பக்கங்கள்

திங்கள், 7 அக்டோபர், 2019

தூத்துக்குடி அருகே 17ஆம் நூற்றாண்டு தமிழ் மொழி கல்வெட்டு கண்டுபிடிப்பு

தூத்துக்குடி,அக்.7 தூத்துக்குடி மாவட்டம் சிறீவைகுண்டம் அருகே யுள்ள ஆதிச்சநல்லூர், சிவகளை பரும்பு மற்றும் குளக்கரை பகுதி களில் முன்னோர்கள் காலத்தில் பயன் படுத்தப்பட்டுள்ள அரியவகை பொருட்கள் கண்டெடுக்கப்பட் டுள்ளது.
சிறீவைகுண்டம் குமரகுருபரர் சாமிகள் மேல்நிலைப் பள்ளியின் வரலாற்று ஆசிரியர் சிவகளை மாணிக்கம், திருநெல்வேலி சதக் அப்துல்லா கல்லூரியில் வரலாறு மற்றும் ஆராய்ச்சித் துறையில்  முனைவர் பட்டம் படிப்பிற்காக சிவகளை சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். சிவகளையில் தமிழ் வட்டெழுத்து, தமிழ்மொழி கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட் டுள்ளது.
இதுகுறித்து, வரலாற்று ஆசிரி யர் சிவகளை மாணிக்கம் கூறியதா வது: எனது வரலாற்று ஆய்வுப்பணிக் காக சிவகளை மேலக்குளத்தின் நீர் வெளியேறும் மடையின் படிக்கட்டு களை ஆய்வு செய்தபோது அதில் 11ஆம் நூற்றாண்டின் தமிழ் வட் டெழுத்துக்கள் பொறிக்கப்பட் டுள்ள கல்வெட்டும், 17ஆம் நூற் றாண்டின் தமிழ்மொழி கல்வெட்டு களும் இருந்தன.
இதனை இந்திய தொல்லியல் துறை ஆய்வாளர்கள் யத்தீஸ் குமார், பிரசன்னா, கல் வெட்டு ஆய்வாளர் வீரமணிகண்டன் மற்றும் பெங்களூரு கல்வெட்டு படியெடுப்பாளர் நசுருல்லா ஆகி யோர் தலைமையிலான குழுவினர் கல்வெட்டுகளை படியெடுத்து ஆய்வு செய்தனர். நான்கு வரிகளை கொண்டுள்ள இக்கல்வெட்டு 11ஆம் நூற்றாண்டை சேர்ந்த வட்ட எழுத்து என்பதும், இந்த எழுத்துக்களில் சிவகளையிலுள்ள இந்த குளம் அக்காலத்தில் நாராயணன் ஏரி என்று குறிப்பிடப் பட்டுள்ளது. இதே போன்று, சிவகளை சேர்ந்தையன் சாஸ்தா கோவிலுக்கு எதிரேயுள்ள தரிசு குளத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள நடுகல்லில் அது 17ஆம் நூற் றாண்டை சேர்ந்த தமிழ்மொழி கல்வெட்டு என்பதும், இந்த கல் வெட்டில், சிவகளையின் பெயரா னது கடந்த நூற்றாண்டுகளில் செவளை என்றும், செவளையானது ஊருகாலவம்பிள்ளை மகன் சந்திகா வலம்பிள்ளை என்பவருக்குரியது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது என்றார். இந்த கல்வெட்டுக்களை திருநெல்வேலி சதக்அப்துல்லா கல்லூரி முதல்வர் முகம்மதுசாதிக், வரலாற்றுத்துறை தலைவர் நசீர் அகமது, ஆராய்ச்சி மய்ய ஒருங் கிணைப்பாளர் சின்னத்தம்பி, பேராசிரியை ஆஷா மற்றும் வரலாற்றுத்துறை பேராசிரியர்கள், பள்ளி கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் பலரும். வியப் புடன் கண்டு சென்றனர்.
- விடுதலை நாளேடு, 7.10.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக