பக்கங்கள்

வியாழன், 20 ஜூலை, 2017

மத்திய பா.ஜ.க. அரசின் இந்தித் திணிப்பை எதிர்த்து தீவிரமாகும் மொழிப்போர் இந்தி பேசாத மாநிலங்கள் இணைகின்றன

பெங்களூரு, ஜூலை 16 மத்தியில் பாஜக தலைமையிலான மோடி அரசு அமைந்த மூன்று ஆண்டுகளில் அவ்வாட்சியின் சாதனை(?) களில் ஒன்றாக இந்தி திணிப்பு உள்ளது.

இந்தி பேசாத மாநிலங்களில் மத்திய அரசு தொடர்ச்சியாக இந்தி, சமஸ்கிருதத்தைத் திணிக்கும் செயலை செய்துவருகிறது.
அண்மைக்காலமாக மத்திய அரசின் அலு வலகங்கள், நெடுஞ்சாலைகள், ரயில்வேத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் இந்தி பேசாத  மாநிலங்களில், அம்மாநில மக்கள்மீது கட்டாயப்படுத்தி இந்தியைத் திணிக்கும் செயல்களை அதிதீவிரமாக மத்திய பாஜக அரசு செய்துவருகிறது.

அவ்வப்போது தமிழகம் உள்ளிட்ட மாநி லங்களில் கடும் எதிர்ப்பு ஏற்படுகின்றபோது, பின்வாங்குவதும், பின்னர் எவ்வித முன்னறிவிப்புமின்றி இந்தித் திணிப்பை செயல்படுத் துவதுமாக மத்திய பாஜக அரசு செய்து வரு கிறது. கருநாடக மாநிலத்திலிருந்து இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராளிகளின் பிரதிநிதிகள் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, மகாராட்டிரம், மேற்கு வங்கம், பஞ்சாப் மற்றும் ஒடிசா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து அவர்களுடன் ஒன்றிணைந்து நாடுமுழுவதும் இந்தித் திணிப்பை எதிர்ப்பதற்கான பரப்புரையைத் தொடங்கியுள்ளனர்.

கருநாடக சுவபிமானா வேதிகே 

கருநாடக வளர்ச்சி நிறுவனத்தின் மேனாள் தலைவரும், கருநாடக சுவபிமானா வேதிகே அமைப்பின் ஒருங்கிணைப்பாளருமாகிய சந்திரசேகர பாடீல் கூறும்போது, “இந்தி  பேசாத மாநிலங்கள் தங்களின் கலாச்சார அடையாளங்களைக் காத்திட ஒன்றிணைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. நாட் டில் உருவாகியுள்ள சமூக அரசியல் நிலை களே இந்த ஒருங்கிணைப்புக்கு காரணமாக அமைந்துள்ளது. இந்த முறை கருநாடகாவி லிருந்து அதற்கான குரல் வெடித்துக் கிளம்பி யுள்ளது’’ என்றார். 
நாடுமுழுவதுமிருந்து பல்வேறு அமைப் புகள், அரசியல் கட்சிகள் முதற்கட்டமாக பெங்களூருவில் நேற்று (15.7.2017) நடைபெற்ற வட்ட மேசை மாநாட்டில்  பங்கேற்றன.

ஆகஸ்ட்டில் மாபெரும் பேரணி

பாடீல் மேலும் கூறும்போது, “எழுத்தாளர் கள், கலைஞர்கள், அறிஞர்பெருமக்கள் ஆகியோருடன், அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள். கருநாடக மாநில மதசார்பற்ற ஜனதா தள தலைவர் எச்.டி.குமார சாமி, கருநாடக காங்கிரசு கமிட்டியின் செயல் தலைவர் தினேஷ் குண்டுராவ் உள்ளிட்ட கருநாடக மாநிலத்தின் தலைவர்களும் இந்தி எதிர்ப்புப் பரப்புரைக்கு தங்களின் ஆதர வினைத் தெரிவித்துள்ளார்கள். வரும் ஆகஸ்ட் மாதத்தில் நேஷனல் கல்லூரியிலிருந்து மாபெரும் பேரணியை நடத்த திட்டமிடப் பட்டுள்ளது’’ என்றார்.

எழுத்தாளர் விவேக் ஷான்பாக்

கன்னட எழுத்தாளர் விவேக் ஷான்பாக் கூறும்போது, “நாம் பன்முகத்தன்மையுடன் இருக்கின்ற நிலையில் எந்த ஒரு மொழியையும் திணிப்பதை எதிர்ப்போம். ஆகவே, இந்தி பேசும் மாநிலத்திலிருந்தும் நம்முடைய போராட்டத்துக்கு ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறோம். ஏனென்றால், வேறுபாடுகளைக் கொண்டுள்ள இந்த நாட்டில், கூட்டாட்சிக் கட்டமைப்பை எவ்வாறு காத்துக்கொள்வது என்பதே உண்மையில் பிரச்சினையாகியுள்ளது’’ என்றார்.

கருநாடக ரக்ஷன வேதிகே அமைப்பானது எல்லையோர மாநிலங்களான தமிழ்நாட்டுடன் காவிரி நதிநீர் பங்கீட்டிலும், மகாராட்டிர மாநிலத்துடன் எல்லைப் பிரச்சினையிலும் மோதல் போக்கில் இருந்து வந்துள்ளது. ஆனால், தற்போது பொதுப்பிரச்சினையாக உள்ள இந்தித் திணிப்பை எதிர்ப்பதற்கு இணைந்து குரல் கொடுக்க தயாராக உள்ளது. ரக்ஷன வேதிகே அமைப்பின் தலைவர் டி.ஏ.நாராயண கவுடா பல்வேறு அமைப்புகள், கட்சிகளின் தலைவர்களுக்கும் இந்தித் திணிப்பை எதிர்க்கும் போராட்டத்துக்கு ஆதரவு கோரி கடிதம் எழுதியுள்ளார். தமிழ் நாட்டில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டா லின் உள்ளிட்ட தலைவர்களுக்கும், மகா ராட்டிர மாநிலத்தில் மகாராட்டிர நவநிர் மான் சேனா தலைவர் ராஜ்தாக்கரே உள்ளிட்ட தலைவர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

இணையத்தில் பரப்புரை

பெங்களூருவில் இணைய வழி பரப்புரை Ôநம்ம மெட்ரோ இந்திக்கு எதிர்ப்புÕ எனும் தலைப்பில் கடந்த மாதம் தொடங்கப்பட் டுள்ளது. கெம்பேகவுடா மற்றும்  சிக்பேடே மெட்ரோ ரயில்வே நிலையங்களில் 1.7.2017 அன்று பெயர்ப்பலகைகளில் இந்தி அழிக்கப் பட்ட படங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன. அதே போல்,  மும்பையிலும் இந்தித் திணிப்புக்கு எதிரான பரப்புரை தொடங்கப்பட்டுள்ளது. 

சன்னீரப்பா

கன்னட ரக்ஷனா வேதிகே அமைப்பின் தொடர்பாளர் சன்னீரப்பா கூறியதாவது: 

“இந்தி பேசாத மாநிலங்களின்மீது எந்த வகையிலாவது இந்தியைக் கட்டாயப்படுத்தித் திணித்திட வேண்டும் என்கிற நிலை தொடர்ந்த வண்ணம் உள்ளது. எதிர்காலத் திலும், இந்தி பேசாத மாநிலங்களின் மொழி களை நாங்கள் காத்துக்கொள்ள விரும்பு கிறோம். அதனால், இந்தி பேசாத மாநிலங் களின் முதல்வர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் மொழிக்காகப் பாடுபட்டுக் கொண்டிருக்கும் அமைப்புகளின் தலைவர்கள் குறிப்பாக திராவிட மொழிகள் மற்றும் பஞ்சாபி மொழி, வங்க மொழி உள்ளிட்ட மொழி களைக் காத்துக்கொள்ள தலைவர்களை ஒன்றி ணைக்கிறோம்.

இந்தித்திணிப்பை ஆதரிக்கும் பாஜக அமைச்சர்கள்

பாஜகவைச் சேர்ந்த தலைவர்களான வெங்கய்யா நாயுடு இரண்டு வாரங்களுக்கு முன்பாக இந்தியை தேசிய மொழி என்று பேசுகிறார். கருநாடக பாஜகவைச்சேர்ந்த மத்திய அமைச்சர்களான ஆனந்த குமார், சதானந்தா கவுடா ஆகியோர்  இந்தி எதிர்ப்புப் பரப்புரையை ஆதரிக்காமல் எதிர்க்கிறார்கள்.

மத்திய அரசுக்கு நாங்கள் வரி செலுத் துகிறோம். ஆனால், சில திட்டங்களில்தான் மத்திய அரசு நிதியை ஒதுக்குகிறது. மாநிலங்க  ளிடையே மத்திய அரசு பாகுபாடுகளைக் காட்டக் கூடாது. கன்னடம், தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட எங்கள் மொழிகளை காப்பதுடன் எங்களின் அடையாளங்களையும் காத்திட, இந்தி பேசுவோரின் ஆதிக்கம் உள்ள அரசியல் கூட்டணிகளை விலக்கிவிட்டு, தேசிய ஜன நாயக கூட்டணி, அய்க்கிய முற்போக்கு கூட் டணி ஆகியவற்றுக்கு இணையான அணியைக் கட்டமைக்கப் போகிறோம். இந்தியை எங்கள் மீது திணிக்காத அரசுகளை உருவாக்குவதற்கான சூழலை நாங்கள் ஏற்படுத்த வேண்டிய தேவை உள்ளது. இந்த கூட்டணி அடுத்த 2020ஆம் ஆண்டில் அரசியல் சக்தியாக வளரும்’’ என்றார். அண்மைக் காலமாக கருநாடக மாநிலத் தில் மெட்ரோ ரயில் நிலையங்களில் இந்தி எழுத்துகளை தார் ஊற்றி அழிக்கும் போராட் டம் நடைபெற்றது.

இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்துக்கு மம்தா பானர்ஜி, மு.கஸ்டாலின் ஆதரவு

கருநாடக மாநிலத்தில் இந்தித் திணிப்புக்கு எதிராக பரப்புரை செய்துவருபவரான அருண் ஜாவகல் கூறும்போது, “திராவிட முன்னேற்றக் கழகம், தெலுங்கு தேசக்கட்சி, தெலங்கானா ராஷ்டிர சமிதி, சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் இம்முயற்சிக்கு பெரிதும் ஆதரவை அளிக் கின்றன. மம்தா பானர்ஜி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இம்முயற் சியை வரவேற்றுள்ளனர். அதேபோல் இந்தி யைத் திணிப்பதற்கு ஆதரவளிப்பவர்களுக்கும் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளோம். இந்தி மொழியை எதிர்க்கவில்லை, இந்தி மொழித் திணிப்பையே எதிர்க்கிறோம். பெரும்பாலான அனைத்து கட்சிகளும் தங் களின் பிரதிநிதிகளை அனுப்பி வைப்பதாக உறுதி அளித்துள்ளனர்’’ என்றார்.

ஆர்.எஸ்.பாரதி

கருநாடகாவில் நடந்துவருவதை கவனித் துக்கொண்டு இருக்கிறோம். நாங்கள் ஆதரிக் கின்றோம். எங்கள் செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் முடிவுசெய்து உரிய பிரநிதிகளை அனுப்புவார் என்று மாநிலங்களவை உறுப் பினர், திமுக அமைப்புச்செயலாளர் வழக் குரைஞர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.

மெட்ரோ ரயில்வே துறையில் இந்தி அலுவலக மொழியாம் 

அதனையடுத்து சில நாள்களுக்கு முன்பாக மத்திய அரசின் பிரதிநிதிகள் பெங்களூருவுக்கு வருகைதந்தனர். அப்போது, பெங்களூரு மெட்ரோ ரயில் கழகம் லிமிடெட் நிறுவ னத்தின் சார்பில் கடந்த ஆண்டு ஜூலையில் வெளியிடப்பட்ட ஆவணத்தில் மெட்ரோ ரயில் பெயர்ப்பலகைகளில் இந்தி மொழியே அலுவலக மொழியாக இருக்கும் என்பதுதான் கொள்கை என்று  இருப்பதைச் சுட்டிக்காட்டி, அதன்படியே இந்தியில் பெயர்ப் பலகைகள் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்கள்.

இதனையடுத்தே, கன்னட ரக்ஷனா வேதிகே அமைப்பின் சார்பில் இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற் கின்ற கருத்தரங்கு ஏற்பாடுகள்மூலமாக, இந்தித்திணிப்பை எதிர்த்து இந்தி பேசாத மாநிலங்களை ஒருங்கிணைக்கும் முயற்சியை அவ்வமைப்பினர் செய்துவருகிறார்கள்.

கருநாடக மாநில தலைமைச்செயலாளர் கூறும்போது, “கடந்த ஆண்டிலேயே மெட்ரோ ரயில்வேத்துறையின் Ôஇந்தி அலுவலக மொழிÕ என்கிற கொள்கையை எதிர்த்தோம். மெட்ரோ ரயில்வே துறை என்பது முற்றிலும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனம் அல்ல, மெட்ரோ ரயில் திட்டத்தில் மத்திய அரசைவிட அதிக அளவில் மாநில அரசின் பங்குத்தொகை உள்ளது என்பதையும் சுட்டிக் காட்டி மத்திய அரசுக்கு கடிதம் எழுதினோம். ஆனால், மத்திய அமைச்சகம் அதைப் புறக்கணித்துவிட்டது’’ என்றார்.

வேறுபாடுகளைக் கொண்டுள்ள நாட்டில் ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்று கூறிக் கொண்டு கூட்டாட்சி நெறிமுறைகளைத் தகர்க்கின்ற மோடியின் மத்திய அரசுக்கு இந்தி பேசாத மாநிலங்களின் ஒருங்கிணைப்பு பாடம் புகட்டும் என்பது உறுதி.

-விடுதலை,16.7.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக