பக்கங்கள்

ஞாயிறு, 19 மார்ச், 2017

திண்டுக்கல் அருகே 1,500 ஆண்டுக்கு முந்தைய கல்வெட்டு கண்டுபிடிப்பு


திண்டுக்கல், பிப்.27 திண்டுக்கல் அருகே ஓவா மலையில் 1,500 ஆண்டுகளுக்கு முந்தைய பாண் டியர் கால எண்ணெய் செக்கு வட்டெழுத்து கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்துர் வட்டம், சித்தரேவு ஊரின் வடமேற்கு அய்ந்து கி.மீ.,தொலைவில் ஓவா மலை உள்ளது. இதில் போடி சி.பி.ஏ.,கல்லுரி வரலாற்று துறை உதவி பேராசிரியர் மாணிக்கராஜ், ஆய்வு மய்ய ஆய்வாளர்கள் உதயகுமார், பாண்டீஸ்வரன் ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.
இம்மலை குறித்து மதுரை பாண்டியநாட்டு வரலாற்று ஆய்வு மய்ய பேராசிரியர் சாந்த லிங்கம் கூறுகையில்:  ஓவா மலையில் 1,500 ஆண்டுகளுக்கு முந்தைய கி.பி. 9-10ஆம் நுற் றாண்டை சேர்ந்த எண்ணெய் செக்கு உரலில் வட்டெழுத்து கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட் டுள்ளது.
இக் கல்வெட்டில் வட்டெ ழுத்து தமிழ்மொழியாக மாறிய நிலையில் எழுத்து பொறிக்கப் பட்டுள்ளன. இதனை வெண்பி நாட்டின் குறண்டி என்னும் ஊரைச்சேர்ந்த சோமன் அருளன் என்பவர் உருவாக்கியதாக வெட்டப்பட்டுள்ளது. குறண்டி என்பது மதுரை - அருப்புக் கோட்டை சாலையில் ஆவியூ ருக்கு அருகே இருக்கும் குறண்டி எனும் ஊராகும். இங்கு வர லாற்று சிறப்பு மிக்க பராந்க பர்வதம் எனும் மலையில் சிறீ வல்லம் பெரும் பள்ளி, திருக் காட்டாம் பள்ளி என்ற பெயர் களில் 9-10ஆம் நுற்றாண்டு சம ணப்பள்ளி செயல்பட்டுள்ளது.
பாண்டியர் காலத்தில் மாரா யன் என்பது அரசு நிர்வாகத்தில் உயர்அதிகாரிகளுக்கு வழங்கப் படும் பட்டமாகும். அந்த வகையில் இந்த கல்வெட்டில் 'மாராயன்' என்ற அதிகாரிக்கு இச்செக்கு உரல் மூலமாக எண் ணெயை வழங்க வேண்டாம் என்று யாரேனும் சொன்னால் அவர்கள் பாவத்திற்கு உட்படு வார்கள், என கல்வெட்டு மூலம் எச்சரிக்கை விடப்பட்ட தற்கான எழுத்துக்கள் பொறிக் கப்பட்டுள்ளது. இதன் மூலம் 1,500 ஆண்டுகளுக்கு முன் இம்மலைப்பகுதியில் மக்கள் அரசு நிர்வாகத்துடன் வாழ்ந் துள்ளதையும், அரசு அதிகாரி களுக்கு கொடைகள் வழங்கப் பட்டதையும் அறிய முடிகின் றன. மேலும் பாதுகாப்பு இல் லாத நிலையில் இருக்கும் வட்டெழுத்து கல்வெட்டை தொல்லியல் துறையினர் அருங் காட்சியத்தில் வைத்து பாது காக்க வேண்டும், என்றார்.
-விடுதலை,27.2.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக