பக்கங்கள்

செவ்வாய், 29 நவம்பர், 2016

யார் இந்த எல்லீஸ்?

முகநூலில் " பாமரன் " : கற்றது தமிழ்
                                                 =============
என்றேனும்….

சென்னையிலுள்ள எல்லீஸ் சாலையில் நடந்தோ…. ஆட்டோவில் கடந்தோ…..
போகும்போது யோசித்திருக்கிறேனா?
.
யார் இந்த எல்லீஸ்?
.
எதற்காக சம்பந்தமேயில்லாமல் தமிழகச் சாலை ஒன்றிற்கு இந்தப் பெயர் என்று?
.
வெட்கமாக இருந்தது எனக்கு.
.
சில வருடங்கள் முன்பு வெளிவந்த “திராவிடச் சான்று” என்கிற நூலைப் படிக்கும்வரை.
.
அப்போதுதான் தெரிந்தது இந்த வீணாப் போன ”வந்தேறி” வெள்ளக்காரன் தமிழ்நாட்டில் வந்திறங்கி தமிழ் மீது கொண்ட காதல் கதை.
.
பச்சையாச் சொல்லனும்ன்னா…. “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்”ன்னு எழுதிய கால்டுவெல்லுக்கு நாற்பதாண்டுகளுக்கு முன்னமே தமிழின் பெருமையைப் பறையடித்துச் சொன்னவன்தான் இந்த எல்லீசன்.
.
இந்தியா என்கிற நாடு உருவாவதற்கு முன்னமே தமிழ் நாட்டைக் கண்டுணர்ந்தவன் அவன்.
.
அதனால்தான் தனது சக வெள்ளையர்களுக்குச் சொன்னான் :

“ஆங்கிலேய அதிகாரிகள் தென்னிந்திய மொழிகளின் அடிப்படையை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக தமிழை…. அதுதான் மற்றவற்றுக்கெல்லாம் மூலமே….” என்று. பொட்டில் அடித்துச் சொன்னான் எல்லீசன்.
.
இந்த மனிதன்தான் சென்னை கோட்டையில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் கல்லூரியையே நிறுவியவன். அதாவது 204 ஆண்டுகளுக்கு முன்பு.
.
அத்தோடு நிற்காமல் அங்கொரு அச்சகத்தையும் நிறுவி தமிழ், தெலுங்கு எழுத்துருக்களை உருவாக்கக் காரணமாக இருந்த மனிதன்.
.
அந்த மனிதனின் உழைப்பில் உருவானதன் தொடர்ச்சிதான் நான் எழுதும் இந்த மொக்கை எழுத்தையும் நீங்கள் இன்றைக்கு வாசித்துக் கொண்டிருப்பது.
.
சரி…
.
இதற்கு மேல் நீட்டிப்பது உங்களுக்கும் பிடிக்காது….
.
எனக்கும் பிடிக்காது….
.
அந்த மனிதன்தான் சென்னையில் குடிநீர்ப்பஞ்சம் வந்தபோது சென்னையைச் சுற்றி இருபத்தி ஏழு கிணறுகளை உருவாக்கியவன். உருவாக்கியதோடு நிற்காமல் கிணற்றின் சுற்றுச் சுவர்களில் திருக்குறளை செதுக்கி வைத்தவன். அவன் தான் அன்றைய சென்னை கலெக்ட்ராக இருந்த இந்த எல்லீசன்.
.
அத்தோடு நிற்காமல் திருவள்ளுவரின் உருவம் பொறித்த தங்க வராகன்களை உருவாக்கியவன்.
.
என்னடா இவன்……
எல்லீஸ் என்று ஆரம்பித்து எல்லீசன் என்று எழுதிக் கொண்டிருக்கிறானே… ஒருவேளை இவன் ஒரு தமிழ் பைத்தியமாக இருப்பானோ என்று  நீங்கள் எண்ணினால்…..

Exactly You are Correct….

ஆம்..
.
அவன் தமிழ் மீது கொண்ட காதலால்….

”என் பெயரை ஒருபோதும் எவரும் எல்லீஸ் என்று அழைக்கக் கூடாது. என் பெயரை என்றும் எவரும் தமிழின் ஒலிநயத்திற்கேற்ப…. எப்போதும் எல்லீசன் என்றே அழைக்க வேண்டும்….” என்று சொல்லி இராமநாதபுரத்தில் தனது நாற்பத்தி ஒன்றாம் வயதில் செத்துப் போனான்.
.
ஆனால் நாமோ…
.
கடைக்குப் பெயர் வைத்தாலும்… சரி….
.
குழந்தைக்குப் பேர் வைத்தாலும்…. சரி…
.
அம்மாஸ்…
.
பாட்டீஸ்….
.
ஆச்சீஸ்….என்றும்…..
.
“ஸ்”ஐயும் ”ஜ்”ஜையும் “ஷ்”யையும் வைத்துப் பெயர் சூட்டிக் கொண்டிருக்கிறோம்….
.
எங்கிருந்தோ வந்து…….
தமிழ்மீது காதல் கொண்டு எல்லீஸ் ஆக இருந்து எல்லீசன் என்றாகி……
அநாதையாகச் செத்துப்போன எல்லீசன் எங்கே?
.
நாமெங்கே?
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக