பக்கங்கள்

திங்கள், 10 டிசம்பர், 2018

தமிழில் பெயர் பலகை வைக்கும் அரசாணையை அமல்படுத்தாததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முதன்மை செயலருக்கு தாக்கீது

மதுரை, டிச.10  தமிழில் பெயர் பலகை வைக்கும் அரசாணையை அமல்படுத்தாததால், தொடரப் பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், அரசு முதன்மை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றக் கிளை உத்தர விட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், மோர்பண்ணையை சேர்ந்த வழக் குரைஞர் திருமுருகன், உயர்நீதி மன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்திலுள்ள பெரும்பாலான வணிக நிறுவ னங்கள், பன்னாட்டு நிறுவனங் கள் தங்களின் நிறுவன பெயர் பலகைகளை தமிழில் வைக் காமல் ஆங்கிலத்தில் மட்டுமே வைத்துள்ளன.

கருநாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் பெயர் பலகைகள் அனைத்தும் அந்த மாநில மொழியிலேயே வைக்கப்பட்டுள்ளன. தமிழக அரசின் 1987 அரசாணைப் படி ஆட்சி மொழியான தமிழ் மொழியை, அனைத்து அரசு அலுவலகங்கள், தனியார் கடைகள் மற்றும் நிறுவனங்களில் முதல் மொழியாக பயன்படுத்த வேண்டும். ஆங்கிலம் உள்ளிட்ட பிறமொழிகளை பயன்படுத்து வதாக இருந்தால் தமிழ் மொழி யின் கீழ் 5:3:2 என்ற விகிதத்தில் பயன்படுத்த வேண்டும்.

ஆனால், இந்த அரசாணையை தமிழகத்தில் யாரும் பின்பற்ற வில்லை. இது தமிழ் மொழியை அவமதிக்கும் செயல். எனவே, அரசாணையை பின்பற்றி பெயர் பலகைகளை உரிய விகிதப்படி தமிழ் மொழியில் வைக்க உத்தர விடக்கோரி ஏற்கெனவே மனு செய்திருந்தேன். அதில், அர சாணையை முறையாக அமல் படுத்த தமிழ் பண்பாடு மற்றும் கலாசாரத்துறை முதன்மை செயலர் 4 மாதத்திற்குள் நட வடிக்கை எடுக்க கடந்தாண்டு ஜூலையில் உத்தரவிடப்பட்டது.

ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இதற்கு காரணமான அதிகாரி மீது நீதிமன்ற அவமதிப் பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.  இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமி நாதன் ஆகியோர், மனு குறித்து தமிழ் மொழி மற்றும் கலாச் சாரத் துறை முதன்மை செயலர் வெங்க டேசனுக்கு தாக்கீது அனுப்ப உத் தரவிட்டு, விசாரணையை டிச.19க்கு தள்ளி வைத்தனர்.

-  விடுதலை நாளேடு, 10.12.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக