பக்கங்கள்

வெள்ளி, 23 டிசம்பர், 2016

மனுவாதிகளிடம் மல்லுகட்டிய மெக்காலே


ஒரு தொலைக்காட்சி விவாதம் ஒன்றில், மெக்காலே கல்வித் திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. ஒரு பார்ப்பனர் தனது அதிபுத்திசாலித் தனமான வாதத்தில் - பானை செய்பவன் மகன் பானை செய்தால் என்ன தவறு என்றும், எல்லா தொழில்களும் தெய் வமே என்றும்,

குழந்தைத் தொழி லாளர்கள் வீட்டில் செய்யும் தொழி லுக்கு சம்பளம் பெறாததால் அது தொழில் என்றே சொல்லக் கூடாது என்றும் சொல்லிக் கொண்டிருந்தார். சரி, அவர் அப்படித்தான் சொல்வார்! இந்தப் பதிவு அதற்கல்ல.

அவர் கடைசியாக மெக்காலே கல்வித் திட்டம் அடிமைகளை உரு வாக்கும் ஆங்கில அரசின் ஒரு திட்டம் என்றும், குருவிடம் சென்று எல்லா வித்தைகளையும் பயின்ற குருகுல கல்வி மேலானது என்றும் உளறினார்.

மெக்காலே கல்வித் திட்டம் 
குறித்து சில தகவல்கள்

மெக்காலே இந்தியக் கல்வி குறித்து இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை என்று பார்ப்பனீயம் அவிழ்த்துவிட்ட மிகப்பெரிய பொய் இன்றுவரை நிலைத்து நிற்கிறது.

அந்தப் பொய்யுரையானது, அவர் இந்தியாவின் எல்லா பகுதிகளுக்கும் சென்றதாகவும், ஒரு திருடனையோ, பிச்சைக்காரனையோ எங்கும் காண முடியவில்லை என்றும் இந்த தேசம் அவ்வளவு பண்பாடு நிறைந்ததாகவும், ஆன்மீக வளம் பொருந்தியதாகவும் உள் ளது. எனவே, அதை அடிமைப்படுத்த நாம் அவர்களின் தொன்மையான கல்வி முறையை ஒழித்துவிட்டு ஆங்கில வழிக் கல்வியைப் பயன்படுத்தலாம்.

மெக்காலே மேற்கண்டவாறு இங்கி லாந்து நாடாளுமன்றத்தில் உரையாற் றியதாகக் கூறினார். உண்மை என்ன வென்றால் அவர்கள் கூறும் 2-.2.-1835ஆம் தேதி அவர் இங்கிலாந்தில் இல்லை. இந்தியாவில்தான் இருந்தார். அவர் சொன்னது அவருடைய நாட்குறிப்பில் இருக்கும் என்று தோண்டிப் பார்த் தாலும் எந்தக் குறிப்பும் இல்லை.

உண்மையில் நடந்ததென்ன?

இந்தியாவில் கல்வியை அறிமுகப் படுத்தும் பொறுப்புடன் வந்த ஆங்கி லேயர் மெக்காலே இந்து சனாதன வாதி களுடன் மூன்றுகட்ட பேச்சு வார்த்தை நடத்தி இருக்கிறார். அத்தனைக்கும் ஆவணங்கள் உள்ளன.

முதல் கட்டத்தில் மெக்காலே இந் தியர்கள் அனைவருக்கும் கல்வி கொடுக்க வேண்டும் என வாதிடுகிறார். ஆனால், சனாதன வாதிகள் அதை மறுத்து கல்வி பார்ப்பனர்களுக்கும் மற்றும் மேல் ஜாதி யினருக்கும் மட்டுமே என்று வாதிடுகின் றனர்.

பல கட்ட பேச்சுவார்த்தைகளுக் குப் பிறகு மெக்காலேயின் திட்டப்படி, அனைவருக்கும் கல்வி என்பதை சனாதனவாதிகளை ஏற்றுக்கொள்ளச் செய்கிறார். இரண்டாவது கட்டமாக எத்தகைய கல்வி என்ற பிரச்சினை. மெக்காலே கணக்கும், அறிவியலும் கற்பிக்கப்பட வேண்டுமென்கிறார்.

சனா தனவாதிகள் வேத, புராண, இதிகாசங் கள்தான் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என வாதிடுகின்றனர். பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப்பின் வரலாற் றுச் சக்கரத்தைப் பின்னோக்கி ஓட்ட முடியாது என பிடிவாதமாக மெக்காலே சனாதனிகளின் கருத்தினை எதிர்த்து அரசு ஆணை ஒன்றைப் பெற்று வந்து இந்தியாவில் கல்வியைப் புகுத்தினார்.

பார்ப்பனர்கள் இதை எதிர்த்தும் இங்கிலாந்து நாடாளுமன்றத்திற்கு மனு அனுப்பியும் பயனின்றி போகவே மெக்காலே வெற்றி பெற்றார்.

மூன்றாவதாக பயிற்சிமொழி ஆங் கிலமா, சமஸ்கிருதமா என்ற வாதத்தில் மெக்காலே வென்று ஆங்கிலத்தைப் பயிற்சி மொழி ஆக்கினார்.

வரலாற்றைச் சற்று திரும்பிப் பார்த்தால் இந்தியாவில் அனைவருக் கும் கல்விக்காக மெக்காலே எவ்வளவு சனாதனிகளிடம் (பார்ப்பனர்களிடம்) போராடியுள்ளார் என்பது தெளிவாகத் தெரிகிறது.

(முகநூலில்: துணைத்தளபதி மார்ஜோஸ்)
-விடுதலை,26.9.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக