பக்கங்கள்

திங்கள், 12 மார்ச், 2018

சிந்து சமவெளியில் பேசப்பட்ட மொழி தமிழ்தான் கீழடி அகழாய்வு மூலம் உறுதியாகிறது


சென்னை, மார்ச் 12- -சிந்து சம வெளியில் பேசப்பட்டமொழி தமிழ்தான் என்று கீழடி அக ழாய்வு மூலம் தெரியவந்திருப் பதாக ஆய்வாளர்கள் கூறியுள்ள னர்.

தமிழகத்தில் ஆதிச்சநல் லூருக்கு அடுத்தபடியாக கீழடியில்தான் பெரிய அளவிலான அகழாய்வு மேற்கொள்ளப்பட் டது. தற்போது நிறுத்தி வைக் கப்பட்டு இருந்த ஆதிச்சநல்லூர் ஆய்வு மீண்டும் தொடங்கப் படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் கீழடி யில் கிடைத்து இருக்கும் தமிழ் எழுத்துக்கள் பல உண்மைகளை வெளிக்கொண்டு வந்துள்ளன.

இதுநாள்வரை கூறப்பட்டு வந்த வரலாற்றை மொத்தமாக மாற்றும் வகையில் இந்த செய் திகள் அமைந்துள்ளன. 2017-இல் நடத்தப்பட்ட அகழாய்வு முடிவுகளின் படி கீழடியில் கிடைத்தபொருட்கள் மிகவும் பழமையானவையாக உள்ளன. அங்கு கிடைத்த வீட்டு உப யோக பொருட்கள் எல்லாம் 2200 ஆண்டுகள் பழமையானது என்று உறுதிப்படுத்தப்பட்டு உள்ளதால், இதுதான் மிகவும் பழமையான நாகரிகம் என்று மதிப்பிடப்படுகிறது.

மேலும், கீழடியில் காணப் பட்டது அனைத்தும் தமிழ் எழுத்துக்கள். அதிலும் பழைய தமிழ் எழுத்து முறைகளே பயன்படுத்தப்பட்டு இருக்கின் றன. அத்துடன், சங்ககால தமிழ் ஓலைச்சுவடிகளைச் போலவே இந்த எழுத்துக்கள் இருக்கின் றன. இந்த மாதிரியான எழுத் துக்கள் சிந்து சமவெளி ஆய் விலும் கிடைத்து இருப்பதால், சிந்து சமவெளியில் பயன்படுத் தப்பட்ட மொழி தமிழ்மொழி தான் என்றும், அங்கு பயன் படுத்தப்பட்ட வார்த்தைகளும் தமிழ் வார்த்தைகள் என்றும் ஆய்வாளர்கள் முடிவுக்கு வந் திருக்கின்றனர்.

இதுகுறித்து இன்னும் ஆராய்ச்சிகள் செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. கீழ டியில் நடத்தப்படும் ஆய்வுகள் பல முக்கியமான வரலாற்று உண்மைகளை வெளிப்படுத் தும் என்று சங்க கால குறியீட்டு ஆராய்ச்சியாளர் சுபாஷ் சந்திர போஸ் தெரிவித்துள்ளார்.

- விடுதலை நாளேடு, 12.3.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக