பக்கங்கள்

வியாழன், 24 அக்டோபர், 2019

‘திராவிடம்’ என்பது சமஸ்கிருதச் சொல்லா?

கால்டுவெல் கூற்றை கண்மூடி ஏற்பதா?

- மஞ்சை வசந்தன்
----------------------------------------------
“தமிழ்” என்ற பெயருக்கு நிகரான சமஸ்கிருதப் பெயர் “திராவிட என்பதாகும்” என்கிறார் கால்டுவெல்.

கால்டுவெல் இருண்டுகிடந்த மொழி வரலாற்றில் சிறு ஒளியேற்றியவர் என்பதை நாம் ஏற்கலாமே ஒழிய கால்டுவெடுல்லின் அனுமானங்கள் (யூகங்கள்) ஏற்கத்தக்கன அல்ல.

சிலர் கண்ணை மூடிக்கொண்டு கால்டுவெல்லை கரைத்துக் குடித்தவர்கள்போல், எதற்கெடுத்தாலும் கால்டுவெல் என்று காட்டுகின்றனர். ஆனால், அது தவறு.

தமிழ் என்பது உலக மொழிகளுக்கெல்லாம் மூலமொழி. உலக மொழிகள் ஆங்கிலம், கிரேக்கம், சமஸ்கிருதம் உட்பட எல்லாம் தமிழிலிருந்து வந்தவை என்பதற்கு ஏராளமான ஆதாரங்களும், ஆய்வு முடிவுகளும் உள்ளன. அந்தந்த மொழியினரே அதை ஏற்கின்றனர்.

அப்படிப்பட்ட மூலத் தொன்மொழியைக் குறிக்கும் “தமிழ்” என்ற சொல்லே சமஸ்கிதத்திலிருந்து வந்தது என்கிறார் கால்டுவெல்.

“தமிழ்”, “திராவிட” என்ற இரு சொற்களும் முற்றிலும் வேறுபடுவனவாகத் தோன்றினாலும், பிறப்பியல் முறையால் அவை ஒரு தன்மைய என்ற முடிவையையே நான் கொள்கிறேன். அவை இரண்டையும் ஒன்றெனவே கொண்டால், தமிழ் என்ற சொல்லிலிருந்து திராவிடம் என்ற சொல்லைத் தோற்றுவிப்பதைக் காட்டிலும், ‘தமிழ்’ என்ற சொல்லை திராவிட என்ற சொல்லிலிருந்து தோற்றுவிப்பதே எளிதாம் என்பது புலனாம்’’ என்கிறார் கால்டுவெல்.

ஒரு தலைசிறந்த ஆய்வாளர் என்று போற்றப்படுபவர், ஒரு மொழி சார்ந்த முதன்மையான ஆய்வில், அதுவும் அம்மொழியின் பெயர் சார்ந்த ஆய்வில் யூகங்களின் அடிப்படையில் கருத்துக் கூறியிருப்பது ஏற்புடைத்தன்று.

இவரின் முடிவுப்படிப் பார்த்தால் தமிழ் மொழியின் பெயரே (தமிழ் என்பதே) சமஸ்கிருதத்திலிருந்து வந்தது என்றாகிறது. தமிழ் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழைமை உடையது. சமஸ்கிருதம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு உட்பட்டது. அதுவும் தமிழிடம் பிச்சை பெற்று உருவாக்கப்பட்து. அப்படிப்பட்ட, பிற்காலத்தில் கட்டமைக்கப்பட்ட மொழியின் சொல்லிலிருந்து தமிழ் என்ற சொல் வந்தது என்பது நகைப்பிற்குரியது.

“தமிழ்” திராவிடம் என்று திரிந்ததா? திராவிடம் என்பதிலிருந்து தமிழ் வந்ததா? என்பதே கால்டுவெல் ஆய்வது.

அப்படி ஆய்வு செய்பவர் இன்னின்ன காரணங்களால் திராவிடம் என்பதிலிருந்து தமிழ் வந்தது என்று நிறுவ வேண்டும். அதற்கு கால வரிசைப்படியான ஆதாரங்களைக் காட்ட வேண்டும். ஆனால், அப்படி ஏதும் காட்டாமல், “தமிழ் என்ற சொல்லை திராவிடம் என்ற சொல்லிலிருந்து தோற்றவிப்பதே எளிதாம் என்பது புலனாம்” என்று கால்டுவெல் கூறுவது ஆய்வுக்கும் அழகல்ல; ஆய்வாளருக்கும் அழகல்ல.

இது  ‘எளிது’, ‘கடினம்’ என்ற அடிப்படையில் செய்யப்பட வேண்டிய ஆய்வா?

ஆய்வு என்பது அரிதின் முயன்று, ஆதாரங்களைத் திரட்டி, அய்யம் திரிபு அற அறிவிக்கப்பட வேண்டிய பொறுப்பு அல்லவா? கால்டுவெல் வார்த்தைகளே அவர் ஆய்வின் நுனிப்புல் மேய்வைக் காட்டுகிறது!

அது மட்டுமல்ல, கால்டுவெல் ஆய்வு தலைகீழ் ஆய்வு.

திராவிட என்பது தமிழிலிருந்து திரிந்தது என்பதே நேரானது. இதை மொழி ஞாயிறு தேவநேயப்பாவணர் அணுஅணுவாய் நுணுகி ஆய்வு செய்து தெளிவுபடுத்தியுள்ளார்; தெரியப்படுத்தியுள்ளார்.

“இக்கால மொழியியலும், அரசியலும் பற்றித் தமிழும், அதனின்றும் திரிந்த திராவிடமும் வேறு பிரிந்து நிற்பினும், பழங்காலத்தில் திராவிடம் என்பதெல்லாம் தமிழே. திராவிடம் என்று திரிந்தது தமிழ் என்ற சொல்லே.”

“தமிழ் - தமிழம் - த்ரமிள - திரமிட - திரவிட - த்ராவிட - திராவிடம் என்று திரிந்தது என்கிறார்.

அது மட்டுமல்ல, சமஸ்கிருத மொழியில் ‘திராவிட’ என்பதற்கு வேர்ச் சொல்லே இல்லை! இதை ஆய்வாளர்கள் ஆழமாய் உள்ளத்தில் கொள்ள வேண்டும்.

அது மட்டுமல்ல, ‘தமிழ்’ என்பது காலகாலமாக எப்படி திரிந்து திராவிடம் ஆனது என்பதற்கான காலச் சான்றுகள் வலுவாக உள்ளன.

1.            மகாவம்சம் என்ற பாலி இலக்கியத்தில் வரும் தமிள (Damila) என்ற சொல் தமிழைக் குறிக்கிறது.

2.            ஸ்வேதாம்பர சைனர் என்ற பிராகிருதி இலக்கியத்திலும் தமிள என்ற சொல் காணப்படுகிறது.

தமிட என்ற சொல் சைனர்களின் பிராகிருத மொழி இலக்கியத்தில் தவிள என்றும், ஆரம்பக் காலச் சமஸ்கிருத இலக்கியங்களில் தவிட என்றும் குறிக்கப்படுகிறது. பிற்காலத்தில் சம1கிருதம் இந்தியாவில் நன்கு வேரூன்றிய காலத்தில் தமிள, தமிட ஆகிய சொற்கள் த்ரமிள, த்ரமிட என்று சமற்கிருத உச்சரிப்பைப் பெற்றன. இதற்கு ஆதாரமாகப் பின்வரும் எடுத்துக்காட்டுகளைக் கூறலாம்.

3.            த்ரமிள என்ற சொல் வடஇந்தியாவில் பாதாமி அருகில் உள்ள மகா கூடத்துக் கற்றூண்களில் காணப்படுகிறது. இத்தூண்கள் கி.பி.597-608இல் செதுக்கப்பட்டவை.

இச்சொல் பழைய மலையாள, சமற்கிருத புராணங்களிலும், தாராநாத்தின் புத்தமத வரலாற்றிலும் காணப்படுகிறது.

த்ராவிள என்ற சொல் சைனக் கணங்கள் என்ற நூலிலும் காணப்படுகிறது.

5.            த்ரமிட என்ற சொல் தமிழ்த் திருவாய் மொழியின் சமற்கிருத மொழி பெயர்ப்பிலும் காணப்படுகிறது. பிரம்ம சூத்திரத்துக்கு உரை எழுதிய ஒருவரைக் குறிப்பிடும்போது இராமானுஜர் த்ரமிட என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார்.

இந்தத் தடயங்களை வைத்து நேர் நோக்கினால், தமிழ் திராவிடமாகத் திரிந்த பரிணாமம் புரியும். ஆனால், கால்டுவெல் தலைகீழாய் நோக்கி முடிவு கூறியது தவறு - பிழை ஆகும்.

“தமிழ்” - “திராவிட” சொல்லாய்வில் மட்டுமல்ல, பல சொற்களின் ஆய்விலும் தவறான முடிவை கால்டுவெல் வெளியிட்டுள்ளார்.

சோழர், பாண்டியர், கேரளர், ஆந்திரர், கலிங்கர் போன்ற தென்னிந்திய பெயர்கள் எல்லாம் சமஸ்கிருத சொற்களே என்கிறார்.

இவர் முடிவுப்படி எல்லாம் சமஸ்கிருதத்திலிருந்து பெப்றறவை என்கிறார். இவையும் தலைகீழ் முடிவுகளே!

கால்டுவெல்லின் முடிவுகளை பல மொழியில் ஆய்வாளர்கள் ஏற்காது மறுத்துள்ளனர். கால்டுவெல்லின் பிழையான ஆய்வு முடிவுகளை எடுத்துக்காட்டியுள்ளனர்.

ஒரு நூற்றாண்டுக்கு மேலாக, மொழியியலாளர் மராத்தி மொழி சமஸ்கிருத மொழியிலிருந்து தோன்றியதாகவும், சில கன்னட, தெலுங்குச் சொற்களைத் தவிர்த்து இம்மொழி வேறு எந்தத் தென்னிந்திய மொழிகளுடனும் தொடர்பற்றது என்றும் எண்ணி இருந்தனர். இதற்குக் காரணம் கால்டுவெல் என்ற அறிஞர் சமற்கிருதத்திலிருந்து தோன்றிய மொழிகளுள் மராத்தியும் ஒன்று என்று கூறியதே. அதனால்தான் பெரும்பாலான மராத்திய மொழிற் சொற்கள் சமற்கிருதத்திலிருந்து தோன்றியவை என்று நம்பினர். சில அடிப்படைச் சொற்கள் சமற்கிருத உச்சரிப்பை ஒத்திருப்பதால் அவை சமற்கிருதத்திலிருந்து தோன்றியவை என்று எண்ணினர். ஆனால், சொற்றொடர் அடிப்படையில் பார்க்கும்போது வேறு விதமாக இருக்கிறது.

மகாராட்டிரத்தின் பெரும்பாலான இடப் பெயர்களைத் தமிழ் மூலம்தான் விளக்க முடியும். காரணம், வரலாற்றுக் காலத்துக்கு முன் மகாராட்டிரத்தில் வசித்த மக்கள் தமிழ் போன்ற ஒரு மொழியைப் பேசி இருக்க வேண்டும். நாட்டுப்புறப் பண்பாடு, கிராமக் கடவுளர்கள் வழிபாட்டு முறைகளில் காணப்படும் சொற்கள் முழுமையாகத் தமிழுடன் தொடர்புடையனவாக உள்ளன. பெரும்பாலான இச்சொற்கள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. இதிலிருந்து மராத்தியில் காணப்படும் சொற்களின் பழமை நன்கு புலப்படுகிறது.

மராத்திய மொழியில் காணப்படும் கன்னட, தெலுங்குச் சொற்கள் தென்னிந்தியக் குடும்ப மொழிகளின் பொதுச் சொற்களே. இருப்பினும் அவைகள் உச்சரிப்பிலும், தொடரியலிலும் கன்னடம், தெலுங்கை விடத் தமிழ் வேர்ச் சொற்களோடு அதிகம் ஒத்திருக்கின்றன.

மகாராட்டிரத்தின் பெரும்பாலான கிராம மக்களின் நடைமுறைச் சொற்களும், சமற்கிருத இலக்கியச் சொற்களை விடத் தமிழ் நாட்டுப்புறச் சொற்களுடன் மிகவும் தொடர்புடையனவாக உள்ளன. படிக்காத இம்மக்களின் மொழிநடை தமிழ் மூலத்தைக் காட்டும் குறிப்புகள் என்று நிச்சயப்படுத்திக் கொள்ளலாம்.

பழங்கால மராத்தி மொழி தொல்காப்பியத் தமிழ் இடையே உள்ள பலவிதமான ஒற்றுமைகளை இலக்கணம் தொடரியல் மூலமாக விளக்க முடியும். இவைகள்  உண்மையில் மராத்தியியலில் உள்ள, சமற்கிருத மொழியால் விளக்க முடியாத இருட்டுகளைப் போக்கும் ஒளி என்றால் மிகையாகாது.

பல சமற்கிருத மொழிச் சொற்களின் பொருளையும் மூலத்தையும் உணர்த்தும் மொழியாக மராத்தி மொழியைக் கொள்ளலாம். மராத்திய மொழியைச் சமற்கிருதம் - தமிழ் ஆகியவற்றை இணைக்கும் மொழியாகவும் கொள்ளலாம். சமற்கிருதம், மராத்தி, தமிழ் ஆகிய மொழிகளில் பெரும்பாலான சொற்கள் பொதுவானவை. இச்சொற்கள் இடையே, உச்சரிப்பு, தொடரியல்களில் ஒற்றுமை இருந்தாலும் நேரடியாக விளக்க முடியாது.

விஸ்வநாத கைரேவுக்கு முன்னர்த் தேவநேயப் பாவாணர் என்ற தமிழறிஞர் இதுபற்றி விரிவாக விளக்கியுள்ளார்.

தமிழிலிருந்து முதலில் திரிந்த மொழி தெலுங்கே என்றும், அது திரிந்துதான் பிற வடநாட்டு மொழிகளானதாகக் கூறுகிறார். ஒரு காலத்தில் கொடுந்தமிழாக இருந்த மொழிகள் ஒரு பிரிவு தமிழர் விந்தியமலைக்கு அப்பால் குடியேறியபோது திரவிடம் என்னும் கிளைமொழிகளாகத் திரிந்து விட்டதாகவும், அவ்வாறு திரிந்த மொழிகளே சூரசேனி, மாகதி, மகாராட்டிரம் போன்ற பிராகிருத மொழிகள் என்கிறார். அவை மேலும் திரிந்து இக்கால இந்தி, வங்காளி, மராத்தி, குசராத்தியாகி விட்டதாகக் கூறுகிறார். இவற்றின் அடிப்படைச் சொற்கள் தமிழாயிருப்பதுடன் தொடரமைப்பிலும் இவை தமிழையே முற்றிலும் ஒத்திருக்கின்றன என்கிறார். அதனால்தான் மராத்தியும், குசராத்தியும் ஒரு காலத்தில் திராவிட மொழிகளாய்க் கொள்ளப்பட்டு, பஞ்ச திரவிடத்தின் இரு கூறுகளாய்க் குறிக்கப்பட்டதென்கிறார்.

அவர் வட திரவிடத்திலும், ஆரியத்திலும் மூவிடப் பெயர்களில், தன்மைப் பெயரடி மகரமாயிருத்தற்குத் தோற்றுவாய் செய்தது தெலுங்குப் பன்மைச் சொல்லே என்கிறார்.

சில தெலுங்குச் சொற்களின் முதலிலுள்ள உயிர்மெய் இடை ரகரம் செருகப்படும் என்கிறார்.

எ.கா.:

தமிழ்               தெலுங்கு

பொழுது          ப்ரொத்து

மண்டு              ம்ரண்டு

இவ்வழக்கே வடசொல் திரிபுகளுக்கு வழிவகுத்ததாகக் கூறுகிறார்.

எ.கா.

தமிழ்           வடமொழி

தமிழ்              த்ரமிள

படி                        ப்ரதி

பதிகம்              ப்ரதீக

மதங்கம்        ம்ருதங்க

மெது             ம்ருது

 

தமிழ்ப் பண்டிதர்களின் தவறுகள்:

தந்தை பெரியார் அவர்கள் அடிக்கடிச் சுட்டிக்காட்டியதுபோல, தமிழ்ப் பண்டிதர்கள் பலரும் ஆழமான, நுட்பமான, வரலாற்று அடிப்படையிலான ஆய்வுகளைச் செய்யாது, நுனிப்புல் மேய்கின்றவர்களாக இருப்பது வேதனைக்குரியது.

“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு’’

என்ற வள்ளுவரின் வழிகாட்டுதல்படி ஆய்வுகளையும், முடிவுகளை ஏற்க வேண்டும். கண்ணை மூடிக்கொண்டு ஏற்பது வரலாற்றுப் பிழையாகும்.

எடுத்துக்காட்டாக, தமிழ்ப் பண்டிதர்களில் பலர் ஜுரம், ஜலம், பங்கஜம், ஹிருதயம், ஹிமயம் போன்ற பல சொற்களை சமஸ்கிருதச் சொற்கள் என்று கூறி, அவற்றைத் தமிழ்ப்படுத்துகிறோம் என்று, ‘சுரம்’, ‘சலம்’, ‘பங்கயம்’, ‘இதயம்’, ‘இமயம்’ என்று எழுதுகிறார்கள். இது முற்றிலும் தவறான முடிவு.

இவை போன்ற சொற்கள் சமஸ்கிருதச் சொற்கள் அல்ல. அவை தமிழ்ச் சொற்களை சமஸ்கிருதச் சொற்களாக மாற்றிக் கொண்ட சொற்கள்.

“சுரம்’’ என்ற தூயத் தமிழ்ச் சொல்லை, ‘ஜு’ என்ற சமஸ்கிருத எழுத்தைப் போட்டு ஜுரம்  என்று ஆக்கிக் கொண்டனர். ‘சலம்’ என்ற தூயத் தமிழ்ச்சொல்லை ‘ஜ’ என்ற சமஸ்கிருத எழுத்தைப் போட்டும், ‘பன்கயம்’ என்ற தூயத் தமிழ்ச் சொல்லை ‘ஜ’ என்ற சமஸ்கிருத எழுத்தைப் போட்டும், ‘குருதி ஆயம்’ என்ற தூயத் தமிழ்ச் சொல்லை ‘ஹி’ என்ற சமஸ்கிருத எழுத்தைச் சேர்த்துத் திரித்தும், ‘இமயம்’ என்ற தூயத் தமிழ்ச் சொல்லை ‘ஹி’ என்ற சமஸ்கிருத எழுத்தைப் போட்டும் சமஸ்கிருதச் சொல்லை ஆக்கிக் கொண்டனர். இதை அறியாது, அதை மீண்டும் தமிழ்ப் படுத்துகிறேன் என்பது அறியாமையின் அடையாளமாகும்.

ஒரு சொல் எந்த மொழிக்கு உரியது என்பதை உறுதி செய்ய வேர்ச் சொல் ஆய்வு கட்டாயம். இவைபோன்ற சொற்களுக்கு தமிழில்தான் வேர்ச்சொல் உண்டே ஒழிய சமஸ்கிருதத்தில் இல்லை.

எடுத்துக்காட்டாக:- ‘சுரம்’ என்ற தமிழ்ச் சொல்லின் வேர்ச்சொல் ‘சுர்’ என்பது. ‘சுர்’ என்பது சூட்டைக் குறிப்பது. நெருப்புப் பட்டால் ‘சுர்’ என்று சுட்டுவிட்டது என்பர் என்பதை இங்கு இணைத்து நோக்கித் தெளிய வேண்டும். ‘சலம்’ என்ற தூய தமிழ்ச் சொல், நீர் ‘சல சல’ வென்று ஓடுவதால் வந்த காரணப் பெயர். சமஸ்கிருதத்தில் இதற்கான வேர்ச்சொல் இல்லை. இப்படியே மற்றைய சொற்களும்.

‘அரசன்’ என்ற தூய தமிழ்ச் சொல்லையே ராஜன் என்று இடவலமாக்கி நெடிலாக்கல் முறையில் சமஸ்கிருத சொல்லாக மாற்றினர்.

அதாவது, அரசன் என்பதில் முதல் இரண்டு எழுத்தை இடவலமாக மாற்றினால் ர+அ=ர. இதை நெடிலாக்கினால் ‘ரா’. ‘ரா’ என்பதுடன் ‘சன்’ என்ற இரண்டு எழுத்தையும் சேர்த்தால் ராசன். அதில் ‘ச’ வை வட எழுத்து ‘ஜ’வாக மாற்றி ராஜன் என்று ஆக்கினர். இதை அறியாது ராஜன் என்பதைத் தமிழ்ப்படுத்துகிறேன் என்று ‘ராசன்’ என்று எழுதுவது அறியாமை! தமிழில் அரசன் என்று எழுதுவதே சரி. இராசன் என்று எழுதுவது தப்பு.

எனவே, உலக மொழிக்கெல்லாம் மூலமொழியான தமிழின் தொன்மையும், வளமையும், அது அளித்த கொடையம் அறியாது, எல்லாம் சமஸ்கிருதத்திலிருந்து வந்ததாகக் கருதுவது ஆழ்ந்த ஆய்வறிவின்பாற்பட்டதல்ல என்பதை அறிய வேண்டும்.

எனவே, திராவிடம் என்பது தமிழ் என்பதன் திரிபேயன்றி, திராவிடம் என்பதிலிருந்து தமிழ் வந்ததல்ல!

=====

புதன், 23 அக்டோபர், 2019

தமிழ் இலக்கியங்கள்

தமிழர்களே வணக்கம்.

1.நற்றிணை 2.குறுந்தொகை 3.ஐங்குறுநூறு 4.அகநானூறு 5.புறநானூறு 6.பதிற்றுப்பத்து 7.பரிபாடல் 8.கலித்தொகை என்னும் எட்டுத்தொகை சங்க நூல்கள்..... !

1.திருமுருகாற்றுப்படை 2.சிறுபாணாற்றுப்படை 3.பெரும்பாணாற்றுப்படை 4.பொருநராற்றுப்படை 5.முல்லைப்பாட்டு 6.மதுரைக்காஞ்சி 7.நெடுநல்வாடை 8.குறிஞ்சிப் பாட்டு 9.பட்டினப்பாலை 10.மலைபடுகடாம் என்னும் பத்துப்பாட்டு சங்க நூல்கள்....!!

உலகினர் வியந்து போற்றும் 1.திருக்குறள் 2.நாலடியார் 3.நான்மணிக்கடிகை 4.இன்னாநாற்பது 5.இனியவை நாற்பது 6.கார் நாற்பது 7.களவழி நாற்பது 8.ஐந்திணை ஐம்பது 9.திணைமொழி ஐம்பது 10.ஐந்திணை எழுபது 11.திணைமாலை நூற்றைம்பது 12.திரிகடுகம் 13.ஆசாரக்கோவை 14.பழமொழி 15.சிறுபஞ்சமூலம் 16.முதுமொழிக் காஞ்சி 17.ஏலாதி 18.கைந்நிலை என்னும் பதினெண்கீழ்க்கணக்கு நீதி நூல்கள்.....!!!

1.சிலப்பதிகாரம் 2.மணிமேகலை 3.சீவக சிந்தாமணி போன்ற 5பெரும் காப்பியங்கள்..... !!!!

1.அகத்தியம் 2.இறையனார் களவியல் உரை 3.புறப்பொருள்வெண்பாமாலை 4.நன்னூல் 5.பன்னிரு பாட்டியல் போன்ற இலக்கண நூல்கள்.....!!!!!

1.தேவாரம் 2.திருவாசகம் 3.திருப்பாவை 4.திருவெம்பாவை 5.நாச்சியார் திருமொழி 6.ஆழ்வார் பாசுரங்கள் போன்ற உலகின் மிகச் சிறந்த பக்தி இலக்கியங்கள்....! !!!!!

1.முத்தொள்ளாயிரம் 2.முக்கூடற்பள்ளு 3.நந்திக்கலம்பகம் 4.கலிங்கத்துப்பரணி 5.மூவருலா 6.முத்தொள்ளாயிரம் போன்ற எண்ணற்ற சிற்றிலக்கிய வகைகள்.....!!!

அது மட்டுமா...?

ஒரு மொழியின் மிகச்சிறந்த பண்பே செம்மொழிக்கான பதினோரு தகுதிகளைக் கொண்டிருப்பதுதான்....
1.தொன்மை 2.தனித்தன்மை (தூய்மைத் தன்மை) 3.பொதுமைப் பண்புகள் 4.நடுவுநிலைமை 5.தாய்மைத் தன்மை 6.கலை பண்பாட்டுத் தன்மை 7.தனித்து இயங்கும் தன்மை 8.இலக்கிய இலக்கண வளம் 9.கலை இலக்கியத் தன்மை 10.உயர் சிந்தனை 11.மொழிக் கோட்பாடு
இந்தப் பதினோரு பண்புகளையும் கொண்ட உலகின் மிக மூத்த மொழி என் தாய்மொழி தமிழ்.... !!

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இந்த உலகில் "இந்தி"என்ற ஒரு மொழியே இல்லை... ஆனால் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எம் முன்னோர்கள் பேசிய மொழி என் தாய்மொழி தமிழ்....!!!

உலகிற்கே மொழி என்றால் என்ன என்று கற்றுக் கொடுத்தவர்கள் நாங்கள்

தமிழ் பெரும் புலவர்கள் பட்டியல்..!

ஔவையும்...
வள்ளுவனும்..
கம்பனும்..
அயோத்திதாசரும்

அகம்பன் மாலாதனார்
அஞ்சியத்தை மகள் நாகையார்
அஞ்சில் அஞ்சியார்
அஞ்சில் ஆந்தையார்
அடைநெடுங்கல்வியார்
அணிலாடு முன்றிலார்
அண்டர் மகன் குறுவழுதியார்
அதியன் விண்ணத்தனார்
அதி இளங்கீரனார்
அம்மூவனார்
அம்மெய்நாகனார்
அரிசில் கிழார்
அல்லங்கீரனார்
அழிசி நச்சாத்தனார்
அள்ளூர் நன்முல்லையார்
அறிவுடைநம்பி
ஆரியன் பெருங்கண்ணன்
ஆடுதுறை மாசாத்தனார்
ஆதிமந்தி
ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக்கண்ணத்தனார்
ஆலங்குடி வங்கனார்
ஆலத்தூர் கிழார்
ஆலம்பேரி சாத்தனார்
ஆவூர்கிழார் மகனார் கண்ணனார்
ஆவூர் காவிதிகள் சகாதேவனார்
ஆவூர்கிழார்
ஆலியார்
ஆவூர் மூலங்கீரனார்
இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார்
இடைக்காடனார்
இடைக்குன்றூர்கிழார்
இடையன் சேந்தன் கொற்றனார்
இடையன் நெடுங்கீரனார்
இம்மென்கீரனார்
இரணியமுட்டத்து பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்
இருங்கோன் ஒல்லையன் செங்கண்ணனார்
இருந்தையூர்க் கொற்றன் புலவன்
இரும்பிடர்தலையார்
இளங்கீரந்தையார்
இளங்கீரனார்
இளநாகனார்
இளந்திரையன்
இளந்தேவனார்
இளம்புல்லூர்க் காவிதி
இளம்பூதனார்
இளம்பெருவழுதி
இளம்போதியார்
இளவெயினனார்
இறங்குடிக் குன்றநாடன்
இறையனார்
இனிசந்த நாகனார்
ஈழத்துப் பூதந்தேவனார்
உகாய்க் குடிகிழார்
உக்கிரப் பெருவழுதி
உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார்
உம்பற்காட்டு இளங்கண்ணனார்
உருத்திரனார்
உலோச்சனார்
உவர்கண்ணூர் புல்லங்கீரனார்
உழுந்தினைம் புலவர்
உறையனார்
உறையூர் இளம்பொன் வாணிகனார்
உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார்
உறையூர்ச் சல்லியங் குமரனார்
உறையூர்ச் சிறுகந்தனார்
உறையூர்ப் பல்காயனார்
உறையூர் மருத்துவன் தாமோதரனார்
உறையூர் முதுகண்ணன் சாத்தனார்
ஊட்டியார்
ஊண்பித்தை
ஊண்பொதி பசுங்குடையார்
எயிற்றியனார்
எயினந்தையார்
எருமை வெளியனார்
எருமை வெளியனார் மகனார் கடலனார்
எழூப்பன்றி நாகன் குமரனார்
ஐயாதி சிறு வெண்ரையார்
ஐயூர் முடவனார்
ஐயூர் மூலங்கீரனார்
ஒக்கூர் மாசாத்தனார்
ஒக்கூர் மாசாத்தியார்
ஒருசிறைப் பெரியனார்
ஒரூத்தனார்
ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்
ஓதஞானி
ஓதலாந்தையார்
ஓரம்போகியார்
ஓரிற்பிச்சையார்
ஓரேர் உழவர்
ஔவையார்
கங்குல் வெள்ளத்தார்
கச்சிப்பேடு இளந்தச்சன்
கச்சிப்பேடு காஞ்சிக்கொற்றனார்
கச்சிப்பேடு பெருந்தச்சனார்
கடம்பனூர்ச் சாண்டில்யன்
கடலூர்ப் பல்கண்ணனார்
கடியலூர் உருத்திரங்கண்ணனார்
கடுந்தொடைக் காவினார்
கோவர்த்தனர்
கோவூர்க் கிழார்
கோவேங்கைப் பெருங்கதவனார்
கோழிக் கொற்றனார்
கோளியூர்க் கிழார் மகனார் செழியனார்
கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக்குமரன்
சங்கவருணர் என்னும் நாகரியர்
சத்திநாதனார்
சல்லியங்குமரனார்
சாகலாசனார்
சாத்தந்தந்தையார்
சாத்தனார்
சிறுமோலிகனார்
சிறுவெண்டேரையார்
சிறைக்குடி ஆந்தையார்
சீத்தலைச் சாத்தனார்
செங்கண்ணனார்
செம்பியனார்
செம்புலப்பெயல்நீரார்
செயலூர் இளம்பொன்சாத்தன் கொற்றனார்
செய்திவள்ளுவன் பெருஞ்சாத்தன்
செல்லூர்கிழார் மகனார் பெரும்பூதன் கொற்றனார்
செல்லூர்க்கோசிகன் கண்ணனார்
சேந்தங்கண்ணனார்
சேந்தம்பூதனார்
சேந்தங்கீரனார்
சேரமானெந்தை
சேரமான் இளங்குட்டுவன்
சேரமான் கணைக்கால் இரும்பொறை
சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை
சோனாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்
சோழன் நலங்கிள்ளி
சோழன் நல்லுருத்திரன்
தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார்
தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்
தனிமகனார்
தாமாப்பல் கண்ணனார்
தாமோதரனார்
தாயங்கண்ணனார்
தாயங்கண்ணியார்
திப்புத்தோளார்
திருத்தாமனார்
தீன்மதிநாகனார்
தும்பிசேர்கீரனார்
துறைக்குறுமாவிற் பாலங்கொற்றனார்
துறையூர்ஓடைக்கிழார்
தூங்கலோரியார்
தேய்புரி பழங்கயிற்றினார்
தேரதரன்
தேவகுலத்தார்
தேவனார்
தொடித்தலை விழுத்தண்டினர்
தொண்டி ஆமூர்ச்சாத்தனார்
தொல்கபிலர்
நக்கண்ணையார்
நக்கீரர்
நப்பசலையார்
நப்பண்ணனார்
நப்பாலத்தனார்
நம்பிகுட்டுவன்
நரிவெரூத்தலையார்
நரைமுடி நெட்டையார்
நல்லச்சுதனார்
நல்லந்துவனார்
நல்லழிசியார்
நல்லாவூர்க் கிழார்
நல்லிறையனார்
நல்லுருத்திரனார்
நல்லூர்ச் சிறுமேதாவியார்
நல்லெழுநியார்
நல்வழுதியார்
நல்விளக்கனார்
நல்வெள்ளியார்
நல்வேட்டனார்
நற்சேந்தனார்
நற்றங்கொற்றனார்
நற்றமனார்
நன்பலூர்ச் சிறுமேதாவியார்
நன்னாகனார்
நன்னாகையார்
நாகம்போத்தன்
நாமலார் மகன் இளங்கண்ணன்
நிகண்டன் கலைக்கோட்டுத் தண்டனார்
நெடுங்கழுத்துப் பரணர்
நெடும்பல்லியத்தனார்
நெடும்பல்லியத்தை
நெடுவெண்ணிலவினார்
நெட்டிமையார்
நெய்தற் கார்க்கியார்
நெய்தற் சாய்த்துய்த்த ஆவூர்க்கிழார்
நெய்தற்றத்தனார்
நொச்சி நியமங்கிழார்
நோய்பாடியார்
பக்குடுக்கை நன்கணியார்
படுமரத்து மோசிகீரனார்
படுமரத்து மோசிக்கொற்றனார்
பதடிவைகலார்
பதுமனார்
பரணர்
கடுந்தொடைக் கரவீரன்
கடுவன் இளமள்ளனார்
கடுவன் இளவெயினனார்
கடுவன் மள்ளனார்
கணக்காயன் தத்தனார்
கணியன் பூங்குன்றனார்
கண்ணகனார்
கண்ணகாரன் கொற்றனார்
கண்ணங்கொற்றனார்
கண்ணம் புல்லனார்
கண்ணனார்
கதக்கண்ணனார்
கதப்பிள்ளையார்
கந்தரத்தனார்
கபிலர்
கயத்தூர்கிழார்
கயமனார்
கருங்குழலாதனார்
கரும்பிள்ளைப் பூதனார்
கருவூர்க்கிழார்
கருவூர் கண்ணம்பாளனார்
கருவூர் கதப்பிள்ளைச் சாத்தனார்
கருவூர் கலிங்கத்தார்
கருவூர் கோசனார்
கருவூர் சேரமான் சாத்தன்
கருவூர் நன்மார்பனார்
கருவூர் பவுத்திரனார்
கருவூர் பூதஞ்சாத்தனார்
கருவூர் பெருஞ்சதுக்கத்துப் பூதனார்
கல்பொருசிறுநுரையார்
கல்லாடனார்
கவைமகன்
கழாத்தலையார்
கழார்க் கீரனெயிற்றியனார்
கழார்க் கீரனெயிற்றியார்
கழைதின் யானையார்
கள்ளிக்குடிப்பூதம்புல்லனார்
கள்ளில் ஆத்திரையனார்
காக்கைப்பாடினடியார் நச்செள்ளையார்
காசிபன் கீரன்
காட்டூர்கிழார் மகனார் கண்ணனார்
காப்பியஞ்சேந்தனார்
காப்பியாற்றுக் காப்பியனார்
காமஞ்சேர் குளத்தார்
காரிக்கிழார்
காலெறி கடிகையார்
காவட்டனார்
காவற்பெண்டு
காவன்முல்லையார்
காவிரிப் பூம்பட்டினத்துக் கந்தரத்தனார்
காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்
காவிரிப் பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்
காவிரிப் பூம்பட்டினத்துச் சேந்தன் கண்ணனார்
காவிரிப் பூம்பட்டினத்துப் பொன்வாணிகனார் மகனார் நப்பூதனார்
கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார்
கிடங்கி்ல் காவிதிப் பெருங்கொற்றனார்
கிடங்கில் குலபதி நக்கண்ணனார்
கிள்ளிமங்கலங்கிழார்
கிள்ளிமங்கலங்கிழார் மகனார் சேரக்கோவனார்
கீரங்கீரனார்
கீரந்தையார்
குடபுலவியனார்
குடவாயிற் கீரத்தனார்
குட்டுவன் கண்ணனார்
குட்டுவன் கீரனார்
குண்டுகட் பாலியாதனார்
குதிரைத் தறியனார்
குப்பைக் கோழியார்
குமட்டூர் கண்ணனார்
குமுழிஞாழலார் நப்பசலையார்
குழற்றத்தனார்
குளம்பனார்
குளம்பாதாயனார்
குறமகள் இளவெயினி
குறமகள் குறியெயினி
குறியிறையார்
குறுங்கீரனார்
குறுங்குடி மருதனார்
குறுங்கோழியூர் கிழார்
குன்றம் பூதனார்
குன்றியனார்
குன்றூர்க் கிழார் மகனார்
கூகைக் கோழியார்
கூடலூர்க் கிழார்
கூடலூர்ப பல்கண்ணனார்
கூவன்மைந்தன்
கூற்றங்குமரனார்
கேசவனார்
கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார்
கொட்டம்பலவனார்
கொல்லன் அழிசி
கொல்லிக் கண்ணன்
கொள்ளம்பக்கனார்
கொற்றங்கொற்றனார்
கோக்குளமுற்றனார்
கோடைபாடிய பெரும்பூதன்
கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்
கோட்டியூர் நல்லந்தையார்
கோண்மா நெடுங்கோட்டனார்
கோப்பெருஞ்சோழன்
பராயனார்
பரூஉமோவாய்ப் பதுமனார்
பறநாட்டுப் பெருங்கொற்றனார்
பனம்பாரனார்
பாண்டரங்கண்ணனார்
பாண்டியன் ஆரியப்படைகடந்த நெடுஞ்செழியன்
பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார்
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்
பாண்டியன் பன்னாடு தந்தான்
பாண்டியன் மாறன் வழுதி
பாரதம் பாடிய பெருந்தேவனார்
பாரிமகளிர்
பார்காப்பான்
பாலைக் கௌதமனார்
பாலை பாடிய பெருங்கடுங்கோ
பாவைக் கொட்டிலார்
பிசிராந்தையார்
பிரமசாரி
பிரமனார்
பிரான் சாத்தனார்
புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர்கிழார்
புல்லாற்றூர் எயிற்றியனார்
பூங்கணுத் திரையார்
பூங்கண்ணன்
பூதங்கண்ணனார்
பூதபாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு
பூதம்புல்லனார்
பூதனார்
பூதந்தேவனார்
பெருங்கண்ணனார்
பெருங்குன்றூர்க் கிழார்
பெருங்கௌசிகனார்
பெருஞ்சாத்தனார்
பெருஞ்சித்திரனார்
பெருந்தலைச்சாத்தனார்
பெருந்தேவனார்
பெருந்தோட் குறுஞ்சாத்தன்
பெரும் பதுமனார்
பெரும்பாக்கன்
பெருவழுதி
பேயனார்
பேய்மகள் இளவெயினி
பேராலவாயர்
பேரிசாத்தனார்
பேரெயின்முறுவலார்
பொதுக்கயத்துக் கீரந்தை
பொதும்பில் கிழார்
பொதும்பில் கிழார் மகனார் வெண்கண்ணி
பொதும்பிற் புல்லாளல் கண்ணியார்
பொத்தியார்
பொய்கையார்
பொருந்தில் இளங்கீரனார்
பொன்மணியார்
பொன்முடியார்
பொன்னாகன்
போதனார்
போந்தைப் பசலையார்
மடல் பாடிய மாதங்கீரனார்
மதுரை அளக்கர் ஞாழற் கவிஞர் மகனார் மள்ளனார்
மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
மதுரை ஆசிரியர் கோடங்கொற்றனார்
மதுரை இளங்கண்ணிக் கௌசிகனார்
மதுரை இனங்கௌசிகனார்
மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார்
மதுரை ஓலைக்கடைக் கண்ணம் புகுந்தாராயத்தனார்
மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார்
மதுரைக் கடையத்தார் மகன் வெண்ணாகனார்
மதுரைக் கணக்காயனார்
மதுரைக் கண்டராதித்தனார்
மதுரைக் கண்ணத்தனார்
மதுரைக் கவுணியன் பூதத்தனார்
மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார்
மதுரைக் காமக்கணி நப்பாலத்தனார்
மதுரைக் காருலவியங் கூத்தனார்
மதுரைக் கூத்தனார்
மதுரைக் கொல்லன் புல்லன்
மதுரைக் கொல்லன் வெண்ணாகனார்
மதுரைச் சுள்ளம் போதனார்
மதுரைத் தத்தங்கண்ணனார்
மதுரைத் தமிழக்கூத்தனார் நாகன் தேவனார்
மதுரைத் தமிழக் கூத்தனார்
மதுரைப் படைமங்க மன்னியார்
மதுரைப் பாலாசிரியர் சேந்தங்கொற்றனார்
மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார்
மதுரைப் பாலாசிரியர் நற்றாமனார்
மதுரைப் புல்லங்கண்ணனார்
மதுரைப் பூதனிள நாகனார்
மதுரைப் பூவண்ட நாகன் வேட்டனார்
மதுரைப் பெருங்கொல்லன்
மதுரைப் பெருமருதனார்
மதுரைப் பெருமருதிளநாகனார்
மதுரைப் போத்தனார்
மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார்
மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார்
மதுரை மருதங்கிழார் மகன் இளம்போத்தன்
மதுரை வேளாசன்
மருங்கூர்கிழார் பெருங்கண்ணனார்
மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனார்
மருங்கூர்ப் பாகை சாத்தன் பூதனார்
மருதம் பாடிய இளங்கடுங்கோ
மருதனிளநாகனார்
மலையனார்
மள்ளனார்
மாங்குடிமருதனார்
மாடலூர் கிழார்
மாதீர்த்தன்
மாமிலாடன்
மாமூலனார்
மாயேண்டன்
மார்க்கண்டேயனார்
மாலைமாறன்
மாவளத்தன்
மாறோக்கத்துக் காமக்கண்ணியார்
மாறோக்கத்து நப்பசலையார்
மாற்பித்தியார்
மிளைக் கந்தன்
மிளைப் பெருங்கந்தன்
மிளைவேள் பித்தன்
மீனெறி தூண்டிலார்
முக்கல் ஆசான் நல்வெள்ளையார்
முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன்
முடத்தாமக்கண்ணியார்
முடத்திருமாறன்
முதுகூத்தனார்
முதுவெங்கண்ணனார்
முப்பேர் நாகனார்
முரஞ்சியயூர் முடிநாகராயர்
முள்ளியூர்ப் பூதியார்
முலங்கீரனார்
மையோடக் கோவனார்
மோசிக்கண்ணத்தனார்
மோசிக்கீரனார்
மோசிக்கொற்றன்
மோசிக்கரையனார்
மோசிசாத்தனார்
மோசிதாசனார்
வடநெடுந்தத்தனார்
வடவண்ணக்கன் தாமோதரன்
வடமோதங்கிழார்
வருமுலையாரித்தி
வன்பரணர்
வண்ணக்கன் சோருமருங்குமரனார்
வண்ணப்புறக் கந்தரத்தனார்
வாடாப்பிராந்தன்
வாயிலான் தேவன்
வாயிலிலங்கண்ணன்
வான்மீகியார்
விட்டகுதிரையார்
விரிச்சியூர் நன்னாகனார்
விரியூர் நன்னாகனார்
வில்லக விரலினார்
விழிகட்பேதை பெருங்கண்ணனார்
விற்றூற்று மூதெயினனார்
விற்றூற்று வண்ணக்கன் தத்தனார்
வினைத் தொழில் சோகீரனார்
வீரை வெளியனார்
வீரை வெளியன் தித்தனார்
வெண்கண்ணனார்
வெண்கொற்றன்
வெண்ணிக் குயத்தியார்
வெண்பூதன்
வெண்பூதியார்
வெண்மணிப்பூதி
வெள்ளாடியனார்
வெள்ளியந்தின்னனார்
வெள்ளிவீதியார்
வெள்வெருக்கிலையார்
வெள்ளைக்குடி நாகனார்
வெள்ளைமாளர்
வெறிபாடிய காமக்கண்ணியார்
வேட்டகண்ணன்
வேம்பற்றூர்க்கண்ணன் கூத்தன்
வேம்பற்றுக் குமரன்

மற்றும் பெண்பாற்புலவர்கள்...

அச்சியத்தை மகள் நாகையார்
அள்ளுரர் நன்முல்லை
ஆதிமந்தி - குறுந் 3
இளவெயினி - புறம் 157
உப்பை ஃ உறுவை
ஒக்கூர் மாசாத்தியார்
கரீனா கண்கணையார்
கவியரசி
கழார் கீரன் எயிற்றியார்
கள்ளில் ஆத்திரையனார்
காக்கை பாடினியார் நச்செள்ளையார்
காமக்கணிப் பசலையார்
காரைக்காலம்மையார்
காவற்பெண்டு
காவற்பெண்டு
கிழார் கீரனெயிற்றியார்
குட புலவியனார்
குமிழிநாழல் நாப்பசலையார்
குமுழி ஞாழல் நப்பசையார்
குறமகள் ஃ இளவெயினி
குறமகள் ஃ குறிஎயினி
குற மகள் இளவெயினியார்
கூகைக்கோழியார்
தமிழறியும் பெருமாள்
தாயங்கண்ணி - புறம் 250
நக்கண்ணையார்
நல்லிசைப் புலமை மெல்லியார்
நல்வெள்ளியார்
நெட்டிமையார்
நெடும்பல்லியத்தை
பசலையார்
பாரிமகளிர்
பூங்கண்ணுத்திரையார்
பூங்கண் உத்திரையார்
பூதபாண்டியன் தேவியார்
பெண்மணிப் பூதியார்
பெருங்கோப்பெண்டு
பேய்மகள் இளவெயினி
பேயனார்
பேரெயென் முறுவலார்
பொத்தியார்
பொன்மணியார்
பொன்முடியார்
போந்தலைப் பசலையார்
மதுவோலைக் கடையத்தார்
மாற்பித்தியார்
மாற்பித்தியார், இயற்பெயர் பித்தி
மாறோக்கத்து நாப்பசலையார்
முள்ளியூர் பூதியார்
முன்னியூப் பூதியார்
வரதுங்க ராமன் தேவியார்
வருமுலையாருத்தி
வில்லிபுத்தூர்க் கோதையார்
வெண்ணிக் குயத்தியார்
வெள்ளி வீதியார்
வெறிபாடிய காமக்கண்ணியர்....

இவ்வளவு சிறப்பு வாய்ந்த மொழி நம் தமிழ் மொழி! ஆனாலும் பலவற்றில் மாதம் கலக்கப்பட்டுள்ளது.

வெள்ளி, 18 அக்டோபர், 2019

"வே" என்பதின் சிறப்பு...

⚜ *"வே' என்ற ஒற்றைத் தமிழெழுத்து அல்லது தமிழ்ச் சொல்லிற்கு 'மறை' (மறைத்து வைத்தல்) என்பது பொருளாகும்.

⚜ *தாவரங்களின் வேரானது, மண்ணுக்குள் ஓடி மறைந்து கிடப்பதாலேயே அது 'வே'ர் எனப்பட்டது.

⚜ *மறைந்திருந்து தாக்குவதாலேயே அவன் 'வே'டன் எனப்பட்டான். வேட்டையும் அப்படித்தான்.

⚜ *சுற்றிலுமிட்டு மறைத்துப் பாதுகாப்பதாலேயே 'வே'லி எனப்பட்டது. வேய்தலும் அப்படித்தான்.

⚜ *சுடுநீரில் மூலிகைகளையிட்டு, அடர்த்துணி கொண்டு நம்மை மூடிமறைத்து, அதனை முகர்ந்து நோய்போக்கும் நிகழ்வு 'வே'து பிடித்தல் எனப்பட்டது.

⚜ *'வே'ய்ங்குழல் எனச் சங்க இலக்கியங்கள் முதல் போற்றும் பெண்ணில் அடர்க்கூந்தல், அப்படியே அவளது முழுவுடலையும் கவிழ்ந்து மறைக்கக் கூடியதாகையால் அவ்வாறு கூறப்பட்டது.

⚜ *நம்முடலின் பாகங்களையும், மானத்தையும் மறைத்துக் காப்பாற்றுவதாலேயே அவ்வுடை 'வே'ட்டி எனப்பட்டது.

⚜ *வேதத்தைக் கூட " மறை" என்றுதான் தனித் தமிழில் கூறுகிறோம்.

⚜ *கண்ணுக்கு தெரியாத அளவுக்கு மறைவாக விரைவாக செல்வதால் வே'கம் எனப் படுகிறது.

⚜ *உண்மைத்தன்மை தெரியாமல் இருப்பதாலேயே அது வே'டம்.

⚜ *கசப்பு வெளியே தெரியாமல் உள்ளே மறைவாக இருப்பின் அது வே'ம்பு.

⚜ *ஈராயிரம் ஆண்டுகள் வாழ்ந்திருக்கும் மொழி என்றால் சும்மாவா? தமிழைக் கொண்டாடுவோம்.

⚜ *வாழ்க தமிழ்!
- கட் செவி வழியாக வந்தது

"யாதும் ஊரே யாவரும் கேளிர்"- முழுமையான பாடல்

பழமையான பாடல் ஒன்று...
இன்று
உலகம் முழுவதும்
தேடப்பட்டு, உச்சரிக்கப்படுகிறது.

அது,
கணியன் பூங்குன்றனார் எழுதிய,
"யாதும் ஊரே யாவரும் கேளிர்...."

இதன் முதல் வரி மட்டுமே, புகழ்பெற்ற வரியாக பலரால் எடுத்துரைக்கப்பட்டு வருகிறது.

பாடலின்
எல்லா வரிகளும், வாழ்வின்
முழு தத்துவத்தைச்
சொல்கிறது.....

முழுப் பாடலும்... அதன் பொருளும்....
உங்களுக்காக !

*"யாதும் ஊரே; யாவரும் கேளிர்;*
*தீதும் நன்றும் பிறர்தர வாரா;*
*நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;.....*
*சாதலும் புதுவது அன்றே;...*
*வாழ்தல் இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே;* *முனிவின் இன்னாது என்றலும் இலமே;*
*மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது*
*கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று*
*நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்*
*முறைவழிப் படூஉம் என்பது* *திறவோர்காட்சியின் தெளிந்தனம்...*
*ஆதலின் மாட்சியின்*
*பெயோரை வியத்தலும் இலமே;*
*சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.*

– கணியன் பூங்குன்றனார்

பாடலின் வரிகளும், பொருளும்:

*"யாதும் ஊரே யாவரும் கேளிர்*...."

எல்லா ஊரும்
எனது ஊர்....
எல்லா மக்களும் எனக்கு உறவினர்என்று நினைத்து,
அன்பே வாழ்வின் அடிப்படை,ஆதாரம் என்று
வாழ்ந்தால் , இந்த வாழ்வு நமக்கு எவ்வளவு இனிமையானது............. சுகமானது......

*"தீதும் நன்றும் பிறர் தர வாரா*...."

தீமையும்,நன்மையும் அடுத்தவரால் வருவதில்லை.......எனும் உண்மையை,உணர்ந்தால்,
சக மனிதர்களிடம்,விருப்பு வெறுப்புஇல்லா ஒரு சம நிலை,சார்ந்த வாழ்வு கிட்டும்.....

*"நோதலும் தனிதலும்*
*அவற்றோ ரன்ன...."*

துன்பமும் ஆறுதலும்கூட
மற்றவர் தருவதில்லை....
மனம் பக்குவப்பட்டால்,
அமைதிஅங்கேயேகிட்டும்...

*"சாதல் புதுமை யில்லை*.."

பிறந்த நாள் ஒன்று உண்டெனில் .....
இறக்கும் நாளும் ஒன்று உண்டு....*
இறப்பு புதியதல்ல....அது
இயற்கையானது....
எல்லோருக்கும்*
*பொதுவானது....
இந்த உண்மையை
உணர்ந்தும், உள் வாங்கியும் வாழ்ந்தால்....
எதற்கும் அஞ்சாமல்,
வாழ்க்கையை, வாழும் வரை ரசிக்கலாம்.......

*"வாழ்தல்இனிதுஎன* *மகிழ்ந்தன்றும் இலமே*
*முனிவின் இன்னாது என்றலும் இலமே....."*

இந்த வாழ்க்கையில்
எது, எவர்க்கு, எப்போது,
என்னாகும் என்று
எவர்க்கும் தெரியாது.....
இந்தவாழ்க்கை மிகவும்
நிலை அற்றது.....
அதனால்,இன்பம் வந்தால்
மிக்க மகிழ்வதும் வேண்டாம்...
துன்பம் வந்தால் வாழ்க்கையை வெறுக்கவும் வேண்டாம்......
வாழ்க்கையின் இயல்பை உணர்ந்து இயல்பாய் வாழ்வோம்......

*"மின்னோரு* *வானம்* *தண்துளி தலைஇ* *ஆனாதுகல்பொருது* *இரங்கும்வ மல்லல்* *பேர்யாற்று நீர்வழிப்* *படூஉம் புணைபோல்* *ஆருயிர் முறைவழிப் படூஉம் என்பது திறவோர் காட்சியின் தெளிந்தனம்* ....."

இந்த வானம் நெருப்பாய்,
மின்னலையும் தருகிறது....
நாம் வாழ
மழையையும்
தருகிறது.....இயற்கை வழியில்அது,அது
அதன் பணியை செய்கிறது....

ஆற்று வெள்ளத்தில்,
கற்களோடு, அடித்து முட்டி செல்லும்படகு போல,
வாழ்க்கையும்,சங்கடங்களில் அவர்,அவர் ஊழ்படி அதன் வழியில்
அடிபட்டு போய்கொண்டு
இருக்கும்....
இது இயல்பு என மனத்தெளிவு கொள்ளல் வேண்டும்...

*"ஆதலின்* *மாட்சியின்*
*பெரியோரை வியத்தலும்* *இலமே;*
*சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே*...."

இந்த தெளிவு
பெற்றால்.....,
பெரிய நிலையில் உள்ள பெரியவர்களைப் பாத்து
மிகவும் வியர்ந்து பாராட்டவும் வேண்டாம்...
சிறிய நிலையில் உள்ள
சிறியவர்களைப் பார்த்து
ஏளனம் செய்து இகழ்வதும்
வேண்டாம்.....
அவரவர் வாழ்வு
அவரவர்க்கு.....
அவற்றில் அவர்,அவர்கள்
பெரியவர்கள்...

*இதை விட வேறு எவர்*
*வாழ்க்கைப் பாடத்தை*
*சொல்லித் தர முடியும்?*

எழுதியவர் ஊர் -
சிவகங்கை மாவட்டம்,
திருப்பத்தூர் தாலுக்கா
*மகிபாலன்பட்டி* கிராமத்தில்....

அவர் பிறந்த இடத்தில்
நம்மை ஒரு
பாழடைந்த பலகை மட்டுமே
வரவேற்கிறது....!

- மு.ந. மதியழகன் பகிர்தல் வழியாக அனுப்பியது

"யாதும் ஊரே யாவரும் கேளிர்"- முழுமையான பாடல்

பழமையான பாடல் ஒன்று...
இன்று
உலகம் முழுவதும்
தேடப்பட்டு, உச்சரிக்கப்படுகிறது.

அது,
கணியன் பூங்குன்றனார் எழுதிய,
"யாதும் ஊரே யாவரும் கேளிர்...."

இதன் முதல் வரி மட்டுமே, புகழ்பெற்ற வரியாக பலரால் எடுத்துரைக்கப்பட்டு வருகிறது.

பாடலின்
எல்லா வரிகளும், வாழ்வின்
முழு தத்துவத்தைச்
சொல்கிறது.....

முழுப் பாடலும்... அதன் பொருளும்....
உங்களுக்காக !

*"யாதும் ஊரே; யாவரும் கேளிர்;*
*தீதும் நன்றும் பிறர்தர வாரா;*
*நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;.....*
*சாதலும் புதுவது அன்றே;...*
*வாழ்தல் இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே;* *முனிவின் இன்னாது என்றலும் இலமே;*
*மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது*
*கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று*
*நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்*
*முறைவழிப் படூஉம் என்பது* *திறவோர்காட்சியின் தெளிந்தனம்...*
*ஆதலின் மாட்சியின்*
*பெயோரை வியத்தலும் இலமே;*
*சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.*

– கணியன் பூங்குன்றனார்

பாடலின் வரிகளும், பொருளும்:

*"யாதும் ஊரே யாவரும் கேளிர்*...."

எல்லா ஊரும்
எனது ஊர்....
எல்லா மக்களும் எனக்கு உறவினர்என்று நினைத்து,
அன்பே வாழ்வின் அடிப்படை,ஆதாரம் என்று
வாழ்ந்தால் , இந்த வாழ்வு நமக்கு எவ்வளவு இனிமையானது............. சுகமானது......

*"தீதும் நன்றும் பிறர் தர வாரா*...."

தீமையும்,நன்மையும் அடுத்தவரால் வருவதில்லை.......எனும் உண்மையை,உணர்ந்தால்,
சக மனிதர்களிடம்,விருப்பு வெறுப்புஇல்லா ஒரு சம நிலை,சார்ந்த வாழ்வு கிட்டும்.....

*"நோதலும் தனிதலும்*
*அவற்றோ ரன்ன...."*

துன்பமும் ஆறுதலும்கூட
மற்றவர் தருவதில்லை....
மனம் பக்குவப்பட்டால்,
அமைதிஅங்கேயேகிட்டும்...

*"சாதல் புதுமை யில்லை*.."

பிறந்த நாள் ஒன்று உண்டெனில் .....
இறக்கும் நாளும் ஒன்று உண்டு....*
இறப்பு புதியதல்ல....அது
இயற்கையானது....
எல்லோருக்கும்*
*பொதுவானது....
இந்த உண்மையை
உணர்ந்தும், உள் வாங்கியும் வாழ்ந்தால்....
எதற்கும் அஞ்சாமல்,
வாழ்க்கையை, வாழும் வரை ரசிக்கலாம்.......

*"வாழ்தல்இனிதுஎன* *மகிழ்ந்தன்றும் இலமே*
*முனிவின் இன்னாது என்றலும் இலமே....."*

இந்த வாழ்க்கையில்
எது, எவர்க்கு, எப்போது,
என்னாகும் என்று
எவர்க்கும் தெரியாது.....
இந்தவாழ்க்கை மிகவும்
நிலை அற்றது.....
அதனால்,இன்பம் வந்தால்
மிக்க மகிழ்வதும் வேண்டாம்...
துன்பம் வந்தால் வாழ்க்கையை வெறுக்கவும் வேண்டாம்......
வாழ்க்கையின் இயல்பை உணர்ந்து இயல்பாய் வாழ்வோம்......

*"மின்னோரு* *வானம்* *தண்துளி தலைஇ* *ஆனாதுகல்பொருது* *இரங்கும்வ மல்லல்* *பேர்யாற்று நீர்வழிப்* *படூஉம் புணைபோல்* *ஆருயிர் முறைவழிப் படூஉம் என்பது திறவோர் காட்சியின் தெளிந்தனம்* ....."

இந்த வானம் நெருப்பாய்,
மின்னலையும் தருகிறது....
நாம் வாழ
மழையையும்
தருகிறது.....இயற்கை வழியில்அது,அது
அதன் பணியை செய்கிறது....

ஆற்று வெள்ளத்தில்,
கற்களோடு, அடித்து முட்டி செல்லும்படகு போல,
வாழ்க்கையும்,சங்கடங்களில் அவர்,அவர் ஊழ்படி அதன் வழியில்
அடிபட்டு போய்கொண்டு
இருக்கும்....
இது இயல்பு என மனத்தெளிவு கொள்ளல் வேண்டும்...

*"ஆதலின்* *மாட்சியின்*
*பெரியோரை வியத்தலும்* *இலமே;*
*சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே*...."

இந்த தெளிவு
பெற்றால்.....,
பெரிய நிலையில் உள்ள பெரியவர்களைப் பாத்து
மிகவும் வியர்ந்து பாராட்டவும் வேண்டாம்...
சிறிய நிலையில் உள்ள
சிறியவர்களைப் பார்த்து
ஏளனம் செய்து இகழ்வதும்
வேண்டாம்.....
அவரவர் வாழ்வு
அவரவர்க்கு.....
அவற்றில் அவர்,அவர்கள்
பெரியவர்கள்...

*இதை விட வேறு எவர்*
*வாழ்க்கைப் பாடத்தை*
*சொல்லித் தர முடியும்?*

எழுதியவர் ஊர் -
சிவகங்கை மாவட்டம்,
திருப்பத்தூர் தாலுக்கா
*மகிபாலன்பட்டி* கிராமத்தில்....

அவர் பிறந்த இடத்தில்
நம்மை ஒரு
பாழடைந்த பலகை மட்டுமே
வரவேற்கிறது....!

- மு.ந. மதியழகன் பகிர்தல் வழியாக அனுப்பியது

திங்கள், 14 அக்டோபர், 2019

சமஸ்கிருதத்தைவிட தமிழ்மொழியின் சிறப்பு

இனிச் சமஸ்கிருத மொழியின் கண்ணே பால் வகுப்புக் சொன்னோக்கத்தாலேற்பட்டுளதே யன்றிப் பொருணோக்கத்தாலேற்பட்டிலது. உதாரணமாக, கையெனப் பொருள்படும் ‘கரம்‘ என்ற சொல் ஆண்பால்; மனைவியெனப் பொருள்படுஞ் சொற்களிலே ‘தாரம்‘ என்பது ஆண்பால்.

களத்திரம் என்பது அலிப்பால், அஃதாவது ஒன்றன்பால் என ஆராற்றனமைக்கலாம். இவ்வாறுளது வடமொழிப் பால் வகுப்பின் சிறப்பு. மற்றுத் தமிழ்மொழியிலோ பால் வகுப்பெல்லாம் பொருணோக்கத்தாலேற்பட்டுளவேயன்றிச் சொன் னோக்கத்தாலேற்படவேயில்லை.

இது தமிழ்மொழியின் சிறப்புகளுள் ஒன்று. வட நூன்முறை குறைபாடுடையது. ஆரிய பாஷைகளோடியைபுபட்ட பாஷைகளெல்லாம் சொன்னோக்கப் பால் வகுப்புக் குறைபாடுடை யனவாமாறு காண்க. தமிழ்மொழியின் வழிமொழிகளெல்லாம் பொருணோக்கப் பால் வகுப்பு சிறப்புடையன. இவ்வுண்மையொன்றே தமிழ்மொழியின் தனி நிலையை நன்கு விளங்குவதற்குத் தக்கச் சான்று பகரும்“

வி.கோ. சூரிய நாராயண சாஸ்திரியார் பி.ஏ.,

நூல், தமிழ்மொழியின் வரலாறு

பக்கம் -333

- விடுதலை ஞாயிறு மலர், 28.9.19

வெள்ளி, 11 அக்டோபர், 2019

ஹரியான மாநிலத்தில் தமிழ் ஆட்சிமொழியாக 44 ஆண்டுகள் இருந்த வரலாறு தெரியுமா?

1966-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி பஞ்சாப் மாநிலத்திலிருந்து ஹரியானா பிரிந்தது. ஹரியானாவில் பஞ்சாபிகளும் அதிகமாக வசித்தனர். இவர்களின் தாய் மொழி பஞ்சாபி.

சண்டிகர் நகரம் சண்டிகர் நகரம்
பங்காளிகள் பிரிந்தால் சச்சரவுகள்தானே ஏற்படும். தண்ணீர் பங்கீட்டிலிருந்து பல பிரச்னைகளுக்காக இரு மாநிலங்களும் மாறி மாறி சண்டை போட்டுக்கொண்டன. இப்போது வரைக்கும் இரு மாநிலங்களுக்கும் சண்டிகர் நகரம்தான் பொதுவான தலைநகராக உள்ளது. ஹரியானா தனக்கென்று தனியாகத் தனி தலைநகரை உருவாக்கிக் கொள்ளவில்லை.

ஹரியானா மாநிலத்தில் பெரும்பாலான மக்கள் இந்தி பேசுபவர்கள். இதனால், அலுவல மொழியாக இந்தி அறிவிக்கப்பட்டதில் எந்தப் பிரச்னையும் இல்லை. பஞ்சாபி பேசும் மக்கள், தங்கள் மொழியை இரண்டாவது அலுவல் மொழியாக்க வேண்டுமென்ற கோரிக்கையை வைத்த போதுதான் பிரச்னை எழுந்தது. பஞ்சாபியை அலுவல் மொழியாக்கினால், இந்தி மொழியின் வளர்ச்சிக்குத் தடையாக, இருக்கும் என அப்போதைய ஹரியானா முதல்வர் பன்சி லால் கருதினார். இதனால், பஞ்சாபிக்கு முக்கியத்துவம் கொடுக்க பன்சி லால் விரும்பவில்லை. உடனடியாக, அவரின் நினைவுக்கு வந்தது உலகின் மூத்த மொழியான தமிழ்தான். தயக்கமே இல்லாமல் ஹரியானா மாநிலத்தின் இரண்டாவது அலுவல் மொழியாகத் தமிழை அறிவித்தார் பன்சிலால்.

அந்தக் காலகட்டத்தில் தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு உச்சத்தில் இருந்தது. இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் பெரிய அளவில் நடந்து கொண்டிருந்தன. `ஹரியானாவில் தமிழை அலுவல் மொழியாக்கினால், வட இந்திய மாநிலம் ஒன்றில் தமிழ் ஆட்சி மொழியாக்கப்பட்டிருக்கிறது. நாமும் இந்தியை எதிர்க்கக் கூடாது எனத் தமிழர்கள் கருதுவார்கள்' என்றும் பன்சி லால் நினைத்தார். இதுவும் ஹரியானாவில் தமிழ் அலுவல் மொழியாக ஒரு காரணமாக இருந்தது. ஹரியானாவில் பன்சி லாலுக்குப் பிறகு பல முதல்வர்கள் மாறினாலும், கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் ஹரியானாவில் தமிழ் இரண்டாவது அலுவல் மொழியாக இருந்தது. கடந்த 2010-ம் ஆண்டு ஹரியானா முதல்வராகப் பதவியேற்ற பூபிந்தர் சிங் ஹூடா, தமிழை நீக்கிவிட்டு, பஞ்சாபியை இரண்டாவது அலுவல் மொழியாக்கினார்.

இந்தி மொழியைப் பாதுகாக்கத் தமிழ் எப்படியெல்லாம் பயன்படுத்தப்பட்டுள்ளது பார்த்தீர்களா?
- பகிரி வழியாக வந்தது

சீனாவில் தமிழ் கல்வெட்டு

சீன நாட்டில் காண்டன் என்னும் நகருக்கு 500 கல் வடக்கே *சூவன்சவ்* என்னும் துறைமுக நகர் உள்ளது.

பண்டை காலத்திலும் இது சிறந்த துறைமுகமாக விளங்கியது!

பண்டைய காலத்தில் தமிழ் வணிகர்கள் ஏராளமானோர் இந்த துறைமுகத்துக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளனர்.

தமிழ்நாட்டிலிருந்து புறப்படும் வணிக கப்பல்கள் தாய்லாந்து சென்று அதன்
மேற்கு கரையோரமாக
உள்ள சில துறைமுகங்களிலும் தங்கிப் பிறகு,
வியட்நாம் சென்று அங்கிருந்து
*சீன நாட்டை* அடைந்துள்ளன!

சீனாவில் தமிழ் வணிகர்கள் காண்டன் நகரில் மட்டுமின்றி மேலும் சில இடங்களிலும் குடியேற்றங்களை அமைத்திருந்தனர்.

பிற்காலச் சோழர் காலத்தில் புகழ்ப்பெற்ற வணிகக் குழாமான

*திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர்* எனும் குழுவினர், சீன நாட்டின் பல்வேறு பகுதியிலும் வணிகம்  செய்துள்ளனர் என்பதற்கு பல ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

உலகையே நடுங்க வைத்த மங்கோலிய அரசனான *செங்கீஸ்கானின் பேரன்களில் ஒருவன் குப்லாய்கான்!*

இவன் கி.பி.1260இல் சீனா சக்கரவர்த்தியாக பொறுப்பேற்றான் !

இவனது ஆட்சியின் கீழ் சீனா இருந்த போது, 
பெய்சிங்க் என்னும் புதிய நகரை  உருவாக்கி அதனை தனது பேரரசின் தலைநகராக்கினான்! புகழ்ப்பெற்ற *யுவான் அரச மரபை* இவனே தொடங்கினான்.

*தமிழ்நாட்டில் பிற்காலப் பாண்டியப் பேரரசு அரசோச்சிய காலத்தில்,* 
அப்போதிருந்த

*பாண்டிய மன்னனான குலசேகர பாண்டியன் சீனா மன்னனுடன் நல்லுறவைப் பேணினான்.!*

*பாண்டிய அரச குலமும் குப்லாய்கானும் மிகுந்த நட்புறவுடன் திகழ்ந்தனர்.!*

*இருநாடுகளுக்கிடையேயும் தூதர்கள் பரிமாற்றம் செய்து கொள்ளப்பட்டது!*

*இந்த வரலாற்றுத் தொடர்புகளுக்கு சான்றாக*

* சீன நாட்டில் குவன் சவ் துறைமுக நகரில் பழமைவாய்ந்த. சிவ ஆலயம் ஒன்றில்
*தமிழ் கல்வெட்டு* *ஒன்று கண்டெடுக்கப் பட்டுள்ளது*.

*பண்டைய தமிழில் எழுதப்பட்டுள்ள இந்த கல்வெட்டில்* கடைசி வரிகள்
*சீன எழுத்தில் பொறிக்கப் பட்டுள்ளன*.

தமிழ்நாட்டுக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்ட மிக அபூர்வமான தமிழ் கல்வெட்டாக இது கருதப்படுகிறது.
---------------*
நன்றி;
தமிழர் தகவல் தளத்தில்

படித்ததில் பிடித்தது

https://m.facebook.com/story.php?story_fbid=726446251153103&id=100013632037906

MGR TV ஹமீது
@
MGR TV NEWS
இந்தியன் ஜர்னலிஸ்டு சர்வீஸ் IJS அகடாமி
99410 86586

திங்கள், 7 அக்டோபர், 2019

தூத்துக்குடி அருகே 17ஆம் நூற்றாண்டு தமிழ் மொழி கல்வெட்டு கண்டுபிடிப்பு

தூத்துக்குடி,அக்.7 தூத்துக்குடி மாவட்டம் சிறீவைகுண்டம் அருகே யுள்ள ஆதிச்சநல்லூர், சிவகளை பரும்பு மற்றும் குளக்கரை பகுதி களில் முன்னோர்கள் காலத்தில் பயன் படுத்தப்பட்டுள்ள அரியவகை பொருட்கள் கண்டெடுக்கப்பட் டுள்ளது.
சிறீவைகுண்டம் குமரகுருபரர் சாமிகள் மேல்நிலைப் பள்ளியின் வரலாற்று ஆசிரியர் சிவகளை மாணிக்கம், திருநெல்வேலி சதக் அப்துல்லா கல்லூரியில் வரலாறு மற்றும் ஆராய்ச்சித் துறையில்  முனைவர் பட்டம் படிப்பிற்காக சிவகளை சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். சிவகளையில் தமிழ் வட்டெழுத்து, தமிழ்மொழி கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட் டுள்ளது.
இதுகுறித்து, வரலாற்று ஆசிரி யர் சிவகளை மாணிக்கம் கூறியதா வது: எனது வரலாற்று ஆய்வுப்பணிக் காக சிவகளை மேலக்குளத்தின் நீர் வெளியேறும் மடையின் படிக்கட்டு களை ஆய்வு செய்தபோது அதில் 11ஆம் நூற்றாண்டின் தமிழ் வட் டெழுத்துக்கள் பொறிக்கப்பட் டுள்ள கல்வெட்டும், 17ஆம் நூற் றாண்டின் தமிழ்மொழி கல்வெட்டு களும் இருந்தன.
இதனை இந்திய தொல்லியல் துறை ஆய்வாளர்கள் யத்தீஸ் குமார், பிரசன்னா, கல் வெட்டு ஆய்வாளர் வீரமணிகண்டன் மற்றும் பெங்களூரு கல்வெட்டு படியெடுப்பாளர் நசுருல்லா ஆகி யோர் தலைமையிலான குழுவினர் கல்வெட்டுகளை படியெடுத்து ஆய்வு செய்தனர். நான்கு வரிகளை கொண்டுள்ள இக்கல்வெட்டு 11ஆம் நூற்றாண்டை சேர்ந்த வட்ட எழுத்து என்பதும், இந்த எழுத்துக்களில் சிவகளையிலுள்ள இந்த குளம் அக்காலத்தில் நாராயணன் ஏரி என்று குறிப்பிடப் பட்டுள்ளது. இதே போன்று, சிவகளை சேர்ந்தையன் சாஸ்தா கோவிலுக்கு எதிரேயுள்ள தரிசு குளத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள நடுகல்லில் அது 17ஆம் நூற் றாண்டை சேர்ந்த தமிழ்மொழி கல்வெட்டு என்பதும், இந்த கல் வெட்டில், சிவகளையின் பெயரா னது கடந்த நூற்றாண்டுகளில் செவளை என்றும், செவளையானது ஊருகாலவம்பிள்ளை மகன் சந்திகா வலம்பிள்ளை என்பவருக்குரியது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது என்றார். இந்த கல்வெட்டுக்களை திருநெல்வேலி சதக்அப்துல்லா கல்லூரி முதல்வர் முகம்மதுசாதிக், வரலாற்றுத்துறை தலைவர் நசீர் அகமது, ஆராய்ச்சி மய்ய ஒருங் கிணைப்பாளர் சின்னத்தம்பி, பேராசிரியை ஆஷா மற்றும் வரலாற்றுத்துறை பேராசிரியர்கள், பள்ளி கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் பலரும். வியப் புடன் கண்டு சென்றனர்.
- விடுதலை நாளேடு, 7.10.19