பக்கங்கள்

திங்கள், 12 ஆகஸ்ட், 2019

கீழடி அகழாய்வில் வெளிநாட்டு அணிகலன்கள் - அகலமான செங்கல் சுவர் கட்டடம், இரும்பு துண்டுகள் கண்டுபிடிப்பு



கீழடி, ஆக.9  சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் நடந்து வரும் அகழாய்வில் வெளி நாட்டு வகையைச் சேர்ந்த அணிக லன்கள் புதன்கிழமை  கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.

கீழடியில் தமிழக அரசு சார்பில் 5 -ஆம் கட்ட அகழாய்வுப் பணி கடந்த ஜூன் 13 -ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதுவரை பலரது நிலங் களில் தோண்டப்பட்ட 20 -க்கும் மேற் பட்ட குழிகளிலிருந்து மண்பாண்ட ஓடுகள், இரட்டை சுவர், நீளமான சுவர், அகலமான சுவர், கல்லால் செய் யப்பட்ட மணிகள், உறைகிணறுகள், எலும்பாலான எழுத்தாணி உள் ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டன.

இந் நிலையில் புதன்கிழமை போதகுரு என்பவர் நிலத்தில் அகல மான செங்கற்களால் கட்டப்பட்ட கட்டடம் கண்டுபிடிக்கப்பட்டது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட செங் கல்களை விட இவை அகலமானவை என தெரியவந்துள்ளது. முருகேசன் என்பவரது நிலத்தில் ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்ட உறைகிணற்றின் உயரம்  நீண்டு கொண்டே செல்கிறது. ஏற்கெனவே 6 உறைகள் கண்டு பிடிக்கப்பட்ட நிலையில் புதன்கிழமை 7 -ஆவது உறை கண்டுபிடிக்கப்பட்டது. ஒவ்வொரு உறையும் ஒன்றரை அடி உயரம் உள்ளதாக கணக்கிடப் பட்டுள்ளது.  மேலும் இங்கு கிடைத் துள்ள அணிகலன்கள், வடஅமெ ரிக்கா, தென்அமெரிக்கா, ஆஸ்தி ரேலியா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட வெளி நாடுகளில் உள்ள மலைகளில் வெட்டி எடுக்கப்படும் அகேட் வகை கல்லில் செய்யப்பட்டவை என்றும், இதனால் பழங்காலத் தமிழர்களுக்கும், வெளிநாட்டினருக்கும் தொடர்பு இருந்திருக்க வாய்ப்புள்ளதாகவும் அகழாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இரும்புத் துண்டுகள் கண்டெடுப்பு

தற்போது கண்டுபிடிக்கப்பட் டுள்ள இரும்புத் துண்டுகள், 2500 ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்தப் பட்டவை என தெரியவந்துள்ளது.

- விடுதலை நாளேடு, 9 .8 .19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக