பக்கங்கள்

வெள்ளி, 15 ஜூன், 2018

புரட்சிக் கவிஞரும் திருவள்ளுவர் படமும்

பட்டுக்கோட்டை பி.எல்.இராசேந்திரன்



“தை” முதல் நாள் பொங்கல் நாள் - தமிழ்ப் புத்தாண்டு தொடக்க நாள்! தமிழ கத்தில் திருவள்ளுவர், திருநாள் 2015 தை 1 இல் மலர்கிறது.

இந்நேரத்தில், அவர், வாழ்வோடும் திரு வள்ளுவரோடும் தொடர்புடைய முக்கிய நிகழ்ச்சி ஒன்றை நாம் நினைவு கூரலாமா?

திருவள்ளுவப் பெருந்தகையின் திரு வுருவப் படமொன்று, தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்டுத் தமிழகம் எங்கும் முக்கிய இடங்களிலெல்லாம் காட்சியளிப் பதை நாம் பார்க்கிறோம். ஓவிய விற்பன்னர் வேணுகோபால சர்மா கைவண்ணத்தில் உயிர்பெற்ற அந்தத் திருவள்ளுவர் உருப் பெற மூல காரணமானவரே புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார்தான்!

1950களில், புரட்சிக் கவிஞரின் மாண வனாகப் புதுவையில் நான் குருகுலவாசம் நடத்திக் கொண்டிருந்தநேரம் அது. அப் போதெல்லாம் அவர் வெளியூர்ப் பயணங் களில் உதவியாளனாக நான்தான் உடன் செல்வேன். அப்படி ஒருமுறை நாங்கள் சென்னைக்குப் பயணமானோம். புரட்சிக் கவிஞரின் மாப்பிள்ளை மா.தண்டபாணி அவர்களும் எங்களோடு வந்தார்.

சென்னையில் பாவேந்தர் புரட்சிக் கவி ஞரின் நெருங்கிய நண்பரான திரு. வேணு கோபால் சர்மா, சிறந்த புகைப்பட நிபுணரும் ஆவார்; சிவப்புச் சால்வையும் புன்னகையு மாக இன்றும் நாம் காணும் பாவேந்தர் படம் அவர் எடுத்தது தான். அவர் அப்போது சென்னை வால்டாக்ஸ் ரோட்டில் உள்ள வசந்தவிகாரில்தான் தங்கியிருந்தார். பாவேந் தர் பெரும்பாலும் சென்னைக்கு வந்தால், அங்குபோய் அவரோடு தங்குவதுதான் வழக்கம். அதேபோல் அன்றும் நாங்கள் அங்கேதான் போய்ச் சேர்ந்தோம்.

தலைசிறந்த ஓவியரான வேணுகோபால் சர்மா, கையில் ஓர் ஒற்றை ரோஜாவோடு உட் கார்ந்திருக்கும் முகலாய மன்னர் ஷாஜ ஹான் ஓவியம் வரைய பென்சில் “ஸ்கெட்ச்” பண்ணி வைத்திருந்தார்.
“என்ன சர்மா, இது யாரோட படம்?” என்றார் புரட்சிக் கவிஞர். சர்மா பதில் சொன்னார்.

“அட ஏம்பா நீ வேற!... நான் ஒண்ணு சொல்றேன் செய்றியா?” என்றபடியே, ஒரு மேஜை அளவுக்கு நிறுத்தி வைக்கப்பட் டிருந்த அந்தப் படத்தின் முன் நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு உட்கார்ந்தார், புரட்சிக் கவிஞர். வேணுகோபாலசர்மா, மிகக் கவனத்தோடு அவரைப் பார்த்தார்.

“இதபார் சர்மா, வலது கையில் இருக்கிற ரோஜாவை எடுத்துடு; அதுக்குப் பதிலா ஒரு எழுத்தாணியைக் கொடு. இடது கையில் ஓலைச் சுவடி போடு. மேல உடுப்பெல்லாம் வேணாம். வெறும் உடம்பு, இடது தோள்ல அங்க வஸ்திரம், அதாவது பாதி உடம்பை, மறைச்சாப்ல இருக்கணும்; தலைல பெரிசா ஒரு முண்டாசு எழுதிருக்கியே? அதை அப் படியே சுருட்டி முடிஞ்சி ஜடாமுடி ஆக்கீடு.. அப்புறம்...” ஒரு நிமிஷம் அந்தப் படத்தைப் பரவலாகப் பார்த்தார் புரட்சிக் கவிஞர்.

“ஊம்.. முக்கியமான விஷயம். கால்ல விரலெல்லாம் சேர்ந்தாப்ல இருக்கக் கூடா துப்பா; கட்டை விரலை மட்டும் கொஞ்சம் விலக்கி நிமிர்த்திவிடு. அறிவாளிங்களுக்கு அப்படித் தான் இருக்கும்!” என்று கூறி விட்டு எழுந்தார்.

சர்மாவின் வியப்பு

“சரி, அதுமாதிரியெல்லாம் செய்தா என்ன ஆகும்?” என்றார் வேணுகோபால் சர்மா. “புரியலே? நீ தான் ஓவியனாச்சே! நான் சொன்னதையெல்லாம் வெச்சி கற் பனை பண்ணிப்பாரேன்?... இதுவே திரு வள்ளுவர் படம் ஆயிடும்!” என்றார் புரட் சிக்கவிஞர். வியப்போடு பார்த்தார் சர்மா.

நாங்கள் அடுத்த தடவை சென்னைக் குச் சென்றபோது, அந்த முகலாய மன்னர் சாட்சாத் திருவள்ளுவரே ஆகிவிட்டிருந் தார்! “வேற என்ன செய்யணும் சொல் லுங்க?” என்றார் வேணுகோபால் சர்மா.
“நீ விட்டுடு. காமராஜர்கிட்டே சொல்லி, அரசாங்கம் மூலமா எதுனா இதுக்கு உதவி செய்ய முடியுமான்னு நானே பார்க்கி றேன்!” என்று சொன்னார் புரட்சிக் கவிஞர்.

புதுவைத் தமிழ்ப் பேராசிரியர் சு.குமார சாமி என்பாருக்குப் பாராட்டு விழா நடந்த ஏற்பாடாகியது அப்போதைய தமிழக முதல்வரான திரு. கு. காமராசரையே அவ்விழாவிற்கு வரச் செய்யலாம் என்று கூறி, அவரைப் புதுவைக்கே அழைக்கின்ற பொறுப்பையும் தானே ஏற்றுக்கொண்டார் புரட்சிக் கவிஞர்.

5.2.1959 வியாழக்கிழமையன்று மாலை யில், புதுவை வேதபுரீசுவரர் கோயிலில் அந்தப் பாராட்டு விழா நடப்பதாக ஏற்பாடு. அதற்கு முதல் நாளில் அந்தத் திருவள்ளு வர் படத்தோடு வேணுகோபால் சர்மா வுக்கு புதுவைக்கு வந்து சேரும்படி வகை செய்யப்பட்டது.

வள்ளுவர் படத்திறப்பு

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தலை மையில் பேராசிரியர் சு. குமாரசாமிக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. அவ்விழா வில் பங்கேற்ற தமிழக முதல்வர் காமராசர், அப்பேராசிரியருக்குப் பொன்னாடை போர்த்தினார். விழா முடிந்ததும், புரட்சிக் கவிஞர் வீட்டில் திருவள்ளுவர் படத் திறப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பெருமாள் கோவில் தெரு, 95 ஆம் எண்ணுள்ள தனது இல்லத்தில் நடை பெற்ற அவ்விழாவிற்கும் புரட்சிக் கவி ஞரே தலைமை தாங்கினார். அப்போது அவர், ஓவியர் வேணுகோபால் சர்மா வையும் அவரால் உருவாக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் திருவுருவப் படத்தையும் பற்றி மனம் திறந்து பாராட்டிப் பேசினார். “திருவள்ளுவர் இப்படித்தான் இருந் திருக்க முடியும்; இதை எவனாலும் மறுக்க முடியாது” என்று அழுத்தமாகக் குறிப் பிட்டு, அதைத் திறந்து வைக்குமாறு தமிழக முதல்வர் காமராசரைக் கேட்டுக் கொண்டு அவருக்குப் பொன்னாடை அணிவித்தார்.

காமராசர், திருவள்ளுவர் படத்தைத் திறந்து வைத்து ஓவியர் வேணுகோபால் சர்மாவுக்குச் சால்வை அணிவித்தார். அன்றைய அவர் சொற்பொழிவு ரத்தினச் சுருக்கமாக அமைந்தது.

“நான் ஒண்ணும் பெரிய தமிழ்வித்வான் கிடையாது; தமிழ்ல என்னென்னமோ ஏராளமான இலக்கியமெல்லாம் இருக்குங் கிறாங்களே அதையெல்லாம் படிச்சதும் கிடையாது. புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் என்னாட்டம் இல்லே; நிறைய படிச்சவர் - புலவர். அப்படியாப்பட்டவரே திருவள்ளு வர் இப்படித் தான் இருந்திருப்பார்னு அடிச்சி சொல்றார். அதனால திருவள்ளுவர் இதாட்டம்தான் இருந்திருக்கணும்கிறேன். இந்தப் படத்தைத் திறந்து வைப்பதில் நான் உள்ளபடியே ரொம்பவும் சந்தோஷப்பட றேன்!” - இதுதான் திரு. காமராசரின் அன் றையப் பேச்சு.

விழாவில், புரட்சிக்கவிஞரின் மாப்பிள் ளையும் “குயில்” வார ஏட்டின் அமைச் சருமான (மேனேஜர்) மா.தண்டபாணி நன்றி கூறிப் பேசினார்.

அன்றைக்குத் தமிழக முதலமைச்சருக்கு மட்டுமல்ல; விழாவிற்கு வந்திருந்த அனை வருக்குமே புரட்சிக்கவிஞர் வீட்டில்தான் சாப்பாடு. என்ன சாப்பாடு தெரியுமோ? வான்கோழி பிரியாணி!

அதுதான் காமராசருக்குப் பிடிக்குமாம். பாவேந்தரே சொன்னது இது!

எனக்கொரு சோதனை 

அன்றைக்குப் பந்தி பரிமாறியவர்களில் நானும் ஒருவன். அப்படிப் பரிமாறும்போது, தோளில் போட்டுக் கொண்டிருந்த என் கைக்குட்டை தமிழக முதலமைச்சர் இலை யருகே விழுந்துவிட-அதுகண்டு பாவேந்தர் என் மீது வீசிய நெருப்புப் பார்வை இன் னும் எனக்கு நினைவிருக்கிறது.

அதிலிருந்து, காலர் அழுக்குப் படா திருக்கக் கைகுட்டையை மடித்து வைக்கும் தஞ்சை மாவட்ட வழக்கத்தையே நான் விட்டு விட்டேன்.

அதன்பிறகு அந்தத் திருவள்ளுவர் படம் சென்னையில் உள்ள தேனாம்பேட்டை பொருட் காட்சித் திடலில் காட்சிக்கு வைக் கப்பட்டது. பேரறிஞர் அண்ணா , நாவலர், கலைஞர் முதலான அரசியல் தலைவர் களெல்லாம் பார்த்துப் பாராட்டினார்கள்.

இதற்கெல்லாம் பிறகுதான் 15.2:1960 இல் காமராசர் ஆட்சிக்காலத்திலேயே திருவள் ளுவர் திருவுருவம் 15 காசு அஞ்சல் தலை யாக வெளிவந்தது.

பேரறிஞர் அண்ணா அவர்கள் தமிழக முதல்வராக இருந்தபோது (9.6.1967) தலை மைச் செயலகத்தில் திருவள்ளுவர் திரு வுருவப் படம் சட்டப் பேரவையில் திறந்து வைக்கப்பட்டது.

1975இல் சென்னை -அரசினர் தோட்டத் தில் உள்ள ராஜாஜி மண்டபத்தில், அரசு ஏடான “தமிழரசு” பத்திரிகையின் 5ஆவது ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது. அப் போது தமிழக முதல்வராக இருந்த கலை ஞர் மு.கருணாநிதி ஒரு சிறப்பான காரியம் செய்தார்.

அதுவரை ராஜாஜி மண்டபத்தில் வைக் கப்பட்டிருந்த வெள்ளையாட்சிக் காலக் கவர்னர்கள் படத்தையெல்லாம் எடுத்து விட்டுத் தமிழறிஞர்கள் பன்னிருவரின் திருவுருவப் படங்களை அம்மண்டபத்தில் வைக்க ஏற்பாடு செய்தார்,

அவர் ஆலோசனைப்படியே, வேணு கோபால் சர்மா வரைந்த திருவள்ளுவர் ஓவியம் - எழுந்து நிற்பது போல வேறொரு ஓவியரால் சித்திரிக்கப்பட்டு ராஜாஜி மண் டபத்தில் வைக்கப்பட்டது. எளிமையான அந்த விழாவில் சர்மா உட்பட அந்த ஓவி யங்களை வரைந்த அத்தனை ஓவியர்க ளுக்கும் முதலமைச்சரான கலைஞரா லேயே சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

அதே கலைஞர் அவர்கள் மீண்டும் முத லமைச்சரான பிறகு - முதுமை காரணமாக உடல் நலிவுற்றிருந்தார், திருவள்ளுவர் திரு வுருவத்தை நமக்களித்த அந்த மாபெரும் ஓவியர் திரு.வேணுகோபால் சர்மா.
மருத்துவச் சிகிச்சைகென மாண்புமிகு முதல்வர் அவர்கள், அரசு மூலம் பத்தா யிரம் ரூபாய் நிதி வழங்கினார் ஆயினும் அவர் நலம்பெற்று எழுந்தாரில்லை.

“நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்

பெருமை உடைத்திவ் உலகு”

என்ற குறளுக்கு இலக்கணமாகிவிட்டார்!

நன்றி: ‘குயில்’ - 2015,

ஜன.-பிப்., பக்கம் 8-10

-  விடுதலை ஞாயிறு மலர், 28.4.18

புதன், 30 மே, 2018

கீழடியில் நான்காம் கட்ட அகழாய்வில் பழங்காலப் பொருள்கள் கண்டெடுப்பு



 


சிவகங்கை, மே 20 சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடை பெற்ற நான்காம் கட்ட அகழாய் வில் மீண்டும் பழங்காலப் பொருள்கள் கிடைத்துள்ளன.

கடந்த 2014 ஆம் ஆண்டு பெங்களூரில் அமைந்துள்ள இந்திய தொல் பொருள் அகழாய்வு மையம் நடத்திய ஆய்வில் சிவகங்கை மாவட்டம் கீழடி பள்ளிச்சந்தை புதூர் திடலில் சுமார் 80 ஏக்கர் பரப்ப ளவில் பழங்கால பொருள்கள் இருப்பதற்கான சான்றாதாரங்கள் கண்டறியப்பட்டன.

இதையடுத்து, கடந்த 2015ஆம் ஆண்டு மார்ச் 2 ஆம் தேதி அங்கு அகழாய்வுப் பணி கள் தொடங்கின. முதல் இரண்டு கட்ட அகழாய்வில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் வாழ்ந்ததற்கான நகர வீடுகள், மண் பாண்ட ஓடுகள், கலை நயமிக்க பானை கள் உள்ளிட்ட ஏராளமான பொருள்கள் கிடைத்தன.

பின்னர் நடைபெற்ற மூன்றாம் கட்ட அகழாய்வில், தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், சதுர மற்றும் வட்ட வடிவிலான செப்புக் காசுகள், தங்கப் பொருள்கள், மண்ணால் செய்யப்பட்ட உருவங்களும் கிடைத்தன.

இந்நிலையில் கீழடியில் நான்காம் கட்ட அகழாய்வுப் பணிகளை தமிழக தொல்லியல் துறை மேற்கொள்ளும் என மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து, கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி  நான்காம் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடங் கின. இதுவரை 13 குழிகள் தோண்டப் பட்டுள்ளன.

இதில், மண் பானைகள், கலை நயமிக்க மண்பாண்ட ஓடுகள் உள்ளிட்ட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பழங் காலப் பொருள்கள் தற்போது கிடைத்துள்ளன. இப்பணியில், தமிழக தொல்லியல் துறை அலுவலர்கள், ஆய்வு மாண வர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
- விடுதலை நாளேடு, 20.5.18

செவ்வாய், 22 மே, 2018

யார் தமிழர்?

யார் தமிழர்?
தமிழர்கள் என்றால் யார்? அவர்களை எப்படி இனம் காணலாம்?

”அட, இதில் யோசிக்க என்ன இருக்கிறது. தமிழ் நாட்டில் வாழும் எல்லோரும் தமிழர்கள் தான்,” என்று பட்டென சொல்ல தோன்றினால், “அப்படியானால் தமிழ் நாட்டில் வாழும் உருது பேசுபவர் தமிழரா?” “வெளி நாடுகளில் வாழும் தமிழ் பேசும் மனிதர்கள் தமிழர்கள் இல்லையா?” என்ற கேள்வியும் வரும்.

அப்படியில்லை, அவர்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும், தமிழ் பேசுபவராக இருந்தால் அவர் தமிழரே, என்று விளக்கம் சொன்னலோ, அப்படியானால் நெதர்லாந்துகாரரான கமில் ஸ்வெலிபில் எனும் தமிழ் அறிஞரும் தமிழர் தானா? ஒரு சாராசரி தமிழனை விட, அதிகம் தமிழை பற்றி தெரிந்துவைத்திருக்கிறவர் ஆயிற்றே. அப்படியானால் அவர் தமிழர் தானே? என்று வாதிட்டாலோ, “அதெல்லாம் இல்லை, அவருக்கு எவ்வளவு தமிழ் தெரிந்திருந்தாலும், அவருடைய அசல் தாய் மொழி டச்சு தான், அவர் சொந்த விருப்பத்திற்க்காக அவர் தமிழ் கற்றார்…. தேர்சி பெற்றார். அவர் தமிழுக்காக, எவ்வளவு சாதித்திருந்தாலும் அவர் தமிழர் ஆக மாட்டார். காரணம், அவர் தாய் மொழி தமிழே இல்லை” என்று பதில் வரும்.

இதில் ஒரு சிக்கல் இருக்கிறது. ஒரு வேளை, தமிழ் பெற்றோருக்கு பிறந்தும், பல காலம் வெளி நாட்டில் வாழ்ந்ததால் தலைமுறை தலைமுறையாக, ஆங்கிலம், ஜெர்மன், அல்லது, ஃபிரென்ஞ்ச் மட்டுமே பேசும் தமிழ் தெரியாத மனிதராக இருந்தால், அப்போது அவர் தமிழரில்லையா? உதாரணம்: இன்று ஃபிஜி, மொரீஷியஸ், செஷல்ஸ், தென்னாப்பிரிக்கா, மேற்கு இந்தீஸில் வாழும் பல தமிழ் வம்சாவழியினருக்கு தமிழே தெரியாதே. அவர்களின் தாய் மொழி என்று அவர்கள் நினைப்பது, அந்தந்த ஊரின் மொழியை மட்டும் தானே.

அல்லது, வேலை நிமித்தமாக தமிழ் நாட்டில் வசிக்க நேர்ந்ததால், தொன்று தொட்டு பல தலை முறைகளாக தமிழையே பேசிக்கொள்கிறார்கள் …..உதாரணத்திற்கு இன்று தமிழ்நாட்டில் வாழும் பல ரெட்டிமார்கள் வீட்டிலும், மனதிற்குள்ளும் தமிழை தான் பேசிக்கொள்கிறார்கள். அவர்களுக்கு தெலுங்கே தெரிவதில்லை…..அப்படியானால் அவர்கள் தமிழர்களா?

அப்படி இல்லை, தமிழ் தெரியுமோ தெரியாதோ, அது அவ்வளவு முக்கியம் இல்லை. அவர்களின் பெற்றோர்கள் எந்த மொழியை பேசும் இனத்தை சேர்ந்தவர்கள் என்பது தான் முக்கியம். பெற்றோரின் பூர்வீக மொழி மட்டும் தான் அடையாளம் என்றால், என் தாய் தமிழச்சி இல்லை, வேற்றூ மொழிகாரி என்றால், நான் தமிழர் இல்லையா?

இல்லை, உன் தந்தை தமிழராக இருந்தால் போதும், யாராவது ஒரு பெற்றோர் தமிழராக இருந்தாலே தமிழர் என்ற அந்தஸ்த்தை பெறலாம், என்றாலோ, அடுத்து வரும் கேள்வி, “அப்படியானால் தமிழ் என்பது மொழியின் அடையாளமா? இனத்தில் அடையாளமா?”

தமிழ் எனும் மொழியை யார் வேண்டுமானாலும் கற்றுக்கொண்டு பேசலாம், காந்திகூடத்தான் தென் ஆப்பிரிக்கா சிறையில் இருந்த போது தமிழை கற்றுக்கொண்டார், அதற்காக அவர் தமிழராகிவிட முடியுமா? அதெல்லாம் இல்லை, தமிழ் என்பது ஒரு இனம்.

சரி, இனம் என்றால் என்ன? ஒரு குறிப்பிட்ட இடத்தில் வசித்து, ஒரே ஆரம்ப மொழியை பேசி, ஒருமித்த கலாச்சாரம், கருத்தாக்கம், மரபு, நம்பிக்கை, ஆகியவற்றை பின் பற்றும் ஒரு குழுவை தான் இனம் என்போம். இப்படி ஆரம்பித்த இனம், பிறகு வெவ்வேறூ பாதைகளை தேடி பிரிந்து போனாலும், அவர்கள் ஆரம்பத்தில் ஒரே குடும்பமாக இருந்ததால், கடைசி வரை அவர்கள் சகோதரர்களே…..அதனால் தான் தமிழர், தெலுங்கர், மலையாளி, துலு, கன்னடக்காரர், என்ற மேலோட்டமான பிரிவினைகளை தாண்டி, அனைத்து திடராவிடமொழி பேசுபவர்களும் ஒரே கூட்டம் தான். காரணம் இவரக்ள் எல்லோருமே ஆரம்ப காலத்தில் ஒரே மொழியை பேசி, ஒரே இடத்தில் வசித்து வந்த ஒரே குடும்பத்தவர் தான்.

அது சரி, ஆனால் இந்த திராவிட இனம் என்பது எங்கே, எப்போது, எப்படி தோன்றியதாம்? அது கல் தோன்றி மண் தோன்றும் காலத்துக்கு முன்னால் எல்லாம் தோன்றியது என்று நாம் மிகை படுத்தி, “முதலில் தோன்றிய மூத்த குடியாக்கும்” என்றெல்லாம் கதை விட்டுக்கொண்டிருக்க முடியாது. காரணம் இன்று எல்லா கூற்றூகளையும் அறிவியல் ரீதியாக பரிசோதிக்க முடியும்! மானுடம் என்ற ஜீவராசி தோன்றியே ஒரு மில்லியன் ஆண்டுகள் தான் ஆகின்றன, என்பது அறிவியல் உண்மை, அப்புறம், இந்த கல் தோன்றி, மண் தோன்றா காலத்து கதைகளை சொன்னால், அது அபத்தம் ஆகிவிடுமே!

கதை எல்லாம் எதுவுமில்லை, நிஜம் இது தான்: கிட்ட தட்ட ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் சிந்து சமவெளியில் நாகரீகத்தை தோற்றுவித்தவர்கள். ஆஸ்கோ பார்போலா என்ற மொழியியல் புணரும், ஐராவதம் மஹாதேவன் அவர்களும் தெள்ள தெளிவாக சொல்லி இருக்கிறார், சிந்து சவவெளி காரர்களின் எழுத்து ஆதி திராவிட எழுத்துவடிவம் தானாம்! என்றாலும், அடுத்த கேள்வி எழுகிறது…..சிந்து சமவெளிக்கு திராவிடர்கள் எப்படி வந்து சேர்ந்தார்கள், அதற்கு முன்னால் அவர்கள் எங்கே இருந்தார்கள்?

எல்லா மனிதர்களும் ஆரம்பத்தில் தென் கிழக்கு ஆஃப்ரிக்காவில் தான் தோன்றினார்கள். அங்கே தான் ஹொமினினே என்கிற ஒரு வாலற்ற குரங்கு இனம் பரிணாம வளர்ச்சியில் உரு மாறிக்கொண்டே இருந்தது. இந்த ஹோமினினே குரங்கு தான் கிட்ட தட்ட ஐந்தாறு மில்லியன் ஆண்டுகளுக்கு முன் சிம்பான்சி, போனோபோ, ஆஸ்திரலோபிதிகஸ் என்கிற மூன்று வகைகளாக பிரிந்தது. இதில் ஆஸ்திரலோபிதிகஸ் என்கிற வகை மேலும் மேலும் பரிணாம வளர்ச்சிக்கு உட்பட்டு, உருமாறிக்கொண்டே போய், கிட்ட தட்ட ஒரு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இப்போது இருக்கும் மனித இனமான ஹோமோ சேப்பியன்ஸ் பேப்பியன்ஸ் என்கிற இனமாக உருவானது. இந்த இனம் தோன்றியது தென்கிழக்கு ஆஃப்ரிக்காவில் தான். ஆரம்பத்தில் இந்த இனத்தில் ஜனத்தொகை சில நூறுகளாக மட்டுமே இருந்தன. இவை ஒரே மொழியை பேசின. ஒரே விதமான நம்பிக்கைகளை கொண்டிருந்தன. ஒரே விதமான மரபுகளை பின்பற்றின. உணர்ச்சிகள், தேவைகள், ஆசைகள், எண்ணங்கள், அவ்வளவு ஏன், உடல் மற்றும் மனநலநோய்கள் கூட இவற்றுக்கு ஒரே மாதிரி தான் இருந்தன. இந்த இனம் உணவு தேடி, நாடோடிகளாய் பல புதிய திறந்தவெளிகளை நோக்கி பயணித்தன. இப்படி பரவிய இந்த மனித கூட்டம், கடந்த பத்தாயிரம் ஆண்களகாய், பல திக்குகளுக்கு பிரிந்து போயின. போன இடத்தில் புது புது உணவுகளை உட்கொண்டு, புது புது வாழ்க்கை முறைகளை பின்பற்றி, மொழியை மாற்றி மாற்றி பேசினாலும், இன்று வரை இவை அனைத்துமே ஒரு இனம் தான். உலகின் எந்த கோடியில் பிறந்த மனிதருக்கும், வேறு எந்த கோடியில் பிறந்த அடுத்தவர் ரத்த/உருப்பு தானம் செய்ய முடியும், இருவரது திசுகளும் பொருத்தமாய் இருந்தால். இதை விட பெரிய அதிசயம், இன்றும் மனிதர்களுக்கும் போனோபோ குரங்குகளுக்கு மரபணுக்கள் கிட்ட தட்ட 98% ஒரே மாதிரி இருக்கின்றனவாம், பொனோபோக்களின் உதிரத்தை மனிதர்களுக்கு செலுத்த முடியுமாம். பொனோபோக்களுக்கு மனிதர்களுக்கு இனகலப்பு செய்தால் குழந்தைகூட பிறக்கலாம் என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். ஐந்தாறு மில்லியன் வருடங்களுக்கு முன்பே பிரிந்து போன சகோதர இனக்களான பொனோப்போவும் மானுடமும் இத்தனை ஒற்றூமைகள் இன்னும் இருக்கின்றன என்றால், பத்தே பத்து ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உணவை தேடி போனதில் பிரிந்து போன மனித வர்கம் இன்னும் எத்தனை நெருக்கமானதாக இருக்க வேண்டும்!

அதனால் தான் எத்தனை மொழிகளை நாம் பேசினாலும் எல்லா மொழிகளுமே தாயை, “மா” என்று தான் அழைக்கின்றன. அதனால் தான் நெதர்லாந்தில் பிறந்தாலும் கமில் ஸ்வெலிபில், மாதிரியான ஆசாமிகளுக்கு தமிழ் மீது ஆர்வம் வருகிறது. ஆக, எல்லா மனிதரக்ளும் அடிப்படையில் ஒன்று தான் என்றால் தமிழர்கள் என்பவர்கள் யார்?

ஆஃப்ரிக்காவில் தோன்றி, சிந்துசமவெளியில் நாகரீகம் கண்டு, திராவிட மொழியையும், கலாச்சாரத்தையும் தோற்றூவித்து, பல ராஜியங்கள் கண்டு, இன்னும் இன்னும் பல புதிய நிலபறப்புகளுக்கு பரவிக்கொண்டு இருக்கும் அந்த இனம் தான் தமிழ் இனம். இந்த பெரிய பயணத்தில் அவர்களின் மொழி மாறி இருக்கலாம், அவர்களின் வாழ்க்கை முறை மாறி இருக்கலாம்….ஆனால் தொடர்ந்து பயணிப்பதும், பிழைப்பதும், புதிய சூழலுக்கு தக்கபடி தங்களை மாற்றிக்கொண்டே போவதும் தான் இவர்களின் அடையாளங்கள். இவற்றை வைத்து இவர்களை நீங்கள் இனம் காணலாம்…..இப்பது சொல்லுங்கள் பார்ப்போம், தமிழர்கள் என்றால் யார்?

--மருத்துவர் ஷாலினி.

வெள்ளி, 18 மே, 2018

'சிங்கப்பூரில் தமிழ்மொழி எப்போதும் ஆட்சிமொழியாக இருக்கும்



சிங்கப்பூர், மே 15- சிங்கப்பூரில் தமிழ்மொழி எப்போதும் ஆட்சி மொழியாக இருக்கும் என்று அந்நாட்டு வர்த்தக உறவு மற் றும் தகவல் தொடர்பு துறை அமைச்சர் ஈஸ்வரன் உறுதிய ளித்துள்ளார். சிங்கப்பூரில் உள்ள 4 அதிகாரப்பூர்வ ஆட்சி மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று. பள்ளி, கல்லூரிகளில் தமிழ், தாய் மொழியாக கற் பிக்கப்பட்டு வருவதுடன் சிங் கப்பூர் அரசு நிகழ்ச்சிகள் மற் றும் அந்நாட்டு கரன்சியான டாலரிலும் தமிழ் மொழி இடம் பெற்றுள்ளது. அத்த கைய மரியாதை சிங்கப்பூரில் தமிழ் மொழிக்கு வழங்கப் பட்டுள்ளது.

இது குறித்து அமைச்சர் ஈஸ்வரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழ் மொழி தொடர்ந்து அதிகாரப் பூர்வ ஆட்சிமொழியாக இருக் கும் என்றும் தமிழ் மொழிக்கு ஆதரவு என்பதிலும் காப்பதி லும் அரசு உறுதியாக உள்ளது என்று தெரிவித்தார். மேலும் இளைஞர்கள் தினந்தோறும் அதிகளவில் தமிழ் மொழியை பயன்படுத்தி அந்த மொழிக்கு உயிரோட்டம் அளிக்க வேண் டும் என்றும் தமிழ் மொழி மற்றும் அதன் கலாச்சாரத்தை கொண்டாடுவதற்கும், ஊக்கு விப்பதற்கும், இளைய தலை முறையினர் முயற்சி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.
- விடுதலை நாளேடு, 15.5.18