பக்கங்கள்

செவ்வாய், 3 மார்ச், 2020

தமிழ்நாட்டில் தமிழுக்கு முதன்மை வேண்டி ஊர்திப் பயணம் வா.மு.சேதுராமன் குழுவினருக்கு வடலூரில் வரவேற்பு

வடலூர், மார்ச் 1- தமிழ்நாட்டில் தமிழுக்கு முதன்மை வேண்டி எங்கும் தமிழ் - எதிலும் தமிழ் என வலியுறுத்தி கன்னியாகுமரி முதல் சென்னை வரை ஊர்தி பரப்புரைப் பயணம் மேற்கொண்டுள்ள பன் னாட்டுத் தமிழுறவு மன்ற நிறுவனர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் குழுவினர் 23.2.2020 அன்று காலை 11 மணியளவில் வடலூர் வருகை தந்தனர்.

வடலூர் நகர திராவிடர் கழகம் சார்பில் வரவேற்பு நிகழ்ச்சி 11 30 மணி முதல் 2 மணி வரை கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது. நகரக் கழக தலைவர் புலவர் சு.இராவணன் வரவேற்புரையாற்றினார். அரிமா சங்க தலைவர் அ.சந்திரகாசன், முருகன், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் வெ.இராமானுசம், மாவட்ட கழக அமைப்பாளர் சி.மணிவேல், கோ.இந்திரசித், பொதட்டூர்பேட்டை கணேசன், மாவட்ட இளைஞரணி தலைவர் நா.உதயசங்கர், மாவட்ட பெரியார் வீரவிளையாட்டுக் கழக தலைவர் இரா.மாணிக்கவேல், ஒன்றிய கழக அமைப்பாளர் க.சேகர் ஆசிரியரணியைச் சேர்ந்த பெரியார் செல்வம் ஆகியோர் பாராட்டுரை வழங்கினர். கைத்தறி ஆடைகள் அணிவிக்கப்பட்டன.

பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் ஏற்புரை ஆற்றினார். வடலூர் கழக செயலாளர் இரா.குண சேகரன் நன்றி கூறினார்.

- விடுதலை நாளேடு 1.3.20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக