பக்கங்கள்

ஞாயிறு, 20 ஜனவரி, 2019

இலங்கையின் மன்னார் நகரில்தமிழர்களின் எலும்புக்கூடுகள் குவியல்

தமிழர்களின் எலும்புக்கூடுகள் குவியல் குவியலாக கண்டெடுப்பு




கொழும்பு, ஜன. 20- இலங்கை ராணு வத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் கடந்த 2009ஆ-ம் ஆண்டு நடந்த இறுதிப் போரில் ஏராளமான புலிகள் கொல்லப் பட்டனர்.

போரின்போது ஏராளமான தமிழ் மக்களும் கொல்லப்பட்டதாக புகார்கள் எழுந்தன. குறிப்பாக தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மாகாணத்தில் ஏராள மான பேரை ராணுவம் கொன்று குவித் ததாக பரவலான குற்றச்சாட்டு எழுந் தது. மன்னார் நகரில் ஏராளமான தமி ழர்கள் வசித்து வந்தனர். இங்கு தமிழ் பேசும் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களும் இருந்தனர். இந்த நகரம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. போரின் போது இங்கு இலங்கை ராணு வம், விடுதலைப்புலிகள் மீது கடும் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் வடக்கு மாகாணத் திலுள்ள மன்னார் நகரில் கடந்த ஆண்டு கூட்டுறவு சங்க கட்டடம் கட்டுவதற்கு பள்ளம் வெட்டியபோது அங்கு ஏராள மான எலும்புக்கூடுகள் குவியல் குவி யலாய் கண்டெடுக்கப்பட்டன.

ராணுவம் நடத்திய வேட்டையில் கொல்லப்பட்ட மக்களின் எலும்புக் கூடுகள் இவை என்ற புகார் எழுந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

கடந்த செப்டம்பர் முதல் அங்குள்ள எலும்புக்கூடுகளை மீட்கும் பணியில் சிறப்பு சட்ட மருத்துவ நிபுணர் சமிந்த ராஜபக்ச தலைமையிலான குழவினர் ஈடுபட்டுள்ளனர். இலங்கை அரசின் உத்தரவின் பேரில் இந்தக் குழு அங்கு பணியாற்றி வருகிறது. இதுவரை அங்கு 300 எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப் பட்டுள்ளன.

சில இடங்களில் ஒன்றன் மீது ஒன்றாக எலும்புக்கூடுகள் குவியல் குவியலாய் அடுக்கி வைத்தது போல கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இதனால் இலங்கை அரசுக்கு கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. போரின்போது வடக்கு மாகாணப் பகுதி மக்களை இலங்கை ராணுவத்தினர் கொன்று இங்கு புதைத்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடு களில் 12 வயதுக்குட்ட 23 சிறுவர்களின் எலும்புக்கூடுகளும் அடங்கும். ராஜ பக்சே தலைமையிலான குழுவில் மருத் துவ நிபுணர்கள், சட்ட நிபுணர்கள், தடயவியல் நிபுணர்கள், தொல்பொருள் ஆய்வுத் துறையினரும் இடம் பெற்று உள்ளனர். தோண்டியெடுக்கும் பணிக ளைப் பார்வையிட பத்திரிகையாளர் களும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து சமிந்த ராஜபக்ச கூறும் போது, "ஏராளமான எலும்புக் கூடுகள் இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது வரை 125 நாட்களுக்கும் மேலாக இங்கு அகழாய்வுப் பணி செய்துள்ளோம். இந்த சம்பவத்தை நாங்கள் ஒரு குற்ற சம்பவமாகவே பார்க்கிறோம். ஒரு வேளை இது மயானமாக இருந்தால், புதைக்கப்படும் சடலங்கள் கிடைமட்ட மாக இருக்கும். ஆனால் இங்கு உடல் களைக் கொன்று குவித்து அப்படியே பள்ளத்தில் தள்ளிவிட்டது போலுள்ளது.

கண்டெடுக்கப்பட்ட எலும்புகள் தற்போது நீதிமன்ற வளாகத்தில் வைக் கப்பட்டுள்ளன. மேலும் அமெரிக்கா வின் மியாமியிலுள்ள ஆய்வகத்துக்கும் சில எலும்புக் கூடுகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. ஆய்வு முடிவு வரும் வரை வேறு எந்தத் தகவலையும் தெரிவிக்க இயலாது" என்றார்.

ஆனால் இலங்கை ராணுவம் மன்னார் பகுதியில்  யாரையும் கொன்று புதைக்கவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளது

-  விடுதலை நாளேடு, 20.1.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக