தமிழ் உலகு

தமிழ் மற்றும் தமிழர் பெருமை

பக்கங்கள்

  • முகப்பு
கீழடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கீழடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 17 மே, 2022

தமிழ்நாட்டின் தொல்லியல் துறை கண்டுபிடிப்புகள் கொந்தகை தளத்தில் முதுமக்கள் தாழிகள்



  May 17, 2022 • Viduthalai

 சிவகங்கை, மே 17- கீழடி 8ஆம் கட்ட அகழாய்வில் கொந்தகை தளத்தில் இடைவெளியின்றி முது மக்கள் தாழிகள் நெருக்கமாக கிடைத்திருப்பது ஆய்வாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கீழடியில் பிப்ரவரி 13ஆம் தேதியும், அகரம், கொந்தகையில் மார்ச் 30ஆம் தேதியும் அகழாய்வு பணிகள் தொடங்கின. தொல்லியல்துறை இயக்குநர் சிவானந்தம் தலைமையில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.

கொந்தகை தளத்தில் 7ஆம் கட்ட அகழாய்வின் போது, 9 குழிகள் தோண்டப்பட்டு, 30 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டன. 7ஆம் கட்ட அகழாய்வில் கிடைத்த தாழிகள் இடைவெளியுடன் இருந்ததால் முழுமையாகவும், சேதமடையாமலும் இருந்தன.

தாழிகளினுள் உள்ள சுடுமண் பாத்திரங்களும் உருகுலையாமல் கிடைத்தன. 8ஆம் கட்ட அகழாய்வில் இதுபோன்ற இடைவெளியில்லை. நெருக்கமாகவும், தாழிகள் அனைத்தும் சேத மடைந்தும் உள்ளன. இதனால் 2 கட்ட அகழாய் விலும் கிடைத்த தாழிகளுக்குள் காலஇடைவெளி அதிகமாக இருக்கக்கூடும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அத்துடன் இடைவெளி இன்றி தாழிகள் புதைக்கப்பட்டதற்கான காரணத்தையும் ஆய்வு செய்ய உள்ளனர். தற்போது தாழிகளுக்கு இடையே உள்ள தூரத்தை அளவிட்டு பதிவு செய்து வருகின்றனர். அதன்பின் தாழிகளினுள் உள்ள பொருட்களை வெளியே எடுக்கும் பணி தொடங்கும் என்று தெரிகிறது. 

சிவகங்கை அருகே பிஜப்பூர் சுல்தான்கள் காலத்திய நாணயங்கள்

சிவகங்கை அருகே அரசனேரி கீழமேடு பேச்சிக்குளம் முனிக்கோவில் பகுதியில் வித்தி யாசமான மூன்று உலோகச் சில்லுகள் கிடைத்தன. இவை செம்பால் செய்யப்பட்டதாக இருந்தாலும் முன்னும் பின்னுமாக அடையாளங்கள் இருந்தன. இதிலுள்ள வேறுபட்ட எழுத்து வடிவத்தை கொண்டு நாணயங்கள் என்பதை உறுதி செய்ய முடிந்தது. இவற்றை ஆய்வு செய்ததில் இவை பிஜப்பூர் சுல்தான்கள் காலத்தவை என்பதை உறுதி செய்ய முடிந்தது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள பிஜப்பூரைத் தலைநகராகக் கொண்டு வடக்கு கர்நாடகா பகுதியையும் தெற்கு மகாராட்டிரப் பகுதியையும் 1490லிருந்து 1686 வரை ஆண்டவர்கள் பிஜப்பூர் சுல்தான்கள். 1490இல் பாமினி  சுல்தான்களிடம் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு தனியரசாக செயல்பட்டது. யூசுப் அடில் ஷா தொடங்கி 9 அரசர்கள் இப்பகுதியை ஆட்சி செய்தனர். இங்கு கிடைத்த நாணயங்கள் செம்பால் ஆனதோடு அதிக எடை உள்ளதாக உள்ளன. ஒரு நாணயத்தில் தேவநாகரி எழுத்தில் ராஜா என்று எழுதப் பட்டுள்ளது. மற்ற எழுத்துக்கள் பாரசீகத்தில் எழு தப்பட்டுள்ளன.

இவை இப்பகுதி ஆளுகையில் இருந்த மன்னர் களின் நிர்வாகத்திற்கு தொடர்பற்று இருப்பதால் இது வணிகத் தொடர்பிலோ அல்லது இறைவழிப் பயணத்தின் வழியோ வந்திருக்கலாம். மதுரை, தஞ்சாவூர், கரூர், திருநெல்வேலி போன்ற பகுதிகளில் ஆண்டாண்டு காலமாய் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆற்றில் நாணயங்கள் இழுத்து வரப்படு வதும் அவற்றை அரித்து சலித்து எடுப்பதும் பல காலங்களாக தொழிலாகவே நடைபெற்று வந்து உள்ளன. ஆனால் சிவகங்கை போன்ற பகுதிகளில் இவ்வாறான நாணயங்கள் கிடைப்பது அரிது.இவ்வாறு தெரிவித்தனர்.

வெம்பக்கோட்டை அகழாய்வில் தந்தத்தாலான அணிகலன்

வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் அகழாய்வில் யானை தந்தத்தால் ஆன அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய அணிகலன் மற்றும் சுடுமண்ணால் ஆன தொங்கட்டான் கண்டறியப் பட்டுள்ளது. 

வெம்பக்கோட்டை அருகே வைப்பாற்றின் வடகரையில் அமைந்துள்ள உச்சிமேட்டில் 25 ஏக்கர் பரப்பளவிலான தொல்லியல் மேட்டில் கடந்த மார்ச் 16-ஆம் தேதி முதல் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.  முன்னதாக, அகழாய்வில் சுடுமண்ணால் ஆன பகடைக்காய், தக்களி, ஆட்டக்காய்கள், முத்து மணிகள், சங்கு வளையல்கள், சுடு மண்ணால் செய்யப்பட்ட விளையாட்டுப் பொருள்கள், அழகிய வேலைப் பாடுகளுடன் கூடிய சுடு மண் அகல்விளக்கு கண்டறியப்பட்டன.  இந்நிலையில், ஞாயிறன்று அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய யானை தந்தத்தால் செய்யப்பட்ட அணிகலன் மற்றும் சுடுமண்ணால் ஆன தொங்கட்டான் ஆகிய அணிகலன்கள் கண்டறியப்பட்டுள்ளன.  யானை தந்தத்தால் செய்யப்பட்ட அணிகலன் 5 சென்டி மீட்டர் நீளமும், 0.8 சென்டிமீட்டர் விட்டமும், 61 கிராம் எடையும் சுடுமண் தொங்கட்டான் 2.2 சென்டிமீட்டர் நீளமும், 1.01 சுற்றளவும் 65 கிராம் எடையும் கொண்டதாக உள்ளன.

இடுகையிட்டது parthasarathy r நேரம் 6:06 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: கீழடி, முதுமக்கள் தாழிகள்

ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2019

கீழடி அகழாய்வில் பழங்கால மண் கிண்ணம் கண்டெடுப்பு எழு

திருப்புவனம்,ஆக.16, கீழடி அய்ந்தாம் கட்ட அகழாய்வில் பழங்கால மண் கிண்ணம் நேற்று கண்டெடுக்கப்பட் டது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழ டியில் அய்ந்தாம் கட்ட அகழாய்வு ரூ.47 லட்சம் செலவில் நடந்து வருகிறது. இதில் நீண்ட கட்டுமானம் கொண்ட கோட்டைச்சுவர், 7 அடுக்குகள் கொண்ட உறைகிணறு கண்டறியப் பட்டது. இந்த இடத்தை சுற்றியே கடந்த சில நாட்களாக அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. கட்டிட சுவர் கிடைத்திருப்பதால் இப்பகுதியில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நகர நாகரிகத்துடன் மக்கள் வாழ்ந்திருப்பது உறுதியாகி உள்ளது. வேறு  பொருட்கள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப் பில் அகழாய்வு பணிகள் தீவிரம் அடைந்து வருகிறது.
இந்நிலையில் வாய் அகன்றும், உட்புறம் குழி போன்ற அமைப்புடன் கூடிய பழங்கால மண் கிண் ணம் போன்ற பாத்திரம் நேற்று கண்டெடுக்கப்பட் டது. இதை சுடுமண் பாத் திரம் என்றும் கூறுகின்றனர். சேதமடைந்த நிலையில் காணப்பட்ட இந்த கிண்ணம் உட்புறம் கருப்பு, வெளிப்புறம் சிவப்பு வண்ணத்தில் உள் ளது. இது பண்டை காலத்தில் உணவு சாப்பிட பயன்படுத்தப் பட்ட மண் கிண்ணமாக இருக்கலாம் என கருதப் படுகிறது. நீண்ட சுவர், சுடுமண் பாத்திரம்  போன்ற பொருட் களை தேடித்தான் கடந்த சில நாட்களாக தமிழக தொல்லியல் துறை ஆய்வை மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் மண் கிண்ணம் கிடைத்திருப்பது தொல்லி யல் ஆய்வாளர்களை உற்சா கப்படுத்தியுள்ளது.
- விடுதலை நாளேடு,16.8.19
இடுகையிட்டது parthasarathy r நேரம் 6:26 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: கீழடி

திங்கள், 12 ஆகஸ்ட், 2019

கீழடி அகழாய்வில் வெளிநாட்டு அணிகலன்கள் - அகலமான செங்கல் சுவர் கட்டடம், இரும்பு துண்டுகள் கண்டுபிடிப்பு



கீழடி, ஆக.9  சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் நடந்து வரும் அகழாய்வில் வெளி நாட்டு வகையைச் சேர்ந்த அணிக லன்கள் புதன்கிழமை  கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.

கீழடியில் தமிழக அரசு சார்பில் 5 -ஆம் கட்ட அகழாய்வுப் பணி கடந்த ஜூன் 13 -ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதுவரை பலரது நிலங் களில் தோண்டப்பட்ட 20 -க்கும் மேற் பட்ட குழிகளிலிருந்து மண்பாண்ட ஓடுகள், இரட்டை சுவர், நீளமான சுவர், அகலமான சுவர், கல்லால் செய் யப்பட்ட மணிகள், உறைகிணறுகள், எலும்பாலான எழுத்தாணி உள் ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டன.

இந் நிலையில் புதன்கிழமை போதகுரு என்பவர் நிலத்தில் அகல மான செங்கற்களால் கட்டப்பட்ட கட்டடம் கண்டுபிடிக்கப்பட்டது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட செங் கல்களை விட இவை அகலமானவை என தெரியவந்துள்ளது. முருகேசன் என்பவரது நிலத்தில் ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்ட உறைகிணற்றின் உயரம்  நீண்டு கொண்டே செல்கிறது. ஏற்கெனவே 6 உறைகள் கண்டு பிடிக்கப்பட்ட நிலையில் புதன்கிழமை 7 -ஆவது உறை கண்டுபிடிக்கப்பட்டது. ஒவ்வொரு உறையும் ஒன்றரை அடி உயரம் உள்ளதாக கணக்கிடப் பட்டுள்ளது.  மேலும் இங்கு கிடைத் துள்ள அணிகலன்கள், வடஅமெ ரிக்கா, தென்அமெரிக்கா, ஆஸ்தி ரேலியா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட வெளி நாடுகளில் உள்ள மலைகளில் வெட்டி எடுக்கப்படும் அகேட் வகை கல்லில் செய்யப்பட்டவை என்றும், இதனால் பழங்காலத் தமிழர்களுக்கும், வெளிநாட்டினருக்கும் தொடர்பு இருந்திருக்க வாய்ப்புள்ளதாகவும் அகழாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இரும்புத் துண்டுகள் கண்டெடுப்பு

தற்போது கண்டுபிடிக்கப்பட் டுள்ள இரும்புத் துண்டுகள், 2500 ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்தப் பட்டவை என தெரியவந்துள்ளது.

- விடுதலை நாளேடு, 9 .8 .19

இடுகையிட்டது parthasarathy r நேரம் 2:03 PM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: கீழடி

செவ்வாய், 5 மார்ச், 2019

கீழடியில் கிடைத்த தொல்பொருள்கள் 2500 ஆண்டுகள் பழைமையானது

சிவகங்கை, பிப்.27  சிவகங்கை மாவட்டம் கீழடியில் அகழாய்வு செய்த போது கிடைத்த தொல் பொருள்களை நவீன தொழில்நுட்ப முறையில் சோதனை செய்ததில் சுமார் 2500 ஆண்டுகள் பழை மையானது என தெரிய வந்துள்ளது என தமிழ்நாடு அரசின் முதன்மைச் செய லரும், தொல்லியல் துறை ஆணையரு மான த.உதயச்சந்திரன் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் பூவந்தியில் உள்ள மதுரை சிவகாசி நாடார் பயோ னியர் மீனாட்சி பெண்கள் கல்லூரியில் தமிழக கல்வெட்டியல் மற்றும் தொல் லியல் துறை சார்பில் பயிலரங்க தொடக்க விழா மற்றும் புகைப்படக் கண்காட்சி தொடக்க விழா நடைபெற்றது.

தொல்லியல் துறை  ஆணையர் த.உதயச்சந்திரன் கருத்தரங்கைத் தொடக்கி வைத்து பேசியது: தமிழகத்தில் ஏற்கெனவே அகழாய்வுப் பணிகளில் கிடைத்துள்ள தொல் பொருள் களை இன்றைய நவீன தொழில் நுட்பம் மற்றும் அறிவியல் ரீதியாக ஆராய்ச்சி செய்து உலக அரங்கில் தமிழ்ச் சமூகம் மிகத் தொன்மையான சமூகம் என்பதை வெளிக் கொண்டு வரப்படும்.

கீழடியில் தற்போது நவீன தொழில் நுட்பக் கருவியான டிரோன் மூலம் பூமிக்கடியில் 7 முதல் 10 மீட்டர் ஆழம் வரை ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தேவையான இடங் களில் மட்டுமே அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. கீழடியில் விலங்கின் எலும்புகள் கிடைத்துள்ளன. அவை டிஎன்ஏ ஆய்வுக்கு உட்படுத்தப் படும். திருவள்ளூர் மாவட்டம் அத்திரம் பாக்கத்தில் பழங்கால மனிதர்கள் பயன் படுத்திய கற்காலக் கருவிகள் கண் டெடுக்கப்பட்டன.

இதை ஆராய்ச்சி செய்த போது சுமார் 15 லட்சம் ஆண்டுகள் பழைமையானது என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இது இந்திய அளவில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் மிக பழைமையான நாகரிகத்தை எடுத்துக் காட்டுகிறது.

அமெரிக்காவில் புளோரிடா என்னும் பகுதியில் செயல்பட்டு வரும் பீட்டா ஆய்வகம் கீழடி பகுதியில் கிடைத்த தொல்பொருள்களை ஆய்வு செய்ததில் 2500 ஆண்டுகள் பழைமையானது என ஆய்வு முடிவாகத் தெரிவித்துள்ளது. ஆகவே கீழடி பகுதி சார்ந்துள்ள வைகையாற்றங்கரையின் நகர, நாகரிகம் சுமார் 2500 ஆண்டுகள்  பழைமையானது என தெரிய வந்துள்ளது என்றார்.

- விடுதலை நாளேடு, 27.2.19

இடுகையிட்டது parthasarathy r நேரம் 5:37 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: கீழடி

ஞாயிறு, 4 நவம்பர், 2018

தமிழர் வரலாறு எழுகிறதா? புதைகிறதா?



ஒரு விதையை மண்ணுக்குள் எத்தனை ஆண்டுகள் உயிர்த்தன்மையுடன் புதைத்து வைத்திருக்க முடியும்? கீழடியில் மூன்றாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக புதைந்து கிடந்த தமிழர் வரலாற்று விதை இப்போது இலை விட்டு, கிளைவிட்டு விருட்சமாக வளர்ந்து நிற்கிறது. இன்னொரு பக்கம் கீழடி அகழாய்வு முடிவுகளை வெளிவர விடாமல் தடுக்கும் வேலைகள் அரங்கேறு வதாக எச்சரிக்கிறார்கள் ஆய்வாளர்கள்!

அதை உறுதிப்படுத்துவது போலவேதான் இருக்கின்றன நாளும் வரும் செய்திகள், இரண்டுகட்ட அகழாய்வுகளை சிறப்பாக செய்த அமர்நாத் ராமகிருஷ்ணனை மாற்றி மூன்றாம் கட்ட அகழாய்வுகளை நடக்க விடாமல் முடக்கப் பார்த்தது. அதன்பின்னர் தமிழகமே ஒருமித்து கீழடி அகழாய்வுகளை தொடர் குரல் எழுப்பியதும் வேறுவழியே இன்றி மூன்றாம் கட்ட அகழாய்வுகளை செய்தது. அதுவும் பெயரளவுக்கு சில குழிகளை அரைகுறையாக தோண்டி இறுதியாக தொடர்ச்சியான தொன்ம சான்றுகள் கிடைக்கவில்லை என்றுகூறி அத்துடன் மத்திய தொல்லியல்துறை கீழடி ஆய்வுகளை நிறுத்தியது. அதன்பின்னர் அரசியல் கட்சிகள், அமைப்புகள், மக்களின் தொடர் கோரிக்கை களை ஏற்று தமிழக அரசின் தொல்லியல்துறை கீழடியில் நான்காம் கட்ட ஆய்வுகளை செய்தது. இந்த ஆய்வின் முடிவில் மூன்றாயிரம் ஆண்டுகள் தொன்மை வாய்ந்த தங்க ஆபரணங்கள் உட்பட சுமார் 7 ஆயிரம் பொருட்கள் கிடைத்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், முதல் இரண்டு கட்ட ஆய்வுகளை செய்த அமர்நாத் ராமகிருஷ்ணன் அதற்கான அறிக்கைகளை வழங்கக்கூடாது என்று மத்திய தொல்லியல் துறை உத்தரவிட்டுள்ளது தமிழ் ஆர்வலர் களிடையே அதிர்வலைகளை உருவாக்கி யுள்ளது.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் சு.வெங் கடேசனிடம் பேசினோம், ''கீழடியில் முதல் இரண்டு கட்ட ஆய்வினை அமர்நாத் ராமகிருஷ்ணன்தான் செய்துள்ளார். அவர்தான் இடைக்கால அறிக்கையையும் கொடுத்துள்ளார். அதன்பின்னர் மூன்றாம் ஆண்டு சிறீராமன் என்பவர் ஆய்வு செய்தார். மூன்றாம் ஆண்டு அறிக்கையை சிறீராமன் என்பவர்தான் கொடுக்கப் போகிறார் அதில் சிக்கல் இல்லை. அது போல நான்காம் ஆண்டு தமிழக அரசின் ஆய்வை சிவானந்தம் என்பவர் செய்தார். அதற்கான அறிக்கையை அவர்தான் கொடுக்கப்போகிறார். ஆனால், முதல் இரண்டுகட்ட ஆய்வுகளை செய்த அமர்நாத் ராமகிருஷ்ணனுக்கு பதிலாக வேறு ஒருவரை அதற்கான அறிக்கையை கொடுக்க சொல்கிறார்கள். அதுபோல அமர்நாத்தின் கண்காணிப்பில் இருக்கும் பொருட்களை எடுத்துக் கொள்ளுமாறு இப்போதுள்ள அதிகாரியிடம் கூறியுள்ள உத்தரவும் அதிர்ச்சி அளிக்கிறது

அமர்நாத் அறிக்கையை எழுதவேண் டாம் என்று சொல்வது 1959ஆம் ஆண்டின் தொல்லியல் துறை விதிகளுக்கே எதிரானது. யார் ஆய்வு செய்தாரோ அவர்தான் ஆய் வறிக்கையை எழுத முடியும். ஆய்வுக்கு சம்பந்தமே இல்லாத ஒருவர் எப்படி ஆய்வறிக்கையை எழுத முடியும்?

கீழடியில் கிடைத்த தொன்ம சான்றுகள் பாஜகவின் கருத்தியலுக்கு எதிராக இருப்பதால்தான் இவ்வளவு நெருக்கடியும். அது போல ஆதிச்சநல்லூரில் 17 ஆண்டு களுக்கு முன்பு முடிந்த ஆய்வின் அறிக் கையை கொடுக்காமல் அந்த ஆய்வின் பொறுப்பாளர் சத்தியமூர்த்தி காலம் தாழ்த்தி வருகிறார். அவர் ஓய்வுபெற்றே பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன. அந்த அறிக்கையை அவர் விரைந்து கொடுக்க அரசு அழுத்தம் கொடுக்கவேண்டும்.

மூன்றாம் கட்ட அகழாய்வில் ஆய்வின் பொறுப் பாளராக இருந்த அமர்நாத்தை மாற்றிவிட்டு சிறீராமனை நியமித்தார்கள். அவர் பெயருக்கு பத்து குழிகளை தோண்டி ஆய்வை நடத்தி ஏற்கெனவே இருந்த தொன்மங்களின் தொடர்ச்சி இல்லை; எனவே ஆய்வை தொடரவேண்டிய அவசியம் இல்லை என்ற அறிக்கையை கொடுத்தார். ஆனால், நான்காம் ஆண்டாக தமிழக அரசு தொடர்ந்து 34 குழிகளை தோண்டி ஆய்வு செய்து சுமார் 6 ஆயிரத் துக்கும் மேற்பட்ட பொருட்களை எடுத் துள்ளது. அப்படியானால் இங்கு எதுவும் இல்லை என்று மத்திய அரசு சொன்னது ஏமாற்றுதானே?" என்று கேள்வி எழுப்பு கிறார்.

மத்திய தொல்லியல் துறை இப்போது மட்டுமல்ல நூறாண்டுக்கும் மேலாகவே தமிழகத்தை வஞ்சிப்பதாக குற்றம் சாட்டு கிறார் வரலாற்று ஆய்வாளர் வெள்உவன், "இந்திய தொல்லியல்துறை எதற்காக கீழடிக்கு இவ்வளவு நெருக்கடிகளை செய்கிறது ? அதன் பொறுப்பாளராக இருந்த அமர்நாத்தை ஏன் இவ்வளவு நெருக்கடிக்கு உள்ளாக்குகிறார்கள் என்று யோசித்தாலே இதில் உள்ள அரசியல் புரியும்.

இப்போதுள்ள மதுரை என்பது பழைய மதுரை இல்லை என்று ஒரு கருத்து இருக்கிறது. இப்போதுள்ள மதுரையில் பெரிய அளவில் தொன்மையான வரலாற்று சான்றுகள் கிடைப்பதில்லை. அதனால் பழைய மதுரை இப்போது கீழடி ஆய்வு நடந்த பகுதியில்தான் இருந்திருக்கலாம் என்று அங்கு அகழாய்வில் கிடைத்த தரவுகளின் அடிப்படையில் தெரியவருகிறது. இதில் கிடைத்த பொருட்கள், நகர அமைப்புகள், தங்க ஆபரணங்கள் கிட்டத்தட்ட மூவாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்ததாக சொல்லப்படுகிறது.

இத்தனை நாட்களாக சொல்லப்படும் வரலாறு அனைத்தையுமே இது திருப்பிப் போடும் வகையில் இருப்பதால் இது மத்திய அரசை கலக்கத்திற்கு உள்ளாக்கி இருக்கலாம். கீழடி போல வே ஆதிச்சநல்லூரில் 2004-ஆம் ஆண்டில் நிறைவுற்ற ஆய்வின் அறிக்கைகள் இதுவரை வெளிவரவே இல்லை. அதன் பொறுப்பாளராக இருந்த சத்தியமூர்த்தி இதுவரை அந்த ஆய்வின் அறிக்கையை கொடுக்காமல் தொடர்ந்து காலதாமதம் செய்வது ஏன் ?

கீழடி, ஆதிச்சநல்லூர், கொடுமணல், பூம்புகார் என்று நடத்தப்படும் ஆய்வுகள் தமிழர்களின் தொன்மையான வரலாற்றுக் கான ஆவணங்களை வழங்குகின்றன. இந்த தரவுகள் வடமொழிதான் உயர்வானது என்ற கருத்தை உடைத்தெறிகிறது.

இந்த ஆய்வுகளின் அறிக்கைகள் வெளிவந்தால் இந்திய, உலக வரலாறே திருத்தப்பட வாய்ப்புள்ளது.  பாஜக என்று இல்லை, காங்கிரஸ் இருந்தபோதும் தமிழர் களின் வரலாறு வெளிவரக்கூடாது என்ற எண்ணம் இருந்தது. நூறாண்டுகளாகவே இந்த மறைக்கப்படும் வேலை நடக்கிறது. 1920ஆம் ஆண்டுதான் சிந்துசமவெளி ஆய்வுகளே நடக்கின்றன. அதற்கு அய்ம்பது ஆண்டு களுக்கு முன்னரே ஆதிச்சநல்லூரில் ஜெர்மானிய அறிஞர் ஒருவரால் ஆய்வுகள் நடத்தப்பட்டு அந்த அகழாய்வு பொருட்கள் ஜெர்மனியில் உள்ளன. அதனைப் பற்றி யாரும் பேசவே இல்லை . அது அப்படியே மூடி  மறைக்கப்பட்டது. மேலும், சிந்துவெளி நாகரிகமே தமிழர்களின் நாகரிகத்துடன் தொடர்புடையதுதான். அங்கேயே காளை உருவத்திற்கு பதிலாக குதிரை உருவமாக மாற்ற முயற்சி செய்ததாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

ஆதிச்சநல்லூரில் இரும்பு கிடைத்துள்ளது. ஆனால், சிந்துவெளி நாகரிகத்தில் இரும்பு கிடைக்கவில்லை. ஆதிச்சநல்லூரில் இரும்பு கிடைத்ததை மத்திய அரசு ஒப்புக்கொண்டால் இரும்புக்காலம் பற்றிய வரலாறு, அதன் காலகட்டம் அனைத்தும் மாறும்.  ஆதிச்ச நல்லூர் ஒரு ஈமச்சடங்கு நடத்தும் இடம்தான்; கொடுமணல் ஒரு வியாபார மய்யம்தான் என்று சொல்லி தமிழர்களின் நகர அமைப்புக்கு, குடியிருப்புக்கு சான்றுகள் எதுவும் இல்லை என்று குறை சொல்லி வந்தார்கள். ஆனால், கீழடி ஆய்வுகளில் சிறப்பான நகர அமைப்புகள் கிடைத் துள்ளது. அதனால், தமிழகத்தில் நடந்த அகழாய்வு களிலேயே மிக முக்கியத்துவம் வாய்ந்தது கீழடி ஆய்வு. அதனால்தான் அதற்கு எதிர்ப்பும் உள்ளது. கீழடியை நிலைநிறுத்த, வெளிக்கொணர நாம் எப்படி முயற்சி செய்கிறோமோ, அதேபோல கீழடியை மறைக்க, ஒன்றுமில்லாமல் ஆக்க அவர்கள் முயற்சி செய்கிறார்கள்.

தமிழர்களின் தொன்மையை, தனித் துவத்தை வடக்கில் உள்ளவர்களால் ஏற்றுக் கொள்ளவே முடிவதில்லை. அதனால்தான், இந்த போக்கு இருக்கிறது. ஆதிச்சநல்லூர் ஆய்வின்போது ஒரு பானை ஓட்டில் கரி அரவ என்ற பெயர் எழுதியுள்ளதாக சொன் னார்கள், அது பற்றிய செய்திகள் பத்திரி கைகளில்கூட வெளிவந்தன. ஆனால், "அதன்பின்னர் அது எழுத்தே இல்லை, கரையான் அரித்த தடம் என்று மாற்றி விட்டார்கள். நான் ஒருமுறை ஆதிச்சநல்லூர் பொறுப்பாளர் சத்தியமூர்த்தியிடம் இதுபற்றி கேட்டபோது அவர் மழுப்பலான பதிலையே சொன்னார். ஆய்வாளர்களுக்கே பெரிய அளவில் அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இல்லையென்றால் அமர்நாத் போல தூக்கி அடிக்கப்படுவார்கள் என்பதுதான் உண்மை .

பூம்புகாரில் கடலுக்குள் மூழ்கிய மிகப்பெரிய - நகரம் இருப்பதாக கிரகாம் குக் என்ற அறிஞர் மிக சிறப்பான ஆய்வை செய்தார். அதனையே வெளியிட முடியாத அளவு வைத்திருக்கிறார்கள். அது 10 ஆயிரம் ஆண்டுகால தொன்மையான நகரம் என்று அவர் சொல்கிறார். இப்படி எல்லாவகையிலும் நமது அகழாய்வுகள் முடக்கப்படு கின்றன என்று வேதனைப்படுகிறார் வெள் உவன்.

இதன் பின்னாலுள்ள அரசியல் பற்றி பேசும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் துணைச்செயலாளர் சி, மகேந்திரன், தமிழர்கள் வரலாற்று ரீதியாக தொன்மை யானவர்கள் என்பதற்கான ஆதாரங்கள் அதிகம் உள்ளன.

ஹரப்பா, மொஹஞ்சதரோ கண்டுபிடிக்கப் பட்ட காலத்திலேயே அதில் தமிழ்ப் பண் பாட்டின் கூறுகள் இருப்பதான குரல்கள் எழுந்தன. ஆனால், அதை மறைத்து சமஸ்கிருதம்தான் இந்தியாவின் தாய்மொழி என்பதாக ஒரு பிம்பத்தை கட்டமைக்கும் முயற்சி காலம்காலமாக நடக்கிறது. இந்த மூடி மறைப்பு முயற்சியையும் தாண்டி தமிழ், தமிழர்களின் அடையாளங்கள் இப்போது எல்லா இடங்களிலும் கிடைக் கின்றன. ஆப்கானிஸ்தான் தொடங்கி வட இந்தியா முழுவதும் தமிழர்களின் வரலாற்றுத் தடங்கள் இருப்பதாக ஒடிசாவின் கூடுதல் தலைமை செயலாளர் பாலகிருஷ்ணன் தனது ஆய்வுப் புத்தகத்தில் விளக்கியுள்ளார்.

சமஸ்கிருதத்தை,  இந்துத்துவத்தை  நிலைநிறுத்தத் தான் தமிழர்களின் வரலாறு இப்படி மறைக்கப்படுகிறது என்கிறார்.

- சு.வீரமணி

(நன்றி: புதிய தலைமுறை, 25.10.2018)

- விடுதலை ஞாயிறுமலர், 27.10.18

இடுகையிட்டது parthasarathy r நேரம் 9:29 PM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: கீழடி

புதன், 30 மே, 2018

கீழடியில் நான்காம் கட்ட அகழாய்வில் பழங்காலப் பொருள்கள் கண்டெடுப்பு



 


சிவகங்கை, மே 20 சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடை பெற்ற நான்காம் கட்ட அகழாய் வில் மீண்டும் பழங்காலப் பொருள்கள் கிடைத்துள்ளன.

கடந்த 2014 ஆம் ஆண்டு பெங்களூரில் அமைந்துள்ள இந்திய தொல் பொருள் அகழாய்வு மையம் நடத்திய ஆய்வில் சிவகங்கை மாவட்டம் கீழடி பள்ளிச்சந்தை புதூர் திடலில் சுமார் 80 ஏக்கர் பரப்ப ளவில் பழங்கால பொருள்கள் இருப்பதற்கான சான்றாதாரங்கள் கண்டறியப்பட்டன.

இதையடுத்து, கடந்த 2015ஆம் ஆண்டு மார்ச் 2 ஆம் தேதி அங்கு அகழாய்வுப் பணி கள் தொடங்கின. முதல் இரண்டு கட்ட அகழாய்வில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் வாழ்ந்ததற்கான நகர வீடுகள், மண் பாண்ட ஓடுகள், கலை நயமிக்க பானை கள் உள்ளிட்ட ஏராளமான பொருள்கள் கிடைத்தன.

பின்னர் நடைபெற்ற மூன்றாம் கட்ட அகழாய்வில், தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், சதுர மற்றும் வட்ட வடிவிலான செப்புக் காசுகள், தங்கப் பொருள்கள், மண்ணால் செய்யப்பட்ட உருவங்களும் கிடைத்தன.

இந்நிலையில் கீழடியில் நான்காம் கட்ட அகழாய்வுப் பணிகளை தமிழக தொல்லியல் துறை மேற்கொள்ளும் என மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து, கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி  நான்காம் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடங் கின. இதுவரை 13 குழிகள் தோண்டப் பட்டுள்ளன.

இதில், மண் பானைகள், கலை நயமிக்க மண்பாண்ட ஓடுகள் உள்ளிட்ட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பழங் காலப் பொருள்கள் தற்போது கிடைத்துள்ளன. இப்பணியில், தமிழக தொல்லியல் துறை அலுவலர்கள், ஆய்வு மாண வர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
- விடுதலை நாளேடு, 20.5.18

இடுகையிட்டது parthasarathy r நேரம் 1:15 PM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: கீழடி

திங்கள், 12 மார்ச், 2018

சிந்து சமவெளியில் பேசப்பட்ட மொழி தமிழ்தான் கீழடி அகழாய்வு மூலம் உறுதியாகிறது


சென்னை, மார்ச் 12- -சிந்து சம வெளியில் பேசப்பட்டமொழி தமிழ்தான் என்று கீழடி அக ழாய்வு மூலம் தெரியவந்திருப் பதாக ஆய்வாளர்கள் கூறியுள்ள னர்.

தமிழகத்தில் ஆதிச்சநல் லூருக்கு அடுத்தபடியாக கீழடியில்தான் பெரிய அளவிலான அகழாய்வு மேற்கொள்ளப்பட் டது. தற்போது நிறுத்தி வைக் கப்பட்டு இருந்த ஆதிச்சநல்லூர் ஆய்வு மீண்டும் தொடங்கப் படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் கீழடி யில் கிடைத்து இருக்கும் தமிழ் எழுத்துக்கள் பல உண்மைகளை வெளிக்கொண்டு வந்துள்ளன.

இதுநாள்வரை கூறப்பட்டு வந்த வரலாற்றை மொத்தமாக மாற்றும் வகையில் இந்த செய் திகள் அமைந்துள்ளன. 2017-இல் நடத்தப்பட்ட அகழாய்வு முடிவுகளின் படி கீழடியில் கிடைத்தபொருட்கள் மிகவும் பழமையானவையாக உள்ளன. அங்கு கிடைத்த வீட்டு உப யோக பொருட்கள் எல்லாம் 2200 ஆண்டுகள் பழமையானது என்று உறுதிப்படுத்தப்பட்டு உள்ளதால், இதுதான் மிகவும் பழமையான நாகரிகம் என்று மதிப்பிடப்படுகிறது.

மேலும், கீழடியில் காணப் பட்டது அனைத்தும் தமிழ் எழுத்துக்கள். அதிலும் பழைய தமிழ் எழுத்து முறைகளே பயன்படுத்தப்பட்டு இருக்கின் றன. அத்துடன், சங்ககால தமிழ் ஓலைச்சுவடிகளைச் போலவே இந்த எழுத்துக்கள் இருக்கின் றன. இந்த மாதிரியான எழுத் துக்கள் சிந்து சமவெளி ஆய் விலும் கிடைத்து இருப்பதால், சிந்து சமவெளியில் பயன்படுத் தப்பட்ட மொழி தமிழ்மொழி தான் என்றும், அங்கு பயன் படுத்தப்பட்ட வார்த்தைகளும் தமிழ் வார்த்தைகள் என்றும் ஆய்வாளர்கள் முடிவுக்கு வந் திருக்கின்றனர்.

இதுகுறித்து இன்னும் ஆராய்ச்சிகள் செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. கீழ டியில் நடத்தப்படும் ஆய்வுகள் பல முக்கியமான வரலாற்று உண்மைகளை வெளிப்படுத் தும் என்று சங்க கால குறியீட்டு ஆராய்ச்சியாளர் சுபாஷ் சந்திர போஸ் தெரிவித்துள்ளார்.

- விடுதலை நாளேடு, 12.3.18

இடுகையிட்டது parthasarathy r நேரம் 6:37 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: கீழடி, சிந்துவெளி
பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)

திருவள்ளுவர்

திருவள்ளுவர்
குமரிக் கடலில்133 அடிஉயர சிலை

இந்த வலைப்பதிவில் தேடு

கருத்து களம்

வலைப்பதிவு காப்பகம்

  • ▼  2026 (2)
    • ▼  ஜனவரி (2)
      • தைப்பொங்கல் – திராவிடர் பண்பாட்டு மீட்டுருவாக்கத் ...
      • பொள்ளாச்சி துப்பாக்கி சூடு பொய்யா?
  • ►  2025 (9)
    • ►  டிசம்பர் (1)
    • ►  நவம்பர் (1)
    • ►  அக்டோபர் (2)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (1)
    • ►  மார்ச் (2)
    • ►  பிப்ரவரி (1)
  • ►  2024 (69)
    • ►  டிசம்பர் (3)
    • ►  அக்டோபர் (50)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (4)
    • ►  ஜூன் (5)
    • ►  மே (2)
    • ►  பிப்ரவரி (2)
    • ►  ஜனவரி (2)
  • ►  2023 (17)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (3)
    • ►  மே (3)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  மார்ச் (6)
    • ►  பிப்ரவரி (2)
    • ►  ஜனவரி (1)
  • ►  2022 (18)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (2)
    • ►  மே (1)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (8)
  • ►  2021 (26)
    • ►  டிசம்பர் (1)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (3)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (1)
    • ►  ஏப்ரல் (3)
    • ►  மார்ச் (4)
    • ►  பிப்ரவரி (4)
    • ►  ஜனவரி (4)
  • ►  2020 (44)
    • ►  டிசம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (3)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (5)
    • ►  ஏப்ரல் (4)
    • ►  மார்ச் (5)
    • ►  பிப்ரவரி (16)
    • ►  ஜனவரி (8)
  • ►  2019 (85)
    • ►  டிசம்பர் (10)
    • ►  நவம்பர் (8)
    • ►  அக்டோபர் (10)
    • ►  செப்டம்பர் (5)
    • ►  ஆகஸ்ட் (9)
    • ►  ஜூலை (10)
    • ►  ஜூன் (3)
    • ►  மே (8)
    • ►  ஏப்ரல் (2)
    • ►  மார்ச் (2)
    • ►  பிப்ரவரி (8)
    • ►  ஜனவரி (10)
  • ►  2018 (131)
    • ►  டிசம்பர் (5)
    • ►  நவம்பர் (17)
    • ►  அக்டோபர் (5)
    • ►  செப்டம்பர் (9)
    • ►  ஆகஸ்ட் (19)
    • ►  ஜூலை (19)
    • ►  ஜூன் (4)
    • ►  மே (3)
    • ►  ஏப்ரல் (7)
    • ►  மார்ச் (13)
    • ►  பிப்ரவரி (14)
    • ►  ஜனவரி (16)
  • ►  2017 (74)
    • ►  டிசம்பர் (7)
    • ►  நவம்பர் (3)
    • ►  அக்டோபர் (8)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (11)
    • ►  ஜூலை (6)
    • ►  ஜூன் (3)
    • ►  மே (6)
    • ►  ஏப்ரல் (9)
    • ►  மார்ச் (3)
    • ►  பிப்ரவரி (5)
    • ►  ஜனவரி (11)
  • ►  2016 (61)
    • ►  டிசம்பர் (6)
    • ►  நவம்பர் (13)
    • ►  அக்டோபர் (13)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (9)
    • ►  ஜூலை (3)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (14)
  • ►  2015 (48)
    • ►  டிசம்பர் (9)
    • ►  நவம்பர் (17)
    • ►  அக்டோபர் (3)
    • ►  செப்டம்பர் (5)
    • ►  ஆகஸ்ட் (4)
    • ►  ஜூலை (5)
    • ►  ஜூன் (1)
    • ►  மார்ச் (2)
    • ►  ஜனவரி (2)
  • ►  2014 (1)
    • ►  அக்டோபர் (1)

இதற்கு குழுசேரவும்

இடுகைகள்
Atom
இடுகைகள்
கருத்துகள்
Atom
கருத்துகள்

எனது வலைப்பதிவு பட்டியல்

  • விடுதலை வலைப்பூ

மொத்தப் பக்கக்காட்சிகள்

லேபிள்கள்

  • 10-ஆம் நூற்றாண்டு
  • அ. ச. ஞானசம்பந்தன்
  • அகத்தியம்
  • அகத்தியர்
  • அகரமுதலி
  • அச்சு
  • அண்ணா
  • அப்பாதுரையார்
  • அம்பேத்கர்
  • அமெரிக்கா
  • அமைச்சர்
  • அயல்நாடு
  • அரசு ஆணை
  • அரசுடமை
  • அரபி
  • அரபு
  • அரபு மொழி
  • அரியானா
  • அரேபியா
  • அவமதிப்பு
  • அளவைகள்
  • அறிவிப்பு
  • அறிவியல்
  • அறைகலன்
  • ஆ.ராசா
  • ஆங்கிலம்
  • ஆசிரியர்
  • ஆசிரியர் அறிக்கை
  • ஆட்சிமொழி
  • ஆய்வு
  • ஆராய்ச்சி
  • ஆரியம்
  • ஆரியர்
  • ஆஸ்திரேலியா
  • இசை
  • இடம்
  • இணையம்
  • இந்தி
  • இந்தி எதிர்ப்பு
  • இந்தி திணிப்பு
  • இந்திய எதிர்ப்பு
  • இந்திய மொழிகள்
  • இந்து மதம்
  • இராபர்ட் கால்டுவெல்
  • இரும்பின் தொன்மை
  • இரும்பு உருக்காலை
  • இரும்புக்காலம்
  • இலக்கணம்
  • இலக்கிய நூல்கள்
  • இலக்கியம்
  • இலக்குவனார்
  • இலங்கை
  • இழிமொழி
  • இழிவு
  • இறப்பு
  • இனம்
  • ஈகிகள்
  • உ.வே.சா.
  • உச்சர நீதிமன்ற தீர்ப்பு தமிழில்
  • உருக்கு இரும்பு
  • உருது
  • உலகம் முழுவதும் தமிழ்
  • உவேசா
  • ஊர்தி பயணம்
  • எண்கள்
  • எலும்புக்கூடு
  • எழுத்து
  • எழுத்து சீர்திருத்தம்
  • ஒற்றைப்பத்தி
  • ஒன்பது
  • ஓகம்
  • ஓமன்
  • கட்டாயம்
  • கடவுள்
  • கடவுள் வாழ்த்து
  • கடை
  • கண்ணகி
  • கம்போடியா
  • கருநாடகம்
  • கருப்பு
  • கல்திட்டை
  • கல்லூரி
  • கல்வெட்டு
  • கலவை மொழி
  • கலைஞர்
  • கவரி மான்
  • களவு
  • கனடா
  • கால்டுவெல்
  • கி வீரமணி
  • கி.வீரமணி
  • கிணறு
  • கிழமை
  • கீழடி
  • குடமுழுக்கு
  • குமரி அனந்தன்
  • கோபுரம்
  • கோயில்
  • சங்க இலக்கியம்
  • சங்ககாலம்
  • சங்கம்
  • சங்கராச்சாரி
  • சமசுகிருதம்
  • சமஸ்கிருதம்
  • சர்.ஏ. டி. பன்னீர்செல்வம்
  • சனாதனம்
  • சாதி
  • சிங்கப்பூர்
  • சிந்துவெளி
  • சிலப்பதிகாரம்
  • சிறப்பு
  • சீர்திருத்தம்
  • சீனா
  • செங்காந்தள்
  • செந்தமிழ்
  • செந்தமிழ் சொற்பிறப்பியல்
  • செம்மொழி
  • சொல் சிறப்பு
  • சொற்கள்
  • சொற்போர்
  • டி.ஆர்.பாலு
  • தந்தை பெரியார்
  • தமிழ்
  • தமிழ் ஆண்டு
  • தமிழ் இருக்கை
  • தமிழ் எண்
  • தமிழ் எழுத்து
  • தமிழ் கல்வெட்டு
  • தமிழ் காந்தி
  • தமிழ் சுவடி
  • தமிழ் தாய் வாழ்த்து
  • தமிழ் தேசியம்
  • தமிழ் நாடு
  • தமிழ் பயிற்சி
  • தமிழ் பாடம்
  • தமிழ் புத்தாண்டு
  • தமிழ் பெருமை
  • தமிழ் மரபு
  • தமிழ் மைல் கல்
  • தமிழ் மொழி
  • தமிழ்த் தாத்தா
  • தமிழ்த் தொண்டு
  • தமிழ்த்தாய் வாழ்த்து
  • தமிழ்தேசியம்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு நாள்
  • தமிழ்ப் பற்று
  • தமிழ்ப் புத்தாண்டு
  • தமிழ்ப் பெயர்கள்
  • தமிழக பரப்பு
  • தமிழர்
  • தமிழர் திருநாள்
  • தமிழர் மதம்
  • தமிழர் விழா
  • தமிழர்கள்
  • தமிழிசை
  • தமிழில் கையொப்பம்
  • தமிழில் பெயர்
  • தமிழின் பிள்ளைகள்
  • தமிழினம்
  • தனித்தமிழ்
  • தனித்தமிழ்நாடு
  • திங்கள்
  • திராவிட மொழி
  • திராவிடம்
  • திராவிடம்-தமிழ்
  • திராவிடர் - தமிழர்
  • திராவிடர் இயக்கம்
  • திராவிடர் பண்பாட்டு திருவிழா
  • திரு
  • திருக்குறள்
  • திருக்குறள் மாநாடு
  • திருத்தம்
  • திருப்புகழ்
  • திருமாவேலன்
  • திருவள்ளுவர்
  • திருவள்ளுவர் விருது
  • திருவிக
  • திருவில்லிபுத்தூர்
  • தினமலர்
  • தீர்ப்பு
  • தீர்மானம்
  • துக்ளக்
  • துப்பாக்கி சூடு
  • துளு
  • தேசம்
  • தேவநேய பாவாணர்
  • தேவநேயப்பாவாண்ர்
  • தை
  • தை மாதம்
  • தைப்பொங்கல்
  • தொண்டு
  • தொல்காப்பியம்
  • தொன்மை
  • தொன்மை மொழி
  • தோற்றம்
  • நில அளவை
  • நினைவு சின்னம்
  • நீச பாசை
  • நீதிக்கட்சி
  • நீர்நிலைகள்
  • நூல்
  • நூல் வெளியீடு
  • நூல்கள்
  • நோபல் பரிசு
  • பண்பாடு
  • பதிப்பித்தவர்
  • பதிப்பு
  • பதிலடி
  • பயிற்சி
  • பரிதிமாற் கலைஞர்
  • பல்கலைக்கழகம்
  • பழந்தமிழ்
  • பழந்தமிழர் முறை
  • பாகுபாடு
  • பார்ப்பன பனியா
  • பார்ப்பனர்
  • பார்ப்பான்
  • பாரதி
  • பாவாணர்
  • பானை ஓடு
  • பிராகிருதம்
  • புத்தகம்
  • புத்தாண்டு
  • புரட்சி கவிஞர்
  • புரட்சிக்கவிஞர்
  • புறநானூறு
  • பூங்கா
  • பெயர் பலகை
  • பெயர்ப்பலகை
  • பெரியார்
  • பெருஞ்சித்திரனார்
  • பேட்டி
  • பேரணி
  • பொங்கல்
  • பொள்ளாச்சி
  • ம்னிதன்
  • மலேசியா
  • மலையாளம்
  • மறைமலை அடிகள்
  • மனுதர்மம்
  • மாட்டிறைச்சி
  • மாநாடு
  • மின்சாரம்
  • முதல் நூல்
  • முதன்மை
  • முதன்மை மொழி
  • முதன்மொழி
  • முதுமக்கள் தாழிகள்
  • மும்மூர்த்திகள்
  • முருகன்
  • மூல மொழி
  • மே.வங்கம்
  • மைசூரு ஆய்வகம்
  • மைல்கல்
  • மொழி
  • மொழி புள்ளிவிவரம்
  • மொழி வெறுப்பு
  • மொழி-பெரியார்
  • மொழிகள் அழிவு
  • மொழிப்பயிற்சி
  • யாதும் ஊரே
  • யோகா
  • ராபர்ட் கால்டுவெல்
  • ராவணன்
  • வ .உ. சி
  • வ உ சி
  • வ.உ.சி.
  • வடமொழி
  • வடமொழிகள்
  • வணிகம்
  • வரலாறு
  • வருணாசிரமம்
  • வளர்ச்சி
  • வன்மம்
  • விருது
  • வேதம்
  • ஜாதி
  • ஜி.யு.போப்
  • ஜெயமோகன்
  • ஹிந்தித் திணிப்பு

பிரபலமான இடுகைகள்

  • "யாதும் ஊரே யாவரும் கேளிர்"- முழுமையான பாடல்
    பழமையான பாடல் ஒன்று... இன்று உலகம் முழுவதும் தேடப்பட்டு, உச்சரிக்கப்படுகிறது. அது, கணியன் பூங்குன்றனார் எழுதிய, "யாதும் ஊரே யாவரு...
  • தமிழ்ப் பதிப்பின் தலைமகன்
    ஆங்கிலேயர் வருகையாலும் அய்ரோப்பிய கிறித்தவப் பாதிரி மார்கள் முயற்சியாலும் நூல்கள் அச்சு ஊர்தியேறி உலா வந்தன. தமிழ்நூல் ஒன்றுதான் மு...
  • திருக்குறளை மலம் என்று விமர்சித்தாரா பெரியார்?
    'துக்ளக்கின்' கோணல் பார்வை.... கி.தளபதிராஜ் மயிலாடுதுறை நடைபெற்று முடிந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து ஆட...
  • திராவிட இயக்கம் வளர்த்த தமிழ்
    இதழியல் தமிழ் "திராவிட இயக்கத்தின் போராட்டத்துக்கு இதழ்கள் கருவிகளாகப் பயன்பட்டன. எவரும் துப்பாக்கி தூக்கவில்லை; எழுதுகோல் தான் அவர்...
  • தந்தை பெரியாரின் தமிழ் தொண்டும், தமிழ் பற்றும்
    தந்தை பெரியாரின் தமிழ் தொண்டும், தமிழ் பற்றும் ஆதாரங்கள் இதோ : தந்தை பெரியார் மீது அவதூறு பரப்பும் அற்ப பேர்வழிகளுக்கான பதில்  ===========...
  • ‘யாயும் ஞாயும் யாரா‘கியரோ-குறுந்தொகை
    ‘‘யாயும் ஞாயும் யாராகியரோ எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர் நீயும் யானும் எவ்வழி அறிதும் செம்புலப் பெயல் நீர்போல அன்புடை நெஞ்சந்தாங்...
  • செங்காந்த மலர்
    காந்தள் , செங்காந்தள் , வெண்காந்தள் மலர் : ஓர் அலசல் .                 ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ...
  • தமிழின் தனித்தன்மை
    தமிழ்மொழியின் தனித்தன்மையும் தனிமைத் தன்மையும் பகுதி II - தமிழின் தனித்தன்மை தவிர்க்க இயலாத தத்துவம் மாற்றம் என்பது மாறாத உல...
  • ‘திராவிடம்’ என்பது சமஸ்கிருதச் சொல்லா?
    கால்டுவெல் கூற்றை கண்மூடி ஏற்பதா? - மஞ்சை வசந்தன் ---------------------------------------------- “தமிழ்” என்ற பெயருக்கு நிகரான சமஸ்கிருதப் ப...
  • வ.உ.சி. பன்னூல் திரட்டு, வ.உ.சி. திருக்குறள் உரை நூல்கள்
         November 19, 2021  • Viduthalai முதலமைச்சர்   மு . க . ஸ்டாலின்   வெளியிட்டார் சென்னை , நவ .19-  கப்பலோட்டிய   தமிழர்   வ . உ . சி . யி...

Translate

என்னைப் பற்றி

parthasarathy r
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
ஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.