்மானங்கள் ஒவ்வொன்றும் உலகத் தேசிய இனங்களால் ஆராயப்படக் கூடியவை.
நானும் வழிமொழிகிறேன்!
பல கோடி தமிழர்கள் சார்பாகவும், தந்தை பெரியாரின் தொண்டன், அண்ணல் அம்பேத்கரின் மாணவன் என்ற முறையிலும் இந்தத் தீர்மானங் களை நானும் ஒருமுறை வழிமொழிகிறேன்.
தமிழினம் தளர்ந்து போய்விட்டது என்று நம் எதிரிகள் கணக்குப் போட்டுக் கொண்டிருக்கும் ஒரு காலகட்டத்தில் அது தப்புக் கணக்கு; சோதனைகளை வெல்லுவோம் தோள் தூக்கிப் புறப்பட்டோம் என்று காட்டுகிற மாநாடு இது! புலிகளை அடக்கிவிட்டோம் என்று மனப்பால் குடித்தவர்களுக்கு இதோ கருஞ்சிறுத்தைகளும், விடுதலைச் சிறுத்தைகளும் இணைந்து புறப்பட்டு விட்டன என்று காட்டக்கூடிய வரலாற்றுச் சிறப்புமிக்க எழுச்சி மாநாடு இது!
மிகப்பெரிய போர்ப் படையை நடத்தும் தளபதியாக எனது அருமைச் சகோதரர் தொல். திருமாவளவன் இந்த எழுச்சி மாநாட்டைக் கூட்டியுள்ளார்.
வெள்ளம்போல் தமிழர் கூட்டம் இது. உடலால் பலராய்க் காண்பினும், உள்ளத்தால் ஒருவராய்க் கூடியிருக்கிறோம்.
பேச்சல்ல - திட்டங்களும் செயல்களுமே முக்கியம்!
நிறைய பேச வேண்டிய அவசியம் இல்லை. இந்த முப்பது தீர்மானங்களையும் எப்படி செயல்படுத்தப் போகிறோம் என்று திட்டம் தீட்டுவதுதான் மிக முக்கியம்.
இத்தீர்மானங்கள் நாடெங்கும் விவாதிக்கப்படும் - விவாதிக்கவும்படட்டும். இன்று இல்லாவிட்டாலும், நாளை அரசு சட்டங்களாக வெளிவர வாய்ப்புள்ள தீர்மானங்கள் இவை.
இதே செங்கற்பட்டு மாவட்டத்தில் செங்கற் பட்டில் 1929 இல் தந்தை பெரியார் அவர்களால் கூட்டப்பெற்ற முதல் மாகாண சுயமரியாதை மாநாட்டில் தந்தை பெரியார் நிறைவேற்றிய தீர்மானங்கள் பிற்காலத்தில் சட்டமானதுண்டு. தமிழ்நாட்டில் மட்டுமல்ல; இந்தியாவில் மட்டுமல்ல; அந்தத் தீர்மானங்களில் பல வெளிநாடு களிலும் கூட சட்டமாகியுள்ளன. அதேபோல்தான் இத்தீர்மானங்களும் செயல்படுத்தப்பட வேண்டி யவை - நாட்டின் சட்டங்களாக ஆகவேண்டியவை.
நான் கலந்துகொள்வதேன்?
இந்த மாநாட்டில் நான் பங்கேற்க வேண்டும் என்று சகோதரர் தொல்.திருமாவளவன் தொலைப்பேசியில் கேட்டார் - உடனே ஒப்புக் கொண்டேன்.
கருஞ்சிறுத்தைகளாகிய எங்களுக்கும், விடுதலைச் சிறுத்தைகளுக்கும் அதிக வேறுபாடு கிடையாது. ஒரே ஒரு கோடுதான் இடையில் வித்தியாசம்.
நாங்கள் சட்டசபைக்கோ, நாடாளுமன்றத் துக்கோ போகக் கூடியவர்கள் அல்லர் - தேர்தலில் நிற்கக் கூடியவர்களும் அல்லர்.
ஆனால், நாங்கள் சட்டமன்றம், நாடாளுமன்றம் செல்லாவிட்டாலும், யார் அந்த இடத்துக்குச் செல்ல வேண்டுமோ, அவர்களை அனுப்பி வைக்கக் கூடியவர்கள் நாங்கள். தி.க.வும் - தி.மு.க.வும் இரட்டைக் குழல் துப்பாக்கி என்பதுபோலவேதான் விடுதலைச் சிறுத்தைகளும் எங்களுக்கு.
மாநாட்டுக்கு வருகை தந்த தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களுக்கு, விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி., அவர்கள் பொன்னாடை அணிவித்து பூங்கொத்து வழங்கினார். மாநாட்டு மலரையும், தமிழ் செம்மொழி நூலினையும் நினைவுப் பரிசாக தமிழர் தலைவருக்கு அளித்தார்.
தமிழர்களுக்கு ஒரு தாயகம் வேண்டும்; ஈழத்தில் தனிக்கொடி பறக்கவேண்டும் என்ற உணர்வை வெளிப்படுத்திடும் வண்ணம் இந்தக் கொடியை நானும், சகோதரர் திருமாவளவனும் இணைந்து ஏற்றியிருக்கிறோம். இந்தக் கொடி தாழாது - வீழாது. இது ஒரு தொடக்கம்!
மதுரையில் நடத்திய ஈழ விடுதலை மாநாடு
மதுரையிலே தமிழ் ஈழ விடுதலை மாநாட் டினைத் திராவிடர் கழகம் நடத்தியது (1983 டிசம்பர் 18) அந்த மாநாட்டிலே ஈழத்துத் தோழன் குமரி நாடன் ஈழ விடுதலைக் கொடியை ஏற்றினான். அதற்கடுத்து அதே உணர்வோடு இங்கு இந்தக் கொடியை ஏற்றியிருக்கிறோம். இது ஒரு அடையாளம்தான் என்றாலும், நாளையோ, நாளை மறுநாளோ கட்டாயம் நடக்கப் போவதுதான்! (பலத்த கரவொலி!).
உலகிலேயே தலைசிறந்த நிருவாகி என்று பெயர் எடுத்தவர் சிங்கப்பூர் அதிபராகயிருந்த லீக்வான்யூ - அவர் ஒன்றும் நம் இனத்துக்காரர் அல்ல; பொதுவான மனிதர்; அவர் எழுதி வெளிவந்துள்ள நூலில் மிகத் தெளிவாகவே குறிப்பிட்டுள்ளார். தமிழர்களை அழித்துவிடலாம் என்று ராஜபக்சே நினைக்கலாம் - ஆனாலும், அதில் அவர் வெற்றி பெற முடியாது. ஈழத்திலே ஒரு நாள் தமிழர்கள் தங்கள் நாட்டை அடைந்தே தீருவார்கள் என்று எழுதியுள்ளாரே!
அய்.நா. ஏற்றுக்கொண்ட ஒன்றுதான்!
உலக மக்களின் இனவழி தேசிய உணர்வை, இன வாரியான தேசியத்தை அய்.நா. ஏற்றுக் கொண்டி ருக்கிறது. மக்களின் வாழ்வுரிமைக்கு உத்தரவாதம் தேவை என்பதும் உலகம் ஒப்புக்கொண்ட ஒன்றுதான். ஈழத் தமிழர்கள் அதில் விதிவிலக்கல்ல.
அந்த அடிப்படை உரிமை உணர்வோடுதான் இந்த மாநாடு இங்கே நடத்தப்படுகிறது. தீர்மானங் களும் வடிக்கப்பட்டுள்ளன.
மேக்னகார்ட்டா!
இவை உலகத் தமிழினத்தின் பேரறிக்கை ஆயபயேஉயசவய (பலத்த கைதட்டல்!). எங்கள் தமிழர் எடுத்த வியூகத்தில் தோற்று இருக்கலாம்; சில களங்கள் தோல்வியிலும் முடிந்திருக்கலாம். அதற்காகப் போரில் தோற்று விட்டோம் - இனி எழ மாட்டோம் என்று அதற்கு அர்த்தமல்ல! எங்கள் தமிழர் மீண்டும் எழுவார்கள் - உரிமைகளை மீட்பார்கள் என்பதற்கான அடை யாளமே இம்மாநாடு.
நானும், திருமாவளவனும் சேர்ந்து பேசுவோம்!
இந்தத் தீர்மானங்கள் இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டதோடு முடிந்துவிட்டதாகக் கருதக்கூடாது. இது மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்படவேண்டும். நானும், சகோதரர் திருமாவளவனும் தமிழ்நாட்டின் முக்கிய இடங்களில் இந்தத் தீர்மானங்களை விளக்கிப் பேசுவோம்! (பலத்த கரவொலி! ஆரவாரம்!!)
ஒரு நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகள் சிறையில் இருக்கவில்லையா? அதனால் என்ன தனி நாடு கிடைக்காமலா போயிற்று? சிறைக்குச் செல்ல வேண்டுமானாலும், உயிரைக் கொடுக்கவேண்டு மானாலும் அதற்காகத் தயாராக இருக்கக் கூடியவர்கள்தான் நாங்கள்.
அதற்காக ஆத்திரப்பட்டு எங்கள் உயிரைக் கொடுத்துவிடுவோம் என்று பொருளல்ல. வெற்றி கிட்டுவதற்காக - ஒருக்கால் அந்த வெற்றியைக் காண முடியாத நேரத்தில், நீங்கள் எல்லாம் அந்த வெற்றியை  அனுபவிக்கும் நிலை ஏற்பட்டால், அதற்காக எங்கள் உயிரையும் கொடுக்கத் தயார்.
விகற்பத்தை விதைக்காதீர்கள்!
திராவிடர் கழகமோ, விடுதலைச் சிறுத் தைகளோ, ஈழத் தமிழர் பிரச்சினையைக் கைகழுவி விட்டதாக சிலர் பிரச்சாரங்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள். இது தேவையற்ற ஒன்று. தயவு செய்து சகோதரர்கள் மத்தியில் விகற்பத்தை ஏற்படுத்த முயலாதீர்கள் - அது தேவையில்லாத ஒன்று. அவரவர்களும் அவரவர்கள் உசிதப்படி அவரவர்களின் எல்லையில் நின்று பணிகளைச் செய்யட்டும். வீண் விமர்சனங்களால் எந்தப் பயனும் இல்லை; தமிழர்களின் ஒற்றுமை உணர்வைக் குலைக்கத்தான் அது பயன்படும்.
தமிழர்களுக்காக ஒரு நாடு!
விடுதலைச் சிறுத்தைகளும், கருஞ்சிறுத்தைகளும் ஒன்றுபட்டு ஒரே களத்தில் நிற்கிறோம் - அவ்வாறு நிற்போம் என்று ஒரு மாநாடு கூட்டி அறிவித்தி ருக்கின்ற விடுதலைச் சிறுத்தைகளுக்கு நன்றி!
பூமிப் பந்தில் தமிழர்களுக்கு ஒரு நாடு உருவாக ஒன்றுபட்டு உழைப்போம்; உறுதி கொள்வோம்!
வாழ்க பெரியார்!
வாழ்க அம்பேத்கர்!
வருக தமிழ் ஈழம்!
என்று தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் உணர்ச்சிப் பிழம்பாக உரையாற்றினார்.
தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளர்களும் உரையாற்றினர்.

-தொகுப்பு: மின்சாரம்

மேடையின் பின்புறம் அய்.நா. மன்றக் கட்டட வடிவமும், பன்னாட்டுக் கொடிகள் பறக்கும் காட்சியும் சித்திரிக்கப்பட்டு இருந்தது அல்லவா!
அந்த வரிசையில் தமிழனுக்கென்று ஒரு சுதந்திர நாட்டின் கொடி பறக்கவேண்டும் என்ற உணர்வின் அடிப் படையில் கொடியேற்றும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
பல லட்ச மக்களும் மிக ஆர்வமுடன் அந்தக் காட்சி யைக் காணும் ஆவலில் இருந்தனர்.
கருஞ்சிறுத்தையும், விடுதலைச் சிறுத்தையும் இணைந்து தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் ஆகி யோரின் இலட்சியங்களை முன்னெடுத்துச் செல்ல களப் பணி ஆற்றும் என்று தமிழர் தலைவர் கூறியுள்ளார். அதற் கான அடையாளம்தான் இந்தக் காட்சி! இந்த மாநாட்டுக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை மட்டுமே அழைத்த தற்கும் அதுதான் காரணம்.
இப்பொழுது தமிழர் தலைவர் உலகத் தமிழர்களுக் கென்று ஒரு நாடு - தமிழர்களுக்கென்று ஒரு தாயகம் வேண்டும். தமிழன் கொடி அய்.நா.வில் பறக்கவேண்டும் என்ற உணர்வை வெளிப்படுத்தும் முகமாக தமிழர்களின் சுதந்திரத் தாகத்தை வெளிப்படுத்தும் கொடியை ஏற்றி வைப்பார் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் அறிவித்தபோது, எழுந்த கரவொலியும், ஆர்ப்பரிப்பும் அப்பப்பா, வார்த்தை கட்டுக்குள் அடங்காது.
தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் தோழர் தொல். திருமாவளவன் அவர்களைக் கைப்பிடித்து அழைத்துச் சென்று ஒரு கயிறைத் தமிழர் தலைவரும், இன்னொரு புறம் தொல். திருமாவளவன் அவர்களும் இணைந்து தமிழர்களின் சுதந்திர தாகக் கொடியை மக்கள் கடலின் இடி முழக்கத்திற்கிடையே ஏற்றி வைத்தனர்.
அந்த சில மணித்துணிகள் வரலாற்றில் மிக முக்கியமானவை - பிற்கால வரலாற்றில் பேசப்படும் மிக உயர்ந்த நேரம் அது!
சிவப்பு, மஞ்சள், குறுக்கே நீலம், இடையில் நட்சத்திரம்
என்ற வடிமைப்பைக் கொண்டது அந்தக் கொடி!
சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் கொடிகளும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக் கொடியின் நட்சத்திரமும் இணைந்த கொடியாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது என்று கட்சியின் தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்தார்.

 
தமிழர் இறையாண்மை மாநாட்டில், மாநாட்டு மேடையில், தமிழருக்கான தனித்தாயகக் கொடியினை, தமிழர் தலைவர் கி. வீரமணி, தொல். திருமாவளவன் ஆகியோர் ஏற்றினர்.
விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி., அவர்களுக்கு தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் பொன்னாடை அணிவித்தார். மாநாட்டு விழா மலரினை தமிழர் தலைவர் வெளியிட்டார்.
தமிழர் இறையாண்மை மாநாடு மேடையின் பின்புறத்தில் (Backdrop) அய்.நா. சபைக் கட்டடமும், அதில் பல நாடுகளின் கொடி பறக்கும் காட்சியும் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டிருந்த காட்சி
-விடுதலை,27.12.10

ஞாயிறு, 6 செப்டம்பர், 2015

‘யாயும் ஞாயும் யாரா‘கியரோ-குறுந்தொகை


‘‘யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
நீயும் யானும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல் நீர்போல
அன்புடை நெஞ்சந்தாங் கலந்தனவே’’
‘‘உன் தாயும் என் தாயும்
யாரோவென தொடர்பற்றவர்கள்.
என் தந்தையும் உன் தந்தையும்
எவ்வகையிலும் உறவினர்கள் இல்லை.
நீயும் நானும் கூட இதற்கு முன்பாய்
அறிமுகமானவர்கள் இல்லை.
செம் மண்ணில் பெய்த மழைபோல
நம்மிருவர் நெஞ்சங்கள் தாமாகக் கலந்துவிட்டன’’
குறுந்தொகைப் பாடலாகும். 

சனி, 5 செப்டம்பர், 2015

பித்தகரஸ் தேற்றம்-முதலில் சொன்னது தமிழர்கள்!

வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா?- 2

- புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்
அந்தணர்
இதை அந்தம்+அணர் என்று பிரித்து முதலில் உள்ள அந்தம் என்பது வடசொல் என்று கூறி, அழி வழக்காடுவர் இழிவுறு பார்ப்பாரும் இனம் கண்டு வேர்ப்பாரும்.
வேதாந்தத்தை அணவுவோர் என்பது அதன் பொருள் என்று பொய்ப்பர் அவரே!
அம்+தண்=என்பன அந்தண் என்றாயிற்று.
இதன் பொருள்: அழகிய தட்பம், அஃதாவது நாட்டார் கண்கட்கு. அழகு செய்வாரின் தொண்டின் அருட்தன்மை.
இந்த, அந்தண் என்பது தமிழ்ப் பெருநூற்களில் பெரும்படியாய் வந்து பயில்வது அந்தண் சோலை, அந்தண் காவிரி என வந்துள்ளவை காண்க.
அந்தணர் என்பவர் யார்? - கூறுவோம்.
அறந்தான் இயற்றும் அவனிலுங்
கோடி அதிகம் இல்லம்
துறந்தான்.........
என்பது பட்டணத்தடிகள் பகர்ந்தது.
இல்லறத்தானைவிட மக்கள் நலம் கருதி இல்லம் துறந்தான் சிறந்தவன் என்று குறித்தார். மேலும் அதைத் தொடர்ந்தே அவர், அவனிற் சத கோடி உள்ளத் துறவுடையான் என்றும் கூறினார். அவ்வாறு இல்லந் துறந்தவனைவிடச் சிறந்தவன் உள்ளத் துறவுடையான்.
எனவே துறவு இல்லத்துறவு, உள்ளத்துறவு என இரு வகைப்படும். இவ்விரண்டில் இல்லத்துறவே மேலானது மக்கட்குப் பயன்படுவதால்.
இக்கூறிய இல்லத் துறவிகளையே நம் தமிழ் முன்னோர் அந்தணர் என்றார் என்று கடைபிடிக்க. அந்தணர் என்ற சொல் அயலவர் மாசு படாத செந்தமிழ்ச் செல்வம்.
மனம்
மனசு என்ற வடசொல்லின் சிதைவு என்பார் வந்தவரும், சில கந்தல்களும்.
மன்னுவது மனம் என்பதைத் தமிழ் மக்கள் அறிந்து ஏமாறாதிருக்க வேண்டும்.
உலகுக்கு முதன்முதலில் தத்துவ நூல் (கபிலர் எண்ணூல்) தந்தவர்கள் தமிழர்கள். அதில் மனம் என்பதின் இலக்கணத்தைத் தெளிவுறுத்தியதை மன்னுவது என்ற காரணத்தினால் மனம் என்று அதற்குப் பெயர் என்று அமைத்தமையே காட்டும். மனமானது புலன் வழிச் செல்லாமல் தன்னிலையில் மன்னுவதே உணர்வு நிலை என்றும் அந்த உணர்வு நிலையிலே விடுதலை வீடு என்றும் கூறும் கபிலர் எண்ணூல்.
தூய தமிழ்ச் சொல்லாகிய, மனம் என்பதை வந்தவர் எடுத்துக் கொண்டனர். வேறு வழியில்லாததால் என்று அறிந்து வைக்க.
பிணம்
பிண் என்ற வேர்ச் சொல் நீக்கம் என்ற பொருளுடையது. உயிர் நீக்கிய உடலைக் குறிப்பது எனக் கொள்க. அதில் அம் இறுதி நிலை. எனவே பிணம் தமிழ்ச் சொல்லே.
(குயில், 05-08-1958)
-உண்மை,16-31.8.15

வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா?


- புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
காமம்
இது வடசொல் என்றே கூறிப் பொய்ப்பர். ஏனெனில் வடமொழி நூற்களில் பெரிதும் வருவதான ஒரு சொல் இது. தமிழினின்று திருடியது.
காமக்கணிப் பசலியார் என்பது ஒரு பெண்பால் புலவர் பெயர். இதுல் காமம்,கண் என்பன முதலிரு சொற்களாகும். இது காமாட்சி என்பதனின் தமிழ் மொழி பெயர்ப்பு. இவ்வாறு மொழி பெயர்த்தவர் சங்கப் புலவர் என்க. சாம்பூநதம் என்னும் ஒருவகைப் பொன்னை, நக்கீரனார் நாவலொடு பெயரிய பொலம் என்று தமிழிற் பெயர்த்ததும் காண்க. காமாட்சி என்பதில் காமம், ஆட்சி என்ற இரு சொற்கள் உண்டு. ஆட்சி மட்டும் வடசொல் ஆதலால் காமாட்சி - காமக்கண் என்றார். எனவே காமம் தமிழச் சொல்லே. ஆதலும் அதை வடவர் எடுத்தாண்டார் ஆதலும் காண்க. காமம் - தோற்றத்துக்கு முன்னது. அது காம்பு என்பதன் வேர்ச்சொல் ஆகிய காம் என்பதனின்னு தோன்றியது.
இது போல் ஓம்பு என்பதன் வேர்ச்சொல்லாகிய ஓம் என்று வழங்கி வருவதும் ஊன்றி அறியற்பாலது.
ஓம்
இது வடசொல் அன்று. தூய தமிழ்ச் சொல். காக்க என்பது இதன் பொருள்.
சங்கம்
சங்கமே, கணைக்கால், ஓரம், சவை, சங்கு, புலவர், நெற்றி என்பது நிகண்டு. சங்கம் இத்தனைப் பொருளைத் தருகிறது. சவை புலவர் என்று குறிக்குமிடத்தில் அது தமிழ்ச் சொல்லா, வடசொல்லா என்றுதான் ஆராய்ச்சி இங்கே.
தொல்காப்பிய காலத்துக்கு முன்பே தென்பால் தென் கழகம் என்பதொன்றும் வடசொல், வடகழகம் என்பதொன்றும் இருந்ததாக பழைய இலக்கியங்கள் நமக்கு நவிலுகின்றன.
வடகழகமிருந்து கருத்து வேறுபட்டு, அகத்தியர் தென் கழகம் போந்தார் என்றும் கூறுவார். தென் கழகம் என்பது தென்னகம் என்றும், தெங்கம் என்றும் செங்கம் என்றும் ச என்ற எழுத்துத் தமிழில் சொல்லுக்கு முதற்கண் வரத்துவங்கிய பின் சங்கம் என்றும் வழங்கலாயிற்று என அறிதல் வேண்டும். வடபுலம், தென்புலம் என்பன கூட முதற்கண் வடகழகம், தென்கழகம் என்ற பொருளிலேயே வழங்கினவாதல் வேண்டும். புலம் - அறிவு.
தென்கழகம் என்பதே சங்கம் என மருவியது எனின், வடபால் சங்கம் என்ற சொல் என்ன பொருளில் வழங்குகின்றது என்றால், வழங்கவில்லை என்றுதான் பதில் இறுப்போம். சங்கம் என்ற சொல் பிற்பட்ட தமிழிக்கியத்துள் மட்டும் காணப்படுகின்றதும் காண்க.
சங்கம் வடமொழியன்று என்று அறுதியிட்டுக் கூறுவோம். அது தமிழ்ச் சொல்லே என்று உறுதியிட்டுக் கூறுவோம்.
பதி
அரசன், இடம், கொழுநன், தலைவன், பதிவு, வீடு இத்தனை பொருள் பயக்கும். பதி என்பது வடசொல்லன்று. வழங்கிடுவோர், வடவரும் அவர் அடியார்களும்.
எஞ்சிய எல்லாம் எஞ்சிய இலவே.
(தொல்காப்பியம் மொழிமரபு - சச)
என்ற நூற்பாவின் உரையில் பதி என்பது குறிக்கப்பட்டது காண்க. அது வடசொல்லாயின் குறியார் என்க. எனவே பதி தூய தமிழ்ச் சொல்லே.
கலை
இதுவும் தூய தமிழ்ச்சொல்லே. மேற்படி நூற்பாவுரையும் இதை வலியுறுத்திற்று. கல்வி, ஆண்மான் என்பன இதன் பொருள்.
பிலம்
பில்கல் என்பதன் முதநிலையாகிய பில் என்பது நீர் பொசியும் இடம். அதாவது கீழ் அறையைக் குறிக்கும் - பில் அம் பெற்று பிலம் ஆயிற்று. இது தூய தமிழ்ச் சொல்.
குலம்
இது குலை என்பதன் திரிபு. இதை வடவர் எடுத்தாண்டதில் நமக்கு வருத்தமில்லை. அது வடசொல்லே என்று புளுகும்போது தான் எரிச்சல் உண்டாகிறது. இது தூய தமிழ்ச்சொல் என்பதற்கு முன் காட்டிய தொல்காப்பிய நூற்பாவின் உரையே சான்றாகும்.
(குயில், குரல்: 1, இசை: 9, 29.7.1958)
-உண்மை,1-15.8.15

திராவிடம்
இது தமிழம் என்பதன் திரிபு, ஆதலின் தமிழ்ச் சொல்லே. ஆரியம் அன்று. இதுபற்றிப் பல தடவைகளில் என்னால் எழுதப்பட்ட வெண்பாக்கள் இங்கே தரப்படுகின்றன.
பாலி மொழியிற் பகர்ந்த மகாவமிச
நூலில் ஒருசெய்தி நோக்குகின்றோம்! மேலாம்
தமிழ் என்ற சொல்லைத் தமிழோஎன் றார்! ஏன்?
தமிழரல்லார் நாக்குத் தவறு.
தமிழ் நாட்டை ஆசிரியர் தாலமி முன்னாள்
தமிரிசி என்றுரைத்தார். தாம்ஓர் - தமிழரல்லர்!
ஆதலினால் தோழா அயலார் ஒருசொல்லை
ஓதலினால் மாறுபடல் உண்டு.
தமிழென்று சாற்றுதற்கு மச்ச புராணம்
த்ரமிளென்று சாற்றியதும் காண்க - தமிழா
படியைப் ப்ரதிஎன்னும் பச்சைவட வோரிப்
படியுரைத்தால் யார்வியப்பார் பார்.
தமிழோவும் மற்றும் தமிரிசியும் வேறு
த்ரமிள த்ரமில் எல்லாம் சாற்றின் - தமிழன்
திரியே அவைகள்! செந்தமிழ்ச் சொல் வேந்தன்
பிரிந்ததுண் டோ இங்கவற்றில் பேசு.
திரிந்ததமிழ்ச் சொல்லும் தமிழ்ச்சொல்லே ஆற்றில்
பிரிந்தவாய்க் காலும் பிரிதோ? - தெரிந்த
பழத்தைப் பயம் பளம் என்பார் அவைகள்
தழைந்த தமிழ்ச்சொற்கள் தாம்.
உரைத்த இவை கொண்டே உணர்க தமிழம்
திராவிடம்என் றேதிரிந்த தென்று! - திராவிடம்
ஆரியர்வாய் பட்டுத் திரிந்தாலும் அந்தச்சொல்
ஆரியச்சொல் ஆமோ அறி.
தென் குமரிப் பஃறுளியும் சேர்வடக்கு மாமலையும்
நன்கெல்லை கொண்ட நடுவிடத்தில் - மன்னும்
பொருள்கள் பலவாம்! பொலிந்தனவே அந்தப்
பொருள்கள் தமிழ்ப்பெயரே பூண்டு.
திராவிடம் தன்னந் தனியா ரியமா?
திராவிடம் இன்பத் தமிழின் - திரிபன்றோ!
இன்பத் தமிழகத்துக் கிட்டார் திராவிடப்பேர்
என்பார்சொல் ஏற்புடைய தன்று.
திராவிடம் என்னல் தமிழின் திரிபே
திராவிடம் ஆரியச்சொல் அன்று - திராவிடம்
வெல்கஎன்று சொன்னால்நம் மேன்மைத் தமிழர்கள்
வெல்கஎன்று விண்டதுவே யாம்.
வந்தார் மொழியா திராவிடம்? மாநிலத்தில்
செந்தமிழ்ச் செல்வமா அந்தச்சொல்! - முந்தியே
இங்குள்ள நற்பொருள்கள் எல்லாவற் றிற்குமே
எங்கிருந்து கொண்டுவந்தார் பேர்

-(குயில், 15---07-1958)
-உண்மை,1-15.7.15
ஆசாரம்
ஆசு+ஆர்வு+அம். குற்றத்தை ஆய்ந்து ஒழுகுவதோர் ஒழுக்கத்திற்குக் காரணப் பெயர். ஆர்வு என்பதில் வு தொக்கது.
பெருவாயின் முள்ளியார் அருளிச் செய்த ஒழுக்கப் பகுதியின் தொகுப்புக்கும் ஆசாரக் கோவை என்று பெயர். இத்தொடர் தமிழானதால் அப் பெயர் வைத்தார்.
அதி
இஃது அதைத்தலில் முதனிலை வேறுபட்ட தமிழ்ச்சொல், அதைத்தல், அதை, அதி, என்பனவற்றிற்கு மிகுதி என்பது பொருள்.
(குயில், குரல்: 1, இசை: 7, 15---07-1958)
8
அதி
இது தூய தமிழ்ச்சொல் என்றும் அதைத்தலின் முதனிலையாகிய அதை என்பதுதான் அதி என்றாயிற்று என்றும் கூறியிருந்தோம். அது பற்றி நண்பர் ஒருவர் (பெயரைக் குறிப்பிட வேண்டாமாம்) அதை என்பது அதி வர இலக்கணச் சட்டம் இடந்தருகின்றதா என்று கேட்டுள்ளார். ஒரு சொல் வேறுபாடு உறுவதையும் மருவி வருவதையும் தமிழிலக்கணம் ஒத்துக் கொள்கிறதல்ல. அதன்படியே அதை என்பது என அறிதல் வேண்டும்.
இதற்கு மற்றொரு மேற்கோள் அவைத்தல், அவித்தல் என்றும், அவை என்பது அவி என்றும், வந்தது காண்க.
ஆசிரியர்
இது வடசொல் என்று ஏமாற்றுவார் -தூய தமிழ்ச் சொற்றொடர் ஆகும். ஆசு --குற்றம். இரியர் -- நீங்கியவர். மடமை என்னும் குற்றத்தினீங்கியவர் ஆசிரியர். காரணப்பெயராதல் அறிக.
மடம்
அறியாமை உணர்த்தும் போது மடம் தூய தமிழ்ச் சொல்லே. அது நிலையத்துக்கு ஆகும்போது வடமொழி என்க!
அரங்கு
அரக்குதல் என்னும் தொழிற் பெயர் உடலில் புடை பெயர்ச்சி செய்தல் என்று பொருள்படும். அதன் முதனிலையாகிய அரக்கு என்பதற்கும் அதுவே பொருள்.
அரக்குதல், அரக்கு என்பவற்றின் தன்வினைகள் அரங்குதல், அரங்கு என்பது. பொருள் என்னவெனில் (உடல்) புடைபெயர்தல், அஃதாவது உடலசைதல், ஆடல் ஆகும். இனி அரங்கு என்பது அம் இறுதி பெற்றும் பெறாமலும் ஆடுமிடத்திற்கு ஆனது ஓர் ஆகுபெயர் என்க!
இச்சொல் நம் செந்தமிழ்ச் செல்வமாகும். இதை வடசொற் சிதைவென்று கூறுவார். கூற்று நூற்றுக்கு நூறு பொய்யென மறுக்க.
முரலை
அண்மையில் வடசொற் பற்றுடையவர் ஒருவர், இது முரலா என்ற வடசொற் சிதைவு என்று கூறினார். எரிச்சல் வந்துவிட்டது. இதனால் சிரிக்க வாய்ப்பிழந்தேன்.
ஆரியர் நாற்றமே இந்த நாவலந்தீவில் ஏற்படாத காலத்திலேயே, வட நாட்டிலிருந்து நருமதை ஆற்றுக்குத் தமிழர் முரலை என்று பேரிட்டு அழைத்தனர். முரலை என்ற தொழிற் பெயருக்கு, முரலுவது - ஒலிப்பது, அதிலும் புறத்தால் ஒலிப்பது என்பது பொருள். அஃது தொழிலாகு பெயர். முரலை ஆற்றைக் குறித்தது. எனவே தூய தமிழ்ச்சொல்.
முரலி
இது முரலுதலை - ஒலித்தலையுடையது என்ற பொருள் கொண்டது. மேலும் உள்ளால் ஒலிப்பது என்று கொண்டனர் பண்டைத் தமிழர். இதை வடவர் முரளி என்று கூறுவார்கள். முரலி என்பது குழலுக்கு - புல்லாங் குழலுக்குப் பெயர். தூய தமிழ்ச் சொல் என்பதை அறிந்து மகிழ்க!
மா
இஃது மஹா என்ற வடசொற் சிதைவாம். என்னே மடமை!
மா! எனின் பெரியது, சிறந்தது, விலங்கு, மாமரம், முதலிய பலபொருள் குறிக்கும் உரிச்சொல் என்று, வடமொழி என்பது இந்நாட்டிற்கு புகுவதற்கு முன்னமே தமிழ் நூல் கூறிற்று. பெரிது என்ற பொருளில், மாப்பெரிய என்று எழுதவேண்டும். (இடையில், ப் விரிக்காவிடில் மா பெரிது) மா என்பது மகா என்ற வடசொற் சிதைவு என்று கொண்டதாகிவிடும். மா இருக்க மஹா எதற்கு?
கண்ணியம்
இது கண்யம் என்பதன் சிதைவு என்பர் பார்ப்பனரும் அடியாரும். கண்ணல், எண்ணல் சிறத்தல், என்பன ஒன்றே. கண்ண, கண்ணிய எனச் செய, செப்பிய எனும் வாய்ப்பாட்டு வினையெச்சங்களாயும் வரும்.
கண்ணியம் இகரச் சாரியையும் அம் இறுதி நிலையும் பெற்ற பெயர். வடவர் சொல்லும் கண்யம் வேறு, தமிழர் கொண்ட கண்ணியம் வேறு என அறிதல் வேண்டும்.
- (குயில், குரல்: 1, இசை : 8, 22-07-58)
-உண்மை,16-31.7.15


வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா?

    படிவு
    இதுவும் அம் சாரியை பெற்றுப் படிவம் எனவரும். இதையும் வடசொல் எனக் கதைப்பாரும் உளர்.
    படிவு, படிதல் என்ற பொருளுடைய தொழிற்பெயரே இதுவும், அச்சுக்குப் பெயர். அச்சிற் படிவு செய்யப் பெற்ற வடிவப் பொருளுக்கு ஆகுபெயர்.
    படிமம்--வடிவம், படிவம் ஆயினவெனக் கூறுவர் ஏமாற்றுக்காரர்கள். அதற்கு ஒத்து ஊதுவார்கள் மீனாக்கி அழகு, சேது ஆகிய பிள்ளைகள். படிவு தூய தமிழ்க் காரணப் பெயர் என முடிக்க.
    (குயில்: குரல்: 1, இசை: 15, 9-9-58)
    தாரம்
    தாரம் அரும்பண்டம், வெள்ளி, அதன் ஒளி சேரும் ஏழ் நரம்பில் ஓர் நரம்பும் செப்பும் என்பது திவாகரம். இதில் தாரம் என்பதற்கு நான்கு பொருள் காணப்படுவதைக் காண்க.
    வல்லிசைப் பெயரும், வாழ்க்கைத் துணைவியும், யாழின் நரம்பும், அரும்பண்டமும், தாராவும், நாவும், தாரம் என்பன. (வெண்தாதும்) என்பது பிங்கலந்தை.
    இதில் தாரம் என்பதற்கு, ஏழு பொருள் காணப்படுவதைக் காண்க.
    தாரம், வல்லிசை, நா, வெள்ளி,
    தலைவி, ஓரிசை, கண், என்பன.
    என்பது சூடாமணி நிகண்டு. இதில் கண் என்பதும் குறிக்கப்படுவதைக் காண்க.!
    தாரம் என்ற சொல் வடமொழியே என்று சொல்லுகின்றவர்கள் அதற்கு எடுத்துக் காட்டாக என்ன சொல்லுகின்றார்கள் எனில், தாரம் ஏழிசையின் ஒன்று என்ற பொருள் வட மொழியில்தான் உண்டு என்கிறார்கள். அரும்பண்டம் முதலிய பொருள் தரும் போது அது தமிழ்ச் சொல்லே என்பதை அவர்களே ஒத்துக் கொள்கின்றார்கள்.
    நாம் கேட்கின்றோம், ஏழிசையில் ஒன்றைக் குறிக்கின்ற போது அது வடசொல் என்றால், ஏழிசை வடவர்க்கு எப்போது எங்கிருந்து கிடைத்தது? -- ஏழிசை தமிழரிடமிருந்து வடவர் எடுத்தனர் என்பதை மறுக்கக் கூடியதா? இல்லவே இல்லை. ஆதலின் ஏழிசையின் ஒன்றுக்கு அமைந்த தாரம் என்பதையும் வடவர் தமிழினின்றே எடுத்தனர் அல்லவோ?
    இனி, அரும்பண்டம், ஏழிசையின் ஒன்று ஆகிய இரு பொருளிலும் வரும் தாரம் செந்தமிழ்ச் செல்வமே. ஆனால் நிகண்ட, பிங்கலம் முதலியவற்றில் பிற பொருளில் வரும் தாரம் என்ன மொழி? எனில், கூறுவோம்.
    தாரம் என்பதை வடவர், வல்லோசையானும் மெல்லோசை யானும் சொல்லிக் கொண்டனர். ஆயினும் முதல் தாரம் என்பது தான் அது ஆகுபெயர் முதலிய சார்புப் பொருள் பெற்று வந்திருக்கலாம். அவையும் தமிழரால் வந்தனவே என்று உணர்தல் வேண்டும்.
    எனவே, தாரம் என்பது தூய தமிழ்ச் சொல் என முடிக்க. இனியும் இசை இலக்கணம் தமிழினின்றே  வடவர் எடுத்தார்கள் என்பதற்குச் சில எடுத்துக் காட்டுகள் வருமாறு:
    க. இன்றைக்கு ஆயிரத்து நானூறு யாண்டின் முன் வடமொழியில் இசை நூல் இயற்றிய பரதரும், அறுநூற்றெண்பது யாண்டின் முன் இசைநூல் இயற்றிய சாரங்க தேவரும், தமிழிசையிலிருந்து எடுத்தே வடமொழிக் கண் இசை வகுக்கப்பட்டது எனக் கூறினார் என்பர், இவ்வாராய்ச்சி வல்ல விருதைச் சிவஞான யோகிகள்.
    உ. இசைத் தமிழிலிருந்தே எல்லா இசைவகைகளும் வடமொழிக்கண் சென்ற உண்மை ஆபிரகாம் பண்டிதர் மிக விரிவாக இயற்றி வெளியிட்ட கருணாமிர்த சாகரம் என்னும் இசைத் தமிழ் நூலில் நன்கு விளக்கிக் காட்டப்பட்டிருக்கின்றது.
    (குயில்: குரல்: 1, இசை: 16, 16-9-58)
    -உண்மை,1-15.11.15

    பரதர், பாரதர், பாரதம், பரதன்
    இந் நான்கு சொற்களும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. இவை தூய தமிழ்ச் சொற்களே யாதலால் இங்கு விரித்துரைக்கப்படும். தொல்காப்பியம் அகத்திணை இயல் 20ஆம் நூற்பாவின் உரையின் பகுதி வருமாறு;-- நால்வகை நிலத்துக்கும் மருவிய குலப் பெயர் ஆவன. முல்லைக்குக் கோவலர், இடையர், ஆயர், பொதுவர், இடைத்தியர், கோவித்தியர், ஆயத்தியர், பொதுவியர்.
    நெய்தற்கு நுளையர், திமிலர், பரதவர், நுளைத்தியர், பரத்தியர்.
    இதனால் நாம் அறிய ண்டுவது என்னவெனில் பரதவர் அஃதாவது பரதர் என்ற பெயர் தொல்காப்பிய காலத்திலேயே, தமிழில் வழங்கியது என்பதாகும்.
    மீனெறி பரதவர் மடமகள்
    மானேர் நோக்கம் காணா ஊங்கே
    என்ற நற்றிணையிலும் காண்க.
    இதில் வரும் பரதவர்தானா பரதவர் எனின் ஆம் என்க. பரதவர் என்பதன் பெண்பால் பரத்தியர் என வருதலை நோக்குக.
    இனி, பரதர் என்று தமிழ் நூலில் வரும் பெயர்தான் பரதர்---பரதன், பாரதர், பாரதம் என வந்ததா எனின் ஆம் ஆம் என்று கூறி, மறைமலையடிகளார் சொல்லியருளிய விளக்கத்தையும் இங்கு சுருக்கி எழுதுவோம்.
    தமிழ் மண்டலம் ஐந்தும் தாவிய ஞானம் என்ற திருமந்திரச் செய்யுள்--பஞ்ச திராவிடராகிய தமிழரின் மேம்பாட்டைக் குறிக்கின்றது. இத் தமிழர் தாம், முதன்முதலில் கடவுளைத் தீ வடிவில் வைத்து வழிபடலாயினர்.
    இவ் வைவகைத் தமிழ் மரபினர்க்கு தலைவராயிருந்து அந்நாளில், அரசு புரிந்த பரதன் என்னும் தமிழ் வேந்தன் வழியில் வந்தவர் பரதர்கள் என்று சொல்லப்பட்டனர்.
    பாரத மரபினரான தேவசிரவர், தேவபரதர் என்னும் இருவரும் பயன்மிகுந்த தீயை மிக்க வலிமையோடும் தேய்த்து உயிர்ப்பித்தனர். (இருக்கு 3--23--2)
    ஓ நெருப்பே, வலிய படைவீரர்களுடைய பழைய பரதர்கள் தமக்குப் பேரின்பம் வேண்டி நின்னையே இரந்தனர். (இருக்கு 16-6-4)
    இவ்வாறு இருக்கு மறையில் பல இடத்தில் காணப்படுகின்றன. இதனால் தமிழ் மக்கட்குத் தலைவரான பரதர்களே முதன் முதலில் தீ யெழுப்பினர், தீயின் பயன் கண்டனர். தீயே கடவுள் என்று வழிபட்டனர் என்று அறிய வேண்டும். தீயைப் பரதன் என்று சொல்லுகிறது இருக்கு மறை இரண்டாம் மண்டிலத்து ஏழாம் பதிகம்!
    அன்றியும் செந்நிறக் கடவுள் எனக் காரணப் பெயரான உருத்திரன் என்ற தமிழ் பெயருடைய கடவுளுக்கும், பரதன் என்று பெயரிட்டழைக்கிறது, மேற்படி இரண்டாம் மண்டிலத்து முப்பத்தாறாம் பதிகம். தென்னாட்டவர் கண்டறிந்தது தீக்கடவுள் என்பதுனாலன்றோ வடநூல்களில் நெருப்புக்குத் தென்றிசையங்கி தக்ஷிணாக்கிளி என்று சொல்லப்படுகிறது. இங்ஙனமாக இறைவனை நெருப்பொளியில் வைத்து வழிபடும் முறையை உணர்ந்த பரதர், பண்டை நாளில், இந்த நாவலந்தீவு முழுதும் ஒருங்கு செங்கோல் ஓச்சினராதலின், அவர் பெயரால் அது (இந்தியா) பரத கண்டம் எனப் பெயர் பெறுவதாயிற்று. இப் பரதர்கள் முதன் முதல் கடல் சார்ந்த நெய்தல் நிலத்தின் கண் இருந்து, அதன் கண் பட்டினங்கள் அமைத்து நாகரிகத்திற் சிறந்து வாழ்ந்தாராதலின் அந் நெய்தல் நிலத்து மக்கள் பரதர், பரத்தியர் எனப் பெயர் பெறலாயினர்.
    வடக்கிருந்து வந்து இந்திய நாட்டின் வடமேற்கு எல்லையில் குடியேறிய ஆரியர், நாகரிகம் இல்லாதவராய் உயிர்க்கொலை புரிந்த வரைதுறையின்றி ஊனுண்டும் கட்குடித்தும் மகளிர்ப் புணர்ந்தும் தமிழர் அருவருக்குமாறு ஒழுகினமையால் அவர்களை இந்நாட்டில் நுழையாதபடி அக்காலத்தில், எதிர்த்து நிறுத்தினர் என்று இருக்கு மூன்றாம் மண்டிலத்து 33ம் பதிகம்    கூறுகிறது.
    இன்னும் இதை விவரிக்க வேண்டாம். இங்கு கூறியவற்றால் அறியலானவை எவை?
    ஆரியர் வருமுன்னரே தமிழர் நல்ல நாகரிகத்துடன் இந் நாவலந் தீவில் எங்கணும் பரவி இருந்தனர். அக்கால், தமிழே இருந்தது. அக்கால தமிழ்ப் பெயர்களே எப்பொருட்கும் அமைந்திருந்தன. இன்றும் பண்டைய நூல்களில் காணப்படும் பரதர், என்பதே அக்காலத்தில் பரதன், பாரதன், பாரதம், பரதகண்டம் என விரிந்தது. பரதன், பரதவர் முதலிய அனைத்தும் தூய தமிழ்ச் சொற்களே என்பனவாம்.
    பாரதகண்டம் என்பதில் கண்டம் தமிழா என ஐயுற வேண்டாம். கண்டம் தூய தமிழ்ச் சொல்லே. அஃதேயுமன்றி காண்டம் என்பதும் தூய தமிழ்ச் சொல்லே. கண்டம், காண்டம் என்பன பிரிவு என்பது. கண்டம் நிலப்பிரிவு, காண்டம் நூற்பிரிவு என்க.
    (குயில்: குரல்: 1, இசை: 18, 30----09-19--58)
    -உண்மை,16-30.11.15

    வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா?


    ஓரை
    இது தூய தமிழ்ச் சொல். இராசிகளின் பொதுப் பெயர். ஆனால், வடமொழி நூலுள்ளும், கிரேக்க மொழியுள்ளும் காணப்படுதலின், வடமொழியே என்று புகலுவர். அதற்குக் காரணம் இரண்டு. தமிழரை ஏமாற்றி விடலாம் என்று அவர்கள் நினைப்பதொன்று. ஆராய்ச்சியில்லாமை மற்றொன்று.
    தொல்காப்பியத்துக் களவியல் 44_ஆம் நூற்பாவாகிய
    மறைந்த ஒழுக்கத்து ஓரையும் நாளும்
    என்பதன் கண் காணப்படும் ஓரை என்னும் சொல்லைக் கிரேக்க மொழி எனக் கொண்டு, அவ்வாற்றால் தொல்காப்பிய காலத்தையே கி.மு. மூன்றாம் நூற்றாண்டென்று கூறி மகிழ்ந்து கொள்ளும் பகைவரும் உண்டு. இதையே சிலர் வடசொல் என்று கூறிக் கொக்கரிப்பர். ஓரை என்னும் இது மட்டுமன்று. ஆயிரக்கணக்கான தமிழ்ச் சொற்களையும் வடசொல் என்றே ஏமாற்றித் திரிவார்கள், அவர்கள் யார்? தமிழ்மொழி கொண்டு தம் மொழி பெருக்கிய மொழிவெறியர். தொல்காப்பயித்துக்கு முற்பட்ட காலத்திலேயே ஓரை என்னும் சொல் வடமொழியிலேனும் கிரேக்க மொழியிலேனும் வழங்கப்பட்டிருக்குமாயின் அது அப் பிறமொழிச் சொல் எனலாம். காட்டட்டுமே!
    மறைமலையடிளார் கூறுகின்றார்: ஆராய்ந்த மட்டில் கி.பி. மூன்றாம் நூற்றாண்டாதலால் அதற்கு முற்பட்ட காலத்திலாதல் இயற்றப்பட்ட கிரேக்க ஆரிய நூற்களில் ஓரை என்னும் சொல் வழங்குவதைக் காணோம். கி.பி. ஆறாம் நூற்றாண்டில் இருந்தவராகமிகிரரால், கிரேக்கரின் வானநூல் ஆராய்ச்சியைத் தழுவி ஹோரா சாத்திரம் என்னும் ஒரு நூல் வடமொழியில் எழுதப்பட்டிருக்கிறது.
    அதைக்கொண்டு ஹோரா என்னும் சொல் கி.பி. ஆறாம் நூற்றாண்டிற்குச் சிறிது முற்பட்ட காலத்திய கிரேக்க மொழியில் வழங்கப்படாமை மட்டும் அறியப்படும்.
    கி.மு. இரண்டாம் நூற்றாண்டிலிருந்து கிரேக்க ஆசிரியரான ஹிப்பார்க்கஸ் காலத்திலேதான், கிரேக்கரின், வான் நூலாராய்ச்சி ஓர் ஒழுங்குபெறத் தொடங்கியது. அதன் பின் அது தாலமி என்பவரால் முற்றுப் பெற்றாயிற்று.
    (குயில்: குரல்: 1, இசை: 17, 23.09.1958)
    வித்தகம்
    இது தூய தமிழ்ச் சொற்றொடர். இரு சொற்களால் அமைந்தது. வித்து+அகம்.
    வித்தகம் என்பது பழந்தமிழ் நூற்களில் பல்லிடத்து எடுத்தாளப்பட்டிருக்கிறது.
    நத்தம் போற் கேடும், உளதாகும் சாக்காடும்
    வித்தகர்க்கு அல்லால் அரிது.    (குறள்)
    வித்தகப் பெண்பிள்ளை நங்காய்.                        (ஔவையார்)
    வித்து எனில் முதன்மை: காரணம், அகம் எனில் மனம். எனவே வித்தகம் (வெற்றிக்குக்) காரணமாகிய மனம் ஆற்றல்! அவ்வாற்றலும் தோல்வியடையாத ஆற்றல் ஆகும். மேற்படி குறளில் வரும் வித்தகர் என்பதற்கு பரிமேலழகரும் சதுரப்பாடு உடையவர் என்று பொருள் கூறினார்.
    சதுரப்பாடு _ -ஆற்றல்.
    வித்தகம் என்னும் இது நாளடைவில் வித்துக்கும் வழங்கலாயிற்று. அதன் அருமை காட்ட உழவர்கள் வித்து என்ற சொல்லை வித்தகம் என்றே சொல்லுவதுண்டு. மணிமேகலையில் பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை 227ஆம் அடி நெல்வித் தகத்துள் நெல்முனை தோற்றம் என்பது.
    வித்தகம் தமிழ்ச் சொற்றெடர் என்பதில் ஐயப்பாடு அடையக் காரணமே இல்லையாகவும், தமிழ் மாணவர் நலம் கருதி நாம் இதற்கு விளக்கம் தர முன் வந்தோம், இது வடசொல் என்று ஒரு நண்பர் சொன்னதால்.
    (குயில்: குரல்: 1, இசை: 20, 14.10.1958)

    - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்
    -உண்மை,1-15.12.15

    வியாழன், 3 செப்டம்பர், 2015

    தமிழறிஞர்களுக்கு உதவித் தொகை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு

    சென்னை, செப்.2_ தமிழறிஞர்கள், எல்லைக் காவலர்கள் ஆகியோருக்கு வாழ்நாள் உதவித் தொகை வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி அறிவித்தார்.
    சட்டப் பேரவையில் தமிழ் வளர்ச்சித் துறை, பள்ளிக் கல்வித் துறைகளில் மானியக் கோரிக்கை மீது செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவாதங்களுக்கு பதிலளித்து அமைச்சர் கே.சி.வீரமணி வெளியிட்ட பல்வேறு அறிவிப்புகள் வருமாறு:
    தமிழ் வளர்ச்சி- தமிழ்ப் பண்பாட்டுக்காக பெரும் தொண்டாற்றிய தமிழறிஞர்கள், எல்லைக் காவலர்கள், மரபுரிமையர்கள் என மொத்தம் 51 பேருக்கு அவர்களின் வாழ்நாள் முழுவதும் உதவித் தொகை வழங்கப்படும்.
    இதனால், அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 19.7 லட்சம் கூடுதல் செலவு ஏற்படும். வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ், மாதந்தோறும் உதவித் தொகையாக ரூ. 2,000, மருத்துவப்படி ரூ. 100-ம் அளிக்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின்கீழ், பயன்பெறும் பயனாளிகளின் எண்ணிக்கை 30-லிருந்து 50-ஆக உயர்த்தப்படும்.
    சொல்வங்கி மய்யம்: புதிதாக உருவாகி வரும் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களை உருவாக்கி அவை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். உலக அளவில் ஒரே வகையான தமிழ்ச் சொல்லை பயன்பாட்டுக்குக் கொண்டுவர "சொல் புதிது' என்ற வலைசார் சொல்வங்கி மையம் அமைக்கப்படும்.  உலகளாவிய தமிழ் அமைப்பு களுக்குத் தமிழ்ப் பணி தொடர்பான செய்திகளை எடுத்துச் செல்ல மின்னிதழ், மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் மூலம் ஏற்படுத்தப்படும் என்றார் வீரமணி.
    ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ்
    பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கு ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் திட்டம் நிகழ் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்படும். பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஒவ்வொரு பருவத் தேர்வின்போதும் தனித் தனி பதிவு எண் வழங்கும் நடைமுறை இப்போது நடைமுறையில் உள்ளது. ஒரு தேர்வருக்கு ஒரு பதிவு எண் மட்டுமே வழங்கி, அந்தப் பதிவு எண்ணைக் கொண்டே பல பருவங்களிலும் தேர்வு எழுதும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படும்.
    மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் சார்பில் 100 புதுமை யான கற்பித்தல் முறைகள், 750 கணினி வழிப்பாடப் பொருள்களையும் மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் ஆகியோர் எளிதாகப் பதிவிறக்கம் செய்ய புதிய கற்றல் இணையதளம் தொடங்கப்படும்.
    இலவச இணையதள வசதி: கன்னிமாரா பொது நூலகம், 32 மாவட்ட மய்ய நூலகங்களில் உள்ள நூலக உறுப்பினர்கள், போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப் பிக்க இலவச இணையதள வசதி ஏற்படுத்தப்படும்.
    -விடுதலை,2.9.15