பக்கங்கள்

வியாழன், 23 மார்ச், 2017

விராலிமலை அருகே 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு, மற்றும் சிலை கண்டுபிடிப்பு

தென்னலூர், மார்ச் 23 விராலிமலை அருகேயுள்ள திருநல்லூரில் பழங்கால சிலைகள், மற்றும் கல்வெட் டுகள் தென்படுவதாக திருச்சி ஈ.வெ.ரா. கலைக்கல்லூரி மாணவர் சரவணன் கொடுத்த தகவலின்படி, புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர் நீலாவதி, கல்வெட்டு ஆய் வாளர் ராஜேந்திரன், பட்டயப் படிப்பு மாணவி சந்தியா உள்ளிட்ட 28 பேர் கொண்ட குழுவினர், புதுகை மாவட்டம், இலுப்பூர் வட்டம், மலைக் குடிபட்டிக்கு அடுத்து சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தென்னலூர் கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அந்தப் பகுதி யில் கி.பி. 10-ஆம் நூற்றாண் டைச் சேர்ந்த சோழ அரசர் முத லாம் குலோத்துங்க சோழன் காலத்தைச் சேர்ந்த 4 கல்வெட் டுகளும், சிவன், பார்வதி, தட் சணாமூர்த்தி, பைரவர், சண்டி கேஸ்வரர், ஆவுடையார் கல் சிற்பங்களும், சிறிய நந்தி சிலைகள் மூன்று, பெரிய நந்தி போன்ற தோற்றம் கொண்ட ஒரு சிலையும் கண்டுபிடிக்கப் பட்டது.

இதுகுறித்து புதுக்கோட்டை அரசு மகளிர் கலை கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர் நீலாவதி கூறியதாவது:

தென்னலூர் மாரியம்மன் கோவில் அருகே முற்கால சோழர் காலத்தில் கட்டப்பட் டுள்ள மடைக்கல் (மண்டபம்) முற்றிலும் சிதைவுற்ற நிலை யில் உள்ளது. கி.பி. 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிவன் கோவில் அவற்றின் இடி பாடுகள் அனைத்தும் ஊரின் கண்மாய் கரைப் பகுதியில் சிதைவுற்றும், சில கல் சிலை கள் நல்ல நிலையிலும் காணப் படுகிறது. கண்மாய் கரையில் காணப்படும் நந்தி, கொடும் பாளூர் நந்திக்கு அடுத்தப் படியான பெரிய நந்தி ஆகும். இந்த கண்மாயின் உட்பகுதி களை அகழ்வாய்வுக்கு உட் படுத்தினால், மேலும் புதை யுண்ட சிலைகள், கல்வெட் டுகள் கண்டுபிடிக்க வாய்ப்பாக இருக்கும் என்றார்.

-விடுதலை,23.3.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக