பக்கங்கள்

வியாழன், 20 டிசம்பர், 2018

திராவிட இயக்கம், தமிழுக்கு என்ன செய்தது?

நீதிக்கட்சி 102 ஆம் ஆண்டு விழாவில் பேராசிரியர் அ.இராமசாமி உரை

நீதிக்கட்சி என்ற ஒன்று மட்டும் இல்லாமல் இருந்தி ருந்தால், இன்றைக்கு நாம், நாமாக இருந்திருக்க மாட்டோம். இதைச் சொன்னால், சிலர் கேட்கின்றார்கள், திராவிட இயக்கங்கள் என்ன செய்தது என்று? குறிப்பாக திராவிட இயக்கம், தமிழுக்கு என்ன செய்தது? என்று கேட்கிறார்கள்.

மணிப்பிரவாள நடை என்ற


ஒரு மரணக்குழியில்...


நீதிக்கட்சி தொடங்கப்பட்ட காலத்தில், மணிப்பிர வாள நடை என்ற ஒரு மரணக்குழியில் தமிழ் தள்ளப் பட்டு இருந்தது. கொஞ்சம் ஏமாந்திருந்தால், மலை யாளத்தைப் போல் மாறி, தமிழ் மறைந்து போயிருக்கும். அதை மீட்டெடுத்தது திராவிட இயக்கம்தான்.

அந்த அளவிற்கு, சமஸ்கிருதம் ஆதிக்கம் செலுத் திக் கொண்டிருந்த காலகட்டம் அது. கொடுமை என்ன வென்றால், சென்னை பல்கலைக் கழகத்தில் மருத்துவம் படிக்கும் மாணவர்கள் எல்லாம் சமஸ்கிருதம் படிக்க வேண்டும் என்று சொன்னார்கள்.

எனக்குத் தெரியவில்லை, சுக்கலாம் பரவரம், சசிவர்ணம், சதுர்புஜம், பிரசன்ன வதம் என்று சமஸ்கிருத சுலோகம் சொல்லி, ஆபரேசன் செய்தால்தான், நோயாளி பிழைப்பானா? என்று எனக்குத் தெரியவில்லை.

சமஸ்கிருதம் படிக்கவேண்டும் என்கிற கொடுமையை நீக்கியது நீதிக்கட்சி


அந்தக் கொடுமையை, மருத்துவ மாணவர்கள் சமஸ்கிருதம் படிக்கவேண்டும் என்கிற கொடுமையை நீக்கியது நீதிக்கட்சிதான்.

அதுமட்டுமல்ல, தமிழ் வளர்ச்சிக்கு என்று தனியாக ஒரு பல்கலைக் கழகம் தொடங்குவதற்கு ஊக்கமளித்தது, அண்ணாமலைப் பல்கலைக் கழகம் தொடங்குவதற்கு ஊக்கமளித்தது நீதிக்கட்சிதான்.

தமிழுக்குத் தனித் துறையும்,


தமிழ்ப் பாடத்தையும்...


சென்னை பல்கலைக் கழகத்தில், தமிழ்த் துறையே கிடையாது. கீழ்த்திசை மொழிகள் என்ற துறையில், நான்கோடு ஒன்றாக, தமிழ் மொழியும் சேர்க்கப்பட்டு இருந்தது. தமிழுக்குத் தனித் துறையும், தமிழ்ப் பாடத் தையும் சென்னை பல்கலைக் கழகத்தில் ஏற்படுத்தித் தந்தது நீதிக்கட்சிதான்.

வீரமாமுனிவர் எழுத்துச் சீர்திருத்தத்தைத் தந்தார்; அவருக்குப் பிறகு தமிழிலே எழுத்துச் சீர்திருத்தத்தைத் தந்தவர் தந்தை பெரியார் அவர்கள்தான்.

கணினி கண்டுபிடிப்பதற்கு முன்பே


எழுத்துச் சீர்திருத்தத்தை கண்டுபிடித்தவர்தான் தந்தை பெரியார்


அதில் ஒன்றை நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும் - இன்றைக்கு கணினியில் பயன்படுத்தக் கூடிய எழுத்துச் சீர்திருத்தத்தை, கணினி கண்டுபிடிப்பதற்கு முன்பே கண்டுபிடித்தவர்தான் தந்தை பெரியார் அவர் கள். எந்த அளவிற்குத் தொலைநோக்கு சிந்தனை யோடு அவர் செயல்பட்டார் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

அறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக வந்த பிறகுதான், அரசு பணிகளில் தமிழ் மொழி பவனிவரத் தொடங்கியது.

‘சத்யமேவ ஜெயதே' மாறி,


வாய்மையே வெல்லும் என்று வந்தது


தலைமைச் செயலகம் வந்தது - சத்யமேவ ஜெயதே மாறி, வாய்மையே வெல்லும் என்று வந்தது என்று இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். ஏன், இன்றைக்கு நாம் புழங்கிக் கொண்டிருக்கின்றோமே, இந்தத் தமிழ்நாடு என்ற பெயரே அறிஞர் அண்ணா அவர்கள் தந்ததுதான்.

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச் சராக வந்த பிறகுதான், கடவுள் வாழ்த்து போய், தமிழ்த்தாய் வாழ்த்து வந்தது. உயர்கல்வியில், பயிற்று மொழியாக தமிழ் ஊக்குவிக்கப்பட்டது. கோவில்களில், தமிழில் அர்ச்சனை செய்ய உரிமை வழங்கப்பட்டது. உயர்நீதிமன்றம் தமிழில் செயல்பட சட்டப்பேரவையில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழுக்குச் செம்மொழி என்ற தகுதி வழங்கப்பட்டது என்று தமிழுக்கு இப்படி ஏராளமாக நிறைய செய்து வைத்திருக்கிறோம்.

-உரையின் ஒரு பகுதி

- விடுதலை நாளேடு, 15.12.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக