தமிழ் உலகு

தமிழ் மற்றும் தமிழர் பெருமை

பக்கங்கள்

  • முகப்பு

வெள்ளி, 4 நவம்பர், 2022

திருக்குறளில் உள்ள #கடவுள்_வாழ்த்து எனும் அதிகாரம் #திருவள்ளுவர்_எழுதியது_இல்லை !

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02smZkmpF9EXEKZ4B8Jizi2BF2EncLLinYsapZjNRM5XuFwMVqFNBYvTacnxj8BQ6ul&id=100000324268158
திருக்குறளில் உள்ள #கடவுள்_வாழ்த்து எனும் அதிகாரம் #திருவள்ளுவர்_எழுதியது_இல்லை !

இப்படி சொல்பவர் பெரியாரோ அல்லது கடவுள் நம்பிக்கை இல்லாத அறிஞர் ஒருவரோ அல்ல.

திருக்குறளை ஆய்வு செய்து திருக்குறளில் உள்ள இடைச்செருகல்களை ஆதாரங்களுடன் நிறுவியவர் #வ_உ_சி அவர்கள்.ஆம் இந்திய சுதந்திர போராட்ட தியாகி என புகழப்படும் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களேதான். வ.உ.சி.கடவுள் நம்பிக்கை அதிகம் உள்ளவர் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.

திருக்குறளில் #கடவுள்_வாழ்த்து எனும் அதிகாரம் மட்டுமல்ல,#வான்_சிறப்பு, #நீத்தார்_பெருமை ஆகிய அதிகாரங்களும் திருவள்ளுவர் எழுதியவை அல்ல.அவை #இடைச்செருகல்களே என்று ஆய்வு செய்து கூறுகிறார் வ.உ.சி.“அவை திருவள்ளுவர் காலத்திற்குப் பிற்காலமும் முந்திய உரையாசிரியர்கள் காலத்திற்கு முற்காலமுமாகிய இடைக் காலத்துப் புலவர் ஒருவரால் பாடிச் சேர்க்கப் பட்டவையென்றும் யான் கருதுகிறேன்” என்று கூறுகிறார்.

பரிமேலழகர் என்பவர் எழுதிய திருக்குறள் உரை ஆரிய சார்பானதாக இருப்பதை ஏற்க மறுத்து (அப்போது சுயமரியாதை இயக்கமோ,பகுத்தறிவு கருத்துக்களோ வீரியமாக பேசப்படாத காலம் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.) ஏற்கும்படி இருக்கும் மணிகுடவர் எழுதிய திருக்குறள் உரையிலிருந்து திருக்குறள் அறத்துப்பால் மணிக்குடவர் பதிப்பு எனும் தலைப்பில் 140 பக்கங்கள் கொண்ட நூலை 1917  ஆம் ஆண்டு பதிப்பித்தார் வ.உ.சி.

1930 - 1932 களில் வெளிவந்த ''தமிழ்ப் பொழில்'' (துணர் 5/மலர் 6) எனும் இதழில் பாயிர ஆராய்ச்சி எனும் தலைப்பில் (பக்கம்: 232-237)எழுதியுள்ள கட்டுரையில் வ.உ.சி.அவர்கள் இந்த ஆய்வுகளை தொடராக எழுதியுள்ளார்.

பாயிர ஆராய்ச்சி எனும் ஆய்வு கட்டுரையில் வ.உ.சி அவர்கள் திருக்குறளின் இடைச்செருகல்கள் குறித்து எழுதியுள்ள கருத்துக்களின் சாரம் :

திருக்குறளின் இம்மூன்று அதிகாரங்களும் தற்காலத்தில் மிகவும் புகழ் பெற்றவை. கடவுள் வாழ்த்து, வான் சிறப்பு, நீத்தார் பெருமை ஆகிய இம் மூன்று அதிகாரங்களிலுள்ள முப்பது குறட்பாக்களையும் திருவள்ளுவர் எழுதியிருக்க முடியாது என்பதற்கு காரணங்களை முன் வைக்கிறார் வ.உ.சி.

1.            கடவுள் வாழ்த்து,வான் சிறப்பு, நீத்தார் பெருமை பாடல்களில் பிற பாடல்களைப்போலச் சொற்செறிவும் பொருட்செறிவும் இல்லை.

2.            கடவுள் வாழ்த்து,வான் சிறப்பு, நீத்தார் பெருமை ஆகிய பாடல்களின் பொருள்கள் பல தடைகளுக்கு இடம் கொடுக்கின்றன.

3.            மெய்யுணர்தல், துறவு என்ற தலைப்புகளில் நூலின் உள்ளே அதிகாரங்கள் இருப்பதால் இதற்கு முரணான தலைப்புகளான கடவுள் வாழ்த்து, நீத்தார் பெருமை ஆகியவற்றை நூலின் தொடக்கத்தில் அதாவது பாயிரத்தில் வைத்திருப்பது பொருத்தமானதல்ல.

4. மெய்யுணர்தல் எனும் தலைப்பிலுள்ள அதிகாரத்தில் கடவுளுக்குக் கூறியுள்ள இலக்கணங்களைக் கொண்டு பார்க்கும்போது அவற்றையும் இம்மூன்று அதிகாரங்களையும் ஒருவரே எழுதியிருக்க முடியாது. (வ.உ.சியின் இக்கருத்து விரிவான ஆய்வுக்குரியது).

5.            துறவு மற்றும் நீத்தார் பெருமை ஆகிய அதிகாரங்களில் உள்ள பாடல்களை ஒப்பிட்டுப் பார்த்தால், இரண்டையும் ஒருவரே இயற்றியிருக்க முடியாது.

6.            மழையைச் ‘சிறப்பிற்றணிப்பாருமில்லை, வறப்பிற்றரிவாருமில்லை.” எனவே, ‘வான் சிறப்’பைக் கூறுவதால் பயன் ஒன்றுமில்லை.

7.  திருக்குறள் 10 என எண்ணிக்கையில் இருக்கும் போது 10ன் மடங்குகளாக 130 அதிகாரமும் 1300 குறள்கள் மட்டுமே இருந்திருக்க வேண்டும்.

---------------------------------------------------------------------------------

திருவள்ளுவரே கடவுள் வாழ்த்தை எழுதி இருக்கிறார் கடவுள் இருப்பதை ஏற்றுக்கொண்டார் என ஏமாற்றி வந்தவர்கள் இப்போது திருவள்ளுவருக்கு காவிச்சாயம் பூச முயலும் அயோக்கியத்தனமான முயற்சியில் இறங்கியிருக்கும் இவ்வேளையில் கடவுள் வாழ்த்து,வான் சிறப்பு, நீத்தார் பெருமை ஆகியவை திருக்குறளே அல்ல.அவை திருவள்ளுவர் எழுதியவையும் அல்ல.இந்த 3 அதிகாரங்களும் இடச்செருகல்களே என்கிற வ.உ.சி.அவர்களின் ஆய்வுக்கட்டுரையை நாம் மீள வாசிக்க வேண்டியதும் அதனை பரப்புவதும் அவசியமாகும்.
- பரிமள ராஜன் முகநூல் பக்கத்திலிருந்து.... ஆண்டு 2019
இடுகையிட்டது parthasarathy r நேரம் 8:33 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: ஆய்வு, திருக்குறள், வ .உ. சி

2 ஆயிரம் ஆண்டு பழைமையான தமிழ் எழுத்துகள் பொறித்த பானை ஓடுகள் கண்டுபிடிப்பு



  November 04, 2022 • Viduthalai

காளையார்கோவில், நவ.4- காளையார் கோவில் பாண்டியன் கோட்டையில் 2 ஆயிரம் ஆண்டு பழைமையான தமிழ் எழுத்துகள் பொறித்த பானையோடு கண்டுபிடிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில்  பாண்டியன் கோட்டையில் 2 ஆயிரம் ஆண்டு பழைமையான தமிழ் எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடு  சிவகங்கை தொல்நடைக் குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவனர் காளிராசா கூறியதாவது: பாண்டியன்கோட்டை பகுதியில் மேற்பரப்பில் கிடந்த ஓட்டை எடுத்து சுத்தம் செய்து பார்த்ததில் அது 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானையோடு என்பது உறுதி செய்யப் பட்டது. கீழடியில் வெட்டப்பட்டுள்ள அகழாய்வு குழிகளைப்போல, இதன் இரண்டு புறங்களிலும் மண் அடுக் குகளும் பானை ஓட்டு எச்சங்களும் உடைந்த நிலையில் அரைகுறையான பானைகளும் காணப்படுகின்றன.

இந்த வாய்க்காலில் தான் தமிழ் எழுத்து பொறித்த பானையோடு கிடைக்கப் பெற்றுள்ளது. தமிழ் எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓட்டில், கருப்பிலும் சிவப்பிலும் எழுத்துப்பொறிப்பு காணப்படுகிறது, பானை ஓட்டின் உட்புறம் முழுமையாக கரிய நிறமாக உள்ளது. இந்த ஓடு 7 செமீ அகலமும் ஏழரை செ.மீ உயரமும் உடையதாக உள்ளது. அய்ந்து எழுத்துக்கள் இடம்பெற்றுள்ளன, மோ, ச, ர, ப, ன்   ஆகிய தமிழி எழுத்துகள் வெளிப்படையாக தெரிகின்றன.

எழுத்துகள் தெளிவுற வாசிப்ப தற்காக தொல்லியல் அறிஞர்களின் பார்வைக்கு அனுப்பப்பட்டதில் அவர்கள் அய்ந்து எழுத்துகள்  மோ, ச, ர, ப, ன்   போன்று வெளிப்படையாக தெரிந்தாலும் ர என்கிற எழுத்து ‘த’ வாக இருக்கலாம். சற்று ஒரு கோடு சிதைவுற்று இருக்கலாம். மோசதப[ன்] மோசிதப[ன்] என்று இருந்திருக்கலாம் என கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் சங்க காலத்திலே மோசிகீரன் என்ற பெயர் வழக்கில் உள்ளதால் மோசிதபன் என்று கருதவும் இடம் உண்டு. முறையான அகழாய்வை தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை மேற்கொண்டால் காளையார்கோவி லின் தொன்மையும், பாண்டியர்களின் கோட்டை கட்டுமானங்களும் தமிழ் நாட்டின் தொன்மையும் வெளிப்படும். இவ்வாறு கூறினார். காளையார்கோவில் பாண்டியன் கோட்டையில் கிடைக்கப் பெற்ற தமிழ் எழுத்துப் பொறித்த பானை ஓட்டை, அதன் தொன்மை, பெருமை, பாதுகாப்பும் கருதி சிவகங்கை அரசு அருங்காட்சியகத்தில் ஒப் படைக்க சிவகங்கை தொல்நடைக்குழு முடிவு செய்துள்ளது.

இடுகையிட்டது parthasarathy r நேரம் 7:22 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: தமிழ் எழுத்து, பானை ஓடு
புதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)

திருவள்ளுவர்

திருவள்ளுவர்
குமரிக் கடலில்133 அடிஉயர சிலை

இந்த வலைப்பதிவில் தேடு

கருத்து களம்

வலைப்பதிவு காப்பகம்

  • ►  2025 (3)
    • ►  மார்ச் (2)
    • ►  பிப்ரவரி (1)
  • ►  2024 (69)
    • ►  டிசம்பர் (3)
    • ►  அக்டோபர் (50)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (4)
    • ►  ஜூன் (5)
    • ►  மே (2)
    • ►  பிப்ரவரி (2)
    • ►  ஜனவரி (2)
  • ►  2023 (17)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (3)
    • ►  மே (3)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  மார்ச் (6)
    • ►  பிப்ரவரி (2)
    • ►  ஜனவரி (1)
  • ▼  2022 (18)
    • ▼  நவம்பர் (2)
      • திருக்குறளில் உள்ள #கடவுள்_வாழ்த்து எனும் அதிகாரம்...
      • 2 ஆயிரம் ஆண்டு பழைமையான தமிழ் எழுத்துகள் பொறித்த ப...
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (2)
    • ►  மே (1)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (8)
  • ►  2021 (26)
    • ►  டிசம்பர் (1)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (3)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (1)
    • ►  ஏப்ரல் (3)
    • ►  மார்ச் (4)
    • ►  பிப்ரவரி (4)
    • ►  ஜனவரி (4)
  • ►  2020 (44)
    • ►  டிசம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (3)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (5)
    • ►  ஏப்ரல் (4)
    • ►  மார்ச் (5)
    • ►  பிப்ரவரி (16)
    • ►  ஜனவரி (8)
  • ►  2019 (85)
    • ►  டிசம்பர் (10)
    • ►  நவம்பர் (8)
    • ►  அக்டோபர் (10)
    • ►  செப்டம்பர் (5)
    • ►  ஆகஸ்ட் (9)
    • ►  ஜூலை (10)
    • ►  ஜூன் (3)
    • ►  மே (8)
    • ►  ஏப்ரல் (2)
    • ►  மார்ச் (2)
    • ►  பிப்ரவரி (8)
    • ►  ஜனவரி (10)
  • ►  2018 (131)
    • ►  டிசம்பர் (5)
    • ►  நவம்பர் (17)
    • ►  அக்டோபர் (5)
    • ►  செப்டம்பர் (9)
    • ►  ஆகஸ்ட் (19)
    • ►  ஜூலை (19)
    • ►  ஜூன் (4)
    • ►  மே (3)
    • ►  ஏப்ரல் (7)
    • ►  மார்ச் (13)
    • ►  பிப்ரவரி (14)
    • ►  ஜனவரி (16)
  • ►  2017 (74)
    • ►  டிசம்பர் (7)
    • ►  நவம்பர் (3)
    • ►  அக்டோபர் (8)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (11)
    • ►  ஜூலை (6)
    • ►  ஜூன் (3)
    • ►  மே (6)
    • ►  ஏப்ரல் (9)
    • ►  மார்ச் (3)
    • ►  பிப்ரவரி (5)
    • ►  ஜனவரி (11)
  • ►  2016 (61)
    • ►  டிசம்பர் (6)
    • ►  நவம்பர் (13)
    • ►  அக்டோபர் (13)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (9)
    • ►  ஜூலை (3)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (14)
  • ►  2015 (48)
    • ►  டிசம்பர் (9)
    • ►  நவம்பர் (17)
    • ►  அக்டோபர் (3)
    • ►  செப்டம்பர் (5)
    • ►  ஆகஸ்ட் (4)
    • ►  ஜூலை (5)
    • ►  ஜூன் (1)
    • ►  மார்ச் (2)
    • ►  ஜனவரி (2)
  • ►  2014 (1)
    • ►  அக்டோபர் (1)

இதற்கு குழுசேரவும்

இடுகைகள்
Atom
இடுகைகள்
கருத்துகள்
Atom
கருத்துகள்

எனது வலைப்பதிவு பட்டியல்

  • விடுதலை வலைப்பூ

மொத்தப் பக்கக்காட்சிகள்

லேபிள்கள்

  • அ. ச. ஞானசம்பந்தன்
  • அகத்தியம்
  • அகத்தியர்
  • அகரமுதலி
  • அச்சு
  • அண்ணா
  • அப்பாதுரையார்
  • அம்பேத்கர்
  • அமெரிக்கா
  • அமைச்சர்
  • அயல்நாடு
  • அரசு ஆணை
  • அரசுடமை
  • அரபு
  • அரபு மொழி
  • அரியானா
  • அரேபியா
  • அவமதிப்பு
  • அளவைகள்
  • அறிவியல்
  • அறைகலன்
  • ஆ.ராசா
  • ஆங்கிலம்
  • ஆசிரியர்
  • ஆசிரியர் அறிக்கை
  • ஆட்சிமொழி
  • ஆய்வு
  • ஆராய்ச்சி
  • ஆரியம்
  • ஆரியர்
  • ஆஸ்திரேலியா
  • இசை
  • இடம்
  • இணையம்
  • இந்தி
  • இந்தி எதிர்ப்பு
  • இந்தி திணிப்பு
  • இந்திய மொழிகள்
  • இந்து மதம்
  • இராபர்ட் கால்டுவெல்
  • இரும்பு உருக்காலை
  • இரும்புக்காலம்
  • இலக்கணம்
  • இலக்கிய நூல்கள்
  • இலக்கியம்
  • இலக்குவனார்
  • இலங்கை
  • இழிமொழி
  • இழிவு
  • இறப்பு
  • இனம்
  • ஈகிகள்
  • உ.வே.சா.
  • உச்சர நீதிமன்ற தீர்ப்பு தமிழில்
  • உலகம் முழுவதும் தமிழ்
  • உவேசா
  • ஊர்தி பயணம்
  • எண்கள்
  • எலும்புக்கூடு
  • எழுத்து
  • எழுத்து சீர்திருத்தம்
  • ஒற்றைப்பத்தி
  • ஒன்பது
  • ஓகம்
  • ஓமன்
  • கட்டாயம்
  • கடவுள்
  • கடவுள் வாழ்த்து
  • கடை
  • கண்ணகி
  • கம்போடியா
  • கருநாடகம்
  • கருப்பு
  • கல்திட்டை
  • கல்லூரி
  • கல்வெட்டு
  • கலைஞர்
  • கவரி மான்
  • களவு
  • கனடா
  • கால்டுவெல்
  • கி வீரமணி
  • கி.வீரமணி
  • கிணறு
  • கிழமை
  • கீழடி
  • குடமுழுக்கு
  • குமரி அனந்தன்
  • கோபுரம்
  • கோயில்
  • சங்க இலக்கியம்
  • சங்ககாலம்
  • சங்கம்
  • சங்கராச்சாரி
  • சமசுகிருதம்
  • சமஸ்கிருதம்
  • சர்.ஏ. டி. பன்னீர்செல்வம்
  • சனாதனம்
  • சாதி
  • சிங்கப்பூர்
  • சிந்துவெளி
  • சிலப்பதிகாரம்
  • சிறப்பு
  • சீர்திருத்தம்
  • சீனா
  • செங்காந்தள்
  • செந்தமிழ்
  • செந்தமிழ் சொற்பிறப்பியல்
  • செம்மொழி
  • சொல் சிறப்பு
  • சொற்கள்
  • சொற்போர்
  • டி.ஆர்.பாலு
  • தந்தை பெரியார்
  • தமிழ்
  • தமிழ் ஆண்டு
  • தமிழ் இருக்கை
  • தமிழ் எண்
  • தமிழ் எழுத்து
  • தமிழ் கல்வெட்டு
  • தமிழ் காந்தி
  • தமிழ் சுவடி
  • தமிழ் தாய் வாழ்த்து
  • தமிழ் தேசியம்
  • தமிழ் நாடு
  • தமிழ் பயிற்சி
  • தமிழ் பாடம்
  • தமிழ் புத்தாண்டு
  • தமிழ் பெருமை
  • தமிழ் மரபு
  • தமிழ் மைல் கல்
  • தமிழ் மொழி
  • தமிழ்த் தாத்தா
  • தமிழ்த் தொண்டு
  • தமிழ்த்தாய் வாழ்த்து
  • தமிழ்தேசியம்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு நாள்
  • தமிழ்ப் பற்று
  • தமிழ்ப் புத்தாண்டு
  • தமிழ்ப் பெயர்கள்
  • தமிழக பரப்பு
  • தமிழர்
  • தமிழர் திருநாள்
  • தமிழர் மதம்
  • தமிழர் விழா
  • தமிழர்கள்
  • தமிழிசை
  • தமிழில் கையொப்பம்
  • தமிழில் பெயர்
  • தமிழின் பிள்ளைகள்
  • தமிழினம்
  • தனித்தமிழ்
  • தனித்தமிழ்நாடு
  • திங்கள்
  • திராவிட மொழி
  • திராவிடம்
  • திராவிடம்-தமிழ்
  • திராவிடர் - தமிழர்
  • திராவிடர் இயக்கம்
  • திரு
  • திருக்குறள்
  • திருக்குறள் மாநாடு
  • திருத்தம்
  • திருப்புகழ்
  • திருமாவேலன்
  • திருவள்ளுவர்
  • திருவள்ளுவர் விருது
  • திருவிக
  • திருவில்லிபுத்தூர்
  • தினமலர்
  • தீர்ப்பு
  • தீர்மானம்
  • துக்ளக்
  • துளு
  • தேசம்
  • தேவநேய பாவாணர்
  • தேவநேயப்பாவாண்ர்
  • தை
  • தை மாதம்
  • தொண்டு
  • தொல்காப்பியம்
  • தொன்மை
  • தொன்மை மொழி
  • தோற்றம்
  • நில அளவை
  • நினைவு சின்னம்
  • நீச பாசை
  • நீதிக்கட்சி
  • நீர்நிலைகள்
  • நூல்
  • நூல் வெளியீடு
  • நூல்கள்
  • பண்பாடு
  • பதிப்பித்தவர்
  • பதிப்பு
  • பதிலடி
  • பயிற்சி
  • பரிதிமாற் கலைஞர்
  • பல்கலைக்கழகம்
  • பழந்தமிழ்
  • பழந்தமிழர் முறை
  • பாகுபாடு
  • பார்ப்பன பனியா
  • பார்ப்பனர்
  • பார்ப்பான்
  • பாரதி
  • பாவாணர்
  • பானை ஓடு
  • பிராகிருதம்
  • புத்தகம்
  • புத்தாண்டு
  • புரட்சி கவிஞர்
  • புரட்சிக்கவிஞர்
  • புறநானூறு
  • பூங்கா
  • பெயர் பலகை
  • பெயர்ப்பலகை
  • பெரியார்
  • பெருஞ்சித்திரனார்
  • பேட்டி
  • பேரணி
  • பொங்கல்
  • ம்னிதன்
  • மலேசியா
  • மலையாளம்
  • மறைமலை அடிகள்
  • மனுதர்மம்
  • மாட்டிறைச்சி
  • மாநாடு
  • மின்சாரம்
  • முதல் நூல்
  • முதன்மை
  • முதன்மை மொழி
  • முதன்மொழி
  • முதுமக்கள் தாழிகள்
  • மும்மூர்த்திகள்
  • முருகன்
  • மூல மொழி
  • மே.வங்கம்
  • மைசூரு ஆய்வகம்
  • மைல்கல்
  • மொழி
  • மொழி புள்ளிவிவரம்
  • மொழி வெறுப்பு
  • மொழி-பெரியார்
  • மொழிகள் அழிவு
  • மொழிப்பயிற்சி
  • யாதும் ஊரே
  • யோகா
  • ராபர்ட் கால்டுவெல்
  • ராவணன்
  • வ .உ. சி
  • வ உ சி
  • வ.உ.சி.
  • வடமொழி
  • வடமொழிகள்
  • வணிகம்
  • வரலாறு
  • வருணாசிரமம்
  • வளர்ச்சி
  • வன்மம்
  • விருது
  • வேதம்
  • ஜாதி
  • ஜி.யு.போப்
  • ஜெயமோகன்
  • ஹிந்தித் திணிப்பு

பிரபலமான இடுகைகள்

  • "யாதும் ஊரே யாவரும் கேளிர்"- முழுமையான பாடல்
    பழமையான பாடல் ஒன்று... இன்று உலகம் முழுவதும் தேடப்பட்டு, உச்சரிக்கப்படுகிறது. அது, கணியன் பூங்குன்றனார் எழுதிய, "யாதும் ஊரே யாவரு...
  • தமிழ்ப் பதிப்பின் தலைமகன்
    ஆங்கிலேயர் வருகையாலும் அய்ரோப்பிய கிறித்தவப் பாதிரி மார்கள் முயற்சியாலும் நூல்கள் அச்சு ஊர்தியேறி உலா வந்தன. தமிழ்நூல் ஒன்றுதான் மு...
  • திராவிட இயக்கம் வளர்த்த தமிழ்
    இதழியல் தமிழ் "திராவிட இயக்கத்தின் போராட்டத்துக்கு இதழ்கள் கருவிகளாகப் பயன்பட்டன. எவரும் துப்பாக்கி தூக்கவில்லை; எழுதுகோல் தான் அவர்...
  • தந்தை பெரியாரின் தமிழ் தொண்டும், தமிழ் பற்றும்
    தந்தை பெரியாரின் தமிழ் தொண்டும், தமிழ் பற்றும் ஆதாரங்கள் இதோ : தந்தை பெரியார் மீது அவதூறு பரப்பும் அற்ப பேர்வழிகளுக்கான பதில்  ===========...
  • வ.உ.சி. பன்னூல் திரட்டு, வ.உ.சி. திருக்குறள் உரை நூல்கள்
         November 19, 2021  • Viduthalai முதலமைச்சர்   மு . க . ஸ்டாலின்   வெளியிட்டார் சென்னை , நவ .19-  கப்பலோட்டிய   தமிழர்   வ . உ . சி . யி...
  • திருக்குறளை மலம் என்று விமர்சித்தாரா பெரியார்?
    'துக்ளக்கின்' கோணல் பார்வை.... கி.தளபதிராஜ் மயிலாடுதுறை நடைபெற்று முடிந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து ஆட...
  • ‘யாயும் ஞாயும் யாரா‘கியரோ-குறுந்தொகை
    ‘‘யாயும் ஞாயும் யாராகியரோ எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர் நீயும் யானும் எவ்வழி அறிதும் செம்புலப் பெயல் நீர்போல அன்புடை நெஞ்சந்தாங்...
  • தமிழின் தனித்தன்மை
    தமிழ்மொழியின் தனித்தன்மையும் தனிமைத் தன்மையும் பகுதி II - தமிழின் தனித்தன்மை தவிர்க்க இயலாத தத்துவம் மாற்றம் என்பது மாறாத உல...
  • தமிழ் மரபு மாதம்
        January 22, 2022  • Viduthalai  ஆஸ்திரேலிய அரசு கடந்த ஆண்டு தமிழர் புத்தாண்டாம் தை முதல்நாளை தமிழ் மரபு மாதம் என்று அறிவித்தது, இதனை பெர...
  • ‘திராவிடம்’ என்பது சமஸ்கிருதச் சொல்லா?
    கால்டுவெல் கூற்றை கண்மூடி ஏற்பதா? - மஞ்சை வசந்தன் ---------------------------------------------- “தமிழ்” என்ற பெயருக்கு நிகரான சமஸ்கிருதப் ப...

Translate

என்னைப் பற்றி

parthasarathy r
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
ஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.