பக்கங்கள்

திங்கள், 5 செப்டம்பர், 2016

ஆதி மனிதன் பேசிய தமிழ்


மனிதன் முதலில் பேசிய மொழி தமிழ் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து இருக்கிறார்கள். 70ஆயிரம் ஆண்டு களுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் மிகப் பெரிய பஞ்சம் ஏற்பட்டது. அங்கிருந்து மனித இனம் நகர்ந்து, அடுத்த ஆயிரம் ஆண்டில் இப்போ தைய ஆஸ்திரேலியா சென்றடைந்தது. இவ்வாறு மனித இனம் நகர்ந்து வந்து தங்கி, இனம் அதிகரித்த இடங்களில் மேற்குத்தொடர்ச்சி மலையும் ஒன்று.
அந்த ஆதிமனிதனின் மரபணுத் தொடர்ச்சி ஒன்று இன்றைய தமிழர்கள் சிலருக்கும் இருக்கிறது. முதலில் மரபணு என்கிற டி.என்.ஏ. குற்றவாளிகளை கண்டுபிடிக்க பயன் பட்டது. குழந்தை யாருடையது? கொல்லப்பட்டது யார்? என்பதற்கும், பாலியல்வன்புணர்வு வழக் குகள் போன்றவற்றுக்கும் உதவி வந்தன.
இன்று.ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பின்னால்சென்று,மனிதசரித்திரத்தைதெரிந் துகொள்ளும் அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்து இருக்கிறது. மனித இனத்தின் இடப்பெயர்ச்சிப் பற்றி உலகம் முழுவதும் ஆய்வுகள் நடந்து வருகின்றன. அதன்படி உலகத்தில் உள்ள சுமார் ஒரு லட்சம் ஆண்களிடம் இருந்து டி.என்.ஏ. மாதிரிகள் திரட்டப்பட்டன.
இந்தியாவில் மட்டும் 9 ஆயிரம் மாதிரிகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த ஆய்வு “ஒய் குரோமோசோம் அடிப்படை யில் நடத்தப்பட்டதாகும். அதன்படி ஜாதி என்பது ஒரு சமூக கலாசார அமைப்பு ஆய்வுப்படி, எந்த ஒரு ஜாதியும் மரபணு ரீதியில் தூய்மையானது அல்ல. எல்லாவற் றிலும் பல்வேறு காலகட்டங்களில் பலவித கலப்பு ஏற்பட்டிருக்கிறது..
இன்று ஒரு ஜாதியில் பிறந்த ஒருவர், ஒருசில நூற்றாண்டுகளுக்கு முன்பு வேறொரு ஜாதியில் இருந்து இருக்கிறார். அதனால் சாதிக்காக மனிதர்கள் அடித்துக் கொள்வது, வரலாற்று ஆய்வாளர்கள் மத்தியில் நகைச்சுவையான விஷயமாக இருக்கிறது. இந்த ஜாதி, . என்பதெல்லாம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு உட்பட் டதே. அதற்கு முன்பு அமைப்பு இருந்தது இல்லை.
70 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வந்த ஆதிமனிதன் விட்டுச்சென்ற மர பணுக்களின் மிச்சம் இன்னும் தொடர் கிறது. இந்தியாவிலேயே ஏன் உலகி லேயே மிகவும் ஆதிகுடிகளில் முதன் மையானவன் தமிழன் என்பதும், அவன் பேசிய தமிழ் மொழியே, ஆதி மனிதன் பேசிய முதல் மொழி என்பதும் அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால், பழம்பெருமை பேசுவதில் யாருக்கும் சளைக்காத நாம், இதை ஏனோ கொண் டாடத் தவறிவிட்டோம்.
விடுதலை ஞாயிறு மலர், 16.7.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக