பக்கங்கள்

வெள்ளி, 11 ஜனவரி, 2019

திருக்குறள் மனுதர்மத்தின் சாரமா?


மலைத் தேனும் மலமும் ஒன்றாகுமா?




(நாகசாமி எனும் பார்ப்பனர் திருக்குறள் மனுதர்மத்தின் சாரம் என்னும் தலைப்பில் ஆங்கிலத்தில் நூல் ஒன்றை வெளியிட்டுள்ளார். திருக்குறள்


- ஓர் உலகப் பொதுமறை.

இதற்கு - சாதி, மதம், இனம், மொழி, நாடு என எந்தவொரு எல்லையும் கிடையாது. சமயச் சாயம் பூச முடியாதது. எல்லாச் சமயங்களும் சொந்தம் கொண்டாடும் ஒரே நூல்  - திருக்குறள். இது ஓர் இமயமலை. பூணூல் கொண்டு கட்டித் தூக்கிவிடலாம் என்பது மடமை; இதற்கு சவுக்கடி கொடுப்பது எனது கடமை).


 

திருக்குறள் மனுதர் மத்தின் சாரமா? - மலைத்

தேனும் மலமும் ஒன்றென் றாகுமா?

அறிவுடை யோரே ஓர்சொல் கேளீர்! - இதை

ஆய்ந்து தெளிந்தே உண்மை தேர்வீர்!

 

நாக சாமி எனுமோர் திருடன் - குறளை

மனுதர்ம சாரம் என்ற குருடன்! காகக் குரலும் குயிலின் குரலும் - தெரியா

கடைந்தெ டுத்த மாபெரும் மூடன்!

 

மனுதர் மத்தின் ஆணிவேர் அறுக்க - நல்ல

வாய்ப்பு தந்த நாகமே நன்றி!

மனிதனை மனித னாகவே மதியா - மனுவை

மனிதன் மதியான்; மதிக்குமே பன்றி!!

 

முகத்தி லிருந்து பார்ப்பான் பிறந்தான் - இரு

தோள்களி லிருந்து சத்திரியன் பிறந்தான்

அகன்ற தொடையில் வைசியன் பிறந்தான் - அடிப்

பாதத் திலிருந்தே சூத்திரன் பிறந்தான்!

 

என்றே பகவர்வது மனுதர்ம நூலே! - பிறப்பில்

ஏற்றத் தாழ்வினைக் கற்பித்த குரலே!

ஒன்றே பிறப்பென 'பிறப்பு ஒக்கும் - எல்லா உயிர்க்கும்' என்றிங் குரைப்பது குறளே!

 

என்முன் வந்து நீயும் நில்லடா! - இந்த இரண்டும் ஒன்றா பதில் சொல்லடா?

 

வர்ண பேதம் பிரம்மா செய்தான் - என்றே

மனுதர்ம நூலும் சொல்வது கண்டேன்!

வர்ண பேதம் நானே படைத்தேன் - என்றே

கண்ணன் கீதையில் சொல்வதும் கண்டேன்!

 

வர்ண பேதம் விதைத்தவன் யாரடா? - மாந்தருள்

பிரிவினை சொல்பவன் கடவுளா கூறடா?

 

உழவுத் தொழிலை இழிதொழில் என்றது - மண்ணின்

ஒப்பிலா இழிநூல் மனுதர்ம நூலே!

உழுதுண்டு வாழ்வா ரேவாழ் வார் என - உழவை

உயர்த்திப் பிடிப்பது திருக்குறள் நூலே!

 

என்முன் வந்து நீயும் நில்லடா! - இந்த

இரண்டும் ஒன்றா பதில் சொல்லடா?

 

சாதி குலதர் மத்தைக் கூறும் - மூல

சதிநூல் தானே மனுதர்ம நூலே!

சாதி குலதர் மம்என் றிங்கே - எதையும்

சாரா உலகநூல் திருக்குறள் தானே?

 

என்முன் வந்து நீயும் நில்லடா! - இந்த

இரண்டும் ஒன்றா பதில் சொல்லடா?

 

பட்டினிக் கிடந்தால் திருட லாமாம்! - சொல்வது

பார்ப்பான் நூலான மனுதர்ம நூலே!

பட்டினிக் கிடப்பது தாயே எனினும் - சான்றோர்

பழிப்பது செய்யேல் என்பது குறளே!

 

என்முன் வந்து நீயும் நில்லடா!

இந்த இரண்டும் ஒன்றா பதில் சொல்லடா ?

 

வேள்வி தன்னை உயர்த்திப் பிடித்தே - பார்ப்பான்

மேன்மை ஆதல் மனுதர்ம நூலே!

வேள்வி செய்வது வெட்டி வேலை - அதையே

வேண்டாம் என்பது திருக்குறள் நூலே!

 

என்முன் வந்து நீயும் நில்லடா! - இந்த

இரண்டும் ஒன்றா பதில் சொல்லடா?

 

அறம்பொருள் இன்பம் வீடென் றிங்கே - நான்காய்

அடுக்கி வைப்பது மனுதர்ம நூலே!

அறம்பொருள் இன்பம் என்று மூன்றுடன் - வீட்டின்

அடையாளம் இலாதது திருக்குறள் நூலே!

 

என்முன் வந்து நீயும் நில்லடா! - இந்த

இரண்டும் ஒன்றா பதில் சொல்லடா?

 

மண்ணில் ஆணை உயர்த்திடும் மனுதர்மம் - ஆனால்

ஆண்பெண் சமமே என்றிடும் திருக்குறள்!

பெண்ணை விபசாரி என்பது மனுதர்மம் - தெய்வமாய்ப்

பெண்மையைப் போற்றிப் புகழ்வது திருக்குறள்!

 

என்முன் வந்து நீயும் நில்லடா! - இந்த

இரண்டும் ஒன்றா பதில் சொல்லடா?

 

உலகப் பொதுநூல் திருக்குறள் ஒன்றே! - இதை

உரிமை கொண்டாட திருடுதல் வீணே!

உலவும் கதிரோன் உருவைத் தொட்டால் - நீயும்

உருத்தெரியாமல் மறைவாய் தானே?

 

சவாலை ஏற்றுப் புலியிடம் வருவாயா? - இல்லை

சந்து பொந்தில் எலிபோல் நுழைவாயா?

 

கடலளவு நீரெனக் கைவசம் இருக்கு - உன்றன்

மனுதர்மத் தோலை உரித்துக் காட்ட!

கடுகளவே உரித்துப் போட்டேன் இன்று! - இன்னும்

காண வேண்டின் வந்தால் நன்று!

 

உடனே வாரும்; இலையேல் ஓடும்!

வந்தால் உடலின் ஒண்பது ஓட்டையும் மூடும்!!

-  விடுதலை ஞாயிறு மலர், 17.11.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக