பக்கங்கள்

ஞாயிறு, 3 நவம்பர், 2019

தமிழ்நாடென்பது இந்தியா முழுவதும், சுமத்திரா, ஜாவா முதலிய தீவுகளை உள்ளடக்கிய பெரும் நிலப்பரப்புமாயிருந்தது.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், தொப்பி
பரிதிமாற் கலைஞர்
தமிழ்நாடென்பது இந்தியா முழுவதும், சுமத்திரா, ஜாவா முதலிய தீவுகளை உள்ளடக்கிய பெரும் நிலப்பரப்புமாயிருந்தது. இதற்குக் ‘குமரி நாடு' என்பது பெயர்.
***
வடமேற்கே பல்லாயிரக் காவதத்திற்கு அப்புறமுள்ள தும், அய்ரோப்பா கண்டத்தி னொரு பகுதியுமாகிய ‘ஸ்காந்தி நேவியம்' என்ற இடத்தி னின்றும் ‘ஆரியர்' என்ற சாதியார் புறப்பட்டு, நாலா பக்கங்களினுஞ் சென்று சேர்ந்தனர். அவ்வாரியருள் ஒரு பிரிவினர் மத்திய ஆசி யாவின் மேற்குப் பாகத்திலுள்ள ‘துருக்கிஸ்தானம்' என்ற இடத்திற்றங்கினர். இவ்விடந் தங்கிய ஆரியர்களே ‘கைபர் கணவாய்' வழியாக இந்தி யாவினுள் புகுந்தனர். அவர் கள் அவ்வாறு புகுந்தமை தமிழர்களது நன்மைக்கோ அன்றி தீமைக்கோ? இதனை யறிவுடையோர் எளிதிலு ணர்ந்து கொள்வார்கள்.
***
தமிழர்க்கு ஆரியர் இந்தி யாவிற்கு வருமுன்னரே, எழுதப் படிக்கத் தெரியும். ‘எழுத்து', ‘சுவடி'யென்பன தனித் தமிழ்ச் சொற்களாதலுங் காண்க. இதனால் அகத்திய முனிவர் தமிழ்ப் பாஷைக்கு நெடுங்கணக்கு வகுத்தனரென் பதும், ஆரியரோடு கலந்த பிறகே தமிழர் தங்கள் பாஷைக்கு நெடுங்கணக்கு ஏற்படுத்திக் கொண்டனரென் பதும் பொருந்தாமையறிக.
***
வடமொழி தமிழோடு மருவு முன்னே, அம்மொழியினின்று பாகத பாஷைகள் பல கிளைத்துத் தனி பிரிந்தன. இதற்கிடையில்தான் தமிழ் மொழியினின்று தெலுங்கு, மலையாளம், கன்னடந் துளு வமென்னும் வழிமொழிகள் கிளைத்தன.
***
வடமொழியாளர் தமிழர் களது ஒழுக்க வழக்கங்களை யுணர்ந்து அவற்றிற்கேற்ப வடமொழியில் நூல்கள் வகுப் பான் புகுந்தனர். அவர்களெல் லாம் ஆன்ம நூற் பயிற்சி மிக்குடையாராயும், கலை யுணர்ச்சி சான்றவராயு மிருந் தமைபற்றித் தமிழரது திவ்விய ஸ்தலங்களுக்குப் புராணங்கள் வகுத்தனர்; தமிழர்களிடத் தில்லாதிருந்த ‘அந்தணர், அரசர், வணிகர், வேளாளர்' என்ற நால்வகைச் சாதி முறையை மெல்ல மெல்ல நாட்டி விட்டனர்.
***
இவ்வளவையும் கூறுபவர் சூரிய நாராயண சாஸ்திரி என்பார்.
பிற்காலத்தில் பரிதிமாற் கலைஞர் என்று தமிழில் பெயர் மாற்றம் செய்து கொண்டவர்.(பார்ப்பனர் களுள் விதிவிலக்காக இவர் ஒருவர்தான் தமிழில் பெயர் மாற்றம் செய்துகொண்டவர்) இக்கருத்துகள் இடம்பெற்ற நூல்‘‘தமிழ் மொழியின் வர லாறு.'' இன்றைக்கு அவரின் நினைவு நாள் (2.11.1903).
- மயிலாடன்
- விடுதலை நாளேடு, 2.11.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக