பக்கங்கள்

வியாழன், 26 ஜனவரி, 2017

புதிய ரூபாய் நோட்டில் தேவநாகரி (இந்தி எண்கள்) ஏன்?


(1)  புதிதாக இந்திய அரசு வெளி யிட்டுள்ள 2000 ரூபாய் கரன்சி நோட்டில், இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிராக ஹிந்தி எண்களை நுழைத்து இருக் கிறார்கள். இது தடுக்கப்பட வேண்டும்.

Official language of the Union.
(1) The official language of the Union shall be Hindi in Devanagari script. The form of numerals to be used for the official purposes of the Union shall be the international form of Indian numerals.
(2)Notwithstanding anything in clause (1), for a period of fifteen years from the commencement of this Constitution, the English language shall continue to be used for all the official purposes of the Union for which it was being used immediately before such commencement: Provided that the President may, during the said period, by order-306 authorise the use of the Hindi language in addition to the English language and of the Devanagari form of numerals in addition to the international form of Indian numerals for any of the official purposes of the Union.
(3) Notwithstanding anything in this article, Parliament may by law provide for the use, after the said period of fifteen years, of-
(a) the English language, or
(b) the Devanagari form of numerals, for such purposes as may be specified in the law.
ஹிந்தி (தேவநாகரி) எண்களை எதற் காகப் புதிதாக சேர்த்து இருக்கிறார்கள்? பிரிட்டிஷ் காலனிய அரசில் எல்லா மாநில எழுத்துக்களின் எண்களும் இருந் தது. விடுதலை பெற்ற இந்தியாவின் ரூபாய் நோட்டுகளில் நீக்கப்பட்டது. அந்நிலை தொடரவேண்டும்.  1910 ஆம் ஆண்டு ரூபாய் நோட்டுகளைப் பார்த் தால் எல்லா மாநில லிபிகளின் எண்களும் உள்ளன. இப்பொழுது மாத்திரம், ஏன் இந்தி எண்களை மாத்திரம் நுழைக்கிறார்கள்?
(1)  மேலும், “ஸ்வச் பாரத் அபிமான்” என்று தூய்மை இந்தியா திட்டம் பற்றிய செய்தியும் ஹிந்தி மொழியிலே மட்டும் தரப்பட்டுள்ளது. இதற்கான் ஆங்கில வாசகமும் தரப்பட வேண்டும்.
(2)  சமஸ்கிருதத்தில் 500 (அ) 2000 ரூபாய் எழுதப்பட்டுள்ளது. இதற்கும் ஹிந்தி எழுத்தே பயன்பட்டுள்ளது. ஆனால், சமஸ்கிருதம் அந்தந்த மாநில எழுத்துக் களில் தான் 1500 ஆண்டுகளாகப் படிக் கப்பட்டு வந்துள்ளது. எனவே, இதற்கும் ஹிந்தி எழுத்தைப் பயன்படுத்துவது சரி யல்ல.  இப்போதைய கணினி, செல்பேசி தொழில்நுட்பங்களில் எல்லா மாநில எழுத் துக்களும் ஒன்றுக் கொன்று சமம் தான். ஹிந்தி மடலை தெலுங்கிலோ, கன்னடத் திலோ மாற்றிப் படிப்பது மிக எளிது.
(3)  அய்ரோப்பியர்களும், அமெரிக் கர்களும் இந்தோ-அய்ரோப்பிய மொழி களை ஆராய சம்ஸ்கிருதமும் பல்கலைக் கழகங்களில் படிக்கின்றனர். அதற்கு மீக்குறிகள் (ஞிவீணீநீக்ஷீவீtவீநீs) இட்ட ரோமன் எழுத்தைப் பயன்படுத்துகின்றனர். இது மிஷிளி 15919 என்ற அய்.எஸ்.ஓ ஸ்டாண் டர்ட் ஆகும்.
அம்முறை கணினிகளில், இணை யத்தில் யூனிகோட் குறியேற்றத்தில் பர வலாகப் பயன்படுகிறது. இந்தியாவில் ஏராளமான குடும்பங்களில் குழந்தை களை ஆங்கிலக் கல்வியின் அவசி யத்தை உணர்ந்து படிக்கவைக்கிறார்கள்.  மிஷிளி 15919 முறையில் ரயில்கள், மத்திய அரசாங்க அலுவலக பெயர்ப் பல கைகள், விண்ணப்பப் படிவங்கள்.  போன்றவற்றில் ஹிந்தி வாசகத்துக்கு அடுத்து, மிஷிளி 15919 முறையிலும் அவ் வாசகங்கள் எழுதப்படல் வேண்டும். மிஷிளி 15919 முறை இந்திய மாநில எழுத் துகளுக்குத் துணையாக எழுதப்பட்டால், பிரதேச லிபிகள் அறியாதாருக்கு மிக உதவியாக இருக்கும்.
-நா. கணேசன்,
ஹூஸ்டன், டெக்சாஸ்
-விடுதலை ஞா.ம.,19.11.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக