பக்கங்கள்

திங்கள், 23 டிசம்பர், 2019

இந்தியா தமிழைப் பொது மொழியாகப் பெறவேண்டும்

காந்தியார் மாடர்ன் ரிவ்யூ’வில் எழுதியது

தமிழைப் படிக்கப் படிக்க அந்தப் பாஷையிலுள்ள அழகு அதிகமாகத் தெரிகிறது. அது தேர்த்தியானதும், அமிர்தம் போன்றதுமான பாஷை. நான் படிப்பதிலிருந்து எனக்குத் தெரிவது என்னவெனில் - தமிழர்களின் மத்தியில் பூர்வகாலத்திலும் இப்போதும் அநேக புத்திமான்களும் ஞானவான்களும் இருந்தி ருக்கிறார்கள். முடிவில் இந்தியா முழுமையும் ஒரே ஜனாங்கமாக ஏற்பட வேண்டுமானால் சென்னை ராஜதானிக்கு வெளியில் உள்ள வர்களும் தமிழ்ப்பாஷையைத் தெரிந்து கொள்ள வேண்டும்!’’

“சுதேசமித்திரன்” மொழிபெயர்த்தது

‘செந்தமிழ்’ தொகுதி 8, பக்கம் 214

இன்று காந்தியாரின் நிலையை உணர்ந்தவர்கள் அவர் அடிக்கடி பல்டி அடிப்பதைப் பற்றி ஆச்சரியப்ப மாட்டார்கள்.

விடுதலை (30-11 -1939, பக்கம் 6)

 - ^விடுதலை ஞாயிறுமலர் 14 12 19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக