பக்கங்கள்

வெள்ளி, 25 ஜனவரி, 2019

தமிழ்மொழி காக்கும் போரில் உயிர் நீத்த ஈகிகளின் பட்டியல்:

1938, 1965ஆம் ஆண்டு ஆரிய ஆதிக்க வர்க்கத்தின் ஆரசுகளின் இந்தி மொழி திணிப்பை எதிர்த்து தமிழ்மொழி காக்கும் போரில் உயிர் நீத்த தியாகிகளின் பட்டியல்:

1. நடராசன்,
இறப்பு: 15.1.1939, சென்னை சிறையில் உயிர் நீத்தார்.

2. தாளமுத்து,
இறப்பு: 12.3.1939, சென்னை சிறையில் உயிர் நீத்தார்.

3. கீழப்பழுவூர் சின்னச்சாமி,
பிறப்பு: 30.7.1937, இறப்பு: 25.1.1964, காலை 4.30 மணிக்கு திருச்சியில் தீக்குளித்தார்.

4. கோடம்பாக்கம் சிவலிங்கம்,
இறப்பு: 25.1.1965, சென்னையில் தீக்குளித்தார்.

5. விருகம்பாக்கம் ஏ.அரங்கநாதன்,
பிறப்பு: 27.12.1931, இறப்பு: 27.1.1965, கோடம்பாக்கம் தொடர்வண்டி திடலில் தீக்குளித்தார்.

6. சிவெகங்கை இராசேந்திரன்,
மாணவர். பிறப்பு: 16.7.1945,  இறப்பு: 27.1.1965, சிதம்பரம் அண்ணாமலை நகரில் காவலரால் சுடப்பட்டு இறந்தார்.

7. கீரனூர் முத்து,
பிறப்பு: 15.1.1943, இறப்பு: 4.2.1965, கீரனூரில் நஞ்சுண்டு மாண்டார்.

8. சத்தியமங்கலம் முத்து, பிறந்த ஆண்டு: 1943, இறப்பு: 11.2.1965, சத்தியமங்கலத்தில் தீக்குளித்தார்.

9. ஆசிரியர் வீரப்பன், பிறப்பு: 1.4.1938, இறப்பு: 12.2.1965, அய்யம்பாளையத்தில் தீக்குளித்தார்.

10. விராலிமலை சண்முகம்,
பிறப்பு: 11.8.1943, இறப்பு: 25.2.1965, விராலிமலையில் நஞ்சுண்டு இறந்தார்.

11. கோவை பீளமேடு தண்டபாணி,
பி.ஈ.படித்தவர், பிறந்த ஆண்டு: 1944, இறப்பு: 2.3.1965, பீளமேட்டில் நஞ்சுண்டு இறந்தார்.

12. மாயவரம் சாரங்கபாணி, பி.காம்.மாணவர், பிறந்த ஆண்டு: 1945, இறப்பு 15.3.1965, மயிலாடுதுறையில் தீக்குளித்தார்.

ஜனவரி:25

செந்தமிழுக்கு ஒரு தீங்கு வந்த பின்னும் இந்த தேகம் இருந்ததொரு லாபமுண்டோ?

என்ற பாவேந்தருடைய வரிகளுக்கு ஏற்ப நம் தாய் மொழியாம் செந்தமிழ் மொழிக்கு தீங்கு என்றவுடன் தன் உயிர் தந்து தமிழ் மொழி காத்த மொழிப்போர் தியாகிகளுக்கு

வீரவணக்கம்!!!!!வாழ்க தமிழ்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக