பக்கங்கள்

செவ்வாய், 4 நவம்பர், 2025

5,000 ஆண்டுகளுக்கு முன்பே உருக்கு இரும்பு உலக நாகரிகத்தின் துவக்கப் புள்ளி தமிழர்களே!

 


தமிழ்நாடு முதலமைச்சர் 23.01.2025 அன்று உலகிற்கே தமிழர்களின் அதிமுக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிட்டார் அது என்னவென்றால் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் உருக்கு இரும்பு என்ற கார்பன் கலக்கப்பட்ட உறுதியான இரும்பை பயன்படுத்த துவங்கி விட்டனர் என்பதாகும்.

அறிவியலின் வேகம்

இதுநாள் வரை நாம் 15 ஆம் நூற்றாண்டில் தொழில் நுட்பம் அய்ரோப்பியர்களின் கைவசம் சென்ற பிறகு தான் உலகம் நவீனத்தை நோக்கிச் சென்றது என்று இதுவரை பேசிவந்தோம், அது கிட்டத்தட்ட உண்மையும் கூட, நீராவி எஞ்சின் கண்டுபிடிப்பு – அதிலிருந்து புறப்பட்ட அறிவியலின் வேகம் இன்று இந்த பேரண்டத்தின் எல்லை வரையும் ஆழ்கடலின் அடித்தளத்தையும் பார்க்கவைத்தது, மனித இனத்தில் 23 லட்சம் ஆண்டுகால பயணத்தில் மிக முக்கியமான அசுரப்பாய்ச்சலை தந்து 400 ஆண்டுகளில் நவீனங்கள் அனைத்தும் விரல் நுனியில் வந்துவிட்டது.

கட்டுரை, ஞாயிறு மலர்
ஆனால் இந்த அசுரப்பாய்ச்சலுக்கு இன்றிலிருந்து 5000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழினம் விதை போட்டது. ஆனால் வடக்கே பரவிய வேதமரபு முதலாம் நூற்றாண்டிற்கு முன்பாக மெல்ல மெல்ல தென் இந்தியாவில் பரவ அறிவுசார் களங்கள் அனைத்திலும் வர்ணமுறையை திணித்ததால் தமிழர்களின் நாகரீக ஆற்றல்வளம் அப்படியே நின்றுவிட்டது.

இரும்பின் முக்கியத்துவம்

மனிதர்கள் இரும்புக்கு முன்பாகவே தாமிரத்தை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். ஆனால், இரும்பின் அளவுக்கு தாமிரம் உறுதியான உலோகம் இல்லை என்பதால், வனங்களை அழித்து விவசாய நிலமாக்குவதில் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை. தவிர, தாமிரத்தைவிட இரும்பின் உருகும் வெப்பநிலை அதிகம். அதற்கேற்ற உலைகளும் தாமிர காலத்தில் கிடையாது. ஆகவே, ஒரு சமூகம் இரும்பின் பயன்பாட்டை அறியத் துவங்கியது என்றால், இரும்பை உருக்குவதற்கான தொழில்நுட்பத்தை அறிந்திருப்பதோடு, நாகரிகத்தின் அடுத்த கட்டத்திற்கும் நகரத் துவங்கியது என்பதைக் குறிக்கிறது. இதற்குப் பிறகு வேளாண்மையை அடிப்படையாகக் கொண்ட சமூகம் உருவாகி, உபரி உற்பத்தி, செல்வம், இனக் குழுக்களுக்குத் தலைமை, அரசு ஆகியவையும் உருவாகத் துவங்கியது.
ஆகவேதான் இரும்புக் காலத்தின் துவக்கம் எப்போது ஏற்பட்டது என்பதற்கு கூடுதல் முக்கியத்துவம் தரப்படுகிறது.
உலக அளவில் மிகப் பழமையான இரும்பு 1911ஆம் ஆண்டில் வட எகிப்தில் அல் – கெர்சே (Al – Gerzeh) என்ற இடத்தில் இருந்த கல்லறைகளில் இருந்து எடுக்கப்பட்டது. இந்தக் கல்லறைகளில் இருந்து 9 மணிகள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றின் காலம் கி.மு. 3,400 முதல் 3,100வரையாக இருக்கலாம் என கணிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இவை இரும்புத் தாதை உருக்கி செய்யப்பட்டவையல்ல. மாறாக விண்கற்களில் இருந்து கிடைத்த இரும்பில் செய்யப்பட்டவை.

தொழில்நுட்பம்

இரும்புத் தாதை உருக்கி இரும்பு செய்யும் தொழில்நுட்பம் கி.மு. 1,300வாக்கில் அனடோலியா (தற்போதைய துருக்கி) பகுதியில் தொடங்கியதாக கருதப்பட்டுவந்தது. அங்கிருந்தே இரும்பை உருக்கும் தொழில்நுட்பம் உலகின் மற்ற பகுதிகளுக்குப் பரவியதாகவும் கருதப்பட்டது. ஆனால், இரும்பின் பயன்பாடு எப்படித் துவங்கி, எப்படிப் பரவியது என்பது தொடர்பான விவாதங்கள் இப்போதும் தொடர்ந்து நடந்துவருகின்றன.

இந்தியாவைப் பொறுத்தவரை, கி.மு. 1,000ஆவது ஆண்டுவாக்கில்தான் இரும்பு உருக்கும் தொழில்நுட்பம் அறிமுகமானதாக ஆரம்பத்தில் கருதப்பட்டது. ஆனால், சமீபத்தில் இந்தியா முழுவதும் நடந்த தொல்லியல் ஆய்வுகளில் கிடைத்த முடிவுகள், இரும்பு உருக்கும் தொழில்நுட்பம் அதற்கு முன்பே இந்தியாவில் இருந்ததை உறுதிப்படுத்தின.

“உதாரணமாக உத்தரப் பிரதேசத்தின் அக்தாவில் கிடைத்த இரும்பின் காலம் கி.மு. 1,800 முதல் 1,450 வரை இருக்கலாம் எனத் தெரியவந்தது. தெலங்கானாவின் கச்சிபவுலியில் கிடைத்த இரும்பு கி.மு. 2,200அய் சேர்ந்ததாக இருக்கலாம் எனத் தெரியவந்தது.

இந்த நிலையில்தான், தற்போது ஆதிச்சநல்லூரிலும் சிவகளையிலும் கிடைத்த இரும்புப் பொருட்களின் காலம் கி.மு. 2,500 முதல் கி.மு. 3,345வரை இருப்பது தெரிய வந்திருக்கிறது. ஆகவே 5,300 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில் இரும்பை உருக்கும் தொழில்நுட்பம் இருந்திருக்கிறது

வட இந்தியாவில் கிடைத்ததைப் போல தமிழ்நாட்டில் அதிக அளவு செம்பு கிடைக்காத காரணத்தால் இங்கு செம்புக் காலம் வழக்கத்திலிருக்கவில்லை. இருந்தபோதும் ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட ஈமத் தாழிகளில் கி.மு. 15ஆம் நூற்றாண்டின் இடைக்காலத்தைச் சேர்ந்த உயர்தர தகர – வெண்கலப் பொருட்கள் கிடைத்திருக்கின்றன.
அதேபோல, சாஸ்தாபுரம், அடுக்கம், சூலப்புரம், திருமலாபுரம், ஆரோவில் போன்ற இடங்களிலும் இதுபோன்ற பொருட்கள் கிடைத்திருக்கின்றன.

அகழாய்வுகள்

ஆனால், தமிழ்நாட்டில் எவ்வளவோ அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் உயர்தர தகர – வெண்கலப் பொருட்களின் உற்பத்தி மய்யம் இருந்ததற்கான சான்றுகள் ஏதும் இதுவரை கிடைக்கவில்லை என்கிறது இந்த அறிக்கை.

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரிலும் சிவகளையிலும் கிடைத்த இரும்பு தொல்பொருள்களை ஆய்வுசெய்தபோது அவற்றின் காலம் கி.மு. 3,345 வரை செல்வதாக, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியிட்டுள்ள ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

அதாவது, சுமார் 5,350 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பின் பயன்பாடு தமிழ்நாட்டில் இருந்தது கண்டறியப்பட்டிருப்பதாக இந்த ஆய்வு கூறுகிறது.

இதற்கு முன்பாக, கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறையில் கிடைத்த இரு இரும்புப் பொருட்களுடன் இருந்த கரிமப் பொருட்கள் ஏ.எம்.எஸ் (Accelerator Mass Spectrometry – ஒரு மாதிரியில் உள்ள அய்சோடோப்புகளின் விகிதங்களை அளவிடும் நுட்பம்) என்ற முறையில் காலக் கணக்கீடு செய்யப்பட்டபோது, ஒரு கரிமப் பொருளின் சராசரி மய்ய அளவீட்டுக் காலம் கி.மு. 2172 என்று தெரியவந்தது.

ஆகவே, தமிழ்நாட்டில் இரும்பின் பயன்பாடு 4,200 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததாக கருதப்பட்டது. தற்போதைய முடிவுகளின்படி, இரும்பின் பயன்பாடு மேலும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில் இருப்பது தெரியவந்திருக்கிறது.

இரும்பின் தொன்மை

‘இரும்பின் தொன்மை’ என்ற பெயரிலான இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டுப் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தற்போது வெளிவந்துள்ள காலக்கணிப்பின்படி உலக அளவில் இரும்பை உருக்கிப் பயன்படுத்தும் தொழில்நுட்பம் தமிழ்நாட்டில்தான் முதலில் இருந்திருக்கலாம் எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.
தமிழ்நாட்டு தொல்லியல் ஆய்வில் இரும்பின் பயன்பாடு மீதான ஆர்வத்தைத் தூண்டியது, சேலம் மாவட்டம் மாங்காட்டில் கிடைத்த இரும்பு வாள்தான். சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டத்தில் உள்ள மாங்காடு என்ற இடத்தில் நடந்த தொல்லியல் ஆய்வில் இரும்பு வாள் ஒன்று கிடைத்தது. இந்த வாளை காலக் கணக்கீட்டுக்கு உட்படுத்தியபோது, அதன் காலம் கி.மு. 1,604 முதல் கி.மு. 1,416 வரை இருக்கலாம் எனத் தெரியவந்தது. அவ்வளவு தொன்மையான இரும்பு கிடைத்தது தமிழ்நாட்டில் அதுதான் முதல்முறை. இந்தக் கண்டுபிடிப்புதான் தமிழ்நாடு தொல்லியல் வட்டாரத்தில், இரும்பின் மீதான ஆர்வத்தைத் தூண்டியது.

அதற்கடுத்ததாக, திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி கீழ்நமண்டியில் 2023இல் நடந்த அகழாய்வில் சில ஈமப்பேழைகள் கண்டெடுக்கப்பட்டன. அந்த ஈமப் பேழைகளில் கிடைத்த இரும்பு மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டபோது, அவற்றின் காலம் தோராயமாக கி.மு. 1769 முதல் 1615 வரை இருக்கலாம் எனத் தெரியவந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறையில் கிடைத்த இரும்பின் காலமும் கி.மு. 2,172ஆக இருப்பது தெரியவந்தது. இந்தக் கண்டுபிடிப்புகளுக்குப் பிறகு, இரும்பின் மீதான கவனம் மேலும் அதிகரித்தது. இந்த நிலையில்தான் ஆதிச்சநல்லூரிலும் சிவகளையிலும் கிடைத்த இரும்பு தொல்பொருட்களின் காலம் கி.மு. 2,600 முதல் கி.மு. 3,345 வரை இருப்பது தெரியவந்திருக்கிறது.

ஆதிச்சநல்லூரைப் பொறுத்தவரை, அதன் வாழ்விடப் பகுதியில் 220 செ.மீ. ஆழத்தில் கிடைத்த இரும்புப் பொருளுடன் கிடைத்த கரிமப் பொருட்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதில், அவற்றின் காலம் சராசரியாக கி.மு. 2613ஆக இருக்கலாம் எனத் தெரியவந்திருக்கிறது. அதேபோல, தூத்துக்குடி மாவட்டம் சிறீ வைகுண்டத்திற்கு 10 கி.மீ. தூரத்தில் இருக்கும் சிவகளையில் நடத்தப்பட்ட அகழாய்வில் மூன்று முதுமக்கள் தாழிகள் கிடைத்தன.
இதில் இருந்த கரிமப் பொருட்கள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டன. அதில் கிடைத்த ஒரு கரிமப் பொருளின் காலம் கி.மு. 3,345 எனத் தெரியவந்திருப்பதாக தமிழ்நாடு அரசின் அறிக்கை கூறுகிறது. ஆகவே, அந்தக் கரிமப் பொருளுடன் இருந்த இரும்பின் காலமும் அதுவாகவே கணக்கிடப்பட்டிருக்கிறது.

“ஹரப்பா நாகரீகத்தை ஆரம்பகால ஹரப்பா நாகரீகம், முதிர்ந்த ஹரப்பா நாகரீகம், பிற்கால ஹரப்பா நாகரீகம் என பிரித்துப் பார்க்க முடியும். ஆரம்பகால ஹரப்பா நாகரீகம் என்பது கி.மு. 3,300வாக்கில் நிலவியது.”

உருக்கு இரும்பு

“தற்போது சிவகளையில் கிடைத்திருக்கும் இரும்பும் அதே காலகட்டத்தைச் சேர்ந்தது. ஹரப்பா நாகரீகத்தைப் பொறுத்தவரை அங்கே இரும்பு கிடையாது. செப்பு தான் பயன்படுத்தப்பட்டது. ஆனால், அதே காலகட்டத்தில் தமிழ்நாட்டில் இரும்பு உருக்கி, பயன்படுத்தப்பட்டிருக்கிறது. வட இந்தியா செப்புக் காலத்தில் இருந்தபோது, விந்திய மலைக்கு தெற்கே இருந்த பகுதிகள் இரும்புக் காலத்தில் இருந்தன என்ற முடிவுக்கு வர முடியும்”
உறுதிமிக்க உருக்கு இரும்பை தமிழர்கள் கோலிகுண்டு விளையாடவோ, அல்லது சிலை செய்து பூஜிக்கவோ பயன்படுத்தி இருக்க மாட்டார்கள்

குறிப்பாக வட இந்தியாவின் மகாஜனபத் என்ற குடியிருப்புகள் உருவான பிறகு இரும்பின் பயன்பாடு அதிகரித்தது என்று கூறுவார்கள். ஆனால் மகாஜனபத் பட்டியலில் தென் இந்தியா வரவில்லை. மகாஜனபத் காலம் கிமு 1500 ஆண்டுகாலம் ஆகும். ஆதாவது கங்கைச் சமவெளி நாகரீகத்தின் மத்திய காலம் என்று கருத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மகாஜனபத் என்ற மனிதக் குடியிருப்புகளுக்கும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் உறுதியான இரும்பை தயார் செய்து அதனை பயன்படுத்த துவங்கிவிட்டார்கள் என்றால் அவர்கள் இந்த உறுதியான இரும்பின் மூலம் பல கருவிகளைக் கண்டுபிடித்திருப்பார்கள்.

அந்த கண்டுபிடிப்புகள் என்ன என்ன என்ற ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
இந்த ஆய்வுகளின் முழுமையான விவரம் வரும் போது தமிழர்கள் தான் நாகரீகத்தின் துவக்கப்புள்ளியாக இருந்தனர் என்பது தெரியவரும்.

- விடுதலை ஞாயிறு மலர்,25.1.25

செவ்வாய், 28 அக்டோபர், 2025

இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு



 ஸ்டாக்ஹோம், அக்.10 இலக்கியத்திற்கான நோபல் பரிசு அங்கேரி நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் லாஸ்லோ கிராஸ்னாஹோர்காய்-க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய 6 துறைகளில் சிறந்த சாதனை படைப்பவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. நோபல் பரிசு ஒரு பதக்கம், சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசு அடங்கியது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பரிசு என்ற அடிப்படையில், ஆறு நாட்களுக்கு நோபல் பரிசுகள் அறிவிக்கப்படும். அதன்படி ஏற்ெகனவே மருத்துவம், இயற்பியல், வேதியியல் என நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இலக்கியத்திற்கான நோபல் பரிசு நேற்று (9.10.2025) அறிவிக்கப்பட்டது. அதன்படி, 2025-ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு அங்கேரி நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் லாஸ்லோ கிராஸ்னாஹோர்காய்-க்கு அறிவிக்கப்பட்டது.

பயங்கரவாதத்திற்கு மத்தியில் கலைத்திறனை உறுதிப்படுத்திய தொலைநோக்கு பார்வைக்காக விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்வீடிஷ் அகாடமி குழு ஸ்டாக்ஹோம் நகரில் உள்ள பார்ஸ்ஸாலனில் இலக்கியத்திற்கு நோபல் பரிசை அறிவித்தது.

-விடுதலை நாளேடு,10.10.25

சனி, 25 அக்டோபர், 2025

அரபு மொழியில் இருந்து தமிழில் கலந்த சொற்கள்

அரபு மொழியில் இருந்து தமிழுக்கு கிடைத்த சொற்கள் 

அசல் أصل. மூலம்

மாஜி ماضي முந்தைய

அத்து حد வரம்பு

முகாம் مقام தங்குமிடம்

அத்தர் عطر மணப்பொருள்

முலாம் ملام மேற்பூச்சு

அமுல் عمل நடைமுறை

ரத்து رد விலக்கு/நீக்கம்

அனாமத் أنعمت. கேட்பாரற்ற

ரசீது رصيد ஒப்புப் படிவம்

அல்வா حلوه இனிப்பு

ராஜி راضي உடன்பாடு

ஆஜர் حاظر வருகை

ருஜு رجوع உறுதிப்பாடு

ஆபத்து آفت துன்பம்

ருமால் رمال கைக்குட்டை

இனாம் انعام நன்கொடை

லாயக் لائق தகுதி

இலாகா علاقة துறை

வக்கீல் وكيل வழக்குரைஞர்

கஜானா خزانة கருவூலம்

வக்காலத்து وكالة பரிந்துரை

காலி خالي வெற்றிடம்

வகையறா وغيره முதலான

காய்தா قاعدة தலைமை/வரம்பு

வசூல் وصول திரட்டு

காஜி قاضي நீதிபதி

வாய்தா وعده தவணை

கைதி قيد சிறையாளி

வாரிசு وارث உரியவர்

சவால் سوال அறைகூவல்/கேள்வி

சர்பத் شربة. குளிர்பானம்

ஜாமீன் ضمان பிணை

சரத்து شرط நிபந்தனை

ஜில்லா ضلعة மாவட்டம்

தகராறு تكرار. வம்பு

தாவா دعوة வழக்கு

திவான் ديوان அமைச்சர்

பதில் بدل மறுமொழி

பாக்கி باقي நிலுவை

மஹால் محل மாளிகை

மகசூல் محصول அறுவடை/ விளைச்சல்

மாமூல் معمول வழக்கம்.

இது பற்றிய செய்தியை தஞ்சாவூர் வல்லத்தில் 2007 ல் நடந்த TNTJ தவ்ஹீத் எழுச்சி மாநாட்டின் கண்காட்சி அரங்கில் நான் வைத்திருந்தேன்
- அப்துல் வகாப் முகநூல் பதிவு, 25.10.2025
- இவற்றில் பல உருது சொற்களாகவும் இருக்க வாய்ப்புண்டு. உருது இந்தியாவில் உருவான ஒரு கலவை மொழியாகும்.

திங்கள், 11 ஆகஸ்ட், 2025

சமஸ்கிருதம் என்பது தனித்தன்மையான ஒரு மொழியல்ல

சமஸ்கிருதம் என்பது தனித்தன்மையான ஒரு மொழியல்ல – அது ஒரு கலப்பட மொழியாகும்.

- மின்சாரம்

அடிநாளில் (நீண்டநாளுக்கு முன்) மேற்கு மத்திய ஆசியாவில் வாழ்ந்த நார்டிக் ஆரிய மக்கள் பேசிவந்த மொழியே பலமொழிகள் கலந்து சமஸ்கிருதம் என்பதாக ஆயிற்று. அதாவது, தங்கள் தாயகத்தின் சுற்று வட்டார எல்லை நாடுகளின் மொழிகளான துருக்கி (Turkee) மொழி. ஈரானிய மொழி – பாக்ட்ரினியாவில் குடியேறிய பின் பர்மீரியன் மொழி ஆகியவற்றிலிருந்து தொகுத்த கதம்பமே சமஸ்கிருத மொழி.

மேற்கு மத்திய ஆசியாவில் வசித்த இந்த ஆரியர்கள் பாக்ட்ரினியாவிலிருந்து இரு பிரிவாகப் பிரிந்து, கி.மு. 1350ஆம் ஆண்டு வாக்கில் வடமேற்கிந்தியாவில் குடியேறிய போது இந்தச் சமஸ்கிருத மொழியையும் வடமேற்கிந்தியாவில் புகுத்தினர்.

இவர்கள் வடமேற்கிந்தியாவில் இருமுறை நுழைந்தனர். முதலாவது கி.மு. 1400 வேதகாலம்: இரண்டாவது கி.மு. 58இல் பாக்ட்ரினியா, சாக்டியானா நாடுகளில் கிரேக்க – பாரசீக மொழிக் கலைத் தொடர்புகளின் பலனாக இந்த சமஸ்கிருத மொழி மேற்கண்ட பாரசீக – கிரேக்க மொழிக் கலை இலக்கிய இலக்கணங்களையும் தழுவி மேற்கொண்டு திருத்தப்பெற்றது.

மற்றும் சமஸ்கிருத மொழி இந்தியாவின் லத்தீன் மொழி என்றும் அழைக்கப்பட்டது. ஆல்பன்கெல்ட் மக்கள் மத்திய தரைக்கடல் வட்டாரங்கள் மீது படையெடுத்த போது, இத்தாலிய மக்களிடையே இந்த கெல்ட் மக்கள் திணித்த மொழியே லத்தீன்.

மொழிகளின் பிரிவு

மொழிகள், துரானிய மொழிகள் என்றும், ஆரிய மொழிகளென்றும் இருபெரும் பிரிவுகளைக் கொண்டுள்ளன சமஸ்கிருதம் ஆரிய மொழியினத்தைச் சேர்ந்தது.

‘சமஸ்கிருதம்” என்ற சொல்லின் பொருள். சுத்தப்படுத்தப்பட்டது அல்லது பலவற்றைச் சேர்த்து உருவகப்படுத்தப்பட்டது என்பதாகும்.

மேலும் விளக்க வேண்டுமானால், இது ஹிந்துஸ்தானியில் “சான்ஸ்கிரிட்” என்று உச்சரிக்கப் படுகிறது. இந்த சமஸ்கிருத மொழியாக்கத்தின் பெரும் பகுதியும் அடிப்படை அமைப்பும் மேற்கு மத்திய ஆசியாவில் வழங்கிய ஆரிய மொழியிலிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டதாகும். மற்றும் பல நூற்றாண்டுகளாக பல்வேறு நாடுகளில் பல்வேறு மொழிகளுடன் தொடர்பு கொண்டதன் பலனாகப் பிறமொழி அம்சங்கள் பலவற்றை இந்த சமஸ்கிருத மொழியுடன் அவ்வப்போது சேர்த்துக் கொண்டு வந்தனர்.

பொருளுக்கேற்ற பெயர்

வடமேற்கு இந்தியாவில் குடியேறும் வரையில் இந்த ஆரியர்கள். இடைக்காலத்தில் திரிந்த பல்வேறு நாடுகளின் பல்வேறு மொழிக் கலைப்பகுதிகளையும் இச்சமஸ்கிருதத்தில் சேர்த்துக் கொண்டனர்.

சமஸ்த = எல்லாம்;

கிருதி = தொகுக்கப்பட்டது

– என்பதே இதன் பொருள்.

“என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா” என்ற ஆங்கில மொழிப் பேரகராதியின் 13ஆவது தொகுதியில், சமஸ்கிருத மொழி பிறப்பு வரலாறு, டாக்டர் எச்.ஜூலியஸ் எக்லிங் என்பவரால் தரப்பட்டுள்ளது.

(இவர் எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் சமஸ்கிருதப் பேராசிரியராகப் (1875 முதல் 1914 வரை) பணியாற்றியவராவார். ராயல் ஏசியாட்டிக் சொசைட்டியின் செயலாளராகவும் இருந்தவராவார்).

“சமஸ்கிருத மொழி ஆரிய மொழிகளுடன் கொண்டுள்ள தொடர் பையும், பல அம்சங்களில் கிரேக்க மொழியைப் போன்றிருப்பதையும்” இவர் விளக்கியுள்ளார்.

டாக்டர் பிரான்ஸ் பாப் என்பவர். கோதிக் மொழியிலிருந்து பைபிளை வாசித்தபோது கோதிக் மொழியும், சமஸ்கிருத மொழி போன்றே இருப்பதைக் கண்டர்.

(பிரான்ஸ் பாப் (1791-1867) இந்தோ அய்ரோப்பிய மொழிகளைக் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டவர் ஆவார்).

பல மொழிகளின் கலவை

பர்கீஸ் மொழி, ஈரானிய மொழி, பர்மீயன் மொழி, கிரேக்க மொழி ஆகியவற்றின் கூட்டு அவியலே சமஸ்கிருதம்.

கி.மு. 53இல் குசான் வம்சத்தைச் சேர்ந்த கனிஷ்கர் தான் சமஸ்கிருத மொழியை ஓர் உருவுக்குக் கொண்டு வந்தார். இந்த இலட்சணத்தில் தான் இந்திய மொழிகளுக்கெல்லாம் தாய் மொழி என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் உட்படப் பார்ப்பனர்கள் வாய்ப்பறை கொட்டுகின்றனர்.

பதிலடிப் பக்கம்

இவ்வளவுக்கும் இந்தியாவில் சமஸ்கிருதம் பேசுவோர் எண்ணிக்கை வெறும் 24821; விழுக்காட்டில் சொல்லப் போனால் இந்திய மக்கள் தொகையில் வெறும் 0.0001 தான்!

- விடுதலை நாளேடு, 9,10.8.25

(மோகன் பகவத்தின் கருத்துக்கு பதிலடியாக வெளியான கட்டுரையின் தொகுப்புகள்)

வியாழன், 17 ஜூலை, 2025

கருநாடகத்தில் 10-ஆம் நூற்றாண்டின் தமிழ் கல்வெட்டு கண்டெடுப்புத்தில் 10-ஆம் நூற்றாண்டின் தமிழ் கல்வெட்டு கண்டெடுப்பு



 பெங்களூரு, ஜூலை 4 கருநாடக மாநிலம், சாமராஜ்நகா் மாவட்டம், எணகும்பா எனும் கிராமத்தில் 10 -ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த தமிழ் நடுகல் கல்வெட்டு கண்டெடுக் கப்பட்டுள்ளது.

கல்வெட்டு

ஈரோடு மாவட்டம், தாளவாடி வட்டம், சிக்கள்ளி அரசுப் பள்ளி ஆசிரியா் ஜான் பீட்டா், யாக்கை மரபு அறக்கட்டளையின் பொறுப்பாளா்கள் குமரவேல் ராமசாமி, சுதாகா் நல்லியப்பன் ஆகியோா் இந்தக் கிராமத்தில் அண்மையில் களஆய்வு செய்து இக்கல்வெட்டைப் படியெடுத்து ஆவணப்படுத்தினா்.

இதுகுறித்து யாக்கை மரபு அறக்கட்டளையின் பொறுப்பாளா்களும் கல்வெட்டு ஆராய்ச்சியாளா்களுமான குமரவேல் ராமசாமி, சுதாகா் நல்லியப்பன் ஆகியோா் நேற்று (3.7.2025) கூறியதாவது:

கருநாடகத்தில் முதலாம் ராஜராஜன் காலத்திலிருந்து ஏராளமான தமிழ் கல்வெட்டுகள் பதிவாகியுள்ளன. பல்வேறு காலகட்டங்களில் 1,537 கல்வெட்டுகள் பதிவு செய்யப்பட்ட சூழலில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட களஆய்வின்போது மேலும் ஒரு தமிழ் கல்வெட்டு கிடைத்திருப்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

எணகும்பா நடுகல் கல்வெட்டு 116 செ.மீ. உயரம், 83 செ.மீ. நீளம் கொண்டுள்ளது. 20 வரிகள் கொண்ட இந்தக் கல்வெட்டு 10 -ஆம் நூற்றாண்டு எழுத்து அமைவுடன் உள்ளது. பேறகைப்பாடி கொல்லன் முனிவர கண்டாசாரி என்பவரின் மகன் எருமை கும்பத்து வேல்பாடி எனுமிடத்தில் நடைபெற்ற ‘நிரை கவா்தல்’ பூசலில் உயிரிழந்த செய்தி இதில் பதிவாகியுள்ளது.

‘நிரை கவா்தல்’ எனும் சொல் மாடுபிடிச் சண்டையைக் குறிக்கும் நோக்கில் சங்க இலக்கியங்களில் பயன்படுத்தப்படுவதாகும். இந்நடுகல் சிற்பம் மூன்று அடுக்குகளைக் கொண்டுள்ளது.

தமிழ் கல்வெட்டு இருக்கும் இடத்திலிருந்து 410 மீ. தொலைவில் கிராமத்துக்கு மேற்கே மேலும் மூன்று நடுகற்களில் கன்னட மொழி கல்வெட்டுகள் உள்ளன. தமிழ் கல்வெட்டில் உள்ளதுபோலவே கன்னட கல்வெட்டிலும் எருமைக் கும்பம் என்றே அவ்வூா் வழங்கப்பட்டது தெரியவருகிறது. கன்னட மொழி நடுகல் கல்வெட்டுகளும் 10 -ஆம் நூற்றாண்டைச் சோ்ந்தவை என்பதை இந்திய தொல்லியல் துறையின் மைசூரு பிரிவு அதிகாரிகள் உறுதிப்படுத்தினா்.

தமிழ் நடுகல் கல்வெட்டு கிடைத்த இடத்துக்குத் தெற்கே 180 மீ. தொலைவில் தோட்டத்தில் முதலாம் குலோத்துங்கன் காலத்திய கோயில் கல்வெட்டில் நிலங்கள் கொடை வழங்கிய செய்தி பதிவாகியுள்ளது. இக்கல் வெட்டிலும் எருமை கும்பம் என்று இவ்வூா் வழங்கப்படுகிறது.

எணகும்பா சுற்றுவட்டாரப் பகுதியில் கிடைத்த இரண்டு தமிழ், மூன்று கன்னட கல்வெட்டுகள் மூலம் அக்கால கட்டங்களில் தமிழ் மற்றும் கன்னட மொழிகள் பயன்படுத்துவோா் ஒரே பகுதியில் வாழ்ந்தது தெரியவருகிறது. அவா்கள் அவரவா் மொழிகளில் ஊா் பெயரை எருமைக் கும்பம் என பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இப்பெயா் மருவி எணகும்பா என்றாகி உள்ளது என்றனா்.

- விடுதலை நாளேடு, 4.7.25

ஞாயிறு, 23 மார்ச், 2025

ஹிந்தித் திணிப்பால் மொழிகள் அழிகின்றன ஹிந்திபெல்ட்: மொழிகளின் சாவு மணி, இதில் ஹிந்தி மொழி எங்கே?


விடுதலை நாளேடு

 ஹிந்தி பெல்ட் ஹிந்தி பெல்ட் என்று கூறும் பீகார், உத்தரப் பிரதேசம், அரியானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான்.  இந்த மாநிலங்களில் 19ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் உருவாக்கப்பட்ட ஹிந்திக்கும் முன்பு என்ன பேசினார்கள்? அந்த மொழிகளின் நிலை என்ன என்பதைத் தெரிந்துகொண்டாலே ஹிந்தியின் ஆபத்து புரியவரும்.

ராஜஸ்தானில் சிந்த், மிர்க் (தார் பகுதியில் பேசப்படும் மொழி), ராஜஸ்தானி, மார்வாடி இவை பெரும்பாலான மக்கள் பேசும் மொழிகள் ஆகும். இந்த மொழிகள் இன்று என்ன ஆயின?  இவை மட்டுமல்லாமல் ரூர்க் மற்றும் பிகனேர் போலி ஆகியன உள்ளூர் பழங்குடியினத்தினர் பேசும் மொழிகள் ஆகும். இதில் பிகனேர், போலி, ரூர்க், மிர்க் போன்ற மொழிகள் அழிந்தே போயிற்று.
அரியானாவில் அரியானி ஹிந்துஸ்தானி (உருது கலந்த மொழி), அல்வரி போன்றவை  அதிகம் பேசப்பட்டன. அங்கும் வலுக் கட்டாயமாக ஹிந்தி திணிக்கப்பட்டுள்ளன.
 பீகாரில் பேசப்படும் மொழிகள்
• Bhojpuri: Spoken in the western part of Bihar
போஜ்பூரி: மேற்கு மத்திய மேற்கு
• Maithili: Spoken in the northern part of Bihar
மைதிலி மொழி: வடபகுதி நேபாளத்தை ஒட்டிய மாவட்ட உயர் ஜாதியினர் பேசும் மொழி.
• Magahi: Spoken in the central and southern parts of Bihar
மகத் பெரும்பாலான தாழ்த்தப்பட்ட மற்றும் தீண்டாமைக்குள்ளாகும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் பேசும் மொழி.
• Angika: Spoken in the Ang region of Bihar
அங்கிகா அங்பகுதி (தென்கிழக்கு பீகாரில் பேசும் பழங்குடியின மொழி.
• Bajjika: Spoken in the western part of Bihar
பொஜ்ஜீகா அல்லது பாஜ்கா மத்திய மேற்கு பீகாரில் பேசப்படும் மொழி.
• Kurukh: A Dravidian language spoken in Bihar
குர்க்: பக்ஸர் உள்ளிட்ட தென்மேற்கு பகுதியில் பேசப்படும் திராவிட மொழி.
• Kulehiya/Malto: A Dravidian language spoken in Bihar
குலேகியா மைத்தோ: திராவிட இன மொழி, தென்மத்திய பகுதி பழங்குடியினர் பேசும் மொழி.
• Mal Paharia: A Dravidian language spoken in Bihar
மால்பகரியா: திராவிட இன மொழி, பீகாரில் பெரும்பாலான பழங்குடியினர் பரவலாகப் பேசும் மொழி.
• Santali: An Austroasiatic language spoken in Bihar
சந்தலி: இந்தியாவில் கிரேக்கச் சொல் கலந்து பேசப்படும் ஒரே ஒரு மொழி/ கிரேக்கர்கள் இங்கு வாழ்ந்த போது உள்ளூர் மொழிகளோடு கலந்து உருவானது கிமு 2ஆம் நூற்றாண்டு.
• Munda: An Austroasiatic language spoken in Bihar
முண்டா: பழங்குடியின மொழி. ஜார்கண்ட் எல்லையை ஒட்டிய பகுதி – பீகார் பழங்குடியினர் பேசும் மொழி.
• சுர்ஜாபூரி:  வடகிழக்கு பீகாரில் பேசப்படும் பெரும்பான்மை மொழி.
இங்கெல்லாம் யாருக்கும் ஹிந்தி தாய்மொழி அல்ல.
 
உத்தரப் பிரதேசத்தில் 
பேசப்படும் மொழிகள்
அவதி: உயர்ஜாதியினர் பேசும் மொழி அயோத்தி பகுதிகளில் பேசப்படுகிறது.
போஜ்பூரி: பரவலாக பேசும் மொழி.
பிரிஜ் பாஷா: ஆக்ரா பிருந்தாவன் மதுரா பகுதியில் பேசும் மொழி.
கான்பூரி: கான்பூர் பகுதியில் பேசப்படும் மொழி.
போஜாபூரி: வாரணாசி வட்டாரத்தில் பேசும் மொழி.
கரிபோலி: தென்மேற்கு உத்தரப் பிரதேசத்தில் பேசப்படும் மொழி.
கன்னோஜ்: மத்திய வடக்கு உத்தரப் பிரதேசத்தில் பேசப்படும் மொழி.
புந்தேலி: புந்தேள்கண்ட் பகுதியில் பேசப்படும் மொழி(மத்திய வடக்கு உபி).
பஹேலி: மத்திய தெற்கு உபியில் பேசப்படும் மொழி.
லக்னாவி: உத்தரப் பிரதேசம் கவுதம்புத் நகர், இட்டா, லக்னோ பகுதிகளில் பேசப்படும் உருது மொழி, லக்னவி என்றும் அழைப்பார்கள்.
இங்கும் யாருக்கும் தாய்மொழி ஹிந்தி அல்ல.
மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்கண்டில் பேசப்படும் மொழிகள்
• Bundeli: The second most spoken language in the state
புந்தேலி
• Bagheli: A dialect spoken in the Baghelkhand Plateau, Rewa-Panna Plateau, and some parts of Uttar Pradesh: பஹேலி
• Malwi:  மால்வி
• Nimari: நிம்மாரி அல்லது நிம்ரி
• Sind : சிந்த் மொழி
• Gondi: கோந்தி – கோண்டி
• Korku: குருகு
• Bhili: பிஹளி
• Nihali: நெஹலி
• Chhattisgarhi:  சத்தீஸ்கரி
• Powari: போவாரி
• Khandeshi: கந்தேஷி
• Harauti: ஹரவுதி
லம்பாடி: போன்ற மொழிகள் பேசப் பட்டது என்ன ஆனது இந்த மொழிகள் எல்லாம்?
இது மட்டுமல்லாமல் உத்தராகண்டில் கோரக்பூரி, பஹாடி, பஜ்ஜர் போலி  உள்ளிட்ட 3 பெரும்பான்மை மொழிகள் பேசப்பட்டன. இவை எல்லாம் ஹிந்தி என்னும் கரையானால் முழுமையாக அழிக்கப்பட்டு விட்டன.

நாட்டின் அனைவருக்குமான தாய்மொழிகள்! இதில் ஹிந்தி மொழி எங்கே?

தமிழ்நாடு- தமிழ்
கேரளா- மலையாளம்
ஆந்திரா,தெலங்கானா- தெலுங்கு
கருநாடகா- கன்னடம்
மகாராட்டிரா- மராத்தி
குஜராத்- குஜராத்தி
பஞ்சாப்- பஞ்சாபி
ராஜஸ்தான்- ராஜஸ்தானி, மார்வாரி, மேவாரி
இமாசலப்பிரதேசம்- மஹாசு பஹாரி, மண்டேலி, காங்கிரி-பிலாஸ்புரி,சாம்பேலி
ஜம்மு-காஷ்மீர்- காஷ்மீரி, டோக்ரி, பாடி, லடாக்கி.
ஜார்கண்ட்- சந்தாலி
சத்தீஸ்கர்-கோர்பா
மேற்கு வங்கம்- வங்காளி, கூர்க் (மலைப்பகுதி மேற்குவங்கம்) 3 பழங் குடியின திராவிட மொழிகள்
ஒடிசா- ஒரியா
வடகிழக்கு மாநிலங்களில் மணிப்பூரி, அசாமி, மொகாலி, நாகா, பர்மி, புரி, பங்கா, குகி, என பரவலாக பேசப்படும் 23 மொழிகள் உள்ளன. இந்தியாவில் உள்ள 135 கோடி மக்களில் ஒருவருக்குக் கூட ஹிந்தி தாய்மொழி அல்ல. ஹிந்தியும் அந்நிய மொழி தான். தாய்மொழிகளை சமஸ்கிருதத்திற்கு உயிரூட்ட ஹிந்தியைக் முன்னிறுத்தி வருகின்றனர்.


திங்கள், 3 மார்ச், 2025

திருவள்ளுவர் நாளில் வள்ளுவத்தைப் போற்றுவோம்!

 

திருவள்ளுவர் நாளில் வள்ளுவத்தைப் போற்றுவோம்!

விடுதலை ஞாயிறு மலர்

திருக்குறளில் ‘தமிழ்‘ என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை.

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு-1812
திருக்குறளின் முதல் பெயர்- முப்பால்
திருக்குறளில் உள்ள அதிகாரங்கள்- 133
திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-380
திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள்-700
திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-250
திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள்-1330
திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது.
ஒவ்வொரு குறளும் இரண்டு அடிகளால், ஏழு சீர் களை கொண்டது.
திருக்குறளில் உள்ள சொற்கள்-14,000
திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள்- 42,194
திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247-இல், 37 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை
திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள்-அனிச்சம், குவளை
திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம்- நெருஞ்சிப்பழம்
திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை- குன்றிமணி
திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து-ஒள
திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம்- குறிப்பறிதல்
திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள்- பனை, மூங்கில்
திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரெழுத்து-னி
திருக்குறளில் ஒரு சொல் அதிக அளவில், அதே குறளில் வருவது “பற்று” – ஆறு முறை.
திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள்-ளீ,ங
திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள்- தமிழ், கடவுள் ( அகர முதல என தொடங்கும் முதல் குறள் கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் உள்ளது.
திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர்- தஞ்சை ஞானப்பிரகாசர்
திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர்-மணக்குடவர்
திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்- ஜி.யு,போப்
திருக்குறளை உரையாசிரியர்களுள் 10ஆவது உரையாசிரியர்-பரிமேலழகர்
திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண்- ஒன்பது.
திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது.
எழுபது கோடி என்ற சொல் ஒரே ஒரு குறளில் இடம்பெற்றுள்ளது.
ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.
திருக்குறள் இதுவரை 107 மொழிகளில் வெளிவந்துள்ளது.
திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழிபெயர்த்துள்ளனர்
திருக்குறள் நரிக்குறவர் பேசும் வக்போலி மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
வள்ளுவத்தை போற்றுவோம்

சனி, 8 பிப்ரவரி, 2025

வடமொழிக்காரனிடம் கடன் வாங்கப்பட்டதா தொல்காப்பியம்?