பக்கங்கள்

வெள்ளி, 16 ஜூன், 2017

தமிழர்கள் மாட்டிறைச்சி தின்றதில்லையா?


தமிழக பாஜகவினர் மாட்டிறைச்சித் தொடர்பான விவகாரத்தில் தமிழர்கள், மாடுகளைத் தெய்வமாக மதிப்பவர்கள், தெய்வமாக மதிக்கும் ஒன்றை எப்படி அவர்கள் கொலை செய்து உண்ணு வார்கள். தமிழர்கள் வரலாற்றில் மாட்டி றைச்சி உண்டதாக சரித்திரம் இல்லை. இதெல்லாம் அரபு நாட்டிலிருந்து வந்த இஸ்லாமியர்களும், முகலாயர்களும் தமிழகத்தில் வந்த பிறகு மாட்டிறைச்சி உண்ணும் பழக்கம் தாழ்த்தப்பட்டவர் களிடம் தொற்றிக்கொண்டது. தமி ழகத்தில் உயர்ஜாதியினர் இன்றும் மாட்டிறைச்சி உண்பதில்லை என்று எல்லா விவாதங்களிலும் பேசி வரு கின்றனர். இதையே புதிய தமிழகம் கட்சி டாக்டர் கிருஷ்ணசாமியும் கூறிவருகிறார். தமிழர்கள் மாட்டி றைச்சியை உண்ணுவதில்லை, சில அரசியல் கட்சிதலைவர்களும் அமைப்புகளும் தமிழர்களின் வர லாற்றைத் திரிக்கும் வேலையில் ஈடுபடுகின்றனர் என்று கூறினார்.

ஆனால் தமிழர்கள் கிறிஸ்து பிறப்பிற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே உணவிற்காக பசு மாட்டிறைச் சியை சாப்பிட்டனர் என்ற வரலாற்றுச் சான்றுகள் தமிழர்களின் அன்றாட வாழ்க்கை முறைகளைக் கூறும் சங்ககாலப் பாடல்களில் பெருகிக் கிடைக்கின்றன. அதில் சிலவற்றை இங்கே கொடுத்துள்ளோம்

அகநானூறு 129ஆம் பாடலில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது:

“கலங்குமுனைச் சீறூர் கைதலை         வைப்பக்
கொழுப்புஆ தின்ற கூர்ம்படை             மழவர்”

விளக்கம்: சிறிய ஊரினர் கையைத் தலைமீது வைத்து வருந்தும்படி அவருடைய கொழுத்த ஆவைக் (பசுவை) கவர்ந்து சென்று தின்ற கூரிய படைக்கருவியையுடைய மழவர்.

இதேபோன்று அகநானூற்றின் 249ஆவது பாடல் மாட்டிறைச்சியைப் பண்டைத் தமிழர்கள் உண்பது பற்றிப் பின்வருமாறு கூறுகின்றது:

தோகை தூவித் தொடைத்தார்                 மழவர்
நாகுஆ வீழ்த்துத் திற்றி தின்ற
புலவுகளம் துழைஇய துகள்வாய்க்             கோடை
நீள்வரைச் சிலம்பின் இரைவேட்டு             எழுந்த
இதன் விளக்கம் வருமாறு:

மயிலின் தோகையிலுள்ள இறகு களை மாலையாகத் தொடுத்து அணி பவர்கள் மழவர்கள். பல்வகையான பூக்களை உடையதான காட்டின் சுருங்கிய நிழல்களிலே தங்கி கன்றி னையுடைய பசுவைக் கொன்று அதன் ஊணை சுட்டுத் தின்பார்கள். புலால் மணம் வீசும் அந்த இடத்தைத் துழாவியவாறு ஊண்துணுக்குள் கலந்த புழுதியை தன்பால் கொண்டதாக மேல்காற்று எழுந்து வீசும்

அகநானூற்றின் 309ஆவது பாடல் பசுவை தமிழ்க் கடவுளுக்கு பலி கொடுத்த பின்னர் அதன் இறைச்சியை மறவர்கள் உணவாக உட்கொண்டது பற்றிக் குறிப்பிடுகின்றது:

வயவாய் எறிந்து வில்லின் நீக்கி
பயநிரை தழீஇய கடுங்கண் மறவர்
அம்புசேண் படுத்து வன்புலத்து         உய்த்தெனத்
தெய்வஞ் சேர்ந்த பராரை வேம்பிற்
கொழுப்பா எறிந்து குருதி தூஉய்ப்
புலவுப் புழுக்குண்ட வான்கண்         அகலறைக்
விளக்கம்: கொழுப்பா  கொழுத்த பசு

வெற்றி வாளினாலே வெட்டிக் கொன்றும், வில்வினைத் தொழிலினாலே அடித்து விரட்டியும், பசுமந்தைகளைக் கைகொண்ட அஞ்சாமையாளரான மறவர்கள், அம்புகளைத் தொலை வுக்குச் செல்லுமாறு செலுத்தி நிரை காவலரை ஓட்டியபின், வன்மையான காட்டு நிலத்தை அடைந்தனர். அடைந்தபின் தெய்வம் குடி கொண்டிருக்கும் பருத்த அடியினை யுடைய வேம்பிற்கு கொழுத்த ஒரு பசுவினைக் கொன்று பலியிட்டனர். அதன் குருதியைத் தெளித்து தெய் வத்தைப் போற்றி வழிபட்டனர். பின் அப் பசுவின் இறைச்சியைப் பொசுக்கி உண்டு விட்டுச் சென்றனர்.

இச்சங்க இலக்கியங்களில் இருந்து பண்டைத் தமிழர்கள்  மாட்டிறைச் சியையும் உட்கொண்டனர் என்பதை உணர்ந்து கொள்ள முடியும். அத்தோடு, தாம் வழிபட்ட தெய்வங்களுக்கு ஆடு களையும், பசுக்களையும் பலிகொடுத்த பின்னர் அவற்றை பண்டைத் தமிழர்கள் உட்கொண்டனர் என்பதையும் நாம் உணர முடியும்.

-விடுதலை ஞா.ம.,10.6.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக