பக்கங்கள்

செவ்வாய், 21 ஜனவரி, 2020

5000 வருடங்களுக்கு முன் தமிழர் நாகரிகம் சிந்து நதி தீரத்தில் பண்டைத் தமிழர் வாழ்க்கைச் சிறப்பு

சர். ஜான்மார்ஷல் கூறும் விவரம் (சா.வே.தைரியம்)

(வாசக நேயர்களே,

ஊன்றிப் படித்துப் பயன்பெற வேண்டிய முக்கியப் பகுதி இது.

இதுபற்றி தங்களது கருத்தினை சுருக்கமாக எழுதி அனுப்புமாறு வேண்டுகிறோம்.

திராவிடர் இயக்கம் - 80 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்நாடு அரசியல் களத்தின் முக்கிய நிகழ்வுகள் - வரலாறு பற்றிய காலக்கண்ணாடியாக - திராவிடத்தின் தேவைக்கான நுண்ணாடியாக இது அமையும் ஒன்று. இதற்கான தேவை - பயன் - நுகர்வு பற்றிய உங்கள் கருத்துக்கள் பெரிதும் வரவேற்கப்படுகிறது. - ஆசிரியர்)

 

பஞ்சாப் மாகாணத்தில் சிந்துநதி தீரத்திலே மகேஞ்சாதாரோ, ஹராப்பா என்னும் இடங்களிலே புராதன காலத்தில், பெரிய பட்டணங்கள் இருந்தன. பிறகு என்ன காரணத்தாலோ அவை அழிந்து மண்மேடுகளாக நேரிட்டு விட்டது. சிறிது காலத்துக்கு முன் இந்திய சர்க்காரின் புராதன ஆராய்ச்சி இலாக்கா அதிகாரிகள் அந்த மண் மேடுகளை தோண்டி பரிசோதனை செய்தார்கள். பழைய காலத்துப் பட்டணம் ஒன்று அங்கு பூமிக்குள் புதைந்து கிடப்பதாகக் காணப்பட்டது. பின்னும் ஆழமாகத் தோண்டி மண்ணை அப்புறப்படுத்திய போது பல பெரிய கட்டிடங்கள் வீடுகள் முதலியவற்றின் அடிப்பாகங்களும், அறைகளும், தெருக்க ளும் கட்டிடங்களுக்குள் பலவிதச் சாமான்களும் வெளிப் பட்டன. அந்தச் சாமான்களில் வீட்டுத் தட்டுமுட்டுகள், கத்தி, அரிவாள் தொழிற்கருவிகள், விளையாட்டுப் பொம்மைகள் முதலியன அதிக முக்கியமானவை.

ஆராய்ச்சியாளர் அவைகளைத் தற்கால முறைப்படி பரிசீலனை செய்ததில் அவை 5000 வருடங்களுக்கு முன் அங்கு பல நகரங்களைக் கட்டி நாகரிகத்துடன் வாழ்ந்து வந்த தமிழர்கள் அதாவது திராவிட மக்கள் உற்பத்தி செய்து கையாண்ட பொருள்கள் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.

ஆரியத்தனம் இந்நாட்டில் தலையெடுப்பதற்கு பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பே தமிழ் நாகரிகம் இப்பொழுது இந்தியா வெனப்படும் பரத கண்டம் முழுவதும் சிறந்து விளங்கியது என்பதை இது நிரூபித்துக் காட்டுவதாகும்.

இந்தியப் புராதன ஆராய்ச்சி இலாக்காக்காரர் மகேஞ்சோதா ரோ, ஹாரப்பா ஆராய்ச்சிகளைப் பற்றி விரிவான அறிக்கைகள் வெளியிட்டிருக்கிறார்கள், அந்த அறிக்கை களின் முன்னுரையிலே தமிழர்களின் புராதன நாகரீகச் சிறப்பைப்பற்றி ஆராய்ச்சி வல்லுநர் சர்.ஜான் மார்ஷல் பின்வருமாறு கூறுகிறார்:

"இந்தியாவிலுள்ள ஆரியரல்லாத மக்கள் (அதாவது திராவிட மக்கள்) படையெடுத்து வந்து வெற்றிகொண்ட ஆரியரை விட நாகரிகத்தில் குறைந்தவர்கள் - கிரேக்க நாட்டு அடிமைகளைப் போன்றவர்கள். அதனால் தான் அவர்களுக்கு அடிமைகள் என்று பொருள் தரும் தாசர்கள் என்று பெயர் வந்தது என்று பலர் நம்பியிருந்தார்கள்.

திராவிடர்களைப்பற்றி அவதுறு

இந்த தாசர்கள் மொழியிலும் மத விஷயங்களிலும் ஆரியருக்கு மாறுபட்டவர்கள் - கறுப்பு நிறமும் தட்டை மூக்குமுள்ள காட்டுமிராண்டிகள். ஆனால் அவர்கள் போர் வீரர்களாயிருந்தார்கள். அவர்களுக்கு ஆடுமாடுகளும் கோட்டை கொத்தளங்களும் இருந்தன என்று இருக்கு வேதபாடல்களில் இழிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஆரியர் பித்தலாட்டம்

இப்படி அந்த தாசர்கள் (திராவிடர்) கோட்டைகள் கட்டிக் கொண்டிருந்தது உண்மைதானா என்று கேட்டால் "அவைகல்லாலும் மண்ணாலும் கட்டப்பட்ட வெறும் சுவர்களேயொழிய கோட்டையுமல்ல கொத்தளமுமல்ல. ஆரியர்கள் கிராம வாழ்க்கைப் பருவத்தில் பிற்போக்கான நிலைமையில் இருக்கும்போது தாசர்கள். (திராவிடர்) கோட்டை கொத்தளங்கள் கட்டிக்கொண்டு வாழ்ந்திருக்க முடியாது" என்று வேதபுராண ஆசிரியர்கள் கருத்துச் சொல்லுவது உடல் தோற்றம், மத, சமூக நிலைமைகள் முதலிய எல்லாக் காரியங்களிலும் தாசர்கள் (திராவிடர்கள்) ஆரியர்களுக்குக் குறைந்தவர்களாகவே எண்ணப்பட்டு வந்தது. இந்தியாவின் நாகரீக உயர்வு சம்பந்தமாக அவர்க ளுக்கு (திராவிடர்களுக்கு) எவ்வித மதிப்பும் கொடுக்கப்பட வில்லை.

5000 வருடங்களுக்கு முன்பு

ஏறக்குறைய 5000 ஆண்டுகளுக்கு முன்பு ஆரியர் என்பவர்களைப் பற்றி ஒருவருக்குமே தெரியாத காலத்தில், சிந்து, பஞ்சாப்பிரதேசங்கள், மெசப்பட்டோமியா, எகிப்து தேசங் களை விட அதிக நாகரீகமுள்ளவைகளாய் விளங்கின.,

மகேஞ்சோதாரோ, ஹாரப்பா என்னுமிடங்களில் பூமி யைத் தோண்டி ஆராய்ந்தறிந்த உண்மைகள் இதை (அதா வது அக்காலத்தில் சிந்து, பஞ்சாப் பிரதேசங்களில் வாழ்ந்த திராவிட மக்களின் நாகரீகச் சிறப்பை) வெளிப்படுத்துகின்றன.

கிறிஸ்துவுக்கு முன், மூவாயிரம், நாலாயிரம் வருடங் களுக்கு முன்பு சிந்து நதி தீரத்தில் வாழ்ந்த மக்கள் (திராவிட மக்கள்) - பெரிதும் அபிவிருத்தியடைந்த உயரிய நாகரீக முள்ளவர்களாயிருந்ததாகவும் அந்த நாகரீகத்துக்கும் ஆரி யருக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாதென்றும் ஹாரப்பா, மகேஞ்சோதாரோ ஆராய்ச்சிகள் வெளிப்படுத்துகின்றன.

திராவிட நாகரீகம்

சிந்து, பஞ்சாப் பிரதேசங்களின் புராதன மக்கள் (திராவி டர்) ஒழுங்கு படுத்தப்பெற்ற நாகரீகமான சமூகமாக நகரங் களில் வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.

அவர்களுடைய வாழ்க்கைக்கும் செல்வத்துக்கும் ஆதாரமான விவசாய வியாபாரத் தொழில்கள் பெரிதும் அபிவிருத்தி பெற்றிருந்தன. நாலா திசைகளிலும் வெகுதூரம் வரையில் பரவியிருந்தது அவர்களின் வியாபாரம். கோதுமை, பார்லி முதலிய தானியங்களை பயிரிட்டு வந்ததாகவும், ஈச்ச மரம் முதலிய பழ மரத்தோட்டங்கள் வைத்திருந்ததாகவும் தெரிகிறது.

எருமை, காளை, ஆடு, பன்றி, நாய், யானை, ஒட்டகம் முதலிய மிருகங்களை அவர்கள் பழக்கி நாட்டு மிருகங் களாக்கி உபயோகித்து வந்தனர்.

மாடுகள் பூட்டிய வண்டிகள் போக்குவரவு சாதனமாக உபயோகிக்கப்பட்டுவந்தன.

கைத்தொழில் சிறப்பு

அங்கு தங்கம், வெள்ளி செம்பு, ஈயம், தகரம் முதலிய உலோகங்கள் போதிய அளவு கிடைத்துவந்தன.

அவ்விடத்திய மக்களில் பலர் உலோக வேலைப்பாடு களில் மிகவும் வல்லவர்களாயிருந்தனர்.

நூல் நூற்றலும் நெசவுத் தொழிலும் பெரிதும் விருத்திய டைந்திருந்தன.

வில், அம்பு, வேல், மழு, கண்டகோடரி, கட்டாரி, கதை முதலியன அக்காலத்தில் உபயோகிக்கப்பட்டயுத்த ஆயுதங் களாகும்.

கோடரி, அரிவாள், மரம், அருக்கு வாள் உளி, சவரக்கத்தி முதலியன வெண்கலத்திலும், செம்பிலும் செய்யப்பட்டிருந் தன.  வீட்டு உபயோகத்துக்கான பாத்திரங்கள் மண்ணினால் செய்யப்பட்டு பலவித சித்திரங்கள் வரையப் பெற்றிருந்தன.

செம்பு, வெண்கலம், வெள்ளி முதலிய உலோகங்களில் செய்த பாத்திரங்களையும் உபயோகித்து வந்திருக்கிறார்கள். செம்பு, வெள்ளி, தங்கம் முதலிய உலோகங்களில் செய்து தந்தம் அல்லது இரத்தினக்கற்களில் செய்த ஆபரணங்களை பணக்காரர்கள் போட்டுக் கொள்வது வழக்கம்.

சாதாரண மக்கள் சிப்பியில் செய்த நகைகளை அணிந்து வந்ததாகத் தெரிகிறது.

மணலும் களிமண்ணும் சேர்ந்த சாந்து, சிப்பி முதலிய வைகளால் விளையாட்டுப் பொம்மைகள் செய்யப்பட்டன.

கல்விச் சிறப்பு

சிந்து, பஞ்சாப் பிரதேச புராதன (திராவிட) மக்களுக்கு எழுதவும் படிக்கவும் தெரிந்திருந்தது; அவர்களின் எழுத்து இந்தியாவில் தனிச்சிறப்புள்ளது.

பருத்தியைக் கொண்டு நூல் நூற்று, துணி நெய்வது முதல் முதலாக இந்த (திராவிட) மக்களுக்குத் தான் தெரிந் திருந்தது. அவர்களிடமிருந்து தான் மேற்குறித்த காலத்துக்கு 2000, 3000 வருடங்களுக்குப் பின் மேற்கு ஆசியாவிலுள்ள வேறு நாட்டினர் பருத்தியிலிருந்து துணி நெய்கிற வித்தையைக் கற்றுக் கொண்டார்கள். மகேஞ்சோதாரோவில், பொது மக்கள் வசிப்பதற்காகக் கட்டப்பெற்ற பெரிய பெரிய வீடுகளும் குளிப்பறைகளும் காணப்படுகின்றன. சலதாரை களும் உண்டு.

இவ்வாறே ஆலயம், அரண்மனை, சமாதி முதலியனவும் கட்டப்பட்டிருந்திருக்க வேண்டும்.

அந்தக்காலத்தில் நாகரீகமடைந்திருந்த மற்ற நாடுகளை விட மகேஞ்சோதாரோ பிரதேச (திராவிட) மக்கள் அதிக நாகரீகமும் வாழ்க்கை வசதிகளும் உள்ளவர்களாய் இருந் தார்கள் என்பதற்கு அங்கு காணப்படும் விசாலமான வீடுக ளும், குளிக்கிற அறைகளும் சலதாரைகளுமே போதிய சான்றாகும்.

மகேஞ்சோதாரோவில் கண்டு பிடிக்கப்பட்ட இந்த உண்மைகள் கீழ்த்திசை நாடுகளின் புராதன சரித்திரத்தி லேயே ஓர் புரட்சியை உண்டாக்கத் தக்கவை.

மகேஞ்சோதாரோ ஆராய்ச்சியினால் ஆச்சரியப்படத் தக்க இந்த நாகரீகத்தின் ஓர் பகுதி மாத்திரம் வெளிப் பட்டிருக்கிறது. மகேஞ்சோதாரோவில் இதுவரை வெட்டி ஆராய்ச்சி செய்யபட்ட நகரங்களுக்குக் கீழே அதிலும் புராதனமான நகரங்கள் புதைந்து கிடக்கின்றன. ஆனால் அடியிலிருந்து வெள்ளம் பீரிட்டு வருவதால் அவற்றைத் தோண்டிப்பார்க்க முடியவில்லை. சிந்துவின் மற்றப்பாகங் களிலும், பலுச்சிஸ்தானிலும் தோண்டிப் பரிசோதித்தால் அவைகளைப்பற்றி விவரங்கள் வெளிப்படக்கூடும்.

இன்னொரு முக்கிய சிறப்பு என்னவென்றால் மகேஞ்சோதாரோ, ஹாரப்பாப் பிரதேச நாகரீகம் அப்பொழுதுதான் ஆரம்பித் ததல்ல. அதற்குமுன் பல்லாயிரம் வருடங்க ளுக்குமுன்பு இந்தியாவிலேயே தோன்றி வளர்ந்த நாகரீ கமாகும்.

மேற்கண்ட ஆராய்ச்சி முடிவுகள் தமிழ் நாகரீகத்தின் தொன்மையையும் சிறப்பையும் தெளிவாக எடுத்துக் காட்டு கின்றன. இந்தியாவின் புராதன நாகரீகம் தமிழ் நாகரீகமே என்றும், தமிழ் நாகரிகமும் தமிழரும் வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு வராமல் புராதன காலத்திலேயே இந்தியாவில் தமிழகத்திலே தோன்றி வளர்ந்தவர்களென்றும் ஏற்கனவே எடுத்துக்கூறியிருக்கிறோம். மகேஞ்சோதாரோ ஆராய்ச்சி அவ்வுண்மைகளையே வற்புறுத்துகிறது.

- விடுதலை: 19.3.1940

- விடுதலை நாளேடு 13 1 20

வாழ்த்துகள் - வாழ்த்துக்கள் எது சரி!

ஒருவர் வாழ்த்துக்கள் என்கிறார். இன்னொருவர் வாழ்த்துகள் என்கிறார்.
 
இரண்டில் எது சரியானது? அடுத்து பொங்கல் வரவிருக்கிறது. பொங்கல் வாழ்த்துக்கள் சொல்ல வேண்டுமா , வாழ்த்துகள் சொல்ல  வேண்டுமா?
 
இதைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் குற்றியலுகரம் என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும்.
 
உ என்ற ஓசையில் சில சொற்கள் முடிகின்றன அல்லவா? ( பசு , பந்து போன்றவை ) . இவை தன் இயல்பான நிலையில் இருந்து குறைந்து ஒலித்தால் குற்றியலுகரம். அதிகரித்து ஒலித்தால் முற்றிய லுகரம்.
 
இந்த குற்றிய லுகரத்திலேயே பல வகைகள் இருக்கின்றன..
 
நெடில் தொடர் குற்றியலுகரம் - உதாரணம் : மாடு , பாகு
ஆயுதத் தொடர் குற்றியலுகரம் - உதாரணம் : எஃகு
உயிர்த் தொடர் குற்றியலுகரம் - உதாரணம் : வரகு, வரவு, செலவு, மிளகு
வன் தொடர் குற்றியலுகரம் - உதாரணம் : கொக்கு , மக்கு, பாக்கு, சாக்கு
மென் தொடர் குற்றியலுகரம் - உதாரணம் : சங்கு, பங்கு, பந்து, அம்பு, வம்பு
இடைத் தொடர் குற்றியலுகரம்- உதாரணம்: எய்து, அல்கு
 
எந்த சொற்களுக்கு பின் க் ச் ப் என்ற புள்ளி வைத்த எழுத்து வரும் என எளிதாக நினைவு வைத்து கொள்வது எப்படி?
 
இலக்கணம் எல்லாம் இல்லாமல் எளிதாக பார்க்கலாம்.
 
 1 நெடில் எழுத்தில் ஆரம்பிக்கும் இரண்டு சொல் சொற்களுக்கு பின் , புள்ளி வைத்த எழுத்து வராது..
 
உதாரணம்.. மாடு , ஆடு ....    இதில் ஆடுகள் , மாடுகள் என்று வருமே தவிர ஆடுக்கள் , மாடுக்கள் என்று வராது..
 
2 பசு , மரு, கணு போன்று குறில் எழுத்தில் ஆரம்பிக்கும் சொற்களுக்கு பின் ,புள்ளி வைத்த எழுத்து வரும்..
 
பசுக்கள், மருக்கள், கணுக்கள் ( பசுகள், கணுகள் என எழுதக் கூடாது  ) 
 
2 குறில் எழுத்துக்கு பின் வரும் உகார எழுத்துக்கு பிறகு புள்ளி வைத்த எழுத்து வராது..
 
செலவு, வரவு-  செலவுகள், வரவுகள் என்று எழுத வேண்டும்
 
 
3 க் ச் ட் த் ப் ற் போன்ற எழுத்துகளுக்கு பின் வரும் உகார எழுத்தை தொடர்ந்து புள்ளி வைத்த எழுத்து வராது..
 
வாக்கு - வாக்குகள் ( வாக்குக்கள் அன்று )
 
கணக்கு - கணக்குகள்  
 
நாக்கு - நாக்குகள்
 
 
வாத்து- வாத்துகள்
 
 வாழ்த்து  - வாழ்த்துகள் ( வாழ்த்துக்கள் என்பது தவறு )
 
உதாரணமாக தோப்புகள் என்பது தோப்பு என்ற சொல்லின் பன்மை.
 
தோப்புக்கள் என்றால் தோப்பில் இருந்து உருவாக்கப்பட்ட கள் என அர்த்தம்
 
 
அதே போல வாழ்த்துக்கள் என்று சொன்னால், புதிய வகை கள் என்ற அர்த்தம்தான் தொனிக்கும்.
 
வாழ்த்துகள் என்பதே வாழ்த்து என்பதன் பன்மை வடிவம் 
 
சரியா?
 
வாழ்த்துகள் சொன்ன , வாழ்த்துக்கள் சொன்ன அனைவருக்கும் என்    நன்றியையும் ,  வாழ்த்துகளையும்  தெரிவித்துக் கொள்கிறேன்.
- கட்செவியில் வந்தது

சுறவம் (தை) முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டின் தொடக்க நாள்

சுறவம் (தை) முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டின் தொடக்க நாள் (திருவள்ளுவர் ஆண்டு 2048 தொடக்கம்), பொங்கல் நாள், தமிழர் திருநாள்.

தமிழ்ப்புத்தாண்டுத் தொடக்கம் தை முதல்நாளே (சுறவம்) என்று சொன்னவர்கள் யாரெல்லாம் தெரியுமா தமிழா உமக்கு?

01. மறைமலை அடிகளார் (1921)
02. 500 தமிழறிஞர்கள் (1921)
03. தேவநேயப் பாவாணர்
04. பெருஞ்சித்திரனார்
05. இ.மு. சுப்பிரமணியனார்
06. மு.வரதராசனார்
07. இறைக்குருவனார்
08. வ. வேம்பையனார்
09. பேராசிரியர் தமிழண்ணல்
10. வெங்காலூர் குணா
11. கதிர். தமிழ்வாணனார்
12. சின்னப்பத்தமிழர்
13. கி.ஆ.பெ. விசுவநாதர்
14. திரு.வி.க
15. பாரதிதாசனார்
16. கா.சுப்பிரமணியனார்
17. ந.மு.வேங்கடசாமியார்
18. சோமசுந்தர் பாரதியார்
19. புலவர் குழுவினர் (1971)
20.பேராசிரியர் கா.நமசிவாயர்
21. பெரியார்
22. தமிழக அரசாணை (1971,2008)

மலையகத்தில்

01. கோ.சாரங்கபாணியார்
02. சா.சி. குறிஞ்சிக்குமரனார்
03. அ.பு.திருமாலனார்
04. பேராசிரியர் இர.ந. வீரப்பனார்
05. கம்பார் கனிமொழி குப்புசாமி
06. மணி. வெள்ளையனார்
07. திருமாறன்
08. இரெ.சு.முத்தையா
09. இரா. திருமாவளவனார்
10. இர. திருச்செல்வனார்

தகவல்: இரகு முனியாண்டி

செவ்வாய், 14 ஜனவரி, 2020

வாழ்வோடு பிணைந்த வண்டமிழர் விழா


தமிழர் தம் விழாக்கள் ஒளியுள்ள நாள்களில் கொண்டாடப்பெற்றன. தமிழர் மங்கல நிகழ்ச்சிகளாகிய திருமணங்கள், திருவிழாக்கள் ஆகியவையும் முழுமதி நாளில்தான் அயரப் (கொண்டாடப்) பெற்று வருகின்றன.

இதற்கு அகநானூறு இரண்டாம் பாட்டும், 86, 136 ஆம் எண் பாடல்களும் தக்க சங்க இலக்கிய அகச் சான்றுகளாகும். புத்தருடைய பிறந்த நாளும் மகாவீரர் பிறந்த நாளும் முழு நிலவு நாளில் கொண் டாடப் பெறுவது, இக்கருத்திற்கு அரண் பயப்பதாகும். - பாரி பறம்பின் பனிச்சுனைத் தெண்ணீர் தைஇத் திங்கள் தண்ணிய தரினும் வெய்ய உவர்க்கும் என்றனள் - என்ற அகப் பொருட் கூற்று, தைமதிய (திங்கள்) உயரிய நிலையினைப் பொருந்திய நிலையினை எடுத்துக் காட்டும்.

தேமதியத் திருநாள் அறுவடை நாள். இது ஆண்டு முழுமைக்கும் வேண்டிய உணவு, உடை போன்ற வாழ்வின் அடிப்படைத் தேவைகளையும் வழங்கும் பொருளியல் விழாவாகவும் பொலிகிறது உலக முழுவதும்.

தை முதல் நாள் விழாவினை அடுத்து மறுநாள் மஞ்சு விரட்டு என்ற வீர விளை யாட்டுவிழா நடைபெறுகிறது. இதனை ஏறுதழுவுதல் என்று கலித்தொகை கூறுகிறது.

*கொல் ஏற்றுக் கோடு அஞ்சுவனை

எழுமையும் புல்லாளே ஆயமகள்....*

இந்த ஏறு தழுவுதல், தை முதல் நாளை அஃதாவது, பொங்கல் விழாவினை யொட்டி மறுநாள் நடைபெறும் தமிழர் வீர விளையாட்டாகும். இது புறத்தின் பாற்படும்.

தை முதல் நாள் நிகழ்ச்சி அக நிகழ்ச்சி மஞ்சு விரட்டு என்ற ஏறுதழுவுதல் புறத் தினை நிகழ்ச்சி.

இங்ஙனம்  அகமும் புறமும் கைகோத்துக் களிநடனம் புரியும் கன்னித் தமிழ்த் திருநாள் நிகழ்ச்சிகள். இவற்றிற்குத் தை முதல் நாள் ஆற்றுப்படை பாடுகிறது. மார் கழிக் கடுங்குளிரும் பனியும் நீங்கிக் கதிர வன் தோன்றிக் களிப்பு நல்கும் நான்கை முதல் நாள் தை பொங்கலிட்டுப் புத்தாடை. புனைந்து ஒளியூட்டு வழி நாட்டும் கதிரவனை வழிபட்டுக் கடமையாற்றும் பணி தொடங்கும் நாள் தை முதல் நாள்.

இத் தை மதியம் பற்றிச் சங்கக் காலத்தில் பரிபாடலிலும், இடைக்காலத் தமிழ் இலக்கி யங்களிலும் பேசப்படுகிறது. மக்களின் அன்றாட நடப்பியல் வாழ்வோடு ஒன்றித் திளைக்கும் செயல்களுக்குப் பாயிரம் பாடுவது தை முதல் நாள். இயற்கை யோடு இயைந்து வாழ்வு நடத்தும் தமிழர்களின் இயற்கைத் திருவிழா பொங்கல் விழா.

“கை புனைந்து இயற்றாக் கவின்பெரு வனப்பு" என்று திருமுருகாற்றுப்படை பாடும் அடிகளுக்கு அகச் சான்று நல்கும் விழா தைப் பொங்கல் விழா.

இங்ஙணம் மக்கள் வாழ்வோடு மின்னிக் கொண்டும், பின்னிக் கொண்டும் விளங்கும் வாழ்வியல் நிலைக்குப் பாயிரம் பாடும் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்க நாள் என்பது தெள்ளிதின் புலனாகும். அறிவியல்  அடிப்படையில் இது ஏற்றத் தக்கதுமாகும்.

- விடுதலை ஞாயிறு மலர், 11.1.20

தமிழ்ப் புத்தாண்டு

- நாரண. துரைக்கண்ணன் -

தைப்பொங்கல் திருநாள் தமிழர்களாகிய நமக்குப் புத்தாண்டுத் தொடக்க நாளாகும். வடநாட்டாருக்குத் தீபாவளி வருடப்பிறப்புப் போல, தமிழ் நாட்டாருக்குப் பொங்கல், புத்தாண்டுப் பிறப்பாகும். இடைக்காலத்தில் ஆரியர் தொடர்பால், தை மாதத்திற்குப் பதிலாக, சித்திரை மாதம் புது ஆண்டு மாதமாகிவிட்டது.

சூரியன் தட்சிணாயனத்திலிருந்து அதாவது தென் திசையிலிருந்து உத்தராயனத்துக்கு அதாவது வடதிசைக்கு வரும் பருவ மாறுதலை வைத்தே ஆண்டுத் தொடக்கத்தை வரையறுத்தார்கள். இயற்கை வழி வாழ்க்கை நடத்திய நம் மூதாதையர்.

இவற்றையெல்லாம் பார்க்கும் போது தைப் பொங்கல் விழா தமிழர் மட்டுமல்லர். தென்னாட்டில் வாழும் பல இனத்தினரும் மட்டுமல்லர்; இந்தியா முழுவதிலுமுள்ள எண்ணற்ற இனத்தினர் மட்டு மல்லர், உலக மக்கள் அனைவருமே கொண்டாடத் தக்க    ஒப்பற்ற தேசியத் திருவிழாவாகும். சர்வதேசங் களிலுள்ள சகல இனத்தினரும், மொழியினரும் உவந்து கொண்டாட வேண்டிய ஈடு இணையற்ற திரு நாளாகும்.

பசியும், பிணியும் நீங்கி நல்வாழ்வு வாழ சூரியன் திசை மாறுவது போல, நம் வாழ்க்கையைப் பிடித் துள்ள வறுமையும் மிடிமையும் (சோம்பலையும்) மற்றும் துன்பங்களையும் மாற்றி வாழ்வில் செழுமை உண்டாக்கும் பொங்கல் திருநாளைப் பூரிப்புடன் நாம் அனைவரும் கொண்டாடுவோமாக!

-  விடுதலை ஞாயிறு மலர், 11.1.20

திங்கள், 13 ஜனவரி, 2020

தந்தை பெரியாரும் திருக்குறளும்

திருக்குறளை பரப்புவதில் தந்தை பெரியார் 1929 முதல் முயற்சி எடுத்துக் கொண்டிருந்தார்.

எட்டணாவுக்குத் திருக்குறள் (மூல நூல்) 'திராவிடன் பதிப்பகம், 14

மவுண்ட் ரோட், சென்னை' என்னும் முகவரியில் கிடைக்குமாறு ஏற்பாடு செய்யப் பட் டது. ('குடிஅரசு' : 24.12.1929)

அதுபோன்றே 1953 ஜனவரி வாக்கில் திருக்குறள் மலிவுப் பதிப்புக் கிடைக்கும் என்று விளம்பரம் செய்தார் பெரியார்.

1953இல் 170 பக்கமுள்ள பாக்கெட் சைஸ் திருக்குறள் புத்தகம் திராவிடன் அச்சகத்தில் பதிப்பித்தது. விலை அணா 6. தேவை உள்ளோர் முந்திக் கொள்ளவும் என்னும் விளம்பரம் 'விடுதலை செயலகம்' எனும் பெயரில் வெளியானது (07.01.1953)

பத்து நாள் சென்று குறிப்பு எனப் போட்டு 'விடுதலை'யில் வெளிவந்த விளம்பரம் புதிய செய்தியொன்றை அறிவித்தது. நேற்று வரையில் விளம் பரத்தில் குறள் விலை 6 அணா என்று போடப்பட்டிருந்தது. பிறகு கொள்முதல் பார்த்ததில் விலையில் சிறிது குறைக்கலாம் என்று தெரிய வந்தது. ஆகவே விலையை இப்போது 5 அணாவாகக் குறைத்திருக்கிறோம்.

5 அணாவுக்குத்தான் ஏஜண்டுகள் விற்க வேண்டும் என்பதே அது. ('விடுதலை', 17.01.1953) சான்றாண்மை நிரம்பிய இவ்விந்தைச் செய்தி, பெரியாருக்கு குறளைப் பரப்புவதில் இருந்த ஆர்வத்தை அறிந்து நம்மை மலைக்க வைக்கிறது.

தகவல் : இறைவி இறையன்

- விடுதலை நாளேடு, 11.1.20

கடல் கடந்த தமிழ்

புலவர்

செ. இராசு எம். ஏ., பி.எச்.டி

சங்க இலக்கியங்களில் மேலை, கீழை நாடுகள் தொடர்பான சில செய்திகள் இடம்பெற்றுள்ளன.

“யவனர் தந்த வினைமாண் நன்கலம் பொன்னொடு வந்து கறியொடு பெயரும்” (அகநானூறு 149) “யவனர் நன்கலம் தந்த தண்கமழ் தேறல்” (புறநா னூறு 56) "யவனர் ஓதிம விளக்கு” (பெரும் பாணாற்றுப்படை 315) “யவனர் இயற்றிய வினைமாண் பாவை” (நெடுநல்வாடை 101) “வலிபுணர் யாக்கை வன்கண் யவனர்” (முல்லைப்பாட்டு 61)

என்பன சங்க இலக்கியத் தொடர்கள். “யவனர் இருக்கை” “யவனத் தச்சர்” போன்ற தொடர்களும் உள்ளன. யவனர் என்பது ரோம் நாட்டவரையும், அரேபி யரையும் குறிக்கும் பொதுச்சொல்.

தமிழ்நாட்டில் ரோமானியர் பொன், வெள்ளி நாணயங்களும், ரோமரின் அரிட்டைன் வகை ஓடுகளும், அம் போரா மதுக்குடமும் , சுடுமண் பொம் மைகளும் பல கிடைத்துள்ளன.

குதிரைகளும் கடல் வழியாக வந்துள்ளன.

“நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்” என்பது பட்டினப்பாலைத் தொடர் (185) இவை மேலை நாட்டுத் தொடர்பு.

கீழை நாட்டுத் தொடர்பு குறித்து “காழகத்து ஆக்கம்''

“குணகடல் துகிர்” (பட்டினப்பாலை (190, 192) என்ற தொடர்கள் கூறுகின்றன.

அதியமான் மரபினர் கீழை நாட்டிலிருந்து கொண்டுவந்து கரும் பைத் தமிழகத்தில் அறிமுகம் செய்தனர் என்பர்.

“அரும்பெறல் மரபின் கரும்பு இவண் தந்தும்” என்பது புறநானூற்றுத் தொடர் (99).

மேலை, கீழை நாட்டுச் சான்றுகன் தமிழகத்தில் கிடைப்பன போன்று அந் நாடுகளில் தமிழ்ச் சான்றுகள் இருத்தல் வேண்டும்.

தொல்காப்பியத்திலேயே கடல் பயணம் குறிக்கப்படுகிறது. “கலத்தில் சேரல்” “முந்நீர் வழக்கம்” என்பன கடல் பயணம் தொடர்பான தொல்காப்பியத் தொடர்கள், பிற நாட்டார் கடல்கரை ஓரமே பயணம் செய்தபோது அலை கடல் நடுவுள் பலகலம் செலுத்தியவர்கள் தமிழர். காற்றின் போக்கு அறிந்து கடலில் பயணம் செய்த முதல் இனம் தமிழ் இனம்.

“நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி வளிதொழில் ஆண்ட” மக்கள் தமிழர்

இதை உறுதிப்படுத்தும் வண்ணம் அண்மைக் காலத்தில் மேலை, கீழை நாடுகளில் பல தமிழ்ச் சான்றுகள் 20 கிடைத்துள்ளன.

தமிழர்கள் படகு, தோணி, ஓடம், அம்பி, திமில், கலம், மரக்கலம், புணை, கட்டுமரம், கப்பல், நாவாய், வங்கம் என பலவற்றில் கடல் பயணம் மேற்கொண் டுள்ளனர்.

கீழே மேலை, கீழை நாடுகளில் கிடைத்த பல தமிழ்ச் சான்றுகள் கொடுக் கப்பட்டுள்ளன.

1. எகிப்து நாட்டுச் செங்கடற் கரையில் உள்ள பழம்பெரும் ஊர் குவாசிர்

அல் காதிம் (QUSEIR AL QADIM) என்ற ஊர், அங்கு அமெரிக்க நாட்டுத் தொல்லியல் நிபுணர்கள் நடத்திய அகழாய்வில் பழந்தமிழில் “கணன்” “சாதன்” என்று பொறிக்கப்பட்ட பானை ஓடு கிடைத்துள்ளது, அச்சொற்களைக் கண்ணன் “சாத்தன்” என்று பொருள் கொள்ள வேண்டும் என்பது தொல்லியல் அறிஞர்கள் கருத்தாகும்.

2. அதே ஊரில் இங்கிலாந்து நாட்டுத் தொல்லியல் நிபுணர்கள் நடத்திய

அகழாய்வில் “பனை ஓறி” என்று இரு முறை பழந்தமிழில் எழுதப்பட்ட பானை ஓடு கிடைத்துள்ளது.

3. அதே செங்கடற்கரையில் உள்ள பெறனிகே (BERENIKE) என்னும் ஊரில் நடைபெற்ற அகழாய் வில் பழந்தமிழ் எழுத்தில் “கொறபூமான் “ என்று எழுதப் பட்ட பானை ஓடு ஒன்று கிடைத்துள்ளது, அய்ராவதம் மகாதேவன் “கொற” என்ற சொல் பிடிக்காததினாலோ என்னவோ வலிந்து இப்பொறிப்பை “கொ(ற்)ற பூமான்” என்று படிக்க வேண்டும் என்று கூறினார்.

4. ஓமன் நாட்டில் கோர் ரோரி (KHOR RORI) என்னும் ஊரில் நடைபெற்ற

அகழாய்வில் பழந்தமிழில் “ணந்தை கீரன்” என்று எழுதப்பட்ட பானை ஓடு கிடைத்துள்ளது.

5. தாய்லாந்து நாட்டில் குவான் லுக் பாப் என்ற இடத்தில் நடைபெற்ற அகழாய்வில் வசந்தமிழில் “பெரும் பத்தன் கல்” என்று பழந்தமிழ்ப் பொறிப் புடன் பொன் மாற்றுக் காணும் உரைகல் ஒன்று கிடைத்துள்ளது.

6. தாய்லாந்து நாட்டில் பூ கா தாங் (PHU KHAU THONG) என்ற இடத்தில் “தூதோன்” என்று பழந்தமிழில் பொறிக்கப்பட்ட பானை ஓடு கிடைத் துள்ளது. அய்ராவதம் மகாதேவன் “துறவோன்’’ என்று தவறாகப் படித் துள்ளார். “தூ” முதல் எழுத்து நெடிலாகத் தெளிவாக உள்ளது. இரண்டாம் எழுத்து ற என்று படிக்க இயலாமல் த என்று தெளிவாக உள்ளது.

7. வியன்னா தேசிய நூலகத்தில் சேரநாட்டு முசிறி வணிகனுக்கும் அலெக் சாண்டிரிய வணிகனுக்கும் ஏற்பட்ட ஒப்பந்தம் குறித்த ஒரு அரிய காகித ஆவணம் கிடைத்துள்ளது. கிரேக்க மொழியிலும் பிராமியிலும் அது எழுதப்பட்டுள்ளது. தமிழக வணி கர்கள் கொண்டு சென்ற பொருள்கள் பல குறிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்திலிருந்து வண்ணக் கல் மணிகள் (குறிப்பாக பச்சை, நீலக்கற்கள் பெரில், அக்குவா மெரினா), தேக்கு அகில், சந்தனம், மிளகு, ஏலம், இரும்பு, தந்தம் போன்றவற்றை கொண்டு செல்லப்பட்டன. மிளகு யவனர்கள் மிக விரும்பிய பொருள். மிளகு யவனப் பிரியா என்று கூறப்படும்.

-விடுதலை நாளேடு, 4.1.20

5000 வருடங்களுக்கு முன் தமிழர் நாகரிகம் சிந்து நதி தீரத்தில் பண்டைத் தமிழர் வாழ்க்கைச் சிறப்பு

சர். ஜான்மார்ஷல் கூறும் விவரம் (சா.வே.தைரியம்)

(வாசக நேயர்களே,

ஊன்றிப் படித்துப் பயன்பெற வேண்டிய முக்கியப் பகுதி இது.

இதுபற்றி தங்களது கருத்தினை சுருக்கமாக எழுதி அனுப்புமாறு வேண்டுகிறோம்.

திராவிடர் இயக்கம் - 80 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்நாடு அரசியல் களத்தின் முக்கிய நிகழ்வுகள் - வரலாறு பற்றிய காலக்கண்ணாடியாக - திராவிடத்தின் தேவைக்கான நுண்ணாடியாக இது அமையும் ஒன்று. இதற்கான தேவை - பயன் - நுகர்வு பற்றிய உங்கள் கருத்துக்கள் பெரிதும் வரவேற்கப்படுகிறது. - ஆசிரியர்)

 

பஞ்சாப் மாகாணத்தில் சிந்துநதி தீரத்திலே மகேஞ்சாதாரோ, ஹராப்பா என்னும் இடங்களிலே புராதன காலத்தில், பெரிய பட்டணங்கள் இருந்தன. பிறகு என்ன காரணத்தாலோ அவை அழிந்து மண்மேடுகளாக நேரிட்டு விட்டது. சிறிது காலத்துக்கு முன் இந்திய சர்க்காரின் புராதன ஆராய்ச்சி இலாக்கா அதிகாரிகள் அந்த மண் மேடுகளை தோண்டி பரிசோதனை செய்தார்கள். பழைய காலத்துப் பட்டணம் ஒன்று அங்கு பூமிக்குள் புதைந்து கிடப்பதாகக் காணப்பட்டது. பின்னும் ஆழமாகத் தோண்டி மண்ணை அப்புறப்படுத்திய போது பல பெரிய கட்டிடங்கள் வீடுகள் முதலியவற்றின் அடிப்பாகங்களும், அறைகளும், தெருக்க ளும் கட்டிடங்களுக்குள் பலவிதச் சாமான்களும் வெளிப் பட்டன. அந்தச் சாமான்களில் வீட்டுத் தட்டுமுட்டுகள், கத்தி, அரிவாள் தொழிற்கருவிகள், விளையாட்டுப் பொம்மைகள் முதலியன அதிக முக்கியமானவை.

ஆராய்ச்சியாளர் அவைகளைத் தற்கால முறைப்படி பரிசீலனை செய்ததில் அவை 5000 வருடங்களுக்கு முன் அங்கு பல நகரங்களைக் கட்டி நாகரிகத்துடன் வாழ்ந்து வந்த தமிழர்கள் அதாவது திராவிட மக்கள் உற்பத்தி செய்து கையாண்ட பொருள்கள் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.

ஆரியத்தனம் இந்நாட்டில் தலையெடுப்பதற்கு பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பே தமிழ் நாகரிகம் இப்பொழுது இந்தியா வெனப்படும் பரத கண்டம் முழுவதும் சிறந்து விளங்கியது என்பதை இது நிரூபித்துக் காட்டுவதாகும்.

இந்தியப் புராதன ஆராய்ச்சி இலாக்காக்காரர் மகேஞ்சோதா ரோ, ஹாரப்பா ஆராய்ச்சிகளைப் பற்றி விரிவான அறிக்கைகள் வெளியிட்டிருக்கிறார்கள், அந்த அறிக்கை களின் முன்னுரையிலே தமிழர்களின் புராதன நாகரீகச் சிறப்பைப்பற்றி ஆராய்ச்சி வல்லுநர் சர்.ஜான் மார்ஷல் பின்வருமாறு கூறுகிறார்:

"இந்தியாவிலுள்ள ஆரியரல்லாத மக்கள் (அதாவது திராவிட மக்கள்) படையெடுத்து வந்து வெற்றிகொண்ட ஆரியரை விட நாகரிகத்தில் குறைந்தவர்கள் - கிரேக்க நாட்டு அடிமைகளைப் போன்றவர்கள். அதனால் தான் அவர்களுக்கு அடிமைகள் என்று பொருள் தரும் தாசர்கள் என்று பெயர் வந்தது என்று பலர் நம்பியிருந்தார்கள்.

திராவிடர்களைப்பற்றி அவதுறு

இந்த தாசர்கள் மொழியிலும் மத விஷயங்களிலும் ஆரியருக்கு மாறுபட்டவர்கள் - கறுப்பு நிறமும் தட்டை மூக்குமுள்ள காட்டுமிராண்டிகள். ஆனால் அவர்கள் போர் வீரர்களாயிருந்தார்கள். அவர்களுக்கு ஆடுமாடுகளும் கோட்டை கொத்தளங்களும் இருந்தன என்று இருக்கு வேதபாடல்களில் இழிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஆரியர் பித்தலாட்டம்

இப்படி அந்த தாசர்கள் (திராவிடர்) கோட்டைகள் கட்டிக் கொண்டிருந்தது உண்மைதானா என்று கேட்டால் "அவைகல்லாலும் மண்ணாலும் கட்டப்பட்ட வெறும் சுவர்களேயொழிய கோட்டையுமல்ல கொத்தளமுமல்ல. ஆரியர்கள் கிராம வாழ்க்கைப் பருவத்தில் பிற்போக்கான நிலைமையில் இருக்கும்போது தாசர்கள். (திராவிடர்) கோட்டை கொத்தளங்கள் கட்டிக்கொண்டு வாழ்ந்திருக்க முடியாது" என்று வேதபுராண ஆசிரியர்கள் கருத்துச் சொல்லுவது உடல் தோற்றம், மத, சமூக நிலைமைகள் முதலிய எல்லாக் காரியங்களிலும் தாசர்கள் (திராவிடர்கள்) ஆரியர்களுக்குக் குறைந்தவர்களாகவே எண்ணப்பட்டு வந்தது. இந்தியாவின் நாகரீக உயர்வு சம்பந்தமாக அவர்க ளுக்கு (திராவிடர்களுக்கு) எவ்வித மதிப்பும் கொடுக்கப்பட வில்லை.

5000 வருடங்களுக்கு முன்பு

ஏறக்குறைய 5000 ஆண்டுகளுக்கு முன்பு ஆரியர் என்பவர்களைப் பற்றி ஒருவருக்குமே தெரியாத காலத்தில், சிந்து, பஞ்சாப்பிரதேசங்கள், மெசப்பட்டோமியா, எகிப்து தேசங் களை விட அதிக நாகரீகமுள்ளவைகளாய் விளங்கின.,

மகேஞ்சோதாரோ, ஹாரப்பா என்னுமிடங்களில் பூமி யைத் தோண்டி ஆராய்ந்தறிந்த உண்மைகள் இதை (அதா வது அக்காலத்தில் சிந்து, பஞ்சாப் பிரதேசங்களில் வாழ்ந்த திராவிட மக்களின் நாகரீகச் சிறப்பை) வெளிப்படுத்துகின்றன.

கிறிஸ்துவுக்கு முன், மூவாயிரம், நாலாயிரம் வருடங் களுக்கு முன்பு சிந்து நதி தீரத்தில் வாழ்ந்த மக்கள் (திராவிட மக்கள்) - பெரிதும் அபிவிருத்தியடைந்த உயரிய நாகரீக முள்ளவர்களாயிருந்ததாகவும் அந்த நாகரீகத்துக்கும் ஆரி யருக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாதென்றும் ஹாரப்பா, மகேஞ்சோதாரோ ஆராய்ச்சிகள் வெளிப்படுத்துகின்றன.

திராவிட நாகரீகம்

சிந்து, பஞ்சாப் பிரதேசங்களின் புராதன மக்கள் (திராவி டர்) ஒழுங்கு படுத்தப்பெற்ற நாகரீகமான சமூகமாக நகரங் களில் வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.

அவர்களுடைய வாழ்க்கைக்கும் செல்வத்துக்கும் ஆதாரமான விவசாய வியாபாரத் தொழில்கள் பெரிதும் அபிவிருத்தி பெற்றிருந்தன. நாலா திசைகளிலும் வெகுதூரம் வரையில் பரவியிருந்தது அவர்களின் வியாபாரம். கோதுமை, பார்லி முதலிய தானியங்களை பயிரிட்டு வந்ததாகவும், ஈச்ச மரம் முதலிய பழ மரத்தோட்டங்கள் வைத்திருந்ததாகவும் தெரிகிறது.

எருமை, காளை, ஆடு, பன்றி, நாய், யானை, ஒட்டகம் முதலிய மிருகங்களை அவர்கள் பழக்கி நாட்டு மிருகங் களாக்கி உபயோகித்து வந்தனர்.

மாடுகள் பூட்டிய வண்டிகள் போக்குவரவு சாதனமாக உபயோகிக்கப்பட்டுவந்தன.

கைத்தொழில் சிறப்பு

அங்கு தங்கம், வெள்ளி செம்பு, ஈயம், தகரம் முதலிய உலோகங்கள் போதிய அளவு கிடைத்துவந்தன.

அவ்விடத்திய மக்களில் பலர் உலோக வேலைப்பாடு களில் மிகவும் வல்லவர்களாயிருந்தனர்.

நூல் நூற்றலும் நெசவுத் தொழிலும் பெரிதும் விருத்திய டைந்திருந்தன.

வில், அம்பு, வேல், மழு, கண்டகோடரி, கட்டாரி, கதை முதலியன அக்காலத்தில் உபயோகிக்கப்பட்டயுத்த ஆயுதங் களாகும்.

கோடரி, அரிவாள், மரம், அருக்கு வாள் உளி, சவரக்கத்தி முதலியன வெண்கலத்திலும், செம்பிலும் செய்யப்பட்டிருந் தன.  வீட்டு உபயோகத்துக்கான பாத்திரங்கள் மண்ணினால் செய்யப்பட்டு பலவித சித்திரங்கள் வரையப் பெற்றிருந்தன.

செம்பு, வெண்கலம், வெள்ளி முதலிய உலோகங்களில் செய்த பாத்திரங்களையும் உபயோகித்து வந்திருக்கிறார்கள். செம்பு, வெள்ளி, தங்கம் முதலிய உலோகங்களில் செய்து தந்தம் அல்லது இரத்தினக்கற்களில் செய்த ஆபரணங்களை பணக்காரர்கள் போட்டுக் கொள்வது வழக்கம்.

சாதாரண மக்கள் சிப்பியில் செய்த நகைகளை அணிந்து வந்ததாகத் தெரிகிறது.

மணலும் களிமண்ணும் சேர்ந்த சாந்து, சிப்பி முதலிய வைகளால் விளையாட்டுப் பொம்மைகள் செய்யப்பட்டன.

கல்விச் சிறப்பு

சிந்து, பஞ்சாப் பிரதேச புராதன (திராவிட) மக்களுக்கு எழுதவும் படிக்கவும் தெரிந்திருந்தது; அவர்களின் எழுத்து இந்தியாவில் தனிச்சிறப்புள்ளது.

பருத்தியைக் கொண்டு நூல் நூற்று, துணி நெய்வது முதல் முதலாக இந்த (திராவிட) மக்களுக்குத் தான் தெரிந் திருந்தது. அவர்களிடமிருந்து தான் மேற்குறித்த காலத்துக்கு 2000, 3000 வருடங்களுக்குப் பின் மேற்கு ஆசியாவிலுள்ள வேறு நாட்டினர் பருத்தியிலிருந்து துணி நெய்கிற வித்தையைக் கற்றுக் கொண்டார்கள். மகேஞ்சோதாரோவில், பொது மக்கள் வசிப்பதற்காகக் கட்டப்பெற்ற பெரிய பெரிய வீடுகளும் குளிப்பறைகளும் காணப்படுகின்றன. சலதாரை களும் உண்டு.

இவ்வாறே ஆலயம், அரண்மனை, சமாதி முதலியனவும் கட்டப்பட்டிருந்திருக்க வேண்டும்.

அந்தக்காலத்தில் நாகரீகமடைந்திருந்த மற்ற நாடுகளை விட மகேஞ்சோதாரோ பிரதேச (திராவிட) மக்கள் அதிக நாகரீகமும் வாழ்க்கை வசதிகளும் உள்ளவர்களாய் இருந் தார்கள் என்பதற்கு அங்கு காணப்படும் விசாலமான வீடுக ளும், குளிக்கிற அறைகளும் சலதாரைகளுமே போதிய சான்றாகும்.

மகேஞ்சோதாரோவில் கண்டு பிடிக்கப்பட்ட இந்த உண்மைகள் கீழ்த்திசை நாடுகளின் புராதன சரித்திரத்தி லேயே ஓர் புரட்சியை உண்டாக்கத் தக்கவை.

மகேஞ்சோதாரோ ஆராய்ச்சியினால் ஆச்சரியப்படத் தக்க இந்த நாகரீகத்தின் ஓர் பகுதி மாத்திரம் வெளிப் பட்டிருக்கிறது. மகேஞ்சோதாரோவில் இதுவரை வெட்டி ஆராய்ச்சி செய்யபட்ட நகரங்களுக்குக் கீழே அதிலும் புராதனமான நகரங்கள் புதைந்து கிடக்கின்றன. ஆனால் அடியிலிருந்து வெள்ளம் பீரிட்டு வருவதால் அவற்றைத் தோண்டிப்பார்க்க முடியவில்லை. சிந்துவின் மற்றப்பாகங் களிலும், பலுச்சிஸ்தானிலும் தோண்டிப் பரிசோதித்தால் அவைகளைப்பற்றி விவரங்கள் வெளிப்படக்கூடும்.

இன்னொரு முக்கிய சிறப்பு என்னவென்றால் மகேஞ்சோதாரோ, ஹாரப்பாப் பிரதேச நாகரீகம் அப்பொழுதுதான் ஆரம்பித் ததல்ல. அதற்குமுன் பல்லாயிரம் வருடங்க ளுக்குமுன்பு இந்தியாவிலேயே தோன்றி வளர்ந்த நாகரீ கமாகும்.

மேற்கண்ட ஆராய்ச்சி முடிவுகள் தமிழ் நாகரீகத்தின் தொன்மையையும் சிறப்பையும் தெளிவாக எடுத்துக் காட்டு கின்றன. இந்தியாவின் புராதன நாகரீகம் தமிழ் நாகரீகமே என்றும், தமிழ் நாகரிகமும் தமிழரும் வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு வராமல் புராதன காலத்திலேயே இந்தியாவில் தமிழகத்திலே தோன்றி வளர்ந்தவர்களென்றும் ஏற்கனவே எடுத்துக்கூறியிருக்கிறோம். மகேஞ்சோதாரோ ஆராய்ச்சி அவ்வுண்மைகளையே வற்புறுத்துகிறது.

- விடுதலை: 19.3.1940

- விடுதலை நாளேடு, 13. 1. 20