பக்கங்கள்

திங்கள், 31 ஜூலை, 2023

இந்திய மொழி என்றால் அது தமிழ் மொழி தான்- சிங்கப்பூர் அரசு அதிரடி..!!

*சிங்கப்பூர் அரசு அதிரடி அறிவிப்பு!*

எங்களைப் பொறுத்தவரை இந்தியர்கள் என்றால் அது தமிழர்கள்தான், இந்திய மொழி என்றால் அது தமிழ் மொழி தான்- சிங்கப்பூர் அரசு அதிரடி..!!
சிங்கப்பூரில் தமிழும் ஒரு ஆட்சி மொழியாக இருப்பது அனைவரும் அறிந்ததே. இது அங்கு வாழும் வட இந்தியர்களுக்கு வயிற்றெரிச்சலையும், நமச்சலையும் கொடுக்க,
சிங்கப்பூர் வாழ் வட இந்தியர்கள் அமைப்பு மூலம் சிங்கப்பூர் அரசிற்கு,
இந்தியாவில் அதிகம் பேசப்படும் மொழி இந்தி மொழி.
இந்திய அலுவல் மொழியும் இந்தி தான், இங்கு இந்தி பேசும் மக்களும் நிறையபேர் வாழ்கிறார்கள்.
எனவே இங்கு ஆட்சி மொழியாக உள்ள தமிழை நீக்கி விட்டு இந்தியா சார்பில் இந்தியை ஆட்சி மொழியாக ஆக்க வேண்டுமென்று கோரிக்கை வைக்கப்பட்டது.
அதற்கு சிங்கப்பூர் அமைச்சகம் கொடுத்த மூக்குடைப்பு..,

நாங்கள் சுதந்திரத்திற்காக போராடியபோது எங்களுடன் இணைந்து, எங்களுக்கு தோள் கொடுத்து, எங்களைப் போலவே ஆங்கிலேயர்களிடம் அடி வாங்கி, உயிர்த் தியாகங்கள் செய்தவர்கள் இங்கு வாழ்ந்த தமிழர்கள்.
அந்த சகோதர உணர்விற்காகத் தான் இங்கு தமிழையும் ஆட்சி மொழியாக வைத்துள்ளோம் என்று சொல்லியுள்ளது.
31.07.2017 முகநூல் பதிவு

மொழி வளர்ச்சி?



இராமாயணக் கதையையும், பாரதக் கதையையும், சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய கதைகளையும் வசனமாகவும், பாட்டாகவும், சுருக்காகவும், விரிவாகவும் திருப்பித் திருப்பி எழுதிக் கொண்டிருக்கின்றனர். அல்லது அந்தப் புலவர் எந்தக் காலத்தில் இருந்தார். இந்தப் புலவர் எந்தக் காலத்தில் இருந்தார் என்று கணக்குப் போட்டு கொண்டிருக்கின்றனர். இதுதான் ஆராய்ச்சியென்று  சொல்லப்படுகின்றது. இவ்வளவுதான் இவர்கள் தமிழ் பாஷைக்குச் செய்யும் தொண்டு. இதனால் மக்களை இன்னும் மூடநம்பிக்கை உடையவர்களாக்குவதற்கு வழி தேடுகின்றார்களேயொழிய, வேறு தேசத்திற்கு என்ன நன்மை செய்கின்றார்கள் என்றுதான் கேட்கின்றோம். 

(பெரியார், குடி அரசு - 03.04.1932)

யார் இந்த சங்கீத மும்மூர்த்திகள் ?



காலத்தால் முந்தியவர்கள் மட்டுமல்ல ! உயர்தனிச் செம்மொழியாம் தமிழி்ல் பாடல்களை இயற்றிப் பாடி புகழ் 
பெற்றவர்களான ;
முத்துத் தாண்டவர் (1525-1625)
அருணாசலக் கவிராயர் (1711-1787)
மாரிமுத்தாப் பிள்ளை (1717-1787)

ஆனால் பார்ப்பனீய திமிரும் சமஸ்கிருத வெறியும் கொண்ட ஆரியம் !  சமஸ்கிருதத்திலும் தெலுங்கு கீர்த்தனைகள் மற்றும் பக்தி பாடல்களை மட்டுமே பாடி வந்த 
தியாகராயர் (1767-1848)
சியாமா சாஸ்திரிகள் (1762-1827)
முத்துசாமி தீட்சிதர் (1776-1836)

ஆகியோரையே சங்கீத மும்மூர்த்திகளாக கொண்டாடுகிறது.  இதற்கு பெயர் பிராமனீயத்துவம் - சூத்திரப் பார்வை என்பது.  

மேலும் 1946ல் திருவையாரில் நடந்த தியாகராயர் பிரம்மோர்ச்சவத்தில் திரு தண்டபானி தேசிகர் அவர்கள் சித்தி விநாயகனே என்ற பாடலை தமிழிசையில் பாடினார். அதுவும் அவர் நமது பெரியாரைப் பாடவில்லை, புள்ளையாரைத்தான் பாடினார்.  அதற்கே நீசபாஷை (!!!) தமிழில் பாடியதால் மேடைத் தீட்டாயிடிச்சி என்று சொல்லி மேடையை தண்ணீர் விட்டு கழுவிய பிறகுதான் மற்ற நிகழ்ச்சிகள் நடந்தன...! 

இதை கண்டிக்கும் விதமாக  முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் தந்தை பெரியாரின் குடியரசு இதழில் (9.2.1946) "தீட்டாயிடுத்து" என்ற தலைப்பில் கட்டுரை எழுதி அய்யா பெரியாரின் பாராட்டைப் பெற்றார்.
என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா ???

அன்புடன் 
பி என் எம் பெரியசாமி