பக்கங்கள்

வியாழன், 30 மே, 2019

தமிழிலிருந்து களவாடல்!



தென்னிந்தியாவுக்குப் புலம்பெயர்ந்த வேத ஆரியர்கள், தமிழ் இலக்கியங்களை ஆழ்ந்தும் விரிவாகவும் கற்றனர். பின்னர் தமிழிலிருந்த கலை, அறிவியல் சார்ந்த அனைத்து நூல்களையும், சமஸ்கிருதத்தில், தங்கள் கருப்பொருள் போல் காட்டுவதற் கென மொழி பெயர்த்தனர்.

தமிழைக் கற்ற அளவில், சில துணை நூல்களையும், தமிழ்ச்சாயலில் சில நூல்களையும் படைத்து, தமிழர்கள், தங்கள் மேல் அய்யம் கொள்ளாத வகையில் பார்த்துக்கொண்டனர். கூடவே அத்தமிழ் நூல்களில், ஆரிய கொள்கைகளையும் புகுத்தினர். தங்களை இவ்வுலகின் தேவர்கள் அல்லது கடவுளர் என்று சொல்லிக் கொண்ட நிலையில், அது உண்மைதானா என்றும் ஆய்வு செய்யவோ, கேள்விகளைக் கேட்கவோ எவரும் முன் வரவில்லை, தமிழ்நாட்டு மன்னர்களால், மிகுந்த சிறப்புகள் அளிக்கப்பட்டு போற்றப்பட்டனர்.

அகத்தியர், மருத்துவ இயலையும், நாரதர் இசையியலையும், தமிழினின்று, சமஸ்கிருதத்தில் மொழி பெயர்த்தனர் என்று சொல்லப்படுகின்றது. சமஸ்கிருதத்தில் அறியப்படும் நாட்டியவியலும், நாடகவி யலும் பரதன் என்பவனால் எழுதப்பட்டது என்று சொல்லப்பட்டாலும், பரதன் என்ற பெயரைக் கொண்ட தமிழ் ஆசிரியனே எழுதியதை, மொழி பெயர்த்துக் கொண்டனர் என்றும் அறியலாம்.

இடக்கிடப்பியல் பற்றுகள் (ஜிஷீஜீஷீரீக்ஷீணீ  ஜீலீவீநீணீறீ ணீநீநீஷீஸீ) உள்ளிட்ட பதிவு செய்யப் படாத கலை மற்றும் அறிவியல் செய்திகள். சமஸ்கிருதத்தில் குறைவாக எழுதப்பட்டன.

ஒரு தமிழ்ப் படைப்பு, சமஸ்கிருதத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்ட போது, அதில் புதிய செய்திகளை இணைத்து புதிய பெயரிட்டு முறையை புகுத்தி (ஸீஷீனீமீஸீ

நீறீணீக்ஷீமீ), மொழிபெயர்க்கப்பட்டது. சமஸ் கிருதம் மூலமே எனக்காட்ட முயன் றுள்ளனர். இசைத்துறையில் ஆரியர்களின் இதுபோன்ற உத்தியை வேறு எங்கும் காணவியலாது.

குமரிக்கண்டத்துத் தமிழ் இசை வாணர்கள், இசையுணர்வில், தன்னிகரற்ற மெல்லிசை அறிவை கொண்டிருந் தனர். ஆயிரக்கணக்கான வகைகளில், இசை நுணுக் கங்களை அறிந்து, நான்கு பிரிவு களாக அவற்றை வகைப்படுத்தி இருந்தனர்.

ஆயப்பாலை, வட்டப்பாலை, சதுரப் பாலை, முக்கோண பாலை என்பன வாகும். இவற்றின் நுணுக்கங்களை அறியாத ஆரியர்கள், ஆர்வமிகுதியால் அவற்றை அறிய முயன்று தோல்வியுற்று, தொல் தமிழ் இசையைப் புரிந்துகொள்ள இயலாத நிலையில் அவற்றை அழித்து விட்டனர்.

தென்னிந்திய இசை, பொதுவாக, கர்நாடக இசை என்று அழைக்கப்படும். இது சமஸ்கிருத கலைச்சொற் களால் மாற்றம் செய்யப்பட்ட தமிழ் இசையே எனலாம். மிகவும் அழகான பொருத்த மான பெயர்களை கொண்டி ருந்த தமிழ் இசை பணி களுக்கு சமஸ்கிருதப் பெயர் களை வலிந்து புகுத்தி மாற்றம் செய்தனர். மாற்றம் பெற்ற தமிழ்ப் பெயர்களாவன எ.கா.

கேள்வி - சுருதியெனவும்,

நிலை - தாயின் எனவும் பிரிக்கப்பட் டுள்ளன.

உலகின் முதல் செம்மொழி


மொழி ஞாயிறு தேவநேய பாவாணரின் ஜிலீமீ றிக்ஷீவீனீணீக்ஷீஹ் சிறீணீவீநீணீறீ லிணீஸீரீணீரீமீ ஷீயீ லீமீ கீஷீக்ஷீறீபீ

தமிழில்: தக்கார் ம.சோ.விக்டர் அவர்கள்

யாத்திசைப் பதிப்பகம், அரியலூர் - ப: 305

- க.பழனிச்சாமி

தெ.புதுப்பட்டி

 -  விடுதலை ஞாயிறு மலர் 25. 5 .2019

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக