பக்கங்கள்

வியாழன், 3 நவம்பர், 2016

உலகெங்கிலும் தமிழ் சொற்களில் 30,000 ஊர் பெயர்கள்


கடல்சார் ஆய்வாளர் ஒரிசா பாலு தகவல்

ராமநாதபுரம், ஜூன் 8 உலகெங் கிலும் தமிழ்ச் சொற்களில் 30,000 ஊர்ப் பெயர்கள் உள்ளதாக ஒருங்கிணைந்தகடல்சார்ஆய் வாளர் ஒரிசா பாலு தெரிவித் துள்ளார்.
உலக சுற்றுச்சூழல் தினம் ஆண்டுதோறும் ஜுன் முதல் வாரம் கடைபிடிக்கப்படுகிறது. 1972 ஆம் ஆண்டு அய்.நா. சபையால் அறிவிக்கப்பட்டு ஆண்டுதோறும் வெவ்வேறு கருத்துக்களுடன் கொண்டாடப் பட்டு வருகிறது. இதைமுன் னிட்டு ராமநாதபுரம் அருகே எட்டிவயலில் உள்ள நம்மாழ்வார் அரங்கில் உலகச் சுற்றுச்சூழல் தினக் கருத்தரங்கம் ஞாயிற் றுக்கிழமை நடைபெற்றது.

இதற்குராமநாதபுரம்முன் னோடி விவசாயி தரணி முரு கேசன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக ஒருங் கிணைந்த கடல்சார் ஆய்வாளர் ஒரிசா பாலு கலந்து கொண்டு பேசியதாவது:

கடல் நீரோட்டங்களைப் பயன்படுத்திஆமைகள்இனப் பெருக்கத்துக்காக 180 நாள்கள் பயணம் செய்கின்றன. ஆமை களைப் பின்பற்றி கடல் நீரோட்டங்களைக் கண்டறிந்து பசிபிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல், மத்திய தரைக் கடல், தென் கிழக்கு ஆசியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளுக்கும் தமிழர்கள் கடல் வழிப் பயணம் மேற்கொண்டனர்.
முந்நீர், பழந்தீவு, பன்னீராயிரம் என சோழர் காலக் கல் வெட்டுகள் கூறுகின்றன. இந்த 20 ஆயிரம் தீவுகளில் 9,000 தீவு கள் நீரில் மூழ்கி விட்டன. இவற்றை சோழர்கள் எப்படிக் கணக்கிட்டார்கள்என்பது வியப் புக்கும், ஆய்வுக்கும் உரியது. உலகெங்கிலும் கப்பல் கட்டுமானத்துக்கு மற்றவர்கள் 2 மரங்களைப் பயன்படுத்த, தமி ழர்கள் 20 வகையான மரங்களைப் பயன்படுத்தியுள்ளனர்பாறை களில் மோதினால் உடையா மல் இருக்க கப்பலின் அடிப் பகுதியில் கழற்றி விடும்படியான கட்டமைப்பைக் கொண்ட தொழில் நுட்பத்தை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே தமிழர்கள் பின்பற்றி வந்துள்ளனர்.

உலகெங்கிலும் தமிழ்ச் சொற் களில் 30,000 ஊர்ப் பெயர்கள் உள்ளன. பிரேசிலில் உறை, வசி, ஊர் என அழைக்கப்படும் பகுதிகள் உள்ளன. ஜப்பானில் குரில் என்ற பகுதியில் மருதை என்ற ஊர் உள்ளது. சீனாவில் 5 ஊர்கள் பாண்டியன் என்ற பெயரில் அமைந்துள்ளன.

கொரியாவின் அரசியாக பாண்டிய இளவரசி ஒருவர் இருந்துள்ளார்.கி.பி.45இல் இந்தோனேசியாவை சிறீ மாறன் என்ற தமிழ் மன்னன் ஆண் டுள்ளான். ஆஸ்திரேலியாவில் குமரி, நான்மாடல், துங்காவி என்ற பெயரில் ஊர்கள் உள்ளன. பெரு, சிலியில் நெடுங்கற்கள் நிறைந்த பகுதிகள் வால்பாறை என அழைக்கப்படுகின்றன. பழந் தமிழரின் கடல் பயணங்களை இவை உறுதிப்படுத்துகின்றன என்றார்.

கருத்தரங்கில் நூற்றுக்கும் மேற்பட்டோர், விவசாயிகள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.
-விடுதலை,8.6.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக