பக்கங்கள்

சனி, 28 மார்ச், 2020

சமசுகிருத சொல்லுக்கு தமிழ்ச்சொல்

வடமொழிச் சொற்களுக்கான தமிழ்ச் சொற்கள்

நாம் அன்றாடம் தமிழ்ச் சொற்கள் போலவே பயன் படுத்தும் சில வடமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் கீழே தரப்பட்டுள்ளது.


அகங்காரம் – செருக்கு
அக்கிரமம் – முறைகேடு
அசலம் – உறுப்பு
அசூயை – பொறாமை
அதிபர் – தலைவர்
அதிருப்தி – மனக்குறை
அதிருஷ்டம்- ஆகூழ், தற்போது
அத்தியாவசியம் –இன்றியமையாதது
அநாவசியம் -வேண்டாதது
அநேகம் – பல
அந்தரங்கம்- மறைபொருள்
அபகரி -பறி, கைப்பற்று
அபாயம் -இடர்
அபிப்ராயம் -கருத்து
அபிஷேகம் -திருமுழுக்கு
அபூர்வம் -புதுமை
அமிசம் -கூறுபாடு
அயோக்கியன் -நேர்மையற்றவன்
அர்த்தநாரி -உமைபாகன்
அர்த்த புஷ்டியுள்ள -பொருள் செறிந்த
அர்த்தம் -பொருள்
அர்த்த ஜாமம் – நள்ளிரவு
அர்ப்பணம் -படையல்
அலங்காரம் -ஒப்பனை
அலட்சியம் – புறக்கணிப்பு
அவசரமாக – உடனடியாக, விரைவாக
அவஸ்தை – நிலை, தொல்லை
அற்பமான – கீழான, சிறிய
அற்புதம் – புதுமை
அனுபவம் – பட்டறிவு
அனுமதி – இசைவு


ஆச்சரியம் – வியப்பு
ஆக்ஞை – ஆணை, கட்டளை
ஆட்சேபணை – தடை, மறுப்பு
ஆதி – முதல்
ஆபத்து – இடர்
ஆமோதித்தல் – வழிமொழிதல்
ஆயுதம் – கருவி
ஆரம்பம் -தொடக்கம்
ஆராதனை -வழிபாடு
ஆரோக்கியம் – உடல்நலம்
ஆலோசனை – அறிவுரை
ஆனந்தம் – மகிழ்ச்சி


இஷ்டம் – விருப்பம்
இங்கிதம் – இனிமை


ஈன ஜன்மம் – இழிந்த பிறப்பு
ஈனஸ்வரம் – மெலிந்த ஓசை


உக்கிரமான – கடுமையான
உபசாரம் – முகமன் கூறல்
உபயோகம் – பயன்
உதாசீனம் – பொருட்படுத்தாமை
உத்தரவாதம் – பிணை, பொறுப்பு
உத்தரவு – கட்டளை
உல்லாசம் – களிப்பு
உற்சாகம் – ஊக்கம்


ஐதீகம் – சடங்கு, நம்பிக்கை


கர்ப்பக்கிருகம் – கருவறை
கர்மம் – செயல்
கலாச்சாரம் – பண்பாடு
கலாரசனை – கலைச்சுவை
கல்யாணம் – மணவினை, திருமணம்
கஷ்டம் – தொல்லை, துன்பம்
கீதம் – பாட்டு, இசை
கீர்த்தி – புகழ்
கீர்த்தனை- பாமாலை, பாடல்
கோஷம் – ஒலி


சகலம் – எல்லாம், அனைத்தும்
சகஜம் – வழக்கம்
சகி – தோழி
சகோதரி – உடன் பிறந்தவள்
சங்கடம் – இக்கட்டு, தொல்லை
சங்கதி – செய்தி
சங்கோஜம் – கூச்சம்
சதம் – நூறு
சதா – எப்பொழுதும்
சதி- சூழ்ச்சி
சத்தம் – ஓசை, ஒலி
சந்தானம் – மகப்பேறு
சந்தேகம் – ஐயம்
சந்தோஷம் – மகிழ்ச்சி
சபதம் – சூளுரை
சம்சாரம் – குடும்பம், மனைவி
சம்பந்தம் – தொடர்பு
சம்பவம் – நிகழ்ச்சி
சம்பாதி – ஈட்டு, பொருளீட்டு
சம்பிரதாயம் – மரபு
சம்மதி – ஒப்புக்கொள்
சரணாகதி – அடைக்கலம்
சரித்திரம் – வரலாறு
சரீரம் – உடல்
சருமம் -தோல்
சர்வம் – எல்லாம்
சாதாரணம் – எளிமை, பொதுமை
சாதித்தல் – நிறைவேற்றுதல், விடாது பற்றுதல்
சாதம் – சோறு
சாந்தம் – அமைதி
சாகசம் – துணிவு, பாசாங்கு
சாராமிசம் – பொருட்சுருக்கம்
சாயந்திரம் – மாலை வேளை, அந்திப் பொழுது
சாவகாசம் – விரைவின்மை
சாஸ்திரம் – நூல்
சாசுவதம் – நிலை
சிகிச்சை – மருத்துவம்
சித்தாந்தம் – கொள்கை, முடிவு
சித்திரம் – ஓவியம்
சிநேகிதம் – நட்பு
சிம்மாசனம் – அரியணை
சிரத்தை – அக்கறை, கருத்துடைமை
சிரமம் – தொல்லை
சின்னம் – அடையாளம்
சீக்கிரமாக – விரைவாக
சுதந்திரம் – தன்னுரிமை, விடுதலை
சுத்தமான – தூய்மையான
சுபாவம் – இயல்பு
சுலபம் – எளிது
சுவாரஸ்யமான – சுவையான
சேவை – பணி
சேனாதிபதி – படைத்தலைவன்
சௌகர்யம் – வசதி, நுகர்நலம்
சௌக்கியம் – நலம்


தசம் – பத்து
தத்துவம் – உண்மை
தம்பதியர் – கணவன் மனைவி, இணையர்
தரிசனம் – காட்சி
தர்க்கம் – வழக்கு
தர்க்க வாதம் – வழக்காடல்
தாபம் – வேட்கை
திகில் – அதிர்ச்சி
திருப்தி – நிறைவு
தினசரி – நாள்தோறும்
தினம் – நாள்
தீர்க்கதரிசி _ ஆவதறிவார்
துரதிருஷ்டம் – பேறின்மை
துரிதம் – விரைவு
துரோகம் – வஞ்சனை
துவம்சம் – அழித்தொழித்தல், அழித்துத் தொலைத்தல்
தேகம் – உடல்
தேசம் – நாடு
தைரியம் – துணிவு


நட்சத்திரம் – விண்மீன், நாள்மீன்
நமஸ்காரம் – வணக்கம்
நர்த்தனம் – ஆடல், நடனம்,கூத்து
நவீனம் – புதுமை
நவீன பாணி – புது முறை
நாசம் – அழிவு, வீண்
நாசூக்கு – நயம்
நாயகன் – தலைவன்
நாயகி – தலைவி
நிஜம் – உண்மை, உள்ளது
நிசபதமான – ஒலியற்ற, அமைதியான
நிச்சயம் – உறுதி
நிச்சயதார்த்தம் – மண உறுதி
நிதானம் – பதறாமை
நித்திய பூஜை – நாள் வழிபாடு
நிரூபி – மெய்ப்பி, நிறுவு
நிருவாகம் – மேலாண்மை
நிதி – பொருள்,செல்வம், பணம்
நீதி – அறம், நெறி, அறநெறி, நடுவுநிலை, நேர், நேர்நிறை, நேர்பாடு, முறை

பகிரங்கம் – வெளிப்படை
பஞ்சாட்சரன்- ஐந்தெழுத்து
பரவசம் – மெய்மறத்தல்
பராக்கிரமம் – வீரம்
பராமரி – காப்பாற்று , பேணு
பரிகாசம் – இகழ்ச்சிச் சிரிப்பு
பரிசோதனை – ஆய்வு
பரிட்சை – தேர்வு
பலவந்தமாக – வற்புறுத்தி
பலவீனம் – மெலிவு, வலிமையின்மை
பலாத்காரம் – வன்முறை
பாணம் – அம்பு
பாதம் – அடி
பாரம் – சுமை
பால்யம் – இளமை
பிம்பம் – நிழலுரு
பிரகாசம் – ஒளி, பேரொளி
பிரகாரம் – சுற்று
(அதன்)பிரகாரம் – (அதன்)படி
பிரசங்கம் – சொற்பொழிவு
பிரசுரம் – வெளியீடு
பிரச்சினை – சிக்கல்
பிரதிநிதி – சார்பாளர்
பிரதிபலித்தல் – எதிரியக்கம்
பிரதிபிம்பன் – எதிருரு
பிரத்தியோகம் – தனி
பிரபலம் – புகழ்
பிரமாதமான – பெரிய
பிரமிப்பு – திகைப்பு
பிரயோகி – கையாளு
பிரயோசனம் – பயன்
பிரவாகம் – பெருக்கு
பிரவேசம் – நுழைவு, புகுதல், வருதல்
பிரார்த்தனை – தொழுகை,
பிரியம் – விருப்பம்
பிரேமை – அன்பு
பீடிகை – முன்னுரை
புண்ணியம் – நல்வினை
புத்தி – அறிவு
புத்திரன் – புதல்வன்
புனிதமான – தூய
புஷ்பம் – மலர், பூ
புஜபலம் – தோள்வன்மை
பூஜை – வழிபாடு
பூர்த்தி – நிறைவு
பூஷணம் – அணிகலம்-
போதனை – கற்பித்தல்


மகான் – பெரியவர்
மகாயுத்தம் -பெரும்போர்
மத்தியஸ்தர் – உடன்படுத்துபவர்
மத்தியானம் – நண்பகல்
மந்திரி – அமைச்சர்
மனசு – உள்ளம்
மனிதாபிமானம் – மக்கட்பற்று
மானசீகம் – கற்பனை
மல்யுத்தம் – மற்போர்


யந்திரம் – பொறி
யூகம் – உய்த்துணர்தல்
யூகி – உய்த்துணர்
யோக்யதை – தகுதி


ரதம் – தேர்
ரத சாரதி- தேரோட்டி
ராணி – அரசி
ராத்திரி – இரவு
ராச்சியம் – நாடு,மாநிலம்
ராஜா – மன்னன்
ரசம் – சாறு, சுவை


லட்சம் – நூறாயிரம்
லட்சணம் – அழகு
லட்சியம் – குறிக்கோள்


வதம் – அழித்தல்
வதனம் – முகம்
வம்சம் – கால்வழி
வஸ்திரம் – துணி, ஆடை
வாஞ்சை – பற்று
வாயு – காற்று
விக்கிரகம் – வழிபாட்டுருவம்
விசாரம் – கவலை
விசாலமான – அகன்ற
விசித்திரம் – வேடிக்கை
விஷேசம் – சிறப்பு
விஞ்ஞானம் – அறிவியல்
விஷயம் – செய்தி
விதானம் – மேற்கட்டி
விநாடி – நொடி
வித்தியாசம் – வேறுபாடு
விபூதி – திருநீறு , பெருமை
விமோசனம் – விடுபடுதல்
வியாதி – நோய்
விரதம் – நோன்பு
விவாகம் – திருமணம்
விவாதி -வழக்காடு
வேகம் – விரைவு
வேதம் – மறை
வேதவிற்பனன்ர் – மறைவல்லார்
வேதியர் – மறையவர்


ஜனநாயகம் – குடியாட்சி
ஜனம் – மக்கள்
ஜனனம் – பிறப்பு
ஜாதகம்- பிறப்புக் குறிப்பு
ஜாலம் – வேடிக்கை
ஜூரம் – காய்ச்சல்
ஜோதி – ஒளி
ஜோடி – இணை
ஜோடித்தல் – அழகு செய்தல்


ஸந்ததி – கால்வழி
ஸமத்துவம் – ஒரு நிகர்
ஸமரசம் – வேறுபாடின்மை
ஸமீபம் – அண்மை
ஸம்ஹாரம் – அழிவு
ஸோபை – பொலிவு
ஸௌந்தர்யம் – பேரழகு
ஸ்தாபனம் _ நிறுவனம்
ஸ்தானம் – இடம்

வெள்ளி, 13 மார்ச், 2020

வணிக நிறுவனங்களில் பெயர் பலகை தமிழில் இருக்க வேண்டும் தமிழக அரசு உத்தரவு

சென்னை, மார்ச் 13- வணிக நிறுவனங்களில் பெயர் பலகை தமிழில் இருக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆங்கிலம் 2ஆவது இடத்திலும், மற்ற மொழிகள் 3ஆவது இடத்திலும் இருக்க வேண்டும். கடைப் பிடிக்காத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ கத்தில் உள்ள அனைத்து கடைகள், நிறுவனங்களின் பெயர்ப் பலகையில் தமிழ் எழுத்துக்கள் முதன் மையாக இருக்க வேண்டும் என்று தமிழக அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது. பெயர்ப்பலகை வைப்பது குறித்த சட்ட விதிகள் பின்பற்றப் பட வில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக் கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்திலுள்ள பெரும்பாலான வணிக நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள் தங்களின் நிறுவன பெயர் பலகைகளை தமிழில் வைக்காமல் ஆங்கிலத்தில் மட்டுமே வைத்துள்ளன. கருநாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் பெயர் பலகைகள் அனைத்தும் அந்த மாநில மொழியிலேயே வைக்கப்பட்டுள்ளன. தமிழக அரசின் 1987ஆம் ஆண்டு அரசாணைப்படி ஆட்சி மொழியான தமிழ்மொழியை, அனைத்து அரசு அலுவலகங்கள், தனியார் கடைகள் மற்றும் நிறுவனங்களில் முதல் மொழியாக பயன்படுத்த வேண்டும். ஆங்கிலம் உள்ளிட்ட பிறமொழிகளை பயன்படுத்துவதாக இருந்தால் தமிழ் மொழியின் கீழ் 5:3:2 என்ற விகிதத்தில் பயன்படுத்த வேண்டும்.

இந்நிலையில் தொழிலாளர் ஆணையம் தரப்பி லிருந்து வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடைகளும், வணிக நிறுவனங்கள் மற்றும் உணவு நிறுவனங்களில் பெயர் பலகை தமிழில் இருக்க வேண்டும் தெரிவிக் கப்பட்டுள்ளது. இந்த அரசாணை பின்பற்றப்பட வில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் படும் என்றும், கடைகள், நிறுவனங்களின் பெயர்ப் பலகையில் தமிழ் எழுத்துக்களில் முதன்மையாக இருக்க வேண்டும், மற்ற மொழிகள் பெயர்ப்பலகை உபயோகிக்கப்பட்டால் ஆங்கிலம் இரண்டாவது இடத்திலும், மற்ற மொழிகள் மூன்றாவது இடத் திலும் இருக்க வேண்டும் என்றும் தற்போது அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

- விடுதலை நாளேடு 13 3 20

செவ்வாய், 3 மார்ச், 2020

தமிழ்நாட்டில் தமிழுக்கு முதன்மை வேண்டி ஊர்திப் பயணம் வா.மு.சேதுராமன் குழுவினருக்கு வடலூரில் வரவேற்பு

வடலூர், மார்ச் 1- தமிழ்நாட்டில் தமிழுக்கு முதன்மை வேண்டி எங்கும் தமிழ் - எதிலும் தமிழ் என வலியுறுத்தி கன்னியாகுமரி முதல் சென்னை வரை ஊர்தி பரப்புரைப் பயணம் மேற்கொண்டுள்ள பன் னாட்டுத் தமிழுறவு மன்ற நிறுவனர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் குழுவினர் 23.2.2020 அன்று காலை 11 மணியளவில் வடலூர் வருகை தந்தனர்.

வடலூர் நகர திராவிடர் கழகம் சார்பில் வரவேற்பு நிகழ்ச்சி 11 30 மணி முதல் 2 மணி வரை கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது. நகரக் கழக தலைவர் புலவர் சு.இராவணன் வரவேற்புரையாற்றினார். அரிமா சங்க தலைவர் அ.சந்திரகாசன், முருகன், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் வெ.இராமானுசம், மாவட்ட கழக அமைப்பாளர் சி.மணிவேல், கோ.இந்திரசித், பொதட்டூர்பேட்டை கணேசன், மாவட்ட இளைஞரணி தலைவர் நா.உதயசங்கர், மாவட்ட பெரியார் வீரவிளையாட்டுக் கழக தலைவர் இரா.மாணிக்கவேல், ஒன்றிய கழக அமைப்பாளர் க.சேகர் ஆசிரியரணியைச் சேர்ந்த பெரியார் செல்வம் ஆகியோர் பாராட்டுரை வழங்கினர். கைத்தறி ஆடைகள் அணிவிக்கப்பட்டன.

பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் ஏற்புரை ஆற்றினார். வடலூர் கழக செயலாளர் இரா.குண சேகரன் நன்றி கூறினார்.

- விடுதலை நாளேடு 1.3.20

கல்லக்குறிச்சி ம.சுப்பராயனுக்கு திருவள்ளுவர் விருது

உளுந்தூர்பேட்டை, மார்ச் 1 உலகத்தமிழ் கவிஞர் பேரவை, பாவேந்தர் பேரவை உளுந்தூர்பேட்டை அருணா கல்வி கட்டளை இணைந்து 15.2.2020 அன்று நடத்திய முப் பெரும் விழாவில் கல்லக்குறிச்சி மாவட்ட கழகத் தலைவர் ம.சுப்பராயன் அவர்களுக்கு திருவள்ளுவர் விருது வழங்கி பாராட்டு வழங்கப்பட்டது.

சிறப்பு விருந்தினர்களாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருச்சி சிவா, முனைவர் துரை.ரவிக்குமார், மருத்துவர் பொன் கவுதமசிகாமணி, அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தேசியத்தலைவர் நல்லாவூர் பெரியண்ணன் ஆகியோர் பங்கேற்று விருது வழங்கி சிறப் புரையாற்றினார்கள். விழாவிற்கான ஏற்பாடு களை அருணா கல்வி அறக் கட்டளையின் நிர்வாக இயக்குநர் முனைவர் அ.தொல் காப்பியன், உலகத்தமிழ் கவிஞர் பேரவையின் பொதுச் செயலாளர் பனப்பாக்கம் புலவர்

கு.சீத்தா, பாவேந்தர் பேரவையின் பொதுச் செயலாளர் உலகதுறை ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

திருவள்ளுவர் விருதாளர் ம.சுப்பராயன் 27 ஆண்டுகளாக மேனிலைக் கணித ஆசிரியராக சிறப்பாக பணிபுரிந்தமைக்கவும், 6 ஆண்டுகள் மேனிலைப்பள்ளி தலை மையாசிரியராகப் பாராட்டும்படி பணிபுரிந்தமைக்காகவும், பகுத் தறிவாளர் கழகத்தில் 25 ஆண்டுகள் தொண் டாற்றியதுடன், மாவட்ட திராவிடர் கழகத் தலைவராக கடந்த ஆறு ஆண்டுகளாக சிறப்பாக தொண்டாற்றி வருவதற்காகவும் மேலும் திருக்குறள் பற்றி 15 ஆய்வுக்கட்டுரைகள் எழுதி வெளியிட்டமைக் காகவும் பாராட்டி விருது வழங்குவதாக விழாக்குழுவினர் பலத்த கைதட்டல்களுக்கிடையே கூறினார்கள். மேலும் திருவள்ளுவர் விருதுபெற்ற ம.சுப்ப ராயன் 2017 ஜூலையில் ஜெர்மனியில் நடைபெற்ற பெரியார் பன் னாட்டு சுயமரியாதை மாநாட்டிலும் 2019 செப்டம்பரில் அமெரிக்கா வாசிங்டனில் நடைப்பெற்ற பெரியார் பன்னாட்டு சுயமரியாதை மாநாட்டிலும் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

- விடுதலை நாளேடு, 1.3.20

ஞாயிறு, 1 மார்ச், 2020

தமிழில் சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்குசாகித்ய அகாடமி விருது


சென்னை, பிப். 26- சாகித்ய அகாடமி விருது சிறந்த இலக்கிய படைப்பாளிகளுக்கு, இந்திய அரசால் ஒவ்வோர் ஆண் டும் தேசிய அளவிலும் மாநில அளவிலும் வழங்கப்படும் மதிப்பிற்குரிய விருதாகும்.

பரிசுத்தொகையாக ஒரு லட்ச ரூபாயும், ஒரு பட்டயமும் வழங் கப்படுகின்றன. இருபத்து நான்கு இந்திய மொழிகளில் சிறுகதை, நாவல், இலக்கிய விமர்சனம் போன்ற பல்வேறு பிரிவுகளில் எழுத்தாளர் களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.

இந்நிலையில், மலையாள எழுத்தாளர் மனோஜ் குரூரின் நாவலை ‘நிலம் பூத்து மலர்ந்த நாள்’ என தமிழில் மொழி பெயர்த்ததற்காக  மொழிபெயர்ப்பாளர் கே.வி.ஜெயசிறீக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மனோஜ் குரூரின் நாவலை ‘நிலம் பூத்து மலர்ந்த நாள்’ என தமிழில் மொழிபெயர்த்ததற்காக சாகித்ய அகாடமி விருது ஜெயசிறீக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கே.வி.ஜெயசிறீ கூறுகையில், ‘மலையாள எழுத்தாளர் மனோஜ் குரூரின் நாவலை மொழிபெயர்க்குமாறு எழுத்தாளர் ஜெய மோகன் பரிந்துரைத்தார். சங்க கால தமிழ் இலக்கியத்தை குறித்து மலையாள எழுத்தாளர் எழுதியிருந்தது வியப்பை அளித்தது. மொழி பெயர்ப்புக்காக சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வானது மகிழ்ச்சியளிக் கிறது. 20 ஆண்டுகளாக மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டு வரு கிறேன்’, என தெரிவித்தார்.

- விடுதலை நாளேடு, 26.2.20