பக்கங்கள்

ஞாயிறு, 7 மே, 2023

மொழி உரிமை: தனது இருப்பிற்காக இன்றும் போராடும் திராவிட மொழிக் குடும்பத்தின் துளு

 

 s2


வட கேரளா மற்றும் தென் கருநாடகாவில் பேசப்பட்டு வரும் துளுவ மொழிக்கு அலுவல் மொழி அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் போராடி வருகின்றன.

இந்தியத் துளுவ மொழியின் வரலாறு

கருநாடகாவின் இரண்டு கடலோர மாவட்டங்களான தக்ஷின கன்னடா மற்றும் உடுப்பியிலும்கேரளத்தின் காசர்கோடு பகுதியிலும் பேசப்பட்டு வரும் திராவிட மொழிக் குடும்பத்தில் உள்ள மொழி தான் துளுவம். 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இந்தியாவில் 18,48, 427 நபர்கள் இம்மொழி பேசி வருகின்றனர். 2000 ஆண்டுகள் பழமை கொண்டதிராவிட மொழிக் குடும்பத்தில் உள்ள பழமையான மொழிகளில் ஒன்று என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்ராபர்ட் கால்ட்வெல்A Comparative Grammar of the Dravidian- என்ற தன்னுடைய புத்தகத்தில் திராவிட மொழிக்குடும்பத்தில் நன்கு வளர்ச்சி அடைந்த மொழிகளில் ஒன்றாக துளுவை குறிப்பிட்டுள்ளார்.

துளு மொழி பேசும்  மக்களின் உணமையான கோரிக்கை

கருநாடகா மற்றும் கேரளாவில் இருக்கும் துளு மொழி பேசும் மக்கள் இம்மொழியை அலுவல் மொழியாக அறிவிப்பதோடு இந்திய அரசியல் சாசனத்தின் 8ஆவது அட்டவணையின் கீழ் இணைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்அஸ்ஸாமிபெங்காலிகுஜராத்திஇந்திகன்னடாகஷ்மீரிகொங்கனிமலையாளம்மணிப்பூரிமராத்திநேபாளிஒரியாபஞ்சாபிசமஸ்கிருதம்சிந்திதமிழ் , தெலுங்குஉருதுபோடோசந்தாலிமைதிலி மற்றும் டோக்ரி ஆகிய 22 மொழிகள் 8ஆவது அட்டவணையில் இடம் பெற்றுள்ளன

இந்தக்கோரிக்கையை ஆதரித்து  தக்ஷின கன்னடா எம்.பி.  நளின் குமார் கத்தீல் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில், “அரசியல் சாசனத்தின் 8ஆவது அட்டவணையில் துளுவை இணைப்பதற்கான முயற்சிகள் மற்றும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றனசில நுட்பமான பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டியது உள்ளதுஇந்த ஆட்சி நிறைவடைவதற்குள் துளுவை அலுவல் மொழியாக அறிவிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்” என்று சமூகவலைதளத்தில் பதிவு செய்திருந்தார்.

தக்ஷின கன்னடாவின் மாவட்ட பொறுப்பாளர் அமைச்சர் கோட்ட சிறீ நிவாஸ் பூஜாரி, “துளு ஒரு மொழி மட்டும் அல்லவரலாற்றுடன் கூடிய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை அம்மொழி கொண்டுள்ளது” என்று கூறினார்.

துளு எங்களின் தாய்மொழிஅனைவரும் துளுவை அலுவல் மொழியாக அங்கீகரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர் என்று சட்டமன்ற உறுப்பினர் வேதவ்யாஸ் காமத் கூறினார்.

அரசியல்வாதிகளைத் தவிர கன்னட நடிகர்கள்துளுவை தாய்மொழியாக கொண்ட ரக்ஷித் ஷெட்டிப்ருத்வி அம்பார் ஆகியோரும் இதற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

துளுவ மொழியின் தற்போதைய நிலை

கருநாடகாவின் துளு சாகித்ய அகாதெமி தலைவர் தயானந்த கி.கத்தல்சர்துளு மொழி பேசும் மக்கள் மேல் கூறிய பகுதிகளில் கேரளா மற்றும் கருநாடகாவில் வாழ்ந்து வருகின்றனர்இப்பகுதிகளை துளுநாடு என்று அழைக்கின்றோம்துளு தற்போது அலுவல் மொழி அல்ல.

ஆனால் துளுவை அட்டவணை 8இன் கீழ் கொண்டு வர அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறதுதுளு 8ஆவது அட்டவணையில் இணைக்கப்பட்டால்சாகித்ய அகாதெமியின் அங்கீகாரம் துளு மொழிக்கு கிடைக்கும் என்று கூறினார்.

கல்வியில் துளு

கருநாடக அரசு துளுவை சில ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிக் கல்வியில் அறிமுகம் செய்தது.

மாநில கல்வித்துறையின் படி, 2020ஆம் ஆண்டு மொத்தமாக தக்ஷின கன்னடா மற்றும் உடுப்பி மாவட்டங்களை சேர்ந்த 956 பள்ளி மாணவர்கள் தங்களின் மூன்றாவது மொழியாக துளுவை தேர்வு செய்து 10ஆம் வகுப்பு தேர்வை எழுதினார்கள்துளு அறிமுகம் செய்யப்பட்ட போது

2014-2015 ஆண்டுகளில் 18 மாணவர்கள் துளுவை தங்களின் மூன்றாவது விருப்ப மொழியாக தேர்வு செய்தனர்.

s3

கடந்த ஆண்டு ஜெய் துளுநாட் என்ற அமைப்பு புதிய தேசிய கல்விக் கொள்கையில் துளு மொழியை இணைக்க வேண்டும் என்று இணையங்களில் பிரச்சாரங்கள் மேற்கொண்டதுEducation In Tulu என்ற ஹேஷ்டேக்கில் தங்களின் கோரிக்கைகளை அவர்கள் வைத்தனர்.

துளு நாடு - தனி மாநில கோரிக்கை

29 பிரிவுமக்கள் பிரதிநிதி சட்டம் 1951இன் கீழ் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெற்ற துளுவேரே பக்ஷா என்ற அரசியல் கட்சிதுளு மொழி பேசும் மக்களின் அரசியல் எண்ணங்களுக்கு உயிர் கொடுக்க துவங்கியுள்ளது.

துளுவேரே பக்ஷா கட்சியின் மத்திய குழு தலைவர் ஷைலேஷ் ஆர்.ஜேஇந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசிய போதுமொழி அடிப்படையில் நாடு மறுசீரமைக்கப்பட்டபோது துளுநாடு கேரளா மற்றும் கருநாடக மாநிலங்களுக்கு இடையே பகிர்ந்தளிக்கப்பட்டதுதமிழ்தெலுங்குமலையாளம்கன்னடம் பேசும் மக்களுக்கு தனி மாநிலங்கள் இருக்கின்ற போது துளுநாடு ஏன் தனி மாநிலமாக இருக்க கூடாதுஎன்ற கேள்வியை வைத்தார்.

இந்தக் குடகை ஆங்கிலேயர்கள் கூர்க் என்று அழைத்துவந்தனர்இந்தக்குடகுபகுதியில் தான் காவிரி நீர் உறுபத்தியாகும் தலைக்காவிரி உள்ளது,

இந்தியா மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டபோதுதமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் இடையில் தனிமாநிலமாக துளு மொழியின் அடிப்படையில் ‘குடகு’ என்கிற மாநிலம் உருவானது.

பின்னர் 1957இல் குடகு மக்கள் தங்களை யூனியன் பகுதியாக இந்தியா இணைத்துக்கொள்ள வேண்டும் என்று அப்போதைய பிரதமர் நேருவிடம் கோரிக்கை வைத்தனர்ஆனால் நேருயூனியனாக உங்களை இணைக்க முடியாதுவேண்டுமெனில் ஏதேனும் ஒரு மாநிலத்தோடு இணைந்து கொள்ளலாம் என ஆலோசனை கூறினார்.

நேருவின் ஆலோசனைப்படி குடகு மக்கள்தமிழகத்துடன் இணையவே தங்களின் விருப்பத்தை ஒருமித்த கருத்தாக வெளிப்படுத்தினர்ஆனால் தமிழக அரசியலாளர்கள்அதனை நிராகரித்துவிட்டார்கள்அப்போது தந்தை பெரியார் ஒருவர்தான்குடகை தமிழகத்துடன் இணைக்க வேண்டுமென உரிமைக் குரல் கொடுத்தார். ‘விடுதலை’ பத்திரிகையில் எழுதினார்பேரணி நடத்தினார்இருந்தும் அவரின் குரலை அலட்சியம் செய்ததின் விளைவைத்தான் இன்று நாம் அனுபவித்துக் கொண்டுள்ளோம்.

தமிழகம் குடகை நிராகரித்தைப் போன்றேகருநாடகமும் முதலில் நிராகரிக்கவே செய்ததுஆனால் ‘மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா’ எனும் அறியப்பட்ட பொறியியல் விஞ்ஞானியின் கருத்தினால்கருநாடகம் குடகை ஏற்றுக்கொண்டதுகருநாடகம் ஒரு அறிவியல் அறிஞரின் குரலுக்கு செவி சாய்த்ததிலும்தமிழகம் சமூகவியல் அறிஞரான பெரியாரின் குரலை அலட்சியம் செய்ததிலும் இருக்கிறது காவிரி மீது பறிபோன நமது உரிமை

 குடகு மக்களுக்கும் தமிழருக்கும் மிக நெருங்கிய கலாச்சார மொழி தொடர்பு உண்டுஆகையால் தான் அவர்கள் எங்களின் தாய்மொழி மாநிலமான தமிழகத்தோடு இணைகிறோம் என்றனர்.

 ஆனால் அவர்கள் கருநாடகத்தோடு இணைந்ததால அவர்களின் மொழி உரிமையும் பறிபோய் எழுத்து சிதைந்து துளு பேசும் குடும்பத்தின் இளையதலைமுறைகள் கன்னடம் மட்டுமே கற்கும் அவலம் ஏற்பட்டதுதற்போது அவர்கள் தங்களின் மொழி உரிமையை மீட்க மீண்டும் குரல் கொடுக்கத் துவங்கியுள்ளனர்.

சனி, 15 ஏப்ரல், 2023

இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்?

        பெரியாரை தமிழுக்கு எதிரியாகவும், தமிழர்க்கும் எதிரியாகவும் கட்டமைத்து அவதூறு செய்யும் சாலையோர வேலையற்றதுகளுக்கும், பெரியாரை அவமதிக்கும் கோணல் புத்திகாரர்-களுக்காக:

இதோ ஒரு பட்டியல் :

*             கண்ணைத் திறந்து படிக்கட்டும். அறிவுக் கண்ணும் திறக்கட்டும்!

1)            1926 _ இந்தி வருவதே தமிழர்க்கு துரோகம் செய்யத்தான் என எச்சரித்தார்.

2)            1926 _ வடமொழிக் கலப்பில்லாத தனிச் செந்தமிழ் இனிக்கும் என்றார்.

3)            1927 _ சமஸ்கிருதம் நீக்கிய தமிழர் திருமண முறையை வலியுறுத்தினார்.

4)            1929 _ தமிழுக்கென ஒரு பல்கலைக்கழகம் வேண்டுமென உணர்த்தினார்.

5)            1931 _ தமிழ் மருத்துவத்தை வளர்க்க வேண்டும் என வேண்டினார்.

6)            1938 _ இந்திப் போர் என்பது தமிழுக்காக, தமிழர் தன்மானத்திற்காக என அறைகூவல் விட்டார்.

7)            1938 _ தமிழ்நாடு தமிழருக்கே என முழங்கினார்.

8)            1941 _ தமிழ்நாட்டு மேடைகளில், தமிழிசை பாடப்பட வேண்டுமென வலியுறுத்தினார்.

9)            1941 _ கல்வி திட்டத்தில் தாய் மொழியும், பொது மொழியாக ஆங்கிலம் போதிக்கப்-பட்டால் போதும் என்றார்.

10)         1945 _ தமிழ் மொழி உணர்ச்சி தான், தமிழ் மக்களை ஒன்று சேர்க்கும் எனக் கணித்தார்.

11)         1947 _ தமிழர் விழாவாக பொங்கலைக் கொண்டாட வேண்டும் என முதலில் அறிக்கை விட்டார்.

12)         1952 _ தாய் மொழியில் அனைத்தும் மொழிபெயர்க்க வேண்டுமென தலையங்கம் தீட்டினார்.

13)         1952 _ நீதிமன்றங்கள் தமிழில் நடத்தப்பட வேண்டும் என்றார்.

14)         1954 _ ‘ஸ்ரீ’ என்று எழுதாதே, ‘திரு’ என்று எழுது என அறிவுறுத்தினார்.

15)         1955 _ மக்கள் மொழியை விட்டு, வேறு மொழி மூலம் ஆட்சியை நடத்துகிற ஒரே நாடு _ உலகத்திலேயே தமிழ்நாடு தான் என வருந்தினார்.

16)         1955 _ தமிழ்நாட்டுக் கடவுளுக்கு தமிழ் புரியாதா? என கேள்வி கேட்டார்.

17)         1955 _ தமிழில் கல்லூரிப் படிப்பைத் தொடங்க வேண்டும் என ஆரம்பித்தார்.

18)         1956 _ தமிழ்நாட்டின் ஆட்சி மொழியாக தமிழ் இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

19)         1956 _ விஞ்ஞான நூல்களையெல்லாம் தமிழில் ஆக்கி மலை மலையாகக் குவிக்க வேண்டும் என ஆவல் கொண்டார்.

20)         1960 _ தாய்த் திருநாட்டிற்கு தமிழ்நாடு என்னும் பெயரில்லையே என கோபப்பட்டார்.

21)         1964 _ தமிழ் முன்னேற்றமடைந்து, உலக வரிசையில் வரவேண்டும் என்றால், தமிழையும் மதத்தையும் பிரிக்க வேண்டும் என ஆலோசனை சொன்னார்.

22)         1965 _ கல்லூரிகளில் தமிழ் பயிற்று மொழியாக வேண்டும் எனக் கோரினார்.

23)         1966 _ ஜனநாயகம் என்பது வடமொழி. அதற்கு நேரான தமிழ் மொழிதான் ‘குடிஅரசு’. அப்படித்தான் எனது இதழுக்குப் பெயர் சூட்டினேன் என விளக்கினார்.

24)         1967 _ நம்மை தமிழும் இந்தியும் படிக்கச் செய்து விட்டு, பார்ப்பானும் பணக்காரனும் ஆங்கிலம் படித்து, பதவிக்குப் போய் விடுவார்கள் என எச்சரித்தார்.

25)         1972 _ ஆரியம் சமயத்துறையில் ஆதிக்கம் பெற்றதாலும், ஆங்கிலம் அரசியல் முதலிய துறைகளில் ஆதிக்கம் பெற்றதாலும், தமிழர்களுக்கு இன உணர்ச்சி பலப்படவில்லை என வகுப்பெடுத்தார்.

*               “தமிழன் பிரார்த்தனை செய்யும் கோயில்கள் ஒன்றிலாவது, தமிழனுக்கு மரியாதை கிடையாது” என தமிழர்கள் மீது அன்பும், பரிவும் கொண்டு பேசியவர் _ பெரியார்.

*               “சரித்திரம் எழுதுபவர்கள் அத்தனை பேரும் பார்ப்பனர்கள் ஆனதால், தமிழர்களின் சரித்திரத்தை மறைத்து விட்டார்கள்!” என தமிழர்களின் வரலாற்று மீதும் அக்கறை கொண்டு பேசியவர் _ பெரியார்.

*              இப்போது சொல்லுங்கள்!

*               இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்? … நூலை படித்த பின்பு, நீங்களும் அந்த கேள்வியைத்தான் கேட்பீர்கள்!

*               இதைப் படைத்த ப. திருமாவேலனுக்கு பெரியாரியவாதிகள் மட்டுமல்ல, தமிழினமே வாழ்த்தக் கடமைப் பட்டுள்ளது!

  'இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்? ' என்ற நூலைப் பற்றி விமர்சனம்...

நூல் மதிப்புரை:

நாகராஜன் பொன்னுசாமி

பெரியாரியல் ஆய்வாளர்