பக்கங்கள்

திங்கள், 31 ஆகஸ்ட், 2015

ஒட்டன்சத்திரம் அருகே கற்காலக் கருவிகள் கண்டெடுப்பு

ஒட்டன்சத்திரம், ஆக.31_ ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி யில் கற்கால மனிதர்கள் பயன்படுத்திய கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
திண்டுக்கல் மாவட் டம், ஒட்டன்சத்திரம் மேற்கு தொடர்ச்சி மலை யில் உள்ள பச்சை மலை அடிவாரத்தில், தொல் லியல் ஆய்வாளர் நாரா யணமூர்த்தி தலைமையி லான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.  அப் போது, அங்கு கற்கால மனிதர்கள் பயன்படுத்திய கருவிகள், ஆயுதங்கள், பானைகள், ஓடுகள் என மொத்தம் 64 கற்காலக் கருவிகள் அகழ்வாராய்ச் சியில் கிடைத்துள்ளன.
இது குறித்து, தொல்லி யல் ஆய்வாளர் நாராய ணமூர்த்தி தெரிவித்ததாவது:
பழைய கற்காலத்தின் இறுதிப் பகுதியில், அதா வது சுமார் 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு 6 கற்காலக் கருவிகள் கண் டெடுக்கப்பட்டுள்ளன. இவை, கற்கால மனிதர் கள் பயன்படுத்திய வேட்டை ஆயுதங்களா கும்.
மேலும், புதிய கற் காலத்தின் தொடக்க காலத்தைச் சேர்ந்த 58 கருவிகளும் கண்டெடுக் கப்பட்டுள்ளன. அவற் றில், 26 செவ்வக வடிவக் கருவிகளும், 19 சதுர வடி வக் கருவிகளும், 10 நீள் செவ்வக வடிவக் கருவி களும் அடங்கும். புதிய கற்காலத்தின் தொடக்க மான, சுமார் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு விதமான அளவு களில் வேட்டையாடும் கருவிகள் பயன்படுத்தப் பட்டுள்ளன.
அதில், சதுர, செவ்வக வடிவிலான கரு விகளை எடைக் கற்களா கப் பயன்படுத்தி இருக்க லாம் என்றும், மூலிகை களை அரைக்க விசிறி போன்ற கருவிகளும், தேய்ப்புக் கல்லும் பயன் படுத்தி இருக்கலாம் எனத் தெரிகிறது.  புதிய கற் காலத்தின் தொடக்கமும், தமிழின் முதல் சங்க கால மும் ஏறத்தாழ சமகால கட்டத்தைக் கொண்டி ருப்பதால், முதல் சங்க காலத்தைச் சேர்ந்த தமிழ் மக்கள் இந்தக் கருவிகளை உருவாக்கிப் பயன்படுத்தி இருக்கலாம்.
ஆராய்ச்சி யில், மூன்றாம் சங்க காலத்தைச் சேர்ந்த பானை, ஓடுகள், ஆட்டுக் கற்கள் உடைந்த நிலை யில் கண்டெடுக்கப்பட் டுள்ளன. இந்தப் பகுதியில் உள்ள பாறையில் 12 கற் குழிகள் (உரல்கள்) காணப் படுகின்றன.
இவை, சங்க கால மக்கள் தினை, கேழ்வரகு, சாமை போன்ற உணவு தானியங்களை குத்தவும், அரைக்கவும் பயன்படுத்தி இருக்கலாம்.  இதுபோன்ற கற்குழிகளை உருவாக்கிப் பயன்படுத்தும் வழக்கம் கி.பி. 18 ஆம் நூற்றாண்டு வரை புழக்கத்தில் இருந் துள்ளது.
எனவே, இங்கு கிடைத் துள்ள ஆதாரங்களின் அடிப்படையில், பச்சை மலையில் மனிதனின் நடமாட்டமும், வாழ்க்கை முறையும் பழைய கற்காலத் திலிருந்தே, அதாவது சுமார் 60 ஆயிரம் ஆண் டுகளுக்கு முன்பே இருந் துள்ளது என்பது உறு தியாகிறது என்றார்.
-விடுதலை,31.8.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக