பக்கங்கள்

புதன், 11 ஜனவரி, 2017

5,000 ஆண்டுகளுக்கு முந்தைய ஓவியங்கள் கண்டுபிடிப்பு




செஞ்சி , மே 8-  விழுப் புரம் மாவட்டம், செஞ்சி அருகே அன்னியூரை அடுத்த சிறுவாலை கிராமத்தில் 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய ஓவியங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன.

உலகெங்கிலும் வரலாற் றுக்கு முந்தைய கால மனிதர் களின் ஓவியங்கள் கண்டு பிடிக்கப்பட்டு வருகின்றன. கற்கால மனிதர்களின் கலை உணர்வையும், வாழ்விடங் களையும், வாழ்வியலையும் சித்திரிக்கும் இம்மாதிரியான ஓவியங்கள் தமிழகம் எங்கி லும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.

அவற்றில் விழுப்புரம் மாவட்டத்தில் கீழ்வாலை, செத்தவரை போன்ற இடங் களில் கிடைத்த ஓவியங்கள் தனி சிறப்புக்குரியவை. அவற்றின் காலம் கி.மு. 3,000 முதல் கி.மு 7,000 வரை என அறிஞர்கள் கருதுகின்றனர். அவற்றைப் போன்ற ஓவியத் தொகுதி ஒன்று விழுப்புரம் மாவட்டம், அன்னியூரை அடுத்த சிறுவாலையில் தற் போது கண்டுபிடிக்கப்பட் டுள்ளது.

சிறுவாலை கிராமத்துக் குக் கிழக்கே, கல் குவாரி களால் உடைக்கப்பட்டு எஞ்சியுள்ள குன்றுகளில் ஒன்றில் இதனை அதியன் என்பவர் கண்டறிந்துள்ளார். அவர் அளித்த தகவலின் பேரில் சென்னைப் பல் கலைக் கழக ஆய்வாளர்கள் ஜெ.ராதா கிருஷ்ணன், செல்வன், ஆர்வலர்கள் செந்தில்பாலா, ரவி உள்ளிட்ட குழுவினர் செவ்வாய்க்கிழமை சென்று ஆய்வு செய்தனர்.

இந்த ஓவியம் குறித்து ஆய்வாளர் ஜெ.ராதாகிருஷ் ணன் கூறியதாவது: 5,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த ஓவியம் 1.5 மீட்டர் நீளமும், 50 செ.மீ. அகலமும் கொண்டுள்ளது. பொதுவாக இம்மாதிரியான ஓவியங்கள் வெள்ளை மற்றும் காவி நிறத்தில் இருக்கும்.

இது காவி நிறத்தில் சற்றே தெளி வற்ற நிலையில் உள்ளது. இது ஒரு இனக்குழு தலைவி, வேட்டையாடிய பிறகு தன் வீரர்களுடன் வேட்டை யாடிய உணவை தமது இருப்பிடத்துக்கு இரண்டு வண்டிகளில் எடுத்துச் செல் வதுபோல அமைந்துள்ளது. இது ஓர் நிகழ்வை உணர்த் துவதாகவோ, வேட்டையாடு தலை உணர்த்துவதாகவோ கூட இருக்கலாம்.

இதில் இதுவரை கிடைத்துள்ள தொல்பழங்கால ஓவியங் களை விட இரண்டு சக்கரங் களையும் வண்டியையும் தெளிவாக வேறுபடுத்தி அறிய முடிகிறது. இது புதிய கற்கால, பெருங்கற்கால வேட் டை சமூக மக்களின் நாகரிக வளர்ச்சியைச் காட்டும் முக் கிய ஆதாரம் என்றார்.

மற்றொரு ஆய்வாளரான செல்வன் கூறுகையில், இங்கே கிடைத்துள்ள பிற தடயங்களையும் கொண்டு பார்க்கும்போது இங்கே கற்கால மனிதர்கள் முதல் பல்வேறு சமூகங்கள் இங் குள்ள குகை, குன்றுகளில் வாழ்ந்து வந்தமையை அறிய முடிகிறது. மேலும், இப் பகுதியில் தேடினால் இன் னும் நிறைய வரலாற்று தட யங்கள் கிடைக்கலாம்.

இந்த கல்குவாரிகளால் பல அரிய தொல் சின்னங்கள் அழிந்து போயிருக்கின்றன. இது அதில் தப்பி பிழைத்தது நல்வாய்ப்பானது. அரசு இந்த தொல் சின்னங்கள் மீது அக்கறை கொண்டு, இவற் றைக் காப்பாற்ற முன் வர வேண்டும். பொதுமக்களுக் கும் இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்பட்டால்தான் இவற்றைக் காப்பாற்ற முடியும் என்றார்.
-விடுதலை,8.5.14

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக