பக்கங்கள்

செவ்வாய், 5 மார்ச், 2019

கீழடியில் கிடைத்த தொல்பொருள்கள் 2500 ஆண்டுகள் பழைமையானது

சிவகங்கை, பிப்.27  சிவகங்கை மாவட்டம் கீழடியில் அகழாய்வு செய்த போது கிடைத்த தொல் பொருள்களை நவீன தொழில்நுட்ப முறையில் சோதனை செய்ததில் சுமார் 2500 ஆண்டுகள் பழை மையானது என தெரிய வந்துள்ளது என தமிழ்நாடு அரசின் முதன்மைச் செய லரும், தொல்லியல் துறை ஆணையரு மான த.உதயச்சந்திரன் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் பூவந்தியில் உள்ள மதுரை சிவகாசி நாடார் பயோ னியர் மீனாட்சி பெண்கள் கல்லூரியில் தமிழக கல்வெட்டியல் மற்றும் தொல் லியல் துறை சார்பில் பயிலரங்க தொடக்க விழா மற்றும் புகைப்படக் கண்காட்சி தொடக்க விழா நடைபெற்றது.

தொல்லியல் துறை  ஆணையர் த.உதயச்சந்திரன் கருத்தரங்கைத் தொடக்கி வைத்து பேசியது: தமிழகத்தில் ஏற்கெனவே அகழாய்வுப் பணிகளில் கிடைத்துள்ள தொல் பொருள் களை இன்றைய நவீன தொழில் நுட்பம் மற்றும் அறிவியல் ரீதியாக ஆராய்ச்சி செய்து உலக அரங்கில் தமிழ்ச் சமூகம் மிகத் தொன்மையான சமூகம் என்பதை வெளிக் கொண்டு வரப்படும்.

கீழடியில் தற்போது நவீன தொழில் நுட்பக் கருவியான டிரோன் மூலம் பூமிக்கடியில் 7 முதல் 10 மீட்டர் ஆழம் வரை ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தேவையான இடங் களில் மட்டுமே அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. கீழடியில் விலங்கின் எலும்புகள் கிடைத்துள்ளன. அவை டிஎன்ஏ ஆய்வுக்கு உட்படுத்தப் படும். திருவள்ளூர் மாவட்டம் அத்திரம் பாக்கத்தில் பழங்கால மனிதர்கள் பயன் படுத்திய கற்காலக் கருவிகள் கண் டெடுக்கப்பட்டன.

இதை ஆராய்ச்சி செய்த போது சுமார் 15 லட்சம் ஆண்டுகள் பழைமையானது என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இது இந்திய அளவில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் மிக பழைமையான நாகரிகத்தை எடுத்துக் காட்டுகிறது.

அமெரிக்காவில் புளோரிடா என்னும் பகுதியில் செயல்பட்டு வரும் பீட்டா ஆய்வகம் கீழடி பகுதியில் கிடைத்த தொல்பொருள்களை ஆய்வு செய்ததில் 2500 ஆண்டுகள் பழைமையானது என ஆய்வு முடிவாகத் தெரிவித்துள்ளது. ஆகவே கீழடி பகுதி சார்ந்துள்ள வைகையாற்றங்கரையின் நகர, நாகரிகம் சுமார் 2500 ஆண்டுகள்  பழைமையானது என தெரிய வந்துள்ளது என்றார்.

- விடுதலை நாளேடு, 27.2.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக