பக்கங்கள்

திங்கள், 30 அக்டோபர், 2017

ஜகத்குரு சங்கராச்சாரியசுவாமிகள் “நீச” பாஷையில் பேசலாமா?


1934ஆம் ஆண்டு புரட்சியிலிருந்து...

கண்ட பார்ப்பான் - காணாத பார்ப்பான் உரையாடல்.

க: என்ன சாஸ்திரிகளே நேற்று சனாதன கான்பரன்சுக்கு வந்திருந்தேளா?

கா: நீங்கள் போயிருந்தேளே என்ன நடந்தது?

க: அதை என்ன சொல்லச் சொல்கிறேள். ஆதிசேஷ னாலும் வர்ணிக்க முடியாது குறைந்தது இரண்டாயிரம் ரூபாய் செலவிருக்கும், பாயாசம் பட்சணத்தோடு சாப்பா டையா!

கா: எல்லோருக்குமா?

க: எல்லோருக்குமில்லை. இருந்தாலும் நான் விடுவேனா? சாப்பிட்டு விட்டேன்.

கா: சாப்பாடு கிடக்கட்டும், அதைச் சொல்லி என் வயிற் றெறிச்சலை கிளப்பப் பார்க்கிரேளா, அங்கே என்ன நடந்தது, அதைச் சொல்லுங்கோ.

க: முதல் நாள் ஸ்வாமியளவாள் மூனு மணி நேரம் இங்கிலீஷிலே ஜமாச்சுட்டாள். என்ன ஜோர்! என்ன ஜோர்!! நீங்கள் வராமலிருந்துட்டேளே.

கா: உங்களுக்கும் எனக்கும் இங்கிலீஷிலே ஒரு அட்சரம்கூட தெரியாதே ஸ்வாமி. நான் வந்து என்ன பண்ண. உங்களுக்கு எதனாலே அய்யா நன்னாயிருந்தது?

க:  ஸன்னிதானம் இங்கிலீஷிலே பேசுறபோது அங்கே யிருந்த வக்கீல் ஸனாதனிகள் எல்லாம் ரொம்ப ரொம்ப ரெஸிச்சாள். அநேக இடங்களிலே சிரித்தாள். சில சமயங்களிலே “ஹியர்” இன்னாள். அதினாலே நன்னாத்தானே இருந்திருக்கணும்.

கா: என்ன அநியாயம்! ஆச்சாரியாள் அதிலும் ஜகத்குரு “நீச” பாஷையிலேயா ஸனாதனம் பேசறது! என்ன அக் கிரமம், பறையன் கோவிலுக்குள் போனாக்கூட பிராயச் சித்தம் உண்டு. இந்த அதர்மத்துக்கு ஏதையா பிராயச்சித்தம். எல்லாம் புதுசு புதுசா வராப்பலே இதுவும் ஒரு அபிநவ ஸனாதனம் போலிருக்கு?

க: ராஜாவுக்கும் வைஸ்ராய்க்கும் தெரிய வேண்டாமா சாஸ்திரியளே?

கா: நம்ம சாஸ்திரப்படி எந்த சத்ரியன் நமக்கு இப்போ ராஜாவா யிருக்கான், அவனிட்டே தெரிவிக்க, ஆச்சாரிகளும் சவுகர்யம் போலே தர்மாசரணை செய்யலாமானால் காந்தியும் சாஸ்திரத்துக்கு அர்த்தம் நன்னாய்ச் சொல்லலாம்.

க: என்ன சாஸ்திரியளே அப்படியானால் பஞ்சமர் எல்லாம் கோவிலுக்குள் வரலாம் என்கிரேளா.

கா: அப்படித்தான் சொல்கிறேன்.

க: என்ன சாஸ்திரியளே. இதுவரை உங்களை ஸ்னாதனி என்றல்லவா நினைச்சேன். திடீரென ஹரிஜன சாஸ்திரிய ளாய் மாறிட்டேளே.

கா: உமக்கு கண்ணிருக்கா அதோ பாரும் பூட்ஸ் காலோடே அந்த கிருஸ்தவரும் வாயிலே சுருட்டோடே அந்த முஸ்லிமும் த்தஜஸ்தம்பம் வரை போலாமானால் கட்டாயமாய் நம்ம பறையன் முத்தனும் சக்கிலி பழனியும் இன்னம் கொஞ்சதூரம் கூட உள்ளே போலாம் சாஸ்திரி யாளே.

க: (பதில் சொல்ல முடியாமல் விழித்துக் கொண்டு) சாஸ்திரியளே ரொம்ப கோபத்திலிருக்கேள். இப்போ உங்களிட்டே தர்மம் பேசப்படாது! கோபம் படாதய்யா நான் போறேன்.

கா: எனக்கு ஒன்றும் கோபமில்லை சாஸ்திரியளே எல்லாம் ஆசாரியாளுக்குத் தானிருக்கு.

க: என்னய்யா ஸ்வாமிகளைப் பத்தி கண்டபடி பேசுரேள்.

கா: எந்த சாஸ்திரத்திலே அய்யா ஆச்சாரியாளை மோட்டாரிலும், ரயிலிலும் போகக் சொல்லியிருக்கு? எந்த  ஸ்மிருதியிலே, பிராமணனை வக்கீல் பண்ணச் சொல்லி ருக்கு. கோர்ட்டிலே பஞ்சமன் ஜட்ஜா வந்தா அவனுக்கு மரியாதையோடு எழுந்து நின்று ஸலாம் போட்டு “யுவர் ஆனர், யுவர் லாட்ஷிப்” என்று சொல்ல எந்தச் சுருதியிலே சொல்லிருக்கு சாஸ்திரியளே.

க: அதெல்லாம் ஆபத்தர்மம் அய்யா,

கா: ஆபத்தர்மம் இது தானா? லட்சக்கணக்காய் சம்பாதிச்ச பிறகும் கூட இன்னும் ஆசை விடாமல் ராக்கொள்ளி பிசாசு மாதிரி கட்சிக்காரன் ரத்தத்தை உறுஞ்சரது. இவர் தான் இப்போது இந்த ஆபத்தர்மம் நடத்திக் கொண்டு நம்ம சனாதனத்தைக்  காப்பாற்ற  வந்திருக்காளய்யா, எல்லாம் பெரியவாளுக்கு ஒரு ஸ்னாதனம், ஏழைகளுக்கு தனிஸ்னாதனம் போலிருக்கு. கோவிலுக்குள் பஞ்சமனை மட்டுமா போகக்கூடாதென்று சொல்லிருக்கு? பதிதனும் போகக்கூடாதேஸ்வாமி, கோவிலிலே எத்தனை பதிதன் வாரான் தெரியுமா உமக்கு? நீங்கள் தினம் என்னய்யா பிராயச்சித்தம் பண்ணரேள். ஆகமசாஸ்திரப்படி கோவிலில் மூர்த்தியின் ஸான் னித்யம் போய் ரொம்ப நாளாயிருக்க னுமே? இந்த கோவில்களிலே பறையன் போய் என்னய்யா குறையப்போறது? இன்னம் ஒரு விஷயம் அதையும் கேளும். என்னிக்கி நாம் சமஸ்கிருதத்தை கேவலமாய் எண்ணி பர பாஷையை பெரிசாய் நினைத்து நம்ம குழந் தைகளை வாசிக்க வச்சோமோ அன்னிக்கி  தொலைந்தது நம்ம ஸனாதனமும், நம்ம பிராமணயமும். மனுஸ்மிருதி 2ஆவது அத்தியாயம் 168வது ஸூலோகத்திலே ‘எந்தத்

துவிஜன்’ (பிராமண, சத்ரிய வைசிஜன்) வேதாத்யாயனம் பண்ணாமல் மற்றதைப் படிக்கிறானோ அவன் அதே ஜன்மத்திலேயே வெகு லேசாக குடும்பத்துடன் சூத்திரனாய் விடுகிறான். ஆகையால் நாம் எல்லோரும் சூத்திரர்கள் தான் அஸெம்ளியிலே ரெங்கய்யர் கொண்டு வந்த பில் ரொம்பசரி. ஓய் சாஸ்திரிகளே இன்னும் கேளும்.

மகாபாகவத்திலே ஏகாதச சகந்தத்திலே சிறீதரர் சொல்லுகிறார் “நோச்சுரேத் யாவனீம் பாஷாம் பிராணை கண்ட கதைரபி அதாவது பிராமணன் கழுத்துக்கு கத்தி வந்தாலும் ஏ பி சி என்று உச்சாரயம் பண்ணக்கூடாது என்று அர்த்தமில்லையா? இப்போது இங்கிலீஷ் உச்சரிக்காத பிராம்ணன் எங்கே அய்யா இருக்கான்? பூரி ஆச்சாரி யாளுக்கு இப்போ நீங்கள் ஏற்படுத்தி இருக்கிற மஹத்வம் யவண பாஷா பாண்டியத் துக்காகதானே?

க: இதெல்லாம் ஏனய்யா பேசரேள்? பிரகிருக சர்ச்சை தீண்டாமையைப் பத்தித்தானே, பின்னே பிராமணன் என்ன செய்யணும் என்கிறீர்?

கா: இப்போது இவ்வளவுஸனாதனம் பேசறவாள் சாஸ்திரப் படியே நடந்து காட்ட வேண்டியது முன்பு பட்டாடாடை கட்டிக் கொண்டிருந்த இங்கிலீஷ் படித்த பிராமணாள் இப்போது பஞ்சகச்சம் கட்டிக்கொண்டுச் சாந்துக்கு பதில் விபூதியும் குங்குமமும் போட்டுக் கொண்டும் தெருத்திண்ணையில் உட்கார்ந்து கொண்டோ அல்லது சீட்டாடிக் கொண்டோ அல்லது  காந்தியை வைதுகொண்டு பழைய தொழில்களை விடாமல் நடத்திக்கொண்டு வந்தால் அது ஸனாதனமாகாது.

முதலாவது, ஆச்சாரியாள் இங்கிலீஷை மறக்கணும்  வக்கீல் ஸனாதனிகள் வக்கீல் தொழிலை விடணும். ஸ்ருதிஸ்மிருதி புராண இதிகாசங்களையும் பாரத்ட அத்தியாபனம் யாகம் பிரதிக்ரஹம் இவைகளைக் கொண்டு உஜ்ஜீவிக்கணும் அவாள் குழந்தைகளுக்கு இங்கிலீஷ் சொல்லிக்கொடுக்க கூடாது. அப்படி அவர்கள் நடக்கத் தயாரில்லா விட்டால் அவாள் சனாதனத்தினைப்பற்றி பேசக் கூடாது தெரியுமா?

ஆஸ்திகர்களே 
எது நல்லது? 

கல்லில் தெய்வம் இருப்பதாகக் கருதி, அதற்கு ஒரு கோவில் கட்டி, அந்த சாமியை வணங்க தரகர் ஒருவரையும் வைத்து அந்த கல்லுச்சாமிக்கு மனிதனுக்கு செய்யும் அல்லது மனிதன் தான் செய்து கொள்ளும் மாதிரி யாகவெல்லாம் செய்து, அதற்கு வீணாக பணத்தை பாழாக்கி நேரத்தை வீணாக்குவது நன்மையானதா?

அல்லது மனிதனிலேயே தெய்வம் இருப்பதாகக் கருதி அதற்கு அந்த மனிதனையே தரகராக வைத்து தனக்கு வேண்டியது போலவும் தான் பிறர் தன்னிடத்தில் நடக்க வேண்டுமென்று கருதுவது போலவும்  அந்த மனிதனுக்கு செய்து அவனிடத்தில் நடந்து கொள்வது நல்லதா?

குடி அரசு, 21.12.1930

சிறீரங்கம் ரங்கநாதரின் நன்றி கெட்டதனம்

சிறீரங்கம் சிறீரங்கநாத சுவாமி சிறிது கூட நன்றி விஸ்வாசமில்லாமல் தனது பூஜைக்கும், உற்சவத்திற்கும் பணம் சேகரித்து வைப்பதற்காக ரங்கநாதர் லாட்டரி சீட்டு என்னும் பெயரால் ஒரு லாட்டரி சீட்டு நடத்த முக்கிய ஏற்பாடு செய்தவரும், அந்த சீட்டு நடவடிக்கைக்கு பிரதம காரியதரிசியாய் இருந்தவருமான ராவ்பகதூர் சடகோபாசாரியாரை தபால் படித்துக் கொண்டிருக்கும் போது திடீரென்று கொன்று போட்டார்.

இந்தப் படுபாவி ரங்கநாதர் வைகுண்ட ஏகாதசிக்கு வருகின்ற பக்தர்கள் எத்தனை பேரைக் கொல்லப் போகின் றாயோ தெரியவில்லை. இப்போதே ஏகாதசி உற்சவத்திற்கு வரும் பக்தர்களுக்கும் பிரசாதமாக சிறீரங்கத்திற்கும், திருச்சிக்கும் காலரா, மாரியம்மாளை அனுப்பிவிட்டாராம். இனி அங்கு வரும் எத்தனை பக்தர்கள் அந்தப் பிரசாதத்தைக் கொண்டு போய் எந்தெந்த ஊர் பக்தர்களுக்கு வினியோகிப் பார்களோ தெரியவில்லை.

குடி அரசு,  21.12.1930

சுதந்திர நாடு என்றால் அங்குப் பார்ப்பான், பறையன், சூத்திரன் மற்ற எந்த ஜாதியுமே இருக்கக்கூடாது. மனிதன் தானிருக்க வேண்டும். எப்படிக் கடவுளும், மதமும், கோயிலும் நம்மை மடையர்களாக்கி, இழி மக்களாக்கி வைத்திருக்கிறதோ அது போன்றதுதான் சுயராஜ்ஜியம், சுதந்திரம், ஜனநாயகம் என்பதும் நம்மை இழிவுபடுத்தி வைத்திருக்கிறது.           - தந்தை பெரியார்




புதன், 25 அக்டோபர், 2017

தமிழைப்பற்றி தமிழர் - பார்ப்பனர் கருத்துக்கள்

மனோன்மணியம் ஆசிரியர் பி. சுந்தரம் பிள்ளை தமிழைப் பார்த்து சொல்லுகிறார். ஆரியம் போலுலக வழக்கழிந்தொழிந்து சிதையா உன் சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே. - என்று சொல் லுகிறார். இது ஒரு தமிழ் மகனால் சொல்லப்பட்டது.
இனி சுப்பிரமணியபாரதி தமிழ்த்தாயே சொல்லுவதாக சொல்லுவதைப் பாருங்கள்.

உயர் ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன் - என்று சொல்லு கிறார். இது ஒரு ஆரிய மகன் - பார்ப்பனரால் சொல்லப்பட்டது.
என்ன செய்தாலும் ஜாதிப்புத்தி போகாதய்யா ராஜ கோபால மாலே என்று பெரியார் கூறிய அனுபவ மொழியை உறுதிப் படுத்த இவை உதவுகின்றன போலும்.

சுந்தரம் பிள்ளை அவர்கள், பேச்சு வழக்கில் இல்லாமல் அழிந்துபட்ட வடமொழிபோல் உன் (தமிழின்) கதி ஏற்பட்டு விடாமல் என்றும் ஒன்றுபோல் இளமைத்தன்மையுடன் விளங்குகிறாய் என்று போற்றுகிறார்.

பாரதியோ போற்றாவிட்டாலும், தமிழ்த்தாய்.

உயர்ந்த மொழியான ஆரிய (வட) மொழிக்கு சமானமாக ஒரு காலத்தில் வாழ்ந்தேன். இப்போது சீரழிந்து கெட்டுப்போய் விட்டேன் என்பது ஆக புலம்புவதாகத் தாழ்வுபடுத்திக் காட்டுவ தோடு, ஆரியம் இன்றும் மேன்மையாக இருப்பதாகவும் தமிழ்த் தாயைக் கொண்டே சொல்லச் செய்கிறார்.

ஆகவே சுப்பிரமணிய பாரதியின் தமிழ்ப்பற்றை அவரது நாளைக் கொண்டாடும் பண்டித முண்டங்கள் இதிலிருந்தாவது உணர்வார்களாக.

இனத்தின் பேரால் பார்ப்பனரும், மதத்தின் பேரால் இஸ்லா மியரும், வகுப்பின் பேரால் சட்டக்காரர்களும் ஆகிய இவர் களுக்கு எவ்வளவுதான் இரத்தக்கலப்பு ஏற்பட்டாலும் புத்திக் கலப்பு மாத்திரம் ஏற்படவே ஏற்படாது. ஒரே புத்திதான். அதா வது முறையே தங்கள் இனம், மதம், வகுப்பு ஆகியவைகளை சிறிதுகூட விட்டுக் கொடுக்காமலும் அவைகளையே உயர் வென்று பேசும் அபிமானமும் வேறு எவனாவது தாழ்த்திச் சொன்னால் ரோஷப்படும் குணமும் கொண்ட உயர்ந்த புத்தி மாறவே மாறாது. தமிழனுக்கு அவைமாத்திரம் கிடையாது. கம்பனைப் போல் ஒரு கை கூழுக்கு என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். இதனால்தான் அவர்கள் மேன்மையாய் வாழு கிறார்கள். இவர்கள் கீழ்மையாய் (சூத்திரர்களாய்) வாழுகிறார்கள். தமிழைக் குறைகூற வேண்டாம் என்று எந்த சமஸ்கிருதப் பண்டிதர்கள் வாயிலிருந்தாவது ஒரு வார்த்தையாவது வந்திருப் பதாக ஒரு பண்டிதராவது காட்ட முடியுமா?

ஆனால் எத்தனை தமிழ்ப் பண்டிதன் சமஸ்கிருதத்தின் திருவடிகளே தஞ்சம் என்று சகஸ்ரநாம அர்ச்சனை செய்கிறார் கள். கணக்குச் சொல்ல வேண்டுமா? இதைச் சொல்லவே வெட் கமாக இருக்கிறது. இனி அதைச் சொல்ல என்னமாயிருக்கும்? தயவு செய்து மன்னியுங்கள்.

குடியரசு - கட்டுரை - 06-11-1943

-விடுதலை நாளேடு, 16.9.17

வியாழன், 12 அக்டோபர், 2017

ஜகத்குரு சங்கராச்சாரியசுவாமிகள் “நீச” பாஷையில் பேசலாமா?

1934ஆம் ஆண்டு புரட்சியிலிருந்து...

கண்ட பார்ப்பான் - காணாத பார்ப்பான் உரையாடல்.

க: என்ன சாஸ்திரிகளே நேற்று சனாதன கான்பரன்சுக்கு வந்திருந்தேளா?

கா: நீங்கள் போயிருந்தேளே என்ன நடந்தது?

க: அதை என்ன சொல்லச் சொல்கிறேள். ஆதிசேஷ னாலும் வர்ணிக்க முடியாது குறைந்தது இரண்டாயிரம் ரூபாய் செலவிருக்கும், பாயாசம் பட்சணத்தோடு சாப்பா டையா!

கா: எல்லோருக்குமா?

க: எல்லோருக்குமில்லை. இருந்தாலும் நான் விடுவேனா? சாப்பிட்டு விட்டேன்.

கா: சாப்பாடு கிடக்கட்டும், அதைச் சொல்லி என் வயிற் றெறிச்சலை கிளப்பப் பார்க்கிரேளா, அங்கே என்ன நடந்தது, அதைச் சொல்லுங்கோ.

க: முதல் நாள் ஸ்வாமியளவாள் மூனு மணி நேரம் இங்கிலீஷிலே ஜமாச்சுட்டாள். என்ன ஜோர்! என்ன ஜோர்!! நீங்கள் வராமலிருந்துட்டேளே.

கா: உங்களுக்கும் எனக்கும் இங்கிலீஷிலே ஒரு அட்சரம்கூட தெரியாதே ஸ்வாமி. நான் வந்து என்ன பண்ண. உங்களுக்கு எதனாலே அய்யா நன்னாயிருந்தது?

க:  ஸன்னிதானம் இங்கிலீஷிலே பேசுறபோது அங்கே யிருந்த வக்கீல் ஸனாதனிகள் எல்லாம் ரொம்ப ரொம்ப ரெஸிச்சாள். அநேக இடங்களிலே சிரித்தாள். சில சமயங்களிலே “ஹியர்” இன்னாள். அதினாலே நன்னாத்தானே இருந்திருக்கணும்.

கா: என்ன அநியாயம்! ஆச்சாரியாள் அதிலும் ஜகத்குரு “நீச” பாஷையிலேயா ஸனாதனம் பேசறது! என்ன அக் கிரமம், பறையன் கோவிலுக்குள் போனாக்கூட பிராயச் சித்தம் உண்டு. இந்த அதர்மத்துக்கு ஏதையா பிராயச்சித்தம். எல்லாம் புதுசு புதுசா வராப்பலே இதுவும் ஒரு அபிநவ ஸனாதனம் போலிருக்கு?

க: ராஜாவுக்கும் வைஸ்ராய்க்கும் தெரிய வேண்டாமா சாஸ்திரியளே?

கா: நம்ம சாஸ்திரப்படி எந்த சத்ரியன் நமக்கு இப்போ ராஜாவா யிருக்கான், அவனிட்டே தெரிவிக்க, ஆச்சாரிகளும் சவுகர்யம் போலே தர்மாசரணை செய்யலாமானால் காந்தியும் சாஸ்திரத்துக்கு அர்த்தம் நன்னாய்ச் சொல்லலாம்.

க: என்ன சாஸ்திரியளே அப்படியானால் பஞ்சமர் எல்லாம் கோவிலுக்குள் வரலாம் என்கிரேளா.

கா: அப்படித்தான் சொல்கிறேன்.

க: என்ன சாஸ்திரியளே. இதுவரை உங்களை ஸ்னாதனி என்றல்லவா நினைச்சேன். திடீரென ஹரிஜன சாஸ்திரிய ளாய் மாறிட்டேளே.

கா: உமக்கு கண்ணிருக்கா அதோ பாரும் பூட்ஸ் காலோடே அந்த கிருஸ்தவரும் வாயிலே சுருட்டோடே அந்த முஸ்லிமும் த்தஜஸ்தம்பம் வரை போலாமானால் கட்டாயமாய் நம்ம பறையன் முத்தனும் சக்கிலி பழனியும் இன்னம் கொஞ்சதூரம் கூட உள்ளே போலாம் சாஸ்திரி யாளே.

க: (பதில் சொல்ல முடியாமல் விழித்துக் கொண்டு) சாஸ்திரியளே ரொம்ப கோபத்திலிருக்கேள். இப்போ உங்களிட்டே தர்மம் பேசப்படாது! கோபம் படாதய்யா நான் போறேன்.

கா: எனக்கு ஒன்றும் கோபமில்லை சாஸ்திரியளே எல்லாம் ஆசாரியாளுக்குத் தானிருக்கு.

க: என்னய்யா ஸ்வாமிகளைப் பத்தி கண்டபடி பேசுரேள்.

கா: எந்த சாஸ்திரத்திலே அய்யா ஆச்சாரியாளை மோட்டாரிலும், ரயிலிலும் போகக் சொல்லியிருக்கு? எந்த  ஸ்மிருதியிலே, பிராமணனை வக்கீல் பண்ணச் சொல்லி ருக்கு. கோர்ட்டிலே பஞ்சமன் ஜட்ஜா வந்தா அவனுக்கு மரியாதையோடு எழுந்து நின்று ஸலாம் போட்டு “யுவர் ஆனர், யுவர் லாட்ஷிப்” என்று சொல்ல எந்தச் சுருதியிலே சொல்லிருக்கு சாஸ்திரியளே.

க: அதெல்லாம் ஆபத்தர்மம் அய்யா,

கா: ஆபத்தர்மம் இது தானா? லட்சக்கணக்காய் சம்பாதிச்ச பிறகும் கூட இன்னும் ஆசை விடாமல் ராக்கொள்ளி பிசாசு மாதிரி கட்சிக்காரன் ரத்தத்தை உறுஞ்சரது. இவர் தான் இப்போது இந்த ஆபத்தர்மம் நடத்திக் கொண்டு நம்ம சனாதனத்தைக்  காப்பாற்ற  வந்திருக்காளய்யா, எல்லாம் பெரியவாளுக்கு ஒரு ஸ்னாதனம், ஏழைகளுக்கு தனிஸ்னாதனம் போலிருக்கு. கோவிலுக்குள் பஞ்சமனை மட்டுமா போகக்கூடாதென்று சொல்லிருக்கு? பதிதனும் போகக்கூடாதேஸ்வாமி, கோவிலிலே எத்தனை பதிதன் வாரான் தெரியுமா உமக்கு? நீங்கள் தினம் என்னய்யா பிராயச்சித்தம் பண்ணரேள். ஆகமசாஸ்திரப்படி கோவிலில் மூர்த்தியின் ஸான் னித்யம் போய் ரொம்ப நாளாயிருக்க னுமே? இந்த கோவில்களிலே பறையன் போய் என்னய்யா குறையப்போறது? இன்னம் ஒரு விஷயம் அதையும் கேளும். என்னிக்கி நாம் சமஸ்கிருதத்தை கேவலமாய் எண்ணி பர பாஷையை பெரிசாய் நினைத்து நம்ம குழந் தைகளை வாசிக்க வச்சோமோ அன்னிக்கி  தொலைந்தது நம்ம ஸனாதனமும், நம்ம பிராமணயமும். மனுஸ்மிருதி 2ஆவது அத்தியாயம் 168வது ஸூலோகத்திலே ‘எந்தத்

துவிஜன்’ (பிராமண, சத்ரிய வைசிஜன்) வேதாத்யாயனம் பண்ணாமல் மற்றதைப் படிக்கிறானோ அவன் அதே ஜன்மத்திலேயே வெகு லேசாக குடும்பத்துடன் சூத்திரனாய் விடுகிறான். ஆகையால் நாம் எல்லோரும் சூத்திரர்கள் தான் அஸெம்ளியிலே ரெங்கய்யர் கொண்டு வந்த பில் ரொம்பசரி. ஓய் சாஸ்திரிகளே இன்னும் கேளும்.

மகாபாகவத்திலே ஏகாதச சகந்தத்திலே சிறீதரர் சொல்லுகிறார் “நோச்சுரேத் யாவனீம் பாஷாம் பிராணை கண்ட கதைரபி அதாவது பிராமணன் கழுத்துக்கு கத்தி வந்தாலும் ஏ பி சி என்று உச்சாரயம் பண்ணக்கூடாது என்று அர்த்தமில்லையா? இப்போது இங்கிலீஷ் உச்சரிக்காத பிராம்ணன் எங்கே அய்யா இருக்கான்? பூரி ஆச்சாரி யாளுக்கு இப்போ நீங்கள் ஏற்படுத்தி இருக்கிற மஹத்வம் யவண பாஷா பாண்டியத் துக்காகதானே?

க: இதெல்லாம் ஏனய்யா பேசரேள்? பிரகிருக சர்ச்சை தீண்டாமையைப் பத்தித்தானே, பின்னே பிராமணன் என்ன செய்யணும் என்கிறீர்?

கா: இப்போது இவ்வளவுஸனாதனம் பேசறவாள் சாஸ்திரப் படியே நடந்து காட்ட வேண்டியது முன்பு பட்டாடாடை கட்டிக் கொண்டிருந்த இங்கிலீஷ் படித்த பிராமணாள் இப்போது பஞ்சகச்சம் கட்டிக்கொண்டுச் சாந்துக்கு பதில் விபூதியும் குங்குமமும் போட்டுக் கொண்டும் தெருத்திண்ணையில் உட்கார்ந்து கொண்டோ அல்லது சீட்டாடிக் கொண்டோ அல்லது  காந்தியை வைதுகொண்டு பழைய தொழில்களை விடாமல் நடத்திக்கொண்டு வந்தால் அது ஸனாதனமாகாது.

முதலாவது, ஆச்சாரியாள் இங்கிலீஷை மறக்கணும்  வக்கீல் ஸனாதனிகள் வக்கீல் தொழிலை விடணும். ஸ்ருதிஸ்மிருதி புராண இதிகாசங்களையும் பாரத்ட அத்தியாபனம் யாகம் பிரதிக்ரஹம் இவைகளைக் கொண்டு உஜ்ஜீவிக்கணும் அவாள் குழந்தைகளுக்கு இங்கிலீஷ் சொல்லிக்கொடுக்க கூடாது. அப்படி அவர்கள் நடக்கத் தயாரில்லா விட்டால் அவாள் சனாதனத்தினைப்பற்றி பேசக் கூடாது தெரியுமா?

ஆஸ்திகர்களே 
எது நல்லது? 

கல்லில் தெய்வம் இருப்பதாகக் கருதி, அதற்கு ஒரு கோவில் கட்டி, அந்த சாமியை வணங்க தரகர் ஒருவரையும் வைத்து அந்த கல்லுச்சாமிக்கு மனிதனுக்கு செய்யும் அல்லது மனிதன் தான் செய்து கொள்ளும் மாதிரி யாகவெல்லாம் செய்து, அதற்கு வீணாக பணத்தை பாழாக்கி நேரத்தை வீணாக்குவது நன்மையானதா?

அல்லது மனிதனிலேயே தெய்வம் இருப்பதாகக் கருதி அதற்கு அந்த மனிதனையே தரகராக வைத்து தனக்கு வேண்டியது போலவும் தான் பிறர் தன்னிடத்தில் நடக்க வேண்டுமென்று கருதுவது போலவும்  அந்த மனிதனுக்கு செய்து அவனிடத்தில் நடந்து கொள்வது நல்லதா?

குடி அரசு, 21.12.1930

சிறீரங்கம் ரங்கநாதரின் நன்றி கெட்டதனம்

சிறீரங்கம் சிறீரங்கநாத சுவாமி சிறிது கூட நன்றி விஸ்வாசமில்லாமல் தனது பூஜைக்கும், உற்சவத்திற்கும் பணம் சேகரித்து வைப்பதற்காக ரங்கநாதர் லாட்டரி சீட்டு என்னும் பெயரால் ஒரு லாட்டரி சீட்டு நடத்த முக்கிய ஏற்பாடு செய்தவரும், அந்த சீட்டு நடவடிக்கைக்கு பிரதம காரியதரிசியாய் இருந்தவருமான ராவ்பகதூர் சடகோபாசாரியாரை தபால் படித்துக் கொண்டிருக்கும் போது திடீரென்று கொன்று போட்டார்.

இந்தப் படுபாவி ரங்கநாதர் வைகுண்ட ஏகாதசிக்கு வருகின்ற பக்தர்கள் எத்தனை பேரைக் கொல்லப் போகின் றாயோ தெரியவில்லை. இப்போதே ஏகாதசி உற்சவத்திற்கு வரும் பக்தர்களுக்கும் பிரசாதமாக சிறீரங்கத்திற்கும், திருச்சிக்கும் காலரா, மாரியம்மாளை அனுப்பிவிட்டாராம். இனி அங்கு வரும் எத்தனை பக்தர்கள் அந்தப் பிரசாதத்தைக் கொண்டு போய் எந்தெந்த ஊர் பக்தர்களுக்கு வினியோகிப் பார்களோ தெரியவில்லை.

குடி அரசு,  21.12.1930

சுதந்திர நாடு என்றால் அங்குப் பார்ப்பான், பறையன், சூத்திரன் மற்ற எந்த ஜாதியுமே இருக்கக்கூடாது. மனிதன் தானிருக்க வேண்டும். எப்படிக் கடவுளும், மதமும், கோயிலும் நம்மை மடையர்களாக்கி, இழி மக்களாக்கி வைத்திருக்கிறதோ அது போன்றதுதான் சுயராஜ்ஜியம், சுதந்திரம், ஜனநாயகம் என்பதும் நம்மை இழிவுபடுத்தி வைத்திருக்கிறது.           - தந்தை பெரியார்
-விடுதலை நாளேடு, 29.917

இராமநாதபுரம் அருகே 5000 ஆண்டுகள் பழைமையான புதிய கற்கால கற்கோடரி கண்டெடுப்பு



முல்லைக்கோட்டை, செப்.29 இராமநாதபுரம் அருகே போக லூர் கண்மாயின் வடக்கில் முல்லைக்கோட்டை முனீஸ்வரர் கோவில் உள்ளது. இப் பகுதியில் 40 ஏக்கர் பரப்பள வில் பானை ஓடுகள் சிதறிக் கிடப்பதாக ஆசிரியர்கள் காந்தி, பூமிநாதன்ஆகியோர் கொடுத்த தகவலின் பேரில் இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே. இராஜகுரு, செயலாளர் ஞானகாளிமுத்து, முனைவர் பட்ட ஆய்வாளர் ஹரிகோபால கிருஷ்ணன் ஆகியோர் அப் பகுதியில் கள ஆய்வு செய்தனர்.

அப்போது புதிய கற்கா லத்தைச் சேர்ந்த கற்கோடரி, தானியங்களை அரைக்க பயன் பட்ட அரைப்புக்கற்கள், கவண் கல், குறியீடு உள்ள பானை ஓடுகள், மட்பாத்திரங்களை வைப்பதற்குரிய பானைத் தாங்கிகள், கருப்பு- சிவப்பு பானை ஓடுகள், சிவப்பு நிற பானை ஓடுகள், கருப்பு நிற பானை ஓடுகள், நெசவுத் தொழிலுக்குப் பயன்படும் தக்களி, வட்டச்சில்லுகள், சுடு மண் கெண்டியின் உடைந்த பகுதி, கைப்பிடி,மான் கொம்பு, இரும்புதாதுக்கள், இரும்புக்கழிவு கள், இரும்புக் கத்தியின் முனைப்பகுதி ஆகி யவை கண்டெடுக்கப்பட்டன.

இங்கு கிடைத்த கற்கோ டரி புதிய கற்காலத்தைச் சேர்ந் தது. இது சுமார் 5000 ஆண்டுகள் பழமையானது. கருங்கல்லால் ஆன இதைநன்கு தேய்த்து வழு வழுப்பாக்கி மெருகேற்றியுள்ள னர். இதன் மேல்பகுதியில் சிறு சிறு துளைகள் உள்ளன. இது அதிகம் பயன்படுத்தியதால் ஏற்பட்டதாக இருக்கலாம். இதன் அகன்றவெட்டும் பகுதி கூர்மையானதாகவும், குறுகிய பகுதி கூர்மை குறைந்தும் உள்ளது. மரத்தாலான தடியில் கட்டி இதை ஆயுதமாக பயன் படுத்தியுள்ளார்கள். ஒரு கருப்பு -சிவப்பு பானை ஓட்டில் த என்னும் தமிழ் பிராமி எழுத்துபோன்ற குறியீடும், மற் றொன்றில் திரிசூலக் குறியீடும் உள்ளன.

இவை 2000 ஆண்டுகள் பழ மையானவை. புதிய கற்காலக் கருவியோடு இரும்புக்கால, சங்க கால பானைஓடுகளும் கிடைப்பதன் மூலம் புதிய கற்காலம் முதல்சங்க காலம் வரை பல ஆயிரம் ஆண்டுகள் மக்கள் குடியிருப்புப் பகுதியாக இவ்வூர் விளங்கியுள்ளது.வட தமிழ்நாட்டில் அதிகஅளவில் புதிய கற்காலக்கருவிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ள நிலையில் தென் தமிழ்நாட்டில் சமயநல்லூர், கீழடி உள்ளிட்ட ஒரு சில இடங்களில் மட்டுமே கிடைத்துள்ளன.
-விடுதலை நாளேடு, 29.9.17

.


செவ்வாய், 10 அக்டோபர், 2017

கி.மு. 3 ஆயிரம் ஆண்டில் வாழ்ந்த புதிய கற்கால மனிதர்களின் கற்கருவி, குத்துக்கல் கண்டெடுப்பு


விழுப்புரம், அக்.10 விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே புதிய கற்கால மனிதர்கள் வாழ் விடத்தை, களப்பயணம் மேற் கொண்ட அரசுப் பள்ளி மாண வர்கள் கண்டறிந்துள்ளனர். புதிய கற்காலத்தில் பயன்படுத் தப்பட்ட கருவிகளும் கண் டெடுக்கப்பட்டன.
20 பேர் அடங்கிய குழுவினர்

செஞ்சி வட்டம், பென்னகர் அரசு உயர்நிலைப் பள்ளியில் இயங்கி வரும் தொன்மைப் பாதுகாப்பு மன்ற மாணவர்கள், விழுப்புரம் மாவட்ட முதன் மைக் கல்வி அலுவலர் ஜோ.ஆஞ்சலோ இருதயசாமி ஆலோசனையின்பேரில், அக்.2 ஆம் தேதியன்று தொன்மைப் பாதுகாப்பு விழிப்புணர்வு களப் பயணத்தை, தொன்மை பாது காப்பு மன்ற விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைப்பாள ரும், பென்னகர் அரசு உயர் நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியருமான நா.முனுசாமி தலைமையில் மாணவர்கள் 20 பேர் அடங்கிய குழுவினர், வரலாறு பட்டதாரி ஆசிரியர் எஸ்.சரவணன், அறிவியல் ஆசிரியர் எஸ்.தண்டபாணி உள்ளிட்டோர் மேற்கொண்டனர். இவர்கள் செஞ்சி வட்டம் சண்டிசாட்சி மலையடிவாரத்தில் நீலகண்டன் என்பவரின் விவ சாய நிலத்திலும், மலையில் இருந்து வரும் நீரோடை பகுதி யிலும் ஆய்வு செய்தனர்.

அப்போது, சுமார் கி.மு.3ஆயிரம் ஆண்டில் வாழ்ந்த புதிய கற்கால மனிதர்கள் பயன்படுத் திய கற்கருவி, குத்துக்கல் மற் றும் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் பயன்படுத் திய மண்ணால் செய்யப்பட்ட புகைப்பான் ஆகியவற்றைக் கண்டறிந்தனர்.

மேலும், அண்ணமங்கலம் செங்காட்டு மலையடிவாரத்தில் மாளிகை மேடு என்றழைக்கப் படும் பகுதியில் உள்ள பல ராமன் விவசாய நிலத்தின் அருகே ஆய்வு மேற்கொண்ட போது புதிய கற்கால மனிதர்கள் பயன்படுத்திய குத்துக்கல், செல்ட் எனப்படும் சிறிய கைக் கோடாரி, வட்டக்கல், நீர் ஊற்றி வைக்கப்படும் கெண்டியின் மூக்கு பகுதி ஆகியவற்றை மாணவர்கள் கண்டெடுத்தனர். இந்த கற்கருவிகளைக் கொண்டு இந்தப் பகுதியில் வாழ்ந்த புதிய கற்கால மனிதர்கள் காய், கனி களை உண்டும், வேளாண்மை செய்தும் மலையின் அடிவாரத் தில் உள்ள சமதளப் பரப்பில் வாழ்ந்திருக்கலாம் எனக் கருதப் படுகிறது.

செஞ்சி பகுதியில் புதிய கற்கால மனிதர்களின் வாழ் விடம் கண்டுபிடிக்கப்பட்டிருப் பது இதுவே முதன்முறை. இதுவரை தமிழ்நாட்டின் வட பகுதிகளான சேலம், தருமபுரி மாவட்டங்களில் மட்டுமே புதிய கற்கால மனிதர்கள் வாழ்ந்த இடம் அமைந்திருக்க லாம் எனத் தெரியவந்துள்ள நிலையில், செஞ்சி பகுதியிலும் அவர்கள் வாழ்ந்திருக்கலாம் என்பது தற்போது உறுதி செய் யப்பட்டுள்ளது.

இந்த களப்பயணத்தின்போது செஞ்சிக்கோட்டை தொல்லியல் விழிப்புணர்வு மன்ற நிறுவனர் லெனின் மாணவர்கள் கண்டெ டுத்த கற்கருவிகளை புதிய கற்கால மனிதர்கள் பயன்படுத் தியதுதான் என்பதை உறுதி செய்தார்.

-விடுதலை நாளேடு, 10.10.17