பக்கங்கள்

செவ்வாய், 5 பிப்ரவரி, 2019

'தை’ மாதத்தை ஆண்டின் முதல் மாதமாக குறிப்பிடும் பழங்கால கல்வெட்டு கண்டுபிடிப்பு!



ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் தை மாதத்தை ஆண்டின் முதல் மாதமாக குறிப்பிடும் பழங்கால கல்வெட்டு.

ராமநாத புரம் மாவட்டம் கீழக்கரையில் வள்ளல் சீதக்காதி சாலையில் உள்ள ஜும்மா பள்ளிவாசலில் காலச்சக்கரபழங்கால கல் வெட்டு ஒன்று உள்ளது. அந்த கல்வெட்டில் தை மாதத்தை தமிழ் வருட ஆரம்ப மாத மாக குறிக்கப்பட்டு உள்ளது. அதாவது சூரியன் உத்ரா யணத்தில் பிரவேசிக்கும் மாதமாகிய ‘தை’ மாதத்தில் ஆரம்பித்து ஆனியில் முடிவுற்று பின் அங்கிருந்து தட்சனாய ணத்தில் பிரவேசிக்கும் மாத மாகிய ஆடியில் ஆரம்பித்து மார்கழியில் முடிவடைகிறது.

முற்காலத்தில் கோள்களின் சுழற்சியை அடிப்படையாக கொண்டே காலத்தை கணித் துள்ளார்கள். பூமியின் சுழற்சி யால் சூரியன் பூமியின் தென் பகுதியில் இருந்து வடபகுதி யின் கடைசிக்கும், வடபகுதி யில் இருந்து தென்பகுதியின் கடைசிக்கும் செல்ல முறையே 6 மாத காலங்கள் எடுத்துக் கொள்கிறது.

தை மாதத்தில் அதிக வெப்பம் மற்றும் அதிக குளிர் இல்லாமல் இதமான சூழல் இருக்கும். தைப்பிறந்தால் வழி பிறக்கும் என்ற பழமொழிக்கு ஏற்ப சுப காரியங்கள் இந்த மாதத்தில் ஆரம்பிப்பதும், செயல்படுத்துவதும் சிறப் படையும் என்ற நம்பிக்கை மக்களிடம் உண்டு. மார்கழியில் அறுவடை முடித்து புது அரிசி கொண்டு சூரியனுக்கு பொங்க லிட்டு உழவர்கள் தை மாதத்தை வரவேற்கின்றனர். இந்த வழக்கம் பண்டைய காலத்தில் இருந்தேதொடர்கிறது என்பதை இலக்கியங்கள் தெரிவிக்கின்றன.

இதனால்தான் 2006 -  11  திமுக ஆட்சியில் அப்போ தைய தமிழக முதல்வராக இருந்த கலைஞர்  ‘தை’ மாத பிறப்பை தமிழ் புத்தாண்டாக அறிவித்தார். பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் இந்த அறிவிப்பை நீக்கி மீண்டும் சித்திரை மாதத்தின் முதல் தேதியே தமிழ் புத்தாண்டு பிறப்பாக அறிவிக்கப்பட்டது. தற்போது காணப்பட்டுள்ள முன்னோர்களின் பழங்கால கல்வெட்டு தை மாதத்தை தமிழ் மாதத்தின் தொடக்க மாதமாக ஆரம்பித்துள்ளதை நிரூபித்துள்ளது. 300 ஆண்டு களுக்கு முன்பு தை மாதத்தை தமிழ் வருடத்தின் முதல் மாதமாக கடைப்பிடிக்கப் பட்டு வந்துள்ளது என்பதற்கு சான்றாக இந்த பழங்கால கல்வெட்டு உள்ளது. இந்த தகவலை கீழக்கரை வரலாற்று தொல்லியல் ஆய்வாளர் விஜயராமு தெரிவித்தார்.

 - விடுதலை ஞாயிறுமலர், 12.1.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக