பக்கங்கள்

புதன், 8 ஜூலை, 2026

தாய்லாந்தில்2000 ஆண்டு பழைமையான ‘தமிழி’ முத்திரை மோதிரம் கண்டெடுப்பு

கடல் கடந்த தமிழ் நாகரிகத்திற்கு மேலும் ஒரு சான்று!

தாய்லாந்தில்
2000 ஆண்டு பழைமையான ‘தமிழி’ முத்திரை மோதிரம் கண்டெடுப்பு

பெட்சாபுரி,  ஜூலை 8  கடல் கடந்து பரவியிருந்த பண்டைய தமிழர்களின் வணிகம் மற்றும் பண்பாட்டு தடயங்களுக்கு மேலும் ஒரு வரலாற்றுச் சான்று கிடைத்துள்ளது.

தாய்லாந்தின் பெட்சாபுரி மாகாணத்தில் நடந்த அகழாய்வில், 2000 ஆண்டுகள் பழைமையான தங்க முத்திரை மோதிரம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதில் பொறிக்கப்பட்டிருந்த எழுத்துகள் தொடக்கத்தில் ‘பிராமி’ எழுத்துகள் என தவறாகப் படிக்கப்பட்டன.

ஆனால் சிங்கப்பூரைச் சேர்ந்த ‘சார்’ குழுவின் ஆய்வாளர் ரஞ்சித் குமார் மேற்கொண்ட ஆய்வில், அது இடவல மாற்றமாக அதாவது Mirror Image-இல் பொறிக்கப்பட்ட ‘தமிழி’ எழுத்துக்கள் என்பது உறுதியாகி யுள்ளது.

‘அளர் வைரதன்’ – தமிழரின் பெயர்

அச்சிடுவதற்கு ஏதுவாக தலைகீழாக பொறிக்கப்பட்டு உள்ள அந்த மோதிரத்தில் ‘அளர் வைரதன்’ என்ற தமிழரின் பெயர் இடம்பெற்றுள்ளது.

- விடுதலை நாளேடு, 8.7.26


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக