பக்கங்கள்

சனி, 17 அக்டோபர், 2015

அகரச் சுவடியா? அரிச்சுவடியா?

Image result for அரிச்சுவடிImage result for அரிச்சுவடி
-கல்பாக்கம் வ.வேம்பையன்

தமிழ் நெடுங்கணக்கு அடங்கிய சுவடி அரிச்சுவடி என்று அழைக்கப்-படுகிறது. கணக்கு எழுத்தையும், இலக்கி-யத்தையும் குறிக்கும். அதனால், எழுத்தையும் இலக்கியத்தையும் ஆராய்-பவருக்கு கணக்காயர் என்று பெயர்.
நெடும் என்பது நீண்ட எழுத்துத் தொகுதியைக் குறிக்கும். நீண்ட என்பது முழுமை எனும் பொருள் தரும். உயிர் எழுத்து, மெய் எழுத்து, ஆய்த எழுத்து, உயிர்மெய் எழுத்து என்று தமிழ் எழுத்து முழுவதையும் சுட்டுவதால், தமிழ் நெடுங்கணக்கு என்று வழங்கப்-படுகிறது.
அரி என்றால் திருமால்,  என்று பொருள். சுவடி என்பது பல ஏடுகள் கொண்டது. தமிழ் எழுத்துகள் உள்ள சுவடிக்கும். திருமாலுக்கும்  என்ன தொடர்போ?
அகரச் சுவடி என்பதே பொருத்தம். எப்படி? கரம், காரம், கான் என்பவை எழுத்துகளுக்குச் சாரியைகளாக வரும். சாரியை என்பது, சார்ந்து இயைந்து நிற்பது. இது காதுக்கு இனிமை தருவ-தற்கு வருவது. அ+கரம்=அகரம். அகரம் +சுவடி = அகரச்சுவடி அ என்னும் எழுத்தை முதலாகக் கொண்டுள்ள சுவடி புத்தகம் என்பது பொருள்.
எழுத்தெனப்படுப அகர முதலா னகர இறுவாய் முப்பஃதென்ப
என்று கி.மு. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த தொல்காப்பியர் தாம் யாத்த தொல்காப்பியம் என்னும் நூலில் கூறியுள்ளார். அகர முதல எழுத்தெல்-லாம் என்று கி.மு. முதல் நூற்றாண்டில் வாழ்ந்த வான்புகழ் வள்ளுவர் தம் திருக்குறள் நூலில் எழுதியுள்ளார்.
அகரம் முதல என வள்ளுவர் தொடங்கி இருப்பதில் ஒருதனிச் சிறப்பு இருக்கிறது. எழுத்துக்கு எல்லாம் முத-லாகத் திகழும் அ என்னும் எழுத்தை மட்டும் அவர் குறிப்பிடவில்லை. தமிழ் அகரம் என்னும் எழுத்தில் உள்ள அ என்பது உயிர் எழுத்து, க என்பது வல்லினம், ர என்பது இடையினம், ம் என்பது மெல்லினம்.
அகரம் என்னும் ஒரே சொல்லில் தமிழ் மொழியின் அமைப்பையே சுட்டிக் காட்டியிருக்-கிறார் என்று டாக்டர் சங்கரராசு நாயுடு 1981 ஆம் ஆண்டு மதுரையில் நடந்த அய்ந்தாம் உலகத் தமிழ் மாநாட்டில் திருக்குறள் கருத்தரங்கில் விளக்கம் தந்துள்ளார்.
நம்மாழ்வார் காலத்திற்குப்பின் தமிழ் நெடுங்கணக்கு அரிச்சுவடி என்று பெயர் பெற்றுவிட்டது என, மொழி ஞாயிறு பாவாணர் தமிழர் மதம் (பக்கம் 120) என்னும் நூலில் கூறியுள்ளார். நம்மாழ்-வார் காலம் கி.பி. 9 ஆம் நூற்றாண்டு என்று இலக்கிய வரலாறு இயம்புகிறது.
இதிலிருந்து என்ன தெரிகிறது? மதம், கடவுள் செல்வாக்குப்பெற்றிருந்த காலத்தில் அகரச் சுவடி என்பது அரிச்-சுவடி என்று மாற்றப்பட்டுவிட்டது. ஆங்கிலக் கல்வி முறை நமது நாட்டில் நடைமுறைக்கு வருவதற்கு முன்பும் பின்பும்கூட சிறுவர்களைப் பள்ளியில் சேர்க்கும்போது ஹரி ஓம் நம என்று அவர்களைச் சொல்லச் செய்து, எழுத்து கற்பித்த வழக்கம் இதற்குத் தக்க சான்றாகும்.
ஒரு பொருளின் அடிப்படைகூட அறியாதவனை You do not know ABCD of the Subject   என்று சொல்கிறோம். இதே போல் அனா, ஆவன்னா கூடத் தெரியாது என்று சொல்லி வந்த தமிழர்-களை மதச் செல்வாக்கும் கடவுள் செல்வாக்கும் அரிச்சுவடி என்று சொல்லும்படி செய்துவிட்டன.
ஆங்கிலேயர் ஏன் ஆண்டவன் பெயரைச் சொல்லவில்லை? சேர்க்க-வில்லை? மொழிவேறு, மதம் வேறு, கடவுள் வேறு, அரசு வேறு என்னும் தெளிவு பெற்றவர் ஆங்கிலேயர்.
இந்த நாட்டில் உள்ள ஆரியரோ மதம், கடவுள், மொழி, அரசு அனைத்-தையும் போட்டுக் குழப்பி, தங்கள் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொள்ள எதுவும் செய்யத் தயங்காதவர்கள். மறைப்பு, மாற்றம், திரிபு, திருத்தம், சிதைவு, சீரழிவு, அழிப்பு ஒழிப்பு, செய்-வதில் வல்லவர்கள் ஆரிய இனத்தவர்.
தமிழ் மொழி மறைப்பு, தமிழ்நாடு மறைப்பு, தமிழ் இன மறைப்பு, தமிழ் நாகரிக மறைப்பு, தமிழ்க்கலை மறைப்பு, தமிழ் முதல் நூல் மறைப்பு, தமிழ்த் தெய்வ மறைப்பு, தமிழர் சமய மறைப்பு, தமிழ்த் தேவார மறைப்பு, தமிழ்ப் பொருளிலக்கண மறைப்பு, தமிழ்ச் சொல் மறைப்பு தமிழ்ச் சொற் பொருள் மறைப்பு, தமிழ்க் கருத்து மறைப்பு தமிழ் எழுத்து மறைப்பு,
தமிழ் முக்கழக மறைப்பு, தமிழ் வரலாறு மறைப்பு என்று ஆரியர்கள் மறைத்த வரலாற்-றைத் தமிழ் வரலாறு என்னும் நூலில் விளக்கிக் கூறியுள்ளார் மொழி ஞாயிறு பாவாணர்.
ஊர்ப் பெயர், தெய்வத்தின் பெயர், ஆள் பெயர் முதலிய அனைத்தையும் சமஸ்கிருதமயமாக ஆரியர்கள் மாற்றி-விட்ட வரலாற்றைத் தொகுக்க முயன்-றால், அது ஒரு தனி நூல் ஆகி விடும் என்று அஞ்சி விடுத்துள்ளேன்.
இதுகாறும் கூறியவற்றால் அகரச் சுவடி என்பதே காலத்திற்கும், கருத்-திற்கும், அறிவுக்கும், ஆராய்ச்சிக்கும், பொருத்தமும் பொருளும் உடையது என்பது தெளிவாகும்.
தந்தை பெரியாரின் வழியைப் பின்பற்றி, தமிழ்மொழியை மதம், கடவுள் சேற்றிலிருந்து மீட்போம் என்று சூளுரை மேற்கொள்வோம்.
பெரும் புகழ்க் காப்பியர், வான்புகழ் வள்ளுவர் வழியைப் போற்றி அகரச் சுவடி என்றே எழுதுவோம், பேசுவோம்.
-விடுதலை ஞா.ம.2.5.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக