பக்கங்கள்

வெள்ளி, 19 நவம்பர், 2021

வ.உ.சி. பன்னூல் திரட்டு, வ.உ.சி. திருக்குறள் உரை நூல்கள்

 

முதலமைச்சர் மு..ஸ்டாலின் வெளியிட்டார்

சென்னை,நவ.19- கப்பலோட்டிய தமிழர் ..சி.யின் 150ஆவது ஆண்டு பிறந்த நாள் கொண்டாட் டத்தின் முன்னெடுப்பாக ..சிபன்னூல் திரட்டு மற்றும் ..சிதிருக்குறள் உரை ஆகிய நூல்களைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் நேற்று (18.11.2021) வெளியிட்டார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் நேற்று (18.11.2021) தலைமைச் செயலகத்தில்விடுத லைப் போராட்ட வீரர் ..சி.யின் 150ஆவது ஆண்டு பிறந்த நாள் கொண்டாட்டத்தின் முன்னெடுப் பாக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் வெளியிடப்பட்டுள்ள ..சிபன்னூல் திரட்டு - முதல் தொகுதி மற்றும் ..சிதிருக்குறள் உரை -இரண்டாம் தொகுதி ஆகிய நூல்களை வெளியிட்டார்.

சட்டமன்றத்தில் அறிவிப்பு

..சிதம்பரனாரின் 150ஆவது பிறந்த நாள் விழாவினையொட்டி முதலமைச்சர் மு..ஸ்டாலின் 14 வகையான அறிவிப்புகளைச் சட்ட மன்றத்தில் அறிவித்தார்அவற்றுள் “..சிதம்பரனார் எழுதியுள்ள அனைத்துப் புத்தகங்களும் புதுப் பொலிவுடன் புதுப்பிக்கப்பட்டுத் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் மூலமாகக் குறைந்த விலையில் மக்களுக்குக் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்” என்பதும் ஒன்றாகும்அதன் தொடர்ச்சியாகபள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பள்ளிக் கல்வித் துறைச் சீராய்வுக் கூட்டத்தின்போதுமுதலமைச்சர் மு..ஸ்டாலின் அறிவிப்பின்படி..சிதம்பரனார் எழுதி வெளிவராத படைப்புகள் மற்றும் அச்சில் இல்லாத படைப்பு களை ..சிநூற்களஞ்சியமாக நான்கு நூல் திரட்டுகளாக பதிப்பிக் கலாம் என்று அறிவுறுத்தினார்.

..சிநூல் களஞ்சியம்

அதன்படிவிடுதலைப் போராட்ட வீரரும்கப்பலோட்டிய தமிழரும்பழம்பெரும் நூல்களைத் தேடி பதிப்பித்து உரை எழுதிய வருமான ..சிதம்பரனாரின் எழுத்துகள் ..சிநூல் களஞ்சியமாகத் தொகுக்கப்பட்டுஅவரது 150-ஆம் பிறந்த ஆண்டான இந்த ஆண்டு தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால்குறைந்த விலையில் வெளியிடப்படுகிறது.

முதல் கட்டமாக ..சிதம்பர னார் எழுதி வெளிவராத படைப்பு கள் மற்றும் அச்சில் இல்லாத படைப்புகளைத் தொகுத்துமுதல் தொகுதி - ..சிபன்னூல் திரட்டு எனும் தலைப்பிலும்இரண்டாம் தொகுதி - ..சிதிருக்குறள் உரை எனும் தலைப்பிலும் இரண்டு தொகுதிகள் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் வெளியிடப்படுகிறது.

அரசியல் பெருஞ்சொல்

முதல் தொகுதியில் ..சிஎழுதிய தன் வரலாறுமெய்யறிவுமெய்யறம் ஆகிய நூல்களும் 1927 காங்கிரஸ் மாநாட்டில் அவர் ஆற்றிய அரசியல் பெருஞ்சொல் என்ற உரை..சிகண்ட பாரதி என்ற நூல்..சி.யின் பாடல் திரட்டு..சிகட்டுரைகள் ஆகி யவை அடங்கியுள்ளனமேலும்இத்தொகுதியில் ..சி பதிப்பித்த திருக்குறள் (அறத்துப்பால்மணக் குடவர் உரை சேர்க்கப்பட்டுள்ளது..சிஎழுதிய இன்னிலை விருத்தி உரையும் சிவஞானபோதம் உரையும் இடம் பெற்றுள்ளன.

இவற்றோடு ..சிமொழி பெயர்த்த ஜேம்ஸ் ஆலன் எழுதிய நூல்களான ‘மனம்போல் வாழ்வு’, ‘அகமே புறம்’, ‘வலிமைக்கு மார்க்கம்’ ‘சாந்திக்கு மார்க்கம்’ ஆகியவையும் உள்ளனஇவை தவிர ..சி.யின் வேறு சில கட்டுரைகளும் பின்னி ணைப்பாக இடம் பெற்றுள்ளன.

தொழிற்சங்கத் தொண்டு

இரண்டாம் தொகுதி ..சிதிருக்குறளுக்கு எழுதிய உரையாகும்..சி.யின் தேசப்பணிதியாகம்தொழிற்சங்கத் தொண்டு ஆகிய வற்றுக்கு எவ்விதத்திலும் குறைந்ததல்ல ..சி.யின் இலக்கியப் பணிதன் வாழ்வைத் திருக்குறள் நெறிப்படி அமைத்துக்கொண்ட ..சிதிருக்குறளுக்கான மணக் குடவர் உரையைத் தேடிப் பதிப்பித் தார்கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக நிலைத்து நிற்கும் நூலாகத் திருக்குறள் திகழ்வதற்கு முதன்மையான காரணங்களில் ஒன்று மணக்குடவர் உரையை அடிப்படையாகக் கொண்டு ..சிஎழுதிய புதிய உரையாகும்.

தனது திருக்குறள் உரையில் 11ஆம் நூற் றாண்டில் எழுந்த அவைதீக உரையான மணக்குடவர் உரையில் இருந்து 13ஆம் நூற்றாண்டில் எழுந்த வைதீக உரையான பரிமேல ழகர் உரை எவ்வாறு மாறுபடுகிறது என்பதை விளக்கியுள்ளார்பரிமே லழகர் உரையிலிருந்து தான் வேறு படும் இடங்களையும் ஒன்றுபடும் இடங்களையும் சுட்டிக்காட்டி இருப்பதோடுகுறளுக்குப் பொருள் கொள்வதில் வாசகனுக்கு உள்ள சுதந்திரத்தையும் எடுத்துக்காட்டி ருப்பதை இந்த நூலை வாசிப்பவர்கள் உணரலாம்.

வெளிவராத படைப்புகள்

..சிஎழுத்துகளை ஆய்வு செய்து வெளிவராத படைப்புகளைச் சேகரிப்பதில் புலமை பெற்றுள்ள சென்னைப் பல்கலைக்கழக மேனாள் பேராசிரியர் வீ.அரசு பதிப்பாசிரியராக இருந்து இப் பெருந்திரட்டுகளைத் தொகுத்துள் ளார்புகழ்பெற்ற ஓவியர் டிராட்ஸ்கி மருது அட்டைப்படம் வடி வமைத்துள்ளார்.

இந்த நிகழ்வில்பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிதமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணி கள் கழகத் தலைவர் திண்டுக்கல் அய்.லியோனிதலைமைச் செய லாளர் முனைவர் வெ.இறையன்புபள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷாதமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் மேலாண்மை இயக்குநர் டி.மணிகண்டன்உறுப் பினர் செயலர் எஸ்.கண்ணப்பன்துணை இயக்குநர் டி.சங்கர சரவ ணன்ஆலோசகர் .அப்பண்ண சாமிபதிப்பாசிரியர் பேராசிரியர் வீ.அரசுஓவியர் டிராட்ஸ்கி மருது ஆகியோர் பங்கேற்றனர்.

1 கருத்து: