பக்கங்கள்

செவ்வாய், 5 பிப்ரவரி, 2019

தமிழ்ப் புத்தாண்டு எது?

2001 - மலேசியா - கோலாலம்பூர் மாநாட்டில் சிறப்புத் தீர்மானங்கள்




தை முதல் நாள்தான் தமிழாண்டுத் தொடக்கம் எனும் முடிவு தமிழ்ச் சான்றோர் களால் 1921 ஆம் ஆண்டு உறுதிச் செய்யப் பெற்று 1935 ஆம் ஆண்டு தெளிவுபடுத்தப் பட்டுத் தொடர்ந்து பல்வேறு கூட்டங்களில், மாநாடுகளில், கருத்தரங்கங்களில் தீர் மானமாக அமையப் பெற்றது.

அம் முடிவு தமிழர் வாழும் உலக நாடு கள் அனைத்தும் ஏற்றுக் கொண்டு நடை முறைப்படுத்துவான் வேண்டி தி.பி.2031 சிலைத் திங்கள் 22 ஆம் பக்கல் (1.6.2001) மலேசியத் தலைநகரான கோலாலம்பூரில் அமைந்துள்ள பிரிக்பீல்ட்ஸ், அசோகர் அரங்கத்தில் நடைபெற்ற -

தை முதல் நாளே தமிழாண்டுத் தொடக் கம் எனும் உலகப் பரந்துரை மாநாட்டில் பரந்துரை செய்யப் பெற்று அறிஞர் பெரு மக்களால் கீழ்க்காணும் சிறப்புத் தீர்மானங் கள் முன்மொழிந்து, வழிமொழிந்து ஏற்றுக் கொள்ளப்பட்டன.

1) தை முதல் நாளே தமிழாண்டுத் தொடக்கம் என்பதனை உலகத் தமிழர்கள் அனைவரும் ஏற்று இனித் தொடர்ந்து அனைத்து வாழ்வியல் நிலைகளிலும் பின் பற்றுமாறு இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

2) இவ்வுலகில் வெளிவரும் செய்தி ஊடகங்கள் (தாளிகைகள், ஏடுகள், வானொலி, தொலைக்காட்சி, இணையதளம்) அனைத்தும் தமிழ் இன, மொழி, நெறி நலங்கருதி இனித் தொடர்ந்து திருவள்ளுவர் ஆண்டுத் தொடக்கத்தைப் பின்பற்றி தமிழர் இறைமைக்குத் துணை நிற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றது.

3) உலகெங்கும் தமிழர் பரந்து வாழ் கின்றனர். அவர்களைப் புரந்து வருகின்ற நாடுகளைச் சேர்ந்த அரசு, அரசியலார் இப்பரந்துரையினை ஏற்று அதைத் திங்கள் முதல் நாளில் தமிழ் மக்களுக்குப் பொது விடுமுறை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றது.

4) “நாள் காட்டியும் அதன் வரலாறும்” என்ற தொகுப்பினைச் செய்து வரும் இங் கிலாந்து நாட்டின் எருதந்துறை பல்கலைக் கழக அச்சகத்தார் தங்களுடைய உலக இனங்களின் புத்தாண்டு வரலாற்றுத் தொகுப் பில் தமிழர்க்குரிய ஆண்டுத் தொடக்கமாக “தை மாத முதல் நாளே தமிழாண்டுத் தொடக் கம்” என்பதை இணைத்துக் கொள்ளுமாறு வேண்டப்படுகிறது.

5) பாராட்டுகிறோம்: தை முதல் நாளே தமிழாண்டு எனும் கருத்துருவாக்கத்தை வலியுறுத்தி நீண்டகாலமாக நடைமுறைப் படுத்தியும் பரப்பியும் வரும் போராட் டத்தில் முன்னோடியாக விளங்கய உலக நாடுகளைச் சேர்ந்த செய்தி ஊடகங்கள், தமிழர் அமைப்புகள் குறிப்பாகத் தனித் தமிழியக்க உணர்வாளர்கள் தமிழ் அறிஞர் பெருமக்கள், அரசியல் இயக்கங் கள் முதலான அனைவரையும் இம்மா நாடு நினைவு கூர்ந்து நன்றி பாராட்டு கின்றது.

கரு: “தை முதல் நாளே தமிழாண்டுத் தொடக்கம்” உலகப் பரந்துரை மாநாடு

இடம்: அசோகா அரங்கம், பிரிக் பீல்ட், கோலாலம்பூர்

நாள்: 6.1.2001

நோக்கங்கள்


1) இம்மாநாட்டின் வழி, தமிழ்ச் சான்றோரும் அறிஞர் பெருமக்களும் ஒட்டு மொத்தமாகப் பண்பாட்டியல் அறிவியல், வானியல், வரலாற்றியல் சான்றுகள் வழி உறுதிப்படுத்திய தை - மாதம் முதல் நாளே தமிழாண்டுத் தொடக் கம் என்பதை உலகத் தமிழருக்கு உணரச் செய்து ஏற்றுப் பின்பற்ற வைத்தல்.

2) இம்மாநாட்டின் வழி தாய்மொழிக் கல்வி நிலைப்பாட்டினையும் தமிழ் நெறிச் சிந்தனைகளையும், தமிழியல் கோட் பாடுகளையும் தடம்புரளும் தலைமுறை யினர்க்கு உணர்த்தி நல்ல மனம் நலம் சார்ந்த தமிழ்ப் பண்பாளர்களை உரு வாக்குதல்.

3) இம் மாநாட்டின் வழி தமிழ் மக்கள் மனத்தின் கண் புத்துணர்ச்சியையும், புத்தெழுச்சியையும் தமிழர் அறிவு கோட் பாட்டின் அடிப்படையில் உருவாக்கி மொழியியல், இனவியல், வரலாற்றியல், பண்பாட்டியல், மெய்யியல் தன்மைகளை உணர்த்துதல்.

4) தை முதல் நாளே தமிழாண்டுத் தொடக்கம் என்ற நீண்ட கால உலகத் தமிழர் போராட்டத்தைத் தமிழக அரசு, புதுவை அரசு, இந்திய நடுவணரசு, யுனே கக்கேர் அமைப்பு மற்றும் உலகளாவிய தமிழ் மக்களை புரக்கும்  நாடுகளின் அர சுகளை மதிக்கச் செய்து நடைமுறைப் படுத்தத் தூண்டுதல்.

உயர்வு நாடிச் செல்வோம்! ஒன்றுபட்டு வெல்வோம்!

மாநாடு ஏற்பாடு: மலேசியத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம், மலேசியத் தமிழ் நெறிக்கழகம், மலேசிய திராவிடர் கழகம்.

-  விடுதலை ஞாயிறுமலர், 12.1.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக